Tnpsc Current Affairs in Tamil – 1st November 2023

1. 2023 – ‘ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தின்’ கருப்பொருள் யாது?

அ. Integrity and ethics

ஆ. Say no to corruption, commit to the Nation 🗹

இ. Stay Vigilant; Stay Honest

ஈ. Information is Power

2. சமீபத்தில் தொடங்கப்பட்ட, ‘ஆபரேஷன் சேஷா’ என்பது எதன் சட்டவிரோத வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது?

அ. ஆமைகள்

ஆ. வெட்டு மரம் 🗹

இ. அயல்நாட்டுப் பறவைகள்

ஈ. தந்தம்

3. அண்மையில் காலமான சலீமுல் ஹக் என்பாருடன் தொடர்புடையது எது?

அ. அறிவியலாளர்

ஆ. தட்பவெப்பநிலை மாற்ற நிபுணர் 🗹

இ. பொருளாதார நிபுணர்

ஈ. எழுத்தாளர்

4. NPSஇல் உள்ள நிதியைப் பெறுவதற்கு, ‘penny drop’ என்ற சரிபார்ப்பு முறையைக் கட்டாயப்படுத்தியுள்ள நிறுவனம் எது?

அ. IRDAI

ஆ. PFRDA 🗹

இ. SEBI

ஈ. RBI

5. 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, ODI உலகக்கோப்பைகளில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்துள்ள கிரிக்கெட் அணி எது?

அ. இந்தியா

ஆ. ஆஸ்திரேலியா 🗹

இ. இங்கிலாந்து

ஈ. தென் ஆப்பிரிக்கா

6. ஜோகூர் சுல்தான் கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. கிரிக்கெட்

ஆ. ஹாக்கி 🗹

இ. கூடைப்பந்து

ஈ. கால்பந்து

7. WHOஇன் அண்மைய அறிக்கையின்படி, இந்தியாவில் 188.3 மில்லியன் மக்கள் (37% பேர் மட்டுமே தனக்கு இந்நிலை இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்) கீழ்காணும் எந்த உடல்நிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்?

அ. நீரிழிவு நோய்

ஆ. உயர் இரத்த அழுத்தம் 🗹

இ. கீல்வாதம்

ஈ. ஈழைநோய்

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ‘ஹிரோஷிமா AI செயல்முறை’யுடன் தொடர்புடைய அமைப்பு எது?

அ. SAARC

. G7 🗹

இ. G20

ஈ. ASEAN

9. அண்டார்டிகா பகுதிகளில் முதன்முறையாக கீழ்க்காணும் எந்த நோயை அறிவியலாளர்கள் கண்டறிந்தனர்?

அ. பறவைக் காய்ச்சல் 🗹

ஆ. அடைப்பான் நோய்

இ. வாய்ப்பூட்டு நோய்

ஈ. நீலநாக்கு வைரஸ்

10. ஓர் ஆய்வின்படி, 4.5 பில்லியன் முதல் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெக்டோனிக் செயல்பாட்டிற்கு உட்பட்டிருக்கலாம் எனக் கணிக்கப்படுகிற கோள் எது?

அ. வெள்ளி 🗹

ஆ. செவ்வாய்

இ. புதன்

ஈ. வியாழன்

11. ‘இராஷ்ட்ரிய கோகுல் இயக்கத்துடன்’ தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ. வேளாண்மை மற்றும் குடும்ப நல அமைச்சகம்

ஆ. MSME அமைச்சகம்

இ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

ஈ. மீன்பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் 🗹

12. இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் விழிப்புணர்வுக்காக தேசிய அடையாளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்திய நடிகர் யார்?

அ. ரஜினிகாந்த்

ஆ. கமல்ஹாசன்

இ. ராஜ்குமார் ராவ் 🗹

ஈ. வித்யா பாலன்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்தியா-வங்கதேசம் இடையே புதிய ரெயில் வழித்தடம்.

திரிபுராவின் அகர்தலா மற்றும் வங்கதேசத்தின் அகௌரா இடையேயான புதிய ரெயில் வழித்தட திட்டம் உள்பட 3 முக்கிய இந்திய ஆதரவுத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் இணைந்து காணொலிமூலம் தொடக்கிவைத்தனர். திரிபுராவின் நிச்சிந்தாபூர் மற்றும் வங்கதேசத்தின் கங்காசாகர் இடையே 12.24 கிமீ ரெயில் பாதை திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அகர்தலா-அகௌரா இடையே உருவாகியுள்ள புதிய ரெயில் வழித்தடம் எல்லைதாண்டிய வர்த்தகத்தை அதிகரிப்பதோடு, வங்கதேச தலைநகரம் டாக்கா வழியாக அகர்தலா மற்றும் கொல்கத்தாவுக்கு இடையிலான 1,600 கிமீ தொலைவை 500 கிமீ-ஆக குறைத்து பயண நேரத்தை கணிசமாக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்காக இந்திய அரசு `392.52 கோடி நிதியுதவி அளித்துள்ளது. மேலும், 65 கிமீ தொலைவுக்கு குல்னா-மோங்லா துறைமுகம் இடையே அகல ரெயில் பாதை, வங்கதேசத்தின் இராம்பாலில் அமைந்துள்ள மைத்ரீ அனல்மின் நிலையத்தில் 1,320 மெகாவாட் திறன்கொண்ட 2ஆவது நிலையம் ஆகிய 3 இந்திய ஆதரவுத் திட்டங்களின் தொடக்க விழா காணொலிமூலம் நடைபெற்றது.

2. மாநிலங்கள் உருவான தினம்.

ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகியவை மாநிலங்களாகவும் இலட்சத்தீவுகள் யூனியன் பிரதேசமாகவும் கடந்த 1956ஆம் ஆண்டு உருவெடுத்தன. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் கடந்த 1966இல் உருவாகின. மத்திய பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, கடந்த 2000ஆம் ஆண்டில் தனி மாநிலமாக சத்தீஸ்கர் உருவெடுத்தது. இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நவ.1ஆம் தேதியை மாநிலங்கள் உருவான தினமாக கொண்டாடுகின்றன.

3. உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குநராக வங்கதேச பிரதமரின் மகள் சைமா வாஸித் தேர்வு.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கீழ்செயல்படும் தென்கிழக்காசிய பிராந்திய அமைப்பின் அடுத்த இயக்குநராக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகளும் மனநல மருத்துவ நிபுணருமான சைமா வாஸித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி பிராந்திய இயக்குநராகப் பதவியேற்கும் சைமா வாஸித், அடுத்த 4 ஆண்டுகளுக்கு அந்தப் பதவியை வகிப்பார்.

உலக சுகாதார அமைப்பின் 6 பிராந்திய அமைப்புகளில் ஒன்றான தென்கிழக்காசிய பிராந்திய அமைப்பு தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டது. இதில் இந்தியா, வங்கதேசம், பூடான், வடகொரியா, வங்கதேசம், இந்தோனேசியா, மாலத்தீவுகள், இலங்கை, நேபாளம், தாய்லாந்து, திமோர் லெஸ்டே ஆகிய 11 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Exit mobile version