General Tamil Model Question Paper 2

General Tamil Model Question Paper 2

General Tamil Model Question Paper 2: Tnpsc Aspirants can use this opportunity to check General Tamil Model Question Papers For Tnpsc. General Tamil Model Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Model Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

21. “நன்மை” என்பது

(அ) பொருட்பெயர்

(ஆ) சினைப்பெயர்

(இ) பண்புப்பெயர்

(ஈ) தொழிற்பெயர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பண்புப்பெயர்

22. “நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்” என்று பாடத் தொடங்கிய புலவர் யார்?

(அ) கம்பர்

(ஆ) கபிலர்

(இ) இளங்கோவடிகள்

(ஈ) சீத்தலைச் சாத்தனார்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) இளங்கோவடிகள்

கண்ணகியின் வரலாற்றை சீத்தலை சாத்தனார் மூலம் அறிந்த இளங்கோவடிகள், “சிலப்பதிகாரம்” என்னும் பெயரால் நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்” என்று கூறினார்

23. தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் யார்?

(அ) பரிதிமாற் கலைஞர்

(ஆ) மு.வரதராஜன்

(இ) தேவநேயப் பாவாணர்

(ஈ) புதுமைப்பித்தன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) தேவநேயப் பாவாணர்

24. நிகண்டுகளில் மிகப் பழமையானது ——–

(அ) சேந்தன் திவாகரம்

(ஆ) சூடாமணி நிகண்டு

(இ) அகராதி

(ஈ) இதில் எதுவுமில்லை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) சேந்தன் திவாகரம்

“திவாகர நிகண்டு” என்னும் நூல் கி.பி.8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திவாகர் முனிவரால் இயற்றப்பட்டது. அக்காலத்தில் இருந்த “சேந்தன்” என்னும் அரசனின் வேண்டுகோளுக்கு இணங்க இயற்றப்பட்டதால் இந்நூல் “சேந்தன் திவாகரம்” எனப்படுகிறது. தமிழில் இன்றுள்ள திகண்டுகளில் இதுவே காலத்தால் முந்தையது. “சூடாமணி நிகண்டு” 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மண்டலபுருடர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது.

25. பொருளறிந்து பொருத்துக:

அ. ஓ – 1. கோபம்

ஆ. மா – 2. சோலை

இ. கா – 3. நீர் தாங்கும் பலகை

ஈ. தீ – 4. திருமகள்

குறியீடுகள்:

அ ஆ இ ஈ

(அ) 2 4 1 3

(ஆ) 1 3 4 2

(இ) 3 4 2 1

(ஈ) 4 1 3 2

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) 3 4 2 1

26. “முருகு பொருநராறு பாணிரண்டு முல்லை”

இத்தொடரில் “பாணிரண்டு” என்ற தொடரால் குறிக்கப்படும் நூல்கள் எவை?

(அ) அகநானூறு, புறநானூறு

(ஆ) முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு

(இ) திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை

(ஈ) சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை

பத்துப்பாட்டு எவையெவை என விளங்கும் வெண்பா,

“முருகுபொருநராறு பாணிரண்டு முல்லை

பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய

கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்

பாலை கடாத தொடும் பத்து”

இப்பாடலில் “முருகு” என்பது திருமுருகாற்றுப்படை, பொருநராறு என்பது பொருநராற்று படை, பாணிரண்டு என்பவை சிறுபாணாற்றுப்படை மற்றும் பெரும்பாணாற்றுப்படை “கடாம்” என்பது மலைபடுகடாம் ஆகியவற்றை குறிக்கின்றன. மேலும் மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநெல்வாடை ஆகியவையும் பத்துப்பாட்டு நூல்களாகும்

27. அகராதி என்னும் சொல்லை முதன் முதலாக கையாண்டவர் யார்?

