7th Science Lesson 9 Questions in Tamil
9] நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்
1. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை.
a) மாற்றம் என்பது ஒரு பொருளின் இயற்பியல் பண்புகளில் ஏற்படும் மாற்றமாகவோ அல்லது அப்பொருளின் வேதிப்பண்புகளில் இயைபில் ஏற்படும் மாற்றமாகவோ இருக்கும்.
b) நீரினை வெப்பப்படுத்தும் பொழுது அது சூடாகி, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நீராவியாக மாறுகிறது. இவ்வாறாக நீரின் பருமனில் மட்டும் மாற்றம் ஏற்படுவது இயற்பியல் மாற்றமாகும்.
c) இரும்பு துருப்பிடித்தல் என்பது இயற்பியல் மாற்றமாகும்.
A) a, b, c சரி
B) a தவறு b, c சரி
C) a, b சரி c தவறு
D) a, c சரி b தவறு
விளக்கம்: மாற்றம் என்பது ஒரு பொருளின் இயற்பியல் பண்புகளில் ஏற்படும் மாற்றமாகவோ அல்லது அப்பொருளின் வேதிப்பண்புகளில் இயைபில் ஏற்படும் மாற்றமாகவோ இருக்கும். நீரினை வெப்பப்படுத்தும் பொழுது அது சூடாகி, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நீராவியாக மாறுகிறது. எனினும், அது நீர் என்ற பொருளாகவே திரவ நிலையிலும், வாயு நிலையிலும் இருக்கின்றது. இவ்வாறாக புதிய பொருள் எதனையும் உருவாக்காமல், நீரின் பருமனில் மட்டும் மாற்றம் ஏற்படுவது இயற்பியல் மாற்றமாகும். இரும்பு துருப்பிடித்தல் என்பது வேதியியல் மாற்றமாகும். இம்மாற்றத்தில் துரு என்ற புதிய பொருள் உருவானதால், இரும்பு பொருள்கள் நிறம், அமைப்பு மற்றும் நிலை ஆகியவற்றில் மாற்றம் அடைந்துள்ளது. இவ்வாறாக, பொருருளின் வேதியியல் இயைபில் ஏற்படும் மாற்றம் வேதியியல் மாற்றமாகும்.
2. சுவாசம் என்பது _________ மாற்றமாகும்
A) இயற்பியல் மாற்றம்
B) வெளிப்புற வேதியியல் மாற்றம்
C) வெப்பம் கொள் மாற்றம்
D) உட்புற வேதியியல் மாற்றம்
3. வெள்ளி நகையின் நிறம் மங்குதல் என்ற நிகழ்வு
A) வெப்பம் கொள் மாற்றம்
B) வெப்ப உமிழ் மாற்றம்
C) வேதியியல் மாற்றம்
D) இயற்பியல் மாற்றம்
4. பொருத்துக
a) உருகுதல் 1. திரவத்திலிருந்து வாயுவிற்கு மாறுவது
b) ஆவியாதல் 2. வாயுவிலிருந்து திரவத்திற்கு மாறுவது
c) உறைதல் 3. திண்மத்திலிருந்து திரவத்திற்கு மாறுவது
d) ஆவி சுருங்குதல் 4. திரவத்திலிருந்து திண்மத்திற்கு மாறுவது
a b c d
A) 3 1 4 2
B) 4 1 3 2
C) 1 2 3 4
D) 4 1 2 3
5. கூற்று (A) : உருகுதல், ஆவியாதல் மற்றும் பதங்கமாதல் போன்றவை நிகழ வெப்பம் செலுத்தப்படுவதால் இவை வெப்ப உமிழ் நிகழ்வுகளாகும்.
காரணம் (R) : ஒரு வெப்ப உமிழ் நிகழ்வில் மூலக்கூறுகளின் வேகம் குறைவதால், அவை வேகமாக நகரும்
A) A சரி ஆனால் R தவறு
B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A மற்றும் R தவறு
D) A சரி மற்றும் R விளக்கம்
விளக்கம்: உருகுதல், ஆவியாதல் மற்றும் பதங்கமாதல் போன்றவை நிகழ வெப்பம் செலுத்தப்படுவதால் இவை வெப்ப கொள் நிகழ்வுகளாகும். ஒரு வெப்ப கொள் நிகழ்வில் மூலக்கூறுகளின் வேகம் அதிகரிப்பதால் அவை வேகமாக நகரும்.
6. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
a) ஒரு இயற்பியல் மாற்றம் என்பது பொதுவாக தற்காலிகமானதும், மீளாதன்மை கொண்டதுமாகும்.
b) இயற்பியல் மாற்றத்தில், புதிய பொருள்கள் ஏதும் உருவாவதில்லை.
c) இயற்பியல் மாற்றத்தில் பொருளின் வேதியியல் பண்புகளில் எந்த மாற்றமும் நிகழலாம்
A) a, b, c சரி
B) a தவறு b, c சரி
C) a, b சரி c தவறு
D) a, c தவறு b சரி
விளக்கம்: ஒரு இயற்பியல் மாற்றம் என்பது பொதுவாக தற்காலிகமானதும், மீள்தன்மை கொண்டதுமாகும். எடுத்துக்காட்டாக, நீரினை வெப்பப்படுத்தினால், நீராவி கிடைக்கிறது. கிடைத்த நீராவியை குளிரவைக்கும்பொழுது மீண்டும் அதே நீரினைத் திரும்பப் பெற இயலும்.
இயற்பியல் மாற்றத்தில், புதிய பொருள்கள் ஏதும் உருவாவதில்லை. எடுத்துக்காட்டாக பனிக்கட்டி உருகும் பொழுது நீர் உருவாகிறது. இம்மாற்றத்தில் பனிக்கட்டியிலும் நீரிலும் காணப்படுவது ஒரே பொருளேயன்றி வேறு வேறு பொருள் அல்ல.
இயற்பியல் மாற்றத்தில் பொருளின் வேதியியல் பண்புகளில் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை. எடுத்துக்காட்டாக, ஒரு தங்கத்துண்டு ஒன்றினை உருக்கும்பொழுது, திண்ம நிலை தங்கம் மற்றும் திரவ நிலைத் தங்கம் இரண்டிலும் ஒரே வேதியியல் இயைபினைத் கொண்ட தங்கத்துகள்களே காணப்படுகிறது.
7. ஒரு காஸ் சிலிண்டரின் திருகினை திருப்புவதன் மூலம் ________ எரிபொருள் ________ எரிபொருளாக மாறும். இது ________ மாற்றத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
A) வாயு, திரவ, இயற்பியல்
B) திட, வாயு, வேதியியல்
C) திரவ, வாயு, வேதியியல்
D) திரவ, வாயு, இயற்பியல்
8. எதிர்மறையாக, உறைதல் மற்றும் ஆவி சுருங்குதலில் வெப்பம் நீக்கப்படுவதால், மூலக்கூறுகளின் வேகம் குறைவதால் அவை மெதுவாக நகரும். இத்தகைய நிகழ்வுகள்
A) வெப்ப உமிழ் நிகழ்வு
B) வெப்ப எதிர்மறை நிகழ்வு
C) வெப்பக் கொள் நிகழ்வு
D) வெப்ப ர்மறை நிகழ்வு
விளக்கம்: எதிர்மறையாக, உறைதல் மற்றும் ஆவி சுருங்குதலில் வெப்பம் நீக்கப்படுவதால், மூலக்கூறுகளின் வேகம் குறைவதால் அவை மெதுவாக நகரும். இத்தகைய நிகழ்வுகள் வெப்ப உமிழ் நிகழ்வுகளாகும்
9. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை.
a) ஒரு பொருளை வெப்பப்படுத்துதல் மூலம் திரவ நிலையிலிருந்து திண்ம நிலைக்கு மாற்றுவது உருகுதல் ஆகும்.
b) ஒரு பொருளை குளிர்விக்கும் போது திண்ம நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாற்றுவது நிகழ்வு உறைதல் ஆகும்.
c) ஆவியாதல் திரவத்தின் புறப்பரப்பில் மட்டுமே நிகழ்வதாகும்.
d) வாயு நிலையினைச் சுருக்கி நீர்மமாக்கும் நிகழ்விற்கு ஆவியாதல் என்று பெயர்.
A) a, b, c சரி d தவறு
B) a, b, d தவறு c சரி
C) b, c சரி a, d தவறு
D) a , d தவறு b, c சரி
விளக்கம்: ஒரு பொருளை வெப்பப்படுத்துதல் மூலம் திண்ம நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாற்றுவது உருகுதல் ஆகும்.
ஒரு பொருளை குளிர்விக்கும் போது திரவ நிலையிலிருந்து திண்ம நிலைக்கு மாற்றுவது நிகழ்வு உறைதல் ஆகும்.
ஆவியாதல் ஒரு மெதுவாக நடைபெறும் நிகழ்வு; மேலும் அது திரவத்தின் புறப்பரப்பில் மட்டுமே நிகழ்வதாகும்
வாயு நிலையினைச் சுருக்கி நீர்மமாக்கும் நிகழ்விற்கு ஆவி சுருங்குதல் என்று பெயர். ஆவி சுருங்குதல் என்ற நிகழ்வும் இயற்பியல் மாற்றமே.
10. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
a) இரும்பு துருப்பிடித்தல் – வேதியியல் மாற்றங்கள்
b) பட்டாசு வெடித்தல் – வெப்ப உமிழ் நிகழ்வு
c) பால் தயிராதல் – வேதியியல் மாற்றங்கள்
d) நொதித்தல் – உயிரியல் மாற்றங்கள்
A) a, b, c சரி d தவறு
B) a, b, d தவறு c சரி
C) b, c சரி a, d தவறு
D) a , c சரி b, d தவறு
விளக்கம்: மாறுபட்ட வேதியியல் இயைபுடன் புதிய பொருள் உருவாவதோடு, வெப்பமோ, ஒளியோ வெளியிடப்பட்டோ அல்லது பொருள் வேறு பொருளாக மாறுவதே வேதியியல் மாற்றங்கள் எனப்படும். இரும்பு துருப்பிடித்தல், பால்தயிராதல் நொதித்தல், பட்டாசு வெடித்தல் வேதியியல் மாற்றங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்
11. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
a) நாக முலாம் பூசுதல் என்பது இரும்பின் மீது மெக்னீசியம் அல்லது துத்தநாகம் போன்ற உலோகங்களை ஒரு படலமாகப் பூசும் முறையாகும்
b) மெக்னீசியம் ஆக்ஸைடு என்ற சேர்மம் வெண்ணிற சாம்பல்தூள் போல் காணப்படுகிறது.
c) பால் தயிராதல் என்பது மீளா வினைக்கான எடுத்துக்காட்டு
d) முதன்முதலில் நொதித்தல் என்ற நிகழ்வினை விவரித்தவர் எட்வின் பாஸ்டியர்
A) a, b, c சரி d தவறு
B) a, b, d தவறு c சரி
C) a, b சரி a, d தவறு
D) a , c சரி b, d தவறு
விளக்கம்: இரும்பின் மீது குரோமியம் அல்லது துத்தநாகம் போன்ற உலோகங்களை ஒரு படலமாகப் பூசுவதும் துருப்பிடித்தலைத் தடுக்கும் ஒரு மாற்று முறையாகும். இம்முறைக்கு நாக முலாம் பூசுதல் என்று பெயர். மெக்னீசியம் ஆக்ஸைடு என்ற சேர்மம் வெண்ணிற சாம்பல்தூள் போல் காணப்படுகிறது. இது வேதியியல் மாற்றமாகும். பால் தயிராதல் என்பது மீளா வினை. ஏனெனில் தயிரான பின் எம்முறையிலும் மீண்டும் பாலினைப் பெற முடியாது. லூயிஸ் பாஸ்டியர் முதன்முதலில் நொதித்தல் என்ற நிகழ்வினை விவரித்தவர் ஆவா
12. பொருத்துக.
a) இதயத்துடிப்பு 1. வெப்ப உமிழ் மாற்றங்கள்
b) நிலநடுக்கம் ஏற்படுதல் 2. கால ஒழுங்கு மாற்றங்கள்
c) மரம் எரியும்பொழுது வெப்பமும்
ஒளியும் வெளியேறுகிறது 3. வெப்ப ஏற்பு மாற்றங்கள்
d) நீர் வெப்பத்தை உறிஞ்சி நீராவியாகிறது 4. கால – ஒழுங்கற்ற மாற்றங்கள்
a b c d
A) 3 1 4 2
B) 4 1 3 2
C) 2 4 3 1
D) 2 4 1 3
13. எந்த ஒரு பொருள் ஒரு வேதிவினையில் எந்த மாற்றத்திற்கும் உட்படாமல், வேதி மாற்றத்தின் வேகத்தினை மட்டும் துரிதப்படுத்துமோ அப்பொருளுக்கு பெயர்
A) வினையூக்கி
B) இணையும் வினை
C) வினை காப்பான்
D) வெப்பம் கொள் மாற்றம்
14. ஒரு வேதியியல் மாற்றம் நிகழத் தகுந்த காரணங்கள்
A) அழுத்தம் தருவதன் முலம்
B) இரு பொருள்களின் இணைதல்
C) வெப்பப்படுத்துதல்
D) இவை அனைத்தும்
விளக்கம்: சில வகை பட்டாசுகள் சுவற்றில் அடிக்கும் பொழுதும், சில வகை பட்டாசுகளை கடினமான பொருள்களை வைத்து தட்டும்பொழுதும் வெடிக்கும். எனவே அழுத்தம் தருவதன் முலம் ஒரு வேதியியல் மாற்றத்தினை உருவாக்கலாம். எலுமிச்சை சாற்றினை சோடா நீரில் ஊற்றும் பொழுது நுரைத்துப் பொங்கி கார்பன் டைஆக்ஸைடு உருவாவதைக் காண்கிறோம். இரு கரைசலும் கலக்கும் முன் நுரைத்துப் பொங்குதல் நிகழ்வதில்லை. எனவே இரு பொருள்களின் இணைதலும் ஒரு வேதி மாற்றம் நிகழ போதுமானது . அரிசியுடன் தகுந்த அளவு நீரினைச் சேர்த்து, வெப்பப்படுத்தி வேகவைக்கும்பொழுது அரிசியின் தன்மையும், சுவையும் முற்றிலும் மாறிவிடுகிறது. எனவே, வெப்பப்படுத்துதல் என்ற காரணியும் ஒரு வேதி மாற்றம் நிகழ்த்த தகுந்தது.
15. ____________ என்றவேதிச் சேர்மம் எந்த காரணிக்கும் உட்படாதவரை நீராகவே இருக்கும்.
A) எண்ணெய்
B) நீர்
C) சுண்ணாம்பு
D) மின்சாரம்
விளக்கம்: நீர் என்றவேதிச் சேர்மம் எந்த காரணிக்கும் உட்படாதவரை நீராகவே இருக்கும்.
16. திண்மப் பொருள்கள் பெரும்பாலும் முறையில் தூய்மை செய்யப்படுகிறது
A) ஆவியாதல்
B) பதங்கமாதல்
C) படிகமாக்குதல்
D) ஆவி சுருங்குதல்
விளக்கம்: திண்மப் பொருள்களை படிகமாக்குதல் மூலம் தூய்மைப்படுத்தலாம். பெரிய படிகங்களை அதன் கரைசல்களில் இருந்து பெறவும் முடியும். படிகமாக்குதல் என்பது ஒரு பிரித்தெடுக்கும் முறையாகவும் தூய்மையாக்கும் முறையாகவும் திகழ்கிறது.
17. திண்மம் – திரவக் கலவையில் கரைந்த நிலையில் உள்ள திண்மங்களை பிரித்தெடுக்க என்ற நுட்பம் நிகழ்த்தப்படுகிறது.
A) ஆவி சுருங்குதல்
B) ஆவியாதல்
C) பதங்கமாதல்
D) படிகமாக்குதல்
விளக்கம்: ஆவியாதல் என்ற நுட்பத்தினைப் பயன்படுத்தி கரைந்த நிலையில் உள்ள திண்மங்களை அதன் திண்மம் – திரவம் கலவையில் இருந்து பிரித்தெடுக்க முடியும்.
18. 16 ஆம் நூற்றாண்டிலேயே துருப்பிடித்தலை தவிர்க்கும் உலோகத் தொழில் நுட்பத்தில் இந்திய அறிவியலாளர்கள் சிறந்து விளங்கினர் என்பதற்க்கு சான்று
A) அலஹாபாத் இரும்பு தூண் கல்வெட்டு
B) குதுப்மினார் இரும்பு தூண் க;வெட்டு
C) டெல்லி இரும்பு தூண் கல்வெட்டு
D) மெஹ்ராலி இரும்பு தூண் கல்வெட்டு
19. மீளா வினைக்கான எடுத்துக்காட்டு
A) பால் தயிராதல்
B) காகிதம் எரிதல்
C) எலுமிச்சைச் சாறுடன் சமையல் சோடா ஈடுபடும் வினை
D) நொதித்தல்
விளக்கம்: பால் தயிராதல் என்பது மீளா வினைக்கான எடுத்துக்காட்டு. ஏனெனில் தயிரான பின் எம்முறையிலும் மீண்டும் பாலினைப் பெற முடியாது.
20. வேகமாக நிகழும் மாற்றம் நிலையான மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு
A) எலுமிச்சைச் சாறுடன் சமையல் சோடா ஈடுபடும் வினை
B) பால் தயிராதல்
C) நொதித்தல்
D) காகிதம் எரிதல்
விளக்கம்: காகிதம் எரிதல் வேகமாக நிகழும் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும். ஒரு காகிதத்தினை எரிய வைக்கும் பொழுது, அதிலிருந்து கார்பன் டைஆக்ஸைடு, நிர், நீராவி, புகை, சாம்பல் போன்றவை பெறப்படுகிறது. புகை, சாம்பல் போன்றவை பெறப்படுகிறது. காகிதத்தைப் பெறுதல் இயலாது.
21. ஈஸ்ட்மற்றும் சிலவகை பாக்ட்ரியாக்களினால் சாக்கரைக் கரைசலினை ____________ மற்றும் ____________ ஆக மாறும் நிகழ்விற்கு நொதித்தல் என்று பெயர்.
A) ஆல்கஹாலாகவும், கார்பன் டை ஆக்ஸைடை
B) ஆக்ஸிஜன், ஆல்கஹாலாகவும்
C) ஆல்கஹாலாகவும், நைட்ரஜன்
D) கார்பன் டை ஆக்ஸைடை, ஆக்ஸிஜன்
விளக்கம்: ஈஸ்ட் மற்றும் சிலவகை பாக்டீரியாக்களினால் சாக்கரைக் கரைசலினை ஆல்கஹாலாகவும், கார்பன் டை ஆக்ஸைடகவும் மாறும் நிகழ்விற்கு நொதித்தல் என்று பெயர்.
22. கூற்று (A) : திரவ நிலை நீர் வெப்பப்படுத்துவதால் அதன் வாயு நிலைக்கு மாறுவது கொதித்தல் எனப்படும்
காரணம் (R) : நீராவி குளிர்வடைந்து நீராக மாறுவது குளிர்வித்தல் எனப்படும்.
A) A சரி ஆனால் R தவறு
B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A மற்றும் R தவறு
D) A சரி மற்றும் R விளக்கம்
23. கூற்று (A) : மரக்கட்டையை எரித்து கரியாக்குதல் ஒரு இயற்பியல் மாற்றமாகும்.
காரணம் (R) : ஒரு மரக்கட்டை துண்டினை எரிப்பதால் கிடைக்கும் விளைபொருள்களை எளிதாக மீண்டும் மரக்கட்டையாக மாற்ற முடியும்.
A) A சரி ஆனால் R தவறு
B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A மற்றும் R தவறு
D) A சரி மற்றும் R விளக்கம்
விளக்கம்: மரக்கட்டையை எரித்து கரியாக்குதல் ஒரு வேதியியல் மாற்றமாகும். ஒரு மரக்கட்டை துண்டினை எரிப்பதால் கிடைக்கும் விளைபொருள்களை எளிதாக மீண்டும் மரக்கட்டையாக மாற்ற முடியாது.
24. ____________ வேதிமாற்றம் அல்ல.
A) அம்மோனியா நீரில் கரைவது
B) கார்பன் – டை – ஆக்ஸைடு நீரில் கரைவது
C) இ. உலர் பனிக்கட்டி நீரில் கரைவது
D) துருவப் பனிக்குமிழ்கள் உருகுவது
25. ஒரு அவரைத் தாவரம் சூரிய ஒளியினைப் பெற்று, அவரை விதைகளாக மாறுவது
A) இயற்பியல் மற்றும் கால – ஒழுங்கற்ற மாற்றம்
B) இயற்பியல் மாற்றம்
C) வேதியியல் மற்றும் கால ஒழுங்கு மாற்றமாகும்
D) வேதியியல் மற்றும் கால – ஒழுங்கற்ற மாற்றம்
26. பாலில் சர்க்கரையை சேர்ப்பது
A) வெப்பம் கொள் மாற்றம்
B) வெப்ப உமிழ் மாற்றம்
C) வேதியியல் மாற்றம்
D) இயற்பியல் மாற்றம்
27. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
a) ஒரு வேதியியல் மாற்றத்தின்பொழுது நிற மாற்றம் ஏற்படாது.
b) ஒலி உண்டாகலாம்.
c) வெப்பம், ஒளி அல்லது வேறு ஏதேனும் கதிர்வீச்சு வெளியிடப்படாது
d) வீசும் மணத்தில் மாற்றமோ அல்லது புதிய மணம் உருவாவதோ நிகழலாம்.
A) a, c சரி b, d தவறு
B) a, c தவறு b, d சரி
C) b, c சரி a, d தவறு
D) a , d தவறு b, c சரி
விளக்கம்: ஒரு வேதியியல் மாற்றத்தின்பொழுது நிற மாற்றம் வெளியிடப்படலாம். ஒலி உண்டாகலாம். வெப்பம், ஒளி அல்லது வேறு ஏதேனும் கதிர்வீச்சு வெளியிடப்படலாம். வீசும் மணத்தில் மாற்றமோ அல்லது புதிய மணம் உருவாவதோ நிகழலாம்.
28. ஒரு குவளை நீரினை எடுத்து அதனை குளிர்சாதனப் பெட்டியின் அதிகுளிர் பகுதியில் வைத்து குளிர்விப்பது
A) இயற்பியல் மாற்றம்
B) வெப்ப உமிழ் மாற்றம்
C) வேதியியல் மாற்றம்
D) வெப்பம் கொள் மாற்றம்
29. பொருத்துக
a) நிலக்கரி எரித்தல் 1. துருபிடித்தல்
b) ஒரு மேற்பரப்பில் ஓவியம் வரைதல் 2. ஆவியாதல்
c) இரும்பை நீரில் நனைத்தல் 3. வேதியியல் மற்றம்
d) கடல் நீரிலிருந்து உப்பு 4. துருபிடிப்பதை தடுக்கும்
a b c d
A) 3 4 1 2
B) 4 1 3 2
C) 1 2 3 4
D) 4 1 2 3
30. கம்பளி நூலினைக் கொண்டு ஸ்வெட்டர் தயாரிக்கப்பட்டால், அம்மாற்றத்தினை ____________ ஆக வகைப்படுத்தலாம்.
A) இயற்பியல் மாற்றம்
B) வேதியியல் மாற்றம்
C) வெப்பம் கொள் மாற்றம்
D) வெப்ப உமிழ் மாற்றம்
31. கேக் தயாரிக்க முட்டை அடிப்பது
A) இயற்பியல் மாற்றம்
B) வேதியியல் மாற்றம்
C) வெப்பம் கொள் மாற்றம்
D) வெப்ப உமிழ் மாற்றம்
32. ____________ ஐ சேர்ப்பதன் மூலம் காய்கறி எண்ணெயிலிருந்து வனஸ்பதி பெறப்படுகிறது
A) ஹைட்ரஜன்
B) நைட்ரஜன்
C) அம்மோனியா
D) ஆக்சிஜன்
விளக்கம்: தாவர எண்ணெய்களில் ஹைட்ரஜன் சேர்க்கப்பட்டு வனஸ்பதி உருவாகிறது
33. திண்மம் மீது வெப்பத்தின் விளைவு கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
A) துகள்கள் நெருக்கமானவை
B) துகள்கள் நிலையான வடிவத்தை பெற்றிருக்கும்
C) தங்களது நிலையான இடங்களில் இருந்து அதிர்வடையும்
D) இவை அனைத்தும்
34. கீழ்க்கண்டவற்றுள் எவை இயற்பியல் பண்புகளுள் சரியானவை
a) கரைதிறன்
b) அடர்த்தி
c) நெகிழத்தன்மை
A) a, b, c சரி
B) a, b, c தவறு
C) a, b சரி c தவறு
D) a தவறு b, c சரி
விளக்கம்: பளபளப்பு, தகடாகும் தன்மை (நெகிழ்வுத்தன்மை) மற்றும் மெல்லிய கம்பிகளாக இழுக்கக்கூடிய பண்பு, (நீளுமை) அடர்த்தி, பாகுத்தன்மை, கரைதிறன், நிறை, பருமன் போன்றவை இயற்பியல் பண்புகளுள் சில
35. கீழ்கண்டவற்றில்____________ வேதியியல் மாற்றமாகும்.
A) நீர் மேகங்களாவது
B) ஒரு மரத்தின் வளர்ச்சி
C) பசுஞ்சாணம் உயிர் – எரிவாயுவாவது
D) பனிக்கூழ் கரைந்த நிலை – பனிக்கூழாவது
36. கீழ்கண்டவற்றில் எவை வெப்பக் கொள் நிகழ்வுகளாகும்
A) உருகுதல்
B) ஆவியாதல்
C) பதங்கமாதல்
D) இவை அனைத்தும்
37. ஒரு பொருளின் வேதியியல் பண்புகள் மாறாமல் இருந்து, அதன் நிலை அல்லது வடிவம் மாறுபட்டிருந்தால்
C) வெப்பம் கொள் மாற்றம்
D) வெப்ப உமிழ் மாற்றம்
C) இயற்பியல் மாற்றம்
D) கால ஒழுங்கு மாற்றங்கள்
38. ஆவியாதலின் வகைகள் எத்தனை
A) 1
B) 3
C) 2
D) 4
விளக்கம்: ஆவியாதல் இரு வகையில் நிகழும் கொதித்தல் மற்றும் ஆவியாதல், கொதித்தல் வெப்பப்படுத்துதல் மூலமும், ஆவியாதல் இயற்கையிலேயே நிகழும் ஒரு நிகழ்வாகவும் அமைகிறது
39. நீர் எவ்வளவு குளிர்விக்கும் போது உறைந்து பனிக்கட்டியாகிறது
A) 00C
B) 40 C
C) 10 C
D) 50 C
விளக்கம்: திரவ நிலையிலுள்ள நீர் 00C க்கு குளிர்விக்கப்படும்பொழுது, அது உறைந்து பனிக்கட்டியாகிறது.
40. ரேபிஸ் என்ற வெறிநாய்கடிக்கு மருத்துவம் கண்டறிந்தவர்.
A) லூயிஸ் பாஸ்டியர்
B) எட்வின் பாஸ்டியர்
C) ராபர்ட் கோச்
D) எட்வின் வில்லியம்
விளக்கம்: லூயிஸ் பாஸ்டியர் (1822 – 1895) என்ற பிரெஞ்சு வேதியாலர் ஒரு நுண்ணுயிரியலாளரும் ஆவார். இவரே ரேபிஸ் என்ற வெறிநாய்கடிக்கும் மருத்துவம் கண்டறிந்தவர்.
41. சோடியம் பை கார்பனேட் எலுமிச்சைச் சாற்றில் கலக்கும்பொழுது வெளியேறுவது
a) சோடியம் சிட்ரேட்
b) சிட்ரிக் அமிலம்
c) கார்பன் டைஆக்ஸைடு
d) நீர்
A) a, b, c, d சரி
B) a, b, c, d தவறு
C) a, c, d சரி b தவறு
D) a, b, c தவறு d சரி
விளக்கம்: சோடியம் பை கார்பனேட் + சிட்ரிக் அமிலம் → சோடியம் சிட்ரேட் + கார்பன் டைஆக்ஸைடு + நீர்
42. கூற்று (A) : எலுமிச்சை சாற்றினை சோடா நீரில் ஊற்றும் பொழுது நுரைத்துப் பொங்கி கார்பன் டைஆக்ஸைடு உருவாவதைக் காண்கிறோம்.
காரணம் (R) : இரு பொருள்களின் இணைதலும் ஒரு வேதி மாற்றம் நிகழ போதுமானது என அறிகிறோம்.
A) A சரி ஆனால் R தவறு
B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A மற்றும் R தவறு
D) A சரி மற்றும் R விளக்கம்
விளக்கம்: எலுமிச்சை சாற்றினை சோடா நீரில் ஊற்றும் பொழுது நுரைத்துப் பொங்கி கார்பன் டைஆக்ஸைடு உருவாவதைக் காண்கிறோம். இரு கரைசலும் கலக்கும் முன் நுரைத்துப் பொங்குதல் நிகழ்வதில்லை. எனவே இரு பொருள்களின் இணைதலும் ஒரு வேதி மாற்றம் நிகழ போதுமானது என அறிகிறோம்.
43. வேதி மாற்றங்களை உருவாக்கும் காரணிகள்
A) பொருள்கள் கலத்தல்
B) வெப்பம்
C) ஒளி
D) இவை அனைத்தும்
விளக்கம்: பொருள்கள் கலத்தல், வெப்பம், ஒளி, மின்சாரம், அழுத்தம் கொடுத்தல் போன்ற சில காரணிகளால் வேதி மாற்றங்களை உருவாக்க முடியும்.
44. கூற்று (A) : சுட்ட சுண்ணாம்புடன் நீரினைச் சேர்க்கும் பொழுது அதிகளவு வெப்பம் வெளியேறி தெளிந்த சுண்ணாம்பு கால்சியம் ஆக்ஸைடு உருவாகிறது.
விளக்கம்: இது ஒரு வேதியியல் மாற்றமாகும்
A) A தவறு ஆனால் R சரி
B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A மற்றும் R தவறு
D) A சரி மற்றும் R விளக்கம்
விளக்கம்: சுட்ட சுண்ணாம்புடன் (கால்சியம் ஆக்ஸைடு) நீரினைச் சேர்க்கும் பொழுது அதிகளவு வெப்பம் வெளியேறி தெளிந்த சுண்ணாம்பு (கால்சியம் ஹைட்ராக்ஸைடு) உருவாகிறது. இது ஒரு வேதியியல் மாற்றமாகும்.
45. உணவு கெட்டுப்போதல் என்பது ________ மாற்றமாகும்.
A) இயற்பியல் மாற்றம்
B) வேதியியல் மாற்றம்
C) வெப்பம் கொள் மாற்றம்
D) வெப்ப உமிழ் மாற்றம்
விளக்கம்: உணவு கெட்டுப்போதல் என்பது வேதியியல் மாற்றம் எனவே மணம் மாறி துர்நாற்றமாவதும் ஒரு வேதி மாற்றத்தினைச் சுட்டும் குறியீடாகும்.
46. 2Mg + O2 →
A) 2MgO
B) MgO
C) Mg2O
D) MgO2
விளக்கம்: மக்னீசியம் + ஆக்ஸிஜன் → மெக்னீசியம் ஆக்ஸைடு
47. Fe + 3O2 + 2H2O →
A) 2Fe2O3. H2O
B) 2FeO3.H2
C) Fe2O.H2O
D) Fe0.H20
விளக்கம்: இரும்பு + ஆக்ஸிஜன் + நீர் → துரு
48. ஒரு பலூனினுள் வெப்பக் காற்றினை அடைப்பது ________ மாற்றமாகும்.
A) இயற்பியல் மாற்றம்
B) வேதியியல் மாற்றம்
C) வெப்பம் கொள் மாற்றம்
D) வெப்ப உமிழ் மாற்றம்
49. காகிதம் எரியும் போது அதிலிருந்து பெறப்படுவது
A) கார்பன் டைஆக்ஸைடு
B) நீர்
C) நீராவி,
D) இவை அனைத்தும்
50. திரவ பொருள்களை வெப்பப்படுத்தும் போது அதன் பண்புகள் யாவை?
A) துகள்கள் நெருக்கமானவை
B) துகள்கள் ஒன்றன் மீது மற்றொன்று நழுவும்
C) துகள்கள் நிலையான முறையான வடிவத்தை பெற்றிருக்காது
D) இவை அனைத்தும்
51. வாயு பொருள்களை வெப்பப்படுத்தும் போது அதன் பண்புகள் யாவை?
A) துகள்கள் நிலையான முறையான வடிவத்தை பெற்றிருக்காது
B) துகள்கள் ஒன்றும் மற்றொன்றும் தொலைவில் அமைந்திருக்கும்
C) துகள்கள் அதிக தூரம் சுதந்திரமாக நகரும்
D) இவை அனைத்தும்
52. ஒரு பொருள் குளிரூட்டும்போது எது அப்படியே இருக்கும்
A) நிறை
B) வடிவம்
C) அளவு
D) இவை அனைத்தும்
விளக்கம்: ஒரு பொருளை வெப்பப்படுத்துவதாலோ அல்லது அப்பொருள் குளிர்விப்பதாலோ, அப்பொருளானது விரியும் அல்லது சுருங்குமேயன்றி, அந்தப் பொருளின் நிறையில் எந்த மாற்றமும் அடைவதில்லை.
53. ஒரு குவளை தண்ணீரை சூடாக்கும் போது அதன் அளவு
A) அதிகரிக்கும்
B) குறையும்
C) ஆரம்பத்தில் அதிகரிக்கும் பின்னர் குறையும்
D) அப்படியே இருக்கும்
விளக்கம்: ஒரு குவளை தண்ணீரை சூடாக்கும் போது அதன் அளவு அதிகரிக்கும் குளிர்விக்கும் போது அதன் அளவு குறையும்
54. ஒரு திரவத்தை குளிர்வித்தவுடன் துகள்கள் அதன் ஆற்றலை
A) பெறுகிறது
B) இழக்கிறது
C) ஆரம்பத்தில் இழக்கும் பின்னர் பெறுகிறது
D) எதுவுமில்லை
விளக்கம்: ஒரு திரவத்தை குளிர்வித்தவுடன் துகள்கள் அதன் ஆற்றலை இழந்து குறைந்த வீரியத்துடன் அதிர்வுறும்
55. ஆப்பிள் துண்டை காற்றில் வைக்கப்படும் போது அது எந்த வண்ணத்தில் மாறுகிறது
A) பழுப்புநிறம்
B) பச்சை
C) மஞ்சள்
D) ஆரஞ்சு
விளக்கம்: நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை நாம் உடனடியாக உண்ணாமல் வைத்திருந்தால் பழுப்பு நிறமாக மாறிவிடும்
56. நீரில் குளுகோஸை கரைப்பது
A) இயற்பியல் மாற்றம்
B) வேதியியல் மாற்றம்
C) வெப்பம் கொள் மாற்றம்
D) வெப்ப உமிழ் மாற்றம்
7th Science Lesson 10 Questions in Tamil
10] செல் உயிரியல்
1) உயிரினத்தின் அடிப்படை செயல் அலகு என்று அழைக்கப்படுவது எது?
A) செல்
B) திசுக்கள்
C) உறுப்புகள்
D) உறுப்பு மண்டலம்
விளக்கம்: அனைத்து உயிரினங்களும் அடிப்படை அலகைப் பெற்றுள்ளது. அவை செல் என்று அழைக்கப்படுகிறது.
2) கூற்று: தாவரத்தில் வேர் அமைப்பில் முதன்மை வேர், இரண்டாம் நிலை வேர் மற்றும் மூன்றாம் நிலை வேர் ஆகியவை காணப்படுகின்றன.
காரணம்: இது நீர், கனிமம் போன்றவற்றைக் கடத்துவதற்கும் மற்றும் தாவரத்தை நிலத்தில் நிலைப்படுத்தவும் உதவுகிறது.
A) கூற்று சரி காரணமும் சரி
B) கூற்று தவறு காரணம் சரி
C) கூற்று சரி, காரணம் தவறு
D) கூற்று மற்றும் காரணம் தவறு
விளக்கம்: தாவரத்தின் வேர் அமைப்பில் முதன்மை வேர், இரண்டாம் நிலைவேர் மற்றும் மூன்றாம் நிலை வேர் ஆகியவை காணப்படுகின்றன. இது நீர், கனிமம் போன்றவற்றை கடத்துவதற்கு மற்றும் தாவரத்தை நிலத்தில் நிலைப்படுத்தவும் உதவுகிறது.
3) மனிதர்கள் மற்றும் விலங்குகளின் திசுக்களை எத்தனை வகைகளாய் பிரிப்பர்?
A) 3
B) 4
C) 5
D) 6
விளக்கம்: மனிதர்கள் மற்றும் பிற விலங்குகள் நரம்புத் திசு, எபிதீலியல் திசு ,இணைப்புத்திசு மற்றும் தசை திசுக்களால் உருவாக்கப்படுகின்றன.
4) பின்வரும் செல்களில் உட்கரு இன்றி காணப்படும் செல் எது?
A) நரம்பு செல்கள்
B) தசை செல்கள்
C) எபிதீலியல் செல்கள்
D) இரத்த சிவப்பு செல்கள்
விளக்கம்: சிவப்பு இரத்த செல்களில் உட்கரு இல்லை உட்கருவின்றி இந்த செல்கள் விரைவில் இறக்கின்றன. சுமார் இரண்டு மில்லியன் சிவப்பு செல்கள் ஒவ்வொரு நொடியும் இறக்கின்றன அதிர்ஷ்டவசமாக மனித உடம்பில் புதிய சிவப்பு ரத்த செல்கள் தினமும் தோன்றுகின்றன.
5) பின்வருவனவற்றில் தாவரங்களில் காணப்படும் திசு எது?
A) கடத்தும் திசு
B) புறத்தோல் திசு
C) A மற்றும் B
D) இவைஎதுவுமில்லை
விளக்கம்: தாவரங்களில் கடத்தும் திசு, புறத்தோல் திசு மற்றும் அடிப்படைத் திசுக்கள் உள்ளன.
6) ஒரு செல்லின் உள்ளே உள்ள உறுப்புகளில் மிகப்பெரியது எது?
A) சைட்டோபிளாசம்
B) எண்டோபிளாச வலைப்பின்னல்
C) செல் உட்கரு
D) கோல்கி உடலம்
விளக்கம்: உட்கரு,செல்லின் கட்டுப்பாட்டு மையம் மற்றும் செல்லின் பெரிய நுண்ணுறுப்பு உட்கரு ஆகும்.
7) பொதுவாக சைட்டோசால் எந்த நிறமுடையது?
A) நீலம்
B) பச்சை
C) சிவப்பு
D) நிறமற்றது
விளக்கம்: சைட்டோபிளாசம் சைட்டோசால் மற்றும் செல் நுண்ணுறுப்புகளால் ஆனது .சைட்டோசால் என்பது நீர் நிறைந்த, ஜெல்லி போன்ற 70%-90% அளவு நீராலானது பொதுவாக இது நிறமற்றது.
8) பின்வருவனவற்றுள் நுண்ணுறுப்புகளின் செயல்கள் எது?
A) உணவு வழங்குதல்
B) செல்லை சரி செய்தல்
B) கழிவுகளை அகற்றுதல்
D) இவையனைத்தும்
விளக்கம்: நுண்ணுறுப்புகள் தங்கள் செயலின் மூலம் உணவு வழங்குவதற்கும் ,கழிவுகளை அகற்றுவதற்கும், உயிரை பாதுகாப்பதற்கும், செல்லை சரி செய்வதற்கும், வளரவும் மற்றும் இனப்பெருக்கம் செய்யவும் உதவுகின்றன.
