7th Tamil Unit 9 Questions

7th Tamil Unit 9 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 7th Tamil Unit 9 Questions With Answers Uploaded Below.

1) கண்ணதாசனின் இயற்பெயர்?

A) முத்தையா

B) முத்தரசு

C) சாத்தப்பன்

D) கவியரசு

விளக்கம்: கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா என்பதாகும். இவர் ஏராளமான திரைப் பாடல்களை எழுதியுள்ளார்.

2) கண்ணதாசன் எழுதிய நூலின் பெயர்?

A) கிறிஸ்து காவியம்

B) இயேசு காவியம்

C) இந்து காவியம்

D) புத்த, சமண அர்த்தங்கள்

விளக்கம்: கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்ட நூல்களுள் ஒன்று இயேசு காவியம் என்பதாகும். இதில் இயேசு நாதர் தம் சீடர்களுக்கு கூறிய அறிவுரை மலைப்பொழிவு என்னும் தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

3) சாந்தம் உடையோர் பேறுபெற்றோர் எனத்

தத்துவமும் சொன்னார் – இந்தத்

தரணி முழுவதும் அவர்களுக்கு உரியது

தலைவர்கள் அவர் என்றார்!” இதில் தாரணி என்ற சொல்லின் பொருள்?

A) இயேசு நாதர்

B) நாடு

C) உலகம்

D) சொற்பொழிவு

விளக்கம்: இப்பாடல் வரிகள் கண்ணதாசன் இயற்றிய இயேசு காவியம் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது. இதில் தாரணி என்றால் உலகம் என்று பொருள்.

4) மனித வாழ்க்கையில் தேவைப்படுவது________?

A) பணம்

B) பொறுமை

C) புகழ்

D) வீடு

விளக்கம்: மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை என்று இயேசு நாதர் தம் சீடர்களுக்கு கூறியதாக. கண்ணதாசன் அவர்கள் தம் இயேசு காவியம் என்னும் நூலில் மலைப்பொழிவு என்னும் தலைப்பின் கீழ் உள்ள ஒரு பாடலில் குறிப்பிடுகிறார் .

5) சாந்த குணம் உடையவர்கள்________முழுவதையும் பெறுவர்?

A) புத்தகம்

B) செல்வம்

C) உலகம்

D) துன்பம்

விளக்கம்: சாந்தம் உடையோர் பேறுபெற்றோர் எனத்

தத்துவமும் சொன்னார் – இந்தத்

தாரணி முழுவதும் அவர்களுக்கு உரியது

தலைவர்கள் அவர் என்றார்!” – என்னும் வரிகளில் சாந்தமுடையோர் இந்த உலகம் முழுவதையும் பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது

6) மலையளவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

A) மலை + யளவு

B) மலை + அளவு

C) மலையின் + அளவு

D) மலையில் + அளவு

விளக்கம்: மலையளவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது மலை + அளவு

7) தன்னாடு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

A) தன் + னாடு

B) தன்மை + னாடு

C) தன் + நாடு

D) தன்மை + நாடு

விளக்கம்: தன்னாடு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது தன் + நாடு என்பதாகும்

8) இவை + இல்லாது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

A) இவையில்லாது

B) இவைஇல்லாது

C) இவயில்லாது

D) இவஇல்லாது

விளக்கம்: இவை + இல்லாது என்னும் சொல்லைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் இவையில்லாது.

9) பொருத்துக

அ. சாந்தம் – 1. சிறப்பு

ஆ. மகத்துவம் – 2. உலகம்

இ. தாரணி – 3. கருணை

ஈ. இரக்கம் – 4. அமைதி

A) 4, 1, 2, 3

B) 1, 4, 2, 3

C) 3, 2, 4, 1

D) 2, 4, 1, 3

விளக்கம்: சாந்தம் – அமைதி

மகத்தும் – சிறப்பு

தாரணி – உலகம்

இரக்கம் – கருணை

10) கவியரசு என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்?

A) கண்ணதாசன்

B) வாணிதாசன்

C) பாரதிதாசன்

D) சுப்பு ரத்தின தாசன்

விளக்கம்: முத்தையா என்னும் இயற்பெயர் கொண்ட கண்ணதாசன் கவியரசு என்னும் சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறார்.

11) கண்ணதாசனுக்குப் பொருந்தாதது?

