General Tamil Model Question Paper 15

General Tamil Model Question Paper 15

General Tamil Model Question Paper 15: Tnpsc Aspirants can use this opportunity to check General Tamil Model Question Papers For Tnpsc. General Tamil Model Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Model Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. எதிர்ச்சொல் எடுத்தெழுதுக:

பட்டியல் I பட்டியல் II

1. ஓரம் – 1.வறுமை

2. வேற்றுமை – 2. தீது

3. நன்று – 3. மையம்

4. செழுமை – 4. ஒற்றுமை

அ ஆ இ ஈ

அ 4 3 1 2

ஆ 2 3 1 4

இ 3 2 1 4

ஈ 3 4 2 1

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ 3 4 2 1

2. பிரித்தெழுதுக – நாத்தொலைவில்லை

(அ) நா+தொலைவில்லை

(ஆ) நாத்தொலைவு+இல்லை

(இ) நா+தொலை+இல்லை

(ஈ) நா+தொலைவு+இல்லை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) நா+தொலைவு+இல்லை

விளக்கம்:

நா+தொலைவு+இல்லை

முற்றியலுகரப் புணர்ச்சி.

“முற்றும் அற்று ஒரோவழி” என்ற விதிப்படி வருமொழி முதலில் உயிரெழுத்து (இ) வந்ததால், நிலைமொழியிலுள்ள முற்றுகரம் (உ) மெய்யை (வ்) விட்டு நீங்கி, தெலைவ்+இல்லை என்றானது. பின்னர் “உடல் மோல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “தொலைவில்லை”என்றானது.

தோன்றல் விகாரப் புணர்ச்சி விதிப்படி.

நா+தொலைவில்லை என்பது “நாத்தொலைவில்லை” என்று புணர்ந்தது.

3. நோக்கினான் – வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க:

(அ) நோக்குதல்

(ஆ) நோக்கி

(இ) நோக்கியவன்

(ஈ) நோக்கு

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) நோக்கு

விளக்கம்:

நோக்கு-வேர்ச்சொல்

நோக்குதல்-தொழிற்பெயர்.

நோக்கி-வினையெச்சம்.

நோக்கியவன்-வினையாலணையும் பெயர்.

4. பொருந்தா இணையைக் கண்டறிக:

(அ) வெண்தயிர்-பண்புத்தொகை

(ஆ) இரைதேர்தல்-வினைத்தொகை

(இ) நாழிகைவாரம்-உம்மைத்தொகை

(ஈ) கயிலாய வெற்பு-இருபெயரொட்டுப் பண்புத்தொகை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) இரைதேர்தல்-வினைத்தொகை

விளக்கம்:

வெண்தயிர்-பண்புத்தொகை. வெண்மை+தயிர் என்பதில் “மை” விகுதி மறைந்து வந்துள்ளது.

இரைதேர்தல்-இரண்டாம் வேற்றுமைத்தொகை. “இரையைத்தேர்தல்” என்பதில் உள்ள இரண்டாம் வேற்றுமை உருபான “ஐ” மறைந்து வந்துள்ளது. “நாழிகையும் வாரமும்” என்பதில் உள்ள “உம்”விகுதி மறைந்து நாழிகைவாரம் என்று அமைந்துள்ளதால் இஃது உம்மைத் தொகையாகும். “கயிலாயவெற்பு” இரு பெயரொட்டுப் பண்புத்தொகை இரண்டு பெயர்ச்சொற்கள் ஒட்டிய சொற்றொடரில் நிலைமொழி சிறப்புப் பெயராகவும் வருமொழி பொதுப் பெயராகவும், “ஆகிய” என்ற பண்புருபு மறைந்தும் வருமாயின் அஃது இருபெயரொட்டுப் பண்புத் தொகை எனப்படும். கயிலாய-சிறப்புப்பெயர். வெற்பு-பொதுப்பெயர். வெற்பு என்றால் மலை என்பது பொருளாகும்.

5. பெறு-இச்சொல்லுக்கான வினைமுற்றைத் தேர்ந்தெடு:

(அ) பெற்றான்

(ஆ) பெற்றவன்

(இ) பெற்று

(ஈ) பெற்றவர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) பெற்றான்

விளக்கம்:

பெறு-வேர்ச்சொல்.

பெற்றான்-வினைமுற்று.

பெற்றவன்-வினையாலணையும் பெயர்.

பெற்று-வினையெச்சம்.

பெற்ற-பெயரெச்சம்.

பெறுதல்-தொழிற்பெயர்.

6. கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக:

(அ) கோணி, குளம், குட்டை, ஏரி, ஊருணி, பொய்கை, தடாகம்.

(ஆ) செந்தமிழ், பைந்தமிழ், வண்டமிழ், முத்தமிழ், அமுதத் தமிழ்

(இ) ஞாலம், வையம், அவனி, உலகு, தரணி

(ஈ) கலம்பகம், குறிஞ்சி, குறுநகை, தோற்றம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) கலம்பகம், குறிஞ்சி, குறுநகை, தோற்றம்

விளக்கம்:

அ-யில், அமைந்துள்ள சொற்கள் அனைத்தும் “நீர்நிலை” என்ற ஒரே பொருளைக் குறிக்கின்றன.

ஆ-யில் அமைந்துள்ள சொற்கள் அனைத்தும் தமிழ் மொழியின் “சிறப்புப் பெயர்” அல்லது “அடைமொழி” என்ற ஒரே பொருளைக் குறிக்கின்றன.

இ-யில், அமைந்துள்ள சொற்கள் அனைத்தும் “உலகம்” என்ற ஒரே பொருளைக் குறிக்கின்றன.

ஆனால் ஈ-யில் உள்ள சொற்கள் வெவ்வேறு பொருளைக் குறிக்கின்றன.

7. பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II

அ. என்னே, மயிலின் அழகு! – 1.எதிர்மறைத் தொடர்

ஆ. கண்ணன் பாடம் படித்திலன் – 2. உணர்ச்சித் தொடர்

இ. மணிமொழி பரிசு பெற்றாள் – 3. கட்டளைத்தொடர்

ஈ. உழைத்துப்பிழை – 4. உட ன் பாட்டுத் தொடர்

அ ஆ இ ஈ

(அ) 3 4 2 1

(ஆ) 3 4 1 2

(இ) 2 1 4 3

(ஈ) 2 3 1 4

விடை மற்றும் விளக்கம்

விடை:  (இ) 2 1 4 3

8. பொருத்துக:

சொல் பொருள்

அ. தேநீர் 1. மூன்று நாள்

ஆ. முந்நாள் 2. தேன்போலும் இனிய நீர்

இ. தேனீர் 3. முந்தைய நாள்

ஈ. முன்னாள் 4. தேயிலை நீர்

அ ஆ இ ஈ

(அ) 4 3 2 1

(ஆ) 4 1 2 3

(இ) 2 3 4 1

(ஈ) 3 4 1 2

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) 4 1 2 3 

9. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்கி, சரியான தொடரைக் குறிப்பிடுக:

(அ) படைமடம் பேகன் படான் கொடைமடம் படுதல் அல்லது

(ஆ) பேகன் கொடைமடம் படுதல் அல்லது படைமடம் படான்

(இ) பேகன் படைமடம் படுதல் அல்லது கொடைமடம் படான்

(ஈ) கொடைமடம் பேகன் படுதல் அல்லது படைமடம் படான்

விடை மற்றும் விளக்கம்

விடை: 

(ஆ) பேகன் கொடைமடம் படுதல் அல்லது படைமடம் படான்

10. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்ல தில்லை பொருள்

– இக்குறட்பாலில் பயின்றுவரும் அணி

(அ) சொற்பொருள் பின்வருநிலையணி

(ஆ) பொருள் பின்வருநிலையணி

(இ) உவமையணி

(ஈ) சொல் பின்வருநிலையாணி

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) சொல் பின்வருநிலையாணி 

விளக்கம்:

சொல் பின்வரு நிலையணி

ஒரு செய்யுளில் முன்னர் வந்நத ஒரு சொல் பின்னர் பல இடங்களிலும் வந்து வெவ்வேறு பொருளைத் தருமாயின், அது சொல் பின்வரு நிலையணியாகும்.

“பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்லது இல்லை பொருள்”

பொருளல்லவரை-தகுதியற்றவரை.

பொருளாக-ஒரு பொருட்டாக.

பொருளல்லது-இணையான பொருள்.

பொருள்-செல்வம்.

தகுதியற்றவரையும் ஒரு பொருட்டாக மதிக்கச் செய்யும் செல்வத்திற்கு இணையான பொருள் வேறில்லை.

General Tamil Study Materials

General Tamil Model Questions Pdf

11. தவறான மரபுச் சொல்லைத் தேர்க:

(அ) மாம் பிஞ்சு-மாவடு

(ஆ) இளந் தேங்காய்-வழுக்கை

(இ) வாழைப்பிஞ்சு-வாழைக்கச்சல்

(ஈ) முருங்கைப் பிஞ்சு-முருங்கை மொட்டு

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) முருங்கைப் பிஞ்சு-முருங்கை மொட்டு

விளக்கம்:

காய்களின் இளமைப் பெயரில் முருங்கைக்காயின் இளமைப் பெயர் முருங்கைப் பிஞ்சாகும். முருங்கைமொட்டு தவறானது.

12. “கொள்” என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்று

(அ) கொண்டான்

(ஆ) கொள்க

(இ) கொண்ட

(ஈ) கொண்டு

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) கொண்டான்

விளக்கம்:

கொள்-வேர்ச்சொல்.

கொண்டான்-வினைமுற்று.

கொள்க-வியங்கோள் வினைமுற்று.

கொண்ட-பெயரெச்சம்.

கொண்டு-வினையெச்சம்

13. பொருந்தாத சொல்லைக் கண்டறிக:

(அ) கப்பல்

(ஆ) அம்பி

(இ) ஆழி

(ஈ) திமில்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) ஆழி

விளக்கம்:

கலத்தைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள்

கப்பல், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புணை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மிதவை, பஃறி, ஓடம்.

கடலைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள்

ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பௌவம், பரவை, புணரி,

14. பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II

அ. கனகம் – 1. மோதிரம்

ஆ. மேழி – 2. ஆடை

இ. கலிங்கம் – 3. பொன்

ஈ. ஆழி – 4. கலப்பை

அ ஆ இ ஈ

(அ) 2 4 3 1

(ஆ) 1 3 2 4

(இ) 3 2 4 1

(ஈ) 3 4 2 1

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) 3 4 2 1

விளக்கம்:

“கனகம்” என்பது பொன்னைக் குறிக்கும் சொற்களில் ஒன்றாகும்.

“கலிங்கம்” என்பது ஆடையைக் குறிக்கும் சொற்களில் ஒன்றாகும்.

(எ.கா) “அரைக்கலிங்கம் உரிப்புகண்ட கலிங்கர்” – கலிங்கத்துப் பரணி.

பொருள்: அரையின் கண் உள்ள ஆடை களையப்பட்ட கலிங்க வீரர்கள்.