9) உட்கருவைத் தவிர செல்லின் அனைத்து பகுதிகளும் காணப்படும் பகுதி
A) எண்டோபிளாச வலைப்பின்னல்
B) சென்ட்ரியோல்
C) சைட்டோபிளாசம்
D) ரிபோசோம்
விளக்கம்: சைட்டோபிளாசம் என்பது செல் சவ்வு உள்ளடக்கிய செல்லின் அனைத்து பகுதிகள் கொண்ட, ஆனால் உட்கருவை தவிர்த்து உள்ள பகுதியாகும்.
10) செல்லின் சுவாச உறுப்பு எது?
A) கோல்கி உடலம்
B) மைட்டோகாண்ட்ரியா
C) சென்ட்ரியோல்
D) உட்கரு
விளக்கம்: மைட்டோகாண்ட்ரியா கோள அல்லது குச்சி வடிவிலான, இரட்டை சவ்விலான நுண்ணுறுப்பு ஆகும் காற்று சுவாச வினைகளில் ஈடுபட்டு ஆற்றல் வெளியீடு செய்யப்படுகின்றன.
11) செல் பகுப்பின் போது ஸ்பின்டில் நார்களைப் பெருக்கமடையச் செய்வது எது?
A) சென்ட்ரியோல்
B) எண்டோபிளாச வலைப்பின்னல்
C) சைட்டோபிளாசம்
D) உட்கரு
விளக்கம்: சென்ட்ரியோல் செல் பகுப்பின் போது ஸ்பிண்டில் நார்களை பெருக்கம் அடையச் செய்கிறது.
12) உடலின் செயல்களை ஒருங்கிணைத்தல் மற்றும் செய்தி பரிமாற்றம் போன்ற செயல்களைச் செய்யும் செல் எது?
A) தசை செல்கள்
B) எபிதீலியல் செல்கள்
C) நரம்பு செல்கள்
D) இரத்த சிவப்பு செல்கள்
விளக்கம்: நரம்பு செல்கள் உடலின் செயல்களை ஒருங்கிணைத்தல் மற்றும் செய்திப் பரிமாற்றம் போன்ற செயல்களைச் செய்கின்றன.
13) நீண்ட மற்றும் கதிர்கோல் வடிவம் கொண்ட செல் எது?
A) எபிதீலியல் செல்கள்
B) நரம்பு செல்கள்
C) இரத்த சிவப்பு செல்கள்
D) தசை செல்கள்
விளக்கம்: தசை செல்கள் நீண்ட மற்றும் கதிர் கோல் வடிவம் கொண்டதாகும்.
14) 1. வட்ட வடிவம்
2. இருபுற குழி
3. தட்டு வடிவம்
மேற்கூறிய பண்புகளைக் கொண்ட செல் எது?
A) நரம்பு செல்கள்
B) இரத்த சிவப்பு செல்கள்
C) தசைசெல்கள்
D) எபிதீலியல் செல்கள்
விளக்கம்: இரத்த சிவப்பு செல்கள் வட்ட வடிவம், இருபுற குழி மற்றும் தட்டு வடிவமானது.
15) கோள வடிவம் கொண்டு ஜோடியாக காணப்படும் நுண்ணுறுப்பு எது?
A) எண்டோபிளாசவலைப்பின்னல்
B) மைட்டோகாண்ட்ரியா
C) கோல்கி உடலம்
D) சென்ட்ரியோல்
விளக்கம்: சென்ட்ரியோல் என்பது கோள வடிவம் கொண்டு ஒரு ஜோடியாக காணப்படும். செல் பகுப்பின் போது ஸ்பின்டில் நார்களை பெருக்கம் அடைய செய்கிறது.
16) பின்வருவனவற்றுள் கோல்கை உறுப்புகளின் பணிகள் எது?
A) நொதிகளைச் சுரப்பது
B) உணவிலிருந்து புரதத்தை பிரித்தல்
C) உணவு செரிமானம் அடையச் செய்வது
D) இவையனைத்தும்
விளக்கம்: கோல்கை உறுப்புகள் நொதிகளைச் சுரப்பது ,உணவு செரிமானம் அடையச் செய்வது ,உணவிலிருந்து புரதத்தை பிரித்து செல்லுக்கும், உடலுக்கும் வலு சேர்ப்பது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றன.
17) விலங்கு செல்களில் மட்டும் காணப்படும் நுண்ணுறுப்பு எது?
A) பசுங்கணிகம்
B) கோல்கை உறுப்புகள்
C) சென்ட்ரியோல்
D) லைசோசோம்
விளக்கம்: சென்ட்ரியோல் விலங்கு செல்களில் மட்டுமே உள்ளன மற்றும் தாவர செல்களில் காணப்படவில்லை.
18. பின்வருவனற்றுள் எண்டோபிளாச வலைப்பின்னல் எதன் தயாரிப்பிலும் கடத்தலிலும் பங்கு கொள்கிறது?
A) கொழுப்புகள்
B) ஸ்டீராய்டுகள்
C) A மற்றும் B
D) இவையெதுமில்லை
விளக்கம்: எண்ட்டோபிளாச வலைப்பின்னல் கொழுப்புகள், ஸ்டீராய்டுகள் ஆகியவற்றை தயாரிப்பதிலும், கடத்தலிலும் பங்கு கொள்வது இதன் பிரதான பணியாகும்.
19) செல்பிரிதலின் போது எந்த நுண்ணுறுப்பானது குரோமோசோமாக அமைக்கப்படுகிறது?
A) நியூக்ளியோலஸ்
B) குரோமேட்டின்
C) A மற்றும் B
C) இவையெதுமில்லை
விளக்கம்: செல் பிரிதலின் போது குரோமேட்டின் உடலானது குரோமோசோமாக அமைக்கப்படுகிறது.
20) செல் பகுப்பின் போது எந்த நுண்ணுறுப்பானது குரோமோசோம்களைப் பிரிக்க உதவுகிறது ?
A) மைட்டோகாண்ட்ரியா
B) கோல்கி உடலம்
C) உட்கரு
D) சென்ட்ரியோல்
விளக்கம்: சென்ட்ரியோல் செல் பகுப்பின் போது குரோமோசோம்களைப் பிரிக்க உதவுகிறது.
21) செல்லின் முதன்மையான செரிமான பகுதி எது?
A) கோல்கை உறுப்புகள்
B) லைசோசோம்
C) சென்ட்ரியோல்
D) உட்கரு
விளக்கம்: லைசோசோம் நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்கக்கூடிய மிகவும் சிறிய அமைப்பாகும். இவை செல்லின் முதன்மையான செரிமான பகுதியாகும்.
22) பின்வருவனவற்றுள் தாவர செல்லிற்கான வடிவத்தை தருவது எது?
A) செல்லுலோஸ்
B) பிளாஸ்மோடெஸ்மாட்டா
C) சைட்டோசால்
D) உட்கரு
விளக்கம்: செல்லுலோஸ் தாவரசெல்லிற்கான வடிவத்தை தருகிறது. இது அதிக உயரத்திற்கு வளர்ந்து விட்டாலும் கூட தாவரங்கள் உறுதியாகவும் நேராகவும் இருக்க அனுமதிக்கிறது.
23) பின்வருவனவற்றுள் தாவரங்கள் அதிக உயரத்திற்கு வளர்ந்துவிட்டாலும் கூட உறுதியாகவும், நேராகவும் இருக்க உதவுவது எது?
A) பிளாஸ்மோடெஸ்மாட்டா
B) செல்லுலோஸ்
C) சைட்டோசால்
D) நியூக்ளியோஃப்பிளாசம்
விளக்கம்: தாவரங்கள் அதிக உயரத்திற்கு வளர்ந்து விட்டாலும் கூட உறுதியாகவும் நேராகவும் இருக்க அனுமதிப்பது செல்லுலோஸ் ஆகும்.
24) ஒவ்வொரு செல்லும் அதன் அருகில் உள்ள செல்களுடன் இணையும் சிறிய துவாரத்தின் பெயர்
A) சைட்டோசால்
B) நியூக்ளியோபிளாசம்
C) செல்லுலோஸ்
D) பிளாஸ்மோடெஸ்மாட்டா
விளக்கம்: பிளாஸ்மோடெஸ்மாட்டா என்றழைக்கப்படும் சிறிய துவாரத்தின் மூலம் ஒவ்வொரு செல்லும் அதன் அருகிலுள்ள செல்களுடன் இணைத்துக் கொள்கிறது.
25) பின்வருவனவற்றுள் புரோட்டோப்பிளாசம் என்றழைக்கப்படுவது எது?
A) நியூக்ளியோஃப்பிளாசம்
B) சைட்டோபிளாசம்
C) இவையனைத்தும்
D) இவை எதுவுமில்லை
விளக்கம்: உட்கருவின் உள்ளேயும் வெளியேயும் உள்ள பொருள் புரோட்டோபிளாசம் என்று அழைக்கப்படுகிறது.உட்கருவின் உள்ளே உள்ள திரவம் அணுக்கரு அல்லது நியூக்ளியோஃப்ளாசம் என்று அழைக்கப்படுகிறது மற்றும் உட்கருவுக்கு வெளியே சைட்டோபிளாசம் என்று அழைக்கப்படுகிறது.
26) செல்லின் ஆற்றல் மையம் என்றழைக்கப்படும் செல் நுண்ணுறுப்பு
A) சைட்டோபிளாசம்
B) மைட்டோகாண்ட்ரியா
C) ரைபோசோம்
D) உட்கரு
விளக்கம்: செல் ஆற்றல் மையம் என்று அழைக்கப்படுவது மைட்டோகாண்ட்ரியா ஆகும்.
27) தாவர செல்களில் மட்டும் காணப்படும் நுண் உறுப்பு எது?
A) மைட்டோகாண்ட்ரியா
B) பசுங்கணிகம்
C) சென்டரிமோல்
D) லைசோசோம்
விளக்கம்: பசுங்கணிகம் என்பது ஒரு வகை கணிகம். தாவர செல்களில் மட்டும் பசுமை நிற நுண்ணுறுப்பாக இருக்கின்றன.
28) சூரியனின் ஒளி ஆற்றலைப் பெற்று வேதி ஆற்றலாக மாற்றி உணவு தயாரிப்பது எது?
A) செல் சுவர்
B) குமிழ்கள்
C) பசுங்கணிகம்
D) உட்கரு
விளக்கம்: சூரிய ஆற்றலில் இருந்து உணவு தயாரிக்க கூடிய ஒரே நுண்ணுறுப்பு பசுங்கணிகம் ஆகும்.இது சூரியனின் ஒளி ஆற்றலை பெற்று வேதி ஆற்றலாக மாற்றி உணவு தயாரிக்கிறது.
29) கீழ்கண்டவற்றுள் கரிம, கனிம வேதி மூலக்கூறுகள் மற்றும் நீரால் செல் உறுப்புகளுக்குஆதரவு வழங்குவது எது?
A) உட்கரு
B) சென்ட்ரியோல்
C) குமிழ்கள்
D) செல் சவ்வு
விளக்கம்: கரிம, கனிம வேதியியல் மூலக்கூறுகள் மற்றும் நீர் செல் உறுப்புகளுக்கு ஆதரவு வழங்குகிறது.
30) சவ்வால் சூழப்பட்ட பைகள் ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி வைக்கப்பட்டு சுரப்பி குழல்களுடன் அமைந்துள்ள அமைப்பு எவ்வாறு அழைக்கப்படும்
A) கோல்கை உறுப்புகள்
B) சென்ட்ரியோல்
C) லைசோசோம்
D) எண்டோபிளாச வலைப்பின்னல்
விளக்கம்: சவ்வால் சூழப்பட்ட பைகள் ஒன்றன்மேல் ஒன்று அடுக்கி வைக்கப்பட்டு சுரப்பி குழல்களுடன் அமைந்துள்ள அமைப்பு கோல்கை உறுப்புகள் எனப்படும்.
31) பொருத்துக
தொகுதி-I தொகுதி-2
a) ஆற்றல் மையம் 1) பசுங்கணிகம்
b) உணவு தயாரிப்பாளர் 2) மைட்டோகாண்ட்ரியா
c) கட்டுப்பாட்டு அறை 3) லைசோசோம்
d) தற்கொலைப் பை 4) உட்கரு
A) a-2, B – 1, c-4, d-3
B) a-3, b – 1, c-2, d- 4
C) a-4, B – 3, c-1, d- 2
D) a-4, b – 1, c-3, d-2
விளக்கம்:
- ஆற்றல் மையம் என்று அழைக்கப்படுவது மைட்டோகாண்ட்ரியா
- உணவு தயாரிப்பாளர் என்று அழைக்கப்படுவது பசுங்கணிகம்
- கட்டுப்பாட்டு அறை என்று அழைக்கப்படுவது உட்கரு
- தற்கொலைப் பை என்று அழைக்கப்படுவது லைசோசோம்
32) கூற்று : திசு என்பது மாறுபட்ட செல்களை கொண்ட ஒரு குழு.
காரணம்: நரம்புத் திசு நரம்பு செல்களால் ஆனது.
A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானவை
B) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் தவறானவை
C) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
D) கூற்று தவறு ஆனால் காரணம் சரியானது
விளக்கம்: ஒரு திசு என்பது குறிப்பிட்ட செயல்களை செய்வதற்காக உருவான செல்களின் குழுவாகும் .நரம்புத் திசு நரம்பு செல்களால் ஆனது.
33) பின்வருவனவறறில் உட்கருவின் உள்ளே அமைந்தவை?
A) நியூக்ளியோலஸ்
B) குரோமேட்டின் உடல்
C) இவை அனைத்தும்
D) இவை எதுவும் இல்லை
விளக்கம்: ஒன்று அல்லது இரண்டு நியூக்ளியோலஸ் மற்றும் குரோமேட்டின் உடல் ஆகியவை உட்கருவின் உள்ளே உள்ளன.
34) எண்டோபிளாச வலைப் பின்னல் எத்தனை வகைப்படும்?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: எண்டோபிளாச வலைப்பின்னல் சொரசொரப்பான எண்டோபிளாச வலைப்பின்னல் மற்றும் மென்மையான எண்டோபிளாச வலைப்பின்னல் என இரண்டு வகைப்படும்.
35) சொரசொரப்பான எண்டோபிளாச வலைப்பின்னல் எந்த நுண்ணுறுப்பு உடன் இணைந்து இருப்பதால் புரத சேர்க்கைக்கு உதவுகிறது.
A) உட்கரு
B) லைசோசோம்
C) ரைபோசோம்கள்
D) சென்ட்ரியோல்
விளக்கம்: சொரசொரப்பான எண்டோபிளாச வலைப்பின்னல் என்பது ரைபோசோம்கள் இணைந்து இருப்பதால் புரத சேர்க்கைக்கு உதவுகிறது.
36) புரோட்டின் மற்றும் பாலிபெப்டைடுகளை ஒன்றிணைக்கும் நுண்ணுறுப்பு எது?
A) உட்கரு
B) ரிபோசோம்
C) சைட்டோபிளாசம்
D) எண்டோபிளாச வலைப்பின்னல்
விளக்கம்: ரிபோசோம்கள் ஆர்.என்.ஏ வைப் பெற்றுள்ளது புரோட்டின் மற்றும் பாலிபெப்டைடுகளை ஒன்றிணைக்கிறது.
37) கனிகளின் நிறம் மற்றும் சுவை மாற்றத்திற்கான காரணமான நுண்ணுறுப்பு எது?
A) கோல்கை உடலம்
B) சென்ட்ரியோல்
C) ரைபோசோம்கள்
D) லைசோசோம்
விளக்கம்: கனிகளின் நிறம் மற்றும் சுவை மாற்றத்திற்கான நுண்ணுறுப்பு கோல்கை உடலம் ஆகும்.
38) 1. உடலில் உள்ள எந்த ஒரு செல்லாகவும் மாறவல்லது.
2. சில நோய்களை குணப்படுத்தவும் தடுக்கவும் இந்த செல்களை பயன்படுத்தி வருகின்றனர்.
மேற்கூறிய பண்புகளை உடைய செல் எது?
A) இரத்த செல்கள்
B) மூலச் செல்கள்
C) தசை செல்கள்
D) சுரப்பி செல்கள்
விளக்கம்: மூலச்செல்கள் எந்த ஒரு வகை செல்லுக்குள் செல் பிரிதல் அடைந்து, பெருக்கம் அடைந்து, வளர்ச்சி அடையும் திறன் உடையது. ஆனால் மூலச் செல்கள் மிகவும் ஆச்சரியமானவை கருவில் இருந்து பெறப்படும் மூலச் செல்கள் மிகவும் சிறப்பானது ஏனெனில் உடலில் உள்ள எந்த ஒரு செல்லாகவும் அவை மாறக்கூடியது எனவே அறிவியல் அறிஞர்கள் மற்றும் மருத்துவர்கள் சில நோய்களை குணப்படுத்தவும் தடுக்கவும் மூலச் செல்களை பயன்படுத்தி வருகின்றனர் உதாரணமாக முதுகுத்தண்டில் ஏற்படும் காயம்.
39) பின்வருவனவற்றுள் எது செல்லை பாதுகாக்கவும் அதன் வடிவத்தை நிலைப்படுத்தவும் செய்கிறது.
A) பசுங்கணிகம்
B) கோல்கை உடலம்
C) சைட்டோபிளாசம்
D) செல்சுவர்
விளக்கம்: செல்சுவர் தாவர செல்லுக்கு பாதுகாப்பு மற்றும் உறுதிப்பாட்டிற்கான சட்டகம் ஆக செயல்படுகிறது.
40) வெவ்வேறு திசுக்களின் தொகுப்பானது ஒரு குறிப்பிட்ட செயல் அல்லது செயல்களை செய்யக் கூடிய அமைப்பாகிறது. இந்த அமைப்பை எவ்வாறு அழைப்போம்.
A) உறுப்பு மண்டலம்
B) உறுப்பு
C) திசு
D) உயிரினம்
விளக்கம்: வெவ்வேறு திசுக்களின் தொகுப்பானது ஒரு குறிப்பிட்ட செயல் அல்லது செயல்களை செய்யக் கூடிய அமைப்பாகிறது. இது உறுப்பு என்று அழைக்கப்படுகிறது.
41) பின்வருவனவற்றில் ஒரு செல் உயிரினங்களை காண பயன்படுத்தபடுவது
A) தொலைநோக்கி
B) கெலிடோஸ்கோப்
C) பெரிஸ்கோப்
D) நுண்ணோக்கி
விளக்கம்: செல்கள் நுண்ணியவை இவற்றை நுண்ணோக்கியால் மட்டுமே காணமுடியும்.
42) உணவு நச்சாவதற்கு முக்கிய காரணியாக கருதப்படும் பாக்டீரியா
A) சால்மோனெல்லா
B) லாக்டோ பேசில்லஸ்
C) லாக்டோ காக்கஸ்
D) வெஸில்லா
விளக்கம்: சால்மோனெல்லா சிற்றினத்தைச் சார்ந்த பாக்டீரியா உணவு நச்சு ஆவதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது.
43) செல்லுக்கு சக்தியை வழங்கும் மூலக்கூறின் பெயர் என்ன?
A) அடினோசின் டிரை பாஸ்பேட்
B) குளுக்கோஸ்
C) அடினோசின் பை பாஸ்பேட்
D) ப்ரக்டோஸ்
விளக்கம்: மைட்டோகாண்ட்ரியா ஒருசெல் சுவாச உறுப்பு. இவை செல்லுக்கு அடினோசின் டிரை பாஸ்பேட் என்று மூலக்கூறினை வழங்குகிறது. இவை செல்லில் சக்தியை வழங்குவதற்கு உதவுகிறது.
44) பிளாஸ்மா சவ்வு என்று அழைக்கப்படுவது எது?
A) உட்கரு
B) செல் சவ்வு
C) உட்கரு உறைகள்
D) உட்கரு துளைகள்
விளக்கம்: விலங்கு செல்லினை சுற்றி எல்லையாக இருப்பது பிளாஸ்மா சவ்வு,இது செல் சவ்வு எனவும் அழைக்கப்படுகிறது.
45) கூற்று: செல் சவ்வுகள் அரிதி கடத்தியாகும்.
காரணம்: இவை அனைத்து பொருட்களையும் செல்லுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல அனுமதிக்கின்றன.
A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானவை
B) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் தவறானவை
C) கூற்று சரி ஆனால் காரணம் தவறானது
D) கூற்று தவறு ஆனால் காரணம் சரியானது.
விளக்கம்: செல் சவ்வுகள் அரிதி கடத்தி ஆகும். அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட பொருள்களை மட்டுமே செல்லிற்குள்ளேயும் வெளியேயும் செல்ல அனுமதிக்கின்றன.
7th Science Lesson 11 Questions in Tamil
11] வகைப்பாட்டியலின் அடிப்படை அலகுகள்
1) பின்வருவனவற்றுள் எவைகளை கொண்டு வகைப்படுத்துதல் செய்யப்படுகிறது?
A) கண்டுபிடித்தல்
B) பிரித்தல்
C) தொகுத்தல்
D) இவை அனைத்தும்
விளக்கம்: வகைப்படுத்துதல் என்பது கண்டுபிடித்தல், பிரித்தல், தொகுத்தல் வழியாக செய்யப்படுகிறது.
2) வகைப்பாட்டியல் பின்வரும் எவற்றை அடிப்படையாகக் கொண்டது?
A) உயிரினங்களின் பண்புகள்
B) உயிர்களின் ஒற்றுமை
C) உயிரினங்களின் வேற்றுமை
D) இவை அனைத்தும்
விளக்கம்: வகைப்பாட்டியல் என்பது உயிரினங்களின் பண்புகள், ஒற்றுமை மற்றும் வேற்றுமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
3) தற்கால வகைப்பாட்டின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
A) பிளேட்டோ
B) விட்டேக்கர்
C) அரிஸ்டாட்டில்
D) கரோலஸ் லின்னேயஸ்
விளக்கம்: கரோலஸ் லின்னேயஸ் “தற்கால வகைப்பாட்டின் தந்தை” ஆவார்.
4) வகைப்பாட்டின் அடிப்படை அலகு எது?
A) பேருலகம்
B) தொகுதி
C) வகுப்பு
D) சிற்றினம்
விளக்கம்: வகைப்பாட்டியலில் பேருலகம் பெரும் பிரிவாகவும், சிற்றினம் அடிப்படை அலகாகவும் கருதப்படுகிறது.
5) ஏறத்தாழப் புவியில் காணப்படும் சிற்றினங்களின் எண்ணிக்கை
A) 8.8 மில்லியன்
B) 8.5 மில்லியன்
C) 8.6 மில்லியன்
D) 8.7 மில்லயன்
விளக்கம்: இதுவரையில் சுமார் 8.7 மில்லியன் உயிரினங்கள் கண்டறியப்பட்டு பெயரிடப்பட்டுள்ளன. இருப்பினும் உலகில் உள்ள மொத்த உயிரினங்களில் குறைந்த எண்ணிக்கையிலான உயிரினங்கள் மட்டும கண்டறியப்பட்டுள்ளதாக பல அறிவியல் அறிஞர்கள் நம்புகிறார்கள்.
6) நுண்ணோக்கி மூலம் பார்க்கக்கூடிய ஒரு செல் உயிரி, போலிக்கால்கள் உடையவை, கசையிழை, குறு இழை மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன. மேற்கூறிய பண்புகளை உடைய தொகுதி எது?
A) புரோட்டோசோவா
B) பொரிபெரா
C) சிலிண்டரேட்டா
D) பிளாட்டிஹெல்மின்தஸ்
விளக்கம்:
7) பின்வருவனவற்றுள் புரோடோசோவா தொகுதியைச் சேர்ந்தது எது?
A) யூக்ளினா
B) ஜெல்லி மீன்கள்
C) ஸ்பான்ஜில்லா
D) இவை அனைத்தும்
விளக்கம்: புரோட்டோசோவா (எ.கா) அமீபா, யூக்ளினா, பாரமீசியம்
8) பொருத்துக
தொகுதி – எடுத்துக்காட்டு
a) புரோட்டோசோவா 1] சைகான்
b) பொரிபெரா 2] பாரமீசியம்
c) சீலென்டிரேட்டா 3] பிளானேரியா
d) பிளாட்டிஹெல்மின்தஸ் 4] பவளங்கள்
A) a-2, b-1, c-4, d-3
B) a-4, b-1, c-3, d-2
C) a-2, b-3, c-1, d-4
D) a-4, b-3, c-1, d-2
விளக்கம்:
9) பின்வருவனவற்றுள் கணுக்காலிகள் தொகுதியைச் சேர்ந்தது எது?
A) நண்டு
B) மண்புழு
C) நாடாப்புழு
D) பவளங்கள்
விளக்கம்: கணுக்காலிகள் எ.கா நண்டு, இறால், மரவட்டை, பூச்சிகள், சிலந்தி, தேள்.
10) 1) கடலில் மட்டுமே வாழ்பவை
2) உடற்சுவர் முட்களை கொண்டவை
3) நீர் குழல் மண்டலமும், குழாய் கால்களும், உணவு ஓட்டத்திற்கும், சுவாசத்திற்கும் மற்றும் இடப்பெயர்ச்சிக்கும் உதவுகிறது.
மேற்கூறிய பண்புகளை உடைய தொகுதி எது?
A) மெல்லுடலிகள்
B) முட்தோலிகள்
C) கணுக்காலிகள்
D) சீலெண்டிரேட்டா
விளக்கம்:
11) தொகுதி – பண்புகள்
a) துளையுடலிகள் 1] இரைப்பை குருதிக் குழி
b) குழியுடலிகள் 2] சுடர் செல்கள்
c) தட்டைப் புழுக்கள் 3] துளை தாங்கிகள்
d) உருளைப் புழுக்கள் 4] நூல் போன்ற புழுக்கள்
A) a-4, b-1, c-3, d-2
B) a-3, b-1, c-2, d-4
C) a-2, b-3, c-1, d-4
D) a-4, b-3, c-1, d-2
விளக்கம்:
12) பின்வருவனவற்றுள் தவறான இணையை தேர்ந்தெடு.
A) முட்தோலிகள் 1] உடல் சுவற்றில் முட்கள் காணப்படும்
B) மெல்லுடலிகள் 2] மென்மையான மற்றும் பாதுகாப்பான ஓடு
C) கணுக்காலிகள் 3] கால்கள் இணைப்புகளால் ஆனது
D) வளைத்தசை புழுக்கள் 4] உடற்கண்டங்கள் அற்றவை
விளக்கம்:
13) பொருத்துக
தாவரங்கள் – எ.கா
a) பெரணிகள் – காரா
b) மாஸ்கள் – பைனஸ்
c) ஆல்காக்கள் – அடியாண்டம்
d) ஜிம்னோஸ்பெர்ம்கள் – பியூனேரியா
A) a-4, b-3, c-1, d-2
B) a-2, b-1, c-3, d-4
C) a-3, b-4, c-1, d-2
D) a-4, b-1, c-3, d-2
விளக்கம்:
- ஆல்காக்கள் (எ.கா) காரா
- மாஸ்கள் (எ.கா) பியூனேரியா
- பெரணிகள் (எ.கா) அடியாண்டம்
- ஜிம்னோஸ்பெர்ம்கள் (எ.கா) பைனஸ் , சைகஸ்
14) அனைத்து புரோகேரியோட் உயிரினங்களும் எந்த உலகத்தில் அடங்கும்?
A) புரோட்டிஸ்டா உலகம்
B) பூஞ்சைகள் உலகம்
C) தாவர உலகம்
D) மொனிரா உலகம்
விளக்கம்: அனைத்து ப்ரோகேரியோட்டு உயிரினங்களும் மொனிரா உலகத்தில் அடங்கும். இவற்றில் உண்மையான உட்கரு இல்லை .நியூக்ளியார் சவ்வு மற்றும் சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் எதுவும் கிடையாது.
15) பின்வருவனவற்றில் மொனிரா உலகத்தில் இடம் பெறாதது எது?
A) அமீபா
B) பாரமீசியம்
C) யூக்ளினா
D) பாக்டீரியா
விளக்கம்: பாக்டீரியாக்கள் மற்றும் நீலபசும்பாசிகள் மொனிரா வகைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
16) பின்வருவனவற்றுள் தனக்குத் தேவையான ஊட்டப் பொருள்களை, உணவுப் பொருட்களின் மீது செரிமான நொதியைச் சுரந்து உட்கொள்வது எது?
A) ஈஸ்ட்கள்
B) யூக்ளினா
C) பாக்டீரியா
D) பாரமீசியம்
விளக்கம்: பூஞ்சைகள் தனக்குத் தேவையான ஊட்டப் பொருள்களை உணவுப் பொருள்களின் மீது செரிமான நொதியைச் சுரந்து அவற்றைச் செரித்து உறிஞ்சுதல் மூலம் பெறுகின்றன. பூஞ்சைகள் சாறுண்ணிகளாகவும் சிதைப்பான்களாக (சிதைவைச் செய்யும் பூஞ்சைகள்) அல்லது ஒட்டுண்ணிகளாகவும் காணப்படுகின்றன. மோல்டுகள், மில்டீயூஸ், நாய்க்குடைக் காளான்கள், ஈஸ்டுகள் போன்றவை பூஞ்சை உலகத்தைச் சார்ந்தவை.
17) பின்வருவனவற்றுள் தற்சார்பு அல்லது பிற ஊட்ட முறையில் வராத உலகம் எது?
A) மொனீரா உலகம்
B) புரோட்டிஸ்டா உலகம்
C) பூஞ்சைகள் உலகம்
D) பிளாண்ட்டே
விளக்கம்: தனக்கு தேவையான ஊட்டப் பொருள்களை உணவுப் பொருள்களின் மீது செரிமான நொதியைச் சுரந்து அவற்றைச் செரித்து உறிஞ்சுதல் மூலம் பெறுகின்றன. பூஞ்சைகள் சாறுண்ணிகளாகவும் சிதைப்பான்களாக (சிதைவைச் செய்யும் பூஞ்சைகள்) அல்லது ஒட்டுண்ணிகளாகவும் காணப்படுகின்றன. ஆதலால் இது தற்சார்பு அல்லது பிற ஊட்ட முறையில் வராது.
18) முதுகெலும்பற்றவை எத்தனை தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன
A) 7
B) 8
C) 9
D) 10
விளக்கம்: முதுகெலும்புஅற்றவை ஒன்பது தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன அவை ஒருசெல்உயிரிகள், குழியுடலிகள், துளையுடலிகள், தட்டைப்புழுக்கள், உருளைப்புழுக்கள், வளைதசைப்புழுக்கள், கணுக்காலிகள், மெல்லுடலிகள், முட்தோலிகள்
19) முதுகெலும்பு உடையவை எத்தனை வகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன?
A) 3
B) 4
C) 5
D) 6
விளக்கம்: முதுகெலும்பு உடையவை ஐந்து வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை மீன்கள், இருவாழ்விகள், ஊர்வன, பறவைகள் பாலூட்டிகள் ஆகும்.
20) பின்வரும் எந்த வகுப்பு முதுகுநாண் உடையவை தொகுதியில் வராது?
A) பிஸ்ஸஸ்
B) அனலிடா
C) ஏவ்ஸ்
D) மாமெலியா
விளக்கம்: முதுகு நாண் உடையவைகள் மீன்கள், இருவாழ்விகள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள்
21) புறாவின் அறிவியல் பெயர் என்ன?
A) கட்லா கட்லா
B) ஃபோனிக்ஸ் டாக்டைலிஃபெரா
C) ராணா ஹெக்சா டாக்டைலா
D) கொலம்பா லிவியா
விளக்கம்:
22) பொருத்துக.
a) பேரிச்சை 1] காக்கஸ் நியூசிபெரா
b) வேப்பமரம் 2] சிட்ரஸ் அருண்டிஃபோலியா
c) எலுமிச்சை 3] அசாடிரேக்டா இண்டிகா
d) தேங்காய் 4] ஃபோனிக்ஸ் டாக்டைலிஃபெரா
A) a-4, b-3, c-2, d-1
B) a-3, b-4, c-1, d-2
C) a-4, b-1, c-3, d-2
D) a-4, b-3, c-1, d-2
23) கூற்று: இருசொல் பெயரிடும் முறை என்பது உயிரினங்களுக்கு வட்டார அளவில் பெயரிடும் முறையாகும்.
காரணம்: புதிய உயிரினங்களை இனம் கண்டு அதனை குறிப்பிட்ட படிநிலையில் வைப்பதற்கு இரு சொல் பெயரிடும் முறையும் வகைப்படுத்தலும் உதவுகிறது.
A) கூற்று சரி, காரணமும் சரி
B) கூற்று சரி, காரணம் தவறு
C) கூற்று தவறு, காரணம் சரி
D) கூற்று மற்றும் காரணம் தவறு
விளக்கம்: இரு சொல் பெயரிடும் முறை என்பது உயிரினங்களுக்கு உலக அளவில் பெயரிடும் முறையாகும்.
24) உயிரினங்களை இரு சொல் கொண்ட பெயரில் அழைப்பதை அறிமுகப்படுத்தியவர் யார்?
A) காஸ்பார்டு பாஹின்
B) கரோலஸ் லின்னேயஸ்
C) அரிஸ்டாட்டில்
D) விட்டேக்கர்
விளக்கம்: காஸ்பார்டு பாஹின் 1623 ஆம் ஆண்டு உயிரினங்களை இரண்டு சொல் கொண்ட பெயர்களோடு அழைப்பதை அறிமுகப்படுத்தினார் இதற்கு இரு சொல் பெயரிடும் முறை என்று பெயர். இதனை 1753 ஆம் ஆண்டு கரோலஸ் லின்னேயஸ் என்பவர் செயல்படுத்தினார் இவரே நவீன வகைப்பாட்டியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
25) விலங்குகள் இரத்தம் உடைய விலங்குகள் மற்றும் இரத்தம் அற்ற விலங்கு என பிரித்த கிரேக்க தத்துவ அறிஞர் யார்?
A) சாக்ரடீஸ்
B) பிளாட்டோ
C) அரிஸ்டாட்டில்
D) அலெக்சாண்டர்
விளக்கம்: அரிஸ்டாட்டில் என்பவர் ஒரு கிரேக்க தத்துவ மற்றும் சிந்தனையாளர். இவர் 2400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் இவர் உருவாக்கிய தொகுப்பு அமைப்பு இவர் இறந்து இரண்டாயிரம் வருடங்களுக்குப் பிறகு பயன்பாட்டிற்கு வந்தது. இவர் அனைத்து உயிரினங்களையும் தாவரங்கள் அல்லது விலங்குகள் என பிரித்தார்.. இவர் விலங்குகளை இரத்தம் உடைய விலங்குகள் மற்றும் ரத்தம் மற்ற விலங்குகள் என பிரித்தார்.
26) கீழ்க்கண்ட தொகுதியில் நெமடோடா என்று அழைக்கப்படுவது எது?
A) அனிலிடா
B) அஸ்செல்மின்த்ஸ்
C) பிளாட்டைஹெல்மின்தஸ்
D) சீலன்டிரேட்டா
விளக்கம்:
27) கீழ்க்கண்டவற்றில் உடற்குழி அற்ற உயிரினம் எது?
A) மண்புழு
B) அட்டை
C) கல்லீரல் புழு
D) அஸ்காரில் லும்பிரிக்காய்ட்டஸ்
விளக்கம்:
28) பின்வருவனவற்றுள் கால்சியத்தால் ஆன ஓடு காணப்படும் உயிரினம்?
A) நண்டு
B) இறால்
C) தேள்
D) நத்தை
விளக்கம்:
:
29) தடித்த கைட்டினை புறச்சட்டகமாக கொண்ட உயிரினம்?
A) நண்டு
B) நத்தை
C) ஆக்டோபஸ்
D) கணவாய் மீன்கள்
விளக்கம்:
30) பின்வரும் ஏவ்ஸ் (பறவைகள்) தொடர்பான கூற்றுகளில் தவறானது எது?
A) குளிர் இரத்தப் பிராணிகள்
B) சிறப்பான பார்வைத்திறன்
C) பறப்பதற்கு ஏற்ற தகவமைப்பு
D) முட்டையிடுபவை
விளக்கம்
:
31) சைலத்திசுக்கள் சைலக்குழாய்கள் அற்றும் மற்றும் புளோயத் திசுக்கள் துணை செல்கள் அற்றும் உள்ள தாவரங்கள் எதில் வகைப்படுத்தப்படும்?
A) மாஸ்கள்
B) பெரணிகள்
C) ஜிம்னோஸ்பெர்ம்கள்
D) ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
விளக்கம்:
ஜிம்னோஸ்பெர்ம்கள்:
பல்லாண்டு வாழ் தாவரங்கள், கட்டைத் தன்மை உடையவை, பசுமை மாறாதவை மற்றும் உண்மையான வேர், தண்டு மற்றும் இலைகளை உடையவை. வாஸ்குலார் கற்றைகள் உடையவை, சைலத் திசுக்கள் சைலக் குழாய்கள் மற்றும் புளோயத் திசுக்கள் துணை செல்கள் இன்றியும் காணப்படுகின்றன.
32) பூக்கும் தாவரங்கள் உருவாக்கும் மலர்களில் எவையெல்லாம் இடம்பெறும்?
A) புல்லி வட்டம், அல்லி வட்டம்
B) மகரந்தத்தாள் வட்டம், சூலக வட்டம்
C) இவை அனைத்தும்
D) இவை எதுவும் இல்லை
விளக்கம்:
ஆஞ்சியோஸ்பெர்ம்கள்:
தாவர உடலானது உண்மையான வேர், தண்டு மற்றும் இலைகள் என வேறுபாடு அடைந்து காணப்படுகிறது. புல்லி வட்டம், அல்லி வட்டம், மகரந்தத்தாள் வட்டம் மற்றும் சூலக வட்டம் என நான்கு அடுக்குகளைக் கொண்ட மலர்களை உருவாக்குவதால் இவை பூக்கும் தாவரங்கள் எனப்படுகின்றன.
33) கூற்று: இரு சொல் பெயரிடும் முறை படி ஒவ்வொரு உயிரினமும் முதலில் பேரின பெயரும் இரண்டாவதாக சிற்றின பெயரும் கொண்டிருக்கும்.
காரணம்: பேரின பெயரின் முதல் எழுத்து சிறிய எழுத்து பெயரின் முதல் எழுத்து பெரிய எழுத்திலும் எழுதப்படவேண்டும்.
A) கூற்று சரி காரணமும் சரி
B) கூற்று சரி காரணம் தவறு
C) கூற்று தவறு காரணம் சாரி
D) கூற்று மற்றும் காரணம் தவறு
விளக்கம்: இரு சொல் பெயரிடும் முறை என்பது உயிரினங்களுக்கு உலக அளவில் பெயரிடும் முறை ஆகும். இந்த முறைப்படி ஒவ்வொரு உயிரினமும் முதலில் பேரினப் பெயரும், இரண்டாவதாக சிற்றினப் பெயருமாக இரண்டு பெயர்களைக் கொண்டிருக்கும். ஆங்கிலத்தில் எழுதும் போது பேரினப் பெயரின் முதல் எழுத்து பெரிய எழுத்திலும், சிற்றினப் பெயரின் முதல் எழுத்து சிறிய எழுத்திலும் எழுதப்பட வேண்டும்.
34) பின்வருவனவற்றுள் பிஸ்ஸஸ் வகுப்பில் இடம் பெறாதது எது?
A) சுறா
B) கட்லா
C) திலேப்பியா
D) நீலத்திமிங்கலம்
விளக்கம்: நீலத்திமிங்கலம் பாலூட்டி வகையைச் சார்ந்தது.
