Tnpsc Current Affairs in Tamil – 1st July 2024

1. அண்மையில், உத்தரபிரதேச மாநில அரசு அதன் எந்த மாவட்டத்தில் உயிரி-நெகிழிப் பூங்காவை அமைக்க முடிவு செய்துள்ளது?

அ. மதுரா

ஆ. ஆக்ரா

இ. லக்கிம்பூர் கெரி

ஈ. சஹாரன்பூர்

2. அண்மையில், “Migration and Development Brief” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. உலக வங்கி

ஆ. IMF

இ. UNDP

ஈ. UNEP

3. யாருக்கு 2024ஆம் ஆண்டுக்கான PEN பிண்டர் பரிசு வழங்கப்பட்டுள்ளது?

அ. விக்ரம் சேத்

ஆ. நீலம் சக்சேனா

இ. விக்ரம் சிங்

ஈ. அருந்ததி ராய்

4. பள்ளிக்கரணை சதுப்புநிலம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. கேரளா

ஈ. ஆந்திர பிரதேசம்

5. அண்மையில், இந்தியக் கடற்படைக்கு Medium Range-Microwave Obscurant Chaff Rocket (MR-MOCR) என்ற ஏவுகணையை வழங்கிய அமைப்பு எது?

அ. DRDO

ஆ. ISRO

இ. HAL

ஈ. CSIR

6. அண்மையில், நெகிழிக்கழிவுகளைப் பயன்படுத்தி சாலையை அமைத்த இந்தியாவின் இரண்டாவது இராணுவ நிலையம் எது?

அ. டேராடூன் இராணுவ நிலையம்

ஆ. ரூர்க்கி இராணுவ நிலையம்

இ. ஜெய்ப்பூர் இராணுவ நிலையம்

ஈ. மீரட் இராணுவ நிலையம்

7. அண்மையில், NATOஇன் புதிய பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட மார்க் ரூட்டே, எந்த நாட்டின் பிரதமராவார்?

அ. சிங்கப்பூர்

ஆ. இந்தோனேசியா

இ. நெதர்லாந்து

ஈ. ஆஸ்திரேலியா

8. கலிபர் சீர்வேக ஏவுகணையை உருவாக்கிய நாடு எது?

அ. சீனா

ஆ. ஜப்பான்

இ. இந்தியா

ஈ. ரஷ்யா

9. ‘தபஸ் BH-201 UAV’ஐ உருவாக்கிய அமைப்பு எது?

அ. JAXA

ஆ. DRDO

இ. ISRO

ஈ. HAL

10. அண்மையில், ISROஇன் வணிகப்பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிட் (NSIL) உடனான் $18 மில்லியன் டாலர் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடு எது?

அ. ஆஸ்திரேலியா

ஆ. ஜப்பான்

இ. ஜெர்மனி

ஈ. பிரான்ஸ்

11. காசநோய் தொற்று மற்றும் சிகிச்சையை ஆய்வுசெய்வதற்காக ஒரு புதிய 3D நீரேறிய களி வளர்ப்பு அமைப்பை வடிவமைத்துள்ள நிறுவனம் எது?

அ. இந்திய அறிவியல் கழகம் (IISc)

ஆ. ஆயுர்வேத ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

இ. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR)

ஈ. தேசிய காசநோய் நிறுவனம்

12. சமீபத்தில், லீட்ஸ் பல்கலைக்கழகத்துடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிறுவனம் எது?

அ. ஐஐடி கான்பூர்

ஆ. ஐஐடி தில்லி

இ. ஐஐடி மெட்ராஸ்

ஈ. ஐஐடி பம்பாய்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பசிபிக் பெருங்கடலை ஒட்டிய 29 நாடுகள் போர் பயிற்சி: இந்தியக்கடற்படை பங்கேற்பு.

உலகின் மிகப்பெரும் கடற்சார் போர் பயிற்சியான, ‘ரிம் ஆஃப் தி பசிபிக்’ (RIMPAC) பயிற்சியில் இந்தியக் கடற்படை பங்கேற்றது. ஹவாய் தீவில் நடைபெறும் இந்தப்பயிற்சியில் 29 நாடுகள், 40 கப்பல்கள், 3 போர்க்கப்பல்கள், 150க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 25,000க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இந்தப் பயிற்சியில் பங்கேற்பதற்காக தென்சீனக்கடல் மற்றும் வட பசிபிக் பெருங்கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்த இந்தியாவின் பல்நோக்கு போார்க்கப்பலான ஷிவாலிக், பேர்ல் ஹார்பரைச் சென்றடைந்தது. நடப்பாண்டுக்கான RIMPAC பயிற்சியின் கருப்பொருள், “ஒருங்கிணைந்த & தயார்நிலையிலான கூட்டமைப்பு நாடுகள்” என்பதாகும்.

2. இராணுவ புதிய தலைமைத்தளபதியாக உபேந்திர துவிவேதி பொறுப்பேற்பு.

இந்தியாவின் 30ஆம் ராணுவ தலைமைத்தளபதியாக உபேந்திர துவிவேதி பொறுப்பேற்றார். ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த மனோஜ் பாண்டேயின் பதவிக்காலம் ஜூன்.30ஆம் தேதியன்று நிறைவடைந்ததையடுத்து உபேந்திர துவிவேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.

3. வெங்கையா குறித்த மூன்று நூல்கள்: பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்டார்.

முன்னாள் குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையாவின் வாழ்க்கை, அரசியல் பயணம் குறித்த மூன்று நூல்களை பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்டார். வெங்கையாவின் வாழ்க்கை வரலாறு, “வெங்கையா நாயுடு-லைஃப் இன் சர்வீஸ்” என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர, “செலிபிரேட் பாரத்”, 13ஆவது குடியரசுத்துணைத் தலைவராக வெங்கையாவின் இலக்கை நோக்கிய பயணம் மற்றும் செய்தி ஆகிய நிழற்படத்தொகுப்பு நூல்களும் வெளியிடப்பட்டன. ஆங்கிலத்தில் மட்டுமல்லாது, வெங்கையாவின் தாய்மொழியான தெலுங்கிலும் அவரது வாழ்க்கை வரலாற்று நூல் வெளியாகியுள்ளது.

4. SCO உச்சிமாநாடு.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் இடம்பெற்றுள்ளன. பெரும் சர்வதேச அமைப்புகளில் ஒன்றாக உருவெடுத்துள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, செல்வாக்கு மிகுந்த பொருளாதார, பாதுகாப்பு அமைப்பாக விளங்குகிறது. இந்த அமைப்பின் 24ஆவது உச்சிமாநாடு கஜகஸ்தானின் தலைநகரம் அஸ்தானாவில் ஜூலை.03, 04 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

Exit mobile version