General Tamil Model Question Paper 3

General Tamil Model Question Paper 3

General Tamil Model Question Paper 3: Tnpsc Aspirants can use this opportunity to check General Tamil Model Question Papers For Tnpsc. General Tamil Model Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Model Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

41. பொருத்தமான விடையைக் கண்டறி:

“தமிழுக்குக் கதி” என்று போற்றப்படும் நூல்கள்

(அ) பாட்டும் தொகையும்

(ஆ) சிலம்பும் மேகலையும்

(இ) இராமாயணமும் குறளும்

(ஈ) பாரதமும் இராமாயணமும்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) இராமாயணமும் குறளும்

தமிழுக்குக் கதி என்று போற்றப்படும் நூல்கள்: க-கம்பராமாயணம், தி-திருக்குறள். மேற்கண்ட கூற்றினைக் கூறியவர் செல்வ கேசவராய முதலியார் ஆவார்.

42. பொருத்துக:

பட்டியல்I பட்டியல் II

(அ) கண் வனப்பு – 1. செல்லாமை

(ஆ) எண் வனப்பு – 2. இத்துணையாம்

(இ) பண் வனப்பு – 3. கண்ணோட்டம்

(ஈ) கால் வனப்பு – 4. கேட்டார் நன்றென்றல்

குறியீடு:

அ ஆ இ ஈ

(அ) 3 2 4 1

(ஆ) 3 1 2 4

(இ) 1 2 4 3

(ஈ) 2 3 4 1

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) 3 2 4 1

சிறுபஞ்சமூலம்: கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை

எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் – பண்வனப்புக்

கேட்டார்நன் றென்றல், கிளர்வேந்தன் தன்னாடு

வாட்டான்நன் றென்றல் வனப்பு. – காரியாசான்

43. ஆற்றுப்படுத்தல் என்பதன் பொருள்

(அ) அன்பு காட்டுதல்

(ஆ) ஆறுதல் கூறுதல்

(இ) வழிகாட்டுதல்

(ஈ) ஆதரவு தருதல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) வழிகாட்டுதல்

ஆற்றுப்படுத்துதல்-வழிகாட்டுதல். பத்துப்பாட்டு நூல்களுள் திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை (மலைப்படுகடாம்), ஆகிய நூல்கள் மன்னரிடம் பரிசில் பெற்ற ஒருவர் மற்றொருவரை மன்னரிடம் ஆற்றுப் படுத்துவதாக (வழிகாட்டுவதாக) அமைந்துள்ளன.

44. ஐஞ்சிறுகாப்பியம்-இவற்றுள் பொருந்தா நூலைக் கண்டறி.

(அ) உதயண குமார காவியம்

(ஆ) இராவண காவியம்

(இ) நாக குமார காவியம்

(ஈ) யசோதர காவியம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) இராவண காவியம்

ஐஞ்சிறுகாப்பியங்கள்: சூளாமணி, நீலகேசி, உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்.

45. பொருத்துக:

பட்டியல் I – பட்டியல் II

(அ) புள் – 1. விரைவு

(ஆ) குலவு – 2. கலப்பை

(இ) மேழி – 3. அன்னம்

(ஈ) ஒல்லை – 4. விளங்கும்

குறியீடுகள்:

அ ஆ இ ஈ

(அ) 2 4 1 3

(ஆ) 4 1 2 3

(இ) 3 4 2 1

(ஈ) 3 1 4 2

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) 3 4 2 1

46 பொருந்தாத இணையைக் கண்டறிய:

(அ) Mishap–விபத்து

(ஆ) Miserable-துக்ககரமான

(இ) Mislay-தவறான சொல்

(ஈ) Misdeed-கெட்டசெயல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) Mislay-தவறான சொல்

Mislay- தவறான இடத்தில் வைத்தல்

47. “வாழ்த்துவோம்” என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எழுதுக:

(அ) வாழ்

(ஆ) வாழ்த்துதல்

(இ) வாழ்த்து

(ஈ) வாழ்த்தும்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) வாழ்

வாழ்-வேர்ச்சொல். வாழ்த்துதல்-தொழிற் பெயர். வாழ்த்திய-பெயரெச்சம். வாழ்த்தி-வினையெச்சம்.