35) பின்வருவனவற்றுள் ஆம்பீபியா (அ) இருவாழ்விகள் வகுப்பில் இடம்பெறாதது எது?
A) தவளை
B) சாலமாண்டர்
C) தேரை
D) கடல் ஆமை
விளக்கம்:
- இருவாழ்விகள் அல்லது ஆம்பீபியா
(எ.கா) தவளை, தேரை, சாலமாண்டர், சிசிலியன்
- ஊர்வன அல்லது ரெப்டைல்ஸ்
(எ.கா) தோட்டத்துப்பல்லி, வீட்டுப் பல்லி, கடல் ஆமை, நில ஆமை, பாம்புகள், முதலை
36) பின்வருவனவற்றுள் எந்த விலங்கு குளிர் இரத்த விலங்கு வகைப்பாட்டை சேர்ந்தது?
A) கரடி
B) புலி
C) நெருப்புக்கோழி
D) முதலை
விளக்கம்: முதுகெலும்புள்ள விலங்குகளை வெப்ப இரத்த விலங்கு மற்றும் குளிர் இரத்த விலங்கு என வகைப் படுத்துகிறோம் .மேலும் வெப்ப இரத்த விலங்குகளை பாலூட்டிகள், பறப்பன எனவும், குளிர் இரத்த விலங்குகளை மீன்கள், ஊர்வன, இருவாழ்விகள் எனவும் பிரிக்கின்றோம் . இதன்படி
- கரடி, புலி -பாலூட்டிகள்
- நெருப்புக்கோழி -பறப்பன
- முதலை –ஊர்வன.
37) தாலஸ் என்று அழைக்கப்படுவது எது?
A) ஆல்காக்கள்
B) மாஸ்கள்
C) பெரணிகள்
D) ஜிம்னோஸ்பெர்ம்கள்
விளக்கம்: ஆல்காக்கள் தாலஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை தாவர உடலானது வேர், தண்டு மற்றும் இலை என வேறுபாடற்று காணப்படுகிறது.
38) ஜிம்னோஸ்பெர்ம்கள் ஏன் கனிகளை உண்டாக்குவதில்லை?
A) வாஸ்குலார் கற்றைகள் உடையவை
B) உண்மையான வேர், தண்டு மற்றும் இலைகளை உடையவை
C) சூல்கள் திறந்தவை மற்றும் சூற்பை அற்றவை
D) சூலகம் உடையவை
விளக்கம்: ஜிம்னோஸ்பெர்ம்களின் சூல்கள் திறந்தவை மற்றும் சூற்பை அற்றவை. எனவே இவை கனிகளை உண்டாக்குவதில்லை.
39) ஐந்து உலக வகைப்பாட்டு முறை யாரால் முன்மொழியப்பட்டது?
A) V.S.வக்காங்கர்
B) R.H.விட்டேக்கர்
C) காஸ்பார்டு பாஹின்
D) கரோலஸ் லின்னேயஸ்
விளக்கம்: ஐந்து உலக வகைப்பாடு முறை R.H.விட்டேகர் என்பவரால் 1969 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது. இந்த ஐந்து உலகங்கள் செல் அமைப்பு, உணவு ஊட்ட முறை, உணவு மூலம் மற்றும் உடல் அமைப்பு போன்ற குணாதிசயங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.
40) பின்வருவனவற்றுள் உட்கரு, நியூக்ளியார் சவ்வு போன்றவை இல்லாத உலகம் எது?
A) புரோடிஸ்டா உலகம்
B) பூஞ்சைகள் உலகம்
C) ப்ளாண்ட்டே உலகம்
D) மொனிரா உலகம்
விளக்கம்: மொனிராவில் உண்மையான உட்கரு இல்லை. நியூக்ளியர் சவ்வு மற்றும் சவ்வினால் சூழப்பட்ட நுண்ணுறுப்புகள் எதுவும் கிடையாது.
41) ஐந்துலக வகைப்பாட்டில் வைரஸ் எந்த உலகத்தில் சேர்ந்தவை?
A) மொனிரா
B) புரோடிஸ்டா
C) அனிமேலியா
D) மேற்கூறிய எதுவும் இல்லை
விளக்கம்: வைரஸ்களுக்கு இந்த வகைப்பாட்டில் முறையான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
42) இருவாழ்வி தாவரங்களின் என்று அழைக்கப்படுவது எது?
A) ஆல்காக்கள்
B) பெரணிகள்
C) மாஸ்கள்
D) ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
விளக்கம்: மாஸ்கள் நீரை விரும்புபவை, வாழ்க்கை சுழற்சியினை நிறைவு செய்ய இவற்றிற்கு ஈரப்பதம் அவசியமாகிறது. எனவே இவை இருவாழ்வி தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன.
43) கீழ்க்கண்டவற்றுள் எந்த இணை தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது
பெயர் – அறிவியல் பெயர்
A) தவளை – ராணா ஹெக்சா டாக்டைலா
B) ஆரஞ்சு – சிட்ரஸ் அருண்டிஃபோலியா
C) மீன் – கட்லா கட்லா
D) பேரிச்சை – போனிக்ஸ் டாக்டைலிஃபெரா
விளக்கம்:
- ஆரஞ்சு – சிட்ரஸ் சைனன்ஸிஸ்
- எலுமிச்சை – சிட்ரஸ் அருண்டிஃபோலியா
44) கீழ்கண்டவற்றுள் எந்த இணை தவறாக பொருத்தப்பட்டுள்ளது
தொகுதி – உயிரினம்
A) மெல்லுடலிகள் – கணவாய் மீன்கள்
B) கணுக்காலிகள் – இறால்
C) பிஸ்ஸஸ் – திலேப்பியா
D) ஏவ்ஸ் – மனிதன்
விளக்கம்: ஏவ்ஸ் – பறப்பதற்கு ஏற்ற தகவமைப்பு , எலும்புகள் மிருதுவானதாகவும் காற்றறைகள் நிரம்பியதாகவும் காணப்படும்.
எ.கா-சிட்டுக்குருவி, கிவி, நெருப்புக்கோழி
45) தொகுதி-1 தொகுதி-2
a) கனி 1] சூல்கள்
b) விதை 2] இலை
C) மரம் 3] தண்டு
d) ஸ்டார்ச் 4] சூற்பை
A) a-2, b – 1, C-3, d -4
B) a-4, b – 1, C-3, d – 2
C) a-2, b – 3, C-1, d – 4
D a-4, b – 3, C-1, d – 2
விளக்கம்: பெண் இனப்பெருக்க உறுப்பான சூலகம் கனியாகவும், சூல்கள் விதையாக உருவாகின்றன.
7th Science Lesson 12 Questions in Tamil
12] ஒளியியல்
1) தாவரங்களில் ஒளிச்சேர்க்கை நிகழ்வுக்கு மிகவும் அவசியமான ஒன்று?
a) சூரிய ஒளி
b) மணல்
c) சூரிய ஒளி மற்றும் மணல்
d) வைட்டமின்கள்
விளக்கம்: தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்சைடு, பூமியிலுள்ள நீர் ஆகியவற்றை பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை என்னும் நிகழ்வு மூலம் உணவைத் தயாரிக்கின்றன.
2) தாவரங்கள் எந்த நிகழ்வு மூலம் உணவைத் தயாரிக்கின்றன?
a) ஒளிச்சேர்க்கை
b) ஒளி இணைவு
c) ஒளி பிளவு
d) ஒளி தூண்டல்
விளக்கம்: தாவரங்கள் ஒளிச்சேர்க்கை என்ற நிகழ்வின் மூலம் உணவைத் தயாரிக்கின்றன.
3) கீழ்காணும் கூற்றுகளில் எவை சரி என்று கண்டறிக?
ⅰ) இயற்கையாகவே ஒளியை உமிழும் பொருள்கள் இயற்கை ஒளி மூலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
ⅱ) எரியும் மெழுகுவர்த்தி இயற்கை ஒளி மூலத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
a) ⅰமட்டும்
b) ⅱமட்டும்
c) ⅰமற்றும்ⅱ
d) மேற்கூறிய எதுவும் இல்லை.
விளக்கம்: இயற்கையாகவே ஒளியை உமிழும் பொருள்கள் இயற்கை ஒளி மூலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. எரியும் மெழுகுவர்த்தி செயற்கை ஒளி மூலத்திற்கு எடுத்துக்காட்டாகும்
4) சந்திரன் எவ்வாறு ஒளியை உமிழும்?
a) தானாகவே ஒளியை உமிழும்
b) சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று பிறகு உமிழும்
c) நட்சத்திரங்களிடமிருந்து ஒளியைப் பெற்று உமிழும்
d) ஒளியை உமிலாது
விளக்கம்: சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று, பின் அதனை பூமிக்கு பிரதிபலிக்கிறது. நாம் சந்திரனை பார்க்கும் பொழுது சந்திரனின் ஒளிரும் ஒரு பகுதியை மட்டுமே காண்கிறோம். சந்திரனில் ஒரு பாதி எப்பொழுதும் சூரியனை நோக்கி அமைந்து, ஒளியைப் பெறுகிறது. இவ்வாறே சந்திரனிடமிருந்து நாம் ஒளியை பெறுகிறோம்.
5) இயற்கையாகவே ஒளியை உமிலும் உயிரினங்களுக்கு எடுத்துக்காட்டு?
a) மின்மினிப்பூச்சி
b) ஜெல்லி
c) மின்மினிப்பூச்சி மற்றும் ஜெல்லி
d) கரப்பான் பூச்சி.
விளக்கம்: மின்மினிப்பூச்சி மற்றும் செல்லி ஆகியவை இயற்கையாகவே ஒளியை உமிழும் உயிரினங்கள் ஆகும்.
6) வெப்ப ஒளி மூலத்திற்கு எடுத்துக்காட்டு?
a) எரியும் மெழுகுவர்த்தி
b) வெண்சுடர் எரிவிளக்கு
c) எரியும் மெழுகுவர்த்தி மற்றும் வெண்சுடர் எரிவிளக்கு இரண்டும்
d) நியான் விளக்கு
விளக்கம்: எரியும் மெழுகுவர்த்தி மற்றும் வெண் சுடர் எரி விளக்கு இரண்டும் வெப்ப ஒளி மூலத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும். நியான் விளக்கு வாயுவிறக்க ஒளி மூலம் ஆகும்.
7) வாயுவிறக்க ஒளி மூலத்திற்கு எடுத்துக்காட்டு?
a) நியான் விளக்கு
b) சோடியம் ஆவி விளக்கு
c) நியான் விளக்கு மற்றும் சோடியம் ஆவி விளக்கு இரண்டும்
d) எரியும் மெழுகுவர்த்தி
விளக்கம்: நியான் விளக்கு மற்றும் சோடியம் ஆவி விளக்கு இரண்டும் வாயுவிறக்க ஒளி மூலத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும். எரியும் மெழுகுவர்த்தி வெப்ப ஒளி மூலம் ஆகும்.
8) கூற்று(A): செயற்கையாகவே ஒளியை உமிழும் மூலங்கள் செயற்கை ஒளி மூலங்கள் ஆகும்
காரணம்(R): மின்மினிப்பூச்சி செயற்கை ஒளி மூலத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும்.
a) (A) மற்றும் (R) தவறு
b) (A) சரி (R) தவறு
c) (A) மற்றும் (R) இரண்டும், சரி (R) வுக்கு (A) சரியான விளக்கம்
d) (A) மற்றும் (R) இரண்டும், சரி (R) வுக்கு (A) சரியான விளக்கம் இல்லை
விளக்கம்: செயற்கையாகவே ஒளியை உமிழும் மூலங்கள் செயற்கை ஒளி மூலங்கள் ஆகும். மின்மினிப்பூச்சி இயற்கை ஒளி மூலத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும்.
9) நாம் வீட்டில் பயன்படுத்தும் குழல் விளக்கு __________ ஒளி மூலம் ஆகும்
a) வெப்ப
b) வாயு விறக்க
c) செயற்கை
d) இயற்கை
விளக்கம்: நாம் வீட்டில் பயன்படுத்தும் குழல்விளக்கு ஒரு வகையான வாயு விறக்க மூலத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும். குழாயின் வழியே செல்லும் மின்னோட்டம், பாதரச ஆவியை தூண்டி, குறைந்த அலைநீளம் கொண்ட புற ஊதாக்கதிர்களை உருவாக்குகிறது. இக்கதிர்கள் குழாயின் உட்புறத்தில் பூசப்பட்ட பாஸ்பரஸின் மேல் விழுந்து, குழல் விளக்கை ஒளிர செய்கின்றன.
10) கீழ்க்கண்டவற்றுள் எவை ஒளியின் அடிப்படை பண்புகள்?
ⅰ) நேர்கோட்டுப் பண்பு
ⅱ) எதிரொலித்தல் பண்பு
a)ⅰமட்டும்
b)ⅱமட்டும்
c)ⅰமற்றும்ⅱ
d) எதுவும் இல்லை
விளக்கம்: நேர்கோட்டுப் பண்பு, எதிரொலித்தல் பண்பு இரண்டும் ஒளியின் அடிப்படை பண்புகள் ஆகும். மேலும் ஒளியின் வேகம் மற்றும் ஒளி ஊடுருவும் தன்மையை பொருத்து பொருள்களின் வகைகள், நிழல்களின் உருவாக்கம், சமதள ஆடி மற்றும் பிம்பங்கள், நிறமாலை ஆகியவையும் ஒளியின் அடிப்படை பண்புகளாகும்.
11) ஒளி ___________________ இல் பயணிக்கிறது.
a) நேர்கோட்டில்
b) எதிர் கோட்டில்
c) வளைவு பாதையில்
d) சதுர பாதையில்
விளக்கம்: ஒளியானது நேர் கோட்டில் பயணிக்கிறது. அது தன்னுடைய பாதையை தன்னிச்சையாக மாற்ற இயலாது. இதுவே ஒளியின் நேர்கோட்டுப் பண்பு எனப்படும். மரங்களின் கிளைகளின் வழியாக மற்றும் சிமெண்ட் கிரிலின் சிறுதுளை வழியாக சூரிய ஒளி செல்லுதல், லேசர் விளக்கின் ஒளி செல்லுதல் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
12) ஒளியின் நேர்கோட்டுப் பண்பினை கண்டறிந்த முதல் அறிஞர் யார்?
a) அல்-ஹரசன்-அயத்தம்
b) சர். சி. வி ராமன்
c) அல்-ஹரசன்-ரஹீம்
d) கலிலியோ
விளக்கம்: அல்-ஹரசன்-அயத்தம் என்பவர் ஒளியின் நேர்கோட்டுப் பண்பினை கண்டறிந்த முதல் அறிஞர், சிறுதுளை வழியாக வரும் ஒளி, நேர்கோட்டுப் பாதையில் பயணித்து, எதிரே உள்ள சுவரில் ஒரு பிம்பத்தை தோற்றுவிப்பதை கண்டறிந்தார்.
13) ஒளியின் நேர்கோட்டுப் அன்பினை அறிந்துகொள்ள உதவும் எளிமையான ஒரு கருவி யாது?
a) ஊசித்துளை கேமரா
b) புத்தகம்
c) மேசை
d) நாற்காலி
விளக்கம்: ஊசித்துளை கேமரா என்பது ஒளியின் நேர்கோட்டுப் அன்பினை அறிந்துகொள்ள உதவும் எளிமையான ஒரு கருவி.
14) ஊசித்துளை கேமராவை பயன்படுத்தி சூரியனின் இயக்கத்தை பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் முறையின் பெயர் என்ன?
a) சோனோகிராபி
b) சோலோகிராபி
c) மாக்ரோகிராபி
d) மைக்ரோ கிராபி
விளக்கம்: ஊசித்துளை கேமரா கேமிராவின் தொழில் நுட்பம் முன்னேற்றம் அடையாத காலத்தில் சூரியனின் இயக்கத்தை பதிவு செய்ய பயன்படுத்தப்பட்டது. இவ்வகையான புகைப்படம் எடுக்கும் முறைக்கு சோலோகிராபி என்று பெயர். சூரிய கிரகணத்தை காண்பதற்கும், பதிவு செய்வதற்கும் அது பயன்படுத்தப்பட்டது.
15) ஒளியின் எதிரொளிப்பு பண்பிற்கு எடுத்துக்காட்டு?
ⅰ) முகம் பார்க்கும் கண்ணாடி
ⅱ) அசைவில்லாத நீர்நிலையின் பரப்பு
a) ⅰமட்டும்
b) ⅱமட்டும்
c) ⅰமற்றும்ⅱ
d) எதுவும் இல்லை
விளக்கம்: முகம் பார்க்கும் கண்ணாடி மற்றும் அசைவில்லாத நீர்நிலையின் பரப்பு ஒளியின் எதிரொளிப்பு பண்பிற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி நமது முகத்தை எதிரொலிக்கிறது. அசைவிலா நீர்நிலையின் பரப்பு, சுற்றியுள்ள காட்சிகளை பிரதிபலிக்கிறது.
16) படு கோணமும், எதிரொளிப்பு கோணமும்?
a) சமம்
b) சமம் இல்லை
c) வளைந்து இருக்கும்
d) மேற்கூறிய எதுவும் இல்லை
விளக்கம்: படு கோணமும், எதிரொளிப்பு கோணமும் சமம். (l=r)
17) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடுக்க?
ⅰ) படு கோணமும், எதிரொளிப்பு கோணமும் சமம். (l=r)
ⅱ) படுகதிர், குத்துக்கோடு மற்றும் எதிரொளிப்பு கதிர் ஆகியவை ஒரே தளத்தில் அமையும்
a) ⅰமட்டும்
b) ⅱமட்டும்
c) ⅰமற்றும்ⅱ
d) எதுவும் இல்லை
விளக்கம்: ஒளி எதிரொளிப்பு விதிகள் என்பது படு கோணமும், எதிரொளிப்பு கோணமும் சமம். (l=r) மற்றும் படுகதிர், குத்துக்கோடு மற்றும் எதிரொளிப்பு கதிர் ஆகியவை ஒரே தளத்தில் அமையும்.
18) எதிரொளிக்கும் பரப்பில் படும் கதிர் எவ்வாறு அழைக்கப்படும்?
a) படுகதிர்
b) எதிரொளிப்புகதிர்
c) படுகோணம்
d) எதிரொளிப்புகோணம்
விளக்கம்: எதிரொளிக்கும் பரப்பில் படும் கதிர் படுகதிர் என்று அழைக்கப்படும்.
19) எதிரொளிக்கும் பரப்பில் படுகதிர் விழும் புள்ளியிலிருந்து மீண்டுவரும் கதிர் எவ்வாறு அழைக்கப்படும்?
a) படுகதிர்
b) எதிரொளிப்புகதிர்
c) படு கோணம்
d) எதிரொளிப்பு கோணம்
விளக்கம்: எதிரொளிக்கும் பரப்பில் படுகதிர் விழும் புள்ளியிலிருந்து மீண்டுவரும் கதிர் எதிரொளிப்புகதிர் என்று அழைக்கப்படும்.
20) படத்தில், படுகதிர் AB, 27′ கோணத்தை குத்துக்கோட்டுடன் ஏற்படுத்துகிறது. எனில், எதிரொளிப்புக் கோணத்தின் மதிப்பு என்ன?
a) 54’
b) 27′
c) 0’
d) 180’
விளக்கம்: படுகோணம் (I)= 27, எதிரொளிப்பு விதியின் படி,
படுகோணம் = எதிரொளிப்புக்கோணம்
எனவே எதிரொளிப்புக்கோணம், (r=27).
21) ஒரு ஒளிக்கதிர் எதிரொளிப்பு தளத்தில் பட்டு, 430 கோணத்தை கிடைத்தளத்துடன் ஏற்படுத்துகிறது. எனில் படுகோணத்தின் மதிப்பு என்ன?
a) 430
b) 470
c) 00
d) 1800
விளக்கம்: படுகோணம் i=900-430=470
22) வளவளப்பான பகுதியில் ஏற்படும் எதிரொளிப்பு?
a) ஒழுங்கான எதிரொளிப்பு
b) ஒழுங்கற்ற எதிரொளிப்பு
c) இயற்கை எதிரொளிப்பு
d) செயற்கை எதிரொளிப்பு
விளக்கம்: வளவளப்பான பரப்பு ஏற்படும் எதிரொளிப்பு ஒழுங்கான எதிரொளிப்பு ஆகும். ஒழுங்கான எதிரொளிப்பில் படுகதிர்கள் இணைகதிர்கள் ஆக பரப்பின் மேல் விழுந்த்து, இணைகதிர்கள் ஆகவே எதிரொலிக்கப்படுகின்றன.
23) சொரசொரப்பான பகுதியில் ஏற்படும் எதிரொளிப்பு?
a) ஒழுங்கான எதிரொளிப்பு
b) ஒழுங்கற்ற எதிரொளிப்பு
c) இயற்கை எதிரொளிப்பு
d) செயற்கை எதிரொளிப்பு
விளக்கம்: சொரசொரப்பான பகுதியில் ஏற்படும் எதிரொளிப்பு ஒழுங்கற்ற எதிரொளிப்பு ஆகும். இவ்வகை நிகழ்வில் எதிரொளிப்பிற்குப் பின் ஒளிக்கதிர்கள் வெவ்வேறு திசையில் செல்கின்றன.
24) கீழ்காணும் கூற்றுகளில் எவை சரி என்று கண்டறிக?
ⅰ) வெற்றிடத்தில் ஒளியானது 3 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்
ⅱ) ஒளியை விட வேகமாக எந்த ஒரு பொருளும் செல்வதில்லை.
a) ⅰமட்டும்
b) ⅱமட்டும்
c) ⅰமற்றும்ⅱ
d) மேற்கூறிய எதுவும் இல்லை
விளக்கம்:வெற்றிடத்தில் ஒளியானது 3 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். ஒளியை விட வேகமாக எந்த ஒரு பொருளும் செல்வதில்லை.
25) கீழ்கண்டவற்றுள் எவை ஒளி ஊடுருவும் பொருள்களுக்கு எடுத்துக்காட்டு?
ⅰ) கண் கண்ணாடிகள்
ⅱ) கல்
a) ⅰமட்டும்
b) ⅱமட்டும்
c) ⅰமற்றும்ⅱ
d) மேற்கூறிய எதுவும் இல்லை
விளக்கம்: கண் கண்ணாடிகள் ஒளி ஊடுருவும் பொருள்களுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
26) பகுதி ஊடுருவும் பொருட்களுக்கு எடுத்துக்காட்டு
ⅰ) சொரசொரப்பான கண்ணாடி
ⅱ) கல்
a) ⅰமட்டும்
b) ⅱமட்டும்
c) ⅰமற்றும்ⅱ
d) மேற்கூறிய எதுவும் இல்லை
விளக்கம்: சொரசொரப்பான கண்ணாடி பகுதி ஊடுருவும் பொருட்களுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
27) ஒளி ஊடுருவா பொருட்களுக்கு எடுத்துக்காட்டு?
ⅰ) சொரசொரப்பான கண்ணாடி
ⅱ) கல்
a) ⅰமட்டும்
b) ⅱமட்டும்
c) ⅰமற்றும்ⅱ
d) மேற்கூறிய எதுவும் இல்லை
விளக்கம்: கல் ஒளி ஊடுருவா பொருட்களுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
28) நிழல்கள் ஒளி மூலத்திற்கு எத்திசையில் உருவாகும்?
a) நேர்திசை
b) எதிர்திசை
c) மறைந்த திசை
d) வளைந்த திசை
விளக்கம்: நிழல்கள் எப்போதும் ஒளி மூலத்திற்கு எதிர்திசையில் உருவாகும். ஒளியானது நேர் கோட்டில் மட்டுமே பயணிக்கும். அது தன் பாதையில் உள்ள பொருளை சுற்றி வளைந்து செல்லாது. எனவே நிழல்கள் உருவாகின்றன.
29) கீழ்காணும் கூற்றுகளை எவை சரி என்று கண்டறிக?
ⅰ) பிளாஸ் ஒளியில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் விரிகதிர்கள் ஆகும்
ⅱ) லென்சை பயன்படுத்தி ஒளிக்கற்றையை குவிக்க முடியாது.
a) ⅰமட்டும்
b) ⅱமட்டும்
c) ⅰமற்றும்ⅱ
d) மேற்கூறிய எதுவும் இல்லை
விளக்கம்: பிளாஸ் ஒளியில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் விரிகதிர் ஆகும். லென்சை பயன்படுத்தி ஒளிக்கற்றையை குவிக்க முடியும்.
30) கூற்று(A): எல்லாப் பொருள்களும் நிழல்களை உருவாக்குவதில்லை.
விளக்கம்(R): ஒளி ஊடுருவா பொருள்கள் மட்டுமே நிழல்களை உருவாக்குகின்றன.
a) (A) மற்றும் (R) தவறு
b) (A) சரி (R) தவறு
c) (A) மற்றும் (R) இரண்டும் சரி (R) வுக்கு (A) சரியான விளக்கம்
d) (A) மற்றும் (R) இரண்டும் சரி (R) வுக்கு (A) சரியான விளக்கம் இல்லை.
விளக்கம்: எல்லாப் பொருள்களும் நிழல்களை உருவாக்குவதில்லை. ஒளி ஊடுருவா பொருள்கள் மட்டுமே நிழல்களை உருவாக்குகின்றன.
31) குரிய மற்றும் சந்திர கிரகணங்கள் ஒளியின் ____________பண்பின் காரணமாக நிகழ்கின்றன?
a) நேர்கோட்டு
b) எதிர்கோட்டு
c) எதிரொளிப்பு
d) சிதறல்
விளக்கம்: ஒளியின் நேர்கோட்டிப் பண்பின் காரணமாகக் குரிய மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழ்கின்றன.
32) கீழ்காணும் கூற்றுகளில் எவை சரி என்று கண்டறிக?
ⅰ) சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் சுற்றி வரும்பொழுது சூரிய கிரகணம் தோன்றுகிறது.
ⅱ) சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் நிழல் ஆனது புவியின் மேல் விழுவது இல்லை
a) ⅰமட்டும்
b) ⅱமட்டும்
c) ⅰமற்றும்ⅱ
d) மேற்கூறிய எதுவும் இல்லை
விளக்கம்: சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் சுற்றி வரும்பொழுது சூரிய கிரகணம் தோன்றுகிறது. சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் நிழல் ஆனது புவியின் மேல் விழுகிறது. எனவே, புவியில் இருப்பவர்களால் சூரியனைக் காண இயலாது. இதுவே சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது.
33) கீழ்காணும் கூற்றுகளில் எவனும் சரி என்று கண்டறிக?
ⅰ) சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி யானது இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
ⅱ) சூரியனிடம் இருந்து வரும் ஒளியை புவியால் தடுக்க முடிவதில்லை
a) ⅰமட்டும்
b) ⅱமட்டும்
c) ⅰமற்றும்ⅱ
d) மேற்கூறிய எதுவும் இல்லை
விளக்கம்: சந்திர கிரகணம் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே புவியானது இருக்கும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. சூரியனிடமிருந்து வரும் ஒளியை புவியானது தடுத்து விடுகிறது எனவே, புவியின் நிழலானது சந்திரனின் மேல் விழுகிறது. இதனால் புவியிலிருப்பவர்களுக்கும் சந்திரனை முழுவதுமாகவோ பகுதியாகவோ காண இயலாது இதுவே சந்திர கிரகணம் எனப்படுகிறது.
34) முழு அக எதிரொளிப்பு தத்துவத்தின் படி செயல்படும் சாதனம்?
a) ஒளி இழை
b) துணி துவைக்கும் இயந்திரம்
c) ராட்டினம்
d) குழல் விளக்கு
விளக்கம்: முழு அக எதிரொளிப்புத்த்துவத்தின் படி செயல்படும் சாதனம் ஒளி இழை ஆகும். ஒளி இழை கேபிள் தொலைத்தொடர்பு, அகன்ற அலைவரிசை தொடர்புச்சாதனங்கள் போன்ற அதிவேக தொடர் அனுப்புகைகளில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.
35) திரையில் வீழ்த்தபடும் பிம்பங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a) மெய்பிம்பம்
b) மாயபிம்பம்
c) சம்மான பிம்பம்
d) சம்மற்ற பிம்பம்
விளக்கம்: திரையில் வீழ்த்தபடும் பிம்பம் மெய் பிம்பம் என்று அழைக்கப்படுகின்றன.
36) திரையில் வீழ்த்த முடியாத பிம்பங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a) மெய் பிம்பம்
b) மாய பிம்பம்
c) சம்மான பிம்பம்
d) சம்மற்ற பிம்பம்
விளக்கம்: திரையில் வீழ்த்த முடியாத பிம்பங்கள் மாய பிம்பம் என்று அழைக்கப்படுகின்றன.
37) கீழ்காணும் கூற்றுகளில் எவை சரியானவை என்று கண்டறிக?
ⅰ) ஊசித்துளை கேமராவில் தோன்றும் பிம்பம் மெய் பிம்பம்
ⅱ) சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் மாய பிம்பம்
ⅲ) ஊசித்துளை கேமராவில் தோன்றும் பிம்பம் நேரான பிம்பம்
a) ⅰமட்டும்
b) ⅱமட்டும்
c) ⅰமற்றும்ⅱ
d) ⅲமட்டும்
விளக்கம்:
38) சமதள ஆடியின் எந்த பண்பு ஆம்புலன்ஸ்களில் பயன்படுத்தப்படுகிறது?
a) குவியும் பண்பு
b) இடவல மாற்ற பண்பு
c) வலஇட மாற்ற பண்பு
d) எதிரொலிக்கும் பண்பு
விளக்கம்: சமதள ஆடியின் இடவல மாற்றம் பண்பு ஆம்புலன்ஸ் களில் பயன்படுத்தப்படுகிறது. ஊர்தியில் பின்னோக்கி எழுதப்பட்ட வார்த்தையின் எழுத்துகள் முன் செல்லும் வாகனத்தின் கண்ணாடியில் இடவலமாற்றத்தின் காரணமாக “AMBULANCE” என நேராகத் தெரியும்.
39) வாகனங்களில் பின்புறம் ஏன் சிவப்பு நிற விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன?
ⅰ) சிவப்பு நிறம் அதிக தொலைவு பயணிக்கும்
ⅱ) சிவப்பு நிறம் குறைந்த தொலைவு பயணிக்கும்
ⅲ) சிவப்பு நிறம் அதிக அலைநீளம் கொண்டது
a) ⅰமட்டும்
b) ⅱமட்டும்
c) ⅰமற்றும்ⅲ
d) எதுவும் இல்லை
விளக்கம்: சிவப்பு நிறமானது, காற்று மூலக்கூறுகளால் குறைவான அளவில் இதர அடிக்கப்படுகிறது மற்றும் மற்ற நிறங்களை விட அதிக அலைநீளம் கொண்டது. எனவே எனவே வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிறமானது பயன்படுத்தப்படுகிறது.
40) கண்ணுறு ஒளியின் அலை நீளநீள நெடுக்கம் மதிப்பு எவ்வளவு?
a) 400 நேனோ மீட்டர் முதல் 700 நேனோ மீட்டர் வரை
b) 500 நேனோ மீட்டர் முதல் 700 நேனோ மீட்டர் வரை
c) 600 நேனோ மீட்டர் முதல் 600 நேனோ மீட்டர் வரை
d) 0
விளக்கம்: கண்ணுறு ஒளியின் அலை நீளநீள நெடுக்கம் மதிப்பு 400 நேனோ மீட்டர் முதல் 700 நேனோ மீட்டர் வரை ஆகும்.
41) கீழ்க்கண்டவற்றுள் எந்த நிறம் குறைந்த அலை நீளம் கொண்டது?
a) சிவப்பு
b) ஊதா
c) பச்சை
d) வெள்ளை
விளக்கம்: ஊதா நிறம் குறைந்த அலைநீளம் கொண்டது, சிவப்பு நிறம் அதிக அலைநீளம் கொண்டது.
42) கூற்று(A): சிவப்பு நிறமானது காற்றில் அதிக தொலைவு பயணிக்கும்.
காரணம்(R): சிவப்பு நிறமானது மற்ற நிறங்களை விட அதிக அலைநீளம் கொண்டது.
a) (A) மற்றும் (R) தவறு
b) (A) சரி (R) தவறு
c) (A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) வுக்கு (A) சரியான விளக்கம்
d) (A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) வுக்கு (A) சரியான விளக்கம் இல்லை.
விளக்கம்: சிவப்பு நிறம் காற்று மூலக்கூறுகளால் சிதறடிக்க படுகின்றன சிவப்பு நிறமானது மற்ற நிறங்களை விட அதிக அலைநீளம் கொண்டது. சிவப்பு நிறமானது காற்றில் அதிக தொலைவு பயணிக்கும்.
43) கீழ்காணும் கூற்றுகளில் எவை சரியானவை என்று கண்டறிக?
ⅰ) வெண்மை என்பது கண்ணுறு ஒளியின் அனைத்து நிறங்களின் கலவை ஆகும்.
ⅱ) கண்ணுறு ஒளியின் அனைத்து நிறங்களும் இல்லாத இடம் கருமை நிறமாக அமையும்
a) ⅰமட்டும்
b) ⅱமட்டும்
c) ⅰமற்றும்ⅱ
d) எதுவும் இல்லை
விளக்கம்: வெள்ளை என்பது ஒரு நிறம் அல்ல. ஆனால் வெண்மை என்பது கண்ணுறு ஒளியின் அனைத்து நிறங்களின் கலவை ஆகும். கண்ணுறு ஒளியின் அனைத்து நிறங்களும் இல்லாத இடம் கருமை நிறமாக அமையும்.
44) கீழ்காணும் கூற்றுகளில் எவை முப்பட்டகம் பற்றிய தவறான ஒன்று?
ⅰ) இரண்டு சமதளப் பரப்புகளுக்கு இடையே விரிகோணத்தை கொண்டுள்ளது
ⅱ) கண்ணாடி அல்லது பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்ட பொருள்.
a) ⅰமட்டும்
b) ⅱமட்டும்
c) ⅱமட்டும்
d) எதுவும் இல்லை
விளக்கம்: முப்பட்டகம் இரண்டு சமதளப் பரப்புகளுக்கு இடையே குறுங்கோணத்தை உருவாக்குகிறது.
45) கீழ்கண்டவற்றுள் எந்த நிறம் முப்பட்டகத்தில் வானவில்லை தோற்றுவிக்கிறது?
a) சிவப்பு
b) ஊதா
c) பச்சை
d) வெள்ளை
விளக்கம்: வெள்ளை நிறம் மூலமாக முப்பட்டகத்தில் வானவில் தோற்றுவிக்கப்படுகிறது.
46) நியூட்டனின் வட்டு பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எவை தவறானவை?
ⅰ) நியூட்டனின் வட்டு ஏழு சமம்மற்ற வட்டக்கோணப்பகுதி களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ⅱ) நியூட்டனின் வட்டு மூலம் வெண்மை நிறம் ஏழு வண்ணங்களை (VIBGYOR) உள்ளடக்கியது என அறிய முடியும்.
a) ⅰமட்டும்
b) ⅱமட்டும்
c) ⅰமற்றும்ⅱ
d) எதுவும் இல்லை
விளக்கம்: நியூட்டனின் வட்டு ஏழு சம வட்டக்கோணப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு வட்ட வடிவ அட்டை ஒன்றினை, ஏழு சமவட்டகோணப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முறையே சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, நீலம், கருநீலம் மற்றும் ஊதா வண்ணங்கள் இடப்பட்டிருக்கும். நியூட்டன் வட்டினை அதன் மையம் வழியேச் செல்லும் அச்சினைப் பொருத்து வேகமாகச் சுழற்றும் போது, நம் கண்ணின் ரெட்டினா வெண்மை நிறத்தை உணர்த்துகிறது. நியூட்டன் வட்டு மூலம், வெண்மை நிறம், ஏழு வண்ணங்களை (VIBGYOR) உள்ளடக்கியது என அறிய முடியும்.
47) கீழ்க்கண்டவற்றுள் எது முதன்மை நிறம்?
a) சிவப்பு
b) கருப்பு
c) வெள்ளை
d) மஞ்சள்
விளக்கம்: சிவப்பு, பச்சை, நீலம் ஆகியன முதன்மை நிறங்கள் ஆகும்.
48) கூற்று(A): ஏதேனும் இரண்டு முதன்மை நிறங்களை விகிதத்தில் கலக்கும் போது, இரண்டாம் நிலை நிறம் கிடைக்கும்.
காரணம்(R): மெஜந்தா, சையான் மற்றும் மஞ்சள் ஆகியவை இரண்டாம் நிலை நிறங்கள் ஆகும்.
a) (A) மற்றும் (R) தவறு
b) (A) சரி (R) தவறு
c) (A) மற்றும் (R) இரண்டும் சரி (R) வுக்கு (A) சரியான விளக்கம்
d) (A) மற்றும் (R) இரண்டும் சரி (R) வுக்கு (A) சரியான விளக்கம் இல்லை
விளக்கம்: ஏதேனும் இரண்டு முதன்மை நிறங்களை விகிதத்தில் கலக்கும் போது, இரண்டாம் நிலை நிறம் கிடைக்கும். மெஜந்தா, சையான் மற்றும் மஞ்சள் ஆகியவை இரண்டாம் நிலை நிறங்கள் ஆகும்.
49) முதன்மை நிறங்களைச் சமமான விகிதத்தில் ஒன்றாகக் கலக்கும் போது ______ நிறம் கிடைக்கிறது?
a) சிவப்பு
b) கருப்பு
c) வெள்ளை
d) மஞ்சள்
விளக்கம்: முதன்மை நிறங்களைச் சமமான விகிதத்தில் ஒன்றாகக் கலக்கும் போது வெள்ளை நிறம் கிடைக்கிறது.
50) கீழ்கண்டவற்றுள் எவை இரண்டாம் நிலை நிறம் இல்லை?
a) மெஜந்தா
b) சையான்
c) வெள்ளை
d) மஞ்சள்
விளக்கம்: வெள்ளை முதன்மை நிறம், மெஜந்தா, சையான் மற்றும் மஞ்சள் ஆகியவை இரண்டாம் நிலை நிறங்கள் ஆகும்.
7th Science Lesson 13 Questions in Tamil
13] அண்டம் மற்றும் விண்வெளி
1) “என் குறிக்கோள் எளிதானது, அது பிரபஞ்சம் ஏன் அவ்வாறே உள்ளது? ஏன் அது நிலையாக நிற்கிறது? என்பதனை முழுமையாகப் புரிந்துகொள்ளுதலாகும். “ இது யாருடைய கூற்று?
a) ஸ்டீபன் ஹாக்கிங்
b) ஃப்ராங்க் ஹாக்கிங்
c) அரிஸ்டாட்டில்
d) பிளாட்டோ
விளக்கம்: ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் ஆங்கிலேய கோட்பாட்டு அறிவியலாளரும், அண்டவியலாளரும், நூலாசிரியரும் ஆவார். இவர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.
2) பூமியை மையமாக கொண்டு சூரியன், நிலவு மற்றும் பிற கோள்கள் பிரபஞ்சத்தில் இயங்குகின்றன என்ற புவி மைய கோட்பாட்டை கிரீஸ் நாட்டில் முதலில் முன்மொழிந்தவர்?
a) ஐன்ஸ்டீன்
b) பிளாட்டோ
c) ஸ்டீபன் ஹாக்கிங்
d) புளுடோ
விளக்கம்: பிளேட்டோ பெரும் செல்வாக்குள்ள கிரேக்கத் தத்துவஞானியாவார். இவர் சாக்கிரட்டீசின் சீடர், அரிஸ்டாட்டிலின் குரு. பிளாட்டோ தலைசிறந்த கிரேக்க தத்துவஞானி, கணிதவியல் வல்லுனர். சாக்ரடீஸின் மாணவரான இவர் தத்துவத் தர்க்கங்களை எழுதியுள்ளார்.
