Tnpsc Current Affairs in Tamil – 1st 2nd & 3rd May 2024

1. அண்மையில், புவிசார் குறியீடுகொண்ட தயாரிப்புகளின் தாக்க மதிப்பீடு குறித்த ஆய்வுக்கு அனுமதியளித்துள்ள அமைப்பு எது?

அ. SIDBI

ஆ. FSSAI

இ. NABARD

ஈ. ISRO

2. ‘K2-18B’ என்றால் என்ன?

அ. புறக்கோள்

ஆ. கருந்துளை

இ. சிறுகோள்

ஈ. நீர்மூழ்கிக்கப்பல்

3. அண்மையில், பொது நிறுவனங்கள் துறையால், ‘நவரத்னா’ தகுதி வழங்கப்பட்ட அமைப்பு எது?

அ. BHEL

ஆ. HAL

இ. HMTL

ஈ. IREDA

4. தேசிய செயல்முறைப் பொருளியல் ஆய்வுக்குழுவின் (NCAER) கூற்றுப்படி, 2024-25 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வீதம் என்னவாக இருக்கும்?

அ. 6%

ஆ. 7%

இ. 8%

ஈ. 8.5%

5. நிதிப்புலனாய்வுப் பிரிவு என்பது கீழ்க்காணும் எந்த அமைச்சகத்தின்கீழ் வரும் ஒரு சிறப்பு நிறுவனமாகும்?

அ. பாதுகாப்பு அமைச்சகம்

ஆ. மின்சார அமைச்சகம்

இ. நிதி அமைச்சகம்

ஈ. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்

6. அண்மையில், இந்திய விண்வெளி சூழ்நிலை மதிப்பீட்டு அறிக்கை (ISSAR), 2023ஐ வெளியிட்ட அமைப்பு எது?

அ. DRDO

ஆ. ISRO

இ. CSIR

ஈ. ICAR

7. அண்மையில், ‘வீடுசார்ந்த பணவீக்க எதிர்பார்ப்பு குறித்த ஆய்வு’ மற்றும் ‘நுகர்வோர் நம்பிக்கை குறித்த ஆய்வு’ ஆகியவற்றை வெளியிட்ட அமைப்பு எது?

அ. இந்திய ரிசர்வ் வங்கி

ஆ. இந்தியப் பொருளியல் வர்த்தக அமைப்பு

இ. நிதி அமைச்சகம்

ஈ. பொருளியல் வளர்ச்சி நிறுவனம்

8. முக்கியமான கனிமங்கள் பற்றிய அறிவுப் பகிரலுக்காக சக்தி நிலையான எரிசக்தி அறக்கட்டளையுடன் சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட மத்திய அமைச்சகம் எது?

அ. சுரங்க அமைச்சகம்

ஆ. நிதி அமைச்சகம்

இ. புவி அறிவியல் அமைச்சகம்

ஈ. விவசாய அமைச்சகம்

9. அண்மையில், பாரிஸ் விளையாட்டுகளுக்கு முன்னதாக Target Olympic Podium Scheme (TOPS)இன் முதன்மை குழுவில் மீண்டும் சேர்க்கப்பட்டவர் யார்?

அ. பூஜா கண்ணா

ஆ. தீபிகா குமாரி

இ. ககன்தீப் கவுர்

ஈ. முஸ்கன் கிரார்

10. SMART (Supersonic Missile Assisted Release of Torpedo) அமைப்பை உருவாக்கிய அமைப்பு எது?

அ. ISRO

ஆ. DRDO

இ. CSIR

ஈ. NDMA

11. 2024 – பன்னாட்டு தொழிலாளர் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Ensuring safety and health at work in a changing climate

ஆ. All labor that uplifts humanity has dignity and importance

இ. Universal Social Protection to End Child Labor

ஈ. Resilient Recovery

12. இந்தியாவில் மிதவை சூரிய மின்னாற்றல் உற்பத்தி தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்காக, அண்மையில், நார்வே நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்திய நிறுவனம் எது?

அ. NTPC லிட்

ஆ. NHPC லிட்

இ. SJVN

ஈ. NEEPCO

13. ‘Peucetia chhaparajnirvin’ என்றால் என்ன?

