7th Tamil Unit 3 Questions
Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.
6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.
First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.
Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 7th Tamil Unit 3 Questions With Answers Uploaded Below.
1) நாட்டைக் காக்க போர்க்களம் செல்வதை தம் முதன்மைக் கடமைகளுள் ஒன்றாகக் கருதியவர்கள் யார்?
A) ஆங்கிலேயர்கள்
B) மராத்தியர்கள்
C) தமிழர்கள்
D) இந்தியர்கள்
விளக்கம்: தமிழர்கள் பழங்காலம் முதலே கல்வியிலும் வீரத்திலும் சிறந்து விளங்கினர். அவர்கள் தம் நாட்டைக் காக்க போர்க்களம் செல்வதைத் தம் முதன்மையான கடமைகளுள் ஒன்றாகக் கருதினர்.
2) “சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன் _______” எனத் தொடங்கும் பாடலைப் பாடலைப் பாடியவர் யார்?
A) ஒளவையார்;
B) காக்கை பாடினியார்
C) மங்கையர்கரசியார்
D) காவற்பெண்டு
விளக்கம்: “சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டு உளனோ எனவினவுதி என்மகன்
யாண்டுஉளன் ஆயினும் அறியேன் ஒரும்
புலிசேர்ந்து போகிய கல்அனை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போரக்களத் தானே”
– காவற்பெண்டு
3) “புலி தங்கிய குகை” எனும் பாடலில் தம் மகன் எங்கு இருக்கக்கூடும் என புலவர் கூறுகிறார்?
A) அரசவை
B) போர்க்களம்
C) புனித்தலம்
D) ஆழ்கடல்.
விளக்கம்: “புலி தங்கிய குகை” எனும் பாடலில் தம் மகன் போர்க்களத்தில் இருக்கக்கூடும் என புலவர் கூறுகிறார்.
4) தவறானதைத் தேர்க.
A) சிற்றில் – குடிசை
B) யாண்டு – எங்கே
C) கல் அளை – கற்குகை
D) ஈன்ற வயிறு – பெற்றெடுத்த வயிறு
விளக்கம்: சிற்றில் என்பதன் பொருள் “சிறுவீடு” ஆகும்.
சிற்றில் – சிறுவீடு
யாண் – எங்கே
கல் அளை – கற்குகை
ஈன்ற வயிறு – பெற்றெடுத்த வயிறு
5) சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் யார்?
A) ஒளவையார்
B) காக்கை பாடினியார்
C) மங்கையர்கரசியார்
D) காவற்பெண்டு
விளக்கம்: காவற்பெண்டு சங்க காலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவர். சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் என்பர்.
6) காவற்பெண்டு பாடிய “புலி தங்கிய குகை” பாடலின் கருப்பொருள் என்ன?
A) சங்ககாலம்
B) சங்க கால மக்களின் பண்பாடு
C) சங்ககால மக்களின் வீரம்
D) எதுவுமில்லை
விளக்கம்: சங்க கால மக்களின் வீரத்தைக் கட்டுப்பாடுகளாகக் கொண்டு “புலி தங்கிய குகை” என்னும் பாடலை காவற்பெண்டு பாடினார்.
7) காவற்பெண்டு பாடிய ஒரே ஒரு பாடல் எதில் இடம்பெற்றுள்ளது?
A) அகநானூறு
B) புறநானூறு
C) பதிற்றுப்பத்து
D) பரிபாடல்
விளக்கம்: காவற்பெண்டு பாடிய ஒரே ஒரு பாடலான “புலி தங்கிய குகை” புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது. இது புறநானூற்றில் 86-ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளது.
8) பண்டைக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறை நாகரீகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூல் எது?
A) புறநானூறு
B) ஐங்குறுநூறு
C) அகநானூறு
D) முல்லைப்பாட்டு
விளக்கம்: புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூல் பண்டைக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, நாகரீகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூலாக விளங்குகிறது.
9) “யாண்டு” என்னும் சொல்லின் பொருள் என்ன?
A) எனது
B) எங்கு
C) எவ்வளவு
D) எது
விளக்கம்: “யாண்டு” என்னும் சொல்லின் பொருள் “எங்கு” என்பதாகும்.
10) “யாண்டுளனோ?” என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?
A) யாண்டு + உளனோ?
B) யாண் + உளனோ?
C) யா + உளனோ?
D) யாண்டு + உனோ?
விளக்கம்: யாண்டு + உளனோ? = யாண்டுளனோ? யாண்(ட் + உ) + உளனோ? என்பதில் “உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும்” என்னும் விதிப்படி ‘உ’கெட்டது. பின் “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” எனும் விதிப்படி யாண்ட் + உளனோ? என்பது யாண்டுளனோ? என்றானது.
11) “கல் + அளை” சேர்த்தெழுதுக
A) கல்லளை
B) கல்அளை
C) கலலளை
D) கல்லுளை
விளக்கம்: கல் + அளை=கல்லளை எனப் புணரும்
12) சமூகத்தைப் பற்றிய கதையைக் கூறும் பாடல் எது?
A) கதைப்பாடல்
B) சமூகக்கதைப்பாடல்
C) வரலாற்றுக்கதைப்பாடல்
D) புராணக்கதைப்பாடல்
விளக்கம்: தமிழ்நாட்டில் பல வகையான நாட்டுப்புற இலக்கியங்கள் வழங்கி வருகின்றன. அவற்றுள் கதைப்பாடல் என்பது கதை தழுவிய நிலையில் அமையும் பாடல் ஆகும். இதில் சமூகத்தைப் பற்றி பாடும் பாடல் சமூகப்பாடல் ஆகும்.
13) “பாஞ்சை வளம்” என்பது எவ்வகை கதைப்பாடல்
A) வரலாற்றுக்கதைப் பாடல்
B) புராணக் கதைப்பாடல்
C) சமூகக்கதைப்பாடல்
D) எதுவுமில்லை
விளக்கம்: “பாஞ்சை வளம்” என்பது வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றைக் கூறுவதால் இது “வரலாற்றுக்கதைப் பாடல்” ஆகும்.
14) பொருத்துக
அ. சூரன் – 1. மிகுதி
ஆ. பொக்கிஷிம் – 2. செல்வம்
இ. சாஸ்தி – 3. பெரும்பரப்பு
ஈ. விஸ்தாரம் – 4. வீரன்
A) 4231
B) 4321
C) 1432
D) 4213
விளக்கம்: சூரன் – வீரன்
பொக்கிஷம் – செல்வம்
சாஸ்தி – மிகுதி
சாஸ்திரம் – பெரும்பரப்பு
15) பொருத்துக.
அ. வாரணம் – 1. குதிரை
ஆ. பரி – 2. பாக்கு
இ. சிங்காரம் – 3. யானை
ஈ. கழுகு – 4. அழகு
A) 4123
B) 4321
C) 3142
D) 3124
விளக்கம்: வாரணம் – யானை
பரி – குதிரை
சிங்காரம் – அழகு
கமுகு – பாக்கு
16) கட்டபொம்மன் ஆட்சி செய்த ஊர் எது?
A) சிவகங்கை
B) தேனி
C) மதுரை
D) பாஞ்சாலகுறிச்சி
விளக்கம்: குறையில்லாத வீரனாகிய கட்டபொம்மன் ஆட்சி செய்த ஊர்
பாஞ்சாலங்குறிச்சி
17) பொருத்துக
அ. யானை – 1. கூவும்
ஆ. குதிரை – 2. அகவும்
இ. மயில் – 3. கூடம்
ஈ. குயில் – 4. கொட்டில்
A) 3421
B) 4321
C) 3412
D) 4312
விளக்கம்: யானை – கூடம்
குதிரை – கொட்டில்
மயில் – அகவும்
குயில் – கூவும்
18) “பாஞ்சை வளம்” எனும் பாடலில், நாட்டின் வளத்தைக் கூறி விளையாடுவது எது?
