Tnpsc Current Affairs in Tamil – 14th December 2023

1. இந்தியாவில் காற்றுமாசு நெருக்கடியை எதிர்த்துப் போராடுதற்காக ஒரு விரிவான திட்டத்தை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?

அ. ஆசிய வளர்ச்சி வங்கி

ஆ. உலக வங்கி 🗹

இ. உலக சுகாதார நிறுவனம்

ஈ. உலக வர்த்தக அமைப்பு

2. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற அரசியலமைப்பின் 370ஆவது பிரிவுடன் தொடர்புடையது எது?

அ. ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து 🗹

ஆ. ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து

இ. சரக்குகள் மற்றும் சேவைகள் வரி

ஈ. பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீடு

3. கீழ்காணும் எந்த மாநிலத்தின் புதிய முதலமைச்சராக விஷ்ணு தியோ சாய் பதவியேற்றார்?

அ. மத்திய பிரதேசம்

ஆ. இராஜஸ்தான்

இ. சத்தீஸ்கர் 🗹

ஈ. மிசோரம்

4. அண்மையில் தனது சொந்த வனம் மற்றும் மரச் சான்றளிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள ஆசிய நாடு எது?

அ. இலங்கை

ஆ. இந்தியா 🗹

இ வங்காளதேசம்

ஈ. ஜப்பான்

5. “VINBAX-23” என்பது இந்தியாவுக்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெறும் இராணுவப் பயிற்சியாகும்?

அ. மலேசியா

ஆ. வியட்நாம் 🗹

இ. இலங்கை

ஈ. ஈரான்

6. ‘பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தைச்’ செயல்படுத்துகிற மத்திய அமைச்சகம் எது?

அ. திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் 🗹

ஆ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

இ. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

ஈ. நிதி அமைச்சகம்

7. இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகளை பாதியாகக் குறைப்பதற்கு முன்பு நிர்ணயிக்கப்படிருந்த இலக்கு ஆண்டான 2024இலிருந்து தற்போது எந்த ஆண்டுக்கு இந்திய அரசாங்கம் மாற்றிவைத்துள்ளது?

அ. 2025

ஆ. 2026

இ. 2028

ஈ. 2030 🗹

8. Climate finance for agrifood systems in sharp downward trend” என்ற அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. UNICEF

ஆ. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 🗹

இ. உலக வங்கி

ஈ. FSSAI

9. ‘மாக் பிகு’ என்பது கீழ்காணும் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாவாகும்?

அ. பஞ்சாப்

ஆ. குஜராத்

இ. அஸ்ஸாம் 🗹

ஈ. மேகாலயா

10. எந்த ஐநா உடன்படிக்கை, ‘பான் ஒப்பந்தம்’ என்று அழைக்கப்படுகிறது?

அ. புலம்பெயர்ந்த இனங்கள்பற்றிய ஒப்பந்தம் 🗹

ஆ. காலநிலை மாற்றம் குறித்த ஒப்பந்தம்

இ. அழிந்துவரும் விலங்குகள்பற்றிய ஒப்பந்தம்

ஈ. கார்பன் உமிழ்வுபற்றிய ஒப்பந்தம்

11. மிகப்பழைமையான கருந்துளையைக் (2023ஆம் ஆண்டு வரை) கண்டறிந்துள்ள விண்வெளி நிறுவனம் எது?

அ. நாசா 🗹

ஆ. இஸ்ரோ

இ. ஜாக்ஸா

ஈ. ரோஸ்கோஸ்மாஸ்

12. இந்தியாவில் தொழிற்துறை வழித்தடங்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் நோக்கோடு $250 மில்லியன் டாலர்கள் மதிப்பிலானக் கடனுக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ள வங்கி எது?

அ. ஆசிய வளர்ச்சி வங்கி 🗹

ஆ. ஆசிய உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கி

இ. உலக வங்கி

ஈ. உலக பொருளாதார மன்றம்

13. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற நர்கீஸ் முகமதியுடன் தொடர்புடைய விருது எது?

அ. கிராமி விருது

ஆ. ஆஸ்கார் விருது

இ. அமைதிக்கான நோபல் பரிசு 🗹

ஈ. புக்கர் பரிசு

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. புதைபடிம எரிபொருள் பயன்பாடு குறைப்பு: பருவநிலை மாநாட்டில் 200 நாடுகள் ஒப்பந்தம்.

புதைபடிம எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று துபாய் பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் சுமார் 200 நாடுகள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை மேற்கொண்டன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் ஐநாஇன் 28ஆவது பருவநிலை பாதுகாப்பு மாநாடு கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வந்தது. இதன் முடிவில் எரிசக்திக்காக நிலக்கரி பயன்பாட்டைக் குறைக்க வலியுறுத்தும் சர்வதேச ஒப்பந்தம் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி புவி வெப்பமயமாதலை 1.5°C-க்குள் கட்டுப்படுத்தும் வகையில் பைங்குடில் வாயு வெளியேற் -றத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும், இதற்காக புதைபடிம எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பது உள்பட எட்டு அம்ச திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எரிசக்திக்காக நிலக்கரியைப் பெருமளவில் பயன்படுத்தும் நாடுகளான இந்தியா, சீனாவுக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்தியா வலியுறுத்தல்: பருவநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

2. தமிழ்நாட்டில் 8 மக்கள் நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு `75,000 கோடி ஒதுக்கீடு.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தமிழ்நாட்டில் இதுவரை 92.22 இலட்சம் குடும்பங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதேபோல் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு 7,79,851 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

தீனதயாள் அந்தியோதயா திட்டம், தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 39 இலட்சத்து 69 ஆயிரம் குடும்பங்கள்மூலம் 334,000 மகளிர் சுயவுதவிக்குழுக்கள் (SHG) அமைக்கப்பட்டுள்ளன. தேசிய சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 20,05,691 பேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 2022-23 நிதியாண்டில் 19 இலட்சத்து 51 ஆயிரத்து 42 பயனாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். பிரதமரின் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் இரண்டாவது பிரிவின்மூலம் தமிழ்நாட்டில் 2021-22 நிதியாண்டிலிருந்து 2023-24 நிதியாண்டின் முதல் பாதி வரை 14,0146 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டுக்கு எட்டு நலத்திட்டங்கள்மூலம் மட்டும் கடந்த நிதியாண்டில் `75,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version