Tnpsc Current Affairs in Tamil – 20th & 21st January 2024

1. மீனவர்களுக்கான 2ஆம் தலைமுறை பேரிடர் எச்சரிக்கை அலைபரப்புக் கருவியை உருவாக்கிய அமைப்பு எது?

அ. இந்திய வானிலை ஆய்வு மையம்

ஆ. புவி அறிவியல் அமைச்சகம்

இ. DRDO

ஈ. ISRO

2. இருதரப்பு தொடருக்கான முதல் பெண் நடுநிலை நடுவராக ICCஆல் நியமிக்கப்பட்டவர் யார்?

அ. சூயு ரெட்ஃபெர்ன்

ஆ. நிதா தர்

இ. ஷிவானி மிஸ்ரா

ஈ. மேரி வால்ட்ரான்

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, Chang’e 6 திட்டத்துடன் தொடர்புடைய நாடு எது?

அ. சீனா

ஆ. இந்தியா

இ. ரஷ்யா

ஈ. இங்கிலாந்து

4. அண்மையில், எந்த மாநிலத்தில் தேசிய அளவிலான நிறுவனமான, ‘NACIN’ஐ பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்?

அ. உத்தர பிரதேசம்

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. கேரளா

ஈ. அருணாச்சல பிரதேசம்

5. கிழக்குக் கடற்படையின் தலைமைப் பணியாளர் அதிகாரியாக (செயல்பாடுகள்) நியமிக்கப்பட்டவர் யார்?

அ. ரியர் அட்மிரல் சாந்தனு ஜா

ஆ. துணை அட்மிரல் ராஜேஷ் பெண்டர்கர்

இ. அட்மிரல் R ஹரி குமார்

ஈ. அட்மிரல் வினய் சின்ஹா

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘பரிக்ரம பிரகல்பா’ திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. ஒடிசா

இ. மத்திய பிரதேசம்

ஈ. குஜராத்

7. எந்த ஆற்றில், இந்தியாவின் முதல் சூரிய ஆற்றலில் இயங்கும் படகு இயக்கப்படவுள்ளது?

அ. சரயு ஆறு

ஆ. பெரியாறு

இ. காவிரியாறு

ஈ. பாலாறு

8. பட்டியலின வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் உயர்கல்விக்கு உதவித்தொகை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள திட்டம் எது?

அ. சாக்ஷர் பாரத் திட்டம்

ஆ. SWAYAM திட்டம்

இ. SHRESHTA திட்டம்

ஈ. சமக்ரா சிக்ஷா திட்டம்

9. அண்மையில், டாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் (WEF) MSME-களுக்கான, ‘EcoMark’ பசுமை அங்கீகார கட்டமைப்பை அறிமுகப்படுத்திய நாடு எது?

அ. ரஷ்யா

ஆ. இந்தியா

இ. ஐக்கிய அரபு அமீரகம்

ஈ. சீனா

10. சமீபத்தில், மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, கீழ்காணும் எந்த மாநிலத்தில் செயற்கை கடலடிப்பாறைகள் திட்டத்தைத் தொடக்கிவைத்தார்?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. கோவா

11. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘கருங்கழுத்துப் பாறு – Indian Vulture’இன் IUCN நிலை என்ன?

அ. அருகிவிட்ட இனம்

ஆ அழிவாய்ப்பு நிலையிலுள்ள இனம்

இ. தீவாய்ப்பு கவலைகுறைந்த இனம்

ஈ. மிகவும் அருகிவிட்ட இனம்

12. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘Senna spectabilis’ என்றால் என்ன?

அ. பூஞ்சை

ஆ. ஆக்கிரமிப்பு தாவரம்

இ. பண்டைய விவசாய நுட்பங்கள்

ஈ. தீநுண்மம்

13. அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றின் தொகுப்பான, ‘திருக்குறள்’ நூலை இயற்றியவர் யார்?

அ. திருவள்ளுவர்

ஆ. கம்பர்

இ. முன்றுறை அரையனார்

ஈ. சமண முனிவர்கள்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஜப்பான் விண்கலம் நிலவில் தரையிறங்கியது.

ஜப்பான் அனுப்பிய விண்கலமான, ‘ஸ்லிம்’ நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம் அமெரிக்கா, ரஷியா, சீனா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய 5ஆவது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றுள்ளது. நிலவின் மேற்பரப்பில் வெறும் 100 மீட்டர் பரப்புக்குள் துல்லியமாகத் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த விண்கலம், ‘நிலவின் ஸ்னைப்பர்’ (தொலைவிலிருந்து துல்லியமாக சுடுபவர்) என்று அழைக்கப்படுகிறது.

