Tnpsc Current Affairs in Tamil – 11th & 12th January 2024

1. அண்மையில் புவிசார் குறியீடுபெற்ற சிவப்பு எறும்புச் சட்னி சார்ந்த மாநிலம் எது?

அ. ஒடிஸா

ஆ. பீகார்

இ. கோவா

ஈ. ஜார்கண்ட்

2. 2024இல் UNESCOஇன் உலக பாரம்பரியக் குழுவின் 46ஆவது அமர்வை நடத்தவுள்ள நாடு எது?

அ. இங்கிலாந்து

ஆ. சீனா

இ. இந்தியா

ஈ. நேபாளம்

3. ஸ்கைட்ராக்ஸின் மதிப்புமிக்க விருதுகளின்படி, 2023ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ள விமான நிலையம் எது?

அ. சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம்

ஆ. கத்தாரின் ஹமாத் சர்வதேச விமான நிலையம்

இ. இன்சியான் சர்வதேச விமான நிலையம்

ஈ. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், புது தில்லி

4. பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாட்டு அமைப்பால் (DRDO) அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட தாக்கு துப்பாக்கியின் பெயர் என்ன?

அ. அக்னி

ஆ. நிர்பய்

இ. உக்ரம்

ஈ. தேஜஸ்

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சந்துபி திருவிழா கொண்டாடப்படுகிற மாநிலம் எது?

அ. அஸ்ஸாம்

ஆ. கோவா

இ. கேரளா

ஈ. மணிப்பூர்

6. அதிபர் இம்மானுவேல் மக்ரோனால் பிரான்சின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. ஸ்டெக்கா ஃபோர்டு

ஆ. கேப்ரியல் அட்டல்

இ. பிராங்கோயிஸ் ஹாலண்ட்

ஈ. நிக்கோலஸ் சார்கோசி

7. இந்திய கடற்படையின் P-8I விமானம் குவாமில் நடந்த எந்த இராணுவப்பயிற்சியில் பங்கேற்றது?

அ. பயிற்சி – சீ டிராகன் 24

ஆ. ஆபரேஷன் பாலைவனப் புயல்

இ. பயிற்சி – சிவப்புக் கொடி

ஈ. ஆபரேஷன் நெப்டியூன் ஸ்பியர்

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பிலிகிரி அரங்கசுவாமி திருக்கோவில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. மத்திய பிரதேசம்

இ. பீகார்

ஈ. கர்நாடகா

9. அண்மையில் கடற்படைத் தளபதியால் அறிமுகப்படுத்தப்பட்ட உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆளில்லா வான்வழி வாகனத்தின் பெயரென்ன?

அ. திரிஷ்டி 10 ‘ஸ்டார்ஷிப்’

ஆ. திரிஷ்டி 10 ‘ஸ்கைராக்கெட்’

இ. திரிஷ்டி 10 ‘ஸ்டார்லைனர்’

ஈ. திரிஷ்டி 10 ‘ஸ்டெல்லர்’

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற INS கப்ரா, கீழ்காணும் எந்த வகையான கடற்படைக் கப்பலாகும்?

அ. விமானந்தாங்கிக் கப்பல்

ஆ. நீர்மூழ்கிக்கப்பல்

இ. கடற்புற ரோந்துக்கப்பல்

ஈ. அழிப்பான்

11. அண்மையில் மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ISRO மற்றும் மொரிஷியஸ் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு கவுன்சில் (MRIC) ஆகியவற்றை உள்ளடக்கிய விண்வெளி ஒத்துழைப்பு தொடர்பானது எது?

அ. கூட்டு ஆராய்ச்சி வசதியை நிறுவுதல்

ஆ. செவ்வாய்க் கோளுக்கு மனிதர்களை அனுப்புதல்

இ. சிறிய செயற்கைக்கோளை கூட்டாக உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஈ. சர்வதேச விண்வெளி முகமையை உருவாக்குதல்

12. இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான நிகழ்வான விங்ஸ் இந்தியா-2024 நடைபெறும் இடம் எது?

அ. பேகம்பேட்டை விமான நிலையம், ஹைதராபாத்

ஆ. வாரங்கல் விமான நிலையம், ஹைதராபாத்

இ. இராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம், ஹைதராபாத்

ஈ. ஸ்ரீ சத்ய சாய் விமான நிலையம், ஆந்திர பிரதேசம்

13. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற XRISM செயற்கைக்கோள் திட்டத்தின் முதன்மை நோக்கம் யாது?

