Tnpsc Current Affairs in Tamil – 15th & 16th October 2023

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ‘MMDR சட்டத்துடன்’ தொடர்புடைய துறை எது?

அ. மருந்துகள் மற்றும் மருந்துகள்

ஆ. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் 🗹

இ. இயந்திரங்கள் மற்றும் இயந்திரங்கள்

ஈ. திரைப்படங்கள் மற்றும் இதழ்கள்

2. இந்தியாவில் இளையோர் மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட தன்னாட்சி அமைப்பின் பெயர் என்ன?

அ. இளைஞர் திறன் இந்தியா

ஆ. மேரா யுவ பாரத் 🗹

இ. இளம் இந்தியா

ஈ. இந்தியாவில் பயில்வோம்

3. எந்த மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் முந்திரிக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது?

அ. கேரளா

ஆ. கோவா 🗹

இ. ஆந்திரப் பிரதேசம்

ஈ. குஜராத்

4. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் இருந்து தனது குடிமக்களை திரும்ப அழைத்துவர இந்தியா மேற்கொண்ட நடவடிக்கையின் பெயர் என்ன?

அ. ஆபரேஷன் அஜய் 🗹

ஆ. ஆபரேஷன் அபை

இ. ஆபரேஷன் அடல்

ஈ. ஆபரேஷன் அருண்

5. பல்வேறு சர்வதேச அமைப்புகளால், ‘உலகின் மிகப்பெரிய திறந்தவெளி சிறை’ எனக் குறிப்பிடப்பட்ட பகுதி எது?

அ. தைவான்

ஆ. சிரியா

இ. காசா 🗹

ஈ. ஈரான்

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ‘White Goods’ என்பது கீழ்காணும் எதனை குறிப்பிடுகிறது?

அ. பால் பொருட்கள்

ஆ. காற்பதனிகள் மற்றும் LED விளக்குகள் 🗹

இ. பனை பொருட்கள்

ஈ. கிரிப்டோகரன்சிகள்

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘V2X தொழில்நுட்பம்’ என்பதுடன் தொடர்புடையது எது?

அ. கணினி வரைகலை

ஆ. ஆட்டோமொபைல் 🗹

இ. பணத்தாள்களை அச்சிடுதல்

ஈ. எலக்ட்ரானிக் கேஜெட்டுகள்

8. ‘அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் மனநலம்’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. UNICEF

. WHO 🗹

இ. NITI ஆயோக்

ஈ. பன்னாட்டு மன்னிப்பு அவை

9. இந்திய வனவிலங்கு அறக்கட்டளையின்படி, இந்தியாவில் மிகவும் அழிந்து வரும் நீர்வாழ் உயிரினம் எது?

அ. நடனம் ஆடும் தவளை 🗹

ஆ. மெய்த்தவளை

இ. மரத்தவளை

ஈ. அடுக்குத் தவளை

10. ‘அமேஸ்-28’ என்ற பெயரில் 3D முறை அச்சிடல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டப்பட்ட முதல் கட்டிடம் திறக்கப்பட்டுள்ள மாநிலம் எது?

அ. பீகார்

ஆ. கர்நாடகா

இ. மத்திய பிரதேசம்

ஈ. கேரளா 🗹

11. ஈராண்டுகளுக்கு (2023-2025) இந்தியப் பெருங்கடலின் விளிம்பில் உள்ள நாடுகள் சங்கத்தின் தலைமைப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு எது?

அ. இந்தியா

ஆ. இலங்கை 🗹

இ. இந்தோனேசியா

ஈ. ஆஸ்திரேலியா

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. அப்துல் கலாம் பிறந்தநாள்.

முன்னாள் குடியரசுத்தலைவர் ஆ ப ஜெ அப்துல் கலாம் கடந்த 1931ஆம் ஆண்டு அக்டோபர்.15இல் இராமேசுவரத்தில் பிறந்தார். கல்வியின்மீது அளவுகடந்த ஆர்வத்தை வளர்த்துக்கொண்ட கலாம் விஞ்ஞானியாக தனது ஆராய்ச்சியைத் தொடங்கி ‘பிருத்வி’, ‘அக்னி’ ஏவுகணைகள், ‘பொக்ரான்’ அணுகுண்டு சோதனை உள்ளிட்டவற்றின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். அதன் காரணமாக இவர், ‘இந்தியாவின் ஏவுகணை நாயகன்’ என்று அழைக்கப்படுகிறார். 2002ஆம் ஆண்டு நாட்டின் குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

‘மக்கள் குடியரசுத்தலைவர்’ எனப் போற்றப்பட்டார். அவரின் பிறந்தநாள் ‘உலக இளையோர் நாள்’ எனக் கொண்டாடப்படுகிறது. அவர், 2015 ஜூலை.27இல் இயற்கை எய்தினார்.

2. வரி நிலுவையை வசூலிக்கும் சமாதானத் திட்டம் தொடக்கம்.

தமிழ்நாட்டில் வணிகர்களிடமிருந்து வரி நிலுவையை எளிய முறையில் வசூலிப்பதற்கான சமாதானத்திட்டம் தொடங்கப்பட்டது. `50 ஆயிரத்துக்குக் கீழ் வரி, அபராதம், வட்டி ஆகியவற்றை வைத்துள்ள வணிகர்களுக்கு அவை முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. சமாதானத் திட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை நடைமுறையில் இருக்கும்.

3. தில்லி பி20 உச்சிமாநாடு.

ஜி20 நாடாளுமன்ற அவைத்தலைவர்களின் 9ஆவது (பி20) உச்சிமாநாடு தில்லியில் கடந்த அக்.12 முதல் 14 வரை மூன்று நாள்கள் நடைபெற்று முடிவுற்றது. பி20 மாநாடு முதன்முறையாக அர்ஜெண்டினாவில் நடைபெற்றது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Exit mobile version