2. ‘DD தமிழ்’ எனபி பெயர்மாறியது பொதிகை!

‘தூர்தர்ஷன் தமிழ்’ என்ற பெயருடன் புதிய அவதாரம் எடுத்துள்ள பொதிகை தொலைக்காட்சியின் சேவையை பிரதமர் நரேந்திர மோதி, தொடக்கிவைத்தார். கடந்த 1975ஆம் ஆண்டு சென்னை தூர்தர்ஷன் தனது முதல் ஒளி பரப்பைத் தொடங்கியது.

3. 19 சிறுவர், சிறுமிகளுக்கு பிரதமரின் தேசிய சிறார் விருது: ஜன.22இல் குடியரசுத்தலைவர் வழங்குகிறார்.

2024ஆம் ஆண்டிற்கான பிரதமரின் தேசிய சிறார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளை வருகின்ற ஜன.22ஆம் தேதி குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழங்குகிறார். இந்த விருதுகளை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சகம் சார்பில் சாதனை படைத்த குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. 5 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களில் ஏழு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

அதிவீரச் செயலுக்கான விருதுக்குத் தேர்வாகியுள்ள மகாராஷ்டிர மாநில சிறுவன் ஆதித்யா (12) உயிரிழந்து விட்டார். இதேபோன்று ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த R சூர்யபிரசாத் (9) தனது 5 வயதில் மலையேறும் பயிற்சியைத் தொடங்கி குறிப்பிடத்தக்க உறுதியையும் திறமையையும் வெளிப்படுத்தியதற்காக விருதுக்குத் தேர்வாகியுள்ளார். இவர் 2022ஆம் ஆண்டு, ‘கிளிமஞ்சாரோ’ மலையை அடைந்தது உச்ச சாதனையாகும். இதேபோல, விருதுக்குத் தேர்வுபெற்றுள்ள தெற்கு தில்லியைச் சேர்ந்த 16 வயது சுஹானி, விவசாயிகளுக்கான சூரிய ஆற்றல் வாகனத்தை உருவாக்கியுள்ளார்.

4. NLC இந்தியா நிறுவனத்துக்கு தேசிய விருது.

NLC இந்தியா நிறுவனம் எண்ம (டிஜிட்டல்) மாற்றத்துக்கான பிரிவில் சிறப்பாக செயல்பட்டு வருவதற்காக 2019-20ஆம் ஆண்டுக்கான ஸ்கோப் எமினென்ஸ் விருதைப் பெற்றது. பொதுத்துறை நிறுவனங்களின் நிலையான மாநாடு என்பதன் சுருக்கமே ‘ஸ்கோப்’ ஆகும். மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் உயரிய அமைப்பான இது 1973ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

5. பன்னாட்டு மருத்துவ மாநாடு.

தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு Dr MGR மருத்துவப்பல்கலைக்கழகம் இணைந்து, “மருத்துவத்தின் எதிர்காலம்” என்கிற தலைப்பில் மூன்று நாள்கள் நடைபெறும் பன்னாட்டு மருத்துவ மாநாட்டை சென்னையில் தொடங்கின. தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதேபோன்று, 10,500 தன்னார்வலர்கள்மூலமாக, “மக்களைத்தேடி மருத்துவம்” திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

6. ஒரே நாடு ஒரே தேர்தல்: மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட திருத்தங்கள்.

மக்களவைக்கும் மாநில பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த அரசமைப்புச் சட்டத்தின் 5 பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்படவேண்டும்.

நாடாளுமன்ற அவைகளின் பதவிக்காலம் தொடர்பான 83ஆவது பிரிவு, குடியரசுத்தலைவரால் மக்களவை கலைக்கப்படுவது தொடர்பான 85ஆவது பிரிவு, மாநிலப்பேரவைகளின் பதவிக்காலம் தொடர்பான 172ஆவது பிரிவு, மாநிலப்பேரவைகள் கலைக்கப்படுவது தொடர்பான 174ஆவது பிரிவு, மாநிலங்களில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பான 356ஆவது பிரிவு ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

கட்சித்தாவல் காரணமாக மக்கள் பிரதிநிதிகளைத் தகுதிநீக்கம் செய்வதற்கான அரசமைப்புச் சட்டத்தின் 10ஆவது அட்டவணையிலும் உரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

7. அமைச்சரின் நூல் வெளியீடு.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எழுதியுள்ள, “கரோனா: உடல் காத்தோம் – உயிர் காத்தோம்” என்ற நூலை, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.

Exit mobile version