மேழி-கலப்பை; ஆழி-மோதிரம்.

(எ.கா): “மேழி பிடிக்கும் கை வேல்வேந்தர் நோக்கும் கை

ஆழி தரித்தே அருளும் கை”

– கம்பர்.

உழவர்களின் சிறப்பு பற்றி கம்பர் இயற்றிய பாடலடிகளாகும்.

பொருள்: கலப்பை பிடித்த உழவனின் கைகளை, வேற்படையைக் கையில் பிடித்துள்ள மன்னர்களும் ஆர்வத்துடன் நோக்குவர். மோதிரம் அணிந்துள்ள உழவரின் கைகள் வருபவர்க்கெல்லாம் வரையாது வழங்கும் கைகளாகும்.

15. கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக

(அ) சிலப்பதிகாரம், மணிமேகலை

(ஆ) இன்னா நாற்பது, இனியவை நாற்பது

(இ) இராமாயணம், மகாபாரதம்

(ஈ) பாண்டியன் நெடுஞ்சொழியன், கபிலர்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) பாண்டியன் நெடுஞ்சொழியன், கபிலர்

விளக்கம்:

சிலப்பதிகாரம்,மணிமேகலை-ஐம்பெருங்காப்பியங்கள்,

இன்னாநாற்பது, இனியவைநாற்பது-பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

இராமாயணம், மகாபாரதம்-இதிகாசங்கள்.

முதல் காரணம்: கபிலர்-புலவர்,

பாண்டியன் நெடுஞ்செழியன்-மன்னன்.

இரண்டாம் காரணம்: கபிலருடன் தொடர்புடைய மன்னன் பாரி ஆவார்.

16. பின்வருவனவற்றுள் தவறான இணையைச் சுட்டுக:

(அ) சிறிது x பெரிது

(ஆ) திண்ணிது x வலிது

(இ) உயர்வு x தாழ்வு

(ஈ) நன்று x தீது

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) திண்ணிது x வலிது

விளக்கம்:

திண்ணிது x மெலிது

17. திருக்குறள்-பொருட்பாலின் இயல்கள்

(அ) பாயிரவியல், துறவறவியல், ஒழிபியல்

(ஆ) அரசியல், அங்கவியல், ஒழிபியல்

(இ) அரசியல், இல்லறவியல், களவியல்

(ஈ) பாயிரவியல், அங்கவியல், கற்பியல்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) அரசியல், அங்கவியல், ஒழிபியல்

விளக்கம்:

நிலைகள் கூறுகள்
பால் அறம் பொருள் இன்பம்
இயல் பாயிரம் இல்லறம் துறவறம் அரசு அங்கம் ஒழிபு களவு கற்பு
அதிகாரம் 4 20 14 25 32 13 7 18
குறள் 40 200 140 250 320 130 70 180

18. நடுவண் அரசு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்ட ஆண்டு

(அ) 1968

(ஆ) 1988

(இ) 1958

(ஈ) 1978

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) 1978

விளக்கம்:

நடுவண் அரசு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை 1978-ஆம் ஆண்டு வெளியிட்டு சிறப்பித்தது.

19. குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்

(அ) பாரதம் பாடிய பெருந்தேவனார்

(ஆ) பெருங்குன்றூர்க் கிழார்

(இ) பொருந்தில் இளங்கீரனார்

(ஈ) காக்கைப்பாடினியார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) பாரதம் பாடிய பெருந்தேவனார்

விளக்கம்:

குறுந்தொகை என்ற நூலுக்கு கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ. இந்நூலின் பாடல்கள் நான்கடி சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் உடையவை. ஆனால் ஒன்பதடியில் இருபாடல்கள் (307, 391) அமைந்துள்ளன. கடவுள் வாழ்த்து நீங்கலாக இந்நூலில் 401 பாடல்கள் உள்ளன.

20. “நாரதர் வருகிறார்” என்ற தொடர் என்ன ஆகுபெயர்?

(அ) காரியவாகு பெயர்

(ஆ) கருத்தாவாகு பெயர்

(இ) கருவியாகு பெயர்

(ஈ) உவமையாகு பெயர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) உவமையாகு பெயர்

விளக்கம்:

“நாரதர் வருகிறார்” என்பது உவமையாகு பெயர். இங்கு நாரதர் என்பது அவரைப் போன்ற குணமுடைய மனிதனைக் குறிக்கின்றது.

21. “தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்” என்று பாராட்டப்பெறுபவர்

(அ) சுரதா

(ஆ) சிற்பி

(ஈ) பாரதிதாசன்

(ஈ) வாணிதாசன்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) வாணிதாசன்

விளக்கம்:

வாணிதாசன்

இயற்பெயர்-எத்திராசலு (எ) அரங்கசாமி.

காலம்: 22.07.1915-07.08.1974.

அறிந்த மொழிகள்-தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு

பணி-34 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

இயற்றிய நூல்கள்-தமிழச்சி, கொடிமுல்லை, எழிலோவியம், பொங்கற்பரிசு, இன்ப இலக்கியம், தீர்த்தயாத்திரை.

சிறப்புப் பெயர்கள்-கவிஞரேறு, பாவலர் மணி, தமிழகத்தின் “வேர்ட்ஸ் வொர்த்”.

சிறப்புகள்:சாகித்ய அகாதெமி, வெளியிட்ட “தமிழ் கவிதைக் களஞ்சியம்” என்ற நூலிலும், தென்மொழிகள் புத்தக வெளீயீட்டுக் கழகம் வெளியிட்ட “புதுத்தமிழ்க் கவிமலர்கள்” என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

இயற்கைப் புனைவு இவருடைய பாடல்களில் சிறந்து விளங்குவதால், இவர் தமிழகத்தின் “வேர்ட்ஸ்வொர்த்” எனப் பாராட்டப் பெற்றார்.

இவருடைய பாடல்கள் உருசியம், ஆங்கிலம் முதலிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. “தமிழ்-பிரெஞ்சு கையகர முதலி” என்ற நூலை வெளியிட்டுள்ளார். பிரரெஞ்சுக் குடியரசுத் தலைவர் இவருக்கு “செவாலியர்” விருது வழங்கி கௌரவித்துள்ளார்.

22. அதியமான் நெடுமானஞ்சியின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர்.

(அ) வெள்ளிவீதியார்

(ஆ) ஒளவையார்

(இ) காக்கைப்பாடினியார்

(ஈ) நக்கண்ணையார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) ஒளவையார்

விளக்கம்:

அதியமான் நெடுமானஞ்சி தகடூரை ஆண்ட குறுநில மன்னன். கடையெழு வள்ளல்களில் ஒருவன். இம்மன்னனின் அரசவைக்கு தம் புலமையால் பெருமை சேர்த்தவர் ஒளவையார். உண்டாரை நெடுங்காலம் வாழ வைக்கும் நெல்லிக்கனியை மலைப் பிளவுகளையெல்லாம் தாண்டிச் சென்று, கொண்டு வந்து அதனை ஒளவை உண்ணுமாறு கொடுத்தவன் அதியமான்.

23. கீழே தரப்பெறுவனவற்றுள் எவை சரியற்றவை?

அ. குறுந்தொகைச் செய்யுட்கள் குறைந்த அளவாக மூன்று அடிகளையும், அதிக அளவாக ஏழு அடிகளையும் கொண்டு இருக்கின்றன.

ஆ. குறுந்தொகைச் செய்யுட்களைத் தொகுத்தவர் பூரிக்கோ.

இ. குறுந்தொகைக்கு நக்கீர தேவநாயனார் கடவுள் வாழ்த்துச் செய்யுளைப் பாடியுள்ளார்.

ஈ, குறுந்தொகையில் கடவுள் வாழ்த்துடன் நானூற்றொரு பாடல்கள் உள்ளன.

(அ) ஆ, இ சரியற்றவை

(ஆ) அ, ஈ சரியற்றவை

(இ) அ, இ சரியற்றவை

(ஈ) இ, ஈ சரியற்றவை

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) அ, இ சரியற்றவை

விளக்கம்:

குறுந்தொகை என்ற நூலுக்கு கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ. இந்நூலின் பாடல்கள் நான்கடி சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் உடையவை. ஆனால் ஒன்பதடியில் இருபாடல்கள் (307, 391) அமைந்துள்ளன. கடவுள் வாழ்த்து நீங்கலாக இந்நூலில் 401 பாடல்கள் உள்ளன.

24. “புலவரேறு” என்று சிறப்பிக்கப் பெற்றவர்

(அ) நக்கண்ணையார்

(ஆ) நாமக்கல் கவிஞர்

(இ) வரத நஞ்சையப்பிள்ளை

(ஈ) கபிலர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) வரத நஞ்சையப்பிள்ளை

விளக்கம்:

அ.வரதநஞ்சையப் பிள்ளை.

காலம்-01.09.1877 முதல் 11.07.1956 வரை.

சிறப்பு:தமிழ், வடமொழி, தெலுங்கு ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். கணிதம், ஜோதிடம் ஆகிய கலைகளில் வல்லவராயிருந்தார் “புலவரேறு” என்று சிறப்பிக்கப்பட்டார்.

இயற்றிய நூல்கள்: தமிழரசி குறவஞ்சி, தமிழ்த்தாய் திருப்பணி, கருணீக புராணம்.

விருது-கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் நமச்சிவாய முதலியார் தலைமையில் “தங்கத்தோடா” என்ற விருதினைப் பெற்றவர்.

25. “தோடுடைய செவியன், விடமுண்ட கண்டன்”

என்ற தொடரால் குறிக்கப்படுபவர்

(அ) உமையொரு பாகனாம் சிவபெருமான்

(ஆ) குழலூதும் கோவிந்தனாம் கண்ணன்

(இ) மராமரம் ஏழினைத் துளைத்த இராமன்

(ஈ) மாமரம் தடிந்த தணிகை வேலன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) உமையொரு பாகனாம் சிவபெருமான்

விளக்கம்:

திருஞானசம்பந்தர் அருளிச்செய்த திருபிரமபுரம் (சீர்காழி) தோவரத் திருப்பதிகம், முதலாம் திருமுறை 1-ஆவது திருப்பதிகம்.

“தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்

காடுடையசுட லைப்பொடிபூசி என் உள்ளங்கவர் கள்வன்”

பொருள்: காதில் தோடு அணிந்து எருதின்மேல் ஏறி வெண்மையான மதியை சூடி, சுடுகாட்டில் உள்ள சாம்பலை உடல் எல்லாம் பூசி என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன்.

இரண்டாம் திருமுறை 1-ஆவது பாடல்.

வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிக நல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்,

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே

ஆசறுநல்ல நல்ல வைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

பொருள்: மூங்கில் போன்ற தோளினை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும் விடம் உண்ணட கண்டனும் ஆகிய சிவபிரான் திங்கள், கங்கை ஆகியவற்றை முடிமேல் அணிந்தவனாய் மகிழ்ச்சியுற்ற நிலையில் வீணையை மீட்டிக் கொண்டு என் உளம் புகுந்து தங்கியுள்ள காரணத்தால், ஞாயிறு, திங்கள் முதலான ஒன்பான் கோள்களும் குற்றமற்ற நலத்தைச் செய்வனவாம். அவை அடியார்களுக்கும் மிகவும் நல்லனவே செய்யும்.

26. கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?

அ. பழந்தமிழரின் போர் வாழ்வு, மன்னர்களின் அறச்செயல், வீரம், கொடை, ஆட்சிச் சிறப்பு, கல்விப்பெருமை, புலவரது பெருமிதம் மக்களின் நாகரிகம், பண்பாடு பற்றியறியப் புறநானூற்றுச் செய்யுட்கள் உதவுகின்றன.

ஆ. புற வாழ்வு பற்றிய நானூறு செய்யுட்களின் தொகுப்பு, புறநானூறு.

இ. புறநூனூற்றில் அதிக செய்யுட்களைப் பாடியவர் ஒளவையார்

ஈ. அறியாது முரசு கட்டிலில் தூங்கிய பெண்ணைக் கொன்றமையால் “பெண் கொலை புரிந்த மன்னன்” என்று தூற்றப்படும் செய்தி சொல்லப்பட்டுள்ளது.

(அ) அ, இ, ஈ சரியானவை

(ஆ) அ, ஆ, ஈ சரியானவை

(இ) அ, ஆ, இ சரியானவை

(ஈ) ஈ, இ, ஆ சரியானவை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) அ, ஆ, இ சரியானவை

27. பொருத்துக:

நூல் நூலாசிரியர்

(அ) பெருமாள் திருமொழி – 1. காரைக்கால் அம்மையார்

(ஆ) திருத்தொண்டத் தொகை – 2. ஆண்டாள்

(இ) அற்புதத் திருவந்தாதி – 3. சுந்தரர்

(ஈ) நாச்சியார் திருமொழி – 4. குலசேகர ஆழ்வார்

அ ஆ இ ஈ

(அ) 4 2 3 1

(ஆ) 3 4 1 2

(இ) 2 1 4 3

(ஈ) 4 3 1 2

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) 4 3 1 2

28. கீழ்க்காணும் நூல்களுள் இலக்கண நூல் அல்லாதது

(அ) தொல்காப்பியம்

(ஆ) தேம்பாவணி

(இ) தண்டியலங்காரம்

(ஈ) வீரசோழியம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) தேம்பாவணி

விளக்கம்:

தேம்பாவணியின் ஆசிரியர் வீரமாமுனிவர். இந்நூல் இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தையான சூசையப்பரைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட இலக்கிய நூலாகும்.

29. கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைத் தேர்வு செய்க.

அ. ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடு, மலைகளில் வாழ்ந்தவர்கள் சித்தர்கள்.

ஆ. பாம்பாடடிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகுணிச் சித்தர் என்பன எல்லாமே காரணப் பெயர்கள்

இ. எளிய சொற்களில் அறிவுரைகளைக் கூறியவர்கள் சித்தர்கள்.

ஈ. இரும்பைப் பொன்னாக்கும் இரசவாத வித்தை கற்று உலகில் செல்வராக வாழச் சித்தர்கள் அவாவினர்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. இரும்பைப் பொன்னாக்கும் இரசவாத வித்தை கற்று உலகில் செல்வராக வாழச் சித்தர்கள் அவாவினர்

30. “கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே “கற்றவர்களின் சிறப்பைப் போற்றும் இவ்வடிகள் இடம்பெறும் நூல்.

(அ) அகநானூறு

(ஆ) புறநானூறு

(இ) நற்றிணை

(ஈ) கலித்தொகை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) புறநானூறு

விளக்கம்:

புறநானூறு 183-வது பாடல்

உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்

பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!

பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்

சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;

ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்

மூத்தோன் வருக என்னாது, அவருள்

அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்;

வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவனம் அவன்கண் படுமே.

பாடியவர்-ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்.

திணை-பொதுவியல்.

துறை-பொருண்மொழிக்காஞ்சி.

பொருள்: ஆசிரியருக்குத் துன்பம் நேரும் போது உதவ வேண்டும். அவருக்கு நிறைந்த செல்வம் கொடுக்க வேண்டும். அவரைப் பின்பற்றி நடப்பதற்கு தயங்கக் கூடாது. இப்படிக் கல்வி கற்பது முறையாகும். இது பெரிதும் நன்மை பயக்கும். ஏனென்றால், தன் வயிற்றில் பிறந்த உடன்பிறப்புக் கொண்ட பலரில் சிறப்புப் பெற்றிருப்பவனிடம் தாயின் மனமும் திரிந்து செல்லும். ஒரே குடியில் பிறந்த பலரில் மூத்தவனை வருக என அழைக்காமல் அவர்களில் அறிவுடையவன் வழியில் அரசாட்சியும் நடைபெறும். பிறப்பால் நான்கு பிரிவுகள் உண்டு. அவற்றில் கீழ்க்குலத்தில் பிறந்த ஒருவன் கற்றிருந்தால் மேற்குலத்தில் பிறந்தவனும் அவனிடம் அடக்கமாவான்.

31. கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காட்டவும்.

(அ) தில்லிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகச் சாலை இளந்திரையனும், தில்லி கல்லூரியில் தமிழ்ப் போரசிரியராக் சாலினி இளந்திரையனும் பணியாற்றியவர்கள்.

ஆ. நெல்லை மாவட்டம், சாலை நயினார் பள்ளிவாசலில் பிறந்த நசிருதீனே பின்னாளில் சாலை இளந்திரையன் என்று அறியப்பட்டார்.

இ. மானுடம் பூத்தது, நெஞ்சோடு நெஞ்சம், விட்ட குறை தொட்ட குறை, செயல் மணக்கும் தோள்கள், தாய் எழில் தமிழ், உரை வீச்சு, தமிழனின் ஒரே கவிஞன் முதலியன சாலை இளந்திரையனின் நூல்களாகும்.

ஈ. கருத்துக்குப் பெரியாரையும், கவிதைக்குப் புரட்சிக் கவிஞரையும் வழிகாட்டியாகக் கொண்ட சாலை இளந்திரையன், எழுச்சிச் சான்றோர், திருப்புமுனைச் சிந்தனையாளர் ஆகிய சிறப்புகளைப் பெற்றவர்.

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நெல்லை மாவட்டம், சாலை நயினார் பள்ளிவாசலில் பிறந்த நசிருதீனே பின்னாளில் சாலை இளந்திரையன் என்று அறியப்பட்டார்.

விளக்கம்:

சாலை இளந்திரையன்.

சாலை இளந்திரையனின் இயற்பெயர் மகாலிங்கம் ஆகும். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சாலை நயினார் பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர். தன்னுடைய புனைப்பெயராக தன் ஊரின் முதல் பகுதியான சாலை என்பதுடன் சங்ககால மன்னன் இளந்திரையன் பெயரையும் சேர்த்து வைத்துக் கொண்டார்.

வினாவில் இவர் எழுதிய நூல்களில் ஒன்றாக “மானுடம் பூத்தது” என்று கொடுத்துள்ளனர் அது தவறாகும். “பூத்தது மானுடம்” என்பதே சரி.

32. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைக் குறிப்பிடுக:

அ. ஓவ, ஓவியம், ஓவம், சித்திரம், படம், படாம், வட்டிகைச் செய்தி எனப் பல பெயர்களால் ஓவியக்கலை வழங்கப்பெற்றது.

ஆ. ஓவியர், “கண்ணுள் வினைஞர்” எனப் புகழப்பெற்றார்.

இ, ஓவியருக்கு, “நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்” என நச்சினார்க்கினியர் தம் உரையில் இலக்கணம் வகுத்துள்ளார்.

ஈ. ஓவியச் செந்நூல் உரை நூல் கிடக்கையும் கற்றுத் துறைபோகப் பொற்றொடி மடந்தையாகச் சுதமதி திகழ்ந்தனள் எனச் சிலம்பு பகர்கிறது.

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. ஓவியச் செந்நூல் உரை நூல் கிடக்கையும் கற்றுத் துறைபோகப் பொற்றொடி மடந்தையாகச் சுதமதி திகழ்ந்தனள் எனச் சிலம்பு பகர்கிறது.

விளக்கம்:

சிலப்பதிகாரத்தில் மாதவி பற்றிக் குறிப்பிடும் போது, “ஓவியச் செந்நூல் உரை நூற்கிடக்கையும் கற்றுத்துறை போகப் பொற்றொடி மடந்தையாக இருந்தனள்” என்று இளங்கோவடிகள் கூறுகிறார். “சுதமதி” என்ற பாத்திரம் மணிமேகலையில் அமைந்துள்ளது.

33. “எவ்வகைச் செய்தியும் உவமங் காட்டி” எனும் மதுரைக் காஞ்சியின் பாடலடி குறிப்பிடும் கலை

(அ) சிற்பக்கலை

(ஆ) கட்டடக்கலை

(இ) செப்புப்படிமக்கலை

(ஈ) ஓவியக்கலை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) ஓவியக்கலை

விளக்கம்:

“எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி

நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கிற்

கண்ணுள் வினைஞரும் பிறருங்கூடி”

– மதுரைக்காஞ்சி

கண்ணில் கண்ட காட்சியை உள்ளத்தில் உணர்ந்து படைப்பிற்கு பொருந்துமாறு வரைகின்றவர்களே ஓவியர்கள், என்று மதுரைக் காஞ்சி கூறுகிறது. இதே செய்தி மணிமேகலையிலும் கூறப்பட்டுள்ளது.

34. கீழே காணப்படுவனவற்றுள் பொருந்தமற்றதைத் தெரிவு செய்க:

அ. கலம்பக இலக்கியத்தின் முதல் நூல் நந்திக்கலம்பகம்

ஆ. காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை ஆண்ட நந்திவர்ம பல்லவன் பற்றிய நூல்.

இ. நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடு அறியும் என்று தொண்டை மண்டல சதகமும், சோமேசர் முதுமொழி வெண்பாவும் நந்தி கதை உரைக்கின்றன.

ஈ, “அறம் பாடுதல்” என்பது போர்த்தாக்குதல் முறை. அம்முறை நந்திக்கலம்பத்தில் பாண்டிய மன்னனால் கையாளப்பட்டது.

விடை மற்றும் விளக்கம்

விடை:ஈ, “அறம் பாடுதல்” என்பது போர்த்தாக்குதல் முறை. அம்முறை நந்திக்கலம்பத்தில் பாண்டிய மன்னனால் கையாளப்பட்டது.

விளக்கம்:

நந்திக்கலம்பகம் தமிழில் உருவான கலம்பக இலக்கியங்களில் முதலாவதாகும். இந்நூலின் பாட்டுடைத் தலைவன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்ம பல்லவன் ஆவான். “அறம்பாடுதல்” என்ற முறையில் இப்பாடல்கள் பாடப்பட்டுள்ளன. அறம் வைத்துப் பாடிய நூலின் பாடலைத் தற்செயலாகக் கேட்ட நந்திவர்மன் அப்பாடலின் சிறப்பில் மனம் பறிகொடுத்து, நூல் முழுவதையும் கேட்க விரும்பினான். நூல் முழுவதையும் கேட்டால், மன்னன் உடல் எரிந்து இறப்பான் என்பதை அறிந்தும் தமிழின் மீதுள்ள மாறாக் காதலால் உயிரையும் பொருட்படுத்தாது எரியும் பந்தலின் கீழிருந்து கேட்டு உயிர் நீத்தார் என்று கூறப்படுகிறது.

