Tnpsc Current Affairs in Tamil – 12th December 2023

1. பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணத்தை வழங்கும் நோக்கில், ‘மகா இலட்சுமி’ என்ற திட்டத்தைச் செயல்படுத்துகிற மாநிலம் எது?

அ. தெலங்கானா 🗹

ஆ. ஒடிசா

இ. மேற்கு வங்காளம்

ஈ. ஆந்திர பிரதேசம்

2. எந்த மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சராக லால்துஹோமா பதவியேற்றார்?

அ. சத்தீஸ்கர்

ஆ. மிசோரம் 🗹

இ. தெலுங்கானா

ஈ. மத்திய பிரதேசம்

3. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மருத்துவம் மற்றும் கல்விக்கான UPI கட்டண வரம்புகளை `1 இலட்சத்திலிருந்து எவ்வளவாக உயர்த்தியுள்ளது?

அ. ரூ.2 இலட்சம்

ஆ. ரூ.3 இலட்சம்

இ. ரூ.5 இலட்சம் 🗹

ஈ. ரூ.10 இலட்சம்

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஷெரிங் தாஷியுடன் தொடர்புடையது எது?

அ. கலைஞர்

ஆ. நூலாசிரியர் 🗹

இ. விளையாட்டு வீரர்

ஈ. அரசியல்வாதி

5. UNICEFஇன் ஜெனரேஷன் அன்லிமிடெட் ஆனது கீழ்காணும் எந்த நாட்டுடன் இணைந்து COP28இல், “கிரீன் ரைசிங்” என்ற முன்னெடுப்பைத் தொடங்கியது?

அ. இத்தாலி

ஆ. இந்தியா 🗹

இ. ஐக்கிய அரபு அமீரகம்

ஈ. ஆஸ்திரேலியா

6. ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) தலைமையகம் எங்குள்ளது?

அ. நியூயார்க்

ஆ. பெய்ஜிங் 🗹

இ. ஜெனீவா

ஈ. பாரிஸ்

7. சர்வதேச சிவில் வான் போக்குவரத்து நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. 7 ஜனவரி

ஆ. 7 மார்ச்

இ. 7 செப்டம்பர்

ஈ. 7 டிசம்பர் 🗹

8. ‘தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. 7 ஜனவரி

ஆ. 7 மார்ச்

இ. 7 செப்டம்பர்

ஈ. 7 நவம்பர் 🗹

9. டைம் இதழால், ‘2023ஆம் ஆண்டின் சிறந்த நபர்’ என்று அறிவிக்கப்பட்டவர் யார்?

அ. வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

ஆ. டெய்லர் ஸ்விஃப்ட் 🗹

இ. சிமோன் பைல்ஸ்

ஈ. ஜி ஜின்பிங்

10. IQAirஇன்படி, 2023 டிசம்பர் மாத நிலவரப்படி, எந்த நகரத்தின் காற்றின் தரம் உலகிலேயே மிகவும் மோசமாக இருந்தது?

அ. புது தில்லி

ஆ. லாகூர் 🗹

இ. டாக்கா

ஈ. டோக்கியோ

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சட்டப்பிரிவு 370 நீக்கம் செல்லும்: உச்சநீதிமன்றம்.

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி D Y சந்திரசூட் தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது. அந்தச் சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019ஆம் ஆண்டு ரத்து செய்த மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி DY சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பாக 16 நாள்கள் நடைபெற்றது.

2. ‘மகாகவி’ பாரதியார்…

1906-07ஆம் ஆண்டில் பிரிட்டனிலிருந்து லெவிலிங்ஸ்டன் என்னும் ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வந்தார். அவர், திலகர், கோகலே உள்ளிட்டோரைச் சந்தித்த பின்னர், பாரதியையும் அவரது பாடல்களையும் அறிந்து கொள்கிறார். அதன்பின்னர், 1908ஆம் ஆண்டு இந்தியாவைப் பற்றி அவர் எழுதிய நூலில் பாரதியைப்பற்றிக் குறிப்பிடும்போது, ‘தி பொயட் ஆஃப் மெட்ராஸ்’ என எழுதினார். அதைத்தொடர்ந்து, 1916ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹெச் டகிள்ஸ் என்பவர் உலகப் புகழ்பெற்ற கவிஞர்களைப் பற்றி எழுதிய புத்தகத்தில் இந்தியாவைச் சேர்ந்த ரவீந்திரநாத் தாகூர், சரோஜினி நாயுடு, அரவிந்தர், சுப்பிரமணிய பாரதி ஆகிய நான்குபேரைப் பற்றி கட்டுரை எழுதியுள்ளார்.

பாரதி மறைவுக்குப் பிறகு 1921ஆம் ஆண்டு மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதிய கவிதை நூலில் ரவீந்திரநாத் தாகூர், ‘மகாகவி’ பாரதியைப் பற்றி எழுதியுள்ளார். அதுமட்டுமன்றி, சேதுபதி மன்னர் தொடங்கிய மதுரை தமிழ்ச்சங்கம், தமிழ்ப்பல்கலைக்கழகமாக விரிவாக்கம் செய்யப்பட வேண்டுமென 1906ஆம் ஆண்டுகளில் விரும்பியவர் பாரதி.

Exit mobile version