Tnpsc Current Affairs in Tamil – 13th May 2024

1. சமீபத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கான முதல் சட்டத்தை ஏற்றுக்கொண்ட அமைப்பு எது?

அ. ஐரோப்பிய ஒன்றியம் (EU)

ஆ. ஐக்கிய நாடுகள் சபை (UN)

இ. ஆப்பிரிக்க ஒன்றியம் (AU)

ஈ. ASEAN

2. அண்மையில், 2024-க்கான நவீன உணவுப்பழக்கத்திற்கு ஏற்றவாறு இந்தியர்களுக்கான மேம்படுத்தப்பட்ட உணவுமுறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

அ. அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR)

ஆ. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI)

இ. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR)

ஈ. உணவு மற்றும் உழவு அமைப்பு (FAO)

3. ஹிண்டன் ஆறானது கீழ்க்காணும் எந்த ஆற்றின் துணையாறாகும்?

அ. கோதாவரி

ஆ. காவேரி

இ. கிருஷ்ணா

ஈ. யமுனை

4. சமீபத்தில், ‘HD 3386’ என்ற புதிய உயர் விளைச்சல்தரும் கோதுமை இரகத்தை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?

அ. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்

ஆ. தேசிய சர்க்கரை ஆராய்ச்சி நிறுவனம்

இ. TATA அடிப்படை ஆராயச்சி நிறுவனம்

ஈ. மத்திய அறிவியல் தொழில்துறை அமைப்பு

5. ‘FliRT’ என்றால் என்ன?

அ. அணுவாற்றல் திறனுடைய நீர்மூழ்கிக்கப்பல்

ஆ. தீங்கிழைக்கும் மென்பொருள்

இ. நீருக்கடியில் ஆராய்ச்சி நிலையம்

ஈ. COVID–19இன் புதிய திரிபு

6. அண்மையில், எந்த நாட்டின் தூதர், நாகாலாந்தில் கோகிமா அமைதி நினைவகத்தை திறந்து வைத்தார்?

அ. ஜப்பான்

ஆ. சீனா

இ. பூடான்

ஈ. நேபாளம்

7. ‘தூர் அழுகல் நோயை’ உண்டாக்கும் காரணி எது?

அ. பாக்டீரியா

ஆ. பூஞ்சை

இ. வைரஸ்

ஈ. புரோட்டோசோவா

8. அண்மையில், ஐநா பயங்கரவாத எதிர்ப்பு அறக்கட்டளை நிதியத்துக்கு இந்தியா எவ்வளவு நிதி அளித்தது?

அ. $200,000

ஆ. $300,000

இ. $400,000

ஈ. $500,000

9. ‘55 Cancri e’ என்றால் என்ன?

அ. ஆக்கிரமிப்பு களை

ஆ. மீ புவி

இ. பண்டைய நீர்ப்பாசன நுட்பம்

ஈ. நீர்மூழ்கிக்கப்பல்

10. அரளி (Nerium Oleander) என்பது _____?

அ. பசுமைமாறா குத்துச்செடி

ஆ. சிறுகோள்

இ. கருந்துளை

ஈ. கடற்படைக்கப்பல்

11. கடெட் பாதுகாப்பு அமைப்புகள் நிறுவனமானது கீழ்க்காணும் எந்த நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் முதலாவது தற்கொலைப் பாங்கான போர் முறையில் இயங்கும் டிரோனை உருவாக்கியுள்ளது?

அ. DRDO

ஆ. ISRO

இ. BHEL

ஈ. HAL

12. ‘தேசிய தொழில்நுட்ப நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. 10 மே

ஆ. 11 மே

இ. 12 மே

ஈ. 13 மே

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. நாட்டின் வனப் பாதுகாப்பு கடந்த 15 ஆண்டுகளில் முன்னேற்றம்.

வனப்பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் கணிசமான முன்னேற்றங்களை செய்துள்ளதாகவும் இதனால், வனப்பரப்பில் நிலையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஐநா வன அமைப்பில் இந்தியா தெரிவித்துள்ளது. உலக அளவில், 2010-2020 காலகட்டத்தில் சராசரி வருடாந்திர வனப்பரப்பு அதிகரிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் மே.06 முதல் 10ஆம் தேதிவரை நடைபெற்ற வன அமைப்பின் 19ஆவது அமர்வில் இந்தியா பங்கேற்றது.

மேலும், அமர்வில் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

புலிகள் திட்டத்தின் ஐம்பது ஆண்டுகளையும், யானை திட்டத்தின் முப்பது ஆண்டுகளையும் குறிக்கும் அண்மைய கொண்டாட்டங்கள், இனங்கள் மற்றும் வாழ்விடப் பாதுகாப்பில் இந்தியாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. கூட்டு முயற்சிகள்மூலம் உலகெங்கிலும் உள்ள ஏழு பெரிய பூனை இனங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட உலகளாவிய முயற்சியாக சர்வதேச கூட்டணியை இந்தியா உருவாக்கியது.

தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் தனியார் துறையினரின் தன்னார்வ சுற்றுச்சூழல் நடவடிக்கைகளுக்கு வெகுமதி அளிக்கும் சந்தை அடிப்படையிலான பொறிமுறையாக, ‘கிரீன் கிரெடிட் புரோகிராம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, வனத்தீ மேலாண்மை மற்றும் வனச்சான்றிதழில் கவனம் செலுத்தி, 40 நாடுகள் மற்றும் 20 சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்தியா தலைமையிலான முன்னெடுப்பு டேராடூனில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்றது. இவ்வாறு இந்தியா தெரிவித்தது.

Exit mobile version