Tnpsc Current Affairs in Tamil – 17th April 2024

1. ஒவ்வோர் ஆண்டும், ‘உலக கலை நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. 13 ஏப்ரல்

ஆ. 14 ஏப்ரல்

இ. 15 ஏப்ரல்

ஈ. 16 ஏப்ரல்

2. MSC ARIES கப்பலுடன் தொடர்புடைய நாடு எது?

அ. மாலத்தீவுகள்

ஆ. இந்தியா

இ. இஸ்ரேல்

ஈ. ஈராக்

3. Man-Portable Anti-Tank Guided Missile (MPATGM) என்ற ஆயுத அமைப்பை உருவாக்கிய அமைப்பு எது?

அ. ISRO

ஆ. DRDO

இ. CSIR

ஈ. IEA

4. ஜியாதால் ஆறானது கீழ்காணும் எந்த ஆற்றின் கிளையாறாகும்?

அ. கங்கை

ஆ. பிரம்மபுத்திரா

இ. காவேரி

ஈ. கோதாவரி

5. அண்மையில், உலகின் முதல் செயற்கைக்கோள் தொடரை (டியான்டாங்-1) உருவாக்கிய நாடு எது?

அ. ஜப்பான்

ஆ. ரஷ்யா

இ. சீனா

ஈ. இஸ்ரேல்

6. சிறப்பு ஒலிம்பிக் பாரத் என்பது கீழ்காணும் எந்த அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தேசிய விளையாட்டு கூட்டமைப்பு ஆகும்?

அ. இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

ஆ. உள்துறை அமைச்சகம்

இ. மின்சார அமைச்சகம்

ஈ. பாதுகாப்பு அமைச்சகம்

7. நிஷி பழங்குடியினரால் கொண்டாடப்படுகிற லாங்டே திருவிழாவுடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. அருணாச்சல பிரதேசம்

ஆ. இராஜஸ்தான்

இ. மகாராஷ்டிரா

ஈ. ஒடிஸா

8. சமீபத்தில் தனது முதல் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை வென்ற ஜொனாதன் கிறிஸ்டி சார்ந்த நாடு எது?

அ. வியட்நாம்

ஆ. இந்தோனேசியா

இ. தாய்லாந்து

ஈ. சிங்கப்பூர்

9. குச்சிப்புடி நடனம் என்பது கீழ்காணும் எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனமாகும்?

அ. தமிழ்நாடு

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. தெலுங்கானா

ஈ. மகாராஷ்டிரா

10. ‘ஆபரேஷன் மேகதூதத்தின்’ முதன்மை நோக்கம் என்ன?

அ. லடாக்கில் இராணுவ தளம் அமைப்பது

ஆ. இமயமலையில் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை கைப்பற்றுவது

இ. அமைதிகாக்கும் பணியில் ஈடுபடுவது

ஈ. சியாச்சின் பனிப்பாறையை தக்கவைப்பது

11. ‘குத்சியா பாக்’ அமைந்துள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. இராஜஸ்தான்

ஆ. உத்தர பிரதேசம்

இ. தில்லி

ஈ. ஜம்மு காஷ்மீர்

12. அண்மையில், பன்னிரண்டாவது முறையாக தேசிய மகளிர் கேரம் பட்டத்தை வென்றவர் யார்?

அ. ராஷ்மி குமாரி

ஆ. N நிர்மலா

இ. காஜல் குமாரி

ஈ. ஷர்மிளா சிங்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வந்தே பாரத்…

நாட்டில் முதல் வந்தே பாரத் ரெயில் புதுதில்லி – வாரணாசி இடையே கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி.15ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 284 மாவட்டங்களை இணைக்கும் வகையில் 100 வழித்தடங்களில் 102 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

2. இராக்கெட் எஞ்சினில் இலகுரக கட்டமைப்பு: வெற்றிகரமாக பரிசோதித்தது ISRO.

இராக்கெட் எஞ்சினில் உந்துவிசைக்கு பயன்படுத்தப்படும் கட்டமைப்பை (நாசில்) மிகவும் இலகுவான எடையில் உருவாக்கி வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக ISRO தெரிவித்துள்ளது. ராக்கெட் எஞ்சின் தொழில்நுட்பத்தில் புதிய நுட்பத்திலான இந்தக் கட்டமைப்பை திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையம் வடிவமைத்துள்ளது.

PSLV வகை இராக்கெட்டின் நான்காம் நிலையில் (PS-4) தற்போது கொலம்பியம் உலோகக்கலவை மூலக்கூறால் ஆன நாசில்களுடன் கூடிய இரு எஞ்சின்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு மாற்றாக மிகவும் இலகுவான எடை கொண்ட நாசில் கார்பன்-கார்பன் மூலக்கூறு நுட்பத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இதன்மூலம் இராக்கெட்டின் உந்துவிசை திறன், எரிசக்தி ஆற்றல்திறன் உள்ளிட்டவை மேம்படுவதுடன் நாசில் கட்டமைப்பின் எடை ஏறத்தாழ 67% குறையும். இதன்வாயிலாக, தற்போது உள்ள எடையைக் காட்டிலும் கூடுதலாக 15 கிலோகிராம் கொண்ட ஆய்வுக்கருவிகளை PS-4 நிலையின்மூலம் விண்ணுக்குச் செலுத்த முடியும். இதற்கான பரிசோதனைகள் திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள ஆய்வுமையத்தில் மேற்கொள்ளப்பட்டன.

Exit mobile version