Tnpsc Current Affairs in Tamil – 16th December 2023

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘வாகயாமா சோரியு’ என்றால் என்ன?

அ. ஒரு சிறுகோள்

ஆ. ஒரு புதைபடிமம்

இ. ஒரு கலைப்படைப்பு

ஈ. ஒரு பாரம்பரியம்

2. SPECS திட்டத்தை நிர்வகிக்கிற அமைச்சகம் எது?

அ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ. வேளாண் அமைச்சகம்

இ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ. வணிக அமைச்சகம்

3. அதன் கடன் வரம்பை மத்திய அரசு கட்டுப்படுத்தியதை அடுத்து அண்மையில் உச்சநீதிமன்றத்தை அணுகிய மாநில அரசு எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஹிமாச்சல பிரதேசம்

இ. கேரளா

ஈ. தெலுங்கானா

4. அண்மையில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆனந்த் திருமணச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் கீழ்காணும் எதற்குச் சட்டரீதியான அங்கீகாரத்தை அளிக்கிறது?

அ. சாதி ரீதியான கலப்புத் திருமணம்

ஆ. மத ரீதியான கலப்புத் திருமணம்

இ சீக்கிய திருமணம் மற்றும் திருமணச் சடங்குகள்

ஈ. இந்து திருமணம் மற்றும் சடங்குகள்

5. இராமர் கோவில் ஏற்பாடுகளை மேற்பார்வையிடும் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த அறக்கட்டளையின் பொருளாளர் யார்?

அ. மஹந்த் நிருத்யகோபால் தாஸ்

ஆ. கோவிந்த் தேவகிரி

இ. சம்பத் ராய்

ஈ. நிருபேந்திர மிஸ்ரா

6. இந்தியாவின் முதல் பூவாத் தாவரங்களுக்கானத் தோட்டம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. சிக்கிம்

ஆ. ஹிமாச்சல பிரதேசம்

இ. உத்தரகாண்ட்

ஈ. மேற்கு வங்காளம்

7. PM-DevINE திட்டம் என்பது எங்குள்ள உட்கட்டமைப்புத் திட்டங்களைப் பிரத்தியேகமாக இலக்காகக்கொண்ட அரசாங்கத்தின் ஒரு புதிய முன்னெடுப்பாகும்?

அ. 150 மிகவும் பின்தங்கிய மாவட்டங்கள்

ஆ. மிகவும் பின்தங்கிய பழங்குடியினர் பகுதிகள்

இ. வடகிழக்கு இந்தியா

ஈ. கடலோரப் பகுதிகள்

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “ஹஃப்தா-14” செயல்திட்டம் சார்ந்த நாடு எது?

அ. மாலத்தீவுகள்

ஆ. ஆப்கானிஸ்தான்

இ. ஈரான்

ஈ. இலங்கை

9. 2023ஆம் ஆண்டுக்கான அமைதி, ஆயுதக்குறைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான இந்திரா காந்தி பரிசு பெற்ற இரண்டு பேருள் ஒருவரான அமைதி ஆர்வலர் அலி அபு ஔவாத் சார்ந்த நாடு எது?

அ. கத்தார்

ஆ. பாலஸ்தீனம்

இ. வங்காளதேசம்

ஈ. இந்தியா

10. அணுவாற்றல் துறை மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த IDRS ஆய்வகங்களின் அறிவியலாளர்கள் இணைந்து கீழ்காணும் எந்த நோய்க்கான சிகிச்சைக்காக அக்டோசைட் மாத்திரைகளை உருவாக்கவுள்ளனர்?

அ. HIV

ஆ. COVID-19

இ. புற்றுநோய்

ஈ. நீரிழிவு நோய்

11. ஆன்டிம் பங்கல் சார்ந்த விளையாட்டு எது?

அ. பூப்பந்து

ஆ. கிரிக்கெட்

இ. மல்யுத்தம்

ஈ. தடகளம்

12. அண்மையில், எந்த மத்திய கிழக்கு நாடு, இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு நுழைவு இசைவுக்கானத் தேவைகளை இரத்துசெய்ய முடிவுசெய்துள்ளது?

