Tnpsc Current Affairs in Tamil – 21st March 2024

1. அண்மையில், இந்திய திட்ட நேரத்தை (IST) பரப்புவதற்கான தேசிய நேர நெறிமுறை தொடங்கப்பட்ட இடம் எது?

அ. சென்னை

ஆ. அலகாபாத்

இ. மும்பை

ஈ. நாக்பூர்

2. ‘உடல்நலம் மற்றும் பராமரிப்புக்கான நியாயமான பங்கு’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

அ. WHO

ஆ. UNEP

இ. UNICEF

ஈ. UNDP

3. அண்மையில், பிரசார் பாரதியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. கௌரவ் திவேதி

ஆ. நவ்நீத் குமார் சேகல்

இ. சசி சேகர் வேம்பதி

ஈ. ஜகத் சிங் சௌகான்

4. அண்மையில், அவரது தொண்டுப்பணிக்காக P V நரசிம்மராவ் நினைவு விருது பெற்றவர் யார்?

அ. ரத்தன் டாடா

ஆ. முகேஷ் அம்பானி

இ. கௌதம் அதானி

ஈ. ஷிவ் நாடார்

5. ஹீமோகுளோபின் A1C சோதனையானது பின்வரும் எந்த நோயை கண்டறிவதற்குப் பயன்படுகிறது?

அ. நீரிழிவு நோய்

ஆ. டெங்கு

இ காசநோய்

ஈ. இரத்த சோகை

6. அண்மையில், எந்த வங்கிக்கு `1.40 கோடி அபராதத்தை ரிசர்வ் வங்கி விதித்தது?

அ. பேங்க் ஆஃப் இந்தியா

ஆ. PayTM கொடுப்பனவு வங்கி (வரை)

இ. பரோடா வங்கி

ஈ. கனரா வங்கி

7. ‘LAMITIYE’ என்ற பயிற்சியானது கீழ்காணும் எந்த இருநாடுகளுக்கு இடையே நடத்தப்படுகிறது?

அ. இந்தியா மற்றும் ஜப்பான்

ஆ. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா

இ. இந்தியா மற்றும் எகிப்து

ஈ. இந்தியா மற்றும் சீஷெல்ஸ்

8. அண்மையில், கல்வி அமைச்சகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, ‘PM SHRI பள்ளிகள்’ திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புக்கொண்ட மாநில அரசு எது?

அ. தமிழ்நாடு

ஆ. மகாராஷ்டிரா

இ. உத்தர பிரதேசம்

ஈ. குஜராத்

9. அண்மையில் பதவி விலகுவதாக அறிவித்த தமிழிசை சௌந்தரராஜன், எந்த மாநிலத்தின் ஆளுநராக இருந்தார்?

அ. கர்நாடகா

ஆ. கேரளா

இ. தெலுங்கானா

ஈ. ஒடிசா

10. அண்மையில், ‘ஸ்டார்ட்அப் மகாகும்பமேளா’ ஏற்பாடு செய்யப்பட்ட இடம் எது?

அ. புது தில்லி

ஆ. சென்னை

இ. பிரயாக்ராஜ்

ஈ. லக்னோ

11. அண்மையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய மாற்றுத்திறனாளர் அடையாளமாக அறிவிக்கப்பட்ட பாரா -வில்வித்தையாளர் யார்?

அ. இராகேஷ் குமார்

ஆ. ஷீத்தல் தேவி

இ. அதிதி சுவாமி

ஈ. பூஜா ஜத்யன்

12. பழங்குடியினர் நலத்துறை அமைச்சகமானது கீழ்காணும் எந்த மாநிலத்தில், ‘பழங்குடியினர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான மையத்திற்கான’ அடிக்கல்லை நாட்டியது?

அ. ஒடிசா

ஆ. சத்தீஸ்கர்

இ. ஜார்கண்ட்

ஈ. பீகார்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ‘இந்திராவதி’ நடவடிக்கை.

உள்நாட்டுக் கலவரத்தால் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ள கரீபியன் நாடான ஹைதியிலிருந்து இந்திய மக்களை மீட்க, ‘இந்திராவதி’ என்ற பெயரில் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2. உங்கள் வேட்பாளரை அறியும் செயலி

இந்தியத் தேர்தலாணையத்தின் சார்பில், உங்கள் வேட்பாளர்களை அறிந்துகொள்ளுங்கள் (Know Your Candidate) என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மிக அதிக புத்தாக்க நிறுவனங்களைக் கொண்ட 3ஆவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது.

Exit mobile version