(அ) திருமூலர்

(ஆ) வீரமாமுனிவர்

(இ) திருநாவுக்கரசர்

(ஈ) கம்பர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) திருமூலர்

28. பொருத்துக:

அ. Fanfare – 1. இணக்கமுள்ள

ஆ, Fangle – 2. வீட்டுப்புறா

இ. Fantail – 3. எக்காள முழக்கம்

ஈ. Facile – 4. நாகரிகம்

குறியீடுகள்:

அ ஆ இ ஈ

(அ) 3 4 2 1

(ஆ) 4 1 3 2

(இ) 2 3 4 1

(ஈ) 1 4 2 3

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) 3 4 2 1

29. திருக்குறளை நாற்பதாண்டுகள் படித்துச் சுவைத்த போப், அதனை ஆங்கிலத்தில் எந்த ஆண்டு மொழிபெயர்த்து வெளியிட்டார்?

(அ) 1786

(ஆ) 1858

(இ) 1808

(ஈ) 1886

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) 1886

ஜி.யூ.போப் அவர்கள் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1886-இல் வெளியிட்டார்.

General Tamil Study Materials

General Tamil Model Questions Pdf

30. வருக-என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க:

(அ) வினையெச்சம்

(ஆ) உருவகம்

(இ) உரிச்சொல் தொடர்

(ஈ) வியங்கோள் வினைமுற்று

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) வியங்கோள் வினைமுற்று

க, இய, இயர் என்ற விகுதிகள் பெற்று வரும் சொற்கள் வியங்கோள் வினைமுற்றாகும்.

31. பொருந்தாத தொடரைக் குறிப்பிடுக:

(அ) கலம்பகம்-பதினெட்டு உறுப்புகள்

(ஆ) சிற்றிலக்கியங்கள்-தொண்ணூற்றாறு

(இ) பிள்ளைத்தமிழ்-பத்துப்பருவங்கள்

(ஈ) பரணி-100 தாழிசைகள்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) பரணி-100 தாழிசைகள்

இரண்டடித் தாழிசையால் பாடப்படுவது பரணி இலக்கியமாகும்.

32. பின்வரும் தொடர்களில் இராமலிங்க அடிகளார் கூறியவை

(அ) நான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன்

(ஆ) வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே

(இ) பெண்களே சமூகத்தின் கண்கள்

(ஈ) சமத்துவத்தின் மறுபெயரே மனிதநேயம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே

கூற்று கூறியவர்

நான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன் திரு.வி.க

வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே இராமலிங்க அடிகளார்

பெண்களே சமூகத்தின் கண்கள் ஈ.வெ.ரா

சமத்துவத்தின் மறுபெயரே மனிதநேயம் அம்பேத்கர்

33. பின்வரும் சொற்களுள் குற்றியலுகரம் அல்லாத சொல்லைக் கண்டறிக:

(அ) மார்பு

(ஆ) வரகு

(இ) மடு

(ஈ) மாசு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) மாசு

மார்பு, வரகு, மாசு-குற்றியலுகரங்கள். மடு-முற்றியலுகரம்

34. சித்துகளின் எண்ணிக்கை

(அ) பன்னிரண்டு

(ஆ) பதினெட்டு

(இ) பத்து

(ஈ) எட்டு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) எட்டு

சித்துகளின் எண்ணிக்கை 8.

அணிமா – அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்

மகிமா – மலையைப் போல் பெரிய தேகத்தை அடைதல்

இலகிமா -காற்றைப்போல் இலேசாக மாறுதல்

கரிமா- மலைகளாலும் காற்றாலும் அசைக்க முடியாத அளவு கனமாக இருத்தல்

பிராப்தி – மனத்தினால் நினைத்த யாவற்றையும் அடைதல்

பிராகாமியம் – தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல்

ஈசத்துவம் – நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்துதல்

வசித்துவம் – அனைத்தையும் தன் வசப்படுத்துதல்

35. அடிவரையறை அறிந்து சரியான விடையைக் குறிப்பிடுக:

(1) 3-6 (2) 4-8 (3) 9-12 (4) 13-31

(அ) ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு

(ஆ) அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு

(இ) குறுந்தொகை, ஐங்குறுநூறு, நற்றிணை, அகநானூறு

(ஈ) நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு

ஐங்குறுநூறு-3-6 அடி. குறுந்தொகை- 4-8 அடி. நற்றிணை- 9-12 அடி. அகநானூறு- 13-31 அடி

36. தன்வினையைத் தேர்ந்து எழுதுக:

(அ) அப்பூதி அடிகள் நான்மறை கற்கவில்லை

(ஆ) அப்பூதி அடிகள் நான்மறை கற்பித்தார்

(இ) அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்

(ஈ) அப்பூதி அடிகள் நான்மறை கற்றாரா?

