Tnpsc Current Affairs in Tamil – 1st 2nd & 3rd October 2023

1. சமீபத்தில், ‘தாதாசாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்ட திரைக்கலைஞர் யார்?

அ. வஹீதா ரஹ்மான் 🗹

ஆ. மதுபாலா

இ. ஸ்ரீதேவி

ஈ. ஷபானா ஆஸ்மி

2. சர்வதேச டென்னிஸ் வாழ்த்தரங்கத்திற்கு (Hall of Fame) பரிந்துரைக்கப்பட்ட முதல் ஆசியர் யார்?

அ. லியாண்டர் பயஸ் 🗹

ஆ. மகேஷ் பூபதி

இ. ரோஹன் போபண்ணா

ஈ. யூகி பாம்ப்ரி

3. NPSஇன்கீழ் ஓய்வூதிய சேமிப்புகளை நிர்வகிப்பதற்காக பதினோராவது நிதி மேலாளராக PFRDAஆல் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனம் எது?

அ. பந்தன் ஓய்வூதிய நிதி மேலாளர்கள்

ஆ. DSP ஓய்வூதிய நிதி மேலாளர்கள் 🗹

இ. ஆதித்யா பிர்லா சன் லைஃப் பென்ஷன் நிதியம்

ஈ. ஆக்ஸிஸ் ஓய்வூதிய நிதியம்

4. சமூகப்பத்திரங்கள்மூலம் `1000 கோடிக்கு மேல் நிதி திரட்டும் நிறுவனம் எது?

அ. NHB

ஆ. NABARD 🗹

இ. RBI

ஈ. SIDBI

5. 5 ஆண்டுகளில் `20,000 கோடி முதலீடுகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட தனித்தன்மைமிக்க சுற்றுலாக் கொள்கை – 2023’ஐ வெளியிட்டுள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு 🗹

ஆ. குஜராத்

இ. கர்நாடகா

ஈ. மகாராஷ்டிரா

6. இந்தியப்பெருங்கடலில் நுழைந்துள்ள, ‘ஷி யான் 6’ என்பது கீழ்காணும் எந்த நாட்டின் ஆராய்ச்சிக் கப்பலாகும்?

அ. ரஷ்யா

ஆ. சீனா 🗹

இ. வட கொரியா

ஈ. சிங்கப்பூர்

7. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்காக வெள்ளி வென்ற நேஹா தாக்கூர் சார்ந்த விளையாட்டு எது?

அ. துப்பாக்கிச் சுடுதல்

ஆ. ஸ்குவாஷ்

இ. பாய்மரப்படகோட்டம் 🗹

ஈ. குத்துச்சண்டை

8. சுதிப்தி ஹஜேலா, திவ்யகிருதி சிங், ஹிருதய் சேடா மற்றும் அனுஷ் அகர்வாலா ஆகியோருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. மல்யுத்தம்

ஆ. ஸ்குவாஷ்

இ. சதுரங்கம்

ஈ. குதிரையேற்றம் 🗹

9. ‘தெற்கு-தெற்கு அறிவுப் பகிர்வுத் தொடரை’ ஏற்பாடு செய்கிற நிறுவனம் எது?

அ. உலக வங்கி 🗹

ஆ. உலக பொருளாதார மன்றம்

இ. பன்னாட்டு செலவாணி நிதியம்

ஈ. NITI ஆயோக்

10. கீழ்காணும் எந்த நகரத்தில், புதுப்பிக்கப்பட்ட கடல் அருங்காட்சியகத்தை மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்?

அ. கொச்சி

ஆ. பனாஜி

இ. விசாகப்பட்டினம் 🗹

ஈ. மும்பை

11. ஓர் அண்மைய அறிக்கையின்படி, ஆமைகள் / கடினகள் ஓட்டு ஆமை கடத்தலின் மையமாக உருவெடுத்துள்ள நகரம் எது?

அ. ஆமதாபாத்

ஆ. மும்பை

இ. சென்னை 🗹

ஈ. விசாகப்பட்டினம்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்தியா, வங்கதேச இராணுவங்கள் கூட்டுப் பயிற்சியைத் தொடங்கின.

மேகாலயா மாநிலம் உம்ரோயில் இந்தியா- வங்கதேச இடையே 11ஆம் ஆண்டு கூட்டு இராணுவப் பயிற்சியான ‘சம்ப்ரிதி’, 2023 அக்டோபர் 03ஆம் தேதி தொடங்கியது. சுழற்சி அடிப்படையில் இரண்டு நாடுகளும் ஏற்பாடு செய்யும் இந்தப் பயிற்சி, அடிப்படையில் வலுவான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகளை குறிக்கிறது. 2009ஆம் ஆண்டில் அஸ்ஸாமின் ஜோர்ஹாட்டில் தொடங்கப்பட்ட இந்தப் பயிற்சி 2022ஆம் ஆண்டு வரை 10 வெற்றிகரமான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.