A) மயில்
B) முயல்
C) குயில்
D) பசு
விளக்கம்: “சோலையில் மாங்குயில் கூப்பிடுமாம் – வளம் சொல்லி மயில் விளையாடுமாம்” என்ற வரிகள் நாட்டின் வளத்தைக் கூறி விளையாடுவது மயில் என்கிறது.
19) “பஞ்சை வளம்” எனும் பாடலில், முயலானது தன்னைப் பிடிக்கவரும் எந்த விலங்கை விரட்டிவிடும்?
A) மயில்
B) புலி
C) குயில்
D) நாய்
விளக்கம்: “முயல் நாயை விரட்டிடுமாம் – நல்ல முனைப்புள்ள பாஞ்சால நாட்டினிலே” என்னும் வரிகள். வீரம் மிகுந்த நாடாகிய பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள முயலானது தன்னைப் பிடிக்கவரும் வேட்டை நாயை எதிர்த்து விரட்டிவிடும்.
20) எவை நீர்நிலையின் ஒரே துறையில் நின்று நீர்க் குடிக்கும் என்று “பாஞ்சை வளப்”பாடல் கூறுகிறது?
A) முயல், குயில்
B) முயல், நாய்
C) பசு, புலி
D) எதுவுமில்லை
விளக்கம்: “பசுவும் புலியும் ஒரு துறையில் – வந்து பால்குடிக்குந் தண்ணீர் தான் குடிக்கும்” அதாவது, பசுவும் புலியும் நீர்நிலையின் ஒரே துறையில் நின்று பால்போன்ற தண்ணீரைக் குடிக்கும்.
21) மன்னன் கட்டபொம்மனின் பெயரைச் சொன்னால் கநற்து வைத்த பாலைக்கூட எது குடிக்காது என “பாஞ்சை வளம்” பாடல் கூறுகிறது?
A) குயில்
B) மயில்
C) காகம்
D) நாய்
விளக்கம்: மன்னன் கட்டபொம்மனின் பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக்கூடக் காகம் குடிக்காது. “கறந்து பாலையுங் காகங் முடியாது – எங்கள் கட்டபொம்மு துரை பேரு சொன்னால்”
22) “பாஞ்சை வளம்”எனும் வரலாற்றுக் கதைப்பாடல் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது?
A) வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல்
B) வானமாமாலைக் கதைப்பாடல்
C) வீரபாண்டியார் கதைப்பாடல்
D) எதுவுமில்லை
விளக்கம்: கட்டபொம்மன் கதைப்பாடல் பல வடிவங்களில் வழங்கி வருகின்றன. எனினும் “பாஞ்சைவளம்” எனும் கதைப்பாடல் வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
23) “வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல்” என்னும் நூலைத் தொகுத்தவர் யார்?
A) கட்டபொம்மன்
B) பாரதியார்
C) பாரதிதாசன்
D) நா. வனமாமலை
விளக்கம்: “வீரபாண்டிய கட்டபொம்மு கதைப் பாடல்” என்னும் நூலைத் தொகுத்து வெளியிட்டவர் நா. வானமலை
24) ஊர்வலத்தின் முன்னால் எது அசைந்து வந்தது?
A) தோரணம்
B) வானரம்
C) வாரணம்
D) சந்தனம்
விளக்கம்: ஊர்வலத்தின் முன்னால் தோரணம் அசைந்து வந்தது.
25) மெத்தை வீடு என்று குறிபிடப்படுவது எது?
A) மெத்தை விரிக்கப்பட்ட வீடு
B) படுக்கையறை உள்ள வீடு
C) மேட்டுப் பகுதியிலுள்ள வீடு
D) மாடி வீடு
விளக்கம்: “வீட்டிலுள்ள மணிமேடைகளாம் – மெத்தை வீடுகளா மதிலோடை களாம்” இதில் மெத்தை வீடு என்பது மாடி வீட்டைக் குறிக்கும்.
26) “பூட்டுக்கதவுகள்” பிரித்தெழுதுக
A) பூட்டு + கதவுகள்
B) பூட்டும் + கதவுகள்
C) பூட்டின் + கதவுகள்
D) பூட்டி + கதவுகள்
விளக்கம்: பூட்டுங்கதவுகள் = பூட்டு + கதவுகள் எனப் புணரும்
27) ‘தோரணமேடை’- பிரித்தெடுதுக
A) தோரணம் + மேடை
B) தோரணூ + மேடை
C) தோரணம் + ஒடை
D) தோரணம் = ஓடை
விளக்கம்: தோரணமேடை = தோரணம் + மேடை எனப் பிரியும்
28) வாசல் + அலங்காரம் சேர்த்தெழுதுக
A) வாசல்அலங்காரம்
B) வாசலங்காரம்
C) வாசலயங்காரம்
D) வாசலிங்காரம்
விளக்கம்: வாசல் + அலங்காரம்=வாசலலங்காரம் எனப்புணரும்
29) தேசியம் உடல், தெய்வீகம், உயிர் எனக் கருதி மக்கள் தொணடு செய்தவர் யார்?
A) பசும்பொன் உ. முத்துராமலிங்கர்
B) ஈ.வெ.ரா. பெரியார்
C) உக்கிர பாண்டித்தேவர்
D) சுபாஷ் சந்திரபோஸ்
விளக்கம்: தேசியம் – உடல், தெய்வீகம் – உயிர் எனக் கருதி மக்கள் தொண்டு செய்தவர் பசும்பொன் உ. முத்துராமலிங்கதேவர். இவர் ‘வீரப்பேச்சால்’ எத்தனையோ தியாகிகளையும் விவேகப்பேச்சால் எத்தனையோ அறிவாளிகளையும் உண்டாக்கியவர்.
30) “சுத்தத் தியாகி” எனப் போற்றப்பட்டவர் யார்?
A) பெரியார்
B) உக்கிரப் பாண்டித்தேவர்
C) பசும்பொன்
D) மு.வ
விளக்கம்: ‘சுத்தத் தியாகி’ எனப் போற்றப்பட்டவர் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்
31) ‘சுத்தத் தியாகி’ எனப் பசும்பொன்னாரை பாராட்டியவர் யார்?
A) மு.வ
B) திரு.வி.க
C) நேதாஜி
D) பெரியார்
விளக்கம்: சுத்தத் தியாகி எனப் பசும்பொன்னாரை பாராட்டியவர் தந்தை பெரியார். ஏனெனில் உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சால் பெற்றவர் பசும்பொன்னார்.
32) முத்துராமலிங்கத்தேவர் எப்போது பிறந்தார்?
A) 1905
B) 1908
C) 1909
D) 1916
விளக்கம்: முத்துராமலிங்கத்தேவர் கி.பி(பொ.ஆ) 1908 ஆம்ஆண்டு அக்டோபர் திங்கள் 30-ஆம் நாள் பிறந்தார்
33) முத்துராமலிங்கத்தேவர் எந்த ஊரில் பிறந்தார்?
