General Tamil Model Question Paper 1

General Tamil Model Question Paper 1

General Tamil Model Question Paper 1: Tnpsc Aspirants can use this opportunity to check General Tamil Model Question Papers For Tnpsc. General Tamil Model Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Model Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. பொருளுக்கு ஏற்ற பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

உலக நிலைகளை அறியாதிருத்தல்

(அ) கீரியும் பாம்பும் போல

(ஆ) இலவு காத்த கிளி போல

(இ) கிணற்றுத் தவளை போல

(ஈ) அனலிடைப்பட்ட புழு போல

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) கிணற்றுத் தவளை போல

கீரியும் பாம்பும் போல பகை
இலகு காத்த கிளி போல கிடைக்காத ஒன்றிற்காக காத்திருத்தல்
கிணற்றுத் தவளை போல உலக நிலைகளை அறியாதிருத்தல்
அனலிடைப்பட்ட புழு போல தாங்கவொண்ணா துன்பம் அடைதல்

2. பின்வரும் இலக்கணக்குறிப்புக்குப் பொருந்தாதச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

பண்புத்தொகை:

(அ) நெடுந்தேர்

(ஆ) மலர்ச்சேவடி

(இ) செங்கோல்

(ஈ) கருங்குரங்கு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) மலர்ச்சேவடி

மலர்ச்சேவடி – உவமைத்தொகை.

பண்புத்தொகை “மை” விகுதிபெற்று வரும்.

நெடுமை + தேர் – நெடுந்தேர்.

செம்மை + கோல் – செங்கோல்

கருமை + குரங்கு – கருங்குரங்கு

3. பெயர்ச்சொல்லின் வகையறிதல்:

“கரியன்” என்ற பெயர்சொல்லின் வகை அறிக.

(அ) சினைப்பெயர்

(ஆ) பொருட்பெயர்

(இ) பண்புப்பெயர்

(ஈ) தொழிற்பெயர்

விடை மற்றும் விளக்கம்

(இ) பண்புப்பெயர்

4. “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்

நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்” – இப்பாடலடிகளில் இடம்பெற்றுள்ள ‘நடலை’க்கு இணையான ஆங்கிலச் சொல்லை எழுதுக:

(அ) Affection

(ஆ) Affliction

(இ) Attraction

(ஈ) Addition

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) Affliction

நடலை – துன்பம்

5. “ஆதிரையான்” என்ற பெயர்ச்சொல்லின் வகையறிக:

(அ) பண்புப்பெயர்

(ஆ) தொழிற்பெயர்

(இ) காலப்பெயர்

(ஈ) குணப்பெயர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) காலப்பெயர்

பொன்னன் – பொன் + ன் + அன் (பொருட்பெயர்)

வெற்பன் – வெற்பு + அன் (இடப்பெயர்)

ஆதிரையன் – ஆதிரை + ய் + அன் (காலப்பெயர்)

கண்ணன் – கண் + அன் (சினைப்பெயர்)

கரியன் – கரி + அன் (பண்புப்பெயர்)

சொல்லன் – சொல் + அன் (தொழிற்பெயர்)

6. “இழுக்க லுடையழி ஊற்றுக்கோலற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்” – அடிக்கோடிட்ட சொல்லுக்கு

இணையான ஆங்கிலப் பதத்தினைத் தேர்க:

(அ) An assistant

(ஆ) Supporter

(இ) Staff

(ஈ) Friends

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) Supporter

வினாவில் கொடுக்கப்பட்டுள்ள குறளின் பொருள்: நல்லொழுக்கம் உடைய சான்றோரின் வாய்ச்சொற்கள், வழுக்கும் சேற்றில் உதவும் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் நமக்கு எப்போதும் உதவியாக இருக்கும்.