அ. வெள்ளியின் மேகங்களை ஆராய்வது

ஆ. பூமியின் மேற்பரப்பை வரைபடமாக்குதல்

இ. X–கதிர் அண்டவெளியை கூர்நோக்குதல்

ஈ. காலநிலை மாற்றத்தைக் கண்காணித்தல்

14. அண்மையில் குதிரையேற்ற விளையாட்டுக்காக அர்ஜுனா விருதைப் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி யார்?

அ. P V சிந்து

ஆ. மேரி கோம்

இ. சாய்னா நேவால்

ஈ. திவ்யகிருதி சிங்

15. 2024 ஜன.10-18 வரை, ‘ஸ்டார்ட்அப் இந்தியா இன்னோவேஷன் வீக்-2024’ஐ நடத்தவுள்ள துறை எது?

அ. உணவு மற்றும் பொது வழங்கல் துறை

ஆ. தொழிற்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை

இ. நிதி சேவைகள் துறை

ஈ. கனரக தொழிற்துறை

16. ‘SVAMITVA’ திட்டத்தின்மூலம் நில நிர்வாக அமைப்புகளை டிஜிட்டல்மயமாகும் முயற்சிகளுக்கான செயல் விளக்கத்திற்காக, மதிப்புமிக்க முதற்பரிசை வென்ற மத்திய அமைச்சகம் எது?

அ. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

ஆ. நிதி அமைச்சகம்

இ. வெளியுறவு அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

17. எந்த இரு நாட்டு அறிவியலாளர்கள், இந்தியாவின் 43ஆவது அண்டார்டிக் பயணத்தில் இணைந்துள்ளனர்?

அ. சிங்கப்பூர் மற்றும் மொரிஷியஸ்

ஆ. வங்கதேசம் மற்றும் பூட்டான்

இ. மொரீஷியஸ் மற்றும் வங்கதேசம்

ஈ. நேபாளம் மற்றும் மியான்மர்

18. 2024 – ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?

அ. 83ஆவது

ஆ. 80ஆவது

இ. 82ஆவது

ஈ. 90ஆவது

19. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, Polygonum Chaturbhujanum’ சார்ந்த இனம் எது?

அ. இருவாழ்விகள்

ஆ. தாவரங்கள்

இ. பூஞ்சை

ஈ. விலங்குகள்

20. புதிய வானியல் செயற்கைக்கோளான ஐன்ஸ்டீன் புரோபை ஏவிய நாடு எது?

அ. சீனா

ஆ. இந்தியா

இ. ரஷ்யா

ஈ. இங்கிலாந்து

21. பாரம்பரிய நாட்டுப்புற நடன வடிவமான, ‘யக்ஷகானா’ சார்ந்த மாநிலம் எது?

அ. ஆந்திர பிரதேசம்

ஆ. கர்நாடகா

இ. கேரளா

ஈ. பீகார்

22. நாடு முழுவதும் மீன் நோய்களைக் கண்காணிப்பதற்காக, நீர்வாழ் உயிரிகளுக்கான தேசிய கண்காணிப்புத் திட்டத்தால் (NSPAAD) உருவாக்கப்பட்ட மொபைல் செயலியின் பெயர் என்ன?

அ. Report Fish Disease

ஆ. Disease Alert

இ. FishCare

ஈ. AquaTracker

23. இந்தியாவின் எந்தப்பகுதியில், “இ-கவர்னன்ஸ்” என்ற கருப்பொருளில் பிராந்திய மாநாடு தொடங்கப்படுகிறது?

அ. கட்ச்

ஆ. கௌகாத்தி

இ. ஜெய்ப்பூர்

ஈ. பம்பாய்

24. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஸ்ரீமந்திர் பரிக்கிரமா திட்டமானது கீழ்காணும் எந்தத் திருக்கோவிலின் நிர்வாகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது?

அ. பூரி ஜகந்நாதர் கோவில்

ஆ. மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

இ. காசி விஸ்வநாதர் கோவில்

ஈ. பத்மநாபசுவாமி கோவில்

25. இந்தியக் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் கைகளால் அர்ஜுனா விருது பெற்ற இந்திய பந்து வீச்சாளர் யார்?