A) மதுரை
B) கமுதி
C) வேலூர்
D) இராமநாதபுரம்
விளக்கம்: முத்துராமலிங்கத்தேவர் கி.பி(பொ.ஆ) 1908-ஆம் அண்டு அக்டோபர் 30- ஆம் நாள் இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் என்னும் ஊரில் செல்வச் செழிப்பு மிகுந்த குடும்பத்தில் பிறந்தார்.
34) முத்துராமலிங்கத்தேவரின் பெற்றோர் யார்?
A) உக்கிர பாண்டியத்தேவர் – இந்திராணி அம்மையார்
B) வெங்கடாசலம் – இந்திராணி அம்மையார்
C) சுப்புரத்தினம் – கண்ணம்மாள்
D) உக்கிர பாண்டித்தேவர் – மங்கையர்கரசியார்
விளக்கம்: முத்துராமலிங்கத்தேவரின் பெற்றோர் உக்கிர பாண்டித்தேவர்- இந்திராணி அம்மையார் ஆவார். இவர் இளைமையிலேயே அன்னையை இழந்தவரால் இசுலாமியர் தாய் ஒருவரால் பாலூட்டி வளர்க்கப்பட்டார்.
35) முத்துராமலிங்கத்தேவர் தன் தொடக்கக் கல்வியை எங்கு பயின்றார்?
A) கமுதி
B) மதுரை
C) இராமநாதபுரம்
D) பசுமை
விளக்கம்: முத்துராமலிங்கத்தேவர் தன் தொடக்கக்கல்வியைக் கமுதியிலும், உயர்நிலைக் கல்வியை மதுரை பசுமலைப் பள்ளியிலும், இராமநாதபுரத்திலும் பயின்றார்.
36) முத்துராமலிங்கத்தேவர், இராமநாதபுரத்தில் படித்துக்கொண்டிருக்கும் அங்கு என்ன நோய் பரவியது?
A) H1N1
B) HIV
C) பிளேக்
D) அம்மை நோய்
விளக்கம்: முத்துராமலிங்கத் தேவர், இராமநாதபுரத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது அவ்வூரில் பிளேக், நோய் பரவியது. அவரது படிப்பும் பாதியில் நின்றது. பின் தாமாகவே நிறைய நூல்களைப் படித்துத் தமது அறிவையும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டார்.
37) முத்துராமலிங்கத் தேவர் எந்த இருமொழிகளில் சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற்றிருந்தார்?
A) தமிழ், சமஸ்கிருதம்
B) தமிழ், இந்தி
C) தமிழ், தெலுங்கு
D) தமிழ், ஆங்கிலம்
விளக்கம்: பசும்பொன்னார் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற்றிருந்தார்.
38) சரியான கூற்றைத் தேர்க.
1. முத்துராமலிங்கத்தேவர் இளமையிலேயே அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தார்.
2. மேலும், அவர் சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கிச் சுடுதல், சோதிடம், மருத்துவம் போன்றவற்றில் ஆற்றல் உடையவர்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: முத்துராமலிங்கத்தேவர், சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கிச் சுடுதல், சோதிடம், மருத்துவம் போன்ற பல துறைகளிலும் ஆற்றல் உடையவராக விளங்கினார். மேலும் இவர் இளமையிலேயே அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தார்.
39) தென்னாட்டில் “வாய்ப்பூட்டுச் சட்டத்திற்கு” ஆட்படுத்தப்படும் தலைவர் யார்?
A) பாரதி
B) சுப்பிரமணி பாரதியார்
C) அண்ணா
D) முத்துராமலிங்கத் தேவர்
விளக்கம்: முத்துராமலிங்கத்தேவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார். இதனால் ஆங்கில அரசு, இவருக்கு வாய்ப்பூட்டு சட்ம் போட்டு மேடைகளில் அரசியல் பேச தடை விதித்தது.
40) வட இந்தியாவில் “வாய்ப்பூட்டு சட்டத்திற்கு” ஆட்படுத்தப்பட்ட தலைவர் யார்?
A) கோகலே
B) திலகர்
C) காந்தி
D) சுபாஷ் சந்திர போஸ்
விளக்கம்: சுதந்திர போராட்ட தீவிரவாதிகளின் தலைவரான பல கங்காதர திலகருக்கு ஆங்கில அரசு வாய்பப்பூட்டுச் சட்டம் போட்டது.
41) தேசியம் காத்த செம்மல் எனப்படுபவர் யார்?
A) காந்தி
B) பசும்பொன்னார்
C) திலகர்
D) சுபாஷ் சந்திர போஸ்
விளக்கம்: தேசியம் காத்த செம்மல் எனப் பாராட்டப்பட்டவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
42) தேசியம் காத்த செம்மல் என முத்தராமலிங்கத் தேவரை பாராட்டியவர் யார்?
A) மு.வ
B) திரு.வி.க
C) ஆனந்தரங்கன்
D) பாரதியார்
விளக்கம்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் விடுதலை வேட்கையை அறிந்த திரு.வி.கலியாணசுந்தனார் அவரை தேசியம் காத்த செம்மல் என்று பாராட்டியுள்ளார்.
43) வங்கச் சிங்கம் என்று போற்றப்பட்டவர் யார்?
A) நேதாஜி
B) தாகூர்
C) தேவேந்திரநாத் தாகூர்
D) எவருமில்லை
விளக்கம்: வங்கச் சிங்கம் என்று போற்றப்பட்டவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
44) பசும்பொன்னாரின் அரசியல் குரு யார்?
A) நேதாஜி
B) இராஜாஜி
C) திலகர்
D) காந்தி
விளக்கம்: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்-யை பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தம் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார்.
45) நேதாஜி எப்போது மதுரைக்கு வந்தார்?
A) 1934
B) 1936
C) 1939
D) 1942
விளக்கம்: முத்துராமலிங்கத்தேவரின் அழைப்பை ஏற்றுக் கி.பி(பொ.ஆ) 1939-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 6-ஆம்நாள் நேதாஜி மதுரைக்கு வருகைத் தந்தார்.
46) இந்திய தேசிய இராணும் யாரால் தொடங்கப்பட்டது?
A) சுபாஷ் சந்திரபோஷ்
B) பசும்பொன்னார்
C) திலகர்
D) A மற்றும் B
விளக்கம்: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இந்திய தேசிய இராணுவத்தை துவங்கினார். முத்துராமலிங்கத் தேவரின் முயற்சியால் ஏராளமான தமிழர்கள் அதில் இணைந்தனர்.
47) ‘நேதாஜி’ என்னும் பெயரில் வார இதழை நடத்தியவர் யார்?
A) சுபாஷ் சந்திரபோஸ்
B) பசும்பொன்னார்
C) திலகர்
D) தாகூர்
விளக்கம்: விடுதலைக்குப்பின் முத்துராமலிங்கத்தேவர் “நேதாஜி” என்னும் பெயரில் வார இதழ் ஒன்றை நடத்தினார்.
48) பசும்பொன்னார் சாயல்குடி என்னும் ஊரில் எந்த தலைப்பில் 3 மணிநேரம் உரையாற்றினார்?
A) பெருந்தலைவர் காமராசர்
B) விடுதலை வேட்கை
C) விவேகானந்தரின் பெருமை
D) நேதாஜியின் பெருமை
விளக்கம்: தமது பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்த முத்துராமலிங்கத்தேவர் முதன் முதலில் சாயல்குடி என்னும் ஊரில் விவேகானந்தரின் பெருமை எனும் தலைப்பில் 3 மணிநேரம் உரையாற்றினார்.
49) பசும்பொன்னார் சாயல்குடியில் முதன் முதலில் உரையாற்றில் போது அவருடன் இருந்த பெருந்தலைவர் யார்?
