Tnpsc Current Affairs in Tamil – 15th November 2023

1. தீபாவளியன்று 22.23 இலட்சம் அகல்விளக்குகளை ஏற்றி உலக சாதனை படைத்த நகரம் எது?

அ. வாரணாசி

ஆ. அயோத்தி 🗹

இ. மைசூரு

ஈ. போபால்

2. ‘அறிவு, சுகாதாரம், புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சி நகரம்’ என்பதுடன் தொடர்புடைய எந்த மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா 🗹

இ. அஸ்ஸாம்

ஈ. மேற்கு வங்காளம்

3. நகர்ப்புற உட்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக கீழ்காணும் எந்த நிறுவனத்துடனான $400 மில்லியன் டாலர் மதிப்பிலான கொள்கை அடிப்படையிலான கடன் ஒப்பந்தத்தில் இந்திய அரசாங்கம் கையெழுத்திட்டது?

அ. உலக வங்கி

ஆ. ADB 🗹

இ. IMF

ஈ. WTO

4. நடப்பு 2023 அக்டோபரில், இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதம் என்னவாக இருந்தது?

அ. 3.87%

ஆ. 4.87% 🗹

இ. 6.87%

ஈ. 8.87%

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘நான்காவது குழு’வுடன் தொடர்புடைய அமைப்பு எது?

அ. உலக பொருளாதார மன்றம்

ஆ. ஐக்கிய நாடுகள் 🗹

இ. பன்னாட்டு செலாவணி நிதியம்

ஈ. உலக வங்கி

6. ‘செவ்வாயின் ஆய்வுக்கூறு மாதிரியுடன் பூமிக்குத் திரும்பும் திட்டத்துடன்’ தொடர்புடைய நாடு எது?

அ. இஸ்ரேல்

ஆ. ஐக்கிய அரபு அமீரகம்

இ. ஐக்கிய அமெரிக்க நாடுகள் 🗹

ஈ. ரஷ்யா

7. CITES உடனான COP19 கூட்டத்தின்போது, உறுப்பினர்கள் எந்த விலங்குகளை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இனமாக முதன்மைப்படுத்த அறிவுறுத்தப்பட்டனர்?

அ. வங்கப்புலி

ஆ. ஜாகுவார் 🗹

இ. சிறுத்தை

ஈ. ஆப்பிரிக்க யானை

8. ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பதிலளிப்புத் திட்டத்தை’ அறிமுகப்படுத்திய அமைப்பு எது?

அ. WEF

. FAO 🗹

இ. IMF

ஈ. உலக வங்கி

9. ‘2040ஆம் ஆண்டுக்குள் நெகிழி மாசுபாட்டை ஒழிப்பது: கொள்கை ரீதியிலான பகுப்பாய்வு’ என்ற அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. NITI ஆயோக்

ஆ. உலக வங்கி

இ. UNEP

ஈ. OECD 🗹

10. புனித பீட்டர்ஸ்பர்க் பிரகடனத்துடன் தொடர்புடைய உயிரினம் எது?

அ. புலி 🗹

ஆ. வெள்ளாடு

இ. முயல்

ஈ. நாய்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் என். சங்கரய்யா (102) மறைவு.

மார்க்சிய பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான என். சங்கரய்யா (102), காலமானார். இவர் 1967, 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் மதுரை மேற்கு மற்றும் மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வென்று 3 தடவை தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். தீக்கதிர் நாளேட்டின் முதல் ஆசியரும் இவரே.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசை அழைத்து சுதந்திரப் போராட்டத்துக்காக கூட்டத்தை நடத்திய சிறப்பு அவருக்கு உண்டு. 1938ஆம் ஆண்டு இந்தித் திணிப்பை எதிர்த்து மாணவர்களுடன் போராட்ட பயணத்தைத்தொடங்கினார். அதன்பின் 1939ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான குரலாக ஒலித்தார். இதற்காக அவர் முன்னெடுத்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவுப் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவருக்குத் தமிழ்நாடு அரசு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கி கௌரவப்படுத்தி இருந்தது. இந்த விருதை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியபோது முதன்முதலாக அவ்விருதை 2021இல் சங்கரய்யா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Exit mobile version