35. பொருந்தாத விடையைக் குறிப்பிடுக:

(அ) மனுமுறை கண்ட வாசகம்

(ஆ) திருப்புகழ்

(இ) திருவருட்பா

(ஈ) ஜீவகாருண்ய ஒழுக்கம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) திருப்புகழ்

விளக்கம்:

மனுமுறைகண்ட வாசகம் திருவருட்பா. ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகிய நூல்களின் ஆசிரியர் வள்ளலார் இராமலிங்க அடிகள்.

திருப்புகழை இயற்றியவர் அருணகிரிநாதர்.

36. கீழே காணப்பெறுவனவற்றுள் சரியான கூற்றுகள் எவை?

அ. நிலையாமையைச் சொல்லும் காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று “முதுமொழிக்காஞ்சி” இப்பெயரில் மதுரைக் கூடலூர்க்கிழார் இயற்றிய நூல், “அறவுரைக்கோவை” என்றும் அழைக்கப்படுகிறது.

ஆ, முதுமொழிக் காஞ்சியில், பதினொரு அதிகாரங்கள் உள்ளன.

இ. ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்துச் செய்யுட்கள் உள்ளன.

ஈ. முதுமொழிக்காஞ்சியில் மொத்தம் நூற்றுப் பத்துச் செய்யுட்கள் உள்ளன. அவை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்களால் மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளன.

(அ) அ மற்றும் இ சரியானவை

(ஆ) அ மற்றும் ஈ சரியானவை

(இ) ஆ மற்றும் இ சரியானவை

(ஈ) இ மற்றும் ஈ சரியானவை

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) அ மற்றும் இ சரியானவை

விளக்கம்:

முதுமொழிக் காஞ்சி

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூலை இயற்றியவர் மதுரைக் கூடலூர்க்கிழார். நீதி நூல்களில் மிகச் சிறிய நூல் இதுவே. ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்து செய்யுள்கள் வீதம் 10 அதிகாரங்கள் உள்ளன.

ஒவ்வொரு பத்திலும் 10 அடிகள் வீதம் 100 அடிகள் கொண்டது இந்நூல் ஒவ்வொரு பத்தின் முதுலடியும் “ஆர்கலி யுலகத்து மக்கட்கெல்லாம்” என்று தொடங்குகிறது.

1.சிறந்த பத்து, 2.அறிவுப்பத்து, 3.பழியாப்பத்து, 4.துவ்வாப்பத்து. 5.அல்ல பத்து, 6.இல்லை பத்து, 7.பொய்ப் பத்து, 8.எளிய பத்து, 9.நல்கூர்ந்த பத்து, 10.தண்டாப்பத்து என பத்து பிரிவுகள் உள்ளன.

37. மதுரைக் காஞ்சியின் சிறப்புகளைத் தேர்க:

அ. மதுரையைப் பாடுவது.

ஆ.நிலையாமையைக் கூறுவது.

இ.பத்துப்பாட்டுள் மிகுதியான அடிகளை உடையது.

(அ) ஆ, இ சரி அ தவறு

(ஆ) அ, ஆ, இ சரியானவை

(இ) அ, ஆ சரி இ தவறு

(ஈ) அ, இ சரிய ஆ தவறு

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) அ, ஆ, இ சரியானவை

விளக்கம்:

மதுரைக் காஞ்சி

பத்துப்பாட்டில் மிகப் பெரிய நூல் இதுவே. 782 அடிகளைக் கொண்டு விளங்குகிறது. இது பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மீது மாங்குடி மருதனார் பாடியது. இதனை “பெருகு வளமதுரைக் காஞ்சி” என்றும் “கூடற்றமிழ்” என்றும் குறிப்பர்.

38. “நாட்டுப்புற இயலின் தந்தை” என அழைக்கப்படுபவர்

(அ) ஜேக்கப் கிரீம்

(ஆ) மாக்ஸ் முல்லர்

(இ) கி.வா.ஜகந்நாதன்

(ஈ) ஆறு.அழகப்பன்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) ஜேக்கப் கிரீம

விளக்கம்:

நாட்டுப்புற இயலின் தந்தை என அழைக்கப்படுபவர் ஜேக்கப் கிரீம் ஆவார். இவர் ஜெர்மானிய மொழியியலாளர் ஆவார். தமிழ் நாட்டுப்புற இலக்கியங்களை ஆய்வு செய்து வெளியுலகிற்குக் கொண்டு வந்தவர் ஆவார்.

39. சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து எது?

(அ) அ

(ஆ) ஊ

(இ) ஐ

(ஈ) ஏ

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) ஏ

40. பொருந்தா இணையினைக் காண்க:

(அ) “பாட்டாளி மக்களது பசி தீரவேண்டும்” – நாமக்கல் கவிஞர்

(ஆ) “முல்லைக்கோர் காடு போலும்”- சுரதா

(இ) கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழ் – கவிமணி

(ஈ) எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்-பாரதியார்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்-பாரதியார்

விளக்கம்:

“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்” என்று பாடியவர் பாரதிதாசன். பாரதிதாசனின் “சங்கநாதம்” என்ற கவிதையில் கீழ்க்கண்ட இவ்வரிகள் இடம் பெற்றுள்ளன.

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே”

41. “தமிழ்க்கவிஞர்களின் இளவரசன்” என்று புகழப்படுபவர்

(அ) இளங்கோவடிகள்

(ஆ) வாணிதாசன்

(இ) கண்ணதாசன்

(ஈ) திருத்தக்கதேவர்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) திருத்தக்கதேவர்

42. பொருத்துக:

நூல் நூலாசிரியர்

அ. மருமக்கள் வழி மான்மியம் – 1.திரு.வி.க

ஆ. தமிழ்ச் சோலை – 2. சுரதா

இ. இரட்சணியக் குறள் – 3. கவிமணி

ஈ. தேன்மழை – 4. எச்.ஏ.கிருட்டிணனார்

அ ஆ இ ஈ

அ. 4 1 2 3

ஆ. 1 4 3 2

இ. 2 1 3 4

ஈ. 3 1 4 2

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. 3 1 4 2

43. கீழே காணப்பெறுவனவற்றுள் எக்கூற்றுகள் சரியானவை?

அ. ந.வேங்கடகிருஷ்ணன் என்னும் இயற்பெயரைக் கொண்ட ந.பிச்சமூர்த்தியின் சிறந்த கவிதை நூல், “ந.பிச்சமூர்த்தியின் கவிதைகள்” என்பது.

ஆ. கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள் ஓரங்க நாடகங்கள் ஆகியவற்றை ந.பிச்சமூர்த்தி எழுதியுள்ளார்.

இ திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனார் எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்.

ஈ. தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்பட்ட உ.வே.சாமிநாதரின் தலை மாணவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்.

(அ) அ, ஈ சரியானவை

(ஆ) ஆ, இ சரியானவை

(இ) இ, ஈ சரியானவை

(ஈ) அ, ஆ சரியானவை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) ஆ, இ சரியானவை

விளக்கம்:

ந.பிச்சமூர்த்தியின் இயற்பெயர் ந.வேங்கட மகாலிங்கம்.

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர் தான் உ.வே.சாமிநாதர்

44. பொருத்துக:

அ. இடுகுறிப்பொதுப்பெயர் – 1.மரங்கொத்தி

ஆ, இடுகுறிச்சிறப்புப்பெயர் – 2. பறவை

இ. காரணப் பொதுப்பெயர் – 3. காடு

ஈ. காரணச் சிறப்புப் பெயர் – 4. பனை

அ ஆ இ ஈ

அ. 3 4 2 1

ஆ. 2 1 3 4

இ. 1 3 2 4

ஈ. 4 2 3 1

விடை மற்றும் விளக்கம்

விடை:

அ. 3 4 2 1

விளக்கம்:

நம் முன்னோர்கள் எந்தக் காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்கு இட்ட பெயரே இடுகுறிப் பெயராகும். காரணம் கருதி ஒரு பொருளுக்கு இடும் பெயர் காரணப் பெயராகும்.

காடு என்பது இடுகுறிப் பொதுப்பெயர். பனங்காடு, மூங்கில் காடு என்பது இடுகுறிச் சிறப்புப் பெயர்கள்.

“மரம்” என்பது இடுகுறிப் பொதுப்பெயர். பனை மரம் என்பது இடுகுறிச் சிறப்புப் பெயர்.

பறப்பதால், பறவை என அழைக்கப்படுவது காரணப் பொதுப் பெயராகும்.

மரங்கொத்திப் பறவை என்பது காரணச் சிறப்புப் பெயராகும்.

45. எழுத்தாளர் ஜெயகாந்தன் பெற்ற உயரிய விருது?

(அ) பத்மபூஷன்

(ஆ) பத்மவிபூஷண்

(இ) ஞானபீட விருது

(ஈ) பத்மஸ்ரீ

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) பத்மஸ்ரீ

விளக்கம்:

எழுத்தாளர் ஜெயகாந்தன் பெற்ற உயரிய விருது ஞானபீட விருதாகும். இவ்விருது அவருக்கு 2002-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது. இந்திய இலக்கிய மேம்பாட்டிற்காக ஞானபீட அமைப்பின் மூலமாக இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த அமைப்பு “டைம்ஸ் ஆஃப் இந்தியா” என்ற பத்திரிகை நிறுவனத்தாரான சாஹீ ஜெயின் குடும்பத்தாரால் நடத்தப்பட்டு வருகிறது. இவ்விருது 1965-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

46. பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II

அ. உடம்பார் அழியின் உயிரார் அழிவர் – 1. திருவள்ளுவர்

ஆ. மீதூண் விரும்பேல் – 2. திருமூலர்

இ. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தாரே – 3. சீத்தலைச் சாத்தனார்

ஈ. நீரின்றமையாது உலகு – 4. ஒளவையார்

அ ஆ இ ஈ

(அ) 4 3 1 2

(ஆ) 3 1 4 2

(இ) 2 4 3 1

(ஈ) 3 2 4 1

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) 2 4 3 1

47. பொருத்துக:

அறநூல்கள் ஆசிரியர்

அ. அறநெறிச்சாரம் – 1. துறைமங்கலம் சிவப்பிரகாசர்

ஆ. நீதி நூல் – 2. முத்துராமலிங்க சேதுபதி

இ. நீதி போதனை வெண்பா – 3. முனைப்பாடியார்

ஈ. நன்னெறி பிள்ளை – 4. மாயூரம் வேதநாயகம்

அ ஆ இ ஈ

(அ) 4 3 2 1

(ஆ) 2 1 3 4

(இ) 3 4 2 1

(ஈ) 1 3 4 2

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) 3 4 2 1

48. பொருத்துக:

