Tnpsc Current Affairs in Tamil – 22nd December 2023

1. எந்த நாட்டின் ஆயுதப்படைக்கு அவற்றின் சிறந்த செயல்திறனுக்காக, ‘தங்க ஆந்தை’ விருது வழங்கப்பட்டுள்ளது?

அ. சீனா

ஆ. இலங்கை

இ. சிங்கப்பூர்

ஈ. இந்தியா

2. அண்மையில், தேசிய புவி அறிவியல் தரவுக் களஞ்சிய இணையதளத்தை அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?

அ. புவி அறிவியல் அமைச்சகம்

ஆ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம்

இ. சுரங்க அமைச்சகம்

ஈ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

3. தேசிய தொழிற்துறை வழித்தட மேம்பாட்டு திட்டத்தின்கீழ் எத்தனை வழித்தடங்கள் உருவாக்கப்படுகின்றன?

அ. 11

ஆ. 12

இ. 13

ஈ. 14

4. காக்ரபார் அணுமின் திட்டம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. கர்நாடகா

ஆ. இராஜஸ்தான்

இ உத்தர பிரதேசம்

ஈ. குஜராத்

5. அறிவியலாளர்கள், என்செலடஸில் உயிர்கள் உருவாவதற்கு ஒரு முக்கிய மூலக்கூறாக விளங்கும் ஹைட்ரஜன் சயனைடை அண்மையில் அடையாளம் கண்டுள்ளனர். என்செலடஸ் என்பது எதன் நிலவாகும்?

அ. வியாழன்

ஆ. சனி

இ. செவ்வாய்

ஈ. வெள்ளி

6. உலக சுகாதார அமைப்பின் (WHO) புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களின் பட்டியலில் NOMA சமீபத்தில் சேர்க்கப்பட்டது. இந்த நோய் கீழ்காணும் எந்த உடல் உறுப்புகளைப் பாதிக்கிறது?

அ. மூளை

ஆ. முகம் மற்றும் வாய்

இ. குடல்

ஈ. சிறுநீரகம்

7. கேலோ இந்தியா பாரா விளையாட்டுக்களின் தொடக்கப்பதிப்பில், ‘சிறந்த செயல்திறன் கொண்ட’ மாநிலமாக உருவெடுத்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஹரியானா

இ. கேரளா

ஈ. உத்தரபிரதேசம்

8. அல் நஜா, ஈஸ்டர்ன் பிரிட்ஜ் மற்றும் நசீம் அல் பஹர் ஆகிய இராணுவப்பயிற்சிகளை, இந்தியா, கீழ்காணும் எந்த அரபு நாட்டுடன் நடத்துகிறது?

அ. ஐக்கிய அரபு அமீரகம்

ஆ. ஓமன்

இ. சவூதி அரேபியா

ஈ. ஈராக்

9. தில்லியில் உள்ள குருத்வாரா சிஸ் கஞ்ச் சாஹிப் மற்றும் குருத்வாரா ரகாப் கஞ்ச் சாஹிப் ஆகியவை கீழ்காணும் எந்தச் சீக்கிய குருவுடன் தொடர்புடையவை?

அ. குரு தேக் பகதூர்

ஆ. குரு நானக்

இ. குரு அர்ஜுன் தேவ்

ஈ. குரு ராம் தாஸ்

10. சமீபத்தில் கொடியசைத்துத் தொடக்கிவைக்கப்பட்ட காசி தமிழ்ச் சங்கமம் விரைவு இரயிலானது வாரணாசியை தென்னிந்தியாவில் உள்ள எந்த நகரத்துடன் இணைக்கும் புதிய இரயில் சேவையாகும்?

அ. சென்னை

ஆ. சேலம்

இ. மதுரை

ஈ. கன்னியாகுமரி

11. அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற பாரம்பரிய குமேரி சாகுபடியை மேற்கொள்ளும் பழங்குடியின மக்கள் வாழும் பகுதி எது?

அ. வடகிழக்கு இந்தியா

ஆ. மேற்குத்தொடர்ச்சி மலைகள்

இ. தென்னிந்தியா

ஈ. கிழக்குத்தொடர்ச்சி மலைகள்

12. 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகின் மிகப்பெரிய வைரங்களை உற்பத்தி செய்யும் நாடு எது?

அ. இந்தியா

ஆ. ரஷ்யா

இ. பெல்ஜியம்

ஈ. அமெரிக்கா

13. 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் எஃகு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் கற்கரியாக்கக்கரியின் (coking coal) முதன்மை மூலமாக விளங்கும் நாடு எது?

அ. ரஷ்யா

ஆ. சீனா

இ. ஆஸ்திரேலியா

ஈ. ஜெர்மனி

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பத்திரிகை பதிவு நடைமுறையை எளிதாக்கும் மசோதா நிறைவேற்றம்.

பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் பதிவுக்கான நடைமுறையை எளிமைப்படுத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட பத்திரிகை மற்றும் புத்தகங்கள் பதிவுச்சட்டம், 1867க்கு மாற்றாக இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் பதிவுக்கு நடைமுறையிலிருந்த சட்டத்தில் எட்டுப்படிநிலைகள் இருந்தன. தற்போது அந்த முறை ஒற்றைப்படிநிலையாக மாற்றப்பட்டுள்ளது.

2. சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்: சாம்பியன் குகேஷ்.

சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் 2023 செஸ் போட்டியில் இந்தியாவின் இளம்வீரர் டி. குகேஷ் சாம்பியனானார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடந்து வந்தது. வரும் 2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள கேண்டிடேட்ஸ் மாஸ்டர்ஸ் போட்டிக்கான தகுதி ஆட்டமாக இது நடைபெற்றது. ஏற்கெனவே இந்தியாவில் இருந்து பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி, மகளிர் பிரிவில் வைஷாலி ஆகியோர் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர்.

3. தாயகத்துக்குப் பணமனுப்புவதில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம்!

வெளிநாடுகளில் பணியாற்றி ஈட்டிய தொகையை தங்களது சொந்த நாட்டுக்கு அனுப்புவதில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகத்துக்குப் பணம் அனுப்புவது கடந்த 2022ஆம் ஆண்டில் 24.4%ஆக இருந்தது. நடப்பாண்டில் இவ்வளர்ச்சி 12.4 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் 2023ஆம் ஆண்டில் தாயகத்துக்கு அனுப்பும் தொகை $1,400 கோடி அதிகரித்து $12,500 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக மெக்ஸிகோ 2ஆவது இடத்தை வகிக்கிறது.

4. ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது.

2023ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா, கேல் இரத்னா, துரோணாச்சார்யா விருதுகளை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தமிழ்நாட்டின் செஸ் வீராங்கனை வைஷாலி உள்ளிட்டோருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் பயிற்சியாளரான கிராண்ட் மாஸ்டர் ஆர். பி. இரமேசுக்கு துரோணாச்சார்யா விருதும், தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீராங்கனை கவிதா செல்வராசுக்கு வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version