A) விவேகானந்தர்
B) நேதாஜி
C) இராஜாஜி
D) காமராசர்
விளக்கம்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் முதன் முதலில் சாயல்குடியில் உரையாற்றும் போது அவருடன் பெருந்தலைவர் காமராசர் உடன் இருந்தார்.
50) “இது போன்ற ஒரு பேச்சை இதுவரை நான் கேட்டதில்லை முத்துராமலிங்கரின் பேச்சு விடுதலைப் போருக்கு மிகவும் உதவும்” என்று புகழ்ந்தவர் யார்?
A) விவேகானந்தர்
B) நேதாஜி
C) இராஜாஜி
D) காமராசர்
விளக்கம்: சாயல்குடியில் முதன் முதலில் பசும்பொன்னார் ஆற்றிய உரையை கேட்டு மேற்கண்டவாறு கூறி காமராசர் மகிழ்ந்தார்.
51) பசும்பொன்னாருக்கு எப்போது இந்திய அரசால் தபால் தலை வெளியிடப்பட்டது?
A) 1995
B) 2006
C) 1999
D) 1994
விளக்கம்: பசும்பொன்னாரின் நினைவிடத்தில் அவர் தோன்றி மறைந்த அக்டோபர் 30-ஆம் நாள் ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் அரசு விழா எடுக்கப்படுகிறது. தமிழக சட்டமன்றத்தில் அவரது திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் அரசு சார்பாகச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்டத்திலும் சிலை வைக்கப்பட்டுள்ளது.
52) “தென்னாட்டு சிங்கம்” என்று அழைக்கப்படுபவர் யார்?
A) அண்ணா
B) பெரியார்
C) நேதாஜி
D) முத்துராமலிங்கத்தேவர்
விளக்கம்: “தென்னாட்டு சிங்கம்” என்று அழைக்கப்படுபவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
53) முத்துராமலிங்கத்தேவரின் பேச்சு, சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது என்று கூறியவர்?
A) அறிஞர் அண்ணா
B) பெரியார்
C) இராஜாஜி
D) வட இந்திய இதழ்கள்
விளக்கம்: “தென்னாட்டுச் சிங்கம்” என்று தேவரைச் சொல்லுகிறார்களே, அது சாலப்பொருந்தும் என அவரது தோற்றத்தைப் பார்த்த உடனேயே நினைத்தேன். அவர் பேசத் தொடங்கியதும் சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது என்று அறிஞர் அண்ணா உரைத்தார்.
54) “முத்துராமலிங்கத்தேவர் பேச்சு உள்ளத்தில் இருந்து வெளிவருகிறது. உதடுகளிலிருந்து அல்ல” என்று உரைத்தவர் யார்?
A) அறிஞர் அண்ணா
B) பெரியார்
C) இராஜாஜி
D) வட இந்திய இதழ்கள்
விளக்கம்: “முத்துராமலிங்கரின் பேச்சு உள்ளத்தில் இருந்து வெளிவருகிறது. உதடுகளிலிருந்து அல்ல. உள்ளதால் எதிலும் பற்றற்று உண்மையெனப்பட்டதை மறைக்காமல் அப்படியே பேசிவிடுவது அவர் வழக்கம்” என்று மூதறிஞர் இராஜாஜி பாராட்டியுள்ளார்.
55) “முத்துராமலிங்கர் பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசிய பேச்சு வெள்ளையர் காலத்தில் விட்டல் பாய், வல்லபாய் படேல் போன்றவர்களின் பேச்சைப் போல் இருந்தது” எனக் கூறியது யார்?
A) அறிஞர் அண்ணா
B) பெரியார்
C) இராஜாஜி
D) வட இந்திய இதழ்கள்
விளக்கம்: பாராளுமன்றத்தில் முத்துராமலிங்கர் ஆங்கிலத்தில் பேசிய பேச்சு வெள்ளையர் காலத்தில் விட்டல்பால், வல்லபாய் பட்டேல் போனற் மேதைகள் பேசிய பேச்சைப் போல் இருந்ததாக வடஇந்திய இதழ்கள் பாராட்டின.
56) தொடர்ந்து 5 முறை தேர்தலில் வெற்றி பெற்றவர் யார்?
A) நேதாஜி
B) பெரியார்
C) இராஜாஜி
D) முத்துராமலிங்கத்தேவர்
விளக்கம்: மக்களின் பேராதரவு பெற்ற தலைவராக விளங்கியவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர். இவர், தொடர்ந்து 5 முறை 1937, 1946, 1952, 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றார்.
57) எந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முத்துராமலிங்கத் தேவர் போட்டியின்றி வெற்றிபெற்றார்?
A) 1937
B) 1946
C) 1957
D) 1962
விளக்கம்: 1946-ல் நடைபெற்ற தேர்தலில், முத்துராமலிங்கத் தேவர் போட்டியின்றி வெற்றி பெற்றார்.
58) குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டை முத்துராமலிங்கத்தேவர் எப்போது, எங்கு நடத்தினார்
A) 1934, கமுதி
B) 1934, இராமநாதபுரம்
C) 1932, கமுதி
D) 1932, இராமநாதபுரம்
விளக்கம்: ஆங்கில ஆட்சியில் மக்களை ஒடுக்குவதற்காகக் கொண்டு வரப்பட்டது குற்றப்பரம்பரைச் சட்டம் ஆகும். பிறப்பாலேயே ஒருவரைக் குற்றவாளியாகக் கருதும் அச்சட்டத்தை நீக்க 1934, மே 12, 13 ஆகிய தேதிகளில் கமுதியில் குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார்.
59) குற்றப்பரம்பரைச் சட்டம் எப்போது நீக்கப்பட்டது?
A) 1934
B) 1938
C) 1939
D) 1948
விளக்கம்: 1934, மே 12, 13 ஆகிய தேதிகளில் கமுதியில் குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டை முத்துராமலிங்கத்தேவர் நடத்தியதை அடுத்து 1948-ல் அச்சட்டம் நீக்கப்பட்டது.
60) “இந்து புத்தசமய மேதை” என அழைக்கப்பட்டவர் யார்?
A) முத்துராமலிங்கத்தேவர்
B) இராஜாஜி
C) நேதாஜி
D) சுபாஷ் சந்திர போஸ்
விளக்கம்: முத்துராமலிங்கரின் வேறு பெயர்கள்: தேசியம் காத்த செம்மல், வித்யா பாஸ்கர், பிரணவ கேசரி, சன்மார்க்க சண்டமாருதம், இந்து புத்தசமயம் மேதை.
61) மதுரை வைத்தியநாத ஐயர் கோவில் நுழைவுப் போராட்டம் எப்போது நடத்த முத்துராமலிங்கர் திட்டமிட்டார்?
A) 1934
B) 1938
C) 1939
D) 1942
விளக்கம்: அக்காலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் செல்ல ஒரு சாராருக்குத் தடை இருந்தது. அத்தடையை எதிர்த்து 1939 ஆம் ஆண்டு ஜுலைத் திங்கள் 8-ம் நாள் மதுரை வைத்தியநாத ஐயர் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்த திட்டமிட்டார்.
62) முத்துராமலிங்க தேவர் தமக்கு சொந்தமாக எத்தனை சிற்றூர்களில் இருந்த விளைநிலங்களை உழுபவர்களுக்கே பங்கிட்டுக் கொடுத்தார்?