48. பின்வரும் இரண்டினும் பொருள் பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு:

கழை களை

(அ) கரும்பு அழகு

(ஆ) மூங்கில் காந்தி

(இ) வேய் சீலை

(ஈ) கழி அகற்று

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) வேய் சீலை

49. சரியான பொருள் தருக: “இந்து”

(அ) நிலவு

(ஆ) துன்பம்

(இ) படகு

(ஈ) தலைவன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) நிலவு

General Tamil Study Materials

General Tamil Model Questions Pdf

50. தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து” எனக் கூறியவர்

(அ) காந்தியடிகள்

(ஆ) பேரறிஞர் அண்ணா

(இ) மு.வரதராசனார்

(ஈ) பெரியார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) மு.வரதராசனார்

51. “மயில்” உரிய மரபுச் சொல்லை எழுதுக:

(அ) கரையும்

(ஆ) பிளிறும்

(இ) அலறும்

(ஈ) அகவும்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) அகவும்

காகம்-கரையும், யானை-பிளிறும், ஆந்தை-அலறும், மயில்-அகவும்

52. “வந்தான்” என்னும் வினைமுற்று —– என வினையாலணையும் பெயராய் வரும்

(அ) வருவான்

(ஆ) வாரான்

(இ) வந்தவன்

(ஈ) வந்த

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) வந்தவன்

வருவான்-எதிர்கால வினைமுற்று. வாரான்-எதிர்மறை வினைமுற்று. வந்தவன்-வினையாலணையும் பெயர். வந்த–பெயரெச்சம்

53. ஆசிரியப்பாவின் ஈற்றுச்சீர் —- முடிவது சிறப்பு

(அ) ஆகாரத்தில்

(ஆ) ஏகாரத்தில்

(இ) ஓகாரத்தில்

(ஈ) ஈகாரத்தில்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) ஏகாரத்தில்

ஆசிரியப்பாவின் ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு. எனினும் ஓ, ஈ, ஆய், என், ஐ ஆகிய ஓசைகளிலும் முடியும்.

54.. “தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின்”

கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?

(அ) எதுகை மட்டும் வந்துள்ளது

(ஆ) மோனை மட்டும் வந்துள்ளது

(இ) எதுகை, மோனை, இயைபு வந்துள்ளன

(ஈ) எதுகையும், மோனையும் வந்துள்ளன

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) மோனை மட்டும் வந்துள்ளது

55. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்

(அ) தரங்கம், தையல், திட்பம், தோடு

(ஆ) தையல், தோடு, திட்பம், தரங்கம்

(இ) தரங்கம், திட்பம், தையல், தோடு

(ஈ) தரங்கம், தையல், தோடு, திட்பம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) தரங்கம், திட்பம், தையல், தோடு

56. பொருத்துக:

புலவர் நூல்

(அ) உமறுப்புலவர் – 1. தொன்னூல் விளக்கம்

(ஆ) கம்பர் – 2. நரிவிருத்தம்

(இ) திருத்தக்கதேவர் – 3. சிலை எழுபது

(ஈ) வீரமாமுனிவர் – 4. முதுமொழிமாலை

குறியீடுகள்:

(அ) (ஆ) (இ) (ஈ)

(அ) 4 2 3 1

(ஆ) 4 3 2 1

(இ) 3 1 4 2

(ஈ) 2 4 1 3

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) 4 3 2 1

57. “உறுமிடத் துதவா உவர்நிலம்” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

(அ) புறநானூறு

(ஆ) அகநானூறு

(இ) ஐங்குறுநூறு

(ஈ) திருக்குறள்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) புறநானூறு

புறநானூறு

அறுகுளத் துகுத்து மகல்வயற் பொழிந்தும்

உறுமிடத் துதவா துவர்நில மூட்டியும்

வரையா மரபின் மாரி போலக்

கடாஅ யானைக் கழற்கால் பேகன்

கொடைமடம் படுத லல்லது

படைமடம் படான்பிறர் படைமயக் குறினே. – பரணர். மேற்கண்ட பாடல் வையாவிக் கோப்பெரும் பேகன் என்னும் குறுநில மன்னனை பரணர் புகழ்ந்து பாடியதாகும்

58. திரு.வி.க. எந்த நாளிதழ் ஆசிரியராக பணியாற்றினார்?

(அ) தேசபக்தன்

(ஆ) தென்றல்

(இ) இந்தியா

(ஈ) சுதேசமித்திரன்

விடை மற்றும் விளக்கம்

(அ) தேசபக்தன்

விளக்கம்:

திரு.வி.க.தேசபக்தன் என்ற பத்திரிகையில் 2 ½ ஆண்டுகள் ஆசியரியராகப் பணிபுரிந்தார். பின்னா திராவிடன், நவசக்தி ஆகிய பத்திரிகைகளிலும் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

59. “பொறு” என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரரைத் தேர்ந்தெடு,

(அ) பொறுத்தான்

(ஆ) பொறுத்து

(இ) பொறுத்தல்

(ஈ)பொறுத்தவர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ)பொறுத்தவர்

பொறு-வேர்ச்சொல். பொறுத்தான்-வினைமுற்று. பொறுத்து-வினையெச்சம். பொறுத்தல்-தொழிற்பெயர். பொறுத்தவர்-வினையாலணையும் பெயர்.

Exit mobile version