General Tamil Model Question Paper 10

General Tamil Model Question Paper 10

General Tamil Model Question Paper 10: Tnpsc Aspirants can use this opportunity to check General Tamil Model Question Papers For Tnpsc. General Tamil Model Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Model Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

81. கனி முன் நேர் வருவதும் கனி முன் நிரை வருவதும்

(அ) கலித்தளை

(ஆ) வஞ்சித்தளை

(இ) இயற்சீர் வெண்டளை

(ஈ) வெண்சீர் வெண்டளை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) வஞ்சித்தளை

கலித்தளை – காய்முன் நிரை வருவது. வஞ்சித்தளை – கனிமுன் நிரை மற்றும் கனி முன் நேர் வருவது. கனிமுன் நிரை – ஒன்றிய வஞ்சித்தளை. கனிமுன் நேர் – ஒன்றாத வஞ்சித்தளை. இயற்சீர் வெண்டளை – மா முன் நிரையும், விளம் முன் நேரும் வருவது. வெண்சீர் வெண்டளை – காய் முன் நேர் வருவது

82. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பி தேரினும் அஃதே துணை – கீழ்க்காணும் சொற்களும் எதிர்ச்சொல்லைக் கண்டறிக:

(அ) பரிந்து x வெறுத்து

(ஆ) பரிந்து x விரும்பி

(இ) தெரிந்து x உணர்ந்து

(ஈ) தெரிந்து x ஆராய்ந்து

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) பரிந்து x வெறுத்து

83. “மூதூர்” எத்திணைக்குரிய ஊர்?

(அ) மருதம்

(ஆ) பாலை

(இ) குறிஞ்சி

(ஈ) நெய்தல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) மருதம்

மருதத் திணைக்குரிய ஊர்கள் – பேரூர் மற்றும் மூதூர்.

84. பின்வருவனவற்றுள் “ஈறு போதல்” “இனமிகல்” என்னும் விதிகளின்படி மட்டும் புணராதது

(அ) நெடுங்கடல்

(ஆ) செங்கடல்

(இ) கருங்கடல்

(ஈ) கருங்குயில்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) செங்கடல்

நெடுங்கடல்-நெடுமை + கடல்

1. ஈறுபோதல் விதிப்படி “மை” விகுதி கெட்டு நெடு + கடல் என்றானது.

2. நெடு + கடல் “க”விற்கு இனமான “ங்” தோன்றி நெடுங்கடல் என்றானது

செங்கடல்-செம்மை + கடல்

1. ஈறுபோதல் விதிப்படி செம் + கடல் என்றானது

2. நிலைமொழியீற்றில் மகரம் கெட்டு செ + கடல் என்றானது

3. இனமிகல் விதிப்படி செங்கடல் என்றாது

கருங்கடல்-கருமை + கடல்

ஈறுபோதல்-கரு + கடல்

இனமிகல் – கருங்கடல்

கருங்குயில் – கருமை + குயில்

ஈறுபோதல் – கரு+குயில், இனமிகல் – கருங்குயில்

85. “பண்புப்பெயர்” இலக்கணக்குறிப்புச் சொல்லைத் தேர்க:

(அ) திட்பம்

(ஆ) ஆட்டம்

(இ) கோடல்

(ஈ) பெறுதல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) திட்பம்

ஏனையவை தொழிற்பெயர்கள்

86. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:

(அ) தோப்பு, துப்பு, தீர்ப்பு, தப்பு

(ஆ) துப்பு, தோப்பு, தப்பு, தீர்ப்பு

(இ) தப்பு, தீர்ப்பு, துப்பு, தோப்பு

(ஈ) தப்பு, தீர்ப்பு, தோப்பு, துப்பு

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) தப்பு, தீர்ப்பு, துப்பு, தோப்பு

87. பொருந்தா இணையைக் கண்டறிக:

(அ) சுவடி-நூல்

(ஆ) வெய்யோன்-திங்கள்

(இ) செட்டு-சிக்கனம்

(ஈ) சிந்தை-உள்ளம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) வெய்யோன்-திங்கள்

வெண்யோன் என்றால் ஞாயிறு

88. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்

(அ) தமிழில் பேசுதல் தமிழறிந்தாரிடம் தமிழர் தகுதி மிகு பண்பாகும்.