அ. ஈரான்

ஆ. ஈராக்

இ. சிரியா

ஈ. லெபனான்

13. 2023 – ASEAN-இந்தியா தினை திருவிழா நடைபெற்ற நகரம் எது?

அ. சிங்கப்பூர்

ஆ. புது தில்லி

இ. ஜகார்த்தா

ஈ. கோலாலம்பூர்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மகளிருக்கான மத்திய அரசின் திட்டங்கள்…

பெண் குழந்தைகளை காப்போம் திட்டம்: பெண் குழந்தைகளின் நலனைப் பாதுகாக்கவும் அவர்களின் கல்வியை உறுதிபடுத்தவும் கடந்த 2015இல், ‘பெண் குழந்தைகளை காப்போம் – பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம்’ தொடங்கப்பட்டது.

ஒருங்கிணைந்த சேவைகள் மையம்: சமூகம், குடும்பத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எவ்வித பாகுபாடின்றி பாதுகாப்பளிக்கவும் ஆதரவளிக்கும் நோக்கிலும், ‘ஒருங்கிணைந்த சேவைகள் மையம்’ (One Stop Centre) தொடங்க -ப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் 733 மையங்களுக்கு அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில் தற்போது 703 மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இம்மையங்கள் தனியார் மற்றும் பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை, குடும்ப வன்முறை, கடத்தல், திராவக வீச்சு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ உதவி, சட்ட உதவி, ஆலோசனை உதவி, தங்குமிட வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டம்: கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நலத்தை மேம்படுத்த மத்திய அரசால் தொடங்கப்பட்ட நிதியுதவி திட்டமே ‘பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டமாகும்’. இத்திட்டத்தின்கீழ் தகுதியான பெண்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

பிரதமரின் மக்கள் மருந்தக திட்டம்: பெண்களின் சுகாதார நலனை மேம்படுத்துவதற்காக, ‘பிரதமரின் மக்கள் மருந்தக மையங்கள்’ தொடங்கப்பட்டன. இந்த மையங்களில் மிகக்குறைந்த விலையிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவ்வகையில் 10,000 மருந்தகங்கள் மூலம் `1இல் சானிட்டரி நாப்கின்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் இம்மையங்களில் சானிட்டரி நாப்கின் வாங்கும் கிராமப்புற பெண்களின் எண்ணிக்கை 11-12 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் இம்மையங்களில் விற்பனை செய்யப்படும் சானிட்டரி நாப்கின்களின் எண்ணிக்கை தேசிய அளவில் மொத்தமாக (நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம்) 30 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டம்: ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்குவதற்காக தொடங்கப்பட்ட ‘பிரதம மந்திரியின் ஆயுஷ்மான் பாரத் ஜன் ஆரோக்கிய’ திட்டத்தின்கீழ் நவம்பர்.30ஆம் தேதி வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 கோடி பேரில் 3.5 கோடி பேர் பெண்களாவர்.

எழுந்துநில் இந்தியா திட்டம்: பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக தொடங்கப்பட்ட, ‘எழுந்துநில் இந்தியா’ திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவதற்காக `10 லட்சம் முதல் `1 கோடி வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 80 சதவீத பயனாளர்களாக பெண்களே உள்ளனர்.

பிரதமர் வீட்டுவசதித்திட்டம்: பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் பதியப்பட்ட வீடுகளில் எழுபது சதவீத வீடுகள், பெண்களின் பெயரிலேயே பதிவாகியுள்ளது. பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு தொடங்கப் -பட்ட, ‘செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின்கீழ்’ 3 கோடி பெண் குழந்தைகளின் வாழ்வு வளமையாக்கப்பட்டுள்ளது.

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு: நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதன்மூலம் பல ஆண்டுகளாக நிராகரிக்கப்பட்டு வந்த பெண்களுக்கான உரிமையை நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் பிரதமரின் இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ் பத்துக் கோடி பெண்களின் நலம் பாதுகாக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பத்துக்கோடி வீடுகளுக்கு குழாய்மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் முன்னெடுப்பின்கீழ் தற்போது வரை 50 சதவீத வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version