Tnpsc Current Affairs in Tamil – 21st February 2024

1. முதல், ‘சிறார் தோழமையான காவல் நிலையம்’ திறக்கப்பட்டுள்ள இடம் எது?

அ. தமிழ்நாடு

. மகாராஷ்டிரா

இ. புதுச்சேரி

ஈ. ஆந்திர பிரதேசம்

2. தி சார்ஸ் என்பது கீழ்காணும் எந்த ஆறுடன் தொடர்புடைய ஆற்றங்கரையோரப் பகுதிகள்?

அ. கங்கையாறு

ஆ. பிரம்மபுத்திரா ஆறு

இ. காவேரியாறு

ஈ. கோதாவரியாறு

3. இந்திய துறைமுக செயல்திறன் குறியீட்டிற்கான, ‘சாகர் ஆங்கலன்’ வழிகாட்டுதல்களை வெளியிட்ட அமைச்சகம் எது?

அ. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து & நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம்

ஆ. பாதுகாப்பு அமைச்சகம்

இ. உள்துறை அமைச்சகம்

ஈ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்

4. நாகி பறவை திருவிழாவுடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. பீகார்

ஈ. ஒடிசா

5. ‘அனுவாதினி’ என்றால் என்ன?

அ. செயற்கைக்கோள்

ஆ. பழங்குடியினரது மொழி

இ. AI கருவி

ஈ. பழங்குடியினர் திருவிழா

6. பின்வருவனவற்றில், ‘ரோடமைன்-B’ பற்றி சிறப்பாக விவரிப்பது எது?

அ. சாயமிடுவதற்கும் வண்ணந்தீட்டுவதற்கும் பயன்படுத்தப்படும் புற்றுநோய் ஏற்படுத்தும் வேதி

ஆ. மூட்டுவலிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிற ரோடோடென்ட்ரான் பூவில் காணப்படும் புரதம்

இ. கீல்வாதத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட தடுப்பூசி

ஈ. சிறுகோள்களின் மேற்பரப்பில் உள்ள நீர் மூலக்கூறுகள்

7. PM விஸ்வகர்மா யோஜனாவைத் தொடங்கிய மத்திய அமைச்சகம் எது?

அ. உள்துறை அமைச்சகம்

ஆ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

இ. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்துறைகள் அமைச்சகம்

ஈ. சுற்றுலா அமைச்சகம்

8. anமையில், பாட்மிண்டன் ஆசிய அணி சாம்பியன்ஷிப் போட்டியில், கீழ்காணும் எந்த நாட்டின் பெண்கள் அணி தங்கப்பதக்கம் வென்றது?

அ. தாய்லாந்து

ஆ. இந்தியா

இ. மலேசியா

ஈ. சீனா

9. அண்மையில், பன்னாட்டு நீதிமன்றத்தின் (ICJ) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

அ. நவாப் சலாம்

ஆ. தல்வீர் பண்டாரி

இ. ஜோன் டோனோகு

ஈ. ரோனி ஆபிரகாம்

10. 60ஆவது முனிச் பாதுகாப்பு மாநாடு நடைபெற்ற இடம் எது?

அ. ஜெர்மனி

ஆ. ரஷ்யா

இ. சீனா

ஈ. பிரான்ஸ்

11. பொன்முடி மலை அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. குஜராத்

ஈ. மகாராஷ்டிரா

12. PM உச்சதர் சிக்ஷா அபியான் (PM-USHA) திட்டத்தின்கீழ், `740 கோடி நிதி ஒதுக்கீட்டைப் பெற்ற மாநிலம் எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. மத்திய பிரதேசம்

இ. பீகார்

ஈ. ஒடிசா

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அரசு தடை!

பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிகள் இருப்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம்-2006இன்படி, ‘ரோடமைன்-B’ எனப்படும் செயற்கை நிறமூட்டியைக் கொண்டு உணவுப்பொருள்களை தயாரித்தல், பொட்டலம் செய்து விற்றல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், மணவிழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம்-2006இன்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இருப்பினும், வண்ணங்கலக்கப்பட்ட இளஞ்சிவப்புநிற பஞ்சுமிட்டாய்க்கு மட்டுமே இத்தடைபொருந்தும், வெண்ணிற பஞ்சு மிட்டாய் விற்க தடையேதும் விதிக்கப்படவில்லை.

2. மஞ்சப்பை விருது.

தமிழ்நாடு முழுவதும் ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தின் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப்பைகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்குகந்த பாரம்பரியமான மஞ்சப்பையின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் மூன்று சிறந்த பள்ளிகள், மூன்று சிறந்த கல்லூரிகள் மற்றும் மூன்று சிறந்த வணிக நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால், ‘மஞ்சப்பை விருதுகள்’ வழங்கப்படவுள்ளது. ‘மஞ்சப்பை விருது’ பெறுவோர்களுக்கு, முதல் பரிசாக `10 இலட்சமும், இரண்டாம் பரிசாக `5 இலட்சமும், மூன்றாம் பரிசாக `3 இலட்சமும் வழங்கப்படும்.

3. ‘நான் முதல்வன் ஒலிம்பியாட்’ திட்டம் தொடக்கம்.

தமிழ்நாட்டில் 6-9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான, ‘நான் முதல்வன் ஒலிம்பியாட்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஒலிம்பியாட் தேர்வை பொருத்தவரை 6-9ஆம் வகுப்புவரை பயிலும் மாணவ, மாணவியரின் திறனைப் பரிசோதிக்கும் நோக்கத்தில் நடத்தப்படுகிறது.

4. பண்ருட்டியில் `16 கோடியில் பலா மதிப்புக் கூட்டுதல் மையம்.

பண்ருட்டியில் `16 கோடியில் பலா மதிப்புக் கூட்டுதலுக்கான மையமும் பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம், சிறுதானியங்கள் பயிரிடும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழில்நுட்ப வணிக மேம்பாட்டு மையமும் (`4 கோடி மதிப்பீட்டில்) அமைக்கப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

5. பத்துப்பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை.

2024-2025இல் சத்தியமங்கலம் செவ்வாழை (ஈரோடு), கொல்லிமலை மிளகு (நாமக்கல்), மீனம்பூர் சீரக சம்பா (இராணிப்பேட்டை), ஐயம்பாளையம் நெட்டைத் தென்னை (திண்டுக்கல்), உரிகம்புளி (கிருஷ்ணகிரி), புவனகிரி மிதிபாகற்காய் (கடலூர்), செஞ்சோளம் (சேலம், கரூர்), திருநெல்வேலி அவுரி இலை (திருநெல்வேலி), ஓடைப்பட்டி விதையில்லா திராட்சை (தேனி), செங்காந்தள் (கண்வலி) விதை (கரூர், திண்டுக்கல் மற்றும் திருப்பூர்) ஆகிய 10 பொருள்களுக்கு புவிசார் குறியீடு `30 இலட்சம் மதிப்பீட்டில் பெறப்படவுள்ளது.

Exit mobile version