(ஆ) தமிழறிந்தாரிடம் தமிழர் தகுதி மிகு பண்பாகும் தமிழில் பேசுதல்

(இ) தகுதி மிகு பண்பாகும் தமிழில் பேசுதல் தமிழறிந்தாரிடம் தமிழர்

(ஈ) தமிழர் தமிழறிந்தாரிடம் தமிழில் பேசுதல் தகுதிமிகு பண்பாகும்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) தமிழர் தமிழறிந்தாரிடம் தமிழில் பேசுதல் தகுதிமிகு பண்பாகும்

89. உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர் – இத்தொடரைக் கூறியவர்

(அ) இளங்கோவடிகள்

(ஆ) சீத்தலை சாத்தனார்

(இ) கம்பர்

(ஈ) வால்மீகி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) கம்பர்

மேற்கண்ட செய்யுள் தொடர் பண்டைத் தமிழகத்தில்

1. அறுவை சிகிச்சை முறை இருந்ததைப் பற்றி கூறும் கம்பரின் கூற்றாகும்.

2. பண்டைத் தமிழகத்தில் அறுவை சிகிச்சை முறை பற்றி கூறும் மற்றொரு நூல் மணிமேகலையாகும்.

General Tamil Study Materials

General Tamil Model Questions Pdf

90. “பிள்ளைத் தமிழ்” என்ற பெயரில் ஒரு தனிநூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார்?

(அ) ஒட்டக்கூத்தர்

(ஆ) புகழேந்தி

(இ) குமரகுருபரர்

(ஈ) பகழிக்கூத்தர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) ஒட்டக்கூத்தர்

1. பிள்ளைத் தமிழ் என்பது 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும். தெய்வத்தையோ மக்களுள் மாண்புற்றவரையோ குழந்தையாகப் பாவித்து அவர்தம் அருமை பெருமைகளைச் செய்யுளில் அமைத்துப் புகழ்ந்து பாடுவதாகும்.

2. கி.பி.12-ஆம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தர் எழுதிய “குலோத்துங்கச் சோழன் பிள்ளைத்தமிழ்” என்ற நூலே பிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் எழுதப்பட்ட முதற்நூலாகும்.

91. திருமங்கையாழ்வார் சொல்லணியில் அமைத்துப் பாடிய நூல் எது?

(அ) திருக்குறுந்தாண்டகம்

(ஆ) திருவெழுக்கூற்றிருக்கை

(இ) திருநெடுந்தாண்டகம்

(ஈ) திருவந்தாதி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) திருவெழுக்கூற்றிருக்கை

திருவெழுக்கூற்றிருக்கை என்பது 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்றாகும். சொல்லணியில் பாடப்படும் நூலாகும். திருவெழுக்கூற்றிருக்கை என்னும் பெயரில் திருஞானசம்பந்தர், திருமங்கையாழ்வார், நக்கீர தேவ நாயனார், அருணகிரிநாதர் ஆகியோர் பாடல்கள் இயற்றியுள்ளனர்.

92. விடைத்தேர்க: வீரமாமுனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது?

(அ) முதுமொழி மாலை

(ஆ) செந்தமிழ் இலக்கணம்

(இ) கொடுந்தமிழ் இலக்கணம்

(ஈ) தொன்னூல் விளக்கம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) தொன்னூல் விளக்கம்

தொன்னூல் விளக்கம் வீரமாமுனிவரால் இயற்றப்பட்டது. இவரின் இயற்பெயர் கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி. இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். இவர் இயற்றிய நூல்கள்: தேம்பாவணி-இயேசுவின் தந்தையான சூசையப்பரின் வாழ்க்கை வரலாறு, சதுரகராதி-தமிழ் மொழியில் தோன்றிய முதல் அகராதி நூல், தொன்னூல் விளக்கம்-எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திலக்கணங்களைக் கூறும் நூல். பரமார்த்த குரு கதை-நகைச்சுவைக் கதை. மேலும் ஞானோபதேசம், திருக்காவலூர்க் கலம்பகம், தமிழ், இலத்தீன், பிரெஞ்சு, போர்த்துகீசிய அகராதிகளையும் எழுதியுள்ளார்.