A) 30
B) 31
C) 32
D) 36
விளக்கம்: விவசாயிகளின் தோழராக விளங்கும் முத்துராமலிங்க தேவர், ஜமீன் விவசாயிகள் சங்கம் ஏற்படுத்தி விவசாயிகளின் துயர்துடைக்கப் பாடுபட்டார். உழுபவர்களுக்கே நிலம் என்றார்.
63) பாரதமாத கூட்டுறவுப் பண்டகசாலை பசும்பொன்னரால் எதற்காக நிறுவப்பட்டது?
1. விவசாய உற்பத்தியை அதிகரிக்க
2. விவசாயிகளின் விளைபொருள்களுக்குச் சரியான விலை கிடைக்கச் செய்தால்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: கமுதியில் வியாபாரிகள் விவசாய உற்பத்திப் பொருள்களாக் குறைந்த விலைக்கு வாங்கியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். பாரதமாத கூட்டுறவுப் பண்டகசாலையை ஏற்படுத்தி விவசாயிகளின் விளைபொருள்களுக்குச் சரியான விலை கிடைக்கச் செய்தார் முத்துராமலிங்க தேவர்.
64) எந்தக் காலகட்த்தில் மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராகத் தேவர் திகழ்ந்தார்?
A) 1934
B) 1936
C) 1938
D) 1942
விளக்கம்: 1938 காலகட்டத்தில் மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராகத் தேவர் திகழ்ந்தார்.
65) மதுரையில் நூற்பு ஆலை ஒன்றில் வேலைசெய்த தொழிலாளர்களின் உரிமைக்காகத் தேவர் யாருடன் இணைந்து போராட்டம் நடத்தினார்?
A) சிவராமன்
B) கிருட்டிணன்
C) ராஜாஜி
D) பா. ஜீவானந்தம்
விளக்கம்: மதுரையிலிருந்த நூற்பு ஆலை ஒன்றில் வேலைசெய்த தொழிலாளர்களின் உரிமைக்காகத் தோழர் ப.ஜீவானந்தத்துடன் இணைந்து 1938-ஆம் ஆண்டு போராட்டம் நடத்தினார் தேவர். அதற்காக 7 ஆண்டுகள் சிறைச் சென்றார்.
66) முத்துராமலிங்கதேவர் பற்றிய தவறான கூற்றைத் தேர்க.
A) 1934-ல் குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாடு நடத்தினார்
B) 1939-ல் ஜுன் 8-ல் மதுரை வைத்தியநாத ஐயர் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்த திட்டம்
C) 1938-ல் தொழிலாளர் சங்கங்களின் தலைவராக திகழந்தார்
D) பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வேண்டி போராட்டம் நடத்தினார்
விளக்கம்: 1939-ல் ஜுலை 8-ஆம் நாள் மதுரை வைத்தியநாத ஐயர் கோவில் நுழைவுப்போராட்டம் நடத்த தேவர் திட்டமிட்டார்.
67) 2-ம் உலகப்போரின் போது, மத்திய பிரதேசத்தின் எந்த சிறையில் அடைக்கப்பட்டார் தேவர்?
A) இந்தூர் இராணுவச்சிறை
B) தானே இராணுவச்சிறை
C) அலிப்பூர் இராணுவச்சிறை
D) தாமோ இராணுவச்சிறை
விளக்கம்: 2-ம் உலகப்போரின் போது தேவர் மத்தியப் பிரதேசத்திலுள்ள தாமே என்னும் நகரிலுள்ள இராணுவச்சிறையில் அடைக்கப்டும் போர் முடிந்த பிறகுதான் விடுதலைச் செய்யபட்டார்.
68) தன் வாழ்நாளின் 5-ல் 1 பங்கினைச் சிறையில் கழித்த தியாகி யார்?
A) காந்தி
B) திலகர்
C) கோகலே
D) தேவர்
விளக்கம்: பசும்பொன் முத்துராமலிங்க தேவர், இம்மண்ணுலகில் வாழ்ந்த நாட்கள் – 20, 075 சிறையில் கழித்த நாட்கள் – 4000 இவர் சுதந்திரப் போரட்டத்தில் மிகத்தீரவிமாக ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு அலிப்பூர், அமராவதி, தாமோ, கல்கத்தா, சென்னை, வேலூர் போன்ற சிறைகளில் சிறைவைக்கப்பட்டிருந்தார்.
69) எந்த ஊரில் புத்த பிட்சுகளில் உயர்ந்தவர்களுக்குப் பெண்கள் தங்கள் கூந்தலை நிலையானதாக விரித்து வரவேற்பு அளிப்பது வழக்கம்?
A) சீனா
B) பீகார்
C) பர்மா
D) நேபாள்
விளக்கம்: தேவர் 1936, 1955 ஆகிய ஆண்டுகளில் 2 முறை பர்மா சென்றிருந்தார். அப்போது, பெண்கள் தங்கள் கூந்தலை நடைபாதையாக முன்வைத்தார். ஆனால், அது பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளது எனக் கூறி தேவர் அவ்வரவேற்பை மறுத்துவிட்டார்.
70) தென்பாண்டிச் சீமையின் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர் யார்?
A) பெரியார்
B) அண்ணா
C) மு.வ
D) தேவர்
விளக்கம்: பொதுத்தொண்டுக்கு இடையூறாக இருக்கும் எனக் கருதித் திருமணம் செய்துகொள்ளாமல் தியாக வாழ்வு வாழ்ந்தார் தேவர். அவர் தென்பாண்டிச் சீமையின் முடிசூடா மன்னரா, நீதிவழுவா நேர்மையாளராக புலமையில் கபிலராக, வலிமையில் கரிகாலனாக, கொடையில் கர்ணணாக, பக்தியில் பரமஹம்சராக, இந்திய தாயின் நன் மகனாக விளங்கினார்.
71) யார் விவேகானந்தரின் தூதவராக நேதாஜின் தளபதியாக விளங்கினார்?
A) திரு.வி.க
B) மு.வ
C) தேவர்
D) A மற்றும் C
விளக்கம்: தேவர், விவேகானந்தரின் தூதராகவும், நேதாஜியின் தளபதியாகவும், சத்தியசீலராகவும், முருகப்பக்தராகவும், ஆன்மீகப் புத்திரராகவும், தமிழ்பாடும் சித்தராகவும் விளங்கினார்.
72) முத்துராமலிங்க தேவர் எப்போது மறைந்தார்?
A) 1963 அக்டோபர் 30
B) 1964 அக்டோபர் 30
C) 1959 அக்டோபர் 30
D) 1953 அக்டோபர் 30
விளக்கம்: முத்துராமலிங்க தேவர் கி.பி(பொ.ஆ) 1963 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30-ஆம் நாளில் இவ்வுலகை விட்டு நீக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார்.
73) தூத்துக்குடி நகரின் பெருமையைத் தம் பெருமையாக்கிக் கொண்டவர் யார்?
A) பாரதியார்
B) வ.உ.சி
C) பாரதிதாசன்
D) மோகனரங்கன்
விளக்கம்: வ.உ.சிதம்பரனார் தன்னலம் துறந்து, இறுமாந்திருந்த ஆங்கிலேயர் பொறி கலங்கி, நெறிமயங்கக் கப்பலோட்டிய தமிழர் இவரே.
74) பாண்டியனுடைய துறைமுகம் எது?