அ. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பசும்பூனைச்சிலந்திகள்

ஆ. பாரம்பரிய நீர்ப்பாசன நுட்பம்

இ. ஆக்கிரமிப்பு களை

ஈ. நீர்மூழ்கிக்கப்பல்

14. 2025 BWF உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பை, இந்தியா, கீழ்க்காணும் எந்த நகரத்தில் நடத்தவுள்ளது?

அ. சென்னை

ஆ. கௌகாத்தி

இ. பெங்களூரு

ஈ. காங்டாக்

15. அண்மையில், 2025-30ஆம் ஆண்டு வரை எந்நாட்டின் குடிமைப்பணியாளர்களுக்கு பயிற்சியளிக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது?

அ. மியான்மர்

ஆ. வங்காளதேசம்

இ. பூடான்

ஈ. நேபாளம்

16. பட்டாசித்ரா ஓவியங்களுடன் தொடர்புடைய மாநிலங்கள் எவை?

அ. பீகார் & ஜார்கண்ட்

ஆ. ஒடிசா & மேற்கு வங்காளம்

இ. மத்திய பிரதேசம் & இராஜஸ்தான்

ஈ. கர்நாடகா & கேரளா

17. சமீபத்தில், விவசாய வயல்களுக்கு டிஜிட்டல் முறையில் நீர் விநியோக முறையை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. இராஜஸ்தான்

இ. மகாராஷ்டிரா

ஈ. கேரளா

18. அண்மையில், ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நோய்த்தடுப்புக்கான விரிவாக்கப்பட்ட திட்டத்தைத் தொடங்கிய அமைப்பு எது?

அ. WHO

ஆ. WMO

இ. ILO

ஈ. UNICEF

19. அண்மையில், ‘ZiG’ என்ற புதிய நாணயத்தை அறிமுகப்படுத்திய நாடு எது?

அ. ருவாண்டா

ஆ. ஜிம்பாப்வே

இ. சோமாலியா

ஈ. போட்ஸ்வானா

20. காங்கேசன்துறை துறைமுகம் அமைந்துள்ள நாடு எது?

அ. இலங்கை

ஆ. மியான்மர்

இ. மலேசியா

ஈ. இந்தியா

21. 46ஆவது அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டம் (ATCM 46) மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுவின் 26ஆவது கூட்டத்தை (CEP 26) நடத்துகிற நாடு எது?

அ. அர்ஜென்டினா

ஆ. இந்தியா

இ. நார்வே

ஈ. சிலி

22. அண்மையில், கீழ்க்காணும் எந்த நகரத்தில் ISHAN (Indian Single Sky Harmonized Air Traffic Management) திட்டம் தொடங்கப்பட்டது?

அ. இந்தூர், மத்திய பிரதேசம்

ஆ. நாக்பூர், மகாராஷ்டிரா

இ. வாரணாசி, உத்தர பிரதேசம்

ஈ. ஜெய்ப்பூர், இராஜஸ்தான்

23. அண்மையில், அரசுகளுக்கிடையேயான எந்த அமைப்பு, முக்கியமான ஆற்றல் மாற்றம் தாதுக்கள் மீது குறிப்பாக கவனஞ்செலுத்தும் ஒரு குழுவை உருவாக்கியுள்ளது?

அ. ஐக்கிய நாடுகள்

ஆ. உலக சுகாதார நிறுவனம்

இ. உலக வங்கி

ஈ. உலக வர்த்தக அமைப்பு

24. அண்மையில், இந்திய இராணுவமும் புனித் பாலன் குழுவும் இணைந்து இந்தியாவின் முதல் அரசியலமைப்பு பூங்காவை கீழ்க்காணும் எந்த நகரத்தில் திறக்கவுள்ளன?

அ. அகமதாபாத்

ஆ. புனே

இ. ஜெய்ப்பூர்

ஈ. வாரணாசி

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வேதாரண்யத்தில் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றதன் 94ஆவது ஆண்டு நினைவுநாளையொட்டி, உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

உப்புக்கு வரி விதித்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக வேதாரண்யத்தில் உப்புச்சத்தியாகிரகப் போராட்டம் 1930 ஏப். 30ஆம் தேதி இராஜாஜி தலைமையில் நடைபெற்றது. சர்தார் வேதரத்னம் போன்றோர் போராட்டம் வெற்றிபெற பெரும் பங்காற்றினர். இந்தச்சம்பவத்தை நினைவுகூரும் வகையில், வேதாரண்யத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஏப். 30ஆம் நாள் உப்பு அள்ளி, சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

2. இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதி பொறுப்பேற்பு.

