Tnpsc Current Affairs in Tamil – 22nd January 2024

1. சந்தகா-தம்பரா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. ஒடிஸா

ஆ. சத்தீஸ்கர்

இ. ஜார்கண்ட்

ஈ. மத்திய பிரதேசம்

2. ‘ஓய்வுக்கூடம் – Green Rooms’ என்பதுடன் தொடர்புடைய நாடு எது?

அ. ரஷ்யா

ஆ. இஸ்ரேல்

இ. உக்ரைன்

ஈ. ஈரான்

3. இ-மொபிலிட்டி சிமுலேஷன் ஆய்வகத்தை நிறுவ அல்டேர் நிறுவனத்துடன் கூட்டிணைந்துள்ள ஐஐடி எது?

அ. ஐஐடி பம்பாய்

ஆ. ஐஐடி மெட்ராஸ்

இ. ஐஐடி கான்பூர்

ஈ. ஐஐடி ரூர்க்கி

4. சஷஸ்த்ர சீமா பாலின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. தல்ஜித் சிங் சௌத்ரி

ஆ. குமார் இராஜேஷ் சந்திரா

இ. சஞ்சய் அரோரா

ஈ. இரஜினிகாந்த் மிஸ்ரா

5. அயோத்தி இராமர் திருக்கோவிலுக்கு, ‘ஓணவில்’ எனப்படும் பாரம்பரிய வில்லை பரிசளித்த திருக்கோவில் எது?

அ. அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில்

ஆ. ஸ்ரீ பத்மநாபசுவாமி திருக்கோவில்

இ. ஸ்ரீ குருவாயூரப்பன் திருக்கோவில்

ஈ. அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவில்

6. பிதர்கனிகா தேசியப்பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?

அ. ஒடிஸா

ஆ. குஜராத்

இ. இராஜஸ்தான்

ஈ. கேரளா

7. புலிக்குளம் மாட்டினம் சார்ந்த மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. ஒடிஸா

8. குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி திருக்கோவில் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. ஆந்திர பிரதேசம்

9. எந்த ஆற்றுப்படுகை பகுதியில், ‘சோலிகா’ சமூகத்தினர் வசிக்கின்றனர்?

அ. காவிரி ஆற்றுப்படுகை

ஆ. கோதாவரி ஆற்றுப்படுகை

இ. தாமிரபரணி ஆற்றுப்படுகை

ஈ. மகாநதி ஆற்றுப்படுகை

10. அண்மையில், இந்தியப்பிரதமரால் தொடங்கப்பட்ட, ‘போயிங் சுகன்யா’ திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?

அ. இந்தியாவில் போயிங் விமானங்களுக்கான புதிய உற்பத்திப் பிரிவை நிறுவுதல்

ஆ. வான்போக்குவரத்துத் துறையில் பெண்களின் பங்கேற்பை ஊக்குவித்தல், STEM துறைகள் மற்றும் விமானப் பணிகளில் பெண்களுக்கு ஆதரவளித்தல் மற்றும் மேம்படுத்துதல்

இ. அரசுப்பள்ளிகளில் பயிலும் ஒரு இலட்சம் பெண்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல்

ஈ. இந்திய சந்தையில் பிரத்தியேகமான ஒரு புதிய விமான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல்

11. ‘ஆபரேஷன் சர்வசக்தி’ என்பதுடன் தொடர்புடைய ஆயுதப்படை எது?

அ. இந்திய இராணுவம்

ஆ. இந்திய விமானப்படை

இ. இந்திய கடற்படை

ஈ. இந்திய கடலோர காவல்படை

12. ‘நான்தான் ஔரங்கசீப்’ (ஔரங்கசீப்புடனான உரையாடல்கள்) என்ற தமிழ்ப்புதினத்தை எழுதியவர் யார்?

அ. சாரு நிவேதிதா

ஆ. தேவி பாரதி

இ. நந்தினி கிருஷ்ணன்

ஈ. அம்பை

13. சுல்தான்பூர் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. ஹரியானா

இ. பஞ்சாப்

ஈ. சிக்கிம்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழ்நாட்டுக்கு மேலும் இரு தங்கம்.

ஆறாவது கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டிகள் சென்னையில் தொடங்கி நடைபெற்றுவருகின்றன். இதில் மகளிர் பாரம்பரிய யோகா பிரிவில் தமிழ்நாட்டின் நவ்யா 64.75 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். வாள்வீச்சில் ஆடவருக்கான சப்ரே இறுதிச்சுற்றில் தமிழ்நாட்டின் அர்லின் 15-14 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.

2. ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிடும் காலம் தொடக்கம்.

தமிழ்நாட்டின் கடற்கரைகளில் ஆலிவ் ரிட்லி ஆமைகளின் முட்டையிடும் காலம் தொடங்கியுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. டிசம்பர் முதல் ஏப்ரல் வரை தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகளில் கடலாமைகள் முட்டையிடுவது வழக்கம். இதில் ஆலிவ் ரிட்லி இன ஆமைகள் குறிப்பிடத்தக்கவை.

3. பசுமை முதன்மையாளர் விருது.

தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன் மாதிரியான பங்களிப்பை வழங்கும் 100 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, ‘தமிழ்நாடு பசுமை முதன்மையாளர் விருது’ மற்றும் தலா `1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இந்த விருது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்குகிறது.

4. பன்னாட்டு மருத்துவ மாநாடு.

“மருத்துவத்தின் எதிர்காலம்” என்ற தலைப்பிலான பன்னாட்டு மருத்துவ மாநாடு சென்னையில் மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது.

Exit mobile version