93. “ஏற்பாடு” என்பதன் பொருள்

(அ) சூரியன் உதிக்கும் நேரம்

(ஆ) ஏற்றப்பாட்டுப் பாடுதல்

(இ) சந்திரன் தோன்றும் நேரம்

(ஈ) சூரியன் மறையும் நேரம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) சூரியன் மறையும் நேரம்

வினாவில் “ஏற்பாடு” என்று பிழையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. எற்பாடு என்பதே சரியான சொல்லாகும். எற்பாடு என்பது நெய்தல் திணைக்குரிய சிறுபொழுதாகும். எற்பாடு-பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையாகும். ஏற்பாடு-எல்+பாடு. எல்-சூரியன். பாடு-மறையும் நேரம்

94. “க” – என்ற ஓரெழுத்து ஒரு மொழிக்கு தவறான பொருள் எது?

(அ) அரசன்

(ஆ) காற்று

(இ) மயில்

(ஈ) காத்தல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) காத்தல்

க-அரசன், காற்று, மயில்; கா-காத்தல், சோலை

95. “சலவரைச் சாரா விடுதல் இனிதே”

“சலவர்” – என்றச் சொல்லின் ஆங்கிலச்சொல்

(அ) Sorrow full Person

(ஆ) Importer

(இ) Violent Person

(ஈ) Deceit full Person

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) Deceit full Person

சலவரின் பொருள்-வஞ்சகர். வஞ்சகன்-Deceitful Person (வினாவில் Deceitful என்று தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது). துயரமுடையோன் – Sorrowful Person (வினாவில் Sorrowfull என்று தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது). வன்முறையாளன்-Voilent Person. இறக்குமதியாளர்-Importer.

96. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.

(அ) சீராட்டு, தாலாட்டு, நீராட்டு, பாராட்டு

(ஆ) தாலாட்டு, சீராட்டு, பாராட்டு, நீராட்டு

(இ) நீராட்டு, பாராட்டு, சீராட்டு, தாலாட்டு

(ஈ) பாராட்டு, நீராட்டு, தாலாட்டு, சீராட்டு

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) சீராட்டு, தாலாட்டு, நீராட்டு, பாராட்டு

97. செயப்பாட்டுவினைச்சொற்றொடரைக் காண்க:

(அ) நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது

(ஆ) தச்சன் நாற்காலியைச் செய்தான்

(இ) நாற்காலியைச் செய்தவன் தச்சன்

(ஈ) நாற்காலியைத் தச்சன் செய்தான்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது

நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது-செயப்பாட்டுவினை. B, C, D மூன்றுமே செய்வினை.

98. “கிளியை வளர்த்துப் பூனையின் கையில் கொடுத்தது போல” என்னும் உவமை உணர்த்தும் பொருள் யாது?

(அ) இன்பம்

(ஆ) வருமுன் காத்தல்

(இ) மகிழ்ச்சி

(ஈ) துன்பம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) துன்பம்

99. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:

(அ) வைகுதல் வைகறை வைகலும் வைகல்

(ஆ) வைகறை வைகுதல் வைகல் வைகலும்

(இ) வைகலும் வைகல் வைகுதல் வைகறை

(ஈ) வைகல் வைகலும் வைகறை வைகுதல்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) வைகல் வைகலும் வைகறை வைகுதல்

100. வாக்கியங்களைக் கவனி:

கூற்று (A) : எ.கா:”நான் புத்தகம் கொண்டு வருகிறேன்” என்று பவானி, காயத்ரியிடம் கூறினாள்.

காரணம் (R): ஒருவர் கூறியதை அப்படியே கூறுவது, மேற்கோள் குறியீடு இடம் பெறும் தன்மை, முன்னிலை பெயர்கள் இடம் பெறுவது நேர்க்கூற்று ஆகும்.

(அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல

(ஆ) இவற்றுள் (A) தவறு ஆனால் (R) சரி

(இ) இவற்றுள் (A) சரி ஆனால் (R) தவறு

(ஈ) இவற்றுள் (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்.

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) இவற்றுள் (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்.

வினாவானது தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

கூற்று (A): “நான் புத்தகம் கொண்டு வருகிறேன்” என்று பவானி காயத்திரியிடம் கூறினாள் என்பது நேர்க்கூற்றாகும்.

இவ்வாறு வினா அமைந்திருக்க வேண்டும். நேர்க்கூற்றில் மேற்கோள் குறிகள், தன்மை, முன்னிலைப் பெயர்களும் இங்கு, இப்போது, இவை என்ற கட்டுப்பெயர்களும், நேற்று, இன்று, நாளை என்ற காலப்பெயர்களும் வரும்.

Exit mobile version