A) காவியங்கள், கவிதைகள்

B) கட்டுரைகள், சிறுகதைகள்

C) நாடகங்கள், புதினங்கள்

D) காப்பியங்கள், அறநூல்கள்

விளக்கம்: கவியரசு என்னும் சிறப்புப் பெயர் பெற்ற கண்ணதாசன் அவர்கள், காவியங்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், புதினங்கள் போன்ற இலக்கிய வடிவங்களில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்

12) “வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால்

வாழ்க்கை பாலைவனம் – அவர்

தூய மனத்தில் வாழ நினைத்தால்

எல்லாம் சோலைவனம்!” என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?

A) அரத்தமுள்ள இந்து மதம்

B) சேரமான் காதலி

C) இயேசு காவியம்

D) இவற்றுள் எதுவுமில்லை

விளக்கம்: “ வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால்

வாழக்கை பாலைவனம் – அவர்

தூய மனத்தில் வாழ நினைத்தால்

எல்லாம் சோலைவனம்!” என்ற வரிகள் இடம் பெற்ற நூல் கவியரசு கண்ணதாசன் அவர்கள் இயற்றிய இயேசு காவியம் ஆகும். மேற்கண்ட நூல்கள் அனைத்தும் கண்ணதாசனால் இயற்றப்பட்ட நூல்கள்

13) நாமும் நமது ஆற்றலை உணர்ந்து கொண்டால் வாழ்வில் சாதனைகளைப் புரியலாம் என்ற உட்பொருள் கொண்ட கருத்தை மகளுக்குச் சொன்ன கதை என்னும் தலைப்பில் நூலாக எழுதியவர்?

A) சே. பிருந்தா

B) கண்ணதாசன்

C) காயிதே மில்லத்

D) பாவண்ணன்

விளக்கம்: நாமும் நமது ஆற்றலை உணர்ந்து கொண்டால் வாழ்வில் சாதனைகளைப் புரியலாம் என்ற உட்பொருள் கொண்ட கதையை காக்கை மற்றும் குயில் குஞ்சு வைத்து விளக்கியுள்ளார் சே. பிருந்தா அவர்கள்.

14) கன்னட மொழியிலிருந்து பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர்?

A) கண்ணதாசன்

B) பாவண்ணன்

C) வாணிதாசன்

D) கல்யாண்ஜி

விளக்கம்: சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல்வேறு வகையான இலக்கிய வடிவங்களிலும் எழுதி வருபவர் பாவண்ணன் அவர்கள். இவர் கன்னட மொழியிலிருந்து பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

15) பெயர்ச்சொற்கள் எத்தனை வகைப்படும்?

A) 6

B) 5

C) 4

D) 3

விளக்கம்: பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை 1. பொருட்ப்பெயர் 2. இடப்பெயர் 3. காலப்பெயர் 4. சினைப்பெயர் 5. பண்புப்பெயர் 6. தொழிற்பெயர்

16) வீட்டுக்கு வெள்ளை அடித்தான் – இத்தொடரில் பயின்று வந்துள்ள ஆகுபெயர்?

A) இடவாகு பெயர்

B) தொழிலாகு பெயர்

C) பொருளாகு பெயர்

D) பண்பாகு பெயர்

விளக்கம்: இங்கு வெள்ளை என்பது வெண்மை நிறத்தைக் குறிக்காமல் வெண்மை நிறமுடைய சுண்ணாம்பைக் குறிக்கிறது. இதனால் இது பண்பாகு பெயர் ஆகும்.

17) சினை என்பதன் பொருள்?

A) பாகம்

B) உறுப்பு

C) பகுதி

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: சினை என்பது ஆகுபெயரின் வகைகளில் ஒன்றாகும். பொதுவாக சினை என்பது உறுப்பு என்னும் பொருளை தரும். பாகம், பகுதி என்பது உறுப்பை குறிக்கும் வேறு சொற்களாகும்.

18) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) சலசல

B) விறுவிறு

C) மளமள

D) பாம்பு பாம்பு பாம்பு

விளக்கம்: மேற்கண்டவற்றில் சலசல, விறுவிறு, மளமள ஆகிய சொற்கள் பிரித்தால் பொருள் தராது. எனவே இது இரட்டைக் கிளவி எனப்படும். ஆனால் பாம்பு பாம்பு பாம்பு என்பது பிரித்தால் பொருள் தரும். இது அடுக்குத் தொடர் ஆகும்.

19) பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகி வருவது____________?

A) பொருளாகு பெயர்

B) சினையாகு பெயர்

C) பண்பாகு பெயர்

D) இடவாகு பெயர்

விளக்கம்: பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு(சினை) -க்கு ஆகிவருவது பொருளாகு பெயராகும்.

20) தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் திகழ்கிறார் என்று கூறியவர்?

A) தந்தை பெரியார்

B) அறிஞர் அண்ணா

C) காமராசர்

D) இராசகோபாலாச்சாரியார்

விளக்கம்: அறிஞர் அண்ணா அவர்கள் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் தமிழகத்திற்காக அவர் செய்த பங்களிப்பு பற்றி இவ்வாறு கூறியுள்ளார்.

21) காயிதே மில்லத் ஓர் உத்தமமான மனிதர் என்று கூறியவர்?

A) அறிஞர் அண்ணா

B) தந்தை பெரியார்

C) முதறிஞர் இராஜாஜி

D) பெருந்தலைவர் காமராசர்

விளக்கம்: காயிதே மில்லத்தின் தலைமைப் பண்பு பற்றி அறிந்த தந்தை பெரியார் அவர்கள், அவர் ஓர் உத்தமமான மனிதர் என்று கூறியுள்ளார்.

22) காயிதே மில்லத் அவர்கள் எப்போது சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராக இருந்து சிறப்பாக பணியாற்றினார்?

A) 1946 – 1949

B) 1946 – 1956

C) 1946 – 1957

D) 1946 – 1952

விளக்கம்: காயிதே மில்லத் தற்போது தமிழ்நாடு என்று அழைக்கப்படும் சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராக இருந்து சிறப்பாகப் பணியாற்றினார்.

23) கூடு கட்டத் தெரியாத பறவை?

A) காக்கை

B) குயில்

C) சிட்டுக்குருவி

D) தூக்கணாங்குருவி

விளக்கம்: கூடு கட்டத் தெரியாத பறவை குயில் ஆகும். இது காக்கையில் கூட்டில் வசிக்கும்.

24) ‘தானொரு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

A) தா + ஒரு

B) தான் + னொரு

C) தான் + ஒரு

D) தானே + ஒரு

விளக்கம்: தானொரு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது தான் + ஒரு

25) சே. பிருந்தா எழுதிய நூல்களுள் பொருந்தாது எது?

A) மழைப் பற்றிய பகிர்தல்கள்

B) வீடு முழுக்க வானம்

C) மகளுக்குச் சொன்ன கதை

D) இயேசு காவியம்

விளக்கம்: சே. பிருந்தா புகழ்பெற்ற பெண்கவிஞர்களுள் ஒருவர். மழை பற்றிய பகிர்தல்கள், வீடு முழுக்க வானம், மகளுக்குச் சொன்ன கதை ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார். இயேசு காவியம் என்பது கவியரசு கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்டது.

26) இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது என்று தந்தை பெரியாரால் பாராபட்டப்பட்டவர்?

A) கண்ணதாசன்

B) காமராசர்

C) முத்துராமலிங்கத் தேவர்

D) காயிதே மில்லத் முகமுது இஸ்மாயில்

விளக்கம்: தந்தை பெரியார் காயிதே மில்லத் முகமுது இஸ்மாயில் அவர்கள் தமிழகத்திற்காக அவர் செய்த பங்களிப்பு பற்றி இவ்வாறு கூறியுள்ளார்

27) கீழ்கண்டவர்களுள் தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர்?

A) அறிஞர் அண்ணா

B) கவியரசு கண்ணதாசன்

C) பாரதியார்

D) சே. பிருந்தா

விளக்கம்: இவர்களில் தமிழக அரசவைக் கவிராக இருந்தவர் கவியரசு கண்ணதாசன் மட்டுமே.

28) காயிதே மில்லத் பற்றிய கூற்றுகளில் பொருந்தாது எது?

1. மிகச் சிறந்த தொழில் துறை அறிவு பெற்றிருந்தார்

2. தம் வாழ்நாள் முழுவதும் சமய பரப்புரைக்காக அர்ப்பணித்தார்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: காயிதே மில்லத் மிகச்சிறந்த தொழில்துறை அறிவு பெற்றிருந்தார். அவர் தனது வாழ்நாளை சமய நல்லிணக்கத்தைப் பேண அர்ப்பணித்தார்

29) கூற்று: இந்திய அரசு கனிம வளங்களைப் பயன்படுத்தும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியது.