3) தொலைநோக்கியை கண்டுபிடித்தவர்
a) தலாமி
b) டைக்கோ ப்ராஹே
c) சோமயாஜி
d) ஹான்ஸ் லிப்பர்ஷே
விளக்கம் : தொடக்ககாலத் தொலைநோக்கிகள் லியோர்னாட் டிக்கெஸ், தாகி அல்-டின் போன்றோரால் 16 ஆம் நூற்றாண்டிலேயே விபரிக்கப்பட்டிருந்த போதும், நடைமுறையில் செயல்பட்ட தொலைநோக்கியை முதலில், 1608 ஆம் ஆண்டில் உருவாக்கியவர், ஜெர்மன்-ஒல்லாந்த கண்ணாடி வில்லை செய்வோரான ஹான்ஸ் லிப்பர்ஷே என்பவராவார்.
4) வியாழனைச் சுற்றி துணைக்கோள்கள் இருப்பதனை கண்டறிந்தவர்?
a) ஆர்யாபட்டா
b) கலிலியோ
c) லிப்பர்ஷே
d) ஹாக்கிங்
விளக்கம்: கலீலியோ கலிலி, ஓர் இத்தாலிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியல் வல்லுநர், பொறியாளர், மற்றும் மெய்யியலாளர் ஆவார். இவர் பதினேழாம் நூற்றாண்டின் அறிவியல் புரட்சியில் மிக முதன்மையான பங்கை ஆற்றியுள்ளார். அவர் நவீன வானியலின் தந்தை, நவீன இயர்பியலின் தந்தை, அறிவியலின் தந்தை மற்றும் நவீன அறிவியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
5) பூமி அதன் அச்சில் சுழல்வதாகக் கூறிய வானியலாளர்?
a) ஆர்யாபட்டா
b) தலாமி
c) ஹாக்கிங்
d) டைக்கோ ப்ராஹே
விளக்கம்: சூரியன் மற்றும் சந்திரன் இரண்டுமே மேல்வட்டம், நீள்வட்டங்களில் தாங்கி செல்லப்படுகிறது, மேலும் அவை முறைப்படி வரும் போது புவியைச் சுற்றி வருகிறது என ஆர்யாபட்டா கணித்தார்
6) பொருத்துக
A. பூமி. 1. 687
B. செவ்வாய் 2. பால்வெளி
C. நிலவு 3. 365
D. விண்மீன் திரள். 4. 27
A B C D
a) 3 1 4 2
b) 1 2 3 4
c) 3 1 2 4
d) 4. 3 2 1
7) சூரியனை மையமாகக் கொண்டு பூமி மற்றும் அனைத்து கோள்களும் சுற்றி வருவதாக கூறியவர்
a) தலாமி
b) நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ்
c) ஹாக்கிங்
d) டைக்கோ ப்ராஹே
விளக்கம்: நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் அல்லது நிக்கோலசு கோப்பர்னிக்கசு ஒரு வானியலாளரும், கணிதவியலாளரும், பொருளியலாளருமாவார். கதிரவனை மையமாகக் கொண்ட புரட்சிகரமான கொள்கையை வகுத்துத் தந்து வானியலில் புதிய ஒரு வளர்ச்சிக்கு வித்திட்டவர்.
8) ஒரு புள்ளியில் பருப்பொருள் குவிந்து அங்கிருந்து விரிவடைய துவங்கும் நிகழ்ச்சி
a) சிறு வெடிப்பு
b) பெரு வெடிப்பு
c) நீள்வட்ட மாதிரி
d) புவி மையப்புள்ளி
விளக்கம்: பெரு வெடிப்புக் கோட்பாடு என்பது அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடாகும். பெரு வெடிப்புக் கொள்கையின்படி அண்டவெளியில் உள்ள பொருள்கள் அனைத்தும் 12 முதல் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மிக அதிகமான அடர்த்தியுடன் கூடிய, சிறிய அளவினதான, தீப்பிழம்பாக இருந்திருக்கிறது. இத் தீப்பிழம்பானது இன்று அறியப்படாத ஏதோ ஒரு காரணத்தினால் மிக வேகமாக விரிவடையத் தொடங்கிற்று. இதுவே பெரு வெடிப்பு (Big-Bang) எனப்படுகின்றது.
9) பொருத்துக
A. வானியல் அலகு 1] 3.09 x 1013 km
B. ஒளிஆண்டு 2] 1.496 x 108 கிமீ
C. உர்ஷா மேஜர் 3] 9.4607 x 1012 கிமீ
D. விண்ணியல் ஆரம் 4] ஏழு துறவிகள்
A B C D
a) 3 1 4 2
b) 4 2 3 1
c) 3 1 2 4
d) 2 3 4 1
10) சூரியக் குடும்பத்தின் மிக அருகில் உள்ள மற்றொரு விண்மீன்
a) பிரோக்சிமா சென்டாரி
b) ஆல்பா சென்டாரி
c) பர்னார்ட் நட்சத்திரம்
d) லுக்மன் 16
விளக்கம்: ஆல்பா செண்டாரி (Alpha Centauri) என்பது சென்டோரஸ் விண்மீன் குழுமத்தில் உள்ள ஒரு விண்மீன் ஆகும். இது வானத்தில் 3வது பிரகாசமான விண்மீன். இது சூரியனிருந்து 4. 37 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது, இதனால் இது சூரியக் குடும்பத்தின் மிக அருகில் உள்ள மற்றொரு விண்மீன் குடும்பம் ஆகும்.
11) கீழ்வருவனவற்றுள் எவை பிரபஞ்சத்தில் காணப்படுபவை
a) கிரகங்கள்
b) விண்கற்கள்
c) விண்மீன் திரள்கள்
d) இவை அனைத்தும்
விளக்கம்: இந்தப் பிரபஞ்சத்தில் விண்மீன் திரள்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், விண்கற்கள், செயற்கைக்கோள்கள் மற்றும் அனைத்து வகையான பொருள்களும் ஆற்றலும் உள்ளன. அது வியப்பூட்டும் ஓர் உலகமாகும்.
12) புவியின் எத்திசையில் நிலா சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் உதிப்பது போன்று தோன்றுகிறது
a) வடக்கு
b) கிழக்கு
c) தெற்கு
d) மேற்கு
விளக்கம்: வானம் ஓர் அதிசயம். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் கிழக்கில் தோன்றி மேற்கு நோக்கி நகர்வதுபோல், இவை அனைத்தும் பூமியைச் சுற்றியேசெல்கின்றன என்ற ஒரு எண்ணத்தை நமக்கு ஏற்படுத்துகினறன.
13) சரியானவற்றை தேர்வு செய்
I. நிலவானது, தினமும் கிழக்கில் உதித்து மேற்கில் மறைகிறது.
II. நிலவானது சுமார் 27 நாளில் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி ஒரு வட்டத்தில் நட்சத்திரங்களின் பின்னணியில் செல்கிறது.
a) I மற்றும் II சரி
b) I சரி
c) II சரி
d) I மற்றும் II தவறு
விளக்கம்: நிலவானது பூமியை ஒரு நாளுக்கு ஒரு முறை என்ற கால அளவில் சுற்றிக்கொண்டிருப்பதாகக் கூறலாம். இவ்வாறு ஒவ்வொரு நாளும் நிலவானது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து, சுமார் 27 நாளில் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி ஒரு வட்டத்தில் நட்சத்திரங்களின் பின்னணியில் செல்கிறது.
14) விண்ணுலகப் பொருள்கள் விண்கோளத்தில் கிழக்கு நோக்கி இயங்க ஆகும் நாட்கள்
a) 26
b) 27
c) 28
d) 29
விளக்கம்: ஆர்யபட்டா போன்ற வானியலாளர்கள், பூமியானது அதன் அச்சில் சுழல்வதாகக் கூறினர். இதுவே, நிலவு தினமும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச்சுழலும் இயக்கத்திற்கான காரணம் ஆகும். ஆனால், விண்கோளத்தில் 27 நாள் கொண்டகிழக்கு நோக்கிய இயக்கம் விண்ணுலகப் பொருள்களின் உண்மையான இயக்கமாகும்.
15) புவி மையக் கோட்பாட்டின் படி பின்வருவனவற்றுள் எதை மையமாகக் கொண்டுமற்ற கோள்கள் சுழல்கிறது
a) பூமி
b) சூரியன்
c) நட்சத்திரம்
d) விண்மீன்
விளக்கம்: கோள வடிவமான சுழலக்கூடிய பூமியை மையமாகக் கொண்டு சூரியன், நிலவு மற்றும் பிற கோள்கள் பிரபஞ்சத்தில் இயங்குகின்றன என்ற புவி மையக் கோட்பாடு பல்வேறு நாகரிகங்களில் தோன்றியது.
16) புவி மையக் கோட்பாடை கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வரையறுத்தவர்?
a) கலிலியோ
b) பிளாடோ
c) தலாமி
d) ஆர்யாபட்டா
விளக்கம்: கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் கிரேக்க ரோமானிய கணிதவியலாளர் தாலமி என்பவரால் புவி மையக் கோட்பாடு வரையறுக்கப்பட்டது.
17) பின்வரும் எந்த சங்க இலக்கியத்தில் நிலவு, சூரியனின் தோன்றல் மற்றும் இயக்கம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது?
a) திருக்குறள்
b) குறுந்தொகை
c) புறநானூறு
d) நற்றிணை
விளக்கம்: பண்டைக் காலங்களில் வானியலாளர்கள் சில உண்மைகளைக் கண்டறிந்தனர். சங்க இலக்கியத்தில் புறநானூற்றுப் பாடலில் (65) , சேரமான் பெருஞ்சேரலாதன் என்னும் அரசனைப் புகழ்ந்து கவிஞர் பாடினார். ஒரு முழு நிலவு நாளில், சூரியன் மேற்கில் மறையும் அதே நேரத்தில், நிலவு கிழக்கில் உதிக்கிறது. அதாவது சூரியன் மற்றும் நிலவு எதிரெதிராக உள்ளன. இது போலவே, தேய்பிறையானது, நள்ளிரவிலும், வளர்பிறை நடுப்பகலிலும் தோன்றுகின்றன. இத்தகைய உற்று நோக்கல் மற்றும் மாதிரிகள் மூலம் பண்டைய வானியல் ஆராய்ச்சியாளர்கள் வளர்பிறை மற்றும் தேய்பிறைகளை விளக்கினர்.
18) எந்நாளில் சூரியன் மற்றும் நிலவு எதிரெதிராக தோன்றும்
a) அமாவாசை நாளில்
b) முழு நிலவு நாளில்
c) சங்கராந்தி நாளில்
d) உத்தராயண நாளில்
விளக்கம்: ஒரு முழு நிலவு நாளில், சூரியன் மேற்கில் மறையும் அதே நேரத்தில், நிலவு கிழக்கில் உதிக்கிறது. அதாவது சூரியன் மற்றும் நிலவு எதிரெதிராக உள்ளன.
19) நிலவின் பல்வேறு நிலைகளை புரிந்து கொள்ள அடிப்படையாக இருந்தவை?
a) புவியின் சுழற்சி
b) அமாவாசை, பௌர்ணமி
c) சூரியனின் ஆற்றல்
d) இவை அனைத்தும்
விளக்கம்: பெளர்ணமி மற்றும் அமாவாசையை அடிப்படையாகக் கொண்டு நிலவின் வளர்பிறை மற்றும் தேய்பிறை போன்ற நிலைகளைப் புரிந்து கொள்ளுதலும் மற்றும் முதல் மற்றும் மூன்றாவது கால் பகுதி (அரைச் சந்திரன்) எவ்வாறு தோன்றும், பின்னர் இடையே உள்ள கட்டங்கள் எவ்வாறு தோன்றுகின்றன என்பதையும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
20) பின் வாக்கியங்களை கவனி
கூற்று (A) : எல்லா நேரங்களிலும் பூமியின் ஒரு பகுதி சூரிய ஒளியால் ஒளியுற்றும் இன்னொரு பகுதி இருளிலும் உள்ளன.
காரணம்(R) : ஒளியானது அதனை நோக்கியிருக்கின்ற பூமியின் கோளகப்பரப்பில் விழுகிறது.
a) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A விற்கு சரியான விளக்கம்
b) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A விற்கு சரியான விளக்கம் அல்ல
c) A சரி ஆனால் R தவறு
d) A தவறு ஆனால் R சரி
விளக்கம்: சூரியனே ஒளிக்கு ஆதாரம் ஆகும். சூரிய ஒளியானது அதனை நோக்கியிருக்கின்றபூமியின் கோளகப்பரப்பில் விழுகிறது. பூமியின் எதிர்பக்கத்தில் சூரிய ஒளி விழுவதில்லை. பூமி சுழல்வதனால், அதன் பல்வேறு பகுதிகள் சூரியனுக்கு நேராக வருகின்றன. எனவே, இரவும் பகலும் தோன்றுகின்றன. எல்லா நேரங்களிலும் பூமியின் ஒரு பகுதி சூரிய ஒளியால் ஒளியுற்றும் இன்னொரு பகுதி இருளிலும் உள்ளன.
21) நிலவு எந்த நிலையில் இருக்கும்போது, நமக்கு அமாவாசையாக உள்ளது
a) நிலவு பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் இருக்கும் பொழுது
b) பூமி சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவில் இருக்கும் பொழுது
c) சூரியன் பூமிக்கும் நிலவுக்கும் நடுவில் இருக்கும் பொழுது
d) பூமி சூரியன் நிலா மூன்றும் நேர்கோட்டில் இருக்கும் போது
விளக்கம்: நிலவானது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வரும் போது, நிலவின் ஒளிரும் பகுதி பூமியிலிருந்து தொலைவில் இருக்கிறது. எனவே, சந்திரனின் ஒளிரும் பக்கத்தின் எந்தப் பகுதியையும் நாம் பார்க்க முடியாது. நிலவின் இருண்ட பக்கமே பூமியை நோக்கி உள்ளது. நிலவு இந்த நிலையில் இருக்கும்போது, நமக்கு அமாவாசையாக உள்ளது.
22) பின் வாக்கியங்களை கவனி.
I. சூரியனால் பிரகாசிக்கும் நிலவின் பகுதி இப்போது புவியைநோக்கி இல்லை.
II. இருண்ட பக்கமானது பூமியில் இருந்து தொலைவில் உள்ளது.
a) I மற்றும் II சரி
b) I தவறு II சரி
c) II தவறு
d) I மற்றும் II தவறு
விளக்கம்: சூரியனால் பிரகாசிக்கும் நிலவின் பகுதி இப்போது பூமியை நோக்கியே உள்ளது. இருண்ட பக்கமானது பூமியில் இருந்து தொலைவில் உள்ளது. அதாவது, நிலவு வானில் வட்ட வடிவில் தோன்றும். இது பெளர்ணமி.
23) பின் வாக்கியங்களை கவனி
I. தேய்பிறை-முதல் கால் பகுதி
II. வளர்பிறை- மூன்றாவது கால் பகுதி
a) I மற்றும் II தவறு
b) I தவறு II சரி
c) II தவறு
d) I மற்றும் II சரி
விளக்கம்: பூமியை நோக்கி இருக்கின்ற நிலவினைக் கண்ணால் நோக்கினால், அதன் அரைப்பகுதி ஒளிர்ந்தும் மற்றோர் அரைப் பகுதி இருளிலும் இருப்பதனைக் காண்போம். இதனால், நிலவு அரை நிலவாகத் தோன்றும். தேய்பிறைக் மற்றும் காலத்தின்போது அரை நிலவு ‘முதல் கால் பகுதி’ என அழைக்கப்படுகிறது. வளர்பிறைக் காலத்தில் நிலவானது, ‘மூன்றாவது கால் பகுதி’ என அழைக்கப்படுகிறது.
24) பின் வாக்கியங்களை கவனி
I. பிறை – நிலவு பாதிக்குக் குறைவாக ஒளியூட்டம்
II. நிலவு அரை வட்டத்திற்குமேல் ஒளியூட்டம்
III. வளர்பிறை – வளர்தல் அல்லது வெளிச்சத்தில் விரிவடைதல்
IV. தேய்பிறை – குறைதல் அல்லது வெளிச்சம் குறைதல்
a) I மற்றும் II சரி
b) I, II, III தவறு
c) I, II, III மற்றும் IV சரி
d) I தவறு
விளக்கம்: பிறை என்னும் சொல் நிலவு பாதிக்குக் குறைவாக ஒளியூட்டப் படுவதனைக் குறிக்கிறது. கிப்பஸ் என்பது சந்திரன் அரை வட்டத்திற்குமேல் ஒளிரும் கட்டங்களைக் குறிக்கிறது. வளர்பிறை என்பது “வளர்தல்” அல்லது வெளிச்சத்தில் விரிவடைதல், மற்றும் தேய்பிறை என்பது “குறைதல்” அல்லது வெளிச்சம் குறைதல் எனப் பொருள்படுகின்றன.
25) பழங்காலத்தில் வானியலாளர்கள் எந்த கிரகங்களின் இயக்கத்தினை விளக்குவதில் சிக்கலை எதிர்கொண்டனர்
a) புதன் மற்றும் வெள்ளி,
b) செவ்வாய்,
c) வியாழன் மற்றும் சனி
d) இவை அனைத்தும்
விளக்கம்: பண்டைக் காலங்களில் வானியலாளர்கள் அக்காலத்தில் தெரிந்த ஐந்து கிரகங்களான புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகியவற்றின் இயக்கத்தினை விளக்குவதில் சிக்கலை எதிர்கொண்டனர்.
26) பிற்போக்கு இயக்கத்தின் போது மிகவும் பிரகாசமாக இருக்கும் கோள் எது?
a) செவ்வாய்
b) புதன்
c) வியாழன்
d) சனி
விளக்கம்: செவ்வாய் கிரகத்தைவிடப் பொதுவாக வியாழன் பிரகாசமானது. எனினும் செவ்வாய் கிரகத்தின் பிற்போக்கு இயக்கத்தின் காலம் முழுவதும் வியாழனைவிட, அது பிரகாசமாக இருக்கிறது.
27) நள்ளிரவில் வானத்தில் தோன்றாத கோள்கள் எவை?
a) புதன் மற்றும் வெள்ளி
b) செவ்வாய் மற்றும் வெள்ளி
c) வியாழன் மற்றும் சனி
d) சனி மற்றும் புதன்
விளக்கம்: வெள்ளியும் புதனும் எப்போதும் சூரியனுக்கு மிக அருகில் உள்ளன, எனவே நள்ளிரவில் வானத்தில் தெரிவதில்லை.
28) புவி மையக் கோட்பாட்டினால் விளக்க இயலாத கூறுகள்
a) கிரகங்களின் ஒளி ஏன் மாறுகிறது,
b) அவை ஏன் திசையை மாற்றுகின்றன
c) பிற்போக்கு இயக்கம்
d) a மற்றும் b சரி
விளக்கம்: கிரகங்களின் ஒளி ஏன் மாறுகிறது, அவை ஏன் திசையை மாற்றுகின்றன போன்றவற்றிற்கான காரணங்களைப் புவி மையக் கோட்பாட்டினால் விளக்க இயலவில்லை.
29) நீள்வட்டமாதிரிகளைப் பயன்படுத்தி விண்பொருள்களின் இயக்கத்தினை விளக்கியவர்
a) கலிலியோ
b) ஆர்யாபட்டா
c) தலாமி
d) கோப்பர் நிக்கஸ்
விளக்கம்: கிரேக்கத்தின் தாலமி (2 ஆம் நூற்றாண்டு) , இந்தியாவின் ஆர்யபட்டா மற்றும் பிறர் நீள்வட்ட மாதிரிகளைப் பயன்படுத்தி விண்பொருள்களின் இயக்கத்தினை விளக்கினர்.
30) எந்த வானியலாளர்களின் தலைமுறைகளில் நீள்வட்டமாதிரிகள் மேம்படுத்தப்பட்டன?
a) டைக்கோ ப்ராஹே
b) நீலகண்ட சோமயாஜி
c) தலாமி
d) a மற்றும் b
விளக்கம்: டைக்கோ ப்ராஹே மற்றும் நீலகண்ட சோமயாஜி போன்ற வானியலாளர்களின் தலைமுறைகளில் இம் மாதிரிகள் மேம்படுத்தப்பட்டன.
31) கலிலியோ தொலைநோக்கி உதவியுடன் கண்டறிந்த மிக முக்கிமான கணிப்பு எந்த கிரகத்தை குறித்தது
a) செவ்வாய்
b) வெள்ளி
c) சனி
d) புதன்
விளக்கம்: கலிலியோ தொலைநோக்கி உதவியுடன் கண்டறிந்த மிக முக்கிமான கணிப்பு வெள்ளி குறித்தது ஆகும். போலந்து நாட்டு வானியலாளரான நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸின் சூரிய மையக்கொள்கையான சூரியனும் நட்சத்திரங்களும் பிற கோள்களும் பூமியைச்சுற்றவில்லை, ஆனால், பூமி மற்றும் பிற கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன என்ற கோட்பாட்டை அவர் ஏற்றுக்கொள்ள, இக்கண்டுபிடிப்பு அவருக்கு உதவியது.
32) பிரபஞ்சத் தோற்றத்தைக் குறித்துக் கூறும் கோட்பாடுகளில் இன்று ஏற்றுக் கொள்ளப்படுவதாக உள்ள கோட்பாடு?
a) பெரு வெடிப்பு
b) நட்சத்திர திரள்
c) சூரிய குடும்பம்
d) கருப்பு துளை
விளக்கம்: பிரபஞ்சத் தோற்றத்தைக் குறித்துக் கூறும் கோட்பாடுகளில் எல்லாமே இந்தப் பெரு வெடிப்புக் கோட்பாடு தான் இன்று ஏற்றுக் கொள்ளப்படுவதாக உள்ளது.
33) பின்வருவனவற்றுள் பெருவெடிப்பின் போது தோன்றியவை ?
a) நேரம்,
b) வெளி
c) பருப்பொருள்கள்
d) இவை அனைத்தும்
விளக்கம்: நேரம், வெளி மற்றும் பருப்பொருள்கள் அனைத்தும் இந்தப் பெரு வெடிப்பிலிருந்து தான் தொடங்கின.
34) பிரபஞ்சம் உருவான கட்டத்தில், எந்தெந்த வாயுக்கள் காணப்பட்டன?
a) ஹைட்ரஜன்
b) ஹீலியம்
c) ஆக்ஸிஜன்
d) a மற்றும் b
விளக்கம்: பிரபஞ்சம் உருவான கட்டத்தில், அது ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால் ஆன கூட்டமாகவே இருந்தது. ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களின் பெரும் கூட்டங்கள் படிப்படியாக இருண்ட அடர்த்தியான இடங்களுக்கு இழுக்கப்பட்டன. முதல் விண்மீன் திரள்கள், இன்று காணப்படும் நட்சத்திரங்கள் மற்றும் எல்லாம் இவ்வாறு தான் உருவாகின.
35) எது பிக் பேங்கின் நேரடி ஆதாரமாக கருதப்படுகிறது?
a) காஸ்மிக் நுண்ணலை
b) ஹைட்ரஜன் குழுமங்கள்
c) ஹுலியம் குழுமங்கள்
d) கருப்பு துளை
விளக்கம்: பிக் பேங்கின் ஒரே நேரடி ஆதாரம் காஸ்மிக் நுண்ணலை பின்னணி என்று அழைக்கப்படும் விண்வெளியில் உள்ள ஒரு மங்கலான பிரகாசம் ஆகும்
36) பிக்பேங்கிற்கு பிறகு எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு முதல் நட்சத்திரம் உருவானது
a) 100 மில்லியன்
b) 200 மில்லியன்
c) 300 மில்லியன்
d) 250 மில்லியன்
விளக்கம்: பிக்பேங்கிற்கு சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் நட்சத்திரங்களை உருவாக்குவதற்கு ஏற்றாற்போல வாயுவானது சூடாகவும் அடர்த்தியாகவும் இருந்தது. புதிய நட்சத்திரங்கள் இன்றைய பிரபஞ்சத்தில் உருவாவதைவிட 10 மடங்கு அதிகமான விகிதத்தில் பிறந்தன. நட்சத்திரங்களின் பெரிய திரளானது விரைவில் முதல் விண்மீன் திரள் ஆக மாறியது.
37) விண்மீன் திரள்கள் எத்தனை வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?
a) 2
b) 3
c) 4
d) 5
விளக்கம்: விண்மீன் திரள்களின் வகைகள்: சுழல்திரள், நீள்வட்டம், தட்டைச் சுழல் மற்றும் ஒழுங்கற்ற வடிவம் போன்ற பல்வேறு வகையான விண்மீன் திரள்கள் உள்ளன.
38) நட்சத்திர செறிவு காணப்படும் விண்மீன்திரள் எது?
a) சுருள் விண்மீன்திரள்கள்
b) நீள்வட்ட விண்மீன்திரள்
c) ஒழுங்கற்ற விண்மீன்திரள்கள்
d) கோடிட்ட சுருள் விண்மீன்திரள்
விளக்கம்: சுருள் விண்மீன்திரள்கள் என்பவை, நட்சத்திரங்கள், வாயு மற்றும் தூசி ஆகியவற்றைக் கொண்ட ஒரு தட்டையான, சுழலும் வட்டு ஆகும். இதன் மத்தியில் நட்சத்திரச் செறிவு காணப்படும்.
39) மூன்று-பரிமாணங்களைக் கொண்ட, கட்டமைப்பற்ற, மையத்தில் சீரற்ற சுற்றுப்பாதையில் உள்ள விண்மீன்களைக் கொண்டுள்ளன விண்மீன் திரள்?
a) சுருள் விண்மீன்திரள்கள்
b) நீள்வட்ட விண்மீன்திரள்
c) ஒழுங்கற்ற விண்மீன்திரள்கள்
d) கோடிட்ட சுருள் விண்மீன்திரள்
விளக்கம்: ஒழுங்கற்ற விண்மீன்திரள்கள் கோடிட்ட சுருள் விண்மீன்திரள்ஒரு நீள்வட்ட விண்மீன்திரள் என்பது, ஏறத்தாழ நீள்வட்ட வடிவம் மற்றும் ஒரு மென்மையான உருவம் உடைய ஒரு வகை விண்மீன் திரள் ஆகும். சுழல் விண்மீன் திரள்கள்போல் அல்லாமல் நீள்வட்ட விண்மீன் திரள்கள் மூன்று-பரிமாணங்களைக் கொண்ட, கட்டமைப்பற்ற, மையத்தில் சீரற்றசுற்றுப்பாதையில் உள்ள விண்மீன்களைக் கொண்டுள்ளன.
40) இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட விண்மீன் திரள்களில் நான்கில் ஒரு பங்கு எவ்வகை விண்மீன் திரள்களில் உள்ளடங்கும்
a) சுருள் விண்மீன்திரள்கள்
b) நீள்வட்ட விண்மீன்திரள்
c) ஒழுங்கற்ற விண்மீன்திரள்கள்
d) கோடிட்ட சுருள் விண்மீன்திரள்
விளக்கம்: சுழல் மற்றும் நீள்வட்ட விண்மீன் திரள்களைப் போன்ற ஒழுங்கான வேறுபட்டஅமைப்பினை ஒழுங்கற்ற விண்மீன்திரள்கள் பெற்றிருப்பதில்லை. பார்வைக்கு ஒழுங்கற்றதாகவும் மைய பகுதி தடித்தோ அல்லது சுருண்டோ காணப்படுவதில்லை. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட விண்மீன் திரள்களில் நான்கில் ஒரு பங்கு இந்த வகையானவையாகவே காணப்படுகின்றன.
41) சூரிய மண்டலம் அமைந்திருக்கும் பால்வெளித்திரள் எவ்வகை விண்மீன் திரளை சார்ந்து?
a) சுருள் விண்மீன்திரள்கள்
b) நீள்வட்ட விண்மீன்திரள்
c) ஒழுங்கற்ற விண்மீன்திரள்கள்
d) கோடிட்ட சுருள் விண்மீன்திரள்
விளக்கம்: ஒரு கோடிட்ட சுருள் விண்மீன்திரள் என்பது விண்மீன்களாலான குறுக்குக் கோடு கொண்ட ஒரு சுருள் விண்மீன்திரள் ஆகும். அனைத்துச் சுருள் விண்மீன்திரள்களிலும் மூன்றில் இரண்டு அல்லது மூன்றில் ஒன்று எனும் அளவில் குறுக்குக்கோடுகள் காணப்படும். நமது சூரிய மண்டலம் அமைந்திருக்கும் பால்வெளித்திரளானது கோடிட்ட சுருள் விண்மீன்திரள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
42) ஒளிப்பட்டையானது தனிப்பட்ட நட்சத்திரங்களின் தொகுப்பு எனக் கண்டறிந்தவர்
a) கலிலியோ
b) ஆர்யாபட்டா
c) தலாமி
d) கோப்பர் நிக்கஸ்
விளக்கம்: கலிலியோ கலிலி 1610 ஆம் ஆண்டில் முதன்முதலில் தனது தொலைநோக்கியின் உதவியுடன் இந்த ஒளிப்பட்டையானது தனிப்பட்ட நட்சத்திரங்களின் தொகுப்பு எனக் கண்டறிந்தார்.
43) பால்வளித் திரள் பல விண்மீன் திரள்களில் ஒன்றாகும் என்பதைச் சுட்டிக்காட்டியவர்?
a) கலிலியோ
b) ஆர்யாபட்டா
c) தலாமி
d) எட்வின் ஹபுலின்
விளக்கம்: 1920 ஆம் ஆண்டின் தொடக்கம் வரையில், பெரும்பாலான வானியலாளர்கள் பால்வளித் திரளானது பிரபஞ்சத்தின் அனைத்து நட்சத்திரங்களையும் கொண்டிருப்பதாக நினைத்திருந்தனர். எட்வின் ஹபுலின் ஆய்வுகள் பால்வளித் திரள் பல விண்மீன் திரள்களில் ஒன்றாகும் என கண்டறிந்தார்.
44) சூரியக் குடும்பம் பால்வழித்திரளை முழுமையாகச் சுற்றிவர ஆகும் காலம்
a) 240 மில்லியன் வருடங்கள்
b) 230 மில்லியன் வருடங்கள்
c) 220 மில்லியன் வருடங்கள்
d) 210 மில்லியன் வருடங்கள்
விளக்கம்: சூரியக் குடும்பம் பால்வழித்திரளை முழுமையாகச் சுற்றிவர சுமார் 230 மில்லியன் ஆண்டுகள் ஆகும். இதற்கு முன் சூரிய குடும்பம் இதே இடத்தில் இருந்தபோது, பூமியில் மனிதர்களும் இல்லை, இமய மலையும் இல்லை. ஆனால் தினோசர்கள் பூமியில் சுற்றித்திரிந்தன.
45) பின் வரும் கூற்றில் சரியானதை தேர்வு செய்க.
I. கிரேக்க புராணங்களில் ஓரியன் ஒரு வேட்டைக்காரராக இருந்தார்.
II. இந்த விண்மீன் மண்டலம் 81 விண்மீன்களை உள்ளடக்கியது,
III. இவற்றில் 10 தவிர மற்றவற்றை வெற்றுக் கண்களால் காண முடியாது
a) I மற்றும் II சரி
b) I, II, III தவறு
c) I, II, III சரி
d) I தவறு
விளக்கம்: கிரேக்க புராணங்களில் ஓரியன் ஒரு வேட்டைக்காரராக இருந்தார். இந்த விண்மீன் மண்டலம் 81 விண்மீன்களை உள்ளடக்கியது, இவற்றில் 10 தவிர மற்றவற்றை வெற்றுக் கண்களால் காண முடியாது.
46) பின் வாக்கியங்களை கவனி
கூற்று (A) : பல்வேறு விண்மீன்கள் ஆண்டு முழுவதும் வெவ்வேறு நேரங்களில் வானத்தில் காணப்படுகின்றன.
காரணம் (R) : சூரியனைச் சுற்றி பூமியின் சுழற்சி காரணமாக இங்ஙனம் நிகழ்கிறது.
a) A மற்றும் R இரண்டும் சரி , R என்பது A விற்கு சரியான விளக்கம்
b) A மற்றும் R இரண்டும் சரி , R என்பது A விற்கு சரியான விளக்கம் அல்ல
c) A சரி ஆனால் R தவறு
d) A தவறு ஆனால் R சரி
விளக்கம்: பல்வேறு விண்மீன்கள் ஆண்டு முழுவதும் வெவ்வேறு நேரங்களில் வானத்தில் காணப்படுகின்றன. சூரியனைச் சுற்றி பூமியின் சுழற்சி காரணமாக இங்ஙனம் நிகழ்கிறது.
47) பின் வரும் கூற்றில் சரியானதை தேர்வு செய்க
I. விண்மீன் மண்டலங்கள் வெறும் ஒளியியல் தோற்றம் மட்டுமே, உண்மையான பொருள்கள் அல்ல.
II. நட்சத்திரங்கள் ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்ட ஒர் அமைப்பு ஆகும்.
a) I மற்றும் II தவறு
b) I தவறு
c) I, II சரி
d) II தவறு
விளக்கம்: விண்மீன் திரள் போலன்றி, விண்மீன் மண்டலங்கள் வெறும் ஒளியியல் தோற்றம் மட்டுமே, உண்மையான பொருள்கள் அல்ல. விண்மீன்திரள்களில் நட்சத்திரங்கள் ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்டு ஒர் அமைப்பாக அமைகின்றன.
48) பின் வரும் வாக்கியங்களை கவனி
கூற்று (A) : விண்மீன் மண்டலத்தில், நட்சத்திரம் மிக அருகில் இருப்பதாகத் தோன்றுகிறது.
காரணம்(R) : அவை ஒரே திசையில் இருப்பதால் வானத்தில் ஒன்றுக்கொன்று அருகில் இருப்பதாகத் தோன்றுகிறது.
a) A மற்றும் R இரண்டும் சரி , R என்பது A விற்கு சரியான விளக்கம்
b) A மற்றும் R இரண்டும் சரி , R என்பது A விற்கு சரியான விளக்கம் அல்ல
c) A சரி ஆனால் R தவறு
d) A தவறு ஆனால் R சரி
விளக்கம்: விண்மீன் மண்டலத்தில், ஓர் நட்சத்திரம் மிக அருகில் இருக்கும் மற்றொன்று தொலைவில் இருக்கலாம. அவை ஒரே திசையில் இருப்பதால் வானத்தில் ஒன்றுக்கொன்று அருகில் இருப்பதாகத் தோன்றுகிறது.
49) பின் வரும் கூற்றில் சரியானதை தேர்வு செய்க
I. பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் சூரியன் ஆகும்.
II. நட்சத்திரம் ஆல்ஃபா சென்டாரி ஆகும்.
a) I மற்றும் II சரி
b) I, II தவறு
c) II சரி I தவறு
d) I தவறு
விளக்கம்: நட்சத்திரங்கள் மிகத் தொலைவில் அமைந்துள்ளதால், அவை சிறிய ஒளிப்புள்ளிகளாகத் தோன்றுகின்றன. அவற்றின் ஒளியானது, நீண்ட தூரம் பயணம் செய்து நம்மை வந்தடைகிறது. வளிமண்டலத்தில் ஏற்படும் தடைகள் ஒளியை நேரான பாதையில் செல்ல அனுமதிக்காது. இதன் காரணமாக நட்சத்திரங்கள் மின்னுவதாகத் தோன்றும். பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் சூரியன் ஆகும். அடுத்த நட்சத்திரம் ஆல்ஃபா சென்டாரி ஆகும்.
50) துணைக்கோள்கள் எத்தனை வகை படும்
a) 1
b) 2
c) 3
d) 4
விளக்கம்: ஒரு கோளைச் சுற்றி நிலையான வட்டப்பாதையில் சுற்றும் பொருள் ஒரு துணைக்கோள் என்று அழைக்கப்படுகிறது. துணைக் கோள்கள் – இயற்கை மற்றும் செயற்கைக் கோள்கள் என இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
51) எந்த கிரகம் அதிக துணைக்கோள்களை கொண்டுள்ளது?
a) சனி
b) வியாழன்
c) வெள்ளி
d) நெப்டியூன்
விளக்கம்: நமது சூரியக் குடும்பத்தில் புதன் மற்றும் வெள்ளி தவிர மற்ற எல்லா கோள்களும் நிலவுகளைக் கொண்டிருக்கும். பூமிக்கு ஒரே ஒரு நிலவு இருக்கிறது – அதே சமயம் வியாழன்(79) மற்றும் சனி போன்ற கிரகங்கள் 60 க்கும் மேற்பட்டநிலவுகளைக் கொண்டுள்ளன.
52) சூரிய குடும்பத்தில் துணைக்கோள்கள் இல்லாத கிரகங்கள்
a) புதன், வெள்ளி
b) வெள்ளி, வியாழன்
c) சனி, பூமி
d) நெப்டியூன், புதன்
விளக்கம்: நமது சூரியக் குடும்பத்தில் புதன் மற்றும் வெள்ளி தவிர மற்ற எல்லா கோள்களும் நிலவுகளைக் கொண்டிருக்கும். பூமிக்கு ஒரே ஒரு நிலவு இருக்கிறது – அதே சமயம் வியாழன் மற்றும் சனி போன்ற கிரகங்கள் 60 க்கும் மேற்பட்டநிலவுகளைக் கொண்டுள்ளன.
53) பூமி எத்தனை துணைக்கோள்களை கொண்டுள்ளது?
a) 1
b) 2
c) 3
d) 4
விளக்கம்: நமது சூரியக் குடும்பத்தில் புதன் மற்றும் வெள்ளி தவிர மற்ற எல்லா கோள்களும் நிலவுகளைக் கொண்டிருக்கும். பூமிக்கு ஒரே ஒரு நிலவு இருக்கிறது – அதே சமயம் வியாழன் மற்றும் சனி போன்ற கிரகங்கள் 60 க்கும் மேற்பட்டநிலவுகளைக் கொண்டுள்ளன.
54) உலகின் முதல் செயற்கைக்கோள் எது?
a) ஆர்யாபட்டா
b) ஸபுட்னிக்-1
c) ரோகினி
d) சந்திரயான்
விளக்கம்: மனிதனால் உருவாக்கப்பட்ட கோளைச்சுற்றிவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட பொருள்கள் செயற்கைக்கோள்கள் ஆகும். உலகின் முதல் செயற்கைக்கோள் ரஷ்யாவின் ஸ்புட்னிக் -1 ஆகும்.
55) உலகின் முதல் செயற்கைக்கோள் எந்நாட்டுடையது?
a) அமெரிக்க
b) இரஷ்யா
c) சீனா
d) ஜப்பான்
விளக்கம்: மனிதனால் உருவாக்கப்பட்ட கோளைச்சுற்றிவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட பொருள்கள் செயற்கைக்கோள்கள் ஆகும். உலகின் முதல் செயற்கைக்கோள் ரஷ்யாவின் ஸ்புட்னிக் -1 ஆகும்.