A) கொற்கை
B) தொண்டி
C) முசிறி
D) A மற்றும் B
விளக்கம்: கொற்கை துறைமுகமே பாண்டியனுடைய துறைமுகம் ஆகும். கொற்கை கடல் முத்துவளம் கொழித்தது. பழங்குடிகளாகிய பரதவர் மரக்கல வணிகத்தாலட வளம்பெற்றது. மாடமளிகையில் வாழ்ந்தார்கள்.
75) பாண்டியர்களின் கொடியில் என்ன உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்?
A) வில்
B) அம்பு
C) புலி
D) மீன்
விளக்கம்: சேரரின் கொடி – வில், அம்பு உருவம்
சோழரின் கொடி – புலி உருவம்
பாண்டியரின் கொடி – மீன் உருவம்
76) சுதேசக் கப்பல் கம்பெனியின் தலைவர் யார்?
A) பாரதியார்
B) வ.உ.சி
C) பான்டித்துறையார்
D) பாரதிதாசன்
விளக்கம்: பழங்காலப் பாண்டியரைப் போல மதுரை மாநகரிலே தமிழ்ச் சங்கம் அமைத்துப் புலவர் பாடும் புகழ் உடையவராய் விளங்கிய பாண்டித்துரையார், சுதேசக் கப்பல் கம்பெனியின் தலைவர் ஆவார்.
77) வெள்ளோட்டம் பார்ப்பதற்காக சுதேசி கப்பல் தூத்துக்குடியிலிருந்து எந்த துறையை நோக்கி புறப்பட்டது?
A) மும்பை
B) கொல்கத்தா
C) கொச்சின்
D) கொழும்பு
விளக்கம்: வெள்ளோட்டம் பார்ப்பதற்காக சுதேசி கப்பல் தூத்துக்குடியிலிருந்து கொழும்புத் துறையை நோக்கிப் புறப்பட்டது.
78) சுதேசிக் கம்பெனி வேலையினின்று வ.உ.சி விலகிச் கொண்டால் எவ்வளவு ரூபாய் கையடக்கம் தருவதாக ஆங்கிலேயர் மறைமுகமாகக் கூறினார்?
A) பத்தாயிரம்
B) ஐம்பதாயிரம்
C) அறுபதாயிரம்
D) நூறாயிரம்
விளக்கம்: சுதேசிக் கம்பெனி வேலையினின்று வ.உ.சிதம்பரனார் விலகிக் கொண்டால் நூறாயிரம் ரூபாய் கையடக்கம் தருவதாக ஆங்கிலேயர் மறைமுகமாக உரைத்தனர்.
79) சுதேசிக் கப்பல் கம்பெனியின் செயலாளர் யார்?
A) பாண்டித்துரையார்
B) திரு.வி.க
C) உ.வே.சா
D) வ.உ.சி
விளக்கம்: சதேசக் கப்பல் கம்பெனியின் தலைவர் – பாண்டித்துறையார்
சுதேசக் கப்பல் கம்பெனியின் செயலாளர் – வ.உ.சி
80) “வந்தே மாதரம்” என்ற சுதேச மந்திரம் எங்கு பிறந்தது?
A) மராட்டியம்
B) தமிழ்நாடு
C) குஜராத்
D) வங்காளம்
விளக்கம்: வந்தே மாதரம் என்ற சுதேச மந்திரம் வங்க நாட்டிலே பிறந்தது. காட்டுக்கனல் போல் எங்கு பரவிற்று.
81) “சுதந்திரம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்” என்று முழங்கியவர் யார்?
A) திலகர்
B) கோகலே
C) நேதாஜி
D) வ.உ.சி
விளக்கம்: “சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என்று வடநாட்டிலே மார்தட்டி நின்றார். மராட்டிய வீரர் பாலகங்காதர திலகர்
82) “வந்தோ மாதரம் என்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்” என்று பாடியவர் யார்?
A) பாரதிதாசன்
B) பாரதியார்
C) வ.உ.சி
D) கொடிகாத்த குமரன்
விளக்கம்: பாரதியார் அஞ்சாத நெஞ்சினர். செஞ்சொற்கவிஞர். இவரை வ.உ.சி நாவீறுடைய நணபர் எனப் புகழ்கிறார்.
83) “சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்பெற்ற எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்” என்றுக் கூறியவர் யார்?
A) ஹியும்
B) பின்ஹே
C) நேதாஜி
D) காந்தி
விளக்கம்: சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதி பின்ஹே இவ்வாறு கூறினார்.
84) சிதம்பரனார், கோவைச் சிறையிலும் கண்ணூர்ச் சிறையிலும் எத்தனை ஆண்டுகள் கொடும்பணி செய்தார்?
A) 4
B) 5
C) 6
D) 8
விளக்கம்: சிதம்பரனாருக்கு விதிக்கப்பட்ட இரட்டைத் தீவாந்தர தண்டனை, அப்பீல் கோர்ட்டிலே சிறைத் தண்டனையாக 6 ஆண்டுகளுக்கு மாற்றப்பட்டது.
85) சிறைச்சாலையை தவச்சாலையாக கருதி, கைவருந்த மெய் வருந்தச் செய்த பணிகள் எல்லாம் தாய்நாட்டின் விடுதலைக்காகப் புரிந்த அருந்தவம் என்று எண்ணி உள்ளம் மகிழ்ந்தவர் யார்?
A) பாரதி
B) வ.உ.சி
C) காமராசர்
D) திலகர்
விளக்கம்: சிறைச்சாலையை தவச்சாலையாக கருதினார். வ.உ.சி கைவருந்த மெய் வருத்தச் செய்த பணிகள் எல்லாம் தாய்நாட்டின் விடுதலைக்காகப் புரிந்த அருந்தவம் என்று எண்ணி மகிழ்ந்தார்.
86) வக்கீல் வேலை பார்த்து வளமுறை வாழ்ந்த நாளில் யாரோடு உறவு கொண்டு தமிழ் நூல்களைக் கற்றார் வ.உ.சி?
A) பாரதி
B) இராஜாஜி
C) அண்ணா
D) பாண்டித்துரை
விளக்கம்: வக்கீல் வேலை பார்த்து வளமுற வாழ்ந்த நாளில் வள்ளல் பாண்டித்துரையோடு உறவு கொண்டு தமிழ் நூல்களைக் கற்றார் வ.உ.சி.
87) “சிறைச்சாலையில் கைத்தோல் உரியக் கடும்பணி புரிந்த போது என் கண்ணீரை மாற்றியது கன்னித் தமிழன்றோ?” என உரைத்தவர் யார்?
A) வ.உ.சி
B) பாரதி
C) பாரதிதாசன்
D) காமராசர்
விளக்கம்: சிறைச்சாலையில் செக்கிழுத்த துயரத்தை மாற்றியது என் செந்தமிழன்றோ? கைத்தோல் உரியக் கடும்பணி புரிந்தபோது என் கண்ணீரை மாற்றியது கன்னித் தமிழன்றோ? என்று பாடியவர் வ.உ.சி.
88) எதைப் படித்துப் படித்து வ.உ.சி தன் தொல்லை எல்லாம் மறந்தார்?
A) இன்னிலை
B) தொல்காப்பியம்
C) மனம் போல் வாழ்வு
D) மெய்யறிவு, மெய்யறம்
விளக்கம்: தொல்காப்பியத்தைப் படித்துப் படித்து என் தொல்லையெல்லாம் மறந்தேன். இன்னிலையைக் கற்று கற்று என் இன்னல்களையெல்லாம் வென்றேன் என்றார் சிதம்பரனார்.
89) ஆங்கிலத்தில் “ஆலன்” என்பவர் இயற்றிய அறிவு நூல்களில் ஒன்றான எதை வ.உ.சி. தமிழில் மொழிபெயர்த்தார்?