14 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள, ‘சம்ப்ரிதி-XI’, இருதரப்பிலிருந்தும் சுமார் 350 வீரர்களை ஈடுபடுத்தும். இந்தப் பயிற்சி இரு இராணுவங்களுக்கும் இடையிலான பரஸ்பர செயல்பாட்டை மேம்படுத்துதல், பயிற்சி உத்திகளை பகிர்தல் மற்றும் சிறந்த நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுகிறது. அஸ்ஸாம் மாநிலம் தர்ரங்காவில் உள்ள துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் 2023 அக்.14, 15 ஆகிய தேதிகளில் நிறைவு பயிற்சி ஒத்திகை நடைபெறவுள்ளது.

2. இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமங்களாக உல்லாடா, வேட்டைக்காரன்புதூர் தேர்வு.

இந்திய அளவில் சிறந்த சுற்றுலா கிராமங்களாக நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் அருகில் அமைந்துள்ள உல்லாடா, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வேட்டைக்காரன்புதூர் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஐ நா அவையின் உலக சுற்றுலா அமைப்பின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை மையமாகக் கொண்டு சுற்றுலாத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டத்தில், “கிராமங்களில் சுற்றுலா” என்ற கருப் பொருளும் கொண்டுவரப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு நாட்டிலிருந்தும் 3 கிராமங்கள் தேர்வுசெய்யப்பட்டன. இதில் சிறந்த சுற்றுலா கிராமம் வரிசையில், இந்தியாவில் மேகாலயா மாநிலத்தில் கோங்தாங், தெலங்கானா மாநிலத்தில் போச்சம்பள்ளி, மத்திய பிரதேச மாநிலத்தில் லாட்புரா காஸ் ஆகியவை இடம்பிடித்தன.

இந்த நிலையில் ஐ நா அவையின் உலக சுற்றுலா அமைப்பு, உலகம் முழுவதும் சுற்றுலா கிராமங்களைத் தேர்வு செய்வதுபோல், மத்திய அரசு இந்தியாவில் சுற்றுலா கிராமங்களைத் தேர்வுசெய்யும் முயற்சியில் ஈடுபட்டது. அதன்படி இந்தியாவில் சிறந்த சுற்றுலா கிராமப்போட்டியை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிவைத்தார். உள்ளூர் கலை, கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்தி, பாதுகாக்கும் கிராமங்களைக் கௌரவிப்பதே இந்தப் போட்டியின் முக்கிய நோக்கமாகும்.

இந்தநிலையில், 2023ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமங்களில் ஒன்றாக தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலத்தை அடுத்த கேத்தி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள உல்லாடா கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன்புதூர் என்ற கிராமத்தையும் சிறந்த சுற்றுலா கிராமங்களில் ஒன்றாக மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.

3. தமிழ்நாடு அரசு மாநில பல்லுயிர் வாரியம் மறுசீரமைப்பு.

தமிழ்நாடு மாநில அரசு அண்மையில் தமிழ்நாடு மாநில பல்லுயிர் வாரியத்தை மறுசீரமைப்பு செய்தது. தற்போது தொழிற்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய மூன்று சிறப்பு அழைப்பாளர்களை இந்த வாரியம் உள்ளடக்கும். இந்த வாரியத்தின் தலைவராக வனத்துறை அமைச்சர் இருப்பார். சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர்கள்; ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்; மற்றும் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறைகள், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர் ஆகியோர் குழுவின் அதிகாரபூர்வ உறுப்பினர்களாக இருப்பார்கள்.

4. சோழர்கால மானம்பாடி கோவில் புத்துயிர் பெறவுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள முதலாம் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட மானம்பாடி நாகநாதசுவாமி திருக்கோவில், அழகிய கற்சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளுக்குப் பெயர் பெற்ற பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும்.

1,000 ஆண்டுகள் பழமையான இந்த நாகநாதசுவாமி திருக்கோவிலுக்குப் புத்துயிரளிக்கும் வகையில், தமிழ்நாட்டின் தொல்லியல் துறை, அங்கு திருப்பணி மேற்கொள்ளவுள்ளது.

5. இந்தியாவின் முழுமையான பசுமை ஆற்றல் பெற்ற முதல் தொல்லியல் தளம் – மாமல்லபுரம்.

பசுமை பாரம்பரியத் திட்டத்தின் ஒருபகுதியாக Renault Nissan Technology & Business Center India (Renault Nissan Tech) மற்றும் Hand in Hand India (HiH) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் கடற்கரை கோவில் முழுவதும் சூரிய ஆற்றலில் இயங்கும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 10 KW திறன்கொண்ட மூன்று சோலார் அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இதன்மூலம் இந்தியாவின் முழுமையான பசுமை ஆற்றல் பெற்ற முதல் தொல்லியல் தளமாக மாமல்லபுரம் கடற்கரை கோவில் மாறியுள்ளது.

Exit mobile version