Tnpsc Current Affairs in Tamil – 17th January 2024

1. எந்தத் தமிழ்த்திங்களின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது?

அ. மார்கழி

ஆ. தை

இ. மாசி

ஈ. பங்குனி

2. அறிவியல் & தொழில்நுட்பத்துறையில் சிறப்பான பங்களிப்பை ஆற்றிய இளம் அறிவியலாளர்களை அங்கீகரித்து ஊக்குவிப்பதற்காக வழங்கப்படுகின்ற விருது எது?

அ. சாந்தி ஸ்வரூப் பட்நாகர் (VY-SSB) விருது

ஆ. விஞ்ஞான் குழு விருது

இ. இந்திய அறிவியல் விருது

ஈ. C V இராமன் பிறந்தநாள் நூற்றாண்டு விருது

3. 2023-24 பயிராண்டில் உலகின் மிகப்பெரிய பருப்பு (மைசூரு பருப்பு) உற்பத்தியாளராக மாறவுள்ள நாடு எது?

அ. இந்தியா

ஆ. மியான்மர்

இ. பூடான்

ஈ. நேபாளம்

4. அண்மையில், 150 ஒருநாள் T20 போட்டிகளை விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் ஆனவர் யார்?

அ. ரோஹித் சர்மா

ஆ. விராட் கோலி

இ. K L இராகுல்

ஈ. கேசவ் மகாராஜ்

5. அண்மையில் வெளியிடப்பட்ட, “Gandhi: A Life in Three Campaigns” என்ற நூலின் ஆசிரியர் யார்?

அ. K N பணிக்கர்

ஆ. கமலேஷ் படேல்

இ. விஜய குமார்

ஈ. M J அக்பர்

6. இந்திய இராணுவத்தால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட, பாதுகாப்பான இராணுவத்திற்கான மொபைல் சூழலமைப்பின் பெயரென்ன?

அ. சம்பவ்

ஆ. புராஜெக்ட் ஷீல்டு

இ. பாதுகாப்பான இராணுவ மொபைல் தளம்

ஈ. மொபைல் பாதுகாப்பு முன்முயற்சி

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. மேகாலயா

8. 2024 – சர்வதேச AYUSH மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்ற இடம் எது?

அ. புது தில்லி, இந்தியா

ஆ. துபாய், ஐக்கிய அரபு அமீரகம்

இ. மும்பை, இந்தியா

ஈ. லண்டன், இங்கிலாந்து

9. அண்மையில், 40 ஆண்டு சேவைக்குப்பிறகு பணியிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்ட மூன்று இந்திய கடற்படை கப்பல்கள் எவை?

அ. INS சீத்தா, குல்தார் மற்றும் கும்பீர்

ஆ. INS இராஜ்புத், சாத்புரா மற்றும் காந்தேரி

இ. INS விக்ராந்த், சயாத்ரி மற்றும் அரிஹந்த்

ஈ. INS ஷிவாலிக், கரஞ்ச் மற்றும் வேலா

10. அண்மையில், தைவான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

அ. ம யிங்-ஜெவு

ஆ. வில்லியம் லாய்

இ. சாய் இங்-வென்

ஈ. கெயு-ஹாய்

11. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஜென்டூ பென்குயினின்’ தற்போதைய IUCN நிலை என்ன?

அ. அருகிவிட்ட இனம்

ஆ அழிவாய்ப்பு நிலையிலுள்ள இனம்

இ. தீவாய்ப்பு கவலைகுறைந்த இனம்

ஈ. மிகவும் அருகிவிட்ட இனம்

12. 2030ஆம் ஆண்டிற்குள், விபத்துவழி இறப்பைக் குறைப்பதற்கு, இந்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்கு சதவீதம் எவ்வளவு?

அ. 50%

ஆ. 40%

இ. 60%

ஈ. 30%

13. சமீப செய்திகளில் இடம்பெற்ற, பார்ஸி (பாரசீகம்) என்பது கீழ்காணும் எந்த நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாகும்?

அ. ஈரான்

ஆ. ஈராக்

இ. ஆப்கானிஸ்தான்

ஈ. தென்னாப்பிரிக்கா

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. புத்தாக்க நிறுவனங்களுக்கு உகந்த சூழல்: மிகச்சிறந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு.

புத்தாக்க நிறுவனங்களுக்கு, (வளர்ந்துவரும் தொழில்முனைவோருக்கு) உகந்த சூழலை உருவாக்கித் தருவதில் மிகச்சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு உள்பட ஐந்து மாநிலங்கள் இடம்பிடித்துள்ளன. மத்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புக்கான (DPIIT) துறை 2022ஆம் ஆண்டுக்கான இந்தத் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

மொத்தம் 25 காரணிகள் ஆய்வுசெய்யப்பட்டு, அதனடிப்படையில் மிகச்சிறந்த மாநிலங்கள், சிறந்த மாநிலங்கள், முதன்மை மாநிலங்கள், ஆர்வம் காட்டும் மாநிலங்கள், முன்னேற்றம் கண்டு வரும் மாநிலங்கள் என 5 பிரிவுகளில் மாநிலங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படுகிறது. 33 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இதில் பங்கேற்றுள்ளன. மிகச்சிறந்த மாநிலங்கள் பட்டியலில் குஜராத் தொடர்ந்து நான்காவது முறையாகவும், கர்நாடகம் இரண்டாவது முறையாகவும் இடம்பிடித்துள்ளன.

மிகச்சிறந்த மாநிலங்கள்:

1 குஜராத்
2 கர்நாடகா
3 தமிழ்நாடு
4 கேரளா
5 இமாச்சல பிரதேசம்

2. 2023ஆம் ஆண்டுக்கான FIFA விருதுகள்.

உலக கால்பந்து சம்மேளனமான FIFAஇன் 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரராக அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி தேர்வுசெய்யப்பட்டுள்ளார். 3ஆவது முறையாக அவர் இந்த விருதை பெறுகிறார். ஸ்பெயினின் கால்பந்து வீராங்கனை ஐடானா பான்மாட்டி, 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீராங்கனை விருதை வென்றார்.

3. அயோத்தியில் முழங்கவிருக்கும் பாரம்பரிய இசை வாத்தியங்கள்.

தமிழ்நாட்டின் நாகஸ்வரம்-மிருதங்கம், கர்நாடகத்தின் வீணை, ஆந்திர பிரதேசத்தின் கடம், உத்தர பிரதேசத்தின் டோலக், சத்தீஸ்கரின் தம்பூரா என அயோத்தி இராமர் திருக்கோவில் மூலவர் சிலை பிராணப் பிரதிஷ்டை விழாவில் இந்திய பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழங்கவிருக்கின்றன.

4. இந்தியாவின் No:1 செஸ் வீரரானார் பிரக்ஞானந்தா.

இந்தியாவின் No:1 செஸ் வீரராக விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத்தள்ளி பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்தார். FIDEஇன் மதிப்பீட்டு புள்ளிகள்படி பிரக்ஞானந்தா ஐந்துமுறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தை முந்தி சாதனை படைத்தார். லைவ் ரேட்டிங் புள்ளிப்பட்டியலில் விஸ்வநாதன் ஆனந்த் 2748 புள்ளிகள் பெற்ற நிலையில் பிரக்ஞானந்தா 2748.3 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

Exit mobile version