அ. முகமது ஷமி

ஆ. ஜஸ்பிரித் பும்ரா

இ. அர்ஷ்தீப் சிங்

ஈ. தீபக் சாஹர்

26. சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் தேசிய இளையோர் நாள் (National Youth Day) கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. ஜனவரி.12

ஆ. ஜனவரி.09

இ. ஜனவரி.13

ஈ. ஜனவரி.05

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. முதல் உள்நாட்டு உயர்திறன் டிரோன் கடற்படையிடம் ஒப்படைப்பு.

நடுத்த உயரத்தில் நீண்டநேரம் செயல்படக் கூடிய முதல் உள்நாட்டு ஆளில்லா விமானமான, ‘திருஷ்டி 10’ இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. அனைத்துப் பருவகாலங்களிலும் செயல்படும் திறன்கொண்ட இந்த டிரோனை, அதானி டிஃபன்ஸ் & ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தொடர்ச்சியாக 36 மணி நேரம் செயல்படும் இந்த டிரோன், 450 கிலோ எடையைச் சுமந்துசெல்லும் திறனுடையது.

2. சரிவைக்கண்ட சர்க்கரை உற்பத்தி!

நடப்பு 2023-24 சர்க்கரைப் பருவத்தில் நாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தி 30.5 கோடி டன்னாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முந்தைய 2022-23 சர்க்கரைப் பருவத்தில் ஒட்டுமொத்த சர்க்கரை உற்பத்தி 33.09 கோடி டன்னாக இருந்தது. நாட்டில் அதிக அளவில் சர்க்கரை உற்பத்தி செய்யும் முதல் மூன்று மாநிலங்களில் மகாராஷ்டிரத்திலும், கர்நாடகாத்திலும் நடப்பு சர்க்கரைப் பருவத்தின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் உற்பத்தி குறைவாகவே இருந்தது.

3. விண்வெளி ஆய்வைத் தொடங்கியது, ‘XPoSat’ செயற்கைக்கோள்!

விண்மீன் வெடிப்பில் வெளியாகும் பேரொளியை இந்தியாவின், ‘XPoSat’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஆய்வு செய்துள்ளதாக ISRO தெரிவித்துள்ளது. கருந்துளை, ஊடுகதிர் தன்மைகள், நியூட்ரான் விண்மீன்கள் உள்ளிட்ட விண்வெளி நிகழ்வுகளை ஆய்வுசெய்வதற்காக, ‘XPoSat’ என்னும் செயற்கைக்கோளை PSLV C-58 ஏவுகலம் மூலம் கடந்த 1ஆம் தேதி விண்ணில் செலுத்தியது ISRO.

பூமியிலிருந்து சுமார் 650 கிமீ தொலைவுகொண்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட, ‘XPoSat’ செயற்கைக் கோள்மூலம் காசியோபியா-ஏ என்ற விண்மீன் வெடிப்பின் (சூப்பர் நோவா) துகள்களில் இருந்து வெளிப்படும் ஒளியானது படம்பிடிக்கப்பட்டுள்ளதாக ISRO அறிவித்துள்ளது.

‘XPoSat’ மொத்தம் 469 கிகி எடைகொண்டது. இதில் XSPECT (X-ரே ஸ்பெக்ட்ரோகிராபி), POLIX (எக்ஸ்ரே போலரி மீட்டர்) ஆகிய இரண்டு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றை முறையே பெங்களூரில் உள்ள U R இராவ் செயற்கைக்கோள் மையமும், ராமன் ஆராய்ச்சி நிறுவனமும் உருவாக்கியுள்ளன. POLIX கருவி விண்வெளியில் உள்ள கருந்துளை, நியூட்ரான் விண்மீன்களில் இருந்து வெளியேறும் ஊடு கதிர்களின் (X-ரே) துருவ முனைப்பு அளவு, கோணத்தை அளவிடுதல், விண்மீன் வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் நிலைகுறித்து ஆராயும். அதேபோன்று, XSPECT சாதனம் எக்ஸ் கதிர்களின் நீண்டகால செயல்பாடுகளை புரிந்துகொள்ளும் வகையில் அதன் நிறமாலை மற்றும் துருவப்படுத்தல் செயல்பாடுகளை கண்காணிக்கும்.

