Tnpsc Current Affairs in Tamil – 11th October 2023

1. ‘வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அறிக்கை – 2023’ஐ வெளியிட்ட நிறுவனம் எது?

அ. WEF

ஆ. IMF

இ. NITI ஆயோக்

ஈ. UNCTAD 🗹

2. பெர்சிவெரென்ஸ் ரோவர் ஆனது அண்மையில் எந்தக் கோளில் உள்ள ‘டஸ்ட் டெவில்’ஐ கண்டுபிடித்தது?

அ. வியாழன்

ஆ. செவ்வாய் 🗹

இ. சனி

ஈ. வெள்ளி

3. கீழ்காணும் எந்த மாநிலத்தில் மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?

அ. தெலுங்கானா 🗹

ஆ. திரிபுரா

இ. மத்திய பிரதேசம்

ஈ. ஜார்கண்ட்

4. ‘சம்மக்கா சரளம்மா ஜாதரா’ பழங்குடியினர் திருவிழாவை நடத்துகிற மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. ஜார்கண்ட்

ஆ. மத்திய பிரதேசம்

இ. தெலுங்கானா 🗹

ஈ. பீகார்

5. PUSA-44 நெல் வகையை பயிரிட தடை விதித்த மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. பஞ்சாப் 🗹

இ. அஸ்ஸாம்

ஈ. கேரளா

6. ‘ட்ரோன் (திருத்தம்) விதிகள் 2023’ஐ அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?

அ. பாதுகாப்பு அமைச்சகம்

ஆ. சிவில் வான்போக்குவரத்து அமைச்சகம் 🗹

இ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

7. 2023ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற நர்கீஸ் முகமதி சார்ந்த நாடு எது?

அ. இஸ்ரேல்

ஆ. ஈரான் 🗹

இ. ஐக்கிய அரபு அமீரகம்

ஈ. ஓமன்

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘டகார் பிரகடனம்-2023’ என்பதுடன் தொடர்புடைய துறை எது?

அ. இணையவெளி பாதுகாப்பு

ஆ. பயங்கரவாத எதிர்ப்பு

இ. தட்பவெப்பநிலை மாற்றம் 🗹

ஈ. கல்வி

9. ‘மாறும் தட்பவெப்பநிலையில் இடம்பெயர்ந்த குழந்தைகள்’ என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. NITI ஆயோக்

ஆ. UNICEF 🗹

இ. CRY

ஈ. ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல்

10. இந்திய வான்படைக்கு இலகுரக போர் விமானமான தேஜாஸ் போர் விமானத்தை வழங்குகிற அமைப்பு எது?

அ. DRDO

ஆ. HAL 🗹

இ. BDL

ஈ. BHEL

11. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற கிஷோர் குமார் ஜெனா சார்ந்த விளையாட்டு எது?

அ. குத்துச்சண்டை

ஆ. ஈட்டியெறிதல் 🗹

இ. துப்பாக்கிச் சுடுதல்

ஈ. டென்னிஸ்

12. 2023ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற ஜான் ஃபோஸ் சார்ந்த நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. ஜெர்மனி

இ. நார்வே 🗹

ஈ. ஆஸ்திரேலியா

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இராஜஸ்தான் மாநிலத்தில் சூரிய ஒளி மின்னழுத்த திட்டம் அமைக்க NLCஉடன் ஒப்பந்தம்.

நெய்வேலி NLC இந்தியா நிறுவனம் ராஜஸ்தான் ராஜ்ய வித்யுத் நிகாம் நிறுவனத்திலிருந்து 810 மெகாவாட் சூரிய ஒளி மின்னழுத்த மின் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.

இந்தியாவில் ஒரு ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை நிறுவிய முதல் மத்திய பொதுத்துறை நிறுவனம் NLC இந்தியா நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தற்போது இந்தியா முழுவதும் 2 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை உருவாக்கி வருகிறது. இந்தத்திட்டம் உட்பட 2030-க்குள் 6 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்திறனை அடையும் இலக்குடன் அந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

2. கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை.

தமிழக கடலோரப் பகுதிகளில், ‘சாகர் கவாச்’ என்ற பெயரில் இரண்டு நாள் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது.

மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு கடல்வழியாக புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இச்சம்பவத்துக்கு பின் நாடு முழுவதும் கடலோரப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக கடலோர மாவட்டங்களில் 6 மாதங்களுக்கு ஒரு முறை ‘சாகர் கவாச்’ என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை காவல்துறையினரால் நடத்தப்படுகிறது. இதன்மூலம் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Exit mobile version