காரணம்: இந்திய நாட்டின் கனிம வளங்களைப் பற்றி நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தவர் காயிதே மில்லத்

A) கூற்று தவறு. காரணம் சரி

B) கூற்று சரி, காரணம் தவறு

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

D) கூற்று காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல

விளக்கம்: காயிதே மில்லத் மிகச் சிறந்த தொழில்துறை அறிவு பெற்றிருந்தார். இந்திய நாட்டின் கனிம வளங்களைப் பற்றி நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தார். இதனால் இந்திய அரசு கனிம வளங்களைப் பயன்படுத்தும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. இதன் மூலம் தொழில்துறை வளர்ச்சி அடைந்தது. மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினைப் பெற்றனர்.

30) காயிதே மில்லத்திற்கு பொருந்தாத ஒன்று?

A) சட்ட மன்ற உறுப்பினர்

B) சட்ட மேலவை உறுப்பினர்

C) மாநிலங்களவை உறுப்பினர்

D) மக்களவை உறுப்பினர்

விளக்கம்: காயிதே மில்லத் விடுதலைக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். விடுதலைப் பெற்ற பின் மாநிலங்களவை உறுப்பினராகவும், மக்களவை உறுப்பினராகவும் இருந்து மக்களுக்காகத் தொண்டு செய்தார்.

31) காயிதே மில்லத்தின் இயற்பெயர்?

A) முகம்மது முபாரக்

B) முகமது காயிதே

C) முகமது பாஷா

D) முகமது இஸ்மாயில்

விளக்கம்: காயிதே மில்லத்தின் இயற்பெயர் முகம்மது இசுமாயில் என்பதாகும்.

32) காயிதே மில்லத் என்பது எம்மொழிச்சொல்?

A) கிரேக்கச் சொல்

B) எபிரேயச் சொல்

C) அரபுச் சொல்

D) இலத்தீன்

விளக்கம்: காயிதே மில்லத் என்னும் வார்த்தை ஒரு அரபு மொழிச் சொல்லாகும்.

33) காயிதே மில்லத் என்னும் சொல்லின் பொருள்?

A) மக்களின் வழிகாட்டி

B) சமுதாய வழிகாட்டி

C) சமூகத்தின் வழிகாட்டி

D) சமய வழிகாட்டி

விளக்கம்: காயிதே மில்லத் என்ற அரபு மொழிச் சொல்லின் பொருள் சமுதாய வழிகாட்டி என்பதாகும்

34) இந்திய சீனப் போர் எப்போது நடைபெற்றது?

A) 1963

B) 1972

C) 1998

D) 1962

விளக்கம்: இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே 1962 இல் போர் ஏற்பட்டது.

35) இந்திய-சீனப் போரின் போது இந்திய நாட்டின் முதன்மை அமைச்சராக இருந்தவர் யார்?

A) லால் பகதூர் சாஸ்திரி

B) ஜவஹர்லால் நேரு

C) காமராசர்

D) இந்திரா காந்தி

விளக்கம்: இந்தியாவிற்கும் அதன் அண்டை நாடான சீனாவிற்கும் 1962 இல் மோதல் ஏற்பட்டது. இது போராக பின்னர் உருப்பெற்றது. இப்போரின் போது இந்திய நாட்டின் முதன்மை அமைச்சராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு அவர்கள்.

36) இந்திய சீனாப் போரின் போர் முனைக்கு தனது ஒரே மகனை அனுப்ப ஆயத்தமாக இருப்பதாகத் தெரிவித்து அப்போதைய இந்திய முதன்மை அமைச்சரான ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு கடிதம் எழுதியவர்?

A) முத்துராமலிங்கத் தேவர்

B) காயிதே மில்லத்

C) நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

D) சர்தார் வல்லபாய் படேல்

விளக்கம்: 1962 இல் ஏற்பட்ட இந்திய சீன போருக்கு தனது ஒரே மகனை அனுப்ப ஆயத்தமாக இருப்பதாகத் தெரிவித்து அப்போதைய இந்திய முதன்மை அமைச்சரான ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு கடிதம் எழுதினார் காயிதே மில்லத்.

37) காயிதே மில்லத்________பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்?