A) இன்னிலை
B) தொல்காப்பியம்
C) மனம்போல் வாழ்வு
D) மெய்யறிவு, மெய்யறம்
விளக்கம்: ஆங்கிலத்தில் ஆலன் எழுதிய “மனம் பொல் வாழ்வு” என்னும் நூலை வ.உ.சி தமிழில் மொழிபெயர்த்தார்.
90) வ.உ.சி எந்த நூலை தமிழ்த்தாயின் திருவடிகளில் கைம்மாறாக வைத்தார்?
A) இன்னிலை
B) தொல்காப்பியம்
C) மனம்போல் வாழ்வு
D) மெய்யறிவு, மெய்யறம்
விளக்கம்: உயர்ந்த நூல்களில் கண்ட உண்மைகளை இளைஞரும் எளிதில் அறிந்து கொள்ளுமாறு மெய்யறிவு, மெய்யறம் என்ற சிறு நூல்களை இயற்றினார் வ.உ.சி. இவற்றை தமிழ்தாயின் திருவடிகளில் கையுறையாக வைத்தார்.
91) “பாயக் காண்பது சுதந்திரவெள்ளம்
பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம்” எனப் பாடியவர் யார்?
A) வ.உ.சி
B) பாரதி
C) பாரதிதாசன்
D) திருப்பூர் குமரன்
விளக்கம்: பாயக்கண்டது சுதந்திரவெள்ளம்
பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம் என வ.உ.சி உருக்கமாகப் பேசினார்.
92) சொல்லின் செல்வர் எனப் போற்றப்படுபவர் யார்?
A) இரா.பி.சேதுபிள்ளை
B) மௌலி
C) அகிலன்
D) ஜெயகாந்தன்
விளக்கம்: இரா.பி.சேதுபிள்ளை தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர் எனப் பன்முகத் திறன் பெற்றவர். இவரைச் சொல்லின் செல்வர் எனப் போற்றுவர்.
93) எதுகை, மோனை போன்ற நயங்களை உரைநடையில் புகுத்தியவர் யார்?
A) இரா.பி.சேதுபிள்ளை
B) மௌலி
C) அகிலன்
D) ஜெயகாந்தன்
விளக்கம்: செய்யுளுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றை உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இரா.பி.சேதுபிள்ளை ஆவார்.
94) இந்திய அரசின் சாகித்ய அகாதமி விருது பெற்ற முதல் நூல் எது?
A) தமிழ் விருந்து
B) தமிழகம்-ஊரும் பேரும்
C) தமிழின்பம்
D) ஆற்றங்கரையினிலே
விளக்கம்: இரா.பி.சேதுப்பிள்ளை இயற்றிய தமிழின்பம் என்னும் நூல் இந்திய அரசின் சாகித்ய அகாதெமி விருது பெற்ற முதல் நூலாகும்.
95) வ.உ.சி. பேசுவதாக அமைந்த ‘கப்பலோட்டிய தமிழர்’ என்ற பாடப்பகுதி எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?
A) தமிழ் விருந்து
B) தமிழின்பம்
C) கடற்கரையினிலே
D) ஆற்றங்கரையினிலே
விளக்கம்: வ.உ.சிதம்பரனார் பேசுவதாக அமைந்த கப்பலோட்டிய தமிழர் என்ற பாடப்பகுதி இரா.பி.சேதுப்பிள்ளை இயற்றிய ‘கடற்கரையினிலே’ என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. தமிழின்பம், ஆற்றங்கரையினிலே, கடற்கரையினிலே, தமிழ் விருந்து, தமிழகம்-ஊரும் பேரும், மேடைப்பேச்சு உள்ளிட்ட பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.
96) நம் முன்னோர் எந்தெந்தச் சொற்களை என்னப் பொருளில் பயன்படுத்தினார்களோ, அச்சொற்களை அவ்வாறே பயன்படுத்துவதை__________என்பர்?
A) இடக்கரடக்கல்
B) குழுஉக்குறி
C) மங்கலம்
D) வழக்கு
விளக்கம்: எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை வழக்கு என்பர்.
97) வழக்கு எத்தனை வகைப்படும்?
A) 2
B) 3
C) 4
D) 6
விளக்கம்: வழக்கு இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என இரு வகைப்படும்.
98) இயல்பு வழக்கு என்பது எத்தனை வகைப்படும்?
A) 2
B) 3
C) 4
D) 6
விளக்கம்: ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது இயல்பு வழக்கு ஆகும். இது இலக்கணமுடையது, இலக்கணப்போலி, மரூஉ என 3 வகைப்படும்.
99) தவறானதைத் தேர்க.
A) இலக்கண முறைப்படி முறையாக அமைந்த சொல் இலக்கணமுடையது
B) இலக்கண முறைப்படி அமையாவிடினும், இலக்கணமுடையது போல ஏற்றுக் கொள்ளப்படுவது இலக்கணப்போலி
C) இலக்கணப்போலி முன்பின்னாகத் தொக்க போலி எனவும் குறிப்பிடுவர்
D) இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் குழுஉக்குறி எனப்படும்
விளக்கம்: இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் மரூஉ எனப்படும்.
100) மாறுபட்டதைத் தேர்க
A) முன்றில்
B) நுனிக்கிளை
C) புறநகர்
D) வாசல்
விளக்கம்: முன்றில், நுனிக்கிளை, புறநகர், கால்வாய், தசை, கடைக்கண் ஆகியவை இலக்கணப் போலி.
வாயில் என்பது இலக்கணப் போலி. வாசல் என்பது மரூஉ.
101) தவறானதைத் தேர்க.
A) நிலம், மரம், வான், எழுது – இலக்கணமுடையது
B) தஞ்சை, நெல்லை, கோவை, குழந்தை, எந்தை, போது, கோணாடு – மரூஉ
C) இல்முன், கிளைநுனி – முன்பின்னாகத் தொக்க போலி
D) கால் கழுவி வந்தான் – இடக்கரடக்கல்
விளக்கம்: இல்முன், கிளைநுனி ஆகியவை இலக்கணமுடையது. அதை முன்றில், நுனிக்கிளை என மாற்றி எழுதினார் மட்டுமே எது முன்பின்னாகத் தொக்க போலி ஆகும்
102) தகுதி வழக்கு எத்தனை வகைப்படும்?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறிடம் சொல்லத் தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது தகுதி வழக்கு ஆகும். இது 3 வகைப்படும். அவை இடக்கரடக்கல், மங்கலம், குழுஉக்குறி
103) பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத் தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது எது?
A) இடக்கரடக்கல்
B) மங்கலம்
C) மரூஉ
D) குழுஉக்குறி
விளக்கம்: பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத் தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது இடக்கரடக்கல். ஆகும். (எ.கா) குழந்தை வெளியே போய்விட்டது, ஒன்றுக்கு போய் வந்தேன்.
104) தவறானதைத் தேர்க
A) ஓலை – திருமுகம்
B) கறுப்பு ஆடு – வெள்ளோடு
C) சுடுகாடு – நன்காடு
D) செத்தார் – இறந்தார்
விளக்கம்: மங்கலமில்லாத சொல்லுக்கு இணையாக வழுப்பெறும் மங்கலச் சொல் தரப்பட்டுள்ளது. எனினும் செத்தார் என்பதற்கு இணையாக மங்கலச் சொல் “துஞ்சினார்” அல்லது “இயற்கை எய்தினார்” என்பதாகும்.
