Tnpsc Current Affairs in Tamil – 13th December 2023

1. ‘மேரா காவ்ன், மேரி தரோகர்’ என்ற திட்டத்துடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ. கலாச்சார அமைச்சகம் 🗹

ஆ. உள்துறை அமைச்சகம்

இ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

ஈ. சுரங்க அமைச்சகம்

2. கூவம் மற்றும் அடையாறு ஆகிய ஆறுகள் பாயும் மாநிலம் எது?

அ. தமிழ்நாடு 🗹

ஆ. கேரளா

இ. ஆந்திரப் பிரதேசம்

ஈ. கர்நாடகா

3. இந்திய ரிசர்வ் வங்கியின் 2023 டிசம்பர் மாத பணவியல் கொள்கைக் குழுக் கூட்டத்தின்படி, 2023-24ஆம் நிதி ஆண்டுக்கான இந்தியாவின் GDP வளர்ச்சிக் கணிப்பு யாது?

அ. 7% 🗹

ஆ. 10%

இ. 5%

ஈ. 12%

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பிரசாந்த் அகர்வாலுடன் தொடர்புடையது எது?

அ. கலைஞர்

ஆ. சமூக சேவகர் 🗹

இ. விளையாட்டு வீரர்

ஈ. அரசியல்வாதி

5. ‘ஹனுக்கா’ விழாவுடன் தொடர்புடைய சமயம் எது?

அ. இந்து மதம்

ஆ. யூத மதம் 🗹

இ. சமணம்

ஈ. சீக்கிய மதம்

6. 2023இல் சீனாவின் பட்டை மற்றும் பாதை திட்டத்திலிருந்து விலகிய ஐரோப்பிய நாடு எது?

அ. ஜெர்மனி

ஆ. நெதர்லாந்து

இ. இத்தாலி 🗹

ஈ. ஸ்பெயின்

7. 2023 டிசம்பரில், கீழ்க்காணும் எந்த நாட்டுடனான 50 ஆண்டுகால அரசியல் ரீதியான உறவுகளை இந்தியா கொண்டாடியது?

அ. கொரிய குடியரசு 🗹

ஆ. சீனா

இ. தென்னாப்பிரிக்கா

ஈ. ஆஸ்திரேலியா

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பன்னி புல்வெளிகள் அமைந்துள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ. இராஜஸ்தான்

ஆ. மகாராஷ்டிரா

இ. குஜராத் 🗹

ஈ. பஞ்சாப்

9. தனிப்பட்ட மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை (UDID) திட்டத்துடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் 🗹

ஆ. உள்துறை அமைச்சகம்

இ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஈ. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

10. 2023ஆம் ஆண்டில் முதன்முதலாக கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நகரம் எது?

அ. புது தில்லி 🗹

ஆ. மும்பை

இ. புவனேசுவரம்

ஈ. சென்னை

11. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற அஷ்வினி பொன்னப்பா மற்றும் தனிஷா கிராஸ்டோ ஆகியோருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. டென்னிஸ்

ஆ. டேபிள் டென்னிஸ்

இ. பூப்பந்து 🗹

ஈ. கைப்பந்து

12. இந்திய நிதி தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த சேவைகள் (IFTAS) என்பது எதன் துணை நிறுவனமாகும்?

அ. இந்திய ரிசர்வ் வங்கி 🗹

ஆ. நிதி அமைச்சகம்

இ. DPIIT

ஈ. FSSAI

13. நடந்து கொண்டிருக்கும் COP28 பருவநிலை உச்சிமாநாட்டில், எந்த ஆண்டுக்குள் உலகின் பசுமை ஆற்றல் திறனை 11,000 கிகாவாட்டாக 3 மடங்காக உயர்த்துவதற்கான உறுதிமொழியில் 118 நாடுகள் கையெழுத்திட்டன?

அ. 2025

ஆ. 2030 🗹

இ. 2040

ஈ. 2045

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 5ஜி நெட்வொர்க் சேவை: சென்னை ஐஐடி-தேஜஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

சென்னை ஐஐடி இந்தியாவின் ஊரகப்பகுதியில் குறைந்த செலவில் 5ஜி நெட்வொர்க் சேவை தொடர்பை சிறந்த முறையில் அளிப்பதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டது. ஊரகப்பகுதி தகவல் தொழில்நுட்பத் தொடர்புக்கு 5ஜி அடிப்படை நிலையத்தை குறைந்த செலவில் உருவாக்குவது இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும். இந்த நிலையில், சென்னை ஐஐடி கண்டறிந்த 5ஜி நெட்வொர்க் தொழில்நுட்பத்தை தேஜாஸ் நெட்வொர்க் நிறுவனம் பயன்படுத்திக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

BSNL நிறுவனத்துடன் இணைந்து தேஜஸ் நிறுவனம் செயல்படவுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக உள்நாட்டு நிறுவனம் நெட்வொர்க்கை மேம்படுத்துவது இதுதான் முதல்முறை. 5ஜி நெட்வொர்க் அதிவேகமாக கிடைப்பதற்காக ‘மைமோ’ என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. மாநில AIDS கட்டுப்பாட்டு சங்கத்துக்கு தேசிய விருது.

தமிழ்நாடு மாநில AIDS கட்டுப்பாட்டு சங்கத்துக்கு, ‘சிறந்த செயல்பாட்டுக்கான தேசிய விருதை’ மத்திய அரசு வழங்கியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மாநில AIDS கட்டுப்பாடு சங்கம் கடந்த 1994ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

3. இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர்: நாடாளுமன்றத்தில் அரசு தகவல்.

இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற அளவில் மக்கள்தொகை–மருத்துவர்கள் விகிதம் உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. நாட்டில் மொத்தம் 36.14 செவிலியர்கள் உள்ளனர். செவிலியர்-மக்கள்தொகை விகிதம் 1:476 ஆக உள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் தகவல்படி, 2022 ஜூன் மாத நிலவரப்படி 13,08,009 ஆங்கிலமுறை மருத்துவர்கள் மாநில மருத்துவ கவுன்சில் மற்றும் தேசிய மருத்துவ குழுமத்தில் பதிவுசெய்துள்ளனர். 5.65 இலட்சம் ஆயுஷ் மருத்துவர்கள் உள்ளனர். அவ்வகையில், நாட்டில் மருத்துவர்கள்-மக்கள்தொகை விகிதம் 1: 834ஆக உள்ளது.

Exit mobile version