Tnpsc Current Affairs in Tamil – 10th & 11th December 2023

1. UNESCOஆல் தொட்டுணர முடியா கலாச்சார பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள, ‘கர்பா’ சார்ந்த மாநிலம் எது?

அ. குஜராத் 🗹

ஆ. ஒடிசா

இ. மேற்கு வங்காளம்

ஈ. ஆந்திர பிரதேசம்

2. ஈராண்டுக்கு ஒருமுறை நடத்த திட்டமிடப்பட்டுள்ள முதல் இந்திய கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு நிகழ்ச்சி நடத்தப்படும் நகரம் எது?

அ. சென்னை

ஆ. புது தில்லி 🗹

இ. மைசூரு

ஈ. வாரணாசி

3. ‘ஹரித்சாகர்’ வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அமைச்சகம் எது?

அ. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் 🗹

ஆ. ஜல் சக்தி அமைச்சகம்

இ. எரிசக்தி அமைச்சகம்

ஈ. பாதுகாப்பு அமைச்சகம்

4. ‘The Global Climate 2011-2020: A Decade of Acceleration’ என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. UNEP

ஆ. WMO 🗹

இ. WEF

ஈ. IMF

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஜூட் பெல்லிங்ஹாம் சார்ந்த விளையாட்டு எது?

அ. கிரிக்கெட்

ஆ. கால்பந்து 🗹

இ. டென்னிஸ்

ஈ. சதுரங்கம்

6. பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷனின் (பிபிசி) புதிய தலைவர் யார்?

அ. சமீர் ஷா 🗹

ஆ. லீனா நாயர்

இ. சாந்தனு நாராயண்

ஈ. அரவிந்த் கிருஷ்ணா

7. டைம் இதழின், 2023ஆம் ஆண்டிற்கான, ‘ஆண்டின் சிறந்த தடகள வீரர்’ யார்?

அ. நீரஜ் சோப்ரா

ஆ. லியோனல் மெஸ்ஸி 🗹

இ. சிமோன் பைல்ஸ்

ஈ. டைகர்வுட்ஸ்

8. ரூபாய் (`) ஏற்றுமதி கடனுக்கான வட்டி சமன்படுத்தும் திட்டத்தைத் தொடங்கிய மத்திய அமைச்சகம் எது?

அ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் 🗹

ஆ. MSME அமைச்சகம்

இ. வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகம்

ஈ. எஃகு அமைச்சகம்

9. கீழ்காணும் எந்த மாநிலத்தின் முதலமைச்சராக அனுமுலா ரேவந்த் பதவியேற்றார்?

அ. ஜார்கண்ட்

ஆ. குஜராத்

இ. ஒடிசா

ஈ. தெலங்கானா 🗹

10. புகழ்பெற்ற, ‘கேசவானந்த பாரதி தீர்ப்பு’ வழங்கப்பட்ட ஆண்டு எது?

அ. 1973 🗹

ஆ. 1976

இ. 1992

ஈ. 1998

11. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற மெஃபெனாமிக் அமில மாத்திரை என்பது எதற்கு பயன்படுத்தப்படுகிறது?

அ. நுண்ணுயிர்க்கொல்லி

ஆ. வலி நிவாரணி 🗹

இ. கிருமி நாசினி

ஈ. நோயெதிர் திறனொடுக்கி

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. உலகில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப விதிகளை வகுத்தது ஐரோப்பிய ஒன்றியம்.

உலகிலேயே முதல்முறையாக AI தொழில்நுட்பத்துக்கான விரிவான விதிகளை வகுத்த முதல் கண்டம் ஐரோப்பிய ஒன்றியம் ஆகும். AI தொழில்நுட்பத்துக்கான விரிவான விதிகள் குறித்த முதல் வரைவை ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பு கடந்த 2021இலேயே வெளியிட்டது. தற்போது ஆக்கமுறை AI தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துவரும் நிலையில் புதிதாக வகுக்கப்பட்டுள்ள விதிகள் உலகிற்கே முன்னோடியாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. குன்னூரில் முப்படையின் முன்னாள் தலைமைத்தளபதி பிபின் ராவத் நினைவுத்தூண் திறப்பு.

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படையின் முன்னாள் தலைமைத்தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 14 பேரின் நினைவாக நஞ்சப்பசத்திரம் பகுதியில் நினைவுத்தூண் (ஸ்மிருத்திகா) நிறுவப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. இதனை ஊட்டியின் வெலிங்டனில் உள்ள மதராஸ் படைப்பிரிவு மையம் கட்டியுள்ளது.

Exit mobile version