105) ஒரு குழுவினர் ஒரு பொருள் அல்லது செயலைக் குறிக்கத் தமக்குள் பயன்படுத்திப்படுத்திக்கொள்ளும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
A) இடக்கரடக்கல்
B) மங்கலம்
C) குழுஉக்குறி
D) எதுவுமில்லை
விளக்கம்: பலர் கூடியிருக்கும் இடத்தில் சிலர் மட்டும் தமக்குள் சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்பினால் மற்றவர்கள் புரிந்துகொள்ள இயலாத வகையில் சொற்களைப் பயன்படுத்துவர். இது குழுஉக் குறி எனப்படும்.
(எ.கா) பொன்னைப் பறி எனல்
ஆடையைக் காரை எனல்
106) போலி எத்தனை வகைப்படும்?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: சொல்லின் முதலியோ, இடையிலோ, இறுதியிலோ இயல்பாக இருக்க வேண்டிய ஓர் எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து இடம்பெற்று அதே பொருள் தருவது போலி எனப்படும். போலி என்னும் சொல் “போல இருத்தல்” என்பதிலிருந்து தோன்றியது. இது முதற்போலி, இடைப்போலி , கடைப்போலி என 3 வகைப்படும்.
107) மாறுபட்டதைத் தேர்க.
A) பைசல்
B) மைஞ்சு
C) மையல்
D) பகல்
விளக்கம்: பசல் என்பது சரியான சொல். பைசல், மைஞ்சு, மையல், ஆகியவை முதற்போலி ஆகும்.
சரியான சொல் – முதற்போலி
1. பசல் – பைசல்
2. மஞ்சு – மைஞ்சு
3. மயல் – மையல்
108) மாறுபட்டதைத் தேர்க
A) அமைச்சு
B) இலைஞ்சி
C) அரையர்
D) நிலன்
விளக்கம்: அமைச்சு, இலைஞ்சி, அரையர் – இடைப்போலி
நிலன் – கடைப்போலி
சரியான சொல் – இடைப்போலி
அமச்சு – அமைச்சு
இலஞ்சி – இலைஞ்சி
அரயர் – அரையர்
109) தவறானதைத் தேர்க
A) அகம்-அகன்
B) நிலம்-நிலன்
C) முகம்-முகன்
D) பந்தல்-பைந்தல்
விளக்கம்:
சரியான சொல் – கடைப்போலி
அகம் – அகன்
நிலம் – நிலன்
முகம் – முகன்
பந்தல் – பந்தர்
சாம்பல் – சாம்பர்
110) அஃறிணைப் பெயர்களின் இறுதியில் நிற்கும் மகர எழுத்திற்குப் பதிலாக எது கடைப்போலியாக வரும்?
A) னகரம்
B) லகரம்
C) ரகரம்
D) வகரம்
விளக்கம்: அஃறிணைப் பெயர்களின் இறுதியில் நிற்கும் மகர எழுத்திற்குப் பதிலாக னகரம் கடைப்போலியாக வரும். அதேபோல், லகர எழுத்திற்குப் பதிலாக ரகரம் வரும்.
(எ.கா) அகம் – அகன்
பந்தல் – பந்தர்
111) ஒரு சொல்லில் இயல்பாக அமைந்து எழுத்திற்குப் பதிலாக எழுத்துக்கள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள் மாறாமல் இருப்பது எவ்வகைப் போலி?
A) முதற்போலி
B) இடைப்போலி
C) கடைப்போலி
D) முற்றுப்போலி
விளக்கம்: சரியான சொல் – முற்றுப்போலி
ஐந்து – அஞ்சு
112) சரியானதைத் தேர்க.
1. இடக்கரடக்கல், மங்கலம், குழுஉக்குறி, மூன்றும் ஒரு சொல்லுக்கு மாற்றாக வேறு சொல்லைப் பயன்படுத்தும் முறைகளாகும்
2. நாகரிகம் கருதி மறைமுகமாக குறிப்பிடுதல் இடக்கரடக்கல்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டாம் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: இடக்கரடக்கல் – நாகரிகம் கருதி மறைமுகமாக குறிப்பிடுதல்
மங்கலம் – மங்கலமற்ற சொற்களை மாற்றி மங்கலச் சொற்களால் குறிப்பிடுதல்
குழுஉக்குறி – பிறர் அறியாமல் ஒரு குழுவுக்கும் மட்டும் புரியும் வகையில் குறிப்பிடுவது
113) பொருத்துக.
அ. பந்தர் – 1. முதற்போலி
ஆ. மைஞ்சு – 2. முற்றுப்போலி
இ. அஞ்சு – 3. இடைப்போலி
ஈ. அரையர் – 4. கடைப்போலி
A) 4, 1, 2, 3
B) 4, 1, 3, 2
C) 4, 3, 2, 1
D) 4, 3, 1, 2
விளக்கம்: பந்தர் – கடைப்போலி
மைஞ்சு – முதற்போலி
அஞ்சு – முற்றுப்போலி
அரையர் – இடைப்போலி
114) ஒரு தொடரில் எத்தனைப் பகுதிகள் இடம்பெறும்?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: ஒரு தொடரில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என 3 பகுதிகள் உள்ளன.
115) ஒரு தொடரில் யார்? எது? எவை? என்னும் வினாக்களுக்கு விடையாக அமைவது எது?
A) எழுவாய்
B) பயனிலை
C) செயப்படுபொருள்
D) A மற்றும் B
விளக்கம்: பாரி பாடத்தைப் படித்தான்
இதில் பாரி – எழுவாய்
பாடம் – செயப்படுபொருள்
படித்தான் – பயனிலை
116) பொருத்துக
அ. யார்? எது? எவை? என்ற கேள்விக்கு பதிலளிப்பது – 1. செயப்படுபொருள்
ஆ. வினை, வினா, பெயர் ஆகிய ஏதேனும் ஒன்றைக் கொண்டு முடிவது – 2. எழுவாய்
இ. யாரை, எதை, எவற்றை, என்ற கேள்விக்குப் பதிலாக – 3. பயனிலை
A) 1, 2, 3
B) 2, 1, 3
C) 2, 3, 1
D) 3, 2, 1
விளக்கம்: ஒரு தொடரில்
யார்? எது? எவை? என்ற கேள்விக்கு பதிலளிப்பது – எழுவாய்
வினை, வினா, பெயர் ஆகிய ஏதேனும் ஒன்றைக் கொண்டு முடிவது – பயனிலை
யாரை, எதை, எவற்றை, என்ற கேள்விக்குப் பதிலாக – செயப்படுப்பொருள்
117) Sacrifice என்பதன் தமிழ்ச் சொல் என்ன?
A) துணிவு
B) தியாகம்
C) கதைப்பாடல்
D) அரசியல் மேதை
விளக்கம்: Carage – துணிவு
Sacrifice – தியாகம்
Ballad – கதைப்பாடல்
Polutial Genius – அரசியல் மேதை
118) Elocution தமிழ்ச் சொல் என்ன?
A) ஒற்றுமை
B) முழக்கம்
C) சமத்துவம்
D) பேச்சாற்றல்
விளக்கம்: பேச்சாற்றல் – Elocution
ஒற்றுமை – Unity
முழக்கம் – Slogan
சமத்துவம் – Equality
119) திருக்குறள் எத்தனைப் பால்களைக் கொண்டது?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: திருக்குறள் அறத்துபால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பால் கொண்ட நூலாகும்.
120) தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
A) 4
B) 5
C) 6
D) 7
விளக்கம்: எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும்.