Tnpsc Current Affairs in Tamil – 10th & 11th February 2024

1. ஆண்டுதோறும் உலக நீடித்த வளர்ச்சி உச்சிமாநாட்டை நடத்துகிற நிறுவனம் எது?

அ. ஆற்றல் மற்றும் வள நிறுவனம்

ஆ. உலக வங்கி

இ. சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிறுவனம்

ஈ. சுற்றுச்சூழல் கல்வி மையம்

2. அண்மையில், திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணத்தை அறிவித்த நகரம் எது?

அ. லக்னோ

ஆ. இந்தூர்

இ. தில்லி

ஈ. ஜெய்ப்பூர்

3. 2024ஆம் ஆண்டுக்கான இந்திய எரிசக்தி வாரத்தை, இந்தியப்பிரதமர், கீழ்காணும் எந்த மாநிலத்திலிருந்து தொடக்கிவைத்தார்?

அ. குஜராத்

ஆ. இராஜஸ்தான்

இ. மத்திய பிரதேசம்

ஈ. கோவா

4. எந்த ஆற்றின் கரையில், 390 ஆண்டுகள் பழமையான தீபஸ்தம்பம் (விளக்குத்தூண்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?

அ. கிருஷ்ணா ஆறு

ஆ. நொய்யல் ஆறு

இ. காவேரி ஆறு

ஈ. கோதாவரி ஆறு

5. ஏழாவது, ‘இந்தியப் பெருங்கடல் மாநாடு’ நடைபெற்ற நாடு எது?

அ. நியூசிலாந்து

ஆ. ரஷ்யா

இ. இந்தியா

ஈ. ஆஸ்திரேலியா

6. அண்மையில், மிகு குளிர் அணுக்களின் ஆய்வைக் கணிசமாக மேம்படுத்தும் புதிய பட-திருத்த வழிமுறையை வடிவமைத்துள்ள நிறுவனம் எது?

அ. வாழ்க்கை அறிவியல் நிறுவனம்

ஆ. இராமன் ஆராய்ச்சி நிறுவனம்

இ. உயிரி தொழில்நுட்ப நிறுவனம்

ஈ. தேசிய வைராலஜி நிறுவனம்

7. அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. குஜராத்

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. இராஜஸ்தான்

8. 2024 – தேசிய அறிவியல் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Women in Science

ஆ. Future of STI: Impact on Education Skills and Work

இ. Integrated Approach in S&T for Sustainable Future

ஈ. Indigenous Technologies for Viksit Bharat

9. அண்மையில் தொடங்கப்பட்ட, ‘சாரதி’ இணையதளத்துடன் தொடர்புடையது எது?

அ. பயிர்க்காப்பீடு தொடர்பான குறைகளைத் தீர்வு வழங்கும் ஹெல்ப்லைன்

ஆ. விவசாயப் பயிர்களை ஏற்றுமதி செய்யும் வசதி

இ. நிலப்பதிவு

ஈ. புதிய விவசாய தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல்களை விவசாயிகளுக்கு வழங்குதல்

10. கோக்போரோக் மொழியானது கீழ்க்காணும் எந்த மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மாநில மொழிகளுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது?

அ. மிசோரம்

ஆ. மணிப்பூர்

இ. அஸ்ஸாம்

ஈ. திரிபுரா

11. தச்சிகம் தேசிய பூங்கா அமைந்துள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ. தமிழ்நாடு

ஆ ஜம்மு & காஷ்மீர்

இ. கேரளா

ஈ. ஆந்திர பிரதேசம்

கடுமையான பனிப்பொழிவு காரணமாக, தச்சிகம் தேசிய பூங்காவின் மறுவாழ்வு மையத்தில் உள்ள இமயமலை கருப்புக் கரடிகள் தங்களது உறக்கநிலைக்கான சிறப்பு உணவைப் பெறுகின்றன. ஜம்மு & காஷ்மீரின் ஜபர்வான் மலைகளில் அமைந்துள்ள தச்சிகம் தேசிய பூங்கா, தால் ஏரியின் நீர்ப்பிடிப்பு மண்டலத்தின் பாதியை ஆக்கிரமித்து அமைந்துள்ளது. இது காஷ்மீர் கலைமான் மற்றும் ஆசிய கருப்புக் கரடிகளைக் கொண்டுள்ளது.

12. மீயொலி வேகத்தில் செல்லும் சிர்கான் எறிகணையை ஏவிய நாடு எது?

அ. ரஷ்யா

ஆ. இஸ்ரேல்

இ. உக்ரைன்

ஈ. சீனா

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இதுவரை 53 பாரத ரத்னா விருதாளர்கள்.

நடப்பு 2024ஆம் ஆண்டில் ஐவருக்கு ‘இந்திய மாமணி’ (பாரத இரத்னா) விருது வழங்கப்பட்டிருப்பதன்மூலம் பாரத ரத்னா விருதாளர்களின் எண்ணிக்கை 53ஆக உயர்ந்துள்ளது. பிகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூர், பாஜக முதுபெரும் தலைவர் L K அத்வானி, முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், பி வி நரசிம்ம இராவ், வேளாண் அறிவியலாளர் எம். எஸ். சுவாமிநாதன் ஆகிய 5 பேருக்கு நிகழாண்டில் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகவுயரிய விருதான பாரத ரத்னா ஓராண்டில் 5 பேருக்கு அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

கடந்த 1954ஆம் ஆண்டில் இந்திய அரசால் நிறுவப்பட்ட, ‘பாரத ரத்னா’ விருது, மக்கள் மேம்பாட்டுக்காக எந்தத் துறையிலும் அளப்பரிய சேவை அல்லது திறன்மிக்க செயல்பாட்டை நல்குவோரை அங்கீகரிப்பதாகும். இதற்கான பரிந்துரைகள் பிரதமரால் குடியரசுத்தலைவருக்கு வழங்கப்படுகின்றன.

முதல் விருது: கடந்த 1954ஆம் ஆண்டில் முதன்முறையாக, ‘பாரத ரத்னா’ விருது மூதறிஞர் இராஜாஜி, சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், சி. வி. இராமன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இந்தியக்குடியரசுத்தலைவர் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ், பதக்கம் ஆகியவை மட்டுமே உள்ளடக்கியது, ‘பாரத ரத்னா’ விருது என்பது குறிப்பிடத்தக்கது.

2. இந்தியாவின் மொத்த வாக்காளர்கள் 96.88 கோடி பேர்.

மக்களவைத் தேர்தலில் தற்போது வரை 96.88 கோடி மக்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version