ஊன்றுகோல் – Supporter

Assistant – உதவியாளர்

Staff – அலுவலர்

Friends – நண்பர்கள்

7. தன் வினை வாக்கியத்தைக் கண்டறிக:

(அ) இலக்கியா புத்தாடை அணிவித்தாள்

(ஆ) இலக்கியா புத்தாடை அணிந்தாள்

(இ) புத்தாடை இலக்கியாவால் அணிவிக்கப்பட்டது

(ஈ) இலக்கியா புத்தாடை அணியாள்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) இலக்கியா புத்தாடை அணிந்தாள்

இலக்கியா புத்தாடை அணிந்தாள் தன்வினை
இலக்கியா புத்தாடை அணிவித்தாள் பிறவினை
புத்தாடை இலக்கியாவால் அணிவிக்கப்பட்டது செயப்பாட்டு வினை
இலக்கியா புத்தாடை அணியாள் எதிர்மறை வாக்கியம்

8. திரு.விக.இயற்றிய “பொதுமை வேட்டல்” என்னும் நூலில் உள்ள பாக்களின் எண்ணிக்கை ——–

(அ) நானூற்று முப்பது

(ஆ) இருநூற்று ஒன்று

(இ) முந்நூற்று ஆறு

(ஈ) நானூற்று எழுபது

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) நானூற்று முப்பது

“பொதுமை வேட்டல்” என்ற நூலின் ஆசிரியர் திரு.வி.க. இந்நூலின் மைக்கருத்து நாடு, மதம், இனம், மொழி, நிறம் அனைத்தையும் கடந்து உலகத்தையே ஒரு குடும்பமாக கருதுவதாகும். இந்நூலின் 44 தலைப்புகளில் 430 பாக்கள் உள்ளன.

9. தழீஇ : இலக்கணக்குறிப்பு தருக:

(அ) செய்யுளிசை அளபெடை

(ஆ) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

(இ) இன்னிசையளபெடை

(ஈ) சொல்லிசை அளபெடை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) சொல்லிசை அளபெடை

தழீஇ – சொல்லிசை அளபெடை. சொல்லிசை அளபெடை “இ” என்ற எழுத்தில் முடிந்திருக்கும். எ.கா: உரனசைஇ, நசைஇ, நிறீஇ

General Tamil Study Materials

General Tamil Model Questions Pdf

10. உலகம் என்ற தமிழ்ச் சொல்லின் வேர்ச்சொல் எது?

(அ) உலகு

(ஆ) உலவு

(இ) உளது

(ஈ) உளம்

விடை மற்றும் விளக்கம்

(அ) உலகு

11. ஒருமைப்பன்மைப் பிழையற்ற தொடர் எது?

(அ) அவன் கவிஞன் அல்லர்

(ஆ) அவன் கவிஞன் அன்று

(இ) அவன் கவிஞன் அல்லன்

(ஈ) அவன் அல்லன் கவிஞன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) அவன் கவிஞன் அல்லன்

அன்று – ஒருமை அஃறிணை, அல்ல – பன்மை அஃறிணை, அல்லன் – ஒருமை உயர்திணை, அல்லர் – பன்மை உயர்திணை, “அவன் கவிஞன் அல்லன்” என்பதே சரியான தொடராகும்.

12. ஞானப்பச்சிலை எனப் போற்றப்படும் மூலிகை ——–

(அ) துளசி

(ஆ) கீழாநெல்லி

(இ) தூதுவளை

(ஈ) கற்றாழை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) தூதுவளை

தூதுவளையின் வேறுபெயர்கள்: தூதுளை, சிங்கவல்லி. இதனை வள்ளலார் “ஞானப்பச்சிலை” எனப்போற்றுகிறார்.

13. பின்வரும் இலக்கணக் குறிப்புக்கு பொருந்திய சொல்லைத் தேர்ந்தெடுக்க:

வினைத்தொகை.

(அ) செந்நாய்

(ஆ) சூழ்கழல்

(இ) வெண்மதி

(ஈ) கண்ணோட்டம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) சூழ்கழல்

சூழ்கழல் – வினைத்தொகை. சூழ்ந்த கழல், சூழ்கின்ற கழல், சூழும் கழல் என மூன்று காலங்களுக்கும் பொருந்தி வருவதால் இது வினைத்தொகையாகும். செந்நாய், வெண்மதி-பண்புத்தொகை. கண்ணோட்டம்-தொழிற்பெயர்.