A) தண்மை

B) எளிமை

C) ஆடம்பரம்

D) பெருமை

விளக்கம்: காயிதே மில்லத் அவர்கள் எளிமை என்னும் பண்பிற்க உதாரணமாகத் திகழ்ந்தார்.

38) விடுதலைப் போராட்டத்தின்போது காயிதே மில்லத்_______இயக்கத்தில் கலந்து கொண்டார்?

A) வெள்ளையனே வெளியேறு

B) உப்புக் காய்ச்சும்

C) சுதேசி

D) ஒத்துழையாமை

விளக்கம்: காந்தியடிகளின் வேண்டுகோள் தனக்குள் ஏற்படுத்திய தீராத விடுதலை வேட்கையினால் காயிதே மில்லத் அவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டார்.

39) ஒத்துழையாமை இயக்க காலகட்டத்தில் காயிதே மில்லத் எங்கு பயின்று கொண்டிருந்தார்?

A) திருச்சி தூயவளனார் கல்லூரி

B) தஞ்சை தூயவளனார் கல்லூரி

C) மதுரை தூயவளனார் கல்லூரி

D) நாகர்கோவில் தூயவளனார் கல்லூரி

விளக்கம்: காயிதே மில்லத் அவர்கள் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கப் போரட்டத்தை முன்னெடுத்த போது காயிதே மில்லத் தனது கல்வியை விட நாட்டின் விடுதலையே மேலானது என்று எண்ணி அதில் கலந்து கொண்டார்.

40) காயிதே மில்லத் எவ்வாறு மரியாதையுடன் அழைக்கப்படுகிறார்?

A) பெருமைமிகு

B) கர்மவீரர்

C) கண்ணியமிகு

D) சமயத்துறவி

விளக்கம்: முகமது இஸ்மாயில் என்ற இயற்பெயர் கொண்ட காயிதே மில்லத் கண்ணியமிகு என்ற சிறப்பு பெயருடன் அழைக்கப்படுகிறார்.

41) மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்று வெளிப்படையாக அறிவித்தவர்?

A) தந்தை பெரியார்

B) காமராசர்

C) அறிஞர் அண்ணா

D) காயிதே மில்லத்

விளக்கம்: காயிதே மில்லத் தனது ஒரே மகனின் திருமணத்தை மணக்கொடை(வரதட்சணை) பெறாமல் அத்திருமணத்தை நடத்தினார். அத்துடன் மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்று வெளிப்படையாக அறிவித்தார்.

42) ஆட்சி மொழி பற்றிய விவாதத்தில் கலந்து கொண்ட காயிதே மில்லத் கீழக்கண்ட எதனை உறுதியாக சொன்னார்?

A) மிகுதியான மக்கள் பேசும் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்

B) இலக்கியம் அதிகம் கொண்ட மொழியை ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும்.

C) பழமையான மொழிகளிலே ஒன்றைத்தான் ஆட்சிமொழி ஆக்க வேண்டும்

D) ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்

விளக்கம்: இந்தியா விடுதலை பெற்ற பிறகு நாட்டின் ஆட்சி மொழியைத் தேர்வு செய்வது தொடர்பான கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காயிதே மில்லத் பழமையான மொழிகளிலேயே ஒன்றைத்தான் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

43) காயிதே மில்லத் எம்மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மொழி பற்றிய நாடாளுமன்றக் கூட்டத்தில் குறிப்பிட்டார்?

A) இந்தி

B) ஆங்கிலம்

C) திராவிட

D) தமிழ்

விளக்கம்: இந்தியா விடுதலை பெற்ற பிறகு நாட்டின் ஆட்சிமொழியைத் தேர்வு செய்வது தொடர்பான கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காயிதே மில்லத் தமிழ்மொழியை நாட்டின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

44) இந்த மண்ணிலே முதன் முதலாக பேசப்பட்ட மொழிகள் எது என்று காயிதே மில்லத் குறிப்பிட்டார்?

A) திராவிட மொழிகள்

B) தமிழ் மொழி

C) பாலி மொழி

D) சமஸ்கிருதம்

விளக்கம்: பழமையான மொழிகளிலே ஒன்றைத்தான் ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்றால், அது தமிழ்மொழிதான் என்று நான் உறுதியாகச் சொல்வேன் என்று காயிதே மில்லத் கூறினார். திராவிட மொழிகள் தாம் இந்த மண்ணிலே முதன் முதலாகப் பேசப்பட்ட மொழிகள் என்றும் கூறினார்.