56) ஆர்யாபட்டா எந்நாட்டின் முதல் செயற்கைக்கோள்?
a) அமெரிக்க
b) இந்தியா
c) சீனா
d) ஜப்பான்
விளக்கம்: இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டா. இச்செயற்கைக்கோள்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் வானொலி ஒலிபரப்பு, விவசாய விளைச்சல், கனிம வளங்கள், வானிலை முன்னறிவிப்பு, பூமியில் இடங்களைக் கண்டறிதல் ஆகியவற்றிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
57) செயற்கைக்கோள்களின் பயன்கள் யாவை?
a) தொலைக்காட்சி ஒளிபரப்பு , வானொலி ஒலிபரப்பு,
b) விவசாய விளைச்சல், கனிம வளங்கள்
c) வானிலை முன்னறிவிப்பு, பூமியில் இடங்களைக் கண்டறிதல்
d) இவை அனைத்தும்
விளக்கம்: இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டா. இச்செயற்கைக்கோள்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் வானொலி ஒலிபரப்பு, விவசாய விளைச்சல், கனிம வளங்கள், வானிலை முன்னறிவிப்பு, பூமியில் இடங்களைக் கண்டறிதல் ஆகியவற்றிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
58) பின்வருவற்றுள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை தேர்வு செய்க
a) நாசா
b) இஸ்ரோ
c) ரோஸ்கோஸ்மாஸ்
d) ஜாக்ஸா
விளக்கம்: இந்திய விண்வெளி ஆய்வு மையம் இந்திய அரசின் முதன்மையான தேசிய விண்வெளி முகம ஆகும். பெங்களூரில் தலைமைப் பணியகம் கொண்ட இஸ்ரோ 1969 இல் உருவாக்கப்பட்டது. தற்போது 16, 000 ஊழியர்கள் இஸ்ரோவில் பணியாற்றுகின்றனர். ஏறத்தாழ 41 பில்லியன் ரூபாய் செலவில் செயலாற்றப்படுகிறது
59) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைமையகம் எங்கு அமைந்துள்ளது
a) பெங்களூர்
b) கல்கத்தா
c) மும்பை
d) சென்னை
விளக்கம்: இந்திய விண்வெளி ஆய்வு மையம் இந்திய அரசின் முதன்மையான தேசிய விண்வெளி முகம ஆகும். பெங்களூரில் தலைமைப் பணியகம் கொண்ட இஸ்ரோ 1969 இல் உருவாக்கப்பட்டது. தற்போது 16,000 ஊழியர்கள் இஸ்ரோவில் பணியாற்றுகின்றனர். ஏறத்தாழ 41 பில்லியன் ரூபாய் செலவில் செயலாற்றப்படுகிறது
60) விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசிய குழு (INCOSPAR) என்னும் நிறுவனத்தின் நிறுவனர் யார்?
a) விக்ரம் சாராபாய்
b) அப்துல் கலாம்
c) ரோகினி
d) பிருத்விராஜ்
விளக்கம்: இது 1962ஆம் ஆண்டு விஞ்ஞானி விக்ரம் சாராபாயால் வடிவமைக்கப்பட்ட விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசிய குழு (INCOSPAR) என்னும் நிறுவனத்தின் மாற்றியமாக 1969இல் உருவாக்கப்பட்டது. இவ்வாறு இந்தியாவின் விண்வெளி நடவடிக்கைகளுக்கான நிறுவனமாக இஸ்ரோ நிறுவனமயமாக்கப்பட்டது
61) இஸ்ரோ இந்தியாவில் உருவான ஆண்டு
a) 1967
b) 1968
c) 1969
d) 1970
விளக்கம்: இது 1962ஆம் ஆண்டு விஞ்ஞானி விக்ரம் சாராபாயால் வடிவமைக்கப்பட்ட விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசிய குழு (INCOSPAR) என்னும் நிறுவனத்தின் மாற்றியமாக 1969இல் உருவாக்கப்பட்டது. இவ்வாறு இந்தியாவின் விண்வெளி நடவடிக்கைகளுக்கான நிறுவனமாக இஸ்ரோ நிறுவனமயமாக்கப்பட்டது.
62) பின்வரும் வாக்கியங்களை கவனி
I. இஸ்ரோ விண்வெளித்துறையால் நிருவகிக்கப்படுகிறது
II. அறிக்கையை குடியரசு தலைவரிடம் சமர்ப்பிக்கின்றது
a) I மற்றும் II சரி
b) I சரி II தவறு
c) II சரி
d) I மற்றும் II தவறு
விளக்கம்: இது 1962ஆம் ஆண்டு விஞ்ஞானி விக்ரம் சாராபாயால் வடிவமைக்கப்பட்ட விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசிய குழு (INCOSPAR) என்னும் நிறுவனத்தின் மாற்றியமாக 1969இல் உருவாக்கப்பட்டது. இவ்வாறு இந்தியாவின் விண்வெளி நடவடிக்கைகளுக்கான நிறுவனமாக இஸ்ரோ நிறுவனமயமாக்கப்பட்டது. விண்வெளித்துறையால் நிருவகிக்கப்பட்டு, இந்தியப் பிரதமருக்கு அறிக்கை சமர்ப்பிக்கிறது.
63) இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆர்யபட்டாவை விண்ணில் செலுத்திய நாடு
a) ரஷ்யா
b) சீனா
c) ஜப்பான்
d) கொரியா
விளக்கம்: இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆர்யபட்டாவை இஸ்ரோ கட்டமைத்தது ரஷ்யா விண்ணில் செலுத்தியது.
64) இந்தியாவால் உருவாக்கப்பட்டSLV-3 என்னும் ஏவுகணை வாகனம் மூலம் சுற்றுப்பாதையில் ஏவப்பட்ட முதல் துணைக்கோள் எது?
a) ரோகிணி
b) ஆர்யாபட்டா
c) சந்ரயான்
d) அக்னி
விளக்கம்: இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆர்யபட்டாவை இஸ்ரோ கட்டமைத்தது. 1980 இல் இந்தியாவால் உருவாக்கப்பட்ட SLV-3 என்னும் ஏவுகணை வாகனம் மூலம் சுற்றுப்பாதையில் ஏவப்பட்ட முதல் துணைக்கோள் என்னும் பெருமை ரோஹிணி.
65) பின் வரும் வாக்கியங்களை கவனி
I. துருவசெயற்கைக்கோள் வெளியீட்டு வாகனம்(பி. எஸ். எல். வி) செயற்கைக் கோள்களைப் புவிசார் வட்டப் பாதையில் வைப்பதற்காக உருவாக்கப்பட்டது.
II. செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் (ஜி. எஸ். எல். வி) செயற்கைக்கோள்களை துருவச்சுற்றுப்பாதையில் செலுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.
a) I மற்றும் II சரி
b) I சரி
c) II சரி
d) I மற்றும் II தவறு
விளக்கம்: துருவ செயற்கைக்கோள் வெளியீட்டு வாகனம் (பி. எஸ். எல். வி) செயற்கைக்கோள்களைத் துருவச் சுற்றுப்பாதையில் செலுத்துவதற்காக மற்றும் ஜியோசின்க்ரோனஸ் செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் (ஜி. எஸ். எல். வி) செயற்கைக்கோள்களை புவிசார் வட்டப் பாதையில் வைப்பதற்காக உருவாக்கப்பட்டது.
66) பின்வருவனவற்றுள் எது இஸ்ரோவின் துணைக்கோள் வழிச் செலுத்துதல் அமைப்புகள்
a) GAGAN
b) IRNSS
c) PSLV
d) a மற்றும் b சரி
விளக்கம்: ராக்கெட்டுகள் ஏராளமான தொலை தொடர்பு செயற்கைக்கோள்கள் மற்றும் பூமி கண்காணிப்பு செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவின. துணைக்கோள் வழிச் செலுத்துதல் அமைப்புகளான GAGAN மற்றும் IRNSS போன்றவை நிறுவப்பட்டன.
67) ஜனவரி 2014 இல், இஸ்ரோ உள்நாட்டு க்ரையோஜனிக் இயந்திரமான GSLV-D5 ன் உதவியுடன் எதை விண்ணில் செலுத்தினார்கள்?
a) GSAT 12
b) GSAT 13
c) GSAT 14
d) GSAT 15
விளக்கம்: ஜனவரி 2014 இல், இஸ்ரோ உள்நாட்டு க்ரையோஜனிக் இயந்திரமான GSLV-D5 ன் உதவியுடன் GSAT-14 ஐ நிறுவியது.
68) பின் வரும் வாக்கியங்களை கவனி.
I. 2013 நவம்பர் 5 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தைச் சுற்றும் மங்கள்யான் என்னும் துணைக்கோளை ஏவியது.
II. முயற்சியிலேயே செவ்வாயை அடைந்த நாடு என்னும் பெருமையை இந்தியாவிற்கு பெற்று தந்தது.
III. செவ்வாயின் சுற்றுப்பாதையைத் தொடும் உலகின் நான்காவது விண்வெளி நிறுவனம் மற்றும் ஆசியாவின் முதல் விண்வெளி நிறுவனம் என்னும் பெயரையும் இஸ்ரோவிற்குப் பெற்றுத் தந்தது.
a) I மற்றும் II சரி
b) I, II, III தவறு
c) I, II, III சரி
d) I தவறு
69) இஸ்ரோ 2017 பிப்ரவரி 15 அன்று ஒரே ஏவுகணையில் (PSLV-C37) எத்தனை துணைக்கோள்களை விண்ணில் செலுத்தியது?
a) 100
b) 101
c) 108
d) 104
விளக்கம்: 2016 ஜூன் 18 அன்று இஸ்ரோ ஒரே சுமைதாங்கியில் 20 துணைக்கோள்களை விண்ணிற்கு அனுப்பி சாதனை படைத்தது. 2017 பிப்ரவரி 15 அன்று ஒரே ஏவுகணையில் (PSLV-C37) 104 துணைக்கோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை புரிந்தது.
70) பின் வரும் வாக்கியங்களை கவனி
I. சுப்ரமணியன் சந்திரசேகர் (19 அக்டோபர் 1910 – 21 ஆகஸ்ட் 1995) அமெரிக்க விண்வெளி இயற்பியலாளர் ஆவார்.
II. 1983 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கும் வில்லியம் ஏ ஃபவ்லர் என்பவருக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டது.
a) I மற்றும் II சரி
b) I, II தவறு
c) I சரி
d) I தவறு II சரி
விளக்கம்: சுப்ரமணியன் சந்திரசேகர் (19 அக்டோபர் 1910 – 21 ஆகஸ்ட் 1995) அமெரிக்க விண்வெளி இயற்பியலாளர் ஆவார். 1983 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கும் வில்லியம் ஏ ஃபவ்லர் என்பவருக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டது. இவரது விண்மீன் பரிணாம வளர்ச்சியின் கணித ரீதியான செயல்பாடுகள் நட்சத்திரங்கள் மற்றும் கருந்துளைகளின் பரிணாமப் படிகளின் கோட்பாட்டு மாதிரிகள் பலவற்றை அளித்தது.
71) இஸ்ரோ அதனது மிகக்கனமான ஏவுகணையான ஜியோசின்க்ரோனஸ் செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் (GSLV-Mk III) மூலம் எந்த துணைக்கோளினை 2017 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி வட்டப்பாதையில் நிறுவியது.
a) GSAT 16
b) GSAT 17
c) GSAT 18
d) GSAT 19
விளக்கம்: 2017 பிப்ரவரி 15 அன்று ஒரே ஏவுகணையில் (PSLV-C37) 104 துணைக்கோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை புரிந்தது. இஸ்ரோ அதனது மிகக்கனமான ஏவுகணையான ஜியோசின்க்ரோனஸ் செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் (GSLV-Mk III) மூலம் GSAT-19 என்னும் துணைக்கோளினை 2017 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி வட்டப்பாதையில் நிறுவியது. இதன் மூலம் நான்கு டன் கடினமான துணைக்கோள்களை நிறுவும் நிறுவனமாக இஸ்ரோ மாறியது.
72) 1989 இல் கலீலியோ கலிலியின் பெயர் எந்த கிரகம் சார்ந்த விண்வெளி நுண்ணாய்வுக்கலனுக்கு சூட்டப்பட்டது?
a) வியாழன்
b) சனி
c) வெள்ளி
d) பூமி
விளக்கம்: 1989 இல் கலீலியோ கலிலி வியாழன் சார்ந்த விண்வெளி நுண்ணாய்வுக் கலனுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டு நினைவு கூரப்பட்டார். இதன் 14 வருட விண்வெளிப்பயணத்தில் கல்வி நுண்ணாய்வுக்கலனும் அதிலிருந்து பிரிந்து செல்லக்கூடிய சிறுகலனும் இணைந்து வியாழன் கஸ்ப்ரா என்னும் துணைக்கோள், ஷூமேக்கர் லெவி-9 என்னும் வால்நட்சத்திரத்தினால் வியாழனில் உள்ள தாக்கம், யூரோப்பா, காலிஸ்டோ, இயோ மற்றும் அமல்தியா போன்றவை ஆகும். வியாழனின் ஒரு நிலவுடன் கலிலியோ கலப்பதனைத் தடுப்பதற்காக இதன் பணியின் முடிவில் வியாழனிலேயே சிதைக்கப்பட்டது.
73) ஏ.பிஜே அவர்களே உருவாக்கி இயக்கிய விமானத்தின் பெயர்?
a) நந்தி
b) அக்னி
c) பிரித்வி
d) நாக்
விளக்கம்: கலாம் எம். ஐ. டி இல் படித்து முடித்து உள்நாட்டுத் தொழில்நுட்ப அறிஞர்களின் துணையுடன் உள்நாட்டிலேயே கிடைத்த பொருள்களைக் கொண்டு ‘நந்தி’ என்ற விமானத்தை வடிவமைத்தார் அதனைத் தானே, இயக்கியும் காட்டினார்.
74) இந்திய இராணுவெத்தில் ஏ. பி. ஜே அவர்களின் மேற்பார்வையில் உருவான ஏவுகணைகள் எவை?
a) அக்னி
b) பிரித்வி, திரிசூல்
c) நாக்
d) இவை அனைத்தும்
விளக்கம்: இந்திய இராணுவெத்தில உள்ள திரிசூல (Thrilshul) , அக்னி (Agni) , பிருத்வி (Prithvi) நாக் (Nag) மற்றும் ஆகாஷ் (Akash) ஆகிய ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்ட போது அதன் திட்ட இயக்குனராகவும் செயல்பட்டார்.
75) செயற்கை துணைக்கோள் ரோகினி-1 விண்ணில் செலுத்த எந்த செயற்கைக்கோள் செலுத்தியை பயன்படுத்தினார்கள்?
a) SLV-3
b) PSLV 1
c) GSLV 2
d) PSLV 4
விளக்கம்: கலாம் அவர்கள், 1980 ஆம் ஆணடு இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் செலுத்தியான SLV 3 என்ற செயற்கைக்கோள் செலுத்தியை பயன்படுத்தி ரோகினி-I என்ற துணக்கோளை வெற்றிகரமாக விணணில் செலுத்தினார்.
76) 1999 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணுவெடிப்பு சோதனையின் பெயர் என்ன?
a) ஆப்ரேசன் சக்தி
b) ஆப்ரேசன்நீலம்
c) ஆப்ரேசன் சிவப்பு
d) ஆப்ரேசன் இந்திரா
விளக்கம்: சக்தி நடவடிக்கை அல்லது பொக்ரான் – II என்று இந்தியா பொக்ரான் சோதனை களத்தில் நடத்திய ஐந்து அணுகுண்டு சோதனை வெடிப்புகள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் மூன்று மே 11, 1998ஆம் ஆண்டிலும் இரண்டு அதே ஆண்டு மே 13 நாளிலும் வெடிக்கப்பட்டது.
77) பின் வரும் வாக்கியங்களை கவனி
I. இந்தியாவில் முதல் அணுவெடிப்பு சோதனை 1974 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது (ஸ்மைலிங் புத்தா)
II. கலாம் அவர்கள் இச்சோதனையின் தலைமை பொறுப்பை வகித்தார்
a) I மற்றும் II சரி
b) I, II தவறு
c) I சரி II தவறு
d) I தவறு II சரி
விளக்கம்: இந்தியாவில முதன்முறையாக 1974 ஆம் ஆண்டு “சிரிக்கும் புத்தா“ என்ற திட்டத்தில அணு்வெடிப்புச் சோதனை நிகழ்ந்தது. இந்த நிகழ்வின்போது அறுபது விண்வெளி பொறியியல் அறிஞர்களின் பங்களிப்பு இருந்தது. இதில் கலாமும் ஒரு உறுப்பினர் ஆவார்.
78) ஏ. பி. ஜே அவர்களுக்கு இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா விருது, மத்திய அரசால் வழங்கப்பட்ட ஆண்டு?
a) 1997
b) 2002
c) 1979
d) 2000
விளக்கம்: இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா” விருது, மத்திய அரசால் இவருக்கு 1997 இல் வழங்கப்பட்டது. மேலும், இந்தியாவில் 2002 முதல் 2007 ஆம் ஆணடு அவர் குடியரசுத் தலைவராகவும் இருந்தார்.
79) ஒரு கோளைச் சுற்றி நிலையான வட்டப்பாதையில் சுற்றும் பொருள்
a) துணைக்கோள்
b) சிறுகோள்கள்
c) விண்கற்கள்
d) நட்சத்திரம்
விளக்கம்: ஒரு கோளைச் சுற்றி நிலையான வட்டப்பாதையில் சுற்றும் பொருள் ஒரு துணைக்கோள் என்று அழைக்கப்படுகிறது. துணைக் கோள்கள் – இயற்கை மற்றும் செயற்கைக் கோள்கள் என இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
7th Science Lesson 14 Questions in Tamil
14] பலபடி வேதியியல்
1. பாலிமர் என்ற சொல் எந்த மொழியிலிருந்து பிறந்தது?
A) பாரசீகம்
B) கிரேக்கம்
C) அராபிக்
D) சீனம்
விளக்கம்: பலபடி என்ற சொல் ஆங்கிலத்தில் பாலிமர் என்று அழைக்கப்படுகிறது. கிரேக்க மொழியில் இருந்து பிறந்த சொல்லாகும். பாலிமர் என்ற சொல்லை இரண்டாகப் பிரிக்க, பாலி (poly) என்பது பல என்றும். (mer) என்பதை சிறிய அடிப்படை அலகு என்றும் பொருள்படும். பல எண்ணிக்கையிலான ஒற்றைப்படிகள் (monopolymer) சக பிணைப்புகளால் இணைந்து உருவாக்கப்படும் நீண்ட சங்கிலித் தொடர் அமைப்பே பலபடி (Polymer) எனப்படும். பலபடி உருவாக்கும் முறைக்கு பலபடியாக்கல் என்று பெயர்.
2. PVC எனப்படும் நெகிழியின் விரிவாக்கம்
A) Poly vinyl carbon
B) Poly vinyl chloride
C) Poly vinyl carbonate
D) மேற்கண்ட எதுவும் இல்லை
விளக்கம்: பாலிவினைல் குளோரைடு என்பது பொதுவாக நெகிழி எனப்படும். இது நீர்குழாய்களாக பயன்படுகிறது.
3. இயற்கை பலபடிக்கு எடுத்துக்காட்டு
A) புரதங்கள்
B) கார்போஹைட்ரேட்
C) மரம் மற்றும் காகிதத்தில் உள்ள செல்லுலோஸ்
D) இவை அனைத்தும்
விளக்கம்: உயிரினங்களின் உடல்களில் காணப்படும் புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் மரம் மற்றும் செல்லுலோஸ் இயற்கை பலபடிகள் ஆகும். வாழ்க்கை செயல்முறைக்கு தேவையான கட்டமைப்பு மற்றும் மூலக்கூறுகளை வழங்குவதில் இயற்கை பலபடிகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
4. அமினோ அமிலங்கள் என்பது எத்தனை வகையான ஒற்றைப்படிகளால் ஆனது?
A) 23
B) 21
C) 20
D) 18
விளக்கம்: அமினோஅமிலங்கள் என்பது இருபது வகையான ஒற்றைப்படிகளால் ஆன புரதங்கள் என்ற பலபடிகளாகும். ஒற்றை படிகள் பல வகைகளில் சேர்க்கை அடைந்து பல வகையான புரதபலபடிகளை உருவாக்குகின்றன.
5. பாலிதீன் என்ன வகையான பலபடி
A) பாலி புரோப்பிலின்
B) வெப்ப இளகு அல்லது தெர்மோ பிளாஸ்டிக்
C) டெரித்தீலீன்
D) இதில் எதுவும் இல்லை
விளக்கம்: எந்தவொரு ரசாயன மாற்றத்திற்கும் ஆளாகாமல் தெர்மோ பிளாஸ்டிக் பொருட்கள் மீண்டும் சூடாக்கும் போது உருகுதல், குளிர்விக்கும் போது கடினமாகுதல் எனும் செயலுக்கு ஆளாகிறது.
6. கூற்று 1: தாவரங்களில் காணப்படும் செல்லுலோஸ் கைட்டின், லிக்னின் போன்றவை கார்போஹைட்ரேட் பலபடி ஆகும்.
கூற்று 2 : நண்டுகள் சிலந்திகள் போன்ற பூச்சிகளின் புற எலும்பு கூடுகளிலும் காளான்கள் போன்ற பூஞ்சைகளின் செல்சுவர்களிலும் காணப்படுவது லிக்னின் ஆகும்.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: தாவரங்களில் காணப்படும் செல்லுலோஸ் கைட்டின், லிக்னின் போன்றவை கார்போஹைட்ரேட் பலபடிக்கு எடுத்துக்காட்டு ஆகும். நண்டுகள் சிலந்திகள் போன்ற பூச்சிகளின் புற எலும்பு கூடுகளிலும் காளான்கள் போன்ற பூஞ்சைகளின் செல்சுவர்களிலும் காணப்படுவது கைட்டின் ஆகும்.
7. பாலிதீன் (PE), PVC இன் வேதியியல் வாய்ப்பாடு
A) (C4H2)n, (C3H2 Cl)n
B) (C2H4 Cl)n, (C2H3 Cl)n
C) (C2H3)n, (C2H2 Cl)n
D) (C2H4)n, (C2H3 Cl)n
விளக்கம்: பாலிஎதிலீன் (பாலிதீன்) எத்திலீன் (அல்லது எத்தீன்) மோனோமரின் பாலிமரைசேஷனில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பாலிஎதிலீன் வேதியியல் சூத்திரம் (C2H4)n
PVC வேதியியல் சூத்திரம்
8. புரதப்பலபடிக்கு எடுத்துக்காட்டு
A) விலங்குகளின் உரோமங்கள்
B) இறகுகள்
C) விரல் நகம்
D) இவை அனைத்தும்
விளக்கம்: ஒற்றைப்படிகள் பல வகைகளில் சேர்க்கை அடைந்து புரத பல படிகளை உருவாக்குகின்றன டி.என்.ஏ, நொதிகள், இறகுகள், விரல் நகங்கள், பட்டு, தோல் விலங்குகளின் உரோமங்கள் போன்றவை புரத பலபடிக்கு எடுத்துக்காட்டு ஆகும்
9. நெகிழிகள் எனும் செயற்கை பலபடி எதிலிருந்து உருவாக்கப்படுகிறது
A) பெட்ரோலிய எண்ணெய்
B) பெட்ரோலிய வாயுக்கள்
C) A மற்றும் B
D) இரண்டும் இல்லை
விளக்கம்: பெட்ரோலிய எண்ணெய் மற்றும் பெட்ரோலிய வாயுக்களிலிருந்து மனிதனால் உருவாக்கப்பட்ட நெகிழிகள் செயற்கை பலபடிகளாகும்.
10. பெட்ரோல் தயாரிக்கும் போது கிடைக்கும் துணை விளைபொருள்
A) எத்திலீன்
B) புரோபைலீன்
C) A மற்றும் B
D) இரண்டும் இல்லை
விளக்கம்: பெட்ரோலிய எண்ணெய் மற்றும் பெட்ரோலிய வாயுக்களை பகுதி பிரிப்பு செய்து பெட்ரோல் தயாரிக்கும் போது எத்திலீன் புரோபைலீன் போன்ற ஒற்றை படிகள் துணை விளைபொருட்களாக கிடைக்கிறது.
11. செயற்கை இழைகளுக்கு எடுத்துக்காட்டு
A) பாலியஸ்டர்
B) நைலான்
C) அக்ரலிக்
D) இவை அனைத்தும்
விளக்கம்: பெட்ரோலியத்திலிருந்து பெறப்பட்ட மூலப்பொருள்களை கொண்டு உருவாக்கப்படும் இழைகளுக்கு செயற்கை இழைகள் என்று பெயர். பருத்தி, தேங்காய் நார், முடி, கம்பளி போன்றவை இயற்கை இழைகளாகும்.
12. இயற்கை பட்டு எத்தனை வகைகளில் கிடைக்கிறது?
A) 2
B) 4
C) 3
D) 5
விளக்கம்: குறிப்பிட்ட சிலவகை பட்டுப்புழுக்களின் கூடுகளை கொதிக்க வைத்து பெறப்படும் இயற்கை இழைகள் பட்டு ஆகும் மல்பெரி பட்டு டஸ்ஸர் பட்டு முகா பட்டு எரி பட்டு என நான்கு வகைகளில் இயற்கை பட்டு கிடைக்கிறது.
13. தரைவிரிப்புகள், பாராசூட்டுகள் தயாரிக்க பயன்படும் பட்டு
A) மல்பெரி பட்டு
B) டஸ்ஸர் பட்டு
C) முகா பட்டு
D) எரி பட்டு
விளக்கம்: உலகெங்கிலும் உற்பத்தியாகும் மல்பெரி வகை பெருமளவு இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது இவை உடைகளாகவும் பாராசூட்டுகளாகவும் தரைவிரிப்புகளாகவும் பயன்படும்.
14. முதல் செயற்கை பட்டு
A) பிளாக்ஸ்
B) நைலான்
C) ரேயான்
D) விஸ்கோஸ்
விளக்கம்: 19 ஆம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் ரேயான் எனும் முதல் செயற்கை பட்டினை உருவாக்கினார்.
15. கூற்று 1: மனிதனால் தயாரிக்கப்பட்ட ரேயானை முழுமையான செயற்கை இழை என்று கூற இயலாது. ரேயான் : ஓர் பகுதியான – செயற்கை இழை
கூற்று 2: மரக்கூழிலிருந்து பெறப்பட்ட செல்லுலோஸினால் ரேயான் தயாரிக்கப்படுகிறது.
A) கூற்று 1 சரி கூற்று 2 தவறு
B) இரண்டும் சரி மேலும் கூற்று 2 கூற்று 1-க்கு சரியான விளக்கமாகும்.
C) இரண்டும் தவறு
D) கூற்று 1 தவறு கூற்று 2 சரி.
விளக்கம்: மரம் அல்லது மூங்கிலின் கூழிலிருந்து பெறப்பட்ட செல்லுலோஸில் வேதி பொருட்கள் கலந்து ரேயான் பெறப்படுகிறது.
16. ரேயான் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள்
A) NaOH, CS2
B) CS2, CO2
C) NaOH, CO2
D) KOH, CS2
விளக்கம்: மரக்கூழுடன் சோடியம் ஹைட்ராக்ஸைடு சேர்க்கப்பட்டு பின்னர் கார்பன் டை சல்பைடு சேர்க்கப்படுகிறது. சேர்க்கப்பட்ட வேதிப் பொருள்களுடன் செல்லுலோஸ் கரைந்து விஸ்கோஸ் என்ற திரவத்தினை உருவாக்குகிறது. திரவ விஸ்கோஸினை ஓர் ஸ்பின்னரெட்டின் (பக்க நுண்ணிய துளைகள் கொண்ட உலோகத்தட்டுகள் பொருந்திய ஒரு சாதனம்) வழியே அழுத்தி, நீர்த்த கந்தக அமிலத்தினுள் செலுத்தும் பொழுது பட்டு போன்ற இழைகள் கிடைக்கின்றன.
17. இந்தியாவில் ரேயான் தொழிற்சாலையை முதலில் நிறுவிய மாநிலம்
A) தமிழ்நாடு
B) மகாராஷ்டிரா
C) கேரளா
D) ஒடிசா
விளக்கம்: 1946 –இல் இந்தியாவில் கேரள மாநிலத்தில் முதல் ரேயான் தொழிற்சாலை நிறுவப்பட்டது.
18. கூற்று 1: பருத்தி இழைகளில் இருந்து சிலவகை ரேயான்கள் தயாரிக்கப்படுகின்றன.
கூற்று 2: ரேயானை பருத்தியுடன் கலந்து போர்வையாகவும், கம்பளியுடன் கலந்து விரிப்பாகவும் பயன்படுத்துகிறோம்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: பருத்திப்பூக்களில் உள்ள விதைகளை நீக்கும் பொழுது, பருத்திக்கொட்டைகளில் ஒட்டியிருக்கும் குட்டையான பருத்தி இழைகளில் இருந்தும் சிலவகை ரேயான்கள் தயாரிக்கப்படுகின்றன. பட்டினை விட விலை மலிவாகவும், பட்டு இழை போன்றே நெய்யப்பட்டும், பலவகை வண்ணச்சாயங்களால் நிறமேற்றப்பட்டும் ரேயான் தயாரிக்கப்படுகிறது. ரேயானை பருத்தியுடன் கலந்து போர்வையாகவும், கம்பளியுடன் கலந்து விரிப்பாகவும் பயன்படுத்துகிறோம். மேலும், சுகாதாரப் பொருள்களான பயபர்களாகவும், காயங்களுக்கு மருந்திடும் வலைத் துணிகளாகவும் பே ண்டேஜ் துணிகளாகவும் ரேயான் பயன்படுகிறது.
19. இரண்டாம் உலகப் போரின் பொழுது, பாரசூட்டுகள் மற்றும் கயிறு போன்ற பொருள்களைத் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது.
A) ரேயான்
B) நைலான்
C) மல்பெரி பட்டு
D) இவை எதுவும் இல்லை
விளக்கம்: முதன்முதலில் முழுமையாகப் பதப்படுத்தப்பட்ட செயற்கை இழை நைலானாகும். இரண்டாம் உலகப் போரின் பொழுது, பாரசூட்டுகள் மற்றும் கயிறு போன்ற பொருள்களைத் தயாரிக்க நைலான் பயன்படுத்தப்பட்டது. ஆடை தயாரிப்புகளில், இயற்கைப் பட்டின் பதிலியாக ரேயான் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது, இன்று நாம் பயன்படுத்தும் செயற்கை இழைகளுள் அதிகம் பயன்படும் இழையாக நைலான் விளங்குகிறது.
20. நைலான் ஆடை தொழிற்சாலைகளில் அதிகம் பயன்படுத்தப்பட காரணம்
A) வலுத்தன்மை நீட்சித்தன்மை பளபளக்கும் தன்மை
B) எடை குறைவு, தோய்ப்பதற்கு எளிதானது
C) A மற்றும் B
D) இவை எதுவும் இல்லை
விளக்கம்: நைலான் இழை வலுவாகவும், நீட்சித்தன்மை கொண்டதாகவும், எடை குறைவாகவும் உள்ளது. பளபளக்கும் தன்மை கொண்டதாகவும், தோய்ப்பதற்கு எளிதானதாகவும் இருப்பதால் ஆடைத் தொழிற்சாலைகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
21. தவறானதை தெரிவு செய்
A) பல்துலக்கிகள், மலை ஏறத் தேவையான கயிறுகள் தயாரிப்பில் நைலான் பயன்படுகிறது
B) இரும்புக் கம்பியைக் காட்டிலும் நைலான் இழை வலிமையானது.
C) நைலான் என்ற ஒற்றைப்படி இழையானது பாலிஅமைடுகள் என்ற வேதித்தொகுப்புகளால் ஆனது
A) ஹெக்ஸாமெத்திலீன்–டை – அமின் மற்றும் அடிபிக் அமிலங்கள் இணைந்து உருவாகும் பொருள் பாலி அமைடுகள்.
விளக்கம்: காலுறைகள், கயிறுகள், கூடாரங்கள், பல்துலக்கிகள், கார்களில் இருக்கையின் பட்டைகள், தூங்கத் தேவைப்படும் தலையணை போன்ற பைகள், திரைச்சீலைகள் போன்ற பலவகையான பொருள்கள் நைலானால் ஆனவை. ஓர் இரும்புக் கம்பியைக் காட்டிலும் ஒரு நைலான் இழையானது வலிமையாக இருப்பதால், பாரசூட்டுகள் தயாரிப்பிலும், மலை ஏறத் தேவையான கயிறுகள் தயாரிப்பிலும் நைலான்கள் பயன்படுகின்றன.
நைலான் என்ற பலபடி இழையானது பாலிஅமைடுகள் என்ற வேதித்தொகுப்புகளால் ஆனது. ஹெக்ஸாமெத்திலீன்–டை – அமின் மற்றும் அடிபிக் அமிலங்கள் இணைந்து உருவாகும் பொருள் பாலி அமைடுகள். திண்ம சில்லுகளாக இந்த பாலிஅமைடுகளை உருக்கி, வெப்பமாக்கப்பட்ட ஸ்பின்னரெட்டின் மிக நுண்ணிய துளைகளில் அழுத்தும் பொழுது நைலான் உருவாகிறது.
22. பொருத்துக
a) பேக்லைட் 1] வெப்பத்தால் இறுகும் நெகிழி
b) PVC 2] வெப்பத்தால் இளகும் நெகிழி
c) டெஃப்லான் 3] பட்டு
d) கக்கூன் 4] சமையல்கலன்கள்
a b c d
A) 1 2 3 4
B) 1 2 4 3
C) 2 1 3 4
D) 2 1 4 3
23. இழுவிசை வலிமையின் அடிப்படையில் வரிசைப்படுத்துக
A) பட்டு, பருத்தி, கம்பளி, பாலியஸ்டர், நைலான்
B) நைலான், பட்டு, பருத்தி, கம்பளி, பாலியஸ்டர்
C) கம்பளி, பட்டு, பருத்தி, நைலான், பாலியஸ்டர்
D) பருத்தி, பட்டு, கம்பளி, பாலியஸ்டர், நைலான்
விளக்கம்: நைலான் பாலியஸ்டர் போன்ற செயற்கை இழைகள் அதிக இழுவிசை வலிமையை கொண்டது.
24. பொருத்துக:
a) பாலிகாட் (polycot) 1] பாலியெஸ்டர் மற்றும் கம்பளியின் கலவை
b) பாலிவுல் (polywool) 2] டெரிலீன் மற்றும் பருத்தியின் கலவை
c) டெரிகாட் (terrycot) 3] பாலியெஸ்டர் மற்றும் பருத்தியின் கலவை
d) டெரிவுல் (terrywool) 4] டெரிலீன் மற்றும் கம்பளியின் கலவை
a b c d
A) 3 1 2 4
B) 1 3 4 2
C) 3 1 4 2
D) 1 2 4 3
விளக்கம்: பாலியெஸ்டர் மற்றொரு செயற்கை இழையாகும். இதனை மிக மெல்லிய இழைகளாக இழுத்து, மற்ற நூல்களை நெய்வது போல், நெய்யவும் முடியும். பாலிகாட், (polycot) பாலிவுல், (polywool) டெரிகாட் போன்ற பல பெயர்களால் பாலியெஸ்டர் விற்பனை செய்யப்படுகிறது. பாலிகாட் என்பது பாலியெஸ்டர் மற்றும் பருத்தியின் கலவை, பாலிவுல் என்பது பாலியெஸ்டர் மற்றும் கம்பளியின் கலவை.
25. PET பாலியெஸ்டர் விரிவாக்கம்
A) பாலிஎத்திலின் டெரிப்தாலேட்
B) பாலிஎத்திலின் டெரிகாட்
C) பாலிஎத்திலின் டெரிலீன்
D) பாலிகாட் டெரிப்தாலேட்
விளக்கம்: PET (பாலிஎத்திலின் டெரிப்தாலேட் – Poly Ethylene Terephthalate) என்பது மிகப் பிரபலமான பாலியெஸ்டர் வகையாகும். PET -யைக் கொண்டு நீர் மற்றும் சோடா பாட்டில்கள், கலன்கள், படங்கள், இழைகள் மற்றும் இன்னபிற பயனுள்ள பொருள்களைத் தயாரிக்கலாம். இந்த இழைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் துணிகள் எளிதில் சுருங்குவதில்லை.
26. நெகிழிகளின் தயாரிப்பின் பொழுது கிடைக்கும் துணைப் பொருள்களைக் கொண்டு உருவாக்கப்படும் ஆடைகள்?
A) பாலியெஸ்டர்
B) அக்ரிலிக்
C) நைலான்
D) பாலிகாட்
விளக்கம்: நெகிழிகளின் தயாரிப்பின் பொழுது கிடைக்கும் துணைப் பொருள்களைக் கொண்டு உருவாக்கப்படும் அக்ரிலிக் ஆடைகள், கம்ப ளி ஆடைகளைக் காட்டிலும் விலை மலிவானவை . பலவித வண்ணங்களிலும் ஆடைகள் விற்பனையாகின்றன.
27. சமைக்கும் பொழுதும் ஆய்வகங்களில் பணியாற்றும் பொழுதும், பாலியெஸ்டர் அணிவதை விடுத்து பருத்தி ஆடைகள் அணிவது நல்லது ஏன் ?
A) வியர்வையை எளிதில் உறிஞ்சும்
B) தீப்பற்றினால் பாதிப்பு அதிகம் ஏற்படும்
C) பாலியஸ்டர் பளபளப்பு அழகு தரும்
D) பருத்தி அணிவது உடலுக்கு நல்லது
விளக்கம்: செயற்கை இழையாலான ஆடை அணிந்திருக்கும் பொழுது துணி தீப்பற்றினால் அந்த ஆடை உருகி உடம்புடன் ஒட்டிக்கொண் டு கடுமையான தீக்காயங்களை ஏற்படுத்துகிறது.
28. பாலியெஸ்டர் போன்ற செயற்கை இழைகள் சிறப்பம்சம்
1) சுருங்குவதும் நிறம் மங்குவதும் இல்லை .
2) செயற்கை இழைகள் அதிக வலிமை கொண்டதாக இருக்கின்றன
3) வெப்பத்தைத் தாங்கும் திறனற்றவை .
4) குறைந்த அளவே நீரை உறிஞ்சும்
A) 1 மற்றும் 2
B) 1, 2, மற்றும் 3
C) 3 மற்றும் 4
D) இவை அனைத்தும்
விளக்கம்: செயற்கை இழை ஆடைகளின் சிறப்பு என்னவென்றால் அவை சுருங்குவதும் இல்லை, நிறம் மங்குவதும் இல்லை . எனவே, பருத்தியாலான ஆடைகளை விட அதிக வருடங்களுக்கு அதே பொலிவுடன் காட்சியளிக்கின்றன. பாலியெஸ்டர் போன்ற செயற்கை இழைகளின் ஒரு முக்கிய குறைபாடென்பது அவை வெப்பத்தைத் தாங்கும் திறனற்றவை .மேலும் அவை எளிதில் தீப்பற்றக் கூடியவை . கோடைக் காலங்களில், செயற்கை இழைகளாலான ஆடைகளை அணிவதை விட இயற்கை இழைகளாலான ஆடைகளை அணிவதே பொருத்தமா னதாக இருக்கும். ஏனெனில், செயற்கை இழைகள் மிகக் குறைந்த அளவே நீரை உறிஞ்சுவதால், செயற்கை இழைகளாலான உடைகளை அணியும் பொழுது நமக்குப் போதுமான காற்றோட்டம் கிடைக்காததால் நாம் வெப்பமாகவும், சிரமமாகவும் உணர்கிறோம். ஆடைகளிலிருந்து மிகச் சிறுபகுதிகள் உடைந்து நுண்ணிய நெகிழிகள் துகள்களாய் உதிர்ந்து நீர் நிலைகளான ஆறுகள், ஏரிகள் மற்றும் கடல்களிலும், நிலத்திலும் மாசுபாட்டை உண்டாக்குகின்றன.