14. தில்லையாடி வள்ளியம்மை – நாட்டில் பிறந்தார்

(அ) அமெரிக்கா

(ஆ) இத்தாலி

(இ) இந்தியா

(ஈ) தென்னாப்பிரிக்கா

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) தென்னாப்பிரிக்கா

தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் 1898-ஆம் ஆண்டு முனுசாமி-மங்களம் இணையருக்கும் மகளாய்ப் பிறந்தார்.

15. “பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என்று சொல்லக் கேட்டு பாடப்பட்ட நூல் எது?

(அ) அசதிக்கோவை

(ஆ) ஆசாரக்கோவை

(இ) திருக்கோவையார்

(ஈ) மும்மணிக் கோவை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) திருக்கோவையார்

“திருக்கோவையார்” என்ற நூலின் ஆசிரியர் மாணிக்கவாசகர். இவர் எழுதிய திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையில் அமைந்துள்ளன. இவர் தன்னை நாயகியாகக் பாவித்து, ‘திருவெம்பாவை” என்ற நூலை இயற்றினார். அதனால் மனம் மகிழ்ந்த இறைவனார் (சிவபெருமான்) மாணிக்கவாசகரிடம் “பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என்று கூறினார். அதனால் இயற்றப்பட்டதுதான் “திருக்கோவையார்” என்னும் நூலாகும்.

16. பரணி இலக்கியத்திற்குரிய பாவகையைக் குறிப்பிடுக:

(அ) வெண்பா

(ஆ) விருத்தப்பா

(இ) கலி விருத்தம்

(ஈ) கலித்தாழிசை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) கலித்தாழிசை

17. பொருத்துக:

பட்டியல் I – பட்டியல் II

(அ) களவழி நாற்பது – 1. நிலையாமை

(ஆ) முதுமொழிக் காஞ்சி – 2. வேளாண் வேதம்

(இ) நாலடியார் – 3. ஆறு மருந்து

(ஈ) ஏலாதி – 4. புறப்பொருள்

குறியீடுகள்:

அ ஆ இ ஈ

(அ) 3 1 2 4

(ஆ) 2 3 4 1

(இ) 1 3 4 2

(ஈ) 4 1 2 3

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) 4 1 2 3

களவழி நாற்பது, போர்க்கள கொடுமைகளைப் பற்றி விளக்கும் புறப்பொருள் நூலாகும். முதுமொழிக்காஞ்சி வாழ்க்கையின் நிலையாமை பற்றிக் கூறுகிறது. நாலடியாரின் மற்றொரு பெயர் “வேளாண் வேதம்”. ஏலாதி கூறும் ஆறு மருந்துப் பொருள்களாவன. ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு.

18. பொற்கொடி ஆயகலை அறுபத்து நான்கினையும் கற்றாள் – இவ்வாக்கியம் எவ்வகை வினை சார்ந்தது?

(அ) பிறவினை

(ஆ) தன்வினை

(இ) கலவை

(ஈ) செயப்பாட்டு வினை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) தன்வினை

கற்றாள் – தன்வினை ; கற்பித்தாள் – பிறவினை

19. பொருந்தாத தொடரைக் கண்டறிக:

(அ) ஒறுத்தார் – பொறுத்தார்

(ஆ) அஞ்சாமை – துஞ்சாமை

(இ) அறிவுடையார் – அறிவிலார்

(ஈ) வையார் – வைப்பர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) அஞ்சாமை – துஞ்சாமை

எதிர்ப்பதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அஞ்சாமை x அஞ்சுவது என்பதே சரியான எதிர்ப்பதமாகும்.

20. காமராசரின் பிறந்த நாளை ஆண்டுதோறும் எந்த நாளாகக் கொண்டாடுகிறோம்?

(அ) கல்விப் பணி ஆற்றிய நாள்

(ஆ) கல்வி வளர்ச்சி நாள்

(இ) தொழில் முன்னேற்ற நாள்

(ஈ) தேசிய கல்வி நாள்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) கல்வி வளர்ச்சி நாள்

காமராஜரின் பிறந்தநாளான ஜீலை 15-ம் நாளை ஆண்டுதோறும் தேசிய கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

Exit mobile version