இந்திய கடற்படையின் 26ஆவது தலைமைத்தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி பொறுப்பேற்றார். இந்திய கடற் படையின் தலைமைத் தளபதியாக இருந்த R ஹரிகுமார் நாற்பது ஆண்டுகால பணிக்குப் பிறகு ஓய்வுபெற்றார். இதையடுத்து, புதிய தலைமைத் தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமிக்கப்பட்டார்.

3. வெளிநாட்டு உயிரினங்களைப் பதிவுசெய்ய புதிய இணையதளம்: வனத்துறை தகவல்.

வன உயிரின பாதுகாப்புச் சட்டம், 1972இன்படி, வெளிநாட்டு உயிரினங்களை வீடுகளில் வளர்ப்பது குறித்தும் அவற்றின் பிறப்பு, இறப்பு பதிவு மற்றும் வேறு நபர்களுக்கு மாற்றம் செய்தல் தொடர்பாக பதிவு செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்ட நடைமுறை இனி செல்லாது.

அதற்குப் பதிலாக உயிருள்ள விலங்கினங்கள் (அறிக்கையிடல் மற்றும் பதிவு செய்தல்) விதிகள்-2024இன்படி , தமிழ்நாட்டில் வெளிநாட்டு உயிரினங்களை வீடுகளில் வளர்ப்போர், வேறு நபர்களுக்கு விற்பனை செய்வோர் அது குறித்த தகவல்களை புதிதாக தொடங்கப்பட்டுள்ள, ‘பரிவேஷ் 2.0’ என்ற இணையதளத்தில் இனி பதிவு செய்ய வேண்டும். வன உயிரின (பாதுகாப்பு) சட்டம், 1972 அட்டவணை-4இல் வகைப்படுத்தப்பட்டுள்ள உயிரினங்களுக்கு இந்த விதி பொருந்தும். இவ்விதி ஏப்.28-ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.

4. கோவிஷீல்டு தடுப்பூசியால் ‘அரிதான’ பக்கவிளைவு: இலண்டன் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் ஒப்புதல்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட கரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பூசியால் ‘மிக அரிதான’ பக்கவிளைவாக ரத்தம் உறைதல் ஏற்படலாம் என்று லண்டன் உயர்நீதிமன்றத்தில் அதன் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராசெனகா ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியாவில் சீரம் நிறுவனம் இந்தத் தடுப்பூசியை தயாரித்து விற்பனை செய்தது.

5. `2,000 நோட்டுகள் 98% திரும்பியுள்ளன: ரிசர்வ் வங்கி.

மதிப்பிழப்பு செய்யப்பட்ட 97.76% `2,000 நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டுவிட்டதாக ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்தது. பொதுமக்களிடம் தற்போது `7,961 கோடி மதிப்பிலான `2,000 நோட்டுகள் உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது. கடந்த ஆண்டு மே.19ஆம் தேதி `2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறுவதாக RBI அறிவித்தது.

6. ‘நம்ம யாத்ரி’ கால் டாக்ஸி செயலி அறிமுகம்.

சென்னைபோன்ற பெருநகரங்களில் பரபரப்பாக இயங்கும் வாடகை வாகனங்களுக்கென (கால் டாக்ஸி) பல்வேறு பிரத்யேக செயலிகள் உள்ளன. இந்த செயலிகளில் முறைப்படுத்தப்படாத கட்டண முறையால் வாகன ஓட்டுநர்கள், வாடிக்கையாளர்களிடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வுகாணும் வகையில், ‘நம்ம யாத்ரி’ என்னும் புதிய கால் டாக்ஸி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது சென்னையில் அண்ணா பல்கலை. மாணவர்களால் உருவாக்கப்பட்டதாகும்.

7. என் கல்லூரி கனவு.

பட்டியலின (SC) மற்றும் பழங்குடியின (ST) மாணாக்கரின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை அதிகப்படுத்தவும், இடைநிற்றல் எண்ணிக்கையைக் குறைக்கவும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ‘என் கல்லூரி கனவு’ என்ற உயர்கல்வி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Exit mobile version