45) மிகவும் இலக்கியச் செறிவு கொண்ட மொழி என்று காயிதே மில்லத் எம்மொழியை குறிப்பிட்டுள்ளார்?

A) சமஸ்கிருதம்

B) இந்தி

C) கன்னடம்

D) தமிழ்

விளக்கம்: திராவிட மொழிகளிலே பழமையான மொழியான தமிழ்மொழிதான் மிகவும் இலக்கியச் செறிவு கொண்ட மொழி என்ற காயிதே மில்லத் கூறினார்.

46) ஃபரூக் கல்லூரியை எங்கு தொடங்க காயிதே மில்லத் காரணமாக இருந்தார்?

A) திருச்சி

B) கேரளா

C) சென்னை

D) கர்நாடகா

விளக்கம்: கல்வி ஒன்று தான் ஒட்டுமொத்தச் சமூக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்ற எண்ணிய காயிதே மில்லத் அவர்கள் கேரளாவில் ஃபரூக் கல்லூரியை தொடங்க காரணமாக இருந்தார்

47) எதிரொலித்தது என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________

A) எதிர் + ஒலித்தது

B) எதில் + ஒலித்தது

C) எதிர + ஒலித்தது

D) எதி + ரொலித்தது

விளக்கம்: எதிரொலித்தது என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது எதிர் + ஒலித்தது என்பதாகும்

48) முதுமை + மொழி என்பதனைச் செர்தெழுதக் கிடைக்கும் சொல்________

A) முதுமொழி

B) முதுமைமொழி

C) முதியமொழி

D) முதல்மொழி

விளக்கம்: முதுமை + மொழி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது முதுமொழி. பண்புப் புணர்ச்சியின் ஈறுபோதல் என்னும் விதிப்படி முதுமை + மொழி – முது + மொழி என்று மாறி பின் முதுமொழி என்று சேரும்.

49) பாவண்ணனின் நூல்களுள் பொருந்தாது எது?

A) வேர்கள் தொலைவில் இருக்கின்றன

B) நேற்று வாழ்ந்தவர்கள்

C) கடலோர வீடு

D) வீடு முழுக்க வானம்

விளக்கம்: வேர்கள் தொலைவில் இருக்கின்றன, நேற்று வாழ்ந்தவர்கள், கடலோர வீடு போன்ற நூல்களை எழுதியவர் பாவண்ணன். வீடு முழுக்க வானம் என்ற நூலை எழுதியவர் சே. பிருந்தா.

50) ஒன்றன் பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது?

A) பொருள்கோள்

B) விணையாலனையும் பெயர்

C) அன்மொழித் தொகை

D) ஆகுபெயர்

விளக்கம்: ஒன்றன் பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது ஆகுபெயர் என்று அழைக்கப்படுகிறது.

51) சடுகுடு போட்டியில் தமிழ்நாடு வெற்றி பெற்றது என்பது என்ன வகையான ஆகுபெயர்?

A) பொருளாகு பெயர்

B) இடவாகு பெயர்

C) காலவாகு பெயர்

D) தொழிலாகு பெயர்

விளக்கம்: தமிழ்நாடு என்னும் பெயர் அவ்விடத்தைக் குறிக்காமல் அவ்விடத்தைச் சேர்ந்த விளையாட்டு அணியைக் குறிப்பதால், இஃது இடவாகுபெயர் ஆகும்.

52) சினையின்(உறுப்பின்) பெயர் முதலாகிய பொருளுக்கு ஆகிவருவது?

A) சினையாகு பெயர்

B) பொருளாகு பெயர்

C) தொழிலாகு பெயர்

D) இடவாகு பெயர்

விளக்கம்: சினை என்றால் உறுப்பு என்று பொருள். சினையின் பெயர் முதலாகிய பொருளுக்கு ஆகிவருவது சினையாகு பெயர் எனப்படும்.

53) இரட்டைக் கிளவி பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. சொற்கள் இரட்டையாக வரும்

2. பிரித்தால் பொருள் தரும்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டம் தவறு

விளக்கம்: இரட்டைக் கிளவி என்பது சொற்கள் இரட்டையாக இணைந்த வந்து, பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்கள் ஆகும். (எ.கா) சலசல, விறுவிறு, மளமள.

54) அடுக்குத் தொடர் எதன் காரணமாக தோன்றாது?

