Tnpsc Current Affairs in Tamil – 15th April 2024

1. உலகளாவிய கல்லீரல் அழற்சி அறிக்கை – 2024இன்படி, 2022ஆம் ஆண்டில் உலக அளவில் கல்லீரல் அழற்சி B & C வகை நோயினால் பாதிக்கப்பட்டோரில் எத்தனை சதவீதத்தினர் இந்தியாவில் உள்ளனர்?

அ. 10.5%

. 11.6%

இ. 12.1%

ஈ. 9.5%

2. அண்மையில், ‘விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழிப்புணர்வு பயிற்சி (START)’ திட்டத்திற்கான மைய முகமையாக ISROஆல் நியமிக்கப்பட்ட அமைப்பு எது?

அ. குஜராத் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் (GUJCOST)

ஆ. MP கவுன்சில் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (MPCST)

இ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில், லக்னோ

ஈ. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், புது தில்லி

3. குவாக்கரெல்லி சைமண்ட்ஸின் 2024 – உலக பல்கலைக்கழக தரவரிசையில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் 45ஆவது இடத்தைப் பெற்றுள்ள நிறுவனம் எது?

அ. ஐஐடி பம்பாய்

ஆ. ஐஐடி கான்பூர்

இ. ஐஐடி மெட்ராஸ்

ஈ. ஐஐடி ரூர்க்கி

4. அண்மையில், இலட்சத்தீவுகளில் கிளையைத் திறந்த முதல் தனியார் வங்கி எது?

அ. ஆக்சிஸ் வங்கி

ஆ. HDFC வங்கி

இ. YES வங்கி

ஈ. ICICI வங்கி

5. ஆசிய வளர்ச்சி வங்கியின் அறிக்கையின்படி, 2024-25இல் இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி வீதம் என்ன?

அ. 8.1 %

ஆ. 7.8 %

இ. 7.0 %

ஈ. 6.9 %

6. அண்மையில், அமெரிக்க அதிபரின், ‘தங்க தன்னார்வ சேவை’ விருதினைப் பெற்ற முதல் இந்திய துறவி யார்?

அ. ஆச்சார்யா லோகேஷ் முனி

ஆ. இராகவேசுவர பாரதி

இ. விஜயேந்திர சரசுவதி

ஈ. பாரதி தீர்த்தா

7. உலக இணையவெளிக் குற்றங்கள் குறியீடு – 2024இன்படி, உலக அளவில் இணையவெளிக் குற்றங்களில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?

அ. 8ஆவது

ஆ. 9ஆவது

இ. 10ஆவது

ஈ. 11ஆவது

8. ‘சொறி ஒட்டுண்ணி நோய் (mange disease)’ என்றால் என்ன?

அ. பூச்சித்தொல்லையால் விலங்குகளில் ஏற்படும் தோல் நோய்

ஆ. பாதிக்கப்பட்ட விலங்கு கடிப்பதால் ஏற்படும் வைரஸ் தொற்று

இ. முதன்மையாக கால்நடைகளைப் பாதிக்கும் தொற்றுநோய்

ஈ. தாவரங்களின் வாழிடத்தைப் பாதிக்கும் பூஞ்சை நோய்

9. அண்மையில், இந்திய கடற்படைக் கப்பல்களுக்கான முதல் எஃகு வெட்டு விழா நடைபெற்ற இடம் எது?

அ. சென்னை, தமிழ்நாடு

ஆ. விசாகப்பட்டினம், ஆந்திர பிரதேசம்

இ. விழிஞ்சம், கேரளா

ஈ. கொல்கத்தா, மேற்கு வங்கம்

10. 2024 – ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் நடைபெற்ற இடம் எது?

அ. பிஷ்கெக், கிர்கிஸ்தான்

ஆ. பெய்ஜிங், சீனா

இ. புது தில்லி, இந்தியா

ஈ. துஷான்பே, தஜிகிஸ்தான்

11. அண்மையில், 2024 – நெகிழிக்கழிவு உற்பத்தியானது உலக கழிவு மேலாண்மைத்திறனை விஞ்சும் நாள் அறிக்கையை வெளியிட்ட இலாப நோக்கற்ற அமைப்பு எது?

அ. எர்த் ஆக்ஷன்

ஆ. அமெரிக்க தேசிய செஞ்சிலுவை சங்கம்

இ. யுனைடெட் வே

ஈ. INSO

12. 2024 – நெகிழிக்கழிவு உற்பத்தியானது உலக கழிவு மேலாண்மைத்திறனை விஞ்சும் நாள் அறிக்கையின்படி, உலகளவில் தனிநபர் நெகிழிக்கழிவு உற்பத்தி விகிதங்களில் மிகக்குறைந்த நாடுகளுள் ஒன்றாக உள்ள நாடு எது?

அ. இந்தியா

ஆ. இலங்கை

இ. மியான்மர்

ஈ. பிலிப்பைன்ஸ்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்.

வங்கக்கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மொத்தம் 61 நாள்களுக்கு கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்குக் கடற்கரைப்பகுதிகளில் விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்குச்சென்று மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தடைக்காலம் முதலில் 45 நாள்களாக இருந்து வந்த நிலையில் 2017ஆம் ஆண்டு முதல் 61 நாள்களாக அதிகரிக்கப்பட்டது. இத்தடைக்காலத்தின்போது, மீனவர்கள் தங்கள் விசைப்படகுகள், வலைகளை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபடுவர். இவர்களுக்கு அரசு சார்பில் `6,000 உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

Exit mobile version