கவிதை நூல்கள் கவிஞர்கள்

(அ) நெருஞ்சி – 1. சி.மணி

(ஆ) அன்று வேறு கிழமை – 2. இரா.மீனாட்சி

(இ) தோணி வருகிறது – 3. ஞானக்கூத்தன்

(ஈ) வரும் போகும் – 4. ஈரோடு தமிழன்பன்

அ ஆ இ ஈ

(அ) 2 3 4 1

(ஆ) 3 4 1 2

(இ) 4 1 2 3

(ஈ) 2 4 3 1

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) 2 3 4 1

49. பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II

(அ) பெண்மை தாயாய் நின்று – 1. அன்பே செய்யும்

(ஆ) பெண்மை அயலார் தமக்கும் – 2. தரணியைத் தாங்கும்

(இ) பெண்மை மகளாய்ப்பிறந்து – 3. தளர்வைப் போக்கும்

(ஈ) பெண்மை தாரமாய் வந்து – 4. சேவையில் மகிழும்

அ ஆ இ ஈ

(அ) 3 1 4 2

(ஆ) 2 4 1 3

(இ) 2 1 4 3

(ஈ) 1 3 2 4

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) 2 1 4 3

விளக்கம்:

பெண்மை

அன்பும் ஆர்வமும் அடக்கமும் சேர்ந்தும்

உண்மைத் தன்மையும் உறுதியும் மிகுந்தும்

தன்னல மறுப்பும் சகிப்புத் தன்மையும்

இயல்பாய் அமைந்தும் இன்பசெ ரூபமாய்த்

தாயாய் நின்று தரணியைத் தாங்கும்;

தாரமாய் வந்து தளர்வைப் போக்கும்;

உடன்பிறப் பாகி உறுதுணை புரியும்;

மகளாய்ப் பிறந்து சேவையில் மகிழும்;

அயலார் தமக்கும் அன்பே செய்யும்;

நாணம் கெடாமல் நட்பு கொண் டாடும்

– வெ.இராமலிங்கனார்

“நாமக்கல் கவிஞர் பாடல்கள்” என்னும் கவிதைத் தொகுப்பில் 11 தலைப்புகளில் கவிதைகள் அமைந்துள்ளன. மேற்கண்ட கவிதை “சமுதாய மலர்” என்னும் தலைப்பின் கீழ் “பெண்மை” என்ற உட்பிரிவில் அமைந்துள்ளது.

இப்பாடலில் தாய், மனைவி, தமக்கை, தங்கை, மகள் எனப் பெண்மைக்குப் பன்முகங்கள் உண்டு என்பதனை நாமக்கல் கவிஞர் எடுத்துக்காட்டியுள்ளார்.

50. பொருத்துக:

அ. வெண்பா – 1. சயங்கொண்டான்

ஆ. விருத்தப்பா – 2. இரட்டையர்கள்

இ. பரணி – 3. புகழேந்தி

ஈ. கலம்பகம் – 4. கம்பர்

அ ஆ இ ஈ

(அ) 4 2 3 1

(ஆ) 1 3 2 4

(இ) 3 4 1 2

(ஈ) 2 3 1 4

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) 3 4 1 2

விளக்கம்:

நளவெண்பாவை இயற்றிய புகழேந்தி “வெண்பாவிற் புகழேந்தி” என்று புகழப்பட்டார். கம்பர். “விருத்தப்பா எனும் வெண்பாவிற்கோர் உயர் கம்பன்” எனப் புகழப்பட்டார். கலிங்கத்துப்பரணியை இயற்றிய செயங்கொண்டார் “பரணிக்கோர் செயங்கொண்டார்” என்று பாராட்டப்பெற்றவர்.

இரட்டையர்கள் எனப்பட்ட இளஞ்சூரியர். முதுசூரியர் கலம்பகம் பாடுவதில் வல்லவர்கள். இவர்கள் தில்லைக் கலம்பகத்தை இயற்றியுள்ளனர்.

51. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:

பரிதிமாற்கலைஞர் செம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்.

(அ) பரிதிமாற் கலைஞர் என்ன செய்தார்?

(ஆ) பரிதிமாற் கலைஞர் எம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்?

(இ) பரிதிமாற் கலைஞர் இலக்கணம் வகுத்தாரா?

(ஈ) பரிதிமாற் கலைஞரின் தொண்டு யாது?

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) பரிதிமாற் கலைஞர் எம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்?

52. கீழ்க்காண்பனவற்றுள் பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:

(அ) வெட்சித் திணை

(ஆ) வாகைத் திணை

(இ) முல்லைத் திணை

(ஈ) வஞ்சித் திணை

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) முல்லைத் திணை

விளக்கம்:

வெட்சி, வாகை, வஞ்சி ஆகியவை புறத்திணைகளாகும். முல்லைத் திணை அகத்திணையாகும்.

53. சரியான எதுகையைத் தேர்க:

“எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்

புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்”

(அ) எள்ளறு-வியப்ப

(ஆ) புள்ளுறு-புன்கண்

(இ) எள்ளறு-புள்ளுறு

(ஈ) சிறப்பின்-புன்கண்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) எள்ளறு-புள்ளுறு

விளக்கம்:

செய்யுளில் அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது எதுகைத் தொடை ஆகும்

ள்ளறு – புள்ளுறு

54. வினைமுற்று, பெயர்ச்சொல், வினாச்சொல் ஆகிய இவற்றினைப் பயனிலையாகக் கொண்டு முடிவது

(அ) நான்காம் வேற்றுமை

(ஆ) இரண்டாம் வேற்றுமை

(இ) முதல் வேற்றுமை

(ஈ) ஆறாம் வேற்றுமை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) முதல் வேற்றுமை

விளக்கம்:

முதல் வேற்றுமை

ஒரு பெயர், வாக்கியத்தின் எழுவாயாக நிற்பது முதல் வேற்றுமையாகும். இவ்வேற்றுமைக்கு உருபு இல்லை. உருபு இல்லாமலேயே இது வேற்றுமையாக அமைகின்றது. இதற்கு “எழுவாய் வேற்றுமை” என்றும் பெயர் உண்டு.

முதல் வேற்றுமை வினைமுற்றையும், பெயரையும், வினாவையும் பயனிலையாகக் கொள்ளும்.

அமைச்சர் வந்தார்-வினைமுற்றுப் பயனிலை.

இவர் அமைச்சர்-பெயர்ப்பயனிலை.

இவர் அமைச்சரா?-வினாப்பயனிலை.

55. பொருத்துக:

அ. தாங்குறூஉம் – 1.ஒரு பொருட்பன்மொழி

ஆ. வல்விரைந்து – 2. இன்னிசையளபெடை

இ. ஓரீஇ – 3. உரிச்சொற்றொடர்

ஈ. மல்லல் மதுரை – 4. சொல்லிசையளபெடை

அ ஆ இ ஈ

(அ) 3 2 4 1

(ஆ) 2 1 4 3

(இ) 2 4 1 3

(ஈ) 1 2 3 4

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) 2 1 4 3

56. தமிழ்ப்பெயர்களைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை

அ. ஒருவர், ஒரு இடம், பொருள் பற்றிக் குறிப்பதற்குக் குறியீடாக இடுவது பெயர்.

ஆ. தமிழில் பெயர்ச் சொற்கள் ஒருபோதும் காலம் காட்டி…..

இ. தமிழ் பெயர்ச்சொற்கள் அனைத்தும் காரணம் பற்றி அமைவன.

ஈ. குழந்தை என்னும் தமிழ்ப்பெயர் பால் பகாப் பெயர்ச்சொல் ஆகும்

(அ) ஈ, இ, அ சரியானவை

(ஆ) ஆ, இ, ஈ சரியானவை

(இ) அ, ஆ, ஈ சரியானவை

(ஈ) இ, அ, ஆ சரியானவை

விடை மற்றும் விளக்கம்

விடை: 

விளக்கம்:

இவ்வினாவில் கூற்று ஆ முழுமையாகக் கொடுக்கப்படவில்லை.

தமிழில் பெயர்ச்சொற்கள் ஒருபோதும் காலம் காட்டுவதில்லை.

வினா அமைப்பு முறை சரியாக இல்லாததினால் விடையை சரியாகக் கணிக்க இயலாது.

57. பொருத்துக:

அ. தூறு – 1.காரணச் சிறப்புப்பெயர்

ஆ. மரம் – 2. இடுகுறிப்பொதுப்பெயர்

இ. வளையல் – 3. புதர்

ஈ. மலை – 4. இடுகுறிப்பெயர்

அ ஆ இ ஈ

(அ) 3 1 2 4

(ஆ) 3 4 1 2

(இ) 2 4 1 3

(ஈ) 1 3 2 4

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) 3 4 1 2

58. பொருத்துக:

கலைச்சொற்கள் தமிழாக்கம்

அ.Editorial – 1. செய்தித்தாள் வடிவமைப்பு

ஆ.Bulletin – 2. தலையங்கம்

இ.Green Proof – 3. சிறப்புச் செய்தி இதழ்

ஈ. Layout – 4. திருத்தப்படாத அச்சுப்படி

அ ஆ இ ஈ

(அ) 4 2 1 3

(ஆ) 2 3 4 1

(இ) 3 1 2 4

(ஈ) 1 4 3 2

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) 2 3 4 1

59. கீழ்க்காணும் “வல்லினம் மிகும் இடம்” குறித்த கூற்றில் பிழையான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

(அ) அந்த, இந்த, எந்த என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்.

(ஆ) ஓரெழுத்து ஒரு மொழியில் வரும் வல்லினம் மிகும்.

(இ) உம்மைத் தொகையில் வல்லினம் மிகும்

(ஈ) சால, தவ என்னும் உரிச்சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) உம்மைத் தொகையில் வல்லினம் மிகும்

விளக்கம்:

உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது.

(எ.கா) தாய் + தந்தை-தாய்தந்தை

இரவு + பகல்-இரவு பகல்

60. பின்வருவனவற்றுள் பண்புப்பெயர்ப் புணர்ச்சியைக் குறிக்காத விதி எது?

(அ) தன்னொற்றிரட்டல்

(ஆ) அடியகரம் ஐயாதல்

(இ) மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்

(ஈ) இடையுகரம் இய்யாதல்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்

விளக்கம்:

“மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்” என்ற விதி மெய்யீற்றுப் புணர்ச்சியில் “மகரஈறு” வகையில் பயன்படுகிறது.

(எ.கா):மரம் + கிளை.

“மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்” என்ற விதிப்படி, மகரமெய் கெட்டு “மர+கிளை” என்றானது. பின் “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி மர+க்+கிளை-மரக்கிளை என்றானது

61. பெருமை + களிறு-பெருங்களிறு.