29. தவறானதை தெரிவு செய்க
A) உலோகம் கண்ணாடி மற்றும் மரம் போன்ற மூலப் பொருள்களைத் தற்பொழுது நெகிழி என்ற பொருள் பதிலீடு செய்துவிட்டது.
B) குறைந்த எடை, அதிக வலிமை, சிக்கலான பல வடிவங்களை எடுக்கும் தன்மை ஆகியன நெகிழியின் எதிர்மறையான குணங்களாகும்.
C) நெகிழிகள், புறஊதாக் கதிர்களை உட்புகவிடாததாகவும் அமைந்துள்ளன.
D) பாலிபுரோபைலீன் என்ற நெகிழினால் செய்யப்பட்ட உறிஞ்சுக்குழாயினை
நோய்த்தொற்றுநீக்கம் செய்து மீண்டும் பயன்படுத்தத் தேவையில்லை
விளக்கம்: குறைந்த எடை, அதிக வலிமை, சிக்கலான பல வடிவங்களை எடுக்கும் தன்மை ஆகியன நெகிழியின் நேர்மறையான குணங்களாகும்.
30. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி எறியப்படும் நெகிழி பொருள்கள் தடைசெய்த மாநிலங்களில் தமிழ்நாடு இந்தியாவில் எத்தனையாவது இடம்
A) 3
B) 1
C) 4
D) 2
விளக்கம்: 1 ஜனவரி 2019 முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி எறியப்படும் நெகிழி பொருள்கள் தடைஅமுலுக்கு வந்தது (சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, அரசாணை T.N.G.O.NO:84, தேதி 25/06/2018) தமிழ்நாடு இத்தடையை அமல்படுத்திய நான்காவது மாநிலமாகும்.
31. பொருத்துக
1) பார்க்கிசின் 1] (C3H6)n
2) செயற்கை பாலிமர் 2] எட்மண்ட் அலெக்சாண்டர் பார்க்ஸ்
3) பாலிபுரோபைலீன் 3] (C2H4)n
4) பாலிதீன் 4] ஜான் வெஸ்லி ஹயாட்
a b c d
A) 2 4 1 3
B) 4 2 1 3
C) 4 2 3 1
D) 3 4 2 1
விளக்கம்: ஏறத்தாழ 200 ஆண்டுகள் நெகிழி பயன்பாட்டில் உள்ளது பார்க்கிசீன் என்ற முதல் நெகிழியை உருவாக்கியவர் எட்மண்ட் அலெக்சாண்டர் பார்க்ஸ். செயற்கை பாலிமர் உருவாக்கியவர் ஜான் வெஸ்லி ஹயாட்.
32. ஆண்டுதோறும் உலகம் முழுவதும் ஒரு நிமிடத்திற்கு …… என்ற அளவில் நெகிழி பைகளை பயன்படுத்துகிறோம்
A) ஒரு ட்ரில்லியன்
B) ஒரு மில்லியன்
C) இரண்டு மில்லியன்
D) இருபது மில்லியன்
விளக்கம்: ஆண்டுதோறும் உலகம் முழுவதும் ஒரு ட்ரில்லியன் என்ற அளவில் ( ஒரு நிமிடத்திற்கு இரு மில்லியன்) நெகிழி பயன்படுத்துகிறோம். அவற்றில் 1% – 3% மட்டுமே மறுசுழற்சி ஆகிறது.
33. கூற்று 1: பேக்லைட் மற்றும் மெலமைன் இளகும் நெகிழி ஆகும்
கூற்று 2: பேக்லைட் வெப்பம் மற்றும் மின்சாரத்தை கடத்தாது.
A) கூற்று 1, 2 சரி
B) கூற்று 1, 2 தவறு
C) கூற்று 1 சரி கூற்று 2 தவறு
D) கூற்று 2 சரி கூற்று 1 தவறு
விளக்கம்: பாலிதீன் பாலி எத்திலீன் டேரிஃதாலேட் ( PET ) இளகும் நெகிழிக்கு எடுத்துக்காட்டாகும். பேக்லைட் மற்றும் மெலமைன் இறுகும் நெகிழிக்கு எடுத்துக்காட்டாகும். பேக்லைட் வெப்பம் மற்றும் மின்சாரத்தை கடத்தாது. எனவே மின் ஸ்விச், பாத்திர கைப்பிடி செய்ய பயன்படுகிறது. மெலமைன் தீயினை எரிப்பதாலும், தாங்குவதாலும் தரை ஓடுகள் மற்றும் தீயணைப்பு துணிகள் செய்ய பயன்படுகிறது.
34. இதன் பலபடி சங்கிலிகள் இணைப்பு குறுக்கு இணைப்பாகவும் வலிமையான சகப்பிணைப்பாகவும் உள்ளது
A) இறுகும் நெகிழி
B) இளகும் நெகிழி
C) PET
D) பாலிதீன்
விளக்கம்:
35. நெகிழிகளை வகைப்படுத்த உலகளாவிய அளவில் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள்
A) ரெகின்
B) பார்க்கிசீன்
C) ரெசின்
D) பார்க்ஸ்
விளக்கம்: ரெசின் குறியீடுகள் அடிப்படையில் நெகிழி வகைப்படுத்தப்படுகிறது
36. இந்த வகை நெகிழிகள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடியவை மீண்டும் பயன்படுத்தினால் ஆண்டிமணி என்ற வேதிப்பொருள் வெளியாகும்
A) PEHD
B) PETE
C) V, Vinyl
D) Themocol
விளக்கம்:
37. பாதுகாப்பான நெகிழி வகைகளில் அடங்கியது
A) அதிக அடர்த்தி கொண்ட பாலிஎதிலீன் ( PEHD )
B) குறைந்த அடர்த்தி கொண்ட பாலிஎதிலீன் ( PELD )
C) பாலி புரோபேலின் ( PP )
D) இவை அனைத்தும்
விளக்கம்:
38. மாறும் வானிலையை எதிர்கொள்ளும் தன்மை, ஆபத்தான மற்றும் தீத்தடுப்பு பண்புடைய நெகிழி
A) Thermocol
B) PEHD
C) HIPS
D) V, Vinyl ( PVC )
விளக்கம்:
39. கான்கிரிட் போடும் பொது கலவையை நிலைப்படுத்த எந்த வகை நெகிழியின் நுண் இழைகள் கலக்கப்படுகிறது
A) PEHD
B) PP
C) PVC
D) LLDPE
விளக்கம்:
40. EPS, XPS விரிவாக்கம்
A) விரிவாக்கப்பட்ட பாலிஸ்டிரீன், வெளியேற்றப்பட்ட பாலிஸ்டிரீன்
B) வெளியேற்றப்பட்ட பாலிஸ்டிரீன், விரிவாக்கப்பட்ட பாலிஸ்டிரீன்
C) உயர்தாக்க பாலிஸ்டிரீன், விரிவாக்கப்பட்ட பாலிஸ்டிரீன்
D) விரிவாக்கப்பட்ட பாலிஸ்டிரீன், உயர்தாக்க பாலிஸ்டிரீன்
விளக்கம்:
41. தலைக்கவசம், கார் பம்பர்கள், ஆப்டிகல் கேபிள் செய்ய பயன்படும் நெகிழி வகை
A) உயர்தாக்க பாலிஸ்டிரீன்
B) அக்ரிலோ நைட்ரில் பியூட்டா டையீன் ஸ்டைரீன்
C) பாலிகார்பனேட்
D) வினைல்
விளக்கம்:
42. காட்மியம் ஈயம் போன்ற கன உலோகங்களை கொண்ட நச்சு தன்மை வாய்ந்த நெகிழியின் ரெசின் குறியீடு
A) குறியீடு எண் # 3
B) குறியீடு எண் # 2
C) குறியீடு எண் # 5
D) குறியீடு எண் # 7
விளக்கம்: ரெசின் குறியீடு எண் # 3 என்பதைக் குறிக்கும் பாலிவினைல் கு ளோரைடு (poly Vinyl chloride – PVC) மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாகவும், நமது ஆரோக்கியத்திற்கு தீங்குவிளைவிக்ககூடிய காட்மியம், ஈயம் போன்ற கன உலோகங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
43. ரெசின் குறியீடு எண் #6 என்பதைக் குறிக்கும் பாலிஸ்டைரீன்
(polystyrene – PS) என்ற பிளாஸ்டிக் ஏற்படுத்தும் நோய்
A) இரத்தசோகை
B) தோல்நோய்
C) புற்றுநோய்
D) சுவாசக்கோளாறு
விளக்கம்: ரெசின் குறியீடு எண் #6 என்பதைக் குறிக்கும் பாலிஸ்டைரீன் (polystyrene – PS) என்ற பிளாஸ்டிக் ஸ்டைரீன் என்ற நஞ்சான வேதிப் பொருளை தன்னகத்தே கொண்டுள்ளது. இது புற்றுநோய் ஏற்படுத்தும்
44. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி எறியக்கூடிய பாலித்தீன் பைகள் தாக்கம்
A) வடிகால்களில் அடைப்பு, மண்வளம் கெடுதல்
B) மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற வியாதிகள்
C) சுற்றுப்புறம் மற்றும் விலங்குகளின் ஆரோக்கிய கேடு
D) இவை அனைத்தும்
விளக்கம்: ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி எறியக்கூடிய பாலித்தீன் பைக ள் மற்றும் உணவு பொட்டலங்களை பஅதிகளவு பயன்படுத்தி எறிவதால், நமது சுற்றுப்புறமும் குப்பைக் கூடமாகி வடிகால்களிலும் அடைத்து சுற்றுப்புறத்தினை மாசுபடுத்துகின்றன. வடிகால்களில் அடைப்பு ஏற்படுவதால், நீர் தேங்கி நிற்கின்றது. இந்நீர்க் குட்டைகள் கொசுக்களின் இனப்பெருக்கத்திற்குக் காரணமாகி மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா வியாதிகளைப் பரப்புவதோடு, நீர் வடிந்து ஓடாமல், வெள்ளமாகப் பரவுவதற்கும் காரணமாகிறது
45. மைக்ரோ மணிகள் எனும் மைக்ரோபிளாஸ்டிக் எடுத்துக்காட்டு
A) பற்பசை
B) முகம்கழுவும் கரைசல்
C) உடலைத் தூய்மைபடுத்தும் தேய்ப்பான்கள்
D) இவை அனைத்தும்
விளக்கம்: நெகிழிப் பைகள், பாட்டில்கள், உறிஞ்சுக்குழாயகள் போன்ற நெகிழிக் கழிவுகள் கடல்களையும் சென்றடைகின்றன. அவ்வா று கடலில் குவியும் நெகிழிகள், கடல்நீர், சூரியஒளி மற் றும் அலையசைவுகளுக்கு உட்பட்டு, சிறிய துண்டுகளான மைக்ரோ நெகிழிகளாக (நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள்) உடைகின்றன. இத்தகைய மைக்ரோபிளாஸ்டிக் பற்பசை, முகம்கழுவும் கரைசல், உடலைத் தூய்மை படுத்தும் தேய்ப்பான்கள் ஆகியவற்றில் காணப்படுகின்றன.
46. எந்த வருடம் நடந்த ஆராய்ச்சியில், 90% கடல்வாழ் பறவைகளின் வயிற்றில் நெகிழிகள் இருப்பது கண்டறிப்பட்டது.
A) 2010
B) 2016
C) 2015
D) 2001
விளக்கம்: பாசிகளால் சூழப்பட்ட சிறிய நெகிழி துணுக்குகளை பறவைகள் அதிக அளவில் உண்ண நேரிடுகிறது. இவ்வாறாக உண்ட விலங்குகளின் வயிற்றில் நெகிழிகள் அவற்றின் வயிறு உறுப்புகளில் இடத்தை அடைத்து அவ்விலங்குகள் உணவு உண்ணமுடியாமல் பட்டினியால் வாடுகின்றன. வயிற்றில் உள்ள நெகிழி செரிமானம் அடைவதில்லை . 2015– இல் நடந்த ஆராய்ச்சியில், 90% கடல்வா ழ் பறவைகளின் வயிற்றில் நெகிழிகள் இருப்பது கண்டறிப்பட்டது.
47. PLA –(Poly Lactic Acid) எனப்படும் பாலிலாக்டிக் அமிலம் – கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது ?
1. வெப்பத்தால் இளகும் நெகிழி
2. இந்த பாலிமர் பொருளைச் சோளம், கரும்பு மற்றும் இனிப்புச்சுவை கிழங்குகளின் கூழ்களில் இருந்து பெற முடியும்.
3. மட்கும் தன்மை நெகிழி
A) 1, 2
B) 1, 3
C) 2, 3
D) 1, 2, 3
விளக்கம்: செயற்கை நெகிழிகளுக்கு மாற்றாக அறிவியலாளர்கள் கண்டறிந்ததே PLA – (Poly Lactic Acid) எனப்படும் பாலிலாக்டிக் அமிலமாகும். இப்பொருளைப் பயன்படுத்தி உணவுப் பொட்டலக்கலன்கள், குப்பைப் பைகள் மற்றும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய சமையல் மற் றும் உணவு மேசை கருவிகள் போன்றவற்றைத் தயாரிக்கலாம்.
48. கூற்று 1: நெகிழி பொருட்கள் உணவுச்சங்கிலி மூலம் நமக்கு தீங்கு விளைவிக்கிறது.
கூற்று 2: கடலின் மேற்பரப்பில் மிதக்கும் (persistent organic pollutants) தொடர்ச்சியான கரிம மாசுபடுத்திகள் நுண்ணிய இழைகளில் ஒட்டிக்கொண்டு ஆபத்தான மாசுபாட்டை உண்டாக்குகின்றன.
A) இரண்டும் சரி மேலும் கூற்று 1, 2 ஒன்றையொன்று தொடர்புபடுத்துகிறது
B) இரண்டும் சரி ஆனால் கூற்று 1, 2 ஒன்றையொன்று தொடர்புபடுத்தவில்லை
C) கூற்று 1 மட்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்:
49. இயற்கை முறையில் பொருட்களை மட்க செய்ய உதவுவது
A) பாக்டீரியா
B) வைரஸ்
C) பூஞ்சை
D) காளான்
விளக்கம்: காய்கறிகளின் புறத்தோல்கள், பழங்கள் மற்றும் மீதமான உணவு மண்ணில் இட்டால், அவை மண்ணில் உள்ள பாக்டீரியாவால் சிதைக்கப்ப ட்டு, ஊட்டச்சத்துகள் நிறைந்த இயற்கை உரமாகின்றன
50. இதுவரை உற்பத் தி செய்யப்பட்ட (சேகரிக்கப்பட்ட) நெகிழி கழிவுகளிலிருந்து
A) 79% குழிகளில் அல்லது திறந்த வெளியில், 9% எரித்தல் 12% மறுசுழற்சி
B) 59% குழிகளில் அல்லது திறந்த வெளியில், 29% எரித்தல் 12% மறுசுழற்சி
C) 79% குழிகளில் அல்லது திறந்த வெளியில், 12% எரித்தல் 9% மறுசுழற்சி
D) 59% குழிகளில் அல்லது திறந்த வெளியில், 12% எரித்தல் 29% மறுசுழற்சி
விளக்கம்: இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட (சேகரிக்கப்பட்ட) நெகிழி கழிவுகளிலிருந்து 79% குழிகளில் இட்டு மூடப்படுகிறது அல்லது திறந்த வெளியில் கொட்டப்பட்டு குப்பைமேடாகிறது, 12% எரிக்கப்படுகிறது, 9% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
51. நெகிழிக் குப்பைகளை அகற்ற முயற்சிக்கும் 5R கொள்கை வரிசை
A) Reduce (குறை), Refuse (தவிர்), Reuse (மீண்டும் பயன்படுத்து), Recycle (மறுசுழற்சி செய்) மற்றும் Recover (மீட்டெடு)
B) Refuse (தவிர்), Reduce (குறை), Reuse (மீண்டும் பயன்படுத்து), Recycle (மறுசுழற்சி செய்) மற்றும் Recover (மீட்டெடு)
C) Recover (மீட்டெடு), Refuse (தவிர்), Reduce (குறை), Reuse (மீண்டும் பயன்படுத்து), Recycle (மறுசுழற்சி செய்)
D) Reuse (மீண்டும் பயன்படுத்து), Recycle (மறுசுழற்சி செய்) Recover (மீட்டெடு) Refuse (தவிர்), Reduce (குறை)
விளக்கம்: நெகிழிக் கழிவுகளை அகற்றும் சிறந்த முறைகளில் அதிகபட்ச சாதகமான முறை – மறு (தவிர்), குறை, மீண்டும் பயன்படுத்து, மறுசுழற்சி செய், மீட்டெடு (மட்க மற்றும் எரித்துச் சாம்பலாக்கு), இறுதியாக திறந்த வெளியில் கொட்டிக் குப்பை மேடாக்கு.
52. நெகிழியால் ஏற்படும் பாதிப்பை குறைக்க பின்பற்ற வேண்டிய நன்மை பயக்கும் வழிமுறை
A) தவிர்ப்பது
B) மறுசுழற்சி
C) புதைப்பது
D) எரிப்பது
விளக்கம்: நெகிழியாலான பொருள்களைத் தவிர்ப்பதே மிகச் சிறந்த முறையாகும். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்களைப் பெரும்பாலும் தவிர்க்கலாம். எடுத்துக்காட்டாக, நாம் கடைகளுக்குச் செல்லும் பொழுது பருத்தியிலான பை அல்லது சணல் பைகளைக் கொண்டு சென்றால், கடைக்காரர் தரும் நெகிழிப் பைகளை வேண்டா என்று மறுக்கலாம்.
53. நெகிழி மறுசுழற்சி முறையில் கீழ்க்கண்ட எது தவறானது
A) நெகிழிக் கழிவுகளை ரெசின் குறியீடுகளின் அடிப்படையில் பிரித்தெடுத்து, அவற்றை மறுசுழற்சிக்கு உட்படுத்துதல்
B) திறந்தவெளி குப்பை மேடுகளில் குவிவது அல்லது மூடும் வகை குப்பைக்குழிகளில் புதைப்பது
C) வெப்பத்தால் இறுகும் நெகிழிகளை மறுசுழற்சி செய்ய இயலாது.
D) பயனற்ற பொருள்களில் இருந்து பயனுள்ள புதிய பொருள் உற்பத்தி
விளக்கம்: வெப்பத்தால் இளகும் நெகிழிகளை மறுசுழற்சி செய்யலாம். அவை வெப்பத்தால் இளகி, உருகியபின் அவற்றை மறுசுழற்சியால் புதிய பொருள் மாற்ற முடியும், ஆனால் வெப்பத்தால் இறுகும் நெகிழிகளை அவ்வாறு மறுசுழற்சி செய்ய இயலாது.
54. வெப்பப்படுத்தி, உயிரியல் முறைகளுக்கு உட்படுத்தி திண்மக்கழிவுகளை பயனுள்ள வளமான …. ஆக மாற்ற முடியும்
A) நிலக்கரி
B) மின்சாரம்
C) கட்டுமான பொருள்
D) எரிவாயு
விளக்கம்: வெப்பப்படுத்தி, உயிரியல் முறைகளுக்கு உட்படுத்தி திண்மக் கழிவுகளை பயனுள்ள வளங்களான மின்சாரமாக அல்லது மட்கிய உரங்களாக மாற்ற முடியும்.
55. நெகிழிப் பொருள்களை எரிப்பதற்கு உதவுவது
A) எரிகலன்
B) சாம்பலாக்கி
C) எரிஉலை
D) A மற்றும் B
விளக்கம்: பெரும்பாலும், நெகிழிப்பொருள்களை சாம்பலாக்கிகளில் (incinerator) இட்டு உயர் வெப்ப நிலைகளில் எரித்து, வெளியாகும் வாயுக்களைக் கவனமாகச் சேகரித்தும், மீதமான நச்சுத்தன்மை வாய்ந்த சாம்பலை கவனமாகப் பிரித்தும், மின்சார சக்தி பெறப்படுகிறது.
56. நெகிழிகளை எரித்தல் என்பது சிறந்த முறையன்று. ஏன் ?
A) நச்சுத்தன்மை வாயுக்கள் வெளிவருவதும், நச்சுத் தன்மை வேதிப் பொருள்களும்
B) கன உ லோகங்கள் சாம்பலில் வெளிவருவதும்
C) மீதமான நச்சுத்தன்மை வாய்ந்த சாம்பலை கவனமாகப் பிரித்து, மின்சார சக்தி பெறப்படுகிறது.
D) A மற்றும் B
விளக்கம்: புதுப்பிக்க இயலாத வளங்களைப் பாழ்படுத்துவதாலும், கையாள முடியாத அளவில் நச்சுத் தன்மை வாயுக்களும் சாம்பலும் உருவாவதாலும், நெகிழிகளை எரித்தல் என்பது சிறந்த முறையன்று.
57. உலகளவில் குழிகளில் இட்டு புதைக்கும் நெகிழி கழிவின் சதவீதம்
A) 5 – 13%
B) 7 – 13%
C) 10 – 13%
D) 7 – 19%
விளக்கம்: நெகிழிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பரவலான முறையாக, குழிகளில் இட்டு புதைத்தல் விளங்குகிறது. உலக அளவில் 7-13% நெகிழிக் கழிவுகள் குழிகளில் இட்டே புதைக்கப்படுகின்றன.
58. நிலத்தடி நீர் மாசுபடுவது
A) நெகிழிகளை எரிப்பதால்
B) குழியில் இட்டு புதைப்பதால்
C) சாம்பலாக்குதல்
D) இவை அனைத்தும்
விளக்கம்: நெகிழிக் கழிவுகள் குழிகளில் இட்டே புதைக்கப்படுகின்றன. இவ்வாறு செய்வதால் காற்று, நிலம், நிலத்தடிநீர் ஆகியவற்றை நெகிழிக் குப்பைகள் மாசுபடுத்துகின்றன. காலப் போக்கில், குழிகளில் இட்ட நெகிழிகள் சிதைந்து, அதில் உள்ள நச்சுத்தன்மை வேதிப் பொருள்கள் கசிந்து வெளியேறி, சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும்.
59. சிதைவுறும் தன்மையின் அடிப்ப டையில் நெகிழி
A) வீரியம் குறைந்த நெகிழி
B) மட்கும் தன்மை கொண்ட நெகிழி
C) வீரியம் மிகுந்த நெகிழி
D) A மற்றும் B
விளக்கம்: 1980 களில் முதன்முறையாக மட்கும் தன்மை நெகிழிகள் அல்லது உயிரி நெகிழிகள் என்ற கருத்து தோன்றியது. அவை சிதைவுறும் தன்மையின் அடிப்படையில், இருவகைப்படும் அவை வீரியம் குறைந்த நெகிழி, மட்கும் தன்மை கொண்ட நெகிழி.
60. சுற்றுச்சூழலில் முற்றிலும் சிதைந் து கலக்காத நெகிழியின் வகை
A) வீரியம் குறைந்த நெகிழி
B) வீரியம் மிகுந்த நெகிழி
C) இரண்டும்
D) இரண்டுமில்லை
விளக்கம்: வீரியம் குறைந்த நெகிழிகள் சிறிய துண்டுகளாக உடைந்து, மைக்ரோநெகிழிகள் என்றாகி அவை நமது சுற்றுப்புறத்தில் வெகு காலம் சிதைவடையாமல் கிடக்கின்றன. வீரியம் குறைந்த நெகிழிகள் சுற்றுச்சூழலில் முற்றிலும் சிதைந்து கலப்பதில்லை.
61. PLA நெகிழியான – உயிரி நெகிழியின் தயாரிப்பு முறைக்கு தேவையானவை
A) வினிகர் (5% அமிலத்தன்மை)
B) காய்கறி கிளிசரின், சோள மாவு, அலுமினியத் தகடு
C) A மற்றும் B மற்றும் கன நீர்
D) A மற்றும் B மற்றும் நீர்
விளக்கம்:
62. கீழ்கண்ட எத்தகைய புதுப்பிக்கும் தன்மை வாய்ந்த மூலப்பொருட்கள் மட்கும் தன்மை வாய்ந்த நெகிழிகள் செய்ய உதவுகிறது
A) சோளம், கரும்பு
B) அவகேடோ விதைகள்
C) இறால்களின் ஓடுகள்
D) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: புதுப்பிக்கும் தன்மை வாய்ந்த மூலங்களான சோளம், கரும்பு, அவகேடோ விதைகள் இறால்களின் ஓடுகள் போன்றவற்றிலிருந்து மூலப் பொருள்களைச் சேகரித்து உருவாக்கப்பட்ட நெகிழிகள், மட்கும் தன்மை வாய்ந்த நெகிழிகள் ஆகும்
63. மட்கும் தன்மை வாய்ந்த நெகிழிகள் நுண்ணுயிரிகளால் முழுவதும் சிதைக்கப்பட்டு எவ்வாறு மாறுகிறது
A) இயற்கை சேர்மங்கள், நீர், மீத்தேன், CO2
B) நீர், மீத்தேன், O2
C) CO2, O2
D) இயற்கை சேர்மங்கள், நீர்
விளக்கம்: மட்கும் தன்மை வாய்ந்த நெகிழிகள் நுண்ணுயிரிகளால் முழுவதும் சிதைக்கப்பட்டுத் தாவரத்திற்கு பயனளிக்கும் கார்பன் – டை – ஆக்ஸைடு, மீத்தேன், நீர் மற்றும் இன்னபிற இயற்கையான சேர்மங்களாகப் பூமியில் சேர்ந்து மண்ணிற்கு உணவாகின்றன.
64. நெகிழி உண்ணும் பாக்டீரியா குறித்த தவறான கருத்தை கண்டறிக
A) ஐடெனல்லா சகீயன்சிஸ் 201 – F6 (Ideonellasakaiensis 201– F6) என்ற பாக்டீரியா ஒரு முறை மட்டுமே பயன்படுத்தத்தக்க நெகிழியினைச் செரிக்கிறது
B) 2016இல் ஜப்பான் அறிவியலாளர்கள் இதனை கண்டறிந்தனர்
C) பாக்டீரியாவானது ‘PETase’ என்ற நொதியைச் சுரந்து PET பிளாஸ்டிக்கினை சிறிய மூலக்கூறுகளாகச் சிதைக்கின்றது.
D) அனைத்தும் சரி
விளக்கம்: 2016இல் ஜப்பான் அறிவியலாளர்கள், பாலி எத்திலீன் டெரிப்தாலேட் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் ஆலையில் ஐடெனல்லா சகீயன்சிஸ் 201 – F6 (Ideonellasakaiensis 201 – F6) என்ற பாக்டீரியா ஒரு முறை மட்டுமே பயன்படுத்தத்தக்க polyethylene terephthalate – PET பாட்டில்களின் நெகிழியினைச் செரிப்பதை அறிந்தனர்.
65. கூற்று 1: ஐடெனல்லா சகீயன்சிஸ் 201 – F6 ரெசின் குறியீடு #2 என்ற எண்ணிற்குரிய நெகிழியினை மட்டுமே சிதைக்கும்.
கூற்று 2: நமது சுற்றுச்சூழலில் மிக அதிக அளவில் குவிந்திருக்கும் மறுசுழற்சி செய்ய முடியாததாகவும் மற்றும் தரமற்றதாகவுமான நெகிழிகளைக் கையாளத் தகுந்த சாத்தியமான தீர்வாக இந்த பாக்டீரியா அமையாது.
A) இரண்டும் சரி மேலும் கூற்று 1, 2 ஒன்றையொன்று தொடர்புபடுத்துகிறது
B) இரண்டும் சரி ஆனால் கூற்று 1, 2 ஒன்றையொன்று தொடர்புபடுத்தவில்லை
C) கூற்று 1 மட்டும் தவறு கூற்று 1, 2 ஒன்றையொன்று தொடர்புபடுத்துகிறது
D) இரண்டும் தவறு
விளக்கம்: ஐடெனல்லா சகீயன்சிஸ் 201 – F6 ரெசின் குறியீடு #1 என்ற எண்ணிற்குரிய நெகிழியினை மட்டுமே சிதைக்கும்.நமது சுற்றுச்சூழலில் மிக அதிக அளவில் குவிந்திருக்கும் மறுசுழற்சி செய்ய முடியாததாகவும் மற்றும் தரமற்றதாகவுமான நெகிழிகளைக் கையாளத் தகுந்த சாத்தியமான தீர்வாக இந்த பாக்டீரியா அமையாது.
66. கண்ணாடி ஒரு புதிரான பொருள். காரணம்
A) கடினத்தன்மை, எளிதில் நொறுங்கும் தன்மை
B) ஒளிபுகும் தன்மை, ஒளிபுகாத்தன்மை கொண்ட மணலில் இருந்து தயாரிக்கப்படுவது
C) திண்மப் பொருளாகவும், வித்தியாசமா ன வகையில் திரவமாகவும் தன்னை உருமாற்றிக்கொள்கிறது
D) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: நம்மை பாதுகாக்கும் அளவு கடினத்தன்மை கொண்டதாகவும், அதே சமயம், நம்மால் நம்ப முடியாத அளவு எளிதில் நொறுங்கும் தன்மை கொண்டதாகவும் கண்ணாடி உள்ள து. ஒளிபுகாத்தன்மை கொண்ட மணலில் இருந்து தயாரிக்கப்பட்டா லும், கண்ணாடி ஒளிபுகும் தன்மை கொண்டதாக உள்ளது. மிகவும் வியக்கத்தக்க வகையில், கண்ணாடி ஒரு திண்மப் பொருளாகவும், வித்தியாசமான வகையில் திரவமாகவும் தன்னை உருமாற்றிக்கொள்கிறது.
67. கண்ணாடி தயாரிப்பின் போது சிலிக்கான் -டை ஆக்ஸைடு 17000C இல் உருக்கப்பட்டு
A) சோடியம் கார்பனேட் சேர்த்து வேகமாக குளிர்விக்க வேண்டும்
B) சோடியம் கார்பனேட் சேர்த்து மெதுவாக குளிர்விக்க வேண்டும்
C) பொட்டாஸியம் கார்பனேட் சேர்த்து வேகமாக குளிர்விக்க வேண்டும்
D) கார்பனேட் சேர்த்து மெதுவாக குளிர்விக்க வேண்டும்
விளக்கம்: சிலிக்கான் -டை ஆக்ஸைடு உருக 17000C வெப்ப நிலை அளவு உருக்கி, அதனுடன் சோடியம் கார்பனேட் சேர்க்க வேண்டும்.பின்னர், அதனை வேகமாக குளிர்விக்கவும்.சிலிக்கான் -டை ஆக்ஸைடை உருக்கியதும், சிலிக்கான் மற் றும் ஆக்ஸிஜன் அணுக்கள் தமது படிக அமைப்பிலிருந்து சிதையும்.அவற்றை மெதுவாகக் குளிர்விக்கும் பொழுது, அணுக்கள் வரிசையாக மீண்டும் தனது படிகஅமைப்புக்குத் திரும்பும். ஆனால், திரவத்தினை உடனடியாகக் குளிர்விக்கும் பொழுது, சிலிக்காவின் அணுக்கள், தமது இடங்களில் வரிசைப்படுத்தி பழையபடி படிக அமைப்பைப் பெற இயலாது. எனவே, பழைய அமைப்பில் இல்லாமல் வேறோர் அமைப்பில் அணுக்கள் அமையப்பெறும். இது போன்ற பொருள்களை நாம் உருவமற்றவை என்று அழைக்கிறோம். இந்த நிலையில், கண்ணாடி நீள்வரிசை அமைப்பில் அமைந்தும், கனிமத்தின் பண்பில் இருந்து, கண்ணாடியின் அமைப்பினை ஒத்த உருவத்திலும் இருக்கும், அந்நிலையில் அது பலபடிகள் எனக் கருதப்படுகிறது.
68. பொருத்துக.
1. சோடா சாம்பல் – சோடியம் கார்பனேட்
2. சுண்ணாம்புக்கல் – கால்சியம் கார்பனேட்
3. பைரக்ஸ் – பச்சை – நிறக் கண்ணாடி
4. இரும்பு மற்றும் குரோமியம் – போரா சிலிக்கேட்
A) 1 2 4 3
B) 2 1 4 3
C) 2 1 3 4
D) 1 2 3 4
விளக்கம்: பைரக்ஸ் என்ற முத்திரையுடன் பெருமளவு விற்கப்படும் கண்ணாடி வகை, சூளையில்சிதையாத போரா சிலிக்கேட் கண்ணாடி வகையாகும். இரும்பு மற்றும் குரோமியம் சார்ந்த வேதிப் பொருள்களைச் சேர்ப்பதால் பச்சை -நிறக் கண்ணாடி உருவாகிறது.
69. எளிதில் வெட்டக்கூடிய கண்ணாடியை பெற உருகு நிலை கண்ணாடியுடன் சேர்க்கப்படுவது
A) இரும்பு மற்றும் குரோமியம்
B) சோடியம் கார்பனேட்
C) ஈய ஆக்ஸைடு
D) பைரக்ஸ்
விளக்கம்: உருகுநிலை கண்ணாடியுடன் ஈய ஆக்ஸைடினைச் சேர்க்கும் பொழுது நல்ல படிகநிலையில், எளிதில் வெட்டக்கூடிய கண்ணாடி கிடைக்கிறது.
70. கண்களுக்குப் பயன்படும் லென்சுகளின் தயாரிப்பிலும், கண்கவசங்களாகப் பயன்படும் கண்ணாடிகள் தயாரிப்பிலும் உருகு நிலை கண்ணாடியுடன் சேர்க்கப்படுவது
A) ஈய ஆக்ஸைடு
B) வெள்ளி அயோடைடு
C) வெள்ளீயம்
D) குரோமியம்
விளக்கம்: உருகுநிலையிலுள்ள கண்ணாடியுடன் வெள்ளி அயோடைடினைச் சேர்க்கும் பொழுது பெறப்படும் கண்ணாடிகள் சூரியஒளி மற்றும் பிற ஒளிகள் அதன் மேல்படும் பொழுது கருமை நிறக் கண்ணாடியாக மாறுகிறது. இவ்வாறு மாறுவதால் இந்தக் கண்ணாடிகளை கண்களுக்குப் பயன்படும் கண்ணாடிகள் தயாரிப்பிலும் பயன்படுத்துகின்றனர்.
71. தீயில் ஏற்றும் போது செயற்கை, இயற்கை இழைகள்
A) உருகுகின்றன, உருகுகின்றன
B) எரிகின்றன, உருகுகின்றன
C) உருகுகின்றன, எரிகின்றன
D) எரிகின்றன, எரிகின்றன
7th Science Lesson 15 Questions in Tamil
15] அன்றாட வாழ்வில் வேதியியல்
1. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
a) 1972 ஆம்ஆண்டு மேற்கு வங்காள மக்கள் காலராவினால் பாதிக்கப்பட்டனர்.
b) அவர்களுக்கு வாய்வழி நீரேற்று கரைசல் Oral Rehydration Solution (ORS) உட்கொள்ள செய்ததினால் அவர்களின் இறப்புவிகிதம் 3% லிருந்து 50% சதவீதமாக அதிகரித்தது.
A) a சரி b தவறு
B) a, b சரி
C) a தவறு b சரி
D) a, b தவறு
விளக்கம்: 1971 ஆம்ஆண்டு வங்கதேசத்தில் மக்கள் காலராவினால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வாய்வழி நீரேற்று கரைசல் Oral Rehydration Solution (ORS) உட்கொள்ள செய்ததினால் அவர்களின் இறப்புவிகிதம் 50% லிருந்து 3% சதவீதமாக குறைந்தது.
2. எந்த இந்திய மருத்துவர் ORS இன் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைத்தார்?
A) திலீப் மஹாலபாபைஸ்
B) ராமகிருஷ்ணன் மூர்த்தி
C) திலீப் மல்லையா
D) திலீப் கிருஷ்ணன்
விளக்கம்: இந்திய மருத்துவரான திலீப் மஹாலபாபைஸ் என்பவர், 1971 – 72 ஆம் ஆண்டு ORS இன் முக்கியத்துவத்தை மக்களுக்குக் எடுத்துரைத்தார்.
3. எங்கு ஏற்பட்ட காலரா தொற்றின் போது திலீப் மஹாலபாபைஸ் செய்த களச்சோதனையில் ORS சிகிச்சை முக்கிய பங்கு வகித்தது?
A) நாகலாந்து
B) மேகாலயா
C) மணிப்பூர்
D) மகாராஷ்டிரா
விளக்கம்: மணிப்பூரில் ஏற்பட்ட காலரா தொற்றின் போது திலீப் மஹாலபாபைஸ் செய்த களச்சோதனையில் ORS சிகிச்சை முக்கிய பங்கு வகித்தது.
4. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
a) நல்ல ஆரோக்கியமாக உள்ள மனிதனின் குடலில், சாதாரணமாக 30 லிட்டர் தண்ணீரானது குடல்சுவர் வழியாகச் சென்று தொடர் பரிமாற்றம் நிகழ்கின்றது.
b) கிட்டத்தட்ட ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் நீரானது மீண்டும் உறிஞ்சப்படுகிறது.
c) இந்த வழிமுறையின் மூலம் செறிக்கப்பட்ட உணவிலிருந்து கரையக்கூடிய உயிரினக் கழிவுகள் (metabolites) இரத்த ஓட்டத்தில் கலக்கின்றன.
A) a, b சரி c தவறு
B) a, b, c சரி
C) a, b தவறு c சரி
D) a தவறு b, c சரி
விளக்கம்: நல்ல ஆரோக்கியமாக உள்ள மனிதனின் குடலில், சாதாரணமாக 20 லிட்டர் தண்ணீரானது குடல்சுவர் வழியாகச் சென்று தொடர் பரிமாற்றம் நிகழ்கின்றது. கிட்டத்தட்ட ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் நீரானது மீண்டும் உறிஞ்சப்படுகிறது. இந்த வழிமுறையின் மூலம் செறிக்கப்பட்ட உணவிலிருந்து கரையக்கூடிய உயிரினக் கழிவுகள் (metabolites) இரத்த ஓட்டத்தில் கலக்கின்றன.
5. கூற்று(A): வயிற்றுப்போக்கு காரணமாக, ஒரு நபர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது, நீர் வெளியேற்றப்பட்டு உடலானது திரவ சமநிலையை இழக்கின்றது.
காரணம்(R): இது நீர்ப்போக்கு என்று அழைக்கப்படுகிறது.
A) A சரி ஆனால் R தவறு
B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A மற்றும் R தவறு
D) A சரி மற்றும் R விளக்கம்
விளக்கம்: வயிற்றுப்போக்கு காரணமாக, ஒரு நபர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது, நீர் வெளியேற்றப்பட்டு உடலானது திரவ சமநிலையை இழக்கின்றது. இது நீர்ப்போக்கு என்று அழைக்கப்படுகிறது.
6. ஒரு மனிதன் இறப்பது ____________ அன்று மாறாக, அதிக ____________ இறப்பு ஏற்படுகிறது.
A) வயிற்றுப்போக்கினால், நீர்ப்போக்கினால்தான்
B) நீர்ப்போக்கினால், வயிற்றுப்போக்கினால்தான்
C) வயிற்றுப்போக்கினால், நீரிழப்பினால்தான்
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: ஒரு மனிதன் இறப்பது வயிற்றுப்போக்கினால் அன்று மாறாக, அதிக நீர்ப்போக்கினால்தான் இறப்பு ஏற்படுகிறது.
