Tnpsc Current Affairs in Tamil – 19th January 2024

1. பினாகா என்ற பல்குழல் ஏவுகணை செலுத்திய உருவாக்கிய நாடு எது?

அ. சீனா

ஆ. இஸ்ரேல்

இ. ரஷ்யா

ஈ. இந்தியா

2. 2023 – இந்திய சர்வதேச அறிவியல் விழாவுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Science and Technology Public Outreach in Amrit Kaal

ஆ. Global Science for Global Wellbeing

இ. Marching Towards Amrit Kaal with Science and Technology, and Innovation

ஈ. Integrated Approach in Science and Technology for a sustainable future

3. அண்மையில், அழிந்துவரும் எந்தப் பழங்குடியினருக்கு, ‘PM-JANMAN’ திட்டத்தின்கீழ் அடிப்படை வசதிகளை விரிவுபடுத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது?

அ. சௌராஸ் பழங்குடியினர்

ஆ. கோலாம் பழங்குடியினர்

இ. கோரகா பழங்குடியினர்

ஈ. பிர்ஹோர் பழங்குடியினர்

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘e-SAKSHI’ செயலியுடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ. புள்ளியியல் & திட்ட அமலாக்க அமைச்சகம்

ஆ. வணிகம் & தொழிற்துறை அமைச்சகம்

இ. மின்துறை அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

5. பக்கே பாகா இருவாச்சி திருவிழா கொண்டாடப்படுகிற இந்திய மாநிலம் எது?

அ. அஸ்ஸாம்

ஆ. சிக்கிம்

இ. அருணாச்சல பிரதேசம்

ஈ. நாகாலாந்து

6. அண்மையில், விஸ்வநாதன் ஆனந்தை விஞ்சி இந்தியாவின் No:1 செஸ் வீரராக மாறிய செஸ் வீரர் யார்?

அ. R பிரக்ஞானந்தா

ஆ. டிங் லிரன்

இ. குகேஷ் D

ஈ. விதித் குஜராத்தி

7. இந்தியாவின் எப்பகுதியில், ‘மிலன் – 2024’ என்ற கடற்படைப் பயிற்சியின் 12ஆவது பதிப்பு நடைபெறவுள்ளது?

அ. விசாகப்பட்டினம்

ஆ. மும்பை

இ. கொல்கத்தா

ஈ. சென்னை

8. 2024ஆம் ஆண்டுக்கான குளோபல் ஃபயர்பவர் அறிக்கையின்படி, உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவத்தில் இந்தியாவின் தரநிலை என்ன?

அ. முதலாவது

ஆ. இரண்டாவது

இ. மூன்றாவது

ஈ. நான்காவது

9. அஸ்ஸாமின் உயரிய குடிமக்கள் விருதான, ‘அஸ்ஸாம் வைபவுக்கு’ அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

அ. இரஞ்சன் கோகோய்

ஆ. நரேந்திர மோதி

இ. இரத்தன் டாடா

ஈ. அமித் ஷா

10. அரசியலமைப்பின் எந்தப் பிரிவு, இந்தியாவின் எந்தப் பகுதியிலும் வசிக்கவும் குடியேறவும் உரிமையளிக்கிறது?

அ. பிரிவு 19 (1) (e)

ஆ. பிரிவு 19 (1) (a)

இ. பிரிவு 19 (1) (c)

ஈ. பிரிவு 19 (1) (f)

11. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற குனோ தேசியப்பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?

அ. மத்திய பிரதேசம்

ஆ. இராஜஸ்தான்

இ. உத்தரபிரதேசம்

ஈ. கேரளா

12. 2024 – உலக பொருளாதார மன்றத்திற்கானக் கருப்பொருள் என்ன?

அ. Rebuilding Trust

ஆ. Cooperation in a Fragmented World

இ. Working Together

ஈ. The Great Reset

13. அண்மையில், மஹ்தாரி வந்தனா யோஜனாவை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?

அ. சத்தீஸ்கர்

ஆ. மத்திய பிரதேசம்

இ. உத்தர பிரதேசம்

ஈ. பீகார்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க 247 குழுக்கள்.

தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் விற்பனையைத்தடுக்க 247 குழுக்கள்மூலம் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள்நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. புகையிலை, போதைப்பாக்குகள், பான் மசாலாக்கள் உள்பட 391 வகை புகையிலை சார்ந்த பொருள்களுக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்புவரை விதிகளுக்கு புறம்பாக புகையிலை பொருள்களை விற்பனைசெய்யும் கடைகளுக்கு முதல்முறை `5,000, இரண்டாவது முறை `10,000 அபராதம் விதிக்கப்பட்டது. மூன்றாவது முறை விதிகளை மீறும்போது `25,000 அபராதம் மற்றும் கடைக்கு சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது முதல்முறையிலேயே கடைகளுக்கு சீல் வைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

2. நீண்டகாலம் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்.

இந்திய நீதித்துறை வரலாற்றில் மிக அதிக ஆண்டுகள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவிவகித்தவர் (07 ஆண்டு 179 நாள்கள்) 16ஆவது தலைமை நீதிபதியான யஷ்வந்த் விஷ்ணு சந்திரசூட் ஆவார். தற்போது உச்ச நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாக அவரது மகன் தனஞ்செய் யஷ்வந்த் சந்திரசூட் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

3. தமிழ்நாட்டில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்தது.

தமிழ்நாட்டில் பச்சிளக்குழந்தைகள் இறப்பு விகிதம் 8.2ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டின் மக்கள்நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை 2020ஆம் ஆண்டு நிலவரப்படி குழந்தைகள் இறப்பு விகிதம் ஆயிரத்துக்கு 13 குழந்தைகள் என்ற நிலையில் இருந்தது. தற்போது, சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் ஆயிரம் குழந்தைகளுக்கு 8.2 என்ற அளவிலேயே இறப்பு விகிதம் உள்ளது.

4. நெதர்லாந்து, டொமினிகன் குடியரசு, ஈக்வடார் நாடுகளுடன் மருத்துவத்துறை ஒத்துழைப்பு.

டொமினிகன் குடியரசு, நெதர்லாந்து, ஈக்வடார் ஆகிய நாடுகளின் மருத்துவ ஒழுங்காற்று ஆணையங்கள் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் மத்திய மருத்து தரக்கட்டுப்பாடு மையம் இடையே கையொப்பமான மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இந்தியா-கென்யா ஒப்பந்தத்துக்கு ஒப்புதல்:

எண்ம தீர்வுகளின் பகிர்வுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கும் கென்யா அரசுக்கும் இடையே கடந்த டிசம்பரில் கையொப்பமான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. எண்ம மாற்றத்துக்கான முன்னெடுப்புகளை அமல்படுத்துவதில் ஒத்துழைப்பு, எண்ம தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை மேம்படுத்துவதை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அனல் மின் நிலைய திட்டங்களில் பங்கு முதலீட்டுக்கு ஒப்புதல்: சவுத் ஈஸ்டர்ன் கோல் ஃபீல்ட்ஸ் மற்றும் மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்தால் மத்திய பிரதேசம் மற்றும் ஒடிஸாவில் அமைக்கப்படவுள்ள 2,260 மெகாவாட் திறன் கொண்ட மூன்று அனல்மின் நிலையங்களின் மூலதனச்செலவுக்காக `5,607 கோடி மதிப்பிலான பங்கு முதலீட்டு முன்மொழிவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

5. பாரதிய விண்வெளி ஆய்வுநிலையம்: அடுத்த ஆண்டில் சோதனைகள் தொடக்கம்.

பாரதிய விண்வெளி ஆய்வுநிலையத்துக்கான சோதனைகள் அடுத்தாண்டில் தொடங்கும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது. வரும் 2035ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்தியாவின் ஆய்வுநிலையத்தை அமைப்பது, 2040ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு இந்திய விண்வெளி வீரரை அனுப்புவது ஆகிய இஸ்ரோவின் இலட்சிய இலக்குகள் குறித்தும் ISRO தெரிவித்தது.

Exit mobile version