புணர்ச்சி விதியைத் தேர்ந்தெடு

(அ) ஈறுபோதல், இடையுகரம் இய்யாதல்

(ஆ) ஈறுபோதல், அடியகரம், ஐயாதல்

(இ) ஈறுபோதல், ஆதிநீடல், முன்நின்ற மெய் திரிதல்

(ஈ) ஈறுபோதல், இனமிகல்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) ஈறுபோதல், இனமிகல்

விளக்கம்:

பெருமை + களிறு-பெருங்களிறு.

“ஈறுபோதல்” என்ற விதிப்படி நிலைமொழி ஈற்று “மை” விகுதி கெட்டுப் “பெரு + களிறு” என்றானது. பின் “இனம் மிகல்” என்ற விதிப்படி வருமொழி முதல் வல்லினத்திற்கு(க்) இனமான மெல்லினம் (ங்) மிகுந்து “பெருங்களிறு” என்றானது.

62. “நல்லொழுக்கம் ஒன்றே – பெண்ணே

நல்ல நிலை சேர்க்கும்

புல்லொழுக்கம் தீமை – பெண்ணே

பொய்யுரைத்தல் தீமை”

– இப்பாடலில் உள்ள விளிச்சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

(அ) ஒன்றே

(ஆ) பெண்ணே

(இ) சேர்க்கும்

(ஈ) தீமை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) பெண்ணே

63. “சேர்” என்னும் வேர்ச்சொல்லின் பெயரெச்சம்

(அ) சேர்ந்து

(ஆ) சேர்க

(இ) சேர்ந்த

(ஈ) சேர்ந்தது

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) சேர்ந்த

விளக்கம்:

சேர்-வேர்ச்சொல்; சேர்ந்து-வினையெச்சம்;

சேர்க-வியங்கோள் வினைமுற்று;

சேர்ந்த-பெயரெச்சம்;

சேர்ந்தவர்-வினையாலணையும் பெயர்;

சேர்ந்தது-வினைமுற்று

64. கம்பரின் நூல் பட்டியலில் கீழ்க்கண்டவற்றில் பொருந்தாத நூல் எது?

(அ) ஏரெழுபது

(ஆ) அபிராமி அந்தாதி

(இ) சரசுவதி அந்தாதி

(ஈ) திருக்கை வழக்கம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) அபிராமி அந்தாதி

விளக்கம்:

அபிராமி அந்தாதியை இயற்றியவர் அபிராமி பட்டர். அவரது இயற்பெயர் சுப்பிரமணிய ஐயர்.

65. பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II

அ. ஏற்றப்பாட்டு – 1. ஒருவகை மீன்

ஆ. நாரை – 2. நீர் நிலை

இ. குறவை – 3. நீர் இறைக்கும் போது பாடும் பாட்டு

ஈ. குளம் – 4. கொக்கு வகை

அ ஆ இ ஈ

(அ) 3 2 4 1

(ஆ) 2 4 3 1

(இ) 1 2 4 3

(ஈ) 3 4 1 2

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) 3 4 1 2

66. கீழ்க்காணும் திருக்குறளைத் தக்க மேற்கோள் தொடரால் நிரப்புக.

“ஊழி பெயரினும் தாம்பெயரார் ——“

(அ) சால்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்

(ஆ) தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல்

(இ) பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு

(ஈ) சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்

விளக்கம்:

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி எனப்படு வார்

– திருக்குறள் 989

அதிகாரம்-சான்றாண்மை; பிரிவு-பொருட்பால்; இயல்-குடியியல்.

பொருள்: “சால்புடைமை” என்னும் கடலுக்குக் கரை என்று சொல்லப்படும் பெரியோர்கள், ஊழிக்காலத்தில் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.

67. “நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி”

என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்.

(அ) நாலாயிர திவ்வியப்பிரபந்தம், இருபா இருப்ஃது

(ஆ) இன்னா நாற்பது, இனியவை நாற்பது

(இ) நாலடியார், திருக்குறள்

(ஈ) அகநானூறு, திருக்குறள்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) நாலடியார், திருக்குறள்

68. சுரதா எழுதிய நூல்களுள் தமிழ் வளர்ச்சித் துறைப் பரிசைப் பெற்ற நூல்.

(அ) சுரதாவின் கவிதைகள்

(ஆ) துறைமுகம்

(இ) தேன்மழை

(ஈ) கவரும் சுண்ணாம்பும்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) தேன்மழை

விளக்கம்:

கவிஞர் சுரதா. இயற்பெயர்-தி.இராசகோபாலன்.

பாவேந்தர் பாரதிதாசன் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரை சுப்புரத்தினதாசன் என மாற்றிக் கொண்டார். அதன் சுருக்கமே “சுரதா” ஆயிற்று. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் சிறந்த நூலக்கானப் பரிசை இவரின் “தேன்மழை” என்ற நூல் பெற்றது. தேன்மழை என்ற நூலில் “இயற்கையெழில்” முதல் “ஆராய்ச்சி” ஈறாக பதினாறு பகுதிகளாக இவரது கவிகைள் இடம் பெற்றுள்ளன.

69. ரூபாவதி, கலாவதி ஆகிய நாடகங்களை இயற்றியவர்

(அ) மறைமலையடிகள்

(ஆ) பரிதிமாற்கலைஞர்

(இ) சுந்தரம் பிள்ளை

(ஈ) திரு.வி.க

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) பரிதிமாற்கலைஞர்

விளக்கம்:

19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பரிதிமாற்கலைஞர். “சூரிய நாராயண சாஸ்திரியார்” என்ற தம் பெயரை “பரிதிமாற் கலைஞர்” என மாற்றிக் கொண்டார். “திராவிட சாஸ்திரி” என்ற பட்டம் பெற்றவர்.

இவரின் படைப்புகள்:

தனிப்பாசுரத்தொகை, சித்திரக்கவி.

“ரூபாவதி”, “கலாவதி” – நாடக நூல்கள்.

நாடகவியல் – செய்யுள் வடிவில் இயற்றப்பட்ட நாடக இலக்கண நூல்.

70. ஏழ் பருவ மங்கையரைப் பற்றிக் கூறும் இலக்கியம் எது?

(அ) தூது

(ஆ) உலா

(இ) பள்ளு

(ஈ) அந்தாதி

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) உலா

விளக்கம்:

உலா: 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் “உலா” ஒன்றாகும். இறைவனையோ, அரசனையோ அல்லது மக்களுள் சிறந்தவரையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, அவர்கள் வீதியில் உலா வரும்போது ஏழுபருவத்தைச் சார்ந்த பெண்களும் காதல் கொள்வதாய் கலி வெண்பாவால் பாடப்படுவதாகும்.

ஏழு பருவங்களைச் சார்ந்த பெண்கள்.

பருவங்கள் வயது

பேதை 5-7

பெதும்பை 8-11

மங்கை 12-13

மடந்தை 14-19

அரிவை 20-25

தெரிவை 26-32

பேரிளம் பெண் 33-40

“உலா” என்பது அகப்பொருள் துறையில் பெண்பாற்கைக்கிளை வகையைச் சார்ந்தது.

71. “சின்னச்சீறா” – என்ற நூலை எழுதியவர்

(அ) பனு அகமது மரைக்காயர்

(ஆ) உமறுப்புலவர்

(இ) அப்துல் ரகுமான்

(ஈ) சேக் மீரான்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) பனு அகமது மரைக்காயர்

விளக்கம்:

சீறாப்புராணத்தின் ஆசிரியர் உமறுப்புலவர். சீறாப்புரணத்தில் நபிகள் நாயகத்தின் வாழ்வு முற்றிலுமாகப் பாடி நிறைவு செய்யப்படவில்லை. பனு அகமது மரைக்காயர் என்பவர்தான் பெருமானாரின் தூய வாழ்வு முழுமையும் பாடி முடித்தார். அந்நூல் “சின்னச்சீறா” என்றழைக்கப்படுகிறது

72. “அழுது அடியடைந்த அன்பர்” எனக் குறிப்பிடப் பெறுபவர்

(அ) சுந்தரமூர்த்தி

(ஆ) மாணிக்கவாசகர்

(இ)திருஞானசம்பந்தர்

(ஈ) திருநாவுக்கரசர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) மாணிக்கவாசகர் 

விளக்கம்:

மாணிக்கவாசகர்.

இவர் எழுதிய திருவாசகமும், திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன. இவர் “திருவாதவூரார்” என்றும் அழைக்கப்பட்டார்.

திருப்பெருந்துறை இறைவனை மெய்யுருகப் பாடிக் கசிந்து கண்ணீர் மல்கி அழுது தொழுதவர். இதனால் மாணிக்கவாசகரை “அழுது அடியடைந்த அன்பர்” என்று குறிப்பிடுவர்.

73. உரிய சொல்லால் நிரப்புக.

அறனறிந்து மூத்த அறிவுடையார் ——–

திறனறிந்து தேர்ந்து கொளல்

(அ) கேண்மை

(ஆ) நன்மை

(இ) வன்மை

(ஈ) தகைமை

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) கேண்மை

விளக்கம்:

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறனறிந்து தேர்ந்து கொளல்

– திருக்குறள்-441

அதிகாரம்-பெரியாரைத் துணைகோடல்.

பிரிவு-பொருட்பால்.

இயல்-அரசியல்.

பொருள்: அறத்தின் தன்மைகளை உணர்ந்தவராய்த் தன்னை விட முதிர்ந்த அறிவுடையவரது நட்பினைக் கொள்ளும் வகையறிந்து ஆராய்ந்து பெற்றுக் கொள்ள வேண்டும்

74. கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக:

(அ) “பொல்லாக்காட்சி” என்பதன் பொருள், “மாயத்தோற்றம்” என்பது

(ஆ) வெகுளல் என்பதன் பொருள், “சினத்தல்” என்பது

(இ) வெஃகல் என்பதன் பொருள் “விரும்புதல்” என்பது

(ஈ) “குறளை” என்பதன் பொருள் “புறம்பேசுதல்” என்பது

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) “குறளை” என்பதன் பொருள் “புறம்பேசுதல்” என்பது

விளக்கம்:

மணிமேகலை

“தீவினையென்பது யாது? என வினவின், ஆய்தொடி நல்லாய்!

ஆங்கது கேளாய்,

கொலையே. களவே, காமத் தீ விழைவு,

உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்,

பொய்யே, குறளை, கடுஞ்சொல், பயனில்

சொல் எனச் சொல்லின் தோன்றுவ நான்கும், வெஃகல், வெகுளல்,

பொல்லாக் காட்சி என்று

உள்ளந் தன்னின் உருப்பன மூன்றும் – எனப்

பத்து வகையால் பயன்தெறி புலவர்,

இத்திறம் படரார், படர்குவ ராயின்

விலங்கும் பேயும், நரகரும் ஆகிக்

கலங்கிய உள்ளக் கவலையின் தோன்றுவீர்

– சீத்தலைச் சாத்தனார்

பிரிவு-பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை.