A) விரைவு

B) வெகுளி

C) உவகை

D) அடைமொழி

விளக்கம்: அடுக்குத் தொடர் விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம் ஆகிய பொருள்கள் காரணமாக வரும். அடைமொழியாக வருவது இரட்டைக் கிளவி ஆகும்.

55) இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது_________

A) முதலாகு பெயர்

B) சினையாகு பெயர்

C) தொழிலாகு பெயர்

D) பண்பாகுபெயர்

விளக்கம்: இத்தொடரில் கை என்பது அதனோடு தொடர்புடைய ஒரு நபரைக் குறிக்கிறது. அதாவது ஒரு நபர் பற்றாக் குறையை உணர்த்துகிறது. இங்கு சினையின் (கை) பெயர் முதலாகிய பொருளுக்கு (மனிதன்) பெயர் முதலாகிய பொருளுக்கு ஆகிவருவது சினையாகுபெயர் எனப்படும்.

56) திசம்பர் பூ சூடினாள் என்பது என்ன வகையான ஆகுபெயர்?

A) பொருளாகு பெயர்

B) காலவாகு பெயர்

C) இடவாகு பெயர்

D) சினையாகு பெயர்

விளக்கம்: இங்கு திசம்பர் என்னும் காலப்பெயர் அக்காலத்தில் பூக்கும் பூவை குறிப்பதால் இது காலவாகு பெயர் ஆகும்.

57) அடைமொழியாய் குறிப்புப் பொருளில் வருவது?

A) இரட்டைக் கிளவி

B) அடுக்குத் தொடர்

C) ஆகுபெயர்

D) அன்மொழித்தொகை

விளக்கம்: இரட்டைக் கிளவி வினைக்கு அடைமொழியாகக் குறிப்புப் பொருளில் வரும். இவை பிரித்தால் பொருள் தராது.

58) அடுக்குத் தொடரில் ஒரே சொல் ___________ முறை முதல் _______ முறை வரை வரும்.

A) 2-3

B) 2-5

C) 2-4

D) 2-6

விளக்கம்: அடுக்குத் தொடரில் உள்ள சொற்களைத் தனித்தனியே பிரித்துப் பார்த்தாலும் அவற்றுக்கு பொருள் உண்டு. இவை 2 முதல் 4 முறை வரை வரும்

59) மழை சடசடவெனப் பெய்தது-இத்தொடரில் அமைந்துள்ளது__________

A) அடுக்குத் தொடர்

B) இரட்டைக் கிளவி

C) தொழிலாகு பெயர்

D) பண்பாகு பெயர்

விளக்கம்: இத்தொடரில் உள்ள சொல் சடசட என்பது இரண்டு முறை வந்துள்ளது. இதனை பிரித்தாலும் பொருள் தராது. இது வினைக்கு அடைமொழியாய் குறிப்புப் பொருளில் வந்துள்ளது. எனவே இதனை இரட்டைக் கிளவி எனலாம்.

60) இனிப்பு தின்றான் என்பது எவ்வாகை ஆகுபெயர்?

A) பொருளாகு பெயர்

B) சினையாகு பெயர்

C) பண்பாகு பெயர்

D) தொழிலாகு பெயர்

விளக்கம்: இத்தொடரில் உள்ள இனிப்பு என்னும் பண்புப் பெயர் தின்பண்டத்தைக் குறிப்பதால் இது பண்பாகுபெயர் ஆயிற்று.

61) பொங்கல் உண்டான் இத்தொடரில் பயின்று வந்துள்ள ஆகுபெயர்?

A) பொருளாகு பெயர்

B) சினையாகு பெயர்

C) பண்பாகு பெயர்

D) தொழிலாகு பெயர்

விளக்கம்: இத்தொடரில் பொங்கல்(பொங்குதல்) என்னும் தொழிற்பெயர் அத்தொழிலால் உருவான உணவினைக் குறிப்பதால் இது தொழிலாகுபெயர் ஆகும்.

62) பாய்மரக் கப்பல் என்னும் நூலை எழுதியவர்?

A) கவியரசு

B) சே. பிருந்தா

C) பால் வண்ணன் பிள்ளை

D) பாவண்ணன்

விளக்கம்: பாய்மரக் கப்பல் என்னும் நூலை எழுதியவர் பாவண்ணன். இவர் சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல்வேறு வiயான இலக்கிய வடிவங்களிலும் எழுதி வருகிறார்.