7. உடலின் திரவத்தில் ____________ க்கும் அதிகமாக நீர் இழப்பு ஏற்பட்டால், மனிதனுக்கு இறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
A) 20%
B) 30%
C) 10%
D) 15%
விளக்கம்: உடலின் திரவத்தில் 10% க்கும் அதிகமாக நீர் இழப்பு ஏற்பட்டால், மனிதனுக்கு இறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
8. பொருத்துக
a) சோடியம் குளோரைடு – 1] 13.5 கிராம்/ லிட்டர்
b) குளுக்கோஸ் – 2] 2.9 கிராம்/ லிட்டர்
c) பொட்டாசியம் குளோரைடு – 3] 2.6 கிராம்/ லிட்டர்
d) ட்ரைசோடியம் சிட்ரேட் ஷட்ரோட் – 4] 1.5 கிராம்/ லிட்டர்
a b c d
A) 3 1 2 4
B) 4 1 2 4
C) 2 4 3 1
D) 3 1 4 2
9. ORS – ன் விரிவாக்கம் _________________.
A) Oral Rehydration Solution
B) Oxygen Reduction System
C) Office of Research Support
D) Oral Reduction System
விளக்கம்: ORS – Oral Rehydration Solution வாய்வழி நீரேற்று கரைசல்
10. பொருத்துக
a) சோடியம் – 1] 20 mno/ லிட்டர்
b) குளோரைடு – 2] 65 mno/ லிட்டர்
c) சிட்ரேட் – 3] 10 mno/ லிட்டர்
d) பொட்டாசியம் – 4] 75 mno/ லிட்டர்
a b c d
A) 4 2 3 1
B) 4 1 2 4
C) 2 4 3 1
D) 3 1 4 2
11. வாய்வழி நீரேற்று கரைசல் என்பது ______________, _____________,மற்றும் _____________ ஆகியவற்றின் கலவையாகும்.
A) நீர், சர்க்கரை, உப்பு
B) சர்க்கரை, நீர், உப்பு
C) உப்பு, சர்க்கரை, நீர்
D) நீர், உப்பு, சர்க்கரை
விளக்கம்: வாய்வழி நீரேற்று கரைசல் என்பது உப்பு, சர்க்கரை மற்றும் நீர் ஆகியவற்றின் கலவையாகும்.
12. கூற்று(A): வயிற்றுப் போக்கின்போது, உடலின் நீர்ச்சமநிலை வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது.
காரணம்(R): நம் உடலானது நீரை உறிஞ்சுவதைக் காட்டிலும் அதிக நீரைச் சுரந்து வெளியேற்றுகின்றது. இதனல் வழக்கமானதை விட ஒரு நாளைக்குப் பல லிட்டர் நீர் இழப்பு ஏற்படுகின்றது.
A) A சரி ஆனால் R தவறு
B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A மற்றும் R தவறு
D) A சரி மற்றும் R விளக்கம்
விளக்கம்: வயிற்றுப் போக்கின்போது, உடலின் நீர்ச்சமநிலை வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது. நம் உடலானது நீரை உறிஞ்சுவதைக் காட்டிலும் அதிக நீரைச் சுரந்து வெளியேற்றுகின்றது. இதனல் வழக்கமானதைவிட ஒரு நாளைக்குப் பல லிட்டர் நீர் லிட்டா் நீா் இழப்பு ஏற்படுகின்றது.
13. ORS உடலில் அதிக வியர்வை, வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு மூலம் ஏற்பட்ட நீர் பற்றாக்குறையை _________________ மற்றும் _________________, மூலம் மீட்டெடுத்து நீர்ச் சமநிலையைப் பராமரிக்கின்றது.
A) எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் நீர்
B) நீர் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள்
C) நீர் மற்றும் புரோஸ்டிடுகள்
D) எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் புரோஸ்டிடுகள்
விளக்கம்: ORS உடலில் அதிக வியர்வை, வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு மூலம் ஏற்பட்ட நீர் பற்றாக்குறையை நீர் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் மூலம் மீட்டெடுத்து நீர்ச் சமநிலையைப் பராமரிக்கின்றது.
14. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
a) நமது குடலில் சரியான அளவு பொட்டாசியம் இருந்தால்தான் நீரானது சவ்வூடு பரவல் நிகழ்வின் மூலம் நீரை உறிஞ்ச முடியும்.
b) குடல் சுவரில் போதிய அளவு உப்பு இல்லையெனில், குடல் உறிஞ்சிகளால் நமக்குத் தேவையான நீரை உறிஞ்ச முடியாது.
A) a சரி b தவறு
B) a, b சரி
C) a தவறு b சரி
D) a, b தவறு
விளக்கம்: நமது குடலில் சரியான அளவு சோடியம் இருந்தால்தான் நீரானது சவ்வூடு பரவல் நிகழ்வின் மூலம் நீரை உறிஞ்ச முடியும். குடல் சுவரில் போதிய அளவு உப்பு இல்லையெனில், குடல் உறிஞ்சிகளால் நமக்குத் தேவையான நீரை உறிஞ்ச முடியாது.
15. நமது உடல் சரியாக இயங்குவதற்குச் _________________ போன்ற தாது உப்புகள் தேவைப்படுகின்றன.
A) பொட்டாசியம்
B) சோடியம்
C) குளோரைடு
D) சிட்ரேட்
விளக்கம்: நமது உடல் சரியாக இயங்குவதற்குச் சோடியம் போன்ற தாது உப்புகள்தேவைப்படுகின்றன.
16. வயிற்றுப் போக்கின்போது, நீரோடு சேர்ந்து _________________ மற்றும் _________________ போன்ற தாதுஉப்புகளையும் நமது உடல் இழக்கின்றது.
A) சோடியம், பொட்டாசியம்
B) சோடியம், குளோரைடு
C) பொட்டாசியம், குளோரைடு
D) பொட்டாசியம், சோடியம்
விளக்கம்: வயிற்றுப் போக்கின்போது, நீரோடு சேர்ந்து சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுஉப்புகளையும் நமது உடல் இழக்கின்றது.
17. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
a) செயற்கையான உப்பு நீர்க்கரைசலை (Saline Solution) நமது உடலில் செலுத்தும்போது தண்ணீர் மற்றும் சோடியம் ஆகியவை நேரடியாக இரத்த ஒட்டத்திற்கு மாற்றப்படுகின்றன.
b) சர்க்கரை நீர்க்கரைசலை வாய்வழியாக எடுத்துக் கொள்ளும்போது, நமது உடலானது நீரையோ, சோடியம் உப்பையோ உறிஞ்ச முடியாது.
c) குளுக்கோசுடன் உப்பைச் சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது சர்க்கரை, சோடியம், குளுக்கோஸ் ஆகிய மூன்றையும் நமது உடல் எடுத்துக் கொள்ளும் என்பதை டாக்டர் திலீப் மஹாலபாபைஸ் கண்டுபிடித்தார்.
A) a சரி b, c தவறு
B) a, b, c சரி
C) a, c தவறு b சரி
D) a, b, c தவறு
விளக்கம்: செயற்கையான உப்பு நீர்க்கரைசலை (Saline Solution) நமது உடலில் செலுத்தும்போது தண்ணீர் மற்றும் சோடியம் ஆகியவை நேரடியாக இரத்த ஒட்டத்திற்கு மாற்றப்படுகின்றன. உப்பு நீர்க்கரைசலை வாய்வழியாக எடுத்துக் கொள்ளும்போது, நமது உடலானது நீரையோ, சோடியம் உப்பையோ உறிஞ்ச முடியாது. குளுக்கோசுடன் உப்பைச் சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது நீர், உப்பு, குளுக்கோஸ் ஆகிய மூன்றையும் நமது உடல் எடுத்துக் கொள்ளும் என்பதை டாக்டர் திலீப் மஹாலபாபைஸ் கண்டுபிடித்தார்.
18. கூற்று(A): சோடியம் அயனியானது, செறிவின் அடிப்படையில் நமது உடல் செல்லிற்குள் செல்கின்றது.
காரணம்(R): வயிற்றுப் போக்கின்போது நமது குடல் குளுக்கோஸ் மற்றும் நீர் மூலக்கூறுகளை உறிஞ்ச முடியும்.
A) A சரி ஆனால் R தவறு
B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A மற்றும் R தவறு
D) A சரி மற்றும் R விளக்கம்
விளக்கம்: சோடியம் அயனியானது, செறிவின் அடிப்படையில் நமது உடல் செல்லிற்குள் செல்கின்றது. வயிற்றுப் போக்கின்போது நமது குடல் குளுக்கோஸ் மற்றும் உப்பு மூலக்கூறுகளை உறிஞ்ச முடியும்.
19. கூற்று(A): சோடியம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை நம் சிறுகுடலுடன் இணைந்து இடம் பெயர்கின்றன
காரணம்(R): இது குளுக்கோஸ் தட்டுப்பாட்டைப் போக்கி, நீர் உறிஞ்சும்தன்மையை துரிதப்படுத்துகிறது.
A) A சரி ஆனால் R தவறு
B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A மற்றும் R தவறு
D) A சரி மற்றும் R விளக்கம்
விளக்கம்: சோடியம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை நம் சிறுகுடலுடன் இணைந்து இடம் பெயர்கின்றன. இது குளுக்கோஸ் தட்டுப்பாட்டைப் போக்கி, நீர் உறிஞ்சும்தன்மையை துரிதப்படுத்துகிறது. இந்தச் செயல்பாடானது, இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான மருத்துவ முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
20. அமிலத்தன்மை என்பது _________________ அதிகமாகச் சுரக்கும் அமிலத்தின் காரணமாக ஏற்படும் அறிகுறிகளாகும்.
A) கல்லீரல்
B) மண்ணீரல்
C) சிறுநீரகம்
D) இரைப்பை
விளக்கம்: அமிலத்தன்மை என்பது இரைப்பையில் அதிகமாகச் சுரக்கும் அமிலத்தின் காரணமாக ஏற்படும் அறிகுறிகளாகும்.
21. கூற்று(A): நமது வயிறு இயற்கையாகவே இரைப்பை நீர் அல்லது ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைச் (HCl) சுரந்து, உணவைச் சிறிய துகள்களாக்கி, செரிமானம் செய்ய உதவுகின்றது.
காரணம்(R): அமில உணவுகள், கார உணவுகள், குடிப்பழக்கம், நீரிழிவு மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றின் காரணமாக அமிலம் அளவுக்கு அதிகமாகச் சுரக்கின்றது.
A) A சரி ஆனால் R தவறு
B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A சரி மற்றும் R விளக்கம்
D) A மற்றும் R தவறு
விளக்கம்: நமது வயிறு இயற்கையாகவே இரைப்பை நீர் அல்லது ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைச் (HCl) சுரந்து, உணவைச் சிறிய துகள்களாக்கி, செரிமானம் செய்ய உதவுகின்றது. அமில உணவுகள், கார உணவுகள், குடிப்பழக்கம், நீரிழிவு மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றின் காரணமாக அமிலம் அளவுக்கு அதிகமாகச் சுரக்கின்றது.
22. நமது வயிற்றுப் புறணிச் செல்கள் _________________ முதல் _________________ வரையிலான pH கொண்ட அமிலத்தைத் தாங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.
A) 1 முதல் 5
B) 2 முதல் 4
C) 1 முதல் 3
D) 1 முதல் 2
விளக்கம்: நமது வயிற்றுப் புறணிச் செல்கள் ஒன்று முதல் மூன்று வரையிலான pH கொண்ட அமிலத்தைத் தாங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.
23. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
a) நமக்கு அமிலத்தன்மை அல்லது நெஞ்செரிச்சல் உண்டாகும்போது எடுத்துக்கொள்ளும் மருந்திற்கு ஆன்டாசிட் என்று பெயர்
b) இவை ஒரு வலுவற்ற காரங்களாகும்
c) ஆண்டாசிட் மருந்துகளை உட்கொள்ளும்போது வேதிவினை நிகழ்ந்து குறைந்த அரிக்கும் தன்மைவாய்ந்ததாக மாறுகின்றது.
A) a சரி b, c தவறு
B) a, b, c சரி
C) a, c தவறு b சரி
D) a, b, c தவறு
விளக்கம்: நமக்கு அமிலத்தன்மை அல்லது நெஞ்செரிச்சல் உண்டாகும்போது எடுத்துக்கொள்ளும் மருந்திற்கு ஆன்டாசிட் என்று பெயர். இவை ஒரு வலுவற்ற காரங்களாகும்ஆண்டாசிட் மருந்துகளை உட்கொள்ளும்போது வேதிவினை நிகழ்ந்து குறைந்த அரிக்கும் தன்மைவாய்ந்ததாக மாறுகின்றது.
24. கீழ்க்கண்டவற்றுள் அமில நீக்கிகள் எவை
A) சோடியம் பை கார்பனேட் (NaHCO3)
B) கால்சியம் கார்பனேட் (CaCO3)
C) மெக்னீசியம் ஹைட்ராக்ஸைடு (Mg(OH)2)
D) இவை அனைத்தும்
விளக்கம்: பெரும்பாலான அமில நீக்கிகள், சோடியம் பை கார்பனேட் (NaHCO3), கால்சியம் கார்பனேட் (CaCO3), மெக்னீசியம் ஹைட்ராக்ஸைடு (Mg(OH)2), மெக்னீசியம் கார்பனேட் (MgCO3) மற்றும் அலுமினியம் ஹைட்ராக்ஸைடு Al(OH)3 ஆகியவை ஆகும்.
25. Mg (OH)2 + 2 HCl —–>
A) MgCl2 + 2 H2O
B) MgCl + 2 H2O
C) MgCl + H2O
D) MgCl2 + H2O
விளக்கம்: மெக்னீசியம் ஹைட்ராக்சைடு ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை நடுநிலையாக்கும்பொழுது ஏற்பட்ட வினையானது; Mg (OH)2 + 2 HCl —–> MgCl2 + 2 H2O
26. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை.
a) ப்ளம்பிங் தம்முடைய பரிசோதனையில் ஸ்ட்ரிப்டோகாக்கஸ், மெனிங்கோகாக்கஸ், டிப்தீரியா பேசிலஸ் போன்ற பரவலான தீங்கு விளைவிக்க கூடிய பாக்ட்ரியாக்களை ஈடுபடுத்தினார்.
b) உலகின் முதல் ஆன்டிபயாடிக் மருந்து பென்சிலியம்நொட்டேட்டம் என்ற பூஞ்சையிலிருந்து கண்டறியப்பட்டது
c) பண்டைய சீனர்கள் காயமடைந்த இடத்திற்கு ரொட்டி பூஞ்சை பயன்படுத்தினர்
d) பிளம்பிங் பென்சிலின் மருந்து கண்டுபுடித்த பிறகு முதலாம் உலக போரில் காயமடைந்த வீரர்களுக்கு பென்சிலின் பயன்படுத்தப்பட்டது.
A) a சரி b, c, d தவறு
B) a, b, c, d சரி
C) a, c தவறு b சரி
D) a, b, சரி c, d தவறு
விளக்கம்: ப்ளம்பிங் தம்முடைய பரிசோதனையில் ஸ்ட்ரிப்டோகாக்கஸ், மெனிங்கோகாக்கஸ், டிப்தீரியா பேசிலஸ் போன்ற பரவலான தீங்கு விளைவிக்க கூடிய பாக்ட்ரியாக்களை ஈடுபடுத்தினார். உலகின் முதல் ஆன்டிபயாடிக் மருந்து பென்சிலியம்நொட்டேட்டம் என்ற பூஞ்சையிலிருந்து கண்டறியப்பட்டது. பண்டைய எகிப்தியர்கள் காயமடைந்த இடத்திற்கு ரொட்டி பூஞ்சை பயன்படுத்தினர். ப்ளம்பிங் பென்சிலின் மருந்து கண்டுபுடித்த பிறகு இரண்டம் உலக போரில் காயமடைந்த வீரர்களுக்கு பென்சிலின் பயன்படுத்தப்பட்டது.
27. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
a) சில தாவரங்களும் நுண்ணுயிரிகளும் நச்சு தன்மையுள்ள பொருள்களை உற்பத்தி செய்கின்றன. இந்த பொருள்கள் மற்ற உயிரினங்களை அழிக்க உதவுகின்றன.இவை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் என அழைக்கப்படுகின்றன
b) இன்று பல மருந்து தொழிற்சாலைகள் ஆண்டிபயாடிக் மருந்துகளை செயற்கையாக உற்பத்தி செய்கின்றன.
c) உதாரணம்: குளோரபினிகால், v ஆண்டிபயாடிக்
A) a, b சரி c தவறு
B) a, b, c சரி
C) a, c தவறு b சரி
D) a, b, c தவறு
விளக்கம்: சில தாவரங்களும் நுண்ணுயிரிகளும் நச்சு தன்மையுள்ள பொருள்களை உற்பத்தி செய்கின்றன. இந்த பொருள்கள் மற்ற உயிரினங்களை அழிக்க உதவுகின்றன.இவை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் என அழைக்கப்படுகின்றன. இன்று பல மருந்து தொழிற்சாலைகள் ஆண்டிபயாடிக் மருந்துகளை செயற்கையாக உற்பத்தி செய்கின்றன. உதாரணம்: குளோரபினிகால், டெட்ராசைக்ளின்
28. ________ ஆன்டிபயாட்டிக்குகள் தவிர செயற்கை முறையில் பல ஆண்டிபயாடிக்குகளை நம்மால் உருவாக்க முடியும்.
A) B ஆன்டிபயாட்டிக்குகள்
B) v ஆன்டிபயாட்டிக்குகள்
C) T ஆன்டிபயாட்டிக்குகள்
D) P ஆன்டிபயாட்டிக்குகள்
விளக்கம் : v ஆண்டிபையோட்டிக்கள் தவிர செயற்கை முறையில் பல ஆண்டிபயாடிக்குகளை நம்மால் உருவாக்க முடியும்.
29. ஆஸ்பிரின் ஒரு _________
A) ஆண்டிபயாடிக்
B) ஆண்டிபைரடிக்
C) மயக்க மருந்து
D) சைக்கீடெலிக்
விளக்கம்: நன்கு அறியப்பட்ட ஆன்டிபைரடிக் ஆஸ்பிரின்
30. _________ என்பது வயிற்று அமிலத்தை நடுநிலையாக்குகிறது
A) அமிலநீக்கி
B) ஆண்டிபைரடிக்
C) வலிநிவாரணி
D) ஆண்டிஹிஸ்டமின்
31. கூற்று(A): ஒரு நபர் தொடர்ந்து ஆன்டிசெப்டிக் எடுத்துக்கொள்ளும் பொது நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் செயல்பாடு அதிகரிக்கும்
காரணம்(R): இதற்கு மாற்றாக அவர் வீரியம் மிகுந்த மருந்துகளை உட்கொள்ள நேரிடும்
A) A தவறு ஆனால் R சரி
B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A சரி மற்றும் R விளக்கம்
D) A மற்றும் R தவறு
விளக்கம்: ஒரு நபர் தொடர்ந்து ஆண்டிபயாடிக் எடுத்துக்கொள்ளும் பொது நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் செயல்பாடு குறைகிறது. இதற்கு மாற்றாக அவர் வீரியம் மிகுந்த மருந்துகளை உட்கொள்ள நேரிடும்
32. சளி மற்றும் புளு போன்ற நோய்களை ஏற்படுத்தும் வைரசுகளுக்கு _________ மருந்துகள் வேலை செய்வதில்லை
A) ஆன்டிசெப்டிக்
B) பென்சிலின்
C) ஆண்டிபயாடிக்
D) வலி நிவாரணி
விளக்கம்: சளி மற்றும் புளு போன்ற நோய்களை ஏற்படுத்தும் வைரசுகளுக்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் வேலை செய்வதில்லை
33. கூற்று(A): வலி உணரப்படும் புள்ளியிலிருந்து வரும் தகவலுக்கு எதிர்வினையாற்றும் விதமாக மூளையும் தகவல் தர தொடங்கும் முறையே நிவாரணத்தின் தொடக்கம் ஆகும்
காரணம்(R): வலியை அடக்கும், குறைக்கும் வேதிப்பொருளை வெளியேற்றுவது மற்றும் கூடுதலான வெள்ளை ரத்த அணுக்களையும் ரத்த தட்டுகளையும் காயம் பட்ட இடத்திற்கு ஆகிய செயல்கள் மூலம் நிவாரண முறை தொடங்கும்
A) A சரி ஆனால் R தவறு
B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A சரி மற்றும் R விளக்கம்
D) A மற்றும் R தவறு
விளக்கம்: வலி உணரப்படும் புள்ளியிலிருந்து வரும் தகவலுக்கு எதிர்வினையாற்றும் விதமாக மூளையும் தகவல் தர தொடங்கும் முறையே நிவாரணத்தின் தொடக்கம் ஆகும். வலியை அடக்கும், குறைக்கும் வேதிப்பொருளை வெளியேற்றுவது மற்றும் கூடுதலான வெள்ளை ரத்த அணுக்களையும் ரத்த தட்டுகளையும் காயம் பட்ட இடத்திற்கு ஆகிய செயல்கள் மூலம் நிவாரண முறை தொடங்கும்.
34. கூற்று(A): வலிநிவாரணிகள் அல்லது வலிநீக்கிகள் என்பன நமது உடலிருந்து வெளியாகும் வலிகுறைக்கும் உயிரிப்பொருளாகும்
காரணம்(R): மைய நரம்பு மண்டலத்தில் நேரடியாக செயல்பட்டோ அல்லது வலி உணரப்படும் புறநரம்பு இடங்களில் அதிக மாற்றம் இல்லாத, நிலையில் குறிப்பாக வலிநீக்கிகள் செயல்படுகின்றன
A) A சரி ஆனால் R தவறு
B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A சரி மற்றும் R விளக்கம்
D) A தவறு மற்றும் R சரி
விளக்கம்: வலிநிவாரணிகள் அல்லது வலிநீக்கிகள் என்பன நமது உடலிருந்து வெளியாகும் வலிகுறைக்கும் வேதிப்பொருளாகும். மைய நரம்பு மண்டலத்தில் நேரடியாக செயல்பட்டோ அல்லது வலி உணரப்படும் புறநரம்பு இடங்களில் அதிக மாற்றம் இல்லாத, நிலையில் குறிப்பாக வலிநீக்கிகள் செயல்படுகின்றன
35. கூற்று(A): காய்ச்சலில் அவதியுறும்பொழுது நாம் பாராசிட்டாமால் உட்கொள்கிறோம்
காரணம்(R): பாராசிட்டமால் நமது உடலில் ஏற்பிகளுடன் தொடர்பு கொண்டு, மூளைக்கு அனுப்பப்படும் வலியின் தீவிரத்தைக் குறைத்தும், வலி மற்றும் உடல்வெப்பநிலையை அதிகரிக்கும் புரோஸ்டாகிளான்டின்களின் அளவைக் கட்டுப்படுத்தியும் செயல்படுகின்றன.
A) A சரி ஆனால் R தவறு
B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A சரி மற்றும் R விளக்கம்
D) A மற்றும் R தவறு
விளக்கம்: காய்ச்சலில் அவதியுறும்பொழுது நாம் பாராசிட்டாமால் உட்கொள்கிறோம். பாராசிட்டமால் நமது உடலில் ஏற்பிகளுடன் தொடர்பு கொண்டு, மூளைக்கு அனுப்பப்படும் வலியின் தீவிரத்தைக் குறைத்தும், வலி மற்றும் உடல்வெப்பநிலையை அதிகரிக்கும் புரோஸ்டாகிளான்டின்களின் அளவைக் கட்டுப்படுத்தியும் செயல்படுகின்றன.
36. முதல் மயக்கமூட்டும் மருந்தினை கண்டறிந்தவர்
A) ஆல்பர்ட் நீம்மானின்
B) எட்வர்ட் ஜென்னர்
C) ராபர்ட் கோச்
D) ராபர்ட் நீல்
விளக்கம்: 1860 இல் ஆல்பர்ட் நீம்மானின் என்பவர் முதல் மயக்கமூட்டும் மருந்தினைப் பிரித்தெடுத்தார்
37. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
a) போதைத் தன்மையற்ற (சேர்த்திகள் அற்ற) வலி நீக்கிகள், எடுத்துக்காட்டாக, கோடீன்
b) போதைத்தன்மை வாய்ந்த வலிநீக்கிகள் எடுத்துக்காட்டாக, ஆஸ்பிரின்
A) a, b சரி
B) a சரி b தவறு
C) a தவறு b சரி
D) a, b தவறு
விளக்கம்: போதைத் தன்மையற்ற (சேர்த்திகள் அற்ற) வலி நீக்கிகள், எடுத்துக்காட்டாக, ஆஸ்பிரின். போதைத்தன்மை வாய்ந்த வலிநீக்கிகள் எடுத்துக்காட்டாக, கோடீன்
38. சாதாரணமாக மனித உடலின் வெப்பநிலையானது _________முதல் _________ டிகிரி பாரன்ஹீட்வரை இருக்கும்.
A) 98.6, 98.7
B) 98.4, 98.6
C) 98.5, 98.6
D) 98.3, 98.4
விளக்கம்: சாதாரணமாக மனித உடலின் வெப்பநிலையானது 98.4 முதல் 98.6 டிகிரி பாரன்ஹீட்வரை இருக்கும்.வெப்பமானது இந்த நிலைக்கு மேலே சென்றால் அது காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது.
39. கூற்று(A): காய்ச்சல் வருவதற்கு பொதுவான காரணம் நோய்த்தொற்றாகும்.
காரணம்(R): நோயை உண்டாக்கக்கூடிய பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் வளர முடியாது. எனவே படையெடுக்கும் நோய் கிருமிகளிலிருந்து நம்மை பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியானது நம் உடலின் வெப்பநிலையை அதிகரிக்கச்செய்திறது.
A) A சரி ஆனால் R தவறு
B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A சரி மற்றும் R விளக்கம்
D) A மற்றும் R தவறு
விளக்கம்: காய்ச்சல் வருவதற்கு பொதுவான காரணம் நோய்த்தொற்றாகும். நோயை உண்டாக்கக்கூடிய பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் வளர முடியாது. எனவே படையெடுக்கும் நோய் கிருமிகளிலிருந்து நம்மை பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியானது நம் உடலின் வெப்பநிலையை அதிகரிக்கச்செய்திறது.
40. நமக்கு நோய்தொற்று ஏற்பட்டவுடன் நோய் எதிர்ப்பு அமைப்பானது _________ என்ற வேதிப்பொருளை வெளியிடுகிறது.
A) பைரோஜன்
B) புரோஸ்டாகிளான்டின்
C) ஹைப்போதாலமஸ்
D) வெள்ளை அணுக்கள்
விளக்கம்: நமக்கு நோய்தொற்று ஏற்பட்டவுடன் நோய் எதிர்ப்பு அமைப்பானது பைரோஜன் என்ற வேதிப்பொருளை வெளியிடுகிறது.
41. நம் உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்துவது எது?
A) புரோஸ்டாகிளான்டின்
B) பைரோஜன்கள்
C) ஹைப்போதாலமஸ்
D) வெள்ளை அணுக்கள்
விளக்கம்: ஹைப்போதாலமஸின் பணி நம் உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்துவதாகும்.
42. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
a) நமக்கு நோய்தொற்று ஏற்பட்டவுடன் நோய் எதிர்ப்பு அமைப்பானது ஹைப்போதாலமஸ் என்ற வேதிப்பொருளை வெளியிடுகிறது. இரத்த ஓட்டத்தின் மூலமாக இந்த ஹைப்போதாலமஸ் மூளையின் அடிப்பகுதியில் இருக்கும் பைரோஜனை சென்றடைகின்றன
b) பைரோஜன்கள் ஹைப்போதாலமஸை சென்றடைந்தவுடன் புரோஸ்டாகிளான்டின் என்ற வேதிப்பொருளை வெளியிடுகின்றது, இது நம் உடலின் வெப்பநிலை அதிகரிக்க காரணமாகின்றது
A) a, b சரி
B) a சரி b தவறு
C) a தவறு b சரி
D) a, b தவறு
விளக்கம்: நமக்கு நோய்தொற்று ஏற்பட்டவுடன் நோய் எதிர்ப்பு அமைப்பானது பைரோஜன் என்ற வேதிப்பொருளை வெளியிடுகிறது. இரத்த ஓட்டத்தின் மூலமாக இந்த பைரோஜன்கள் மூளையின் அடிப்பகுதியில் இருக்கும் ஹைப்போதாலமஸை சென்றடைகின்றன. பைரோஜன்கள் ஹைப்போதாலமஸை சென்றடைந்தவுடன் புரோஸ்டாகிளான்டின் என்ற வேதிப்பொருளை வெளியிடுகின்றது, இது நம் உடலின் வெப்பநிலை அதிகரிக்க காரணமாகின்றது
43. உடல் வெப்பநிலை _________ பாரன்ஹீட்டைவிட அதிகரிக்கும்போது புரதம் மற்றும் மூளையை தாக்கி நடுக்கம் மற்றும் வலிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது
A) 106 டிகிரி
B) 105 டிகிரி
C) 107 டிகிரி
D) 104 டிகிரி
விளக்கம்: உடல் வெப்பநிலை 105 டிகிரி பாரன்ஹீட்டைவிட அதிகரிக்கும்போது புரதம் மற்றும் மூளையை தாக்கி நடுக்கம் மற்றும் வலிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நீண்டநாள் காய்ச்சலானது சில நேரங்களில் மரணத்தைகூட உண்டாக்கும்.
44. கூற்று(A): ஆன்டிபைரடிக்ஸ் என்பது காய்ச்சலை குறைக்கும் ஒரு வேதிப் பொருளாகும்.
காரணம்(R): இவை புரோஸ்டாகிளான்டின் உற்பத்தியை ஒடுக்கி காய்ச்சலை குறைக்கின்றன.
A) A சரி ஆனால் R தவறு
B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A சரி மற்றும் R விளக்கம்
D) A மற்றும் R தவறு
விளக்கம்: ஆன்டிபைரடிக்ஸ் என்பது காய்ச்சலை குறைக்கும் ஒரு வேதிப் பொருளாகும். இவை புரோஸ்டாகிளான்டின் உற்பத்தியை ஒடுக்கி காய்ச்சலை குறைக்கின்றன.
45. கீழ்க்கண்டவற்றுள் எவை ஆன்டிபைரடிக் ஆகும்.
A) ஆஸ்பிரின்
B) இபுருஃபன்
C) டைக்ளோபினாக்
D) இவை அனைத்தும்
விளக்கம்: பாரசிட்டமால் மிகவும் பொதுவான, நன்கு அறியப்பட்ட ஆன்டிபைரடிக் ஆகும். இது தவிர ஆஸ்பிரின், இபுருஃபன், டைக்ளோபினாக் ஆகியவை உடல் வெப்பம் தனிப்பி மற்றும் அழற்சி நீக்கியாகும்.
46. தொற்றுநோய் ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கவும், நுண்ணுயிர்களை எதிர்க்கும் வகையிலும் உடலின் மேல்புறம் பயன்படுத்தப்படும் மருந்து எது?
A) ஆண்டிசெப்டிக்
B) ஆன்டிபயாடிக்
C) அனலகேசிஸ்
D) கிருமிநாசினி
விளக்கம்: தொற்றுநோய் ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கவும், நுண்ணுயிர்களை எதிர்க்கும் வகையிலும் உடலின் மேல்புறம் பயன்படுத்தப்படும் மருந்து ஆண்டிசெப்டிக் என்று அழைக்கப்படுகின்றது.
47. கூற்று(A): ஆண்டிசெப்டிக் பாக்டீரியாக்களின் கூட்டமைப்புகள், பூஞ்சைகள், வைரஸ்கள் அல்லது பிற நுண்ணுயிரிகளின் கலவைகளைத் தீவிரமாக எதிர்க்கும் ஆற்றலைப்பெற்றுள்ளது.
காரணம்(R): குளியல் சோப், ஐயோடோபார்ம், பினாலிக்நீர்மங்கள், எத்தனால், போரிக்அமிலம் ஆகியன ஆண்டிசெப்டிக்கு உதாரணங்களாகும்.
A) A சரி ஆனால் R தவறு
B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A சரி மற்றும் R விளக்கம்
D) A மற்றும் R தவறு
விளக்கம்: ஆண்டிசெப்டிக் பாக்டீரியாக்களின் கூட்டமைப்புகள், பூஞ்சைகள், வைரஸ்கள் அல்லது பிற நுண்ணுயிரிகளின் கலவைகளைத் தீவிரமாக எதிர்க்கும் ஆற்றலைப்பெற்றுள்ளது. குளியல் சோப், ஐயோடோபார்ம், பினாலிக்நீர்மங்கள், எத்தனால், போரிக்அமிலம் ஆகியன ஆண்டிசெப்டிக்கு உதாரணங்களாகும்.
48. கீழ்க்கண்டவற்றுள் எவை இயற்கை ஆண்டிசெப்டிக் ஆகும்
a) சோற்றுகற்றாலை
b) மஞ்சள்
c) முள்ளங்கி
d) வெங்காயம்
A) a, b சரி c, d தவறு
B) a, b, c தவறு d சரி
C) a, c, d தவறு b சரி
D) a, b, c, d சரி
விளக்கம்: இயற்கை ஆண்டிசெப்டிக் 1. பூண்டு, 2. மஞ்சள், 3. சோற்றுகற்றாலை 4. வெங்காயம், 5. முள்ளங்கி
49. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
a) கிருமி நாசினி ஐயோடஃபார்ம் டெர்பென்கள் ஆகியவை சேர்ந்த கலவையாகும்
b) அயோடின் (Tincture) அயோடின் + 2 to 3% ஆல்ஹகால் – நீர்கலந்த சோப்பு கரைச ல் , ஐயோடஃபார்ம், பினாலிக் கரைசல்கள், எத்தனால் மற்றும் போரிக் அமிலம் ஆகியவை சில எடுத்துக்காட்டுகளாகும்
A) a, b சரி
B) a சரி b தவறு
C) a தவறு b சரி
D) a, b தவறு
விளக்கம்: கிருமி நாசினி குளோரோசைலெனோல் மற்றும் டெர்பென்கள் ஆகியவை சேர்ந்த கலவையாகும். அயோடின் (Tincture) அயோடின் + 2 to 3% ஆல்ஹகால் – நீர்கலந்த சோப்பு கரைசல், ஐயோடஃபார்ம், பினாலிக் கரைசல்கள், எத்தனால் மற்றும் போரிக் அமிலம் ஆகியவை சில எடுத்துக்காட்டுகளாகும்.
50. ஒவ்வாமை பாதிப்புகளை ஏற்படுத்துவதற்குச் சில எடுத்துக்காட்டுகள் எவை?
A) நமது நாசியில் நுழையும் தாவரங்களின் மகரந்தத் தூள்
B) எரியும் தாவர இலை
C) சில கரிம பொருள்களின் வாசனை போன்ற பொருள்கள்
D) இவை அனைத்தும்
விளக்கம்: நமது நாசியில் நுழையும் தாவரங்களின் மகரந்தத் தூள், எரியும் தாவர இலை மற்றும் சில கரிம பொருள்களின் வாசனை போன்ற பொருள்கள் ஒவ்வாமை பாதிப்புகளை ஏற்படுத்துவதற்குச் சில எடுத்துக்காட்டுகளாகும்.
51. கூற்று(A): ஒவ்வாமை என்பது, உடலின் எதிர்வினையாகும்.
காரணம்(R): இது, பாதகமான விளைவுகளான வாய் வறட்சி மற்றும் தூக்கத்தை ஏற்படுத்துகிறது.
A) A சரி ஆனால் R தவறு
B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A சரி மற்றும் R விளக்கம்
D) A மற்றும் R தவறு
விளக்கம்: ஒவ்வாமை என்பது, உடலின் எதிர்வினையாகும். இது, பாதகமான விளைவுகளான வாய் வறட்சி மற்றும் தூக்கத்தை ஏற்படுத்துகிறது.
52. கீழ்க்கண்டவற்றுள் ஒவ்வாமைக்கு எடுத்துக்காட்டு எது?
a) டிஃபென்ஹைட்ரமைன்
b) குளோர்பெனிரமைன்
c) சிமெடிடின்
d) மெனிங்கோகாக்கஸ்
A) a, b, c சரி
B) a சரி b, c தவறு
C) a, b தவறு b சரி
D) a, b, c சரி d தவறு
விளக்கம்: டிஃபென்ஹைட்ரமைன், குளோர்பெனிரமைன், சிமெடிடின். ஆண்டிஹிஸ்டமினிக்ஸின் போன்றவை சில எடுத்துக்காட்டுகளாகும்.
53. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
a) ஆண்டிசெப்டிக் அனைத்து ஆண்டிசெப்டிக்களும் கிருமிநாசினிகள் அல்ல
b) இது நேரடியாக உயிருள்ள செல்களின் மீது பயன்படுத்தப்படுகிறது.
c) எ.கா. தோல் / சளி
A) a, b, c சரி
B) a, c சரி b தவறு
C) a தவறு b, c சரி
D) a, b, c தவறு
விளக்கம்: அனைத்து ஆண்டிசெப்டிக்களும் கிருமிநாசினிகள் ஆகும். இது நேரடியாக உயிருள்ள செல்களின் மீது பயன்படுத்தப்படுகிறது. எ.கா. தோல் / சளி
54. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை.
a) அனைத்து கிருமிநாசினிகளும் ஆண்டிசெப்டிக் அல்ல.
b) இது உயிருள்ள பொருள் மீது தெளிக்கலாம்.
c) எ.கா. மேற்பரப்பு, ஆய்வக மேசை, தரைகள்.
A) a, b, c சரி
B) a, b சரி c தவறு
C) a தவறு b, c சரி
D) a, b, c தவறு
விளக்கம்: அனைத்து கிருமிநாசினிகளும் ஆண்டிசெப்டிக் அல்ல. இது உயிரற்ற பொருள் மீது தெளிக்கலாம். எ.கா. மேற்பரப்பு, ஆய்வக மேசை, தரைகள்
55. மருந்தை உட்கொள்ளும் வழிகள் யாவை?
A) வாய்வழி பயன்பாடு
B) வெளிப்புற பயன்பாடு
C) ஊசி மருந்துகள் (உள் தசை / உள் சிரை)
D) இவை அனைத்தும்
விளக்கம்: மருந்தை உட்கொள்ள பல வழிகள் உள்ளன. அவையாவன 1. வாய்வழி பயன்பாடு, 2. வெளிப்புற பயன்பாடு, 3. ஊசி மருந்துகள் (உள் தசை / உள் சிரை). நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் நம் நோய்க்கு சிகிச்சையளித்து நல்ல உடல்நலத்தைக் கொடுக்கினறன
56. ஹிஸ்டாமைன் என்பது _________
A) ஒவ்வாமை பாதிப்பு
B) படர்தாமரை
C) அலர்ஜி
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: சில நேரங்களில் நமது நோய் எதிர்ப்பு மண்டலம் தீங்கான பொருள் என்று அவற்றை உடலில் ஏற்றுக்கொள்வது கிடையாது. இந்த வகையான நோய் எதிர்ப்பு அமைப்பு ஒவ்வாமை பாதிப்பு (ஹிஸ்டாமைன்) என்றழைக்கப்படும்.
57. கூற்று(A): எரிதல் என்பது, ஓர் எரிபொருள் ஆக்சிஜனேற்ற காரணியின் முன்னிலையில் நிகழும் வேதி வினையாகும்.
காரணம்(R): இவற்றில் வெப்பம், ஆற்றல் மற்றும் ஒளியும் வெளியிடப்படும்.
