Tnpsc Current Affairs in Tamil – 21st December 2023

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற கெலெபு சிறப்பு நிர்வாகப் பகுதி அமைந்துள்ள நாடு எது?

அ. நேபாளம்

ஆ. சீனா

இ. பூட்டான்

ஈ. இந்தியா (சிக்கிம்)

2. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘JN.1’ மற்றும் ‘Pirola’ ஆகிய சொற்கள், பின்வரும் எதனுடன் தொடர்புடையவை?

அ. செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி

ஆ. காலநிலை மாற்ற முன்னெடுப்புகள்

இ. COVID-19

ஈ. மலேரியா

3. உலகின் மிகப்பெரிய தியான மையமான, ‘ஸ்வர்வேத மகாமந்திர்’ அமைந்துள்ள நகரம் எது?

அ. புது தில்லி

ஆ. வாரணாசி

இ. உஜ்ஜயினி

ஈ. ஜெய்ப்பூர்

4. தமிழ்நாட்டை விஞ்சியதோடு மகாராஷ்டிராவுக்கு அடுத்து இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்த மாநிலம் எது?

அ. கர்நாடகா

ஆ. இராஜஸ்தான்

இ உத்தர பிரதேசம்

ஈ. குஜராத்

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சிர்பூர் ஈரநிலம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. மத்திய பிரதேசம்

இ. ஒடிசா

ஈ. மேற்கு வங்காளம்

6. தற்போது (2023 டிசம்பர்) இந்தியாவின் மொத்த மேற்கூரை சூரிய மின்னுற்பத்தி நிறுவும் திறனில், கீழ்காணும் எந்த மாநிலம் அதிக பங்கினைக் கொண்டுள்ளது?

அ. தமிழ்நாடு

ஆ. குஜராத்

இ. மகாராஷ்டிரா

ஈ. இராஜஸ்தான்

7. ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளுக்கான இந்திய அறிவியல் பயணங்கள் திட்டத்தின் பெயர் என்ன?

அ. PACER

ஆ. POLARIS

இ. ICECAP

ஈ. ARCTICA

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற யோகமாயா கோவில் அமைந்துள்ள நகரம் எது?

அ. வாரணாசி

ஆ. உஜ்ஜயினி

இ. தில்லி

ஈ. குண்டூர்

9. மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் நினைவாக, ‘டேர் டு டிரீம்’ திட்டத்தை சமீபத்தில் தொடங்கிய மத்திய அமைச்சகம் எது?

அ. கல்வி அமைச்சகம்

ஆ. பாதுகாப்பு அமைச்சகம்

இ. வெளியுறவு அமைச்சகம்

ஈ. விளையாட்டு அமைச்சகம்

10. சமீபத்தில், இந்தியாவின் சொந்த AI மற்றும் பன்மொழி பெருமொழி மாதிரி என விளம்பரப்படுத்தப்பட்ட, ‘Krutrim’ என்பதை உருவாக்கிய நிறுவனம் எது?

அ. ஓயோ

ஆ. ஓலா

இ. PayTM

ஈ. ChatGPT

11. அண்மைய மிக்ஜம் புயலின்போது, எந்த இந்திய மாநிலத்தில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் எண்ணூர் கடற்கழியில் எண்ணெய்க்கசிவு ஏற்பட்டது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. ஆந்திர பிரதேசம்

12. சர்வதேச புலம்பெயர்ந்தோர் நாள் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகள் நாளானது ஒவ்வோர் ஆண்டும் எந்தத் தேதியில் கடைப்பிடிக்கப்படுகிறது?

அ. டிசம்பர் 17

ஆ. டிசம்பர் 18

இ. டிசம்பர் 19

ஈ. டிசம்பர் 20

13. LEADS – 2023 என்ற அறிக்கையை வெளியிடுகிற அமைச்சகம் எது?

அ. கல்வி அமைச்சகம்

ஆ. பாதுகாப்பு அமைச்சகம்

இ. NITI ஆயோக்

ஈ. வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சாகித்திய அகாதெமி விருதுகள் அறிவிப்பு.

நடப்பாண்டுக்கான (2023) சாகித்திய அகாதெமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்மொழிப்பிரிவில் “நீர்வழிப்படூஉம்” என்னும் புதினத்துக்காக திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் இராஜசேகரனுக்கு (தேவி பாரதி) சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த “நீர்வழிப்படூஉம்” நாவலானது குடிநாவிதர்களின் மூதாதையர் வாழ்க்கை முறையை எடுத்துரைப்பதாகும்.

இலக்கிய உலகின் உயரிய விருதாக சாகித்திய அகாதெமி விருது கருதப்படுகிறது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு இந்த விருது ஆண்டுதோறும் அளிக்கப்பட்டு வருகிறது. 2023ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருதுக்கு 9 கவிதை நூல்கள், 6 நாவல்கள், 5 சிறுகதை நூல்கள், 3 கட்டுரைகள், 1 இலக்கிய ஆய்வு நூல் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சாகித்திய அகாதெமி 70ஆவது ஆண்டை வரும் மார்ச்.12ஆம் தேதி நிறைவுசெய்யவுள்ளது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், நத்தக்காடையூர் அருகே உள்ள புதுவெங்கரையாம்பாளையத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் தேவிபாரதி என்ற என். இராஜசேகரன். இவர், நிழலின் தனிமை, நட்ராஜ் மகராஜ், நொய்யல் ஆகிய நாவல்களையும், ஏராளமான சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

2. `77,000 கோடியில் 15 இடங்களில் நீர்த்தேக்கங்கள்மூலம் மின்னுற்பத்தி: தமிழ்நாடு அரசு ஒப்புதல்.

தமிழ்நாட்டில் 15 இடங்களில் `77,000 கோடியில் தனியார் பங்களிப்புடன் நீர்த்தேக்கங்கள்மூலம் மின்னுற்பத்தி செய்யும் நிலையங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனம்மூலம் (TANGEDCO) செயல்படுத்தப்படும் இத்திட்டம்மூலம், சுமார் 14,500 மெகாவாட் (MW) மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3. மூன்று புதிய குற்றவியல் மசோதாக்கள்: குடியரசுத்தலைவர் ஒப்புதல்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று புதிய குற்றவியல் மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம்-1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம்-1898, இந்திய சாட்சியச் சட்டம்-1872 ஆகியவற்றுக்கு மாற்றாக ‘பாரதிய நியாய சம்ஹிதா’, ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா’, ‘பாரதிய சாட்சிய அதினியம்’ ஆகிய மூன்று சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள குற்றவியல் நீதி அமைப்பில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்துவதை இந்தச் சட்டங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.

Exit mobile version