63) கல்வி ஒன்றதான் ஒட்டுமொத்தச் சமூக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று எண்ணியவர்?

A) காயிதே மில்லத்

B) காந்தியடிகள்

C) ஜவஹர்லால் நேரு

D) அறிஞர் அண்ணா

விளக்கம்: கல்வி ஒன்றுதான் ஒட்டுமொத்தச் சமூக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று எண்ணினார் காயிதே மில்லத். “கல்வி மிகுந்திடில் கழிந்திடும் மடமை” என்ற முதுமொழிக்கு ஏற்பக் கல்வி நிறுவனங்களை உருவாக்க நினைத்தார் காயிதே மில்லத்.

64) ஜமால் முகம்மது கல்லூரியை எங்கு தொடங்க காயிதே மில்லத் காரணமாக இருந்தார்?

A) கேரளா

B) நாகர்கோவில்

C) தஞ்சாவூர்

D) திருச்சி

விளக்கம்: “கல்வி மிகுந்திடில் கழிந்திடும் மடமை” என்ற முதுமொழிக்கு ஏற்பக் கல்வி நிறுவனங்களை உருவாக்க நினைத்தார் காயிலே மில்லத். அதன்படி திருச்சியில் ஜமால் முகம்மது கல்லூரி, கேரளாவில் ஃபரூக் கல்லூரி ஆகியவற்றைத் தொடங்க அவரே காரணமாக இருந்தார்.

65) கூற்றுகளை ஆராய்க.

1. தமிழக அரசியல் வானில் கவ்வியருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார் – தந்தை பெரியார்

2. இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர் – அறிஞர் அண்ணா

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

விளக்கம்: 1. தமிழக அரசியல் வானில் கவ்வியருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார் – அறிஞர் அண்ணா

2. இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர் – தந்தை பெரியார்

66) பொருத்துக.

அ. சமயம் – 1. Simplicity

ஆ. எளிமை – 2. Religion

இ. ஈகை – 3. Dignity

ஈ. கண்ணியம் – 4. Charity

A) 2, 1, 3, 4

B) 2, 1, 4, 3

C) 1, 2, 3, 4

D) 1, 2, 4, 3

விளக்கம்:சமயம் – Religion

எளிமை – Simplicity

ஈகை – Charity

கண்ணியம் – Dignity

67) பொருத்துக.

அ. தத்துவம் – 1. Sincerity

ஆ. நேர்மை – 2. Philosophy

இ. வாய்மை – 3. Preaching

ஈ. உபதேசம் – 4. Intergrity

A) 2, 4, 1, 3

B) 4, 3, 2, 1

C) 4, 3, 1, 2

D) 3, 4, 1, 2

விளக்கம்:தத்துவம் – Philosophy

நேர்மை – Integrity

வாய்மை – Sincerity

உபதேசம் – Preaching

68) Astronomy என்ற சொல்லின் தமிழ் மொழிபெயர்ப்பு?

A) விண்ணியல்

B) விண்மீன்

C) கோள்கள்

D) வானியல்

விளக்கம்: Astronomy என்பது வானியல் என்ற சொல்லைக் குறிக்கும்.

69) Doctrine என்ற சொல்லின் தமிழ்மொழிபெயர்ப்பு?

A) மருத்துவர்

B) மருத்துவத்துறை

C) கொள்கை

D) பட்டம்

விளக்கம்: Doctrine என்ற சொல்லின் தமிழ்மொழிபெயர்ப்பு கொள்கை என்பதாகும்.

70) கூற்றுகளை ஆராய்க.

1. அடுக்குத் தொடரில் சொற்கள் தனித்தனியே நிற்கும்.

2. இரட்டைக் கிளவியின் சொற்கள் இணைந்தே நிற்கும்

A) இரண்டும் சரி

B) இரண்டும் தவறு

C) 1 மட்டும் சரி

D) 2 மட்டும் சரி

விளக்கம்: அடுக்குத் தொடரில் சொற்கள் தனித்தனியே நிற்கும். சொற்கள் 2 லிருந்து 4 முறை வரை ஒரே சொல் இடம்பெறும். இரட்டைக்கிளவியில் செற்கள் இணைந்தே நிற்கும். சொற்கள் 2 முறை மட்டுமே இடம் பெறும்.

Exit mobile version