A) A சரி ஆனால் R தவறு
B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A சரி மற்றும் R விளக்கம்
D) A மற்றும் R தவறு
விளக்கம்: எரிதல் என்பது, ஓர் எரிபொருள் ஆக்சிஜனேற்ற காரணியின் முன்னிலையில் நிகழும் வேதி வினையாகும். இவற்றில் வெப்பம், ஆற்றல் மற்றும் ஒளியும் வெளியிடப்படும்
58. கூற்று(A): எரிதல் மனிதர்களால் வேண்டுமென்றே பயன்படுத்தப்பட்ட முதல் இயற்பியல் வினைகளில் ஒன்றாகும்.
காரணம்(R): ஆக்ஸிஜனுடன் வினை புரியும் எந்த நிகழ்வும் ஆக்ஸிஜனேற்ற வினை என்று அழைக்கப்படுகிறது
A) A தவறு ஆனால் R சரி
B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A சரி மற்றும் R விளக்கம்
D) A மற்றும் R தவறு
விளக்கம்: எரிதல் மனிதர்களால் வேண்டுமென்றே பயன்படுத்தப்பட்ட முதல் இரசாயன வினைகளில் ஒன்றாகும். ஆக்ஸிஜனுடன் வினை புரியும் எந்த நிகழ்வும் ஆக்ஸிஜனேற்ற வினை என்று அழைக்கப்படுகிறது
59. CH4+2O2 →
A) CO2+2H2O + வெப்ப ஆற்றல்
B) CO+ H2O + வெப்ப ஆற்றல்
C) CO2 + H2 + நீர்
D) CO2+ 2H2O + நீர்
விளக்கம்: ஆக்ஸிஜனுடன் ஹைட்ரோகார்பனை எரிப்பதில், பொதுவாகக் கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீர் உற்பத்தி செய்யப்படுகின்றன
60. அனைத்து எரிதல் வினையின்போது, வெப்பம் வெளியிடப்படுவதால் அவை _________ எனப்படும்
A) வெப்ப உமிழ்வினை
B) வெப்ப கொள்வினை
C) வெப்பவினை
D) உமிழ்வினை
விளக்கம்: அனைத்து எரிதல் வினையின்போது, வெப்பம் வெளியிடப்படுவதால் இது வெப்ப உமிழ்வினை எனப்படுகிறது.
61. கூற்று(A): மிகக் குறைந்த எரிவெப்பநிலையைக் கொண்ட பொருள்கள் எளிதில் தீபிடிக்கக்கூடியவை
காரணம்(R): இவை எரியக்கூடிய பொருள்கள் என்று அழைக்கப்படுகின்றன.
A) A சரி ஆனால் R தவறு
B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A சரி மற்றும் R விளக்கம்
D) A மற்றும் R தவறு
விளக்கம்: மிகக் குறைந்த எரிவெப்பநிலையைக் கொண்ட பொருள்கள் எளிதில் தீபிடிக்கக்கூடியவை. இவை எரியக்கூடிய பொருள்கள் என்று அழைக்கப்படுகின்றன.
62. தீப்பிடித்தலின் வேதிவினை எது?
A) ஆக்ஸிஜன் + வெப்பம் + எரிபொருள் = தீ
B) வெப்பம்+ ஆக்ஸிஜன்+ எரிபொருள்= தீ
C) ஆக்ஸிஜன்+ எரிபொருள்+ வெப்பம்= தீ
D) எரிபொருள்+ ஆக்ஸிஜன்+ வெப்பம்= தீ
விளக்கம்: தீப்பிடித்தலின் வேதிவினை ஆக்ஸிஜன் + வெப்பம் + எரிபொருள் = தீ
63. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
a) ஒரு பொருள் எரிவதற்குத் தேவையான அதிகபட்ச வெப்பநிலை, அதன் எரி வெப்பநிலை என்று அழைக்கப்படுகிறது. எ.கா. மத்தாப்பு எரிதல்
b) ஒரு பொருள் அதன் எரி வெப்பநிலையைவிடக் குறைவாக இருந்தால் தீ பிடிக்காது
A) a, b சரி
B) a சரி b தவறு
C) a தவறு b சரி
D) a, b தவறு
விளக்கம்: ஒரு பொருள் எரிவதற்குத் தேவையான குறைந்தபட்ச வெப்பநிலை, அதன் எரி வெப்பநிலை என்று அழைக்கப்படுகிறது. எ.கா. மத்தாப்பு எரிதல். ஒரு பொருள் அதன் எரி வெப்பநிலையைவிடக் குறைவாக இருந்தால் தீ பிடிக்காது
64. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
a) சுடர் என்பது, ஒரு வேதிவினை மற்றும் வாயுக்களின் கலவையாகும்.
b) சுடரானது ஒளி மற்றும் வெப்பத்தைத் தருகிறது.
c) இது பருப்பொருள்
A) a, b சரி c தவறு
B) a சரி b, c தவறு
C) a, b, c சரி
D) a, b, c தவறு
விளக்கம்: சுடர் என்பது, ஒரு வேதிவினை மற்றும் வாயுக்களின் கலவையாகும். சுடரானது ஒளி மற்றும் வெப்பத்தைத் தருகிறது. இது பருப்பொருள் அன்று ஆனால், நெருப்பு ஒரு இது பருப்பொருள்
65. சுடரின் வேதிவினையாக கருதப்படுபவை எவை?
A) ஆவி நிலையிலுள்ள எரிபொருள்
B) ஆக்ஸிஜன்
C) கார்பன் டை ஆக்சைடு
D) இவை அனைத்தும்
விளக்கம்: ஆவி நிலையிலுள்ள எரிபொருள் ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நீராவி மற்றும் பல எளிதில் ஆவியாகிற பொருள்கள் ஆகியவை சுடரின் வேதிவினையாக்க் கருதப்படுகின்றன.
66. பொருத்துக
a) வெண்மை சுடர் – 1] லித்தியம் உப்பு
b) ஊதா சுடர் – 2] எப்சம் உப்பு
c) இண்டிகோ சுடர் – 3] பிளீச்சிங்பவுடர்
d) நீல சுடர் – 4] பொட்டாசியம் குளோரைடு
a b c d
A) 4 2 3 1
B) 4 1 2 3
C) 2 1 4 3
D) 3 1 4 2
67. பொருத்துக
a) பச்சை சுடர் – 1. போராக்ஸ் பவுடர்
b) மஞ்சள் சுடர் – 2. சமையல் உப்பு
c) ஆரஞ்சு சுடர் – 3. கால்சியம் குளோரைடு
d) சிவப்பு சுடர் – 4. ஸ்டிரான்ஸ்யம் குளோரடு
a b c d
A) 4 2 3 1
B) 1 4 2 3
C) 2 1 4 3
D) 3 1 4 2
68. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
a) சுடர் என்பது, எரியக்கூடிய பொருளின் எரிதல் மண்டலமாகும்.
b) எரியும்போது ஆவியாகும் பொருள்கள் சுடரை உருவாக்குகின்றன. எடுத்துக்காட்டு: .நிலக்கரி
c) சில பொருள்கள் சுடரை உருவாக்காது, ஏனெனில், அவை ஆவியாகாத பொருள்களைக் கொண்டுள்ளன. எ.கா மெழுகு, மண்ணெண்ணெய் போன்றவை ஆகும்.
A) a, b சரி c தவறு
B) a சரி b, c தவறு
C) a, b, c சரி
D) a, b, c தவறு
விளக்கம்: சுடர் என்பது, எரியக்கூடிய பொருளின் எரிதல் மண்டலமாகும். எரியும்போது ஆவியாகும் பொருள்கள் சுடரை உருவாக்குகின்றன. எடுத்துக்காட்டு: மெழுகு, மண்ணெண்ணெய் போன்றவை ஆகும்.சில பொருள்கள் சுடரை உருவாக்காது, ஏனெனில், அவை ஆவியாகாத பொருள்களைக் கொண்டுள்ளன. எ.கா. நிலக்கரி
69. மெழுகு சுடரின் அமைப்பை அடையாளம் காணவும்
a) எரிபொருள் முழுமையான எரிதல் நடைபெறும் பகுதியாகும்.
b) இது நீலநிறத்தை கொண்ட வெப்பமான பகுதியாகும்.
c) இது சுடரின் ஒளிராத பகுதியாகும்.
A) சுடரின் உட்புற பகுதி
B) சுடரின் வெளிப்புறப் பகுதி
C) சுடரின் நடுப்பகுதி
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: சுடரின் வெளிப்புறப் பகுதி: எரிபொருள் முழுமையான எரிதல் நடைபெறும் பகுதியாகும். இது நீலநிறத்தை கொண்ட வெப்பமான பகுதியாகும். இது சுடரின் ஒளிராத பகுதியாகும்.
70. மெழுகு சுடரின் அமைப்பை அடையாளம் காணவும்
a) எரிபொருள் குறைவாக எரிதல் நடைபெறும் பகுதியாகும்
b) இது மஞ்சள் நிறத்தை கொண்ட வெப்பமான பகுதியாகும்.
c) இது சுடரின் ஒளிரும் பகுதி
A) சுடரின் உட்புற பகுதி
B) சுடரின் வெளிப்புறப் பகுதி
C) சுடரின் நடுப்பகுதி
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: சுடரின் நடுப்பகுதி: எரிபொருள் குறைவாக எரிதல் நடைபெறும் பகுதியாகும். இது மஞ்சள் நிறத்தை கொண்ட வெப்பமான பகுதியாகும். இது சுடரின் ஒளிரும் பகுதி
71. மெழுகு சுடரின் அமைப்பை அடையாளம் காணவும்
a) எரிபொருள் எரியாத வாயுக்களைக் கொண்ட பகுதியாகும்
b) இது கருமை நிறம் கொண்ட
c) மிக குறைந்த வெப்பப்பகுதியாகும்
A) சுடரின் உட்புற பகுதி
B) சுடரின் வெளிப்புறப் பகுதி
C) சுடரின் நடுப்பகுதி
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: எரிபொருள் எரியாத வாயுக்களைக் கொண்ட பகுதியாகும். இது கருமை நிறம் கொண்ட மிக குறைந்த வெப்பப்பகுதியாகும்
72. கூற்று(A): மெழுகுவர்த்தியின் மேலே உள்ள காற்று எரிவதால் மெழுகுவர்த்தி சுடர் உருவாகிறது
காரணம்(R): வெப்பசலனக் கொள்கையின்படி சுடரின் மேல் எரியக்கூடிய காற்றின் அடா்த்தியானது சுற்றுப்புறத்தில் உள்ள காற்றின் அடா்த்தியைவிட குறைவாக இருப்பதால் சுடரானது எப்போழுதும் மேல்நோக்கி இருக்கின்றது
A) A சரி ஆனால் R தவறு
B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A சரி மற்றும் R விளக்கம்
D) A மற்றும் R தவறு
விளக்கம்: மெழுகுவர்த்தியின் மேலே உள்ள காற்று எரிவதால் மெழுகுவர்த்தி சுடர் உருவாகிறது. வெப்பசலனக் கொள்கையின்படி சுடரின் மேல் எரியக்கூடிய காற்றின் அடா்த்தியானது சுற்றுப்புறத்தில் உள்ள காற்றின் அடா்த்தியைவிட குறைவாக இருப்பதால் சுடரானது எப்போழுதும் மேல்நோக்கி இருக்கின்றது
73. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
a) ஒரு கிலோ எரிபொருளானது முழுமையாக எரிதல் நடைபெற்று வெளியிடப்படும், வெப்ப ஆற்றலின் அளவு ஒரு கலோரிஃபிக் மதிப்பு என்று அழைக்கப்படுகிறது.
b) கலோரிஃபிக் மதிப்பு = உற்பத்தி செய்யப்படும் வெப்பம் / எரிக்கப் பயன்படுத்தப்படும் எரிபொருளின் அளவு kg/ kJ
A) a சரி b தவறு
B) a, b தவறு
C) a, b சரி
D) a தவறு b சரி
விளக்கம்: ஒரு கிலோ எரிபொருளானது முழுமையாக எரிதல் நடைபெற்று வெளியிடப்படும், வெப்ப ஆற்றலின் அளவு ஒரு கலோரிஃபிக் மதிப்பு என்று அழைக்கப்படுகிறது. கலோரிஃபிக் மதிப்பு = உற்பத்தி செய்யப்படும் வெப்பம் / எரிக்கப் பயன்படுத்தப்படும் எரிபொருளின் அளவு KJ/Kg
74. 4.5 கிலோ எரிபொருள் முழுவதுமாக எரிந்து, உற்பத்தி செய்யப்படும் வெப்பத்தின் அளவு 1, 80,000 கி.ஜே. என அளவிடப்படுகிறது என்றால் அதன் கலோரிஃபிக் மதிப்பு என்ன?
A) 45,000 KJ/Kg
B) 40,000 KJ/Kg
C) 50,000 KJ/Kg
D) 55,000 KJ/Kg
விளக்கம்: கலோரிஃபிக் மதிப்பு = 1, 80,000 / 4.5 = 40,000 KJ / Kg
75. பொருத்துக
a) மாட்டுச்சாணம் – 1] 17000-22000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg)
b) மரக்கட்டை – 2] 6000-8000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg)
c) நிலக்கரி – 3] 25000-33000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg)
d) பெட்ரோல் – 4] 45000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg)
a b c d
A) 4 2 3 1
B) 1 4 2 3
C) 2 1 3 4
D) 3 1 4 2
76. பொருத்துக
a) மண்எண்ணெய் – 1] 45000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg)
b) டீசல் – 2] 450000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg)
c) மீத்தேன் – 3] 500000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg)
d) சி.என்.ஜி – 4] 50000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg)
a b c d
A) 4 2 3 1
B) 1 2 3 4
C) 2 1 3 4
D) 3 1 4 2
விளக்கம்: எல்.பி.ஜி- 55000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg), பயோகேஸ்- 35000-40000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg), ஹைட்ரஜன்- 150000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg)
77. சுற்றுச்சூழல் பாதிப்புகள் எதற்கு வழிவகுக்கிறது?
A) சுவாச பிரச்சனைக்கு வழிவகுக்கிறது
B) உலக வெப்பமயமாதல்
C) அமிலமழை
D) இவை அனைத்தும்
விளக்கம்: சுற்றுச்சூழல் பாதிப்புகள்: CO- சுவாச பிரச்சனைக்கு வழிவகுக்கிறது, CO2– உலக வெப்பமயமாதல், SO2/ NO2 – அமிலமழை
78. வேகமாக எரிதல் என்பது
A) சுவாசித்தல்
B) எல். பி. ஜி எரிதல்
C) பாஸ்பரஸ் எரிதல்
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: வெளிப்புற வெப்பத்தின் உதவியுடன் பொருளானது வேகமாக எரிந்து வெப்ப ஆற்றலையும் ஒளியையும் உருவாகிறது
79. பாஸ்பரஸ் அறைவெப்பநிலையில் தன்னிச்சையாக எரிதல் என்பது
A) வேகமாக எரிதல்
B) தன்னிச்சையாக எரிதல்
C) மெதுவாக எரிதல்
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: வெளிப்புற வெப்பத்தின் உதவியின்றி பொருளானது தன்னிச்சையாக எரிந்து வெப்பத்தையும் ஒளியையும் உருவாக்குகிறது
80. சுவாசித்தல் என்பது
A) மெதுவாக எரிதல்
B) வேகமாக எரிதல்
C) தன்னிச்சையாக எரிதல்
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: பொருளானது குறைந்த வேகத்தில் எரிதல் மெதுவாக எரிதல் என்று பெயர்.
81. ஒரு நல்ல எரிபொருளின் பண்புகள்
a) சுற்றுசூழலை மாசுபடுத்ததாக இருத்தல் வேண்டும்
b) விரும்பத்தகுந்த எந்த ஒரு பொருளையும் வெளியிடுவதாக இருத்தல் வேண்டும்
c) அதிகமான வேகத்தில் எரிதல் வேண்டும்
d) குறைந்த அளவு வெப்பாற்றல் வழங்குவதாக இருத்தல் வேண்டும்
A) a, b சரி c, d தவறு
B) a சரி b, c, d தவறு
C) a, b, c, d சரி
D) a, b, c, d தவறு
விளக்கம்: சுற்றுசூழலை மாசுபடுத்ததாக இருத்தல் வேண்டும், விரும்பத்தகாத எந்த ஒரு பொருளையும் வெளியிடுவதாக இருத்தல் கூடாது, மிதமான வேகத்தில் எரிதல் வேண்டும், அதிகளவு வெப்பாற்றல் வழங்குவதாக இருத்தல் வேண்டும்.
82. நெருப்பை கட்டுப்படுத்தும் காரணிகள் யாவை?
A) எரிபொருள்
B) காற்று (ஆக்ஜிஸன் வழங்க)
C) எரிதல் வெப்பநிலை
D) இவை அனைத்தும்
விளக்கம்: ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை அகற்றுவதன் மூலம் நெருப்பை கட்டுப்படுத்தலாம். எரிபொருள், காற்று (ஆக்ஜிஸன் வழங்க), எரிதல் வெப்பநிலை
83. கூற்று(A): ஒரு தீயணைப்பு கருவியானது காற்று அல்லது எரிபொருளின் வெப்பநிலையைக் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றின் விநியோகத்தையும் துண்டித்துவிடுகிறது.
காரணம்(R): ஆக்ஸிஜனை வினைபுரியாமல் தடுத்தல் அல்லது அகற்றுதல் மற்றும் வேதிவினை நிகழாமல் தடுத்தல் போன்ற விளைவுகளைச் செய்கிறது. அதனால், தொடர்ந்து எரிய முடியாமல் தீ தடுக்கப்படுகிறது.
A) A தவறு ஆனால் R சரி
B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A சரி மற்றும் R விளக்கம்
D) A மற்றும் R தவறு
விளக்கம்: ஒரு தீயணைப்பு கருவியானது காற்று அல்லது எரிபொருளின் வெப்பநிலையைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றின் விநியோகத்தையும் துண்டித்துவிடுகிறது. தீயை அணைக்கும் கருவிகள், எரியும் எரிபொருளை குளிர்விக்கின்றது. ஆக்ஸிஜனை வினைபுரியாமல் தடுத்தல் அல்லது அகற்றுதல் மற்றும் வேதிவினை நிகழாமல் தடுத்தல் போன்ற விளைவுகளைச் செய்கிறது. அதனால், தொடர்ந்து எரிய முடியாமல் தீ தடுக்கப்படுகிறது.
84. ஒரு தீ அணைப்பான் _________ கருவிபோல செயல்படுகிறது.
A) பரிசோதனை கருவி
B) மருந்து அகற்றும் கருவி
C) மருந்து தெளிப்பான்
D) எதுவுமில்லை
விளக்கம்: ஒரு தீ அணைப்பான் மருந்து, தெளிப்பான் கருவிபோல செயல்படுகிறது.
85. தீயனைப்பான் எத்தனை வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன?
A) 1
B) 3
C) 2
D) 5
86. நிமோனியா, மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சையில் பயனுள்ள ஒரு மருந்து எது?
A) ஸ்ட்ரெப்டோமைசின்
B) குளோரோம்பெனிகால்
C) பென்சிலின்
D) சல்பாகுனிடின்
87. உலக ORS தினம் _________
A) ஜூலை 29
B) ஜூலை 27
C) ஜூன் 29
D) ஜூன் 28
விளக்கம்: தீயனைப்பான் ஐந்து வகையாக வகைப்படுத்தப்டுகிறது.
88. தீயனைப்பானின் வகைகள் யாவை?
A) உலர்ந்த வேதித்துகள்கள்
B) நீர்ம இரசாயனங்கள்
C) நீர்
D) இவை அனைத்தும்
விளக்கம்: தீயனைப்பான் ஐந்து வகையாக வகைப்படுத்தப்டுகிறது அவை 1. நீர் 2. நுரை 3. உலர்ந்த வேதித்துகள்கள் 4. CO2 5. நீர்ம இரசாயனங்கள்
89. தீயை அணைக்கும் பொருள்களின் வகைகள் யாவை?
A) காற்று அழுத்த நீர் அணைப்பான்கள்
B) கார்பன்-டை-ஆக்சைடு அணைப்பான்
C) உலர் ரசாயன தூள் அணைப்பான்கள்
D) இவை அனைத்தும்
விளக்கம்: தீயை அணைக்கும் பொருள்களின் பொதுவான வகைகள்: காற்று அழுத்த நீர் அணைப்பான்கள், கார்பன்-டை-ஆக்சைடு அணைப்பான், உலர் ரசாயன தூள் அணைப்பான்கள்.
90. பொருத்துக
a) வகுப்பு A – 1] பெட்ரோல், டர்பெண்டைன் அல்லது பெயிண்ட் போன்ற எரியக்கூடிய திரவப்பொருட்களால் ஏற்படுகிறது
b) வகுப்பு B – 2] மரம், காகிதம் மற்றும் துணி போன்ற எரியக்கூடிய திடப்பொருட்களால் ஏற்படுகிறது
c) வகுப்பு C – 3] எண்ணெய்யால் ஏற்படும் தீ
d) வகுப்பு D – 4] ஹைட்ரஜன், பியூட்டேன் அல்லது மீத்தேன் போன்ற எரியக்கூடிய வாயுப்பொருட்களால் ஏற்படுகிறது
a b c d
A) 4 2 3 1
B) 2 1 4 3
C) 2 1 3 4
D) 3 1 4 2
விளக்கம்: வகுப்பு E – மின்சார தீ விபத்துகள்- மின்சார உபகரணங்களால் ஏற்படும் தீ, மின்சார நெருப்பு – மின் உபகரணங்கள்: மின் பொருள் அகற்றப்பட்டதும், நெருப்பு வகுப்பை மாற்றுகிறது
91. எரிதல் என்பது ஒருவேதிவினை, இதில்பொருள் _________ உடன் வினைபுரிகிறது
A) வெப்பம்
B) நீர்
C) ஆக்ஜினேற்ற காரணி
D) ஆக்ஜிஸன்
விளக்கம்: எரிதல் என்பது, ஓர் எரிபொருள் ஆக்சிஜனேற்ற காரணியின் முன்னிலையில் நிகழும் வேதி வினையாகும்.
92. நீரில் நனைந்த காகிதத்தின் எரிவெப்பநிலை
A) 451°F
B) 452°F
C) 453°F
D) 454°F
93. எண்ணெய்யால் உற்பத்தி செய்யப்படும் நெருப்பை _________ ஆல் கட்டுப்படுத்த முடியாது
A) தண்ணீர்
B) மண்ணெண்ணெய்
C) பெட்ரோல்
D) இவற்றில் எதுவுமில்லை
94. பொருத்துக
a) அமிலநீக்கி – 1] கோகைன்
b) ஆண்டிபயாடிக் – 2] பாராசிட்டமால்
c) வலி நிவாரணி – 3] சோடியம் பை கார்பனேட்
d) மயக்கமூட்டி – 4] பென்சிலின்
a b c d
A) 4 2 3 1
B) 2 1 4 3
C) 2 1 3 4
D) 3 4 2 1
95. பொருத்துக
a) ஆன்டிசெப்டிக் – 1] எல். பி. ஜி
b) கிருமிநாசினி – 2] சி. என். ஜி
c) திரவ பெட்ரோலிய வாயு – 3] குளியல் சோப்பு
d) அழுத்தப்பட்ட இயற்கை வாயு – 4] டெட்டால்
a b c d
A) 4 2 3 1
B) 2 1 4 3
C) 3 4 1 2
D) 3 4 2 1
96. மனிதனில் கண்டறியப்பட்ட முதல் வைரஸ் நோய்
A) மஞ்சள் காமாலை
B) காலரா
C) பெரியம்மை
D) HIV
விளக்கம்: மஞ்சள் காமாலை 1901 ல் மனிதனில் கண்டறியப்பட்ட முதல் வைரஸ் நோய் ஆகும்
97. 1860 இல் ஆல்பர்ட் நீம்மானின் என்பவர் _________ இலைகளிலிருந்து கோகைன் என்ற முதல் மயக்கமூட்டும் மருந்தினைப் பிரித்தெடுத்தார்.
A) கோகா
B) கோகோ
C) போகோ
D) கோமா
விளக்கம்: 1860 இல் ஆல்பர்ட் நீம்மானின் என்பவர் கோகோ இலைகளிலிருந்து கோகைன் என்ற முதல் மயக்கமூட்டும் மருந்தினைப் பிரித்தெடுத்தார்.
7th Science Lesson 16 Questions in Tamil
16] அன்றாட வாழ்வில் விலங்கியல்
1. கூற்று (A): இயற்கையின் மிகப் சிறிய கொடைகளுள் ஒன்று விலங்குகளாகும். அவை அன்றாட வாழ்வில் மனிதரோடு மிகவும் நெருக்கமாக இணைந்துள்ளன.
கூற்று (B): நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வணிக மேம்பாட்டிற்க்கும் ஊர்வனங்கள் மிகவும் உதவுகின்றன. நமக்கு உணவு உடை மற்றும் போக்குவரத்து ஆகியவற்றிற்கு ஊர்வனங்கள் பயன்படுகின்றன.
A) கூற்று A மற்றும் B இரண்டும் சரி
B) கூற்று A சரி B தவறு
C) கூற்று A தவறு B சரி
D) கூற்று A மற்றும் B இரண்டும் தவறு
விளக்கம்: இயற்கையின் மிகப் பெரிய கொடைகளுள் ஒன்று விலங்குகளாகும். அவை அன்றாட வாழ்வில் மனிதரோடு மிகவும் நெருக்கமாக இணைந்துள்ளன. நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வணிக மேம்பாட்டிற்க்கும் விலங்குகள் மிகவும் உதவுகின்றன. நமக்கு உணவு உடை மற்றும் போக்குவரத்து ஆகியவற்றிற்கு விலங்குகள் பயன்படுகின்றன.
2. கீழ்க்கண்டவற்றுள் தவறானதை கண்டுபிடி.
1) பால் என்பது, வெண்மையான ஒரு திரவம். இது விலங்குளில் பாலூட்டிகளின் வியர்வை சுரப்பிலிருந்து உற்பத்தியாகிறது.
2) பாலானது தேநீர், காஃபி, ஐஸ்கிரீம், சாக்லேட், இனிப்பு மற்றும் இவை போன்ற பால் சம்பந்தமான பொருள்களைத் தயாரிக்க உதவுகிறது.
3) பாலானது புரதம் மற்றும் கொழுப்புகள் மிக்க ஊட்டச்சத்து உணவாக இருப்பதால் பன்னீர், பாலாடைக்கட்டி, க்ரீம், நெய் மற்றும் தயிர் போன்றவற்றைத் தயாரிக்க உதவுகிறது.
A) 1 மற்றும் 3 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) 1 மற்றும் 3 மட்டும் தவறு
D) அனைத்தும் தவறு
விளக்கம்: பால் என்பது, வெண்மையான ஒரு திரவம். இது விலங்குளில் பாலூட்டிகளின் பால் சுரப்பிலிருந்து உற்பத்தியாகிறது. பாலானது புரதம் மற்றும் கால்சியம் மிக்க ஊட்டச்சத்து உணவாக இருப்பதால் பன்னீர், பாலாடைக்கட்டி, க்ரீம், நெய் மற்றும் தயிர் போன்றவற்றைத் தயாரிக்க உதவுகிறது.
3. கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
1) பெண் பறவைகளான கோழி, வாத்து, வான்கோழி மற்றும் நெருப்புக்கோழிகள் போன்றவை அவற்றின் இளம் உயிரிகள் உருவாவதற்கு முட்டையிடுகின்றன.
2) முட்டையானது கொழுப்பு நிறைந்த ஊட்டச்சத்து உடையதாகும்.
3) ஐந்து கிராம் எடையுள்ள முட்டை உயர்ந்தரகப் புரதத்தைக் கொண்டதாகும்.
4) முட்டையானது நம் உடலுக்குச் சக்தியையும், நல்ல ஆரோக்கியத்தையும் தருகின்றது.
A) 2 மற்றும் 3 சரி
B) 1, 3, 4 மட்டும் சரி
C) 1 மற்றும் 4 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: பல்வேறு வகையான பெண் பறவைகள் அதாவது கோழி, வாத்து, வான்கோழி மற்றும் நெருப்புக்கோழிகள் போன்றவை அவற்றின் இளம் உயிரிகள் உருவாவதற்கு முட்டையிடுகின்றன. முட்டையானது நம் உடலுக்குச் சக்தியையும், நல்ல ஆரோக்கியத்தையும் தருகின்றது. இது புரதம் நிறைந்த ஊட்டச்சத்து உடையதாகும். ஆறு கிராம் எடையுள்ள முட்டை உயர்ந்தரகப் புரதத்தைக் கொண்டுள்ளது.
4. கீழ்க்கண்டவற்றுள் சரியானதைக் கண்டுபிடி.
1) பாத்திரத்தில் உள்ள நீரினுள் முட்டையானது மூழ்கினால் அது அழுகிய முட்டையாகும்.
2) நீரில் இடப்பட்ட ஒரு துளித் தேன் கரையாமல் பாத்திரத்தின் அடிப்பகுதி வரை சென்றால் அது சுத்தமான தேனாகும்
3) பாத்திரத்தில் உள்ள நீரினுள் முட்டையானது மிதந்தால் அது நல்ல முட்டையாகும்.
4) நீரில் இடப்பட்ட ஒரு துளித் தேன் பாத்திரத்தின் அடிப்பகுதியை அடையும் முன்னரே அது கரைந்தால் அது சுத்தமான தேன் இல்லை.
A) 2 மற்றும் 4 தவறு
B) 2 மற்றும் 4 சரி
C) 1 மற்றும் 3 சரி
D) 1 மற்றும் 3 தவறு
விளக்கம்: பாத்திரத்தில் உள்ள நீரினுள் முட்டையானது மூழ்கினால் அது நல்ல முட்டையாகும். பாத்திரத்தில் உள்ள நீரினுள் முட்டையானது மிதந்தால் அது அழுகிய முட்டையாகும்.
5. கீழ்க்கண்டவற்றுள் சரியானதை கண்டுபிடி.
1) தேனீக்கள் மலர்களிலிருந்து, பெக்டார் என்ற இனிப்புச் சாற்றைச் சேகரித்து, அதைத் தேனாக மாற்றி, அதை தேன் கூட்டில் உள்ள தேன் அறைகளில் சேமிக்கின்றன.
2) மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களால், அடர்ந்த காடுகளில் உள்ள தேன் கூடுகளிலிருந்து செயற்கையான மலைத் தேன் எடுக்கப்படுகிறது.
3) தேன் சிறந்த மருத்துவ குணம் மிக்கது, அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும்.
A) அனைத்தும் சரி
B) அனைத்தும் தவறு
C) 1 மற்றும் 2 மட்டும் சரி
D) 3 மட்டும் சரி
விளக்கம்: தேனீக்கள் மலர்களிலிருந்து, நெக்டார் என்ற இனிப்புச் சாற்றைச் சேகரித்து, அதைத் தேனாக மாற்றி, அதை தேன் கூட்டில் உள்ள தேன் அறைகளில் சேமிக்கின்றன. மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களால், அடர்ந்த காடுகளில் உள்ள தேன் கூடுகளிலிருந்து இயற்கையான மலைத் தேன் எடுக்கப்படுகிறது.
6. கூற்று (A): வேலைக்காரத் தேனீக்களின் வேலை மலர்களில் உள்ள தேனைச் சேகரிப்பது மற்றும் இளந்தேனீக்களை அழிப்பது.
கூற்று (B): வேலைக்காரத்தேனீ தேன் கூடு சேதம் அடைந்தால் அதைச் சரி செய்யும், மேலும் தேன் கூட்டைப் பாதுகாக்கும்.
A) கூற்று A தவறு B சரி
B) கூற்று A, B இரண்டும் தவறு
C) கூற்று A சரி B தவறு
D) கூற்று A, B இரண்டும் சரி
விளக்கம்: வேலைக்காரத் தேனீக்களின் வேலை என்னவென்றால் மலர்களில் உள்ள தேனைச் சேகரிக்கும், மேலும் அவை இளந்தேனீக்களை வளர்க்கும்.
7. கூற்று (A): விலங்குகளின் உடலின் தசைப்பகுதி இறைச்சி ஆகும். பெரும்பாலும் இறைச்சி என்பது எலும்புத் தசையையும் அதில் உள்ள புரதத்தையும் குறிக்கும்.
கூற்று (B): இறைச்சியில் ஊட்டச்சத்து அதிகம் இருப்பதால் அது முக்கிய உணவாகப் பயன்படுகிறது.
A) கூற்று அ தவறு ஆ சரி
B) கூற்று அ, ஆ இரண்டும் தவறு
C) கூற்று அ சரி ஆ தவறு
D) கூற்று அ, ஆ இரண்டும் சரி
விளக்கம்: விலங்குகளின் உடலின் தசைப்பகுதி இறைச்சி ஆகும். பெரும்பாலும் இறைச்சி என்பது எலும்புத் தசையையும் அதில் உள்ள கொழுப்பையும் குறிக்கும். மனிதர்களில் சிலர், கோழி, ஆடு, முயல், இறால் போன்றவற்றை உணவாக உட்கொள்கின்றனர்.
8. பண்ணைகளில் பறவைகள் வளர்க்கப்படுவதற்கான காரணங்களுல் சரியானது___________
A) முட்டை
B) இறைச்சி
C) முட்டை மற்றும் இறைச்சி
D) விற்பனைக்காக
விளக்கம்: வீட்டில் வளர்க்கப்படும் பறவைகளான கோழி, வாத்து, வான்கோழி, போன்றவற்றை அவற்றின் இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் வளர்ப்பது பண்ணை அமைத்தல் எனப்படும். இவற்றை நாம் இருவகைகளாகப் பிரிக்கலாம். அவை முட்டையிடுபவை, இறைச்சிக்காக வளர்க்கப்படுபவை(பிராய்லர்).
9. கோழிப்பண்ணைகள் அமைக்கப் தேவையான பாதுகாப்பான வாழ்விடங்கள்____________
A) கூடுகள், தேவையான நீர்
B) காற்றோட்டம், புரதம்
C) கொழுப்பு, வைட்டமின்கள்
D) மேற்க்கண்ட அனைத்தும்
விளக்கம்: கோழிப்பண்ணைகள் அமைக்கப் போதுமான பாதுகாப்பான இடம் தேவைப்படுகிறது. கோழிகளை அடைக்கக் கூடுகள், தேவையான நீர், காற்றோட்டம், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள் நிறைந்த உணவுப்பொருள்கள் போன்றவை தேவைப்படுகின்றன.
10. பொருத்துக:
A) சால்மோனெல்-லோசிஸ் – 1. பூஞ்சை
B) ரானிக் கெட் நோய் – 2. பாக்டீரியா
C) ஆஸ்பர்ஜில்லஸ் நோய் – 3. வைரஸ்
D) நெக்டார் – 4. இனிப்புச் சாறு
A) 2 3 4 1
B) 2 3 1 4
C) 3 2 1 4
D) 1 2 3 4
விளக்கம்:
A) சால்மோனெல்-லோசிஸ் – 1. பாக்டீரியா
(வயிற்றுப்போக்கு)
B) ரானிக் கெட் நோய் – 2. வைரஸ்
(அம்மை நோய்)
C) ஆஸ்பர்ஜில்லஸ் நோய் – 3. பூஞ்சை
D) நெக்டார் – 4. இனிப்புச் சாறு
11. கூற்று (A): ஆடுகளின் உரோமத்தைக் கொண்டு கம்பளி ஆடைகள், சால்வைகள், போர்வைகள் போன்றவை தயாரிக்க உதவுகின்றன.
கூற்று (B): கரடிகளின் உரோமம், ஓவியம் தீட்டும் தூரிகையை உருவாக்கப் பயன்படுகிறது.
A) கூற்று A தவறு B சரி
B) கூற்று A சரி B தவறு
C) கூற்று A, B இரண்டும் தவறு
D) கூற்று A, B இரண்டும் சரி
விளக்கம்: ஆடுகளின் உரோமத்தைக் கொண்டு கம்பளி ஆடைகள், சால்வைகள், போர்வைகள், தலை முக்காடு மற்றும் காலுறைகள் போன்றவை தயாரிக்க உதவுகின்றன. குதிரையின் உரோமம், ஓவியம் தீட்டும் தூரிகையை உருவாக்கப் பயன்படுகிறது.
12. கீழ்க்கண்டவற்றுள் தவறானதை கண்டுபிடி.
1) பஞ்சு மற்றும் சணல் போன்றவை தாவர இழைகளால் தயாரிக்கப்படுகின்றன.
2) கம்பளி மற்றும் பட்டு இழைகள், விலங்கு இழைகளில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.
3) கம்பளி என்பது, ஆட்டின் கடின உரோமக் கற்றையிலிருந்து எடுக்கப்படும் இழையாகும்.
A) அனைத்தும் தவறு
B) அனைத்தும் சரி
C) 3 மட்டும் தவறு
D) 1, 2 மட்டும் தவறு
விளக்கம்: கம்பளி என்பது, ஆட்டின் மென் உரோமக் கற்றையிலிருந்து எடுக்கப்படும் இழையாகும். இதைத் தவிர முயல், யாக், அல்பாகா (உரோம ஆடு) மற்றும் ஒட்டகத்திலிருந்து கம்பளி இழைகள் எடுக்கப்படுகின்றன. பட்டுப்புழுவின் கூட்டிலிருந்து எடுக்கப்படும் இழையே பட்டு இழையாகும்.
13. கீழ்க்கண்டவற்றுள் சரியானதைக் கண்டுபிடி.
1) கம்பளி என்ற இழை, கேப்ரினே என்ற குடும்பத்தைச் சார்ந்த விலங்குகளின் கடினமுடிக் கற்றையிலிருந்து பெறப்படுகிறது.
2) கம்பளி, ஆட்டின் அகத்தோல் பகுதியிலிருக்கும் உரோமத்தால் உருவாக்கப்படுவதாகும்.
3) பெரும்பாலும் கம்பளியானது ஆடு, செம்மறிஆடு, முயல், காட்டெருமையிலிருந்து பெறப்படுகிறது.
A) 3 மட்டும் சரி
B) 1, 2 இரண்டும் தவறு
C) மூன்றும் தவறு
D) 1 மட்டும் தவறு
விளக்கம்: கம்பளி என்ற இழை, கேப்ரினே என்ற குடும்பத்தைச் சார்ந்த விலங்குகளின் மென்முடிக் கற்றையிலிருந்து பெறப்படுகிறது. கம்பளி, ஆட்டின் புறத்தோல் பகுதியிலிருக்கும் உரோமத்தால் உருவாக்கப்படுவதாகும்.
14. கம்பளியானது கீழ்க்கண்ட எத்தனை படிநிலைகளில் உருவாக்கப்படுகின்றன.
A) நான்கு
B) ஐந்து
C) ஆறு
D) எட்டு
விளக்கம்: கம்பளியை உருவாக்க ஐந்து படிநிலைகள் உள்ளன. அவை: கத்தரித்தல், தரம் பிரித்தல், கழுவுதல், சிக்கெடுத்தல், நூற்றல் ஆகியவையாகும்.
15. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததை தேர்ந்தெடு.
A) கத்தரித்தல்: ஆடுகளின் உடலில் உள்ள சதைப்பகுதியிலிருந்து உரோமங்களை மட்டும் பிரித்தெடுக்கும் நிகழ்வாகும்.
B) தரம் பிரித்தல்: வெவ்வேறு ஆட்டின் வெவ்வேறு பாகங்களிலிருந்து எடுக்கப்படும் உரோமங்களை பின்னர் தனித்தனியாக பிரித்தெடுக்கப்படும் நிகழ்வாகும்.
C) கழுவுதல்: தோலின் உரோமங்களில் உள்ள தூசி, அழுக