Tnpsc Current Affairs in Tamil – 20th December 2023

1. அண்மையில் இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணமாக வந்திருந்த சுல்தான் ஹைதம் பின் தாரிக், கீழ்காணும் எந்த நாட்டின் சுல்தான் மற்றும் பிரதமராவார்?

அ. கத்தார்

ஓமன்

இ. ஏமன்

ஈ. ஈரான்

2. அண்மையில் தொடங்கப்பட்ட காசி தமிழ்ச்சங்கமம் என்பது எந்த அமைச்சகத்தின் முன்னெடுப்பாகும்?

அ. கலாச்சார அமைச்சகம்

ஆ. கூட்டுறவு அமைச்சகம்

இ. கல்வி அமைச்சகம்

ஈ. சுற்றுலா அமைச்சகம்

3. அண்மையில் UNESCOஇன் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்ட காஸ் பீடபூமி அமைந்துள்ள நாடு எது?

அ. இந்தியா

ஆ. ரஷ்யா

இ. சீனா

ஈ. ஐக்கிய அரபு அமீரகம்

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “SWAMIH முதலீட்டு நிதியம்” என்பதுடன் தொடர்புடைய துறை எது?

அ. ஆட்டோமொபைல்

ஆ. ரியல் எஸ்டேட்

இ கல்வி

ஈ. மருந்து

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘பாஷினி’ என்றால் என்ன?

அ. பிளாக்செயின் அடிப்படையிலான தரவுப்பாதுகாப்பு அமைப்பு

ஆ. AI- தலைமையிலான மொழி மொழிபெயர்ப்பு அமைப்பு

இ. மேகக்கணிமை உட்கட்டமைப்பு

ஈ. மெய்நிகர் அடிப்படையிலான விளையாட்டுத் தளம்

6. தற்போது (2023 டிசம்பர்) ஐக்கிய நாடுகள் அவைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி யார்?

அ. அரிந்தம் பாக்சி

ஆ. இந்திரன் மணி பாண்டே

இ. ருசிரா காம்போஜ்

ஈ. K நந்தினி சிங்லா

7. அண்மையில், பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய வைர வணிக மையம் அமைந்துள்ள நகரம் எது?

அ. மும்பை

ஆ. சூரத்

இ. பரோடா

ஈ. புனே

8. அண்மையில் இந்திய விமானப்படையால் சோதிக்கப்பட்ட SAMAR வான் பாதுகாப்பு அமைப்பின் விரிவாக்கம் என்ன?

அ. Strategic Aerial Munition for Adaptive Response

ஆ. Surface-to-Air Missile for Assured Retaliation

இ. Supersonic Airborne Missile for Assertive Repulsion

ஈ. Supersonic Airborne Mechanism for Advanced Repulsion

9. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற தெம்பு இறைவைப் பாசனத் திட்டம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. கோவா

ஆ. மகாராஷ்டிரா

இ. கர்நாடகா

ஈ. குஜராத்

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற லூனா பெருவாய் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. மகாராஷ்டிரா

இ. ஒடிசா

ஈ. கர்நாடகா

11. ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்குப்பிறகு, செங்கடலில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்கும் பத்து நாடுகள்கொண்ட இராணுவப் படையை வழிநடத்துகிற நாடு எது?

அ. பிரான்ஸ்

ஆ. இங்கிலாந்து

இ. அமெரிக்கா

ஈ. இத்தாலி

12. அண்மையில் நடைபெற்ற தொடக்க இந்திய வியூக மாநாட்டை நடத்திய நகரம் எது?

அ. ஹைதராபாத்

ஆ. பெங்களூரு

இ. சென்னை

ஈ. மும்பை

13. அண்மையில், கோவா விடுதலை நாள் டிசம்பர்.19 அன்று அனுசரிக்கப்பட்டது. எத்தனை ஆண்டுகளாக, கோவா போர்ச்சுகலின்கீழ் ஒரு பிரதேசமாக இருந்தது?

அ. 298 ஆண்டுகள்

ஆ. 325 ஆண்டுகள்

இ. 395 ஆண்டுகள்

ஈ. 461 ஆண்டுகள்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தெலங்கானா நெசவாளர்களுடன் குடியரசுத்தலைவர் கலந்துரையாடல்.

யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தின் போச்சம்பள்ளி கிராமத்தில் உள்ள கைத்தறி மற்றும் நூற்பாலைகளை திரௌபதி முர்மு பார்வையிட்டார். போச்சம்பள்ளி கிராமத்தில் நெய்யப்படும் சேலைகள் மிகவும் பிரபலமானவை. அவற்றுக்கு கடந்த 2004இல் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இந்தச்சேலைகள் ‘இகாத்’ எனப்படுகிறது. போச்சம்பள்ளியை சிறந்த சுற்றுலா கிராமமாக ஐநா உலக சுற்றுலா அமைப்பு கடந்த 2021இல் தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version