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்

அப்பூதி அடிகள் நான்மறை கற்கவில்லை – எதிர்மறை வாக்கியம்

அப்பூதி அடிகள் நான்மறை கற்பித்தார் – பிறவினை வாக்கியம்

அப்பூதி அடிகள் நான்மறை கற்றார் – தன்வினை வாக்கியம்

அப்பூதி அடிகள் நான்மறை கற்றாரா? – வினா வாக்கியம்

37. பொருத்துக

பட்டியல் I – பட்டியல் II

அ. பேதையர் நட்பு – 1. உடுக்கை இழந்தகை

ஆ. பண்புடையார் தொடர்பு – 2. வளர்பிறை

இ. அறிவுடையார் நட்பு – 3. நவில் தோறும்

ஈ. இடுக்கண் களையும் நட்பு – 4. தேய்பிறை

குறியீடுகள்:

அ ஆ இ ஈ

(அ) 4 3 2 1

(ஆ) 3 4 2 1

(இ) 4 3 1 2

(ஈ) 1 2 3 4

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) 4 3 2 1

பேதையார் நட்பு தேய்பிறை போல் தேய்ந்து போகும் தன்மையுடையது. அறிவுடையார் நட்பு வளர்பிறை போல் வளரும் தன்மையுடையது. பண்புடையார் நட்பு நூலின் நற்பொருள் கற்க கற்க இன்பம் தருவதைப் போன்றது. உடை நெகிழ்ந்தவனது கை உடனே உதவி மானத்தைக் காப்பது போல நண்பனுக்கு துன்பம் வந்தால் அப்பொழுதே சென்று துன்பத்தை விரைந்து நீக்குவதுதான் சிறந்த நட்பு.

38. “ஆயிடை அணங்கின் கற்பும் ஐய நின்னருளும் செய்ய தூய

நல்லறனும் என்றிங்கிணையன தொடர்ந்து காப்ப”

இவ்வரிகளில் சீதையை அழியாமல் காப்பற்றியவை எவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது?

(அ) அன்பும் பண்பும்

(ஆ) அறிவும் ஆற்றலும்

(இ) அறனும் மறனும்

(ஈ) கற்பும் அருளும்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) கற்பும் அருளும்

39. “வளன்” என்ற சொல்லால் குறிக்கப்படுபவன் யார்?

(அ) தாவீது

(ஆ) கோலியாத்து

(இ) சூசையப்பர்

(ஈ) சவுல் மன்னன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) சூசையப்பர்

தேம்பாவணியில் “வளன்” என்று குறிப்பிடப்படுபவர் சூசையப்பர் ஆவார். இந்நூலை இயற்றியவர் வீரமாமுனிவர். இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது இந்நூல், யோசோப்பு என்றும் சூசை என்றும் ஒலிபெயர்க்கப்பட்ட ஜோசப் என்னும் பெயரை வீரமாமுனிவர் “வளன்” என்று தமிழ்ப்படுத்தியுள்ளார்.

40. கடலைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள்:

(அ) ஆழி, அம்பி, ஆர்கலி

(ஆ) பௌவம், முந்நீர், பரிசல்

(இ) ஆழி, ஆர்கலி, பௌவம்

(ஈ) வாரணம், பரவை, புணை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) ஆழி, ஆர்கலி, பௌவம்

கடலைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள்: ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பௌவம், பரவை. புணரி, அம்பி, பரிசல், புணை-படகு.

Exit mobile version