பொருள்:

உடலில் தோன்றும் மூன்று குற்றங்கள் – கொலை, களவு, காமம்

சொல்லில் தோன்றும் நான்கு குற்றங்கள் – பொய் பேசுதல், புறங்கூறுதல்,

கடுஞ்சொல், பயனற்ற சொல்

உள்ளத்தில் தோன்றும் மூன்று குற்றங்கள் – பேரவா, கடுஞ்சினம் தெளிவில்லா அறிவு

A,B, C – மூன்றும் உள்ளத்தில் தோன்றும் குற்றங்கள்.

D – சொல்லில் தோன்றும் குற்றம்.

75. பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II

(அ) திருச்சிற்றம்பலம் – 1. வேதாரண்யம்

(ஆ) திருமுதுகுன்றம் – 2. கும்பகோணம்

(இ) திருமறைக்காடு – 3. சிதம்பரம்

(ஈ) குடமூக்கு – 4. விருத்தாசலம்

அ ஆ இ ஈ

(அ) 4 2 3 1

(ஆ) 3 4 1 2

(இ) 1 3 2 4

(ஈ) 2 3 4 1

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) 3 4 1 2

76. கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றவற்றைத் தெரிவு செய்க:

அ. திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கல்யாண சுந்தரனார் என்பதன் சுருக்கமே திரு.வி.க. என்பது

ஆ. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள “துள்ளம்” என்ற ஊரில் திரு.வி.க. பிறந்தார். இவ்வூர் “தண்டலம்” என்றழைக்கப்படுகிறது.

இ. மனித வாழ்க்கையும் இளங்கோ அடிகளும், முருகன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை, பொதுமை வேட்டல் ஆகிய நூல்களைத் திரு.வி.க. இயற்றினார்

ஈ. தமிழ் நடையில் எளிமையைப் புகுத்திய இவர் தமிழ்த் தென்றல் என்று சிறப்பிக்கப்படுகிறார்

(அ) அ மற்றும் ஈ பொருத்தமற்றவை

(ஆ) ஆ மற்றும் ஈ பொருத்தமற்றவை

(இ) ஈ மற்றும் இ பொருத்தமற்றவை

(ஈ) ஆ மற்றும் இ பொருத்தமற்றவை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) ஆ மற்றும் இ பொருத்தமற்றவை

விளக்கம்:

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள “துள்ளம்” என்ற ஊரில் திரு.வி.க.பிறந்தார்.

இவ்வூர் “தண்டலம்” என்று அழைக்கப்படுகிறது.

“மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும்” என்பது இவருடைய நூலாகும்.

77. பின்வருவனவற்றுள் மரக்கலத்தைக் குறிக்காத சொல் எது?

(அ) பஃறி

(ஆ) திமில்

(இ) ஓடை

(ஈ) வங்கம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) ஓடை

விளக்கம்:

கலத்தைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள்: கப்பல், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புணை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மிதவை, பஃறி, ஓடம். கடலைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள்: ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பௌவம், பரவை, புணரி,

78. கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காட்டுக:

(அ) பாரதிதாசன் திருக்குறளுக்கு உரை எழுதியவர்

(ஆ) பாரதிதாசன் சாகித்திய அகாடெமி பரிசு பெற்றவர்

(இ) பாரதிதாசன் பிரெஞ்சு மொழியில் புலமை பெற்றவர்

(ஈ) பாரதிதாசன் பெண்ணடிமைத்தனத்தைப் போற்றியவர்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) பாரதிதாசன் பெண்ணடிமைத்தனத்தைப் போற்றியவர்

79. பொருத்துக:

அ. இமயம் – 1. சந்தனம்

ஆ. குடகு – 2. பவளம்

இ. கொற்கை – 3. மணிகள்

ஈ. கீழ்க்கடல் – 4. முத்து

அ ஆ இ ஈ

(அ) 3 1 4 2

(ஆ) 2 4 3 1

(இ) 4 3 1 2

(ஈ) 1 4 2 3

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) 3 1 4 2

80. பொருந்தா இணையைக் கண்டறிக.

(அ) பரவை-கடல்

(ஆ) கரி-நரி

(இ) பரி-குதிரை

(ஈ) கணை-அம்பு

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) கரி-நரி

விளக்கம்:

பரவை-கடலைக் குறிக்கும் சொல்.

பரி-குதிரையைக் குறிக்கும் சொல்.

கணை-அம்பைக் குறிக்கும் சொல்.

கரி-யானையைக் குறிக்கும் சொல்.

81. கீழுள்ள பட்டியலில் பொருந்தாத நாடகம்.

(அ) சந்திரரோதயம்

(ஆ) ஓர் இரவு

(இ) தூக்குமேடை

(ஈ) வேலைக்காரி

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) தூக்குமேடை

விளக்கம்:

சந்திரோதயம், ஓர் இரவு, வேலைக்காரி ஆகியவை அறிஞர் அண்ணா எழுதிய நாடகங்கள். தூக்குமேடை-கலைஞர் கருணாநிதி எழுதிய நாடகம்.

82. திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்துத் தந்த மொழி

(அ) ஆங்கில மொழி

(ஆ) இலத்தீன் மொழி

(இ) வட மொழி

(ஈ) பிரெஞ்சு மொழி

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) இலத்தீன் மொழி

83. “பெருங்கை யானை இனநிரை பெயரும் கருங்கை வீதி மருங்கில் போகி” – பாடலடியின் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்.

(அ) கோட்டைவாயில்

(ஆ) அந்தப்புரம்

(இ) சுரங்கப்பாதை

(ஈ) வேனிற்பள்ளி

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) சுரங்கப்பாதை

விளக்கம்:

சிலப்பதிகாரம்

“இளைசூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த

இலங்குநீர்ப் பரப்பின் வலம்புணர் அகழியில்

பெருங்கை யானை இனநரை பெயரும்

சுருங்கை வீதி மருங்கிற் போகி”

– இளங்கோவடிகள்.

பிரிவு-மதுரைக் காண்டம்

உட்பிரிவு-ஊர்காண் காதை.

பாடல் எண்-65.

பொருள்: கட்டுவேலி சூழ்ந்த காவற்காட்டுடன் கூடியதாக நகரைச் சுற்றி வளைத்துக் கிடந்தது, விளங்குகின்ற நீர்ப்பரப்பினையுடைய வெற்றி பொருந்திய மதுரையின் அகழி. அதனிடையே, பெருங்கையினையுடைய யானைத்திரள் செல்வதற்காக அமைந்த நிலத்துப்பாதையின் வழியாத நடந்து, நகருட்சென்றான் கோவலன்.

சுருங்கை வீதி-சுரங்கப்பாதை

84. கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக:

அ. “தேம்பாவணி”யில் அறம், பொருள், வீடு மட்டுமே பாடப்பட்டுள்ளன. இன்பம் பாடப்பெறவில்லை.

ஆ. தேம்பாவணியை “புறநிலைக் காப்பியம்” என்றும், தன்னை புறநிலைக் காப்பியன் என்றும் தொன்னூலில் வீரமாமுனிவர் குறிப்பிடுகிறார்.

இ. சீறாப்புரணாத்தில் மூன்று காண்டங்களும், 92 படலங்களும் உள்ளன.

ஈ. அரபுச் சொற்கள், அரபுப்பெயர்கள் எஞ்ஞான்றும் இடம் பெறாமல் சீறாப்புராணத்தினை நற்றமிழால் யாத்த திறம் போற்றுதற்குரியது.

விடை மற்றும் விளக்கம்

விடை:

ஈ. அரபுச் சொற்கள், அரபுப்பெயர்கள் எஞ்ஞான்றும் இடம் பெறாமல் சீறாப்புராணத்தினை நற்றமிழால் யாத்த திறம் போற்றுதற்குரியது.

85. பின்வருவனவற்றுள் ஓவியக்கலையோடு தொடர்பற்ற சொற்றொடர் எது?

(அ) தேசிகப்பாவை

(ஆ) மர வட்டிகை

(இ) புனையா ஓவியம்

(ஈ) கண்ணுள் வினைஞர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) தேசிகப்பாவை

விளக்கம்:

தேசிகப்பாவை-நாடக மகள்

86. பொருத்துக:

வள்ளல்கள் சிறப்பு

அ. பேகன் – 1. நீலமணியும் நாகம் தந்த கலிங்கத்தையும் சிவனுக்குத் தந்தவன்

ஆ. காரி – 2. மயிலுக்குப் போர்வை தந்தவன்

இ. ஆய் – 3. இரவலர்க்கு நாடுகளைப் பரிசாகத் தந்தவன்

ஈ. ஓரி – 4. இரவலர்க்குத் தேர் தந்தவன்

அ ஆ இ ஈ

(அ) 2 4 1 3

(ஆ) 1 3 4 2

(இ) 3 4 1 2

(ஈ) 2 3 1 4

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) 2 4 1 3

87. பொருத்துக:

பட்டியல் – சொல் பட்டியல் – பொருள்

அ. ஆகாறு 1. செலவழியும் வழி

ஆ. போகாறு 2. திருமணம்

இ. தகர் 3. பொருள் வரும் வழி

ஈ. வதுவை 4. ஆட்டுக்கிடாய்

அ ஆ இ ஈ

(அ) 3 1 4 2

(ஆ) 4 3 2 1

(இ) 2 4 1 3

(ஈ) 3 4 2 1

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) 3 1 4 2

விளக்கம்:

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை

போகாறு அகலாக் கடை.

– திருக்குறள்-478.

பொருள்: ஒருவனது வருவாய் வருகின்ற வழி சிறிதாயினும், அது செலவாகிப் போகும் வழி விரிவு படாவிட்டால், அதனால் அவனுக்குக் கேடில்லை.

ஆகாறு-பொருள் வரும் வழி

போகாறு-பொருள் செலவழியும் வழி

ஊக்கமுடையான் ஒடுக்கம் பொருதகர்

தக்காற்கும் பேருந் தகைத்து

– திருக்குறள்-486.

பொருள்: ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) போருக்குச் செல்லாமல் அடங்கியிருப்பதும், போரிடும் ஆட்டுக்கிடாய் தன் பகையைத் தாக்குவதற்காகப் பின்வாங்கும் தன்மையது.

தகர்-ஆட்டுக்கிடாய்.

ஐங்குநுறூறு-294-ஆவது பாடல்.

எரிமருள் வேங்கை இருந்த தோகை.

இழை அணி மடந்தையின் தோன்றும் நாட!.

இனிது செய்தனையால்; நுந்தை வாழியிர்!

நல் மனை வதுவை அயர, இவள்

பின் இருங் கூந்தல் மலர் அணிந்தோயே!

– கபிலர்

வதுவை-திருமணம்

88. பொருத்துக:

பதிற்றுப் பத்து பாடியவர்

அ. மூன்றாம் பத்து – 1. பெருங்குன்றூர்க் கிழார்

ஆ. ஆறாம்பத்து – 2. அரிசில்கிழார்

இ. எட்டாம் பத்து – 3. காக்கைப்பாடினியார்

ஈ. ஒன்பதாம் பத்து – 4. பாலைக் கௌதமனார்

அ ஆ இ ஈ

(அ) 4 3 2 1

(ஆ) 2 3 1 4

(இ) 1 3 4 2

(ஈ) 2 3 4 1

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) 4 3 2 1

விளக்கம்:

பதிற்றுப் பத்து

சேர மன்னர்கள் பற்றிய இந்நூலில் முதற்பத்தும் இறுதிப்பத்தும் கிடைக்கவில்லை.