4. நாட்டின் தூய்மை நகரம் இந்தூர்: தொடர்ந்து 7ஆவது ஆண்டாகத் தேர்வு.

நாட்டின் தூய்மையான நகரமாக தொடர்ந்து 7ஆவது ஆண்டாக மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்தூருடன் சூரத் முதலிடத்திலும் நவி மும்பை 3ஆவது இடத்திலும் உள்ளன. நாட்டின் 4,447 நகர உள்ளாட்சி அமைப்புகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 12 கோடி மக்களிடம் ஆய்வுநடத்தப்பட்டது.

ஆந்திரத்தில் விசாகப்பட்டினம் 4ஆவது இடத்தில் உள்ளது. 1 இலட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகைகொண்ட தூய்மை நகரங்களில், மகாராஷ்டிரத்தின் சாஸ்வத், முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் சத்தீஸ்கரின் பதான், மகராஷ்டிரத்தின் லோனாவாலா 3ஆம் இடத்தில் உள்ளன. கங்கைக்கரையோர தூய்மை நகரங்களில் வாரணாசி முதலிடத்திலும், பிரயாக்ராஜ் 2ஆம் இடத்திலும் உள்ளன. தூய்மையான கன்டோன்மென்ட் வாரியமாக மத்திய பிரதேசத்தின் மோவ் கன்டோன்மென்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தூய்மைசார்ந்து சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரம் முதலிடத்திலும், மத்திய பிரதேசம் 2ஆம் இடத்திலும் சத்தீஸ்கர் 3ஆவது இடத்திலும் உள்ளன.

5. எண்ம முறையில் பயிர் அளவீட்டுப் பணி விரைவில் தொடக்கம்: தமிழ்நாடு அரசு.

எண்ம அடிப்படையிலான பயிர் அளவீட்டுப்பணி விரைவில் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. விவசாயிகளுக்கான பயிர்க்காப்பீடுபோன்ற திட்டங்கள் தகுதியான பயனாளிகளைச் சென்றடையும் வகையில் சாகுபடி பரப்புகளை எண்ம அடிப்படையில் அளவிட தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது.

6. கடலோர வளங்களை மீட்டெடுக்க, ‘நெய்தல் மீட்சி இயக்கம்’: தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

கடலோர வளங்களை மீட்டெடுத்து பாதுகாக்க, ‘நெய்தல் மீட்சி இயக்கம்’ தமிழ்நாடு அரசு சார்பில் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து, அரசின் நான்காவது திட்டமான தமிழ்நாட்டின் கடலோர வளங்களை மீட்பதற்காக நெய்தல் மீட்சி இயக்கம் தொடங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டின் பதினான்கு கடலோர மாவட்டங்களில், 1,076 கிமீ தூரத்தை மையமாகக்கொண்டு, அடுத்துவரும் 5 ஆண்டுகளில் உலக வங்கியின் நிதி உதவியுடன், ‘நெய்தல் மீட்சி இயக்கம்’ செயல்படுத்தப்படவுள்ளது.

இதில் கடற்கரையோர சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கம் மற்றும் கடலோரப்பகுதிகளில் மாசுக்கட்டுப்பாடு உள்ளிட்ட நான்கு முக்கிய கருப்பொருள்களை இத்திட்டம் கொண்டுள்ளது. மேலும், இந்தத் திட்டத்தின்கீழ் செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் பல்லுயிர் பாதுகாப்பு பூங்கா, நாகப்பட்டினம் மற்றும் சென்னையில் கடலாமை பாதுகாப்பு மையம், தஞ்சாவூர் மாவட்டம் மனோராவில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம், பள்ளிக்கரணை உள்ளிட்ட கடற்கரையோர ஈரநிலங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த முயற்சிகளால் கடற்கரையோர பல்லுயிர் பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 11 கடற்கரைகளை நீலக்கொடி கடற்கரைகள் என சான்றளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டத்தின்கீழ் மறுசுழற்சி செய்து பொருள்களை மீண்டும் பயன்படுத்துதல், நெகிழிக்கழிவுமேலாண்மை, சுற்றுச் சூழலுக்கு உகந்த உட்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் செயல்படுத்தப்படவுள்ளன.

Exit mobile version