Tnpsc Current Affairs in Tamil – 16th February 2024

1. Cuscuta dodder’ என்றால் என்ன?

அ. ஆக்கிரமிப்பு களை

ஆ. மீன்

இ. தீ நுண்மம்

ஈ. சிலந்தி

2. அண்மையில், 2024 – உலக அரசுகள் உச்சிமாநாட்டில், AI அடிப்படையில் இயங்கும் அரசு சேவைகளுக்கான 9ஆவது ‘GovTech’ பரிசை வென்ற நாடு எது?

அ. ஐக்கிய அரபு அமீரகம்

ஆ. இந்தியா

இ. கத்தார்

ஈ. துருக்கி

3. காஜி நேமுவை (சிட்ரஸ் எலுமிச்சை) அதன் மாநிலப்பழமாக அறிவித்துள்ள மாநில அரசு எது?

அ. நாகாலாந்து

ஆ. மணிப்பூர்

இ. அஸ்ஸாம்

ஈ. சிக்கிம்

4. Automated Permanent Academic Account Registry (APAAR) உடன் தொடர்புடையது எது?

அ. பிரகதி உதவித்தொகை

ஆ. ஒரே நாடு, ஒரே மாணவர் அடையாள அட்டை

இ. ஒரே பாரதம் ஒப்பிலா பாரதம்

ஈ. சமர சிக்ஷா

5. அண்மையில் காலமான உஷா கிரண் கானுடன் தொடர்புடைய துறை எது?

அ. விளையாட்டு

ஆ. அரசியல்

இ. இலக்கியம்

ஈ. மருந்து

6. அண்மையில் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி மேற்கூரை சூரியசக்தி மின்மயமாக்கல் திட்டத்தின்கீழ் மாதத்திற்கு எத்தனை அலகு இலவச மின்சாரம் வழங்கப்படும்?

அ. 300

ஆ. 200

இ. 400

ஈ. 500

7. ஹோரி ஹப்பாவுடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. இராஜஸ்தான்

ஆ. கேரளா

இ. மணிப்பூர்

ஈ. கர்நாடகா

8. போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா திருக்கோவிலானது ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) எந்த நகரத்தில் திறக்கப்பட்டுள்ளது?

அ. அபுதாபி

ஆ. துபாய்

இ. அஜ்மான்

ஈ. கல்பா

9. சமீபத்தில், புது தில்லியில் உள்ள AIIMSஉம் லிவர்பூல் பல்கலைக்கழகமும் எதன் ஆராய்ச்சிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன?

அ. புற்றுநோய்

ஆ. எய்ட்ஸ்

இ. நீரிழிவு நோய்

ஈ. காசநோய்

10. பின்வரும் எந்த நகரத்தில் உலகின் முதல் வான்வழி வாடகையுந்துச் சேவை வரவுள்ளது?

அ. புது தில்லி

ஆ. துபாய்

இ. லண்டன்

ஈ. அபுதாபி

11. தேசிய பொதுமை ஆவணப் பதிவு அமைப்பைத் தொடங்கிய அமைச்சகம் எது?

அ. உள்துறை அமைச்சகம்

ஆ ஊரக வளர்ச்சி அமைச்சகம்

இ. கார்ப்பரேட் விவகார அமைச்சகம்

ஈ. சுற்றுலா அமைச்சகம்

12. புபோனிக் பிளேக் என்பது பின்வருவனவற்றில் எதனால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும்?

அ. பாக்டீரியா

ஆ. வைரஸ்

இ. பூஞ்சை

ஈ. புழுக்கள்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தேர்தல் பத்திர முறை இரத்து: உச்சநீதிமன்றம்.

தேர்தல் நிதி பத்திர திட்டத்தை இரத்துசெய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அரசியல் கட்சிகளுக்குத் தனி நபர் அல்லது நிறுவனங்கள், ரொக்கமாக அல்லது காசோலையாக நன்கொடை கொடுப்பதற்குப் பதிலாக, தேர்தல் நிதி பத்திரம்மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டில் அமல்படுத்தியது. அந்தத் திட்டத்தின்மூலம், குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்க விரும்புவோர், பாரத வங்கியில் `1 முதல் ஒரு கோடி வரை பணத்தை செலுத்தி, தேர்தல் நிதி பத்திரத்தைப் பெற்று, அதை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கலாம். ஒரு நிறுவனம் எத்தனை தேர்தல் பத்திரங்கள் வேண்டுமானாலும் பெறலாம். அந்தப் பத்திரத்தில் எந்தக் கட்சியின் பெயரும் இடம்பெறாது. அந்தப் பத்திரத்தைக் கொடுப்பவரின் பெயரும் இடம்பெறாது.

தகவலில் வெளிப்படைத்தன்மை இல்லாத தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளதாகவும் தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு எதிராக உள்ளதாகவும் அரசியல் சாசன பிரிவு 19 (1) மீறியுள்ளதாகவும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இத்தீர்ப்பை வழங்கியது. 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு வழங்கினர்.

2. இராமர் திருக்கோவில் நினைவு நாணயம்: நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

இந்திய அரசுக்குச்சொந்தமான, ‘இந்திய பணம் அச்சிடும் கழகத்தின்’ 19ஆவது தொடக்க விழாவையொட்டி மூன்று நினைவு நாணயங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இந்த நாணயங்கள், அயோத்தி இராமர் திருக்கோவில், இந்தியாவின் அழிந்துவரும் விலங்கான பெரிய ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் மற்றும் ‘புத்தரின் ஞானம்’ ஆகியவற்றைக் கருப்பொருளாக கொண்டு உருவாக்கப்பட்டவை ஆகும்.

Exit mobile version