இரண்டாம் பத்து: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பற்றி குமட்டூர்க் கண்ணனார் பாடியது.

மூன்றாம் பத்து: பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பற்றி பாலைக் கௌதமனார் பாடியது.

நான்காம் பத்து: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் பற்றிக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது.

ஐந்தாம் பத்து: கடல் பிறகோட்டிய செங்குட்டுவன் மீது பரணர் பாடியது.

ஆறாம் பத்து: ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பற்றி காக்கைப் பாடினியார் பாடியது.

ஏழாம் பத்து: செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பற்றி கபிலர் பாடியது.

எட்டாம் பத்து: தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை பற்றி அரிசில்கிழார் பாடியது.

ஒன்பதாம் பத்து: இளஞ்சேரல் இரும்பொறையைப் பற்றி பெருங்குன்றூர்க்கிழார் பாடியது.

89. குமரகுருபரரின் நூல் பட்டியலில் பொருந்தாத நூல்

(அ) மதுரைக் கலம்பகம்

(ஆ) நந்திக் கலம்பகம்

(இ) கந்தர் கலிவெண்பா

(ஈ) நீதிநெறி விளக்கம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) நந்திக் கலம்பகம்

விளக்கம்:

நந்திக்கலம்பகம், தமிழில் முதன்முதலில் தோன்றிய கலம்பக நூலாகும்.

தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் பாட்டுடைத் தலைவன் ஆவான்.

அறம் வைத்து பாடப்பட்ட நூல் ஆதலால், ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை.

90. தமிழ் – பிரெஞ்சு கையகர முதலி என்ற நூலை வெளியிட்டவர்

(அ) சுரதா

(ஆ) வாணிதாசன்

(இ) ஆலந்தூர் கோ.மோகனரங்கன்

(ஈ) பாரதிதாசன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) வாணிதாசன்

91. “கிறித்தவக் கம்பர்” எனப் புகழப் பெறுபவர்

(அ) வீரமாமுனிவர்

(ஆ) ஜி.யூ.போப்

(இ) எல்லீஸ்

(ஈ) ஹென்றி ஆல்பர்ட்டு கிருட்டிணனார்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) ஹென்றி ஆல்பர்ட்டு கிருட்டிணனார்

விளக்கம்:

“கிறித்தவக் கம்பர்” எனப் புகழப்படுபவர் ஹென்றி ஆல்பர்ட் கிருட்டிணனார். இவர் இயற்றிய நூல்கள் – இரட்சணிய யாத்திரிகம். இரட்சணிய சமய நிர்ணயம், இரட்சணிய மனோகரம், இரட்சணியக் குறள்.

92. கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக:

(அ) மதுரை சொக்கநாதநாயக்கர் மனைவி இராணி மங்கம்மாள்

(ஆ) இராணி மங்கம்மாளின் மகன் அரங்க கிருட்டிண முத்து வீரப்பன் மனைவி இராணி முத்தம்மாள்

(இ) இராணி மங்கம்மாளின் பெயரன் விசயரங்கச் சொக்கநாதன்

(ஈ) பட்டினப்பாலை, பாண்டியனின் வீரச் செயல்களைப் போற்றிக் கூறும் தமிழ்ப்பனுவல்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) பட்டினப்பாலை, பாண்டியனின் வீரச் செயல்களைப் போற்றிக் கூறும் தமிழ்ப்பனுவல்

விளக்கம்:

பட்டினப்பாலை

சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய இந்நூல் 301 அடிகளைக் கொண்டது

93. கீழே தரப்பெற்றவற்றில் எவை சரியானவை என்று எழுதுக:

அ. தென்னாப்பிரிக்க நாட்டில் இந்தியரின் நலனுக்காகப் போராடிய வீரத் தமிழ்மங்கை தில்லையாடி வள்ளியம்மை.

ஆ. தில்லையாடி வள்ளியம்மை நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருக்கடையூருக்குத் தெற்கே மூன்று கி.மீ. தொலைவில் உள்ள தில்லையாடி என்னும் ஊரில் பிறந்தவர்

இ. தனது சகோதரியின் மரணத்தை விடவும், வள்ளியம்மையின் மரணம் தனக்குப் பேரிடியாக இருந்ததென்று காந்தியடிகள் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஈ. காந்தியடிகள் மேற்கொண்ட சத்யாக்கிரக வேள்விப் பணிக்கு முதல் களப்பலி ஆகி அவரை, மகாத்மா எனும் உயர்நிலைக்கு உயர்த்திய பெருமை வள்ளியம்மைக்கு உண்டு.

(அ) அ,இ,ஈ சரியானவை

(ஆ) அ,ஆ,ஈ சரியானவை

(இ) ஆ,இ,ஈ சரியானவை

(ஈ) ஆ,அ,இ சரியானவை

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) அ,இ,ஈ சரியானவை

விளக்கம்:

தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் 1898-ஆம் ஆண்டு முனுசாமி-மங்களம் இணையருக்கு மகளாய்ப் பிறந்தார்.

94. பாண்டிய நாட்டின் கொற்கைத் துறைமுகத்தைப் பற்றித் தம் பயண நூலில் குறிப்பிட்ட வெனிசு நாட்டுப் பயணி

(அ) தாலமி

(ஆ) பிளினி

(இ) யுவான் சுவாங்

(ஈ) மார்க்கோபோலோ

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) மார்க்கோபோலோ

விளக்கம்:

கொற்கை:

இது பாண்டிய மன்னர்களுக்குரிய துறைமுகம். இங்கு முத்துக்குளித்தல் மிகச் சிறப்பாக நடந்ததை வெனிசு நாட்டுப் பயணி மார்க்கோபோலோ குறிப்பிட்டுள்ளார். இவர் வெனிசு நாட்டிலிருந்து இலங்கை சென்று அங்கிருந்து 13-ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டிற்கு வருகை புரிந்தார். முதலாம் சடையவர்மன் பாண்டியன், இலங்கை அரசின் இளவரசனாக நியமித்த சாவகன் மைந்தன் என்பனுடன் பாண்டிய நாடு வந்தார். இவர் வந்த பொழுது ஆட்சியில் இருந்த மன்னன் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆவார்.

95. “பலே, பாண்டியா? பிள்ளை! நீர் ஒரு புலவன், ஐயமில்லை” என்று பாரதியாரால் பாராட்டப்பெற்றவர் யார்,

(அ) நாமக்கல் கவிஞர்

(ஆ) பாரதிதாசன்

(இ) கவிமணி

(ஈ) ச.து.சு. யோகியார்.

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) நாமக்கல் கவிஞர்

விளக்கம்:

1920-இல் பாரதியாரை காரைக்குடியில் சந்திக்கும் வாய்ப்பு நாமக்கல் கவிஞருக்கு கிடைத்தது. அப்போது நாமக்கல் கவிஞரை ஒரு பாடல் பாடச் சொன்னார் பாரதியார். உடனே கவிஞர், எஸ்.ஜி.கிட்டப்பா அவர்களின் நாடகத்திற்காக தான் எழுதிய “தம்மரசைப் பிறர் ஆளவிட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கைகட்டி நின்றபேரும்” என்ற பாடலைப் பாடினார். உடனே பாரதியார், “பலே பாண்டியா? பிள்ளை! நீர் ஒரு புலவர் ஐயமில்லை” என்று பாராட்டினார்.

96. பின்வரும் தகவல்களுள் தவறானதைச் சுட்டுக.

(அ) ந.பிச்சமூர்த்தி மணிக்கொடி எழுத்தாளர்களுள் ஒருவர்

(ஆ) ந.பிச்சமூர்த்தி “காட்டு வாத்து” என்னும் கவிதையினை எழுதியுள்ளார்.

(இ) ந.பிச்சமூர்த்தி “புதுக்கவிதை” முன்னோடி எனப்படுகிறார்

(ஈ) ந.பிச்சமூர்த்தி ஞானபீட விருது பெற்றவர்.

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) ந.பிச்சமூர்த்தி ஞானபீட விருது பெற்றவர்.

97. பொருந்தாத விடையைக் கண்டறிக.

சுந்தர ராமசாமி எழுதிய நாவல்கள்

(அ) புளியமரத்தின் கதை

(ஆ) பஞ்சும் பசியும்

(இ) ஜே.ஜே.சில குறிப்புகள்

(ஈ) குழந்தைகள் ஆண்கள் பெண்கள்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) பஞ்சும் பசியும்

விளக்கம்:

“பஞ்சும் பசியும்” என்ற நாவலை எழுதியவர் தொ.மு.சி.ரகுநாதன் ஆவார். அவரது காலம் அக்டோபர் 20, 1923 முதுல் டிசம்பர் 31, 2001 வரையாகும். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1983-இல் சாகித்ய அகாதெமி விருதினைப் பெற்றார்.

இவரது பிற படைப்புகள்: பாரதி:காலமும் கருத்தும், இளங்கோ அடிகள் யார்? கங்கையும் காவிரியும், பாரதியும் ஷெல்லியும், புயல், சிலை பேசிற்று, மருது பாண்டியன் போன்றவை.

98. பொருத்துக:

கவிதை நூல் கவிஞர்

(அ) புலரி – 1. கலாப்ரியா

(ஆ) சுயம்வரம் – 2. பசுவய்யா

(இ) மின்னற்பொழுதே தூரம் – 3. கல்யாண்ஜி

(ஈ) யாரோ ஒருவனுக்காக – 4. தேவதேவன்

அ ஆ இ ஈ

(அ) 2 3 4 1

(ஆ) 3 4 1 2

(இ) 4 2 3 1

(ஈ) 3 1 4 2

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) 3 1 4 2

99. பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II

(அ) மொழிஞாயிறு – 1. பாரதிதாசன்

(ஆ) மகாகவி – 2. பெருஞ்சித்திரனார்

(இ) புரட்சிக் கவி – 3. தேவநேயப் பாவாணர்

(ஈ) பாவலரேறு – 4. பாரதியார்

அ ஆ இ ஈ

(அ) 1 3 4 2

(ஆ) 3 4 1 2

(இ) 3 1 4 2

(ஈ) 2 4 1 3

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) 3 4 1 2

100. பொருத்துக

பட்டியல் I பட்டியல் II

அ. தமிழ்நாடும், நம்மாழ்வாரும் – 1. கவிமணி, தேசிக விநாயகனார்

ஆ. தேன்மழை – 2. சயங்கொண்டார்

இ. குழந்தைச் செல்வம் – 3. திரு.வி.க

ஈ. இசையாயிரம் – 4. சுரதா

அ ஆ இ ஈ

(அ) 3 2 1 4

(ஆ) 3 4 1 2

(இ) 3 1 2 4

(ஈ) 4 2 1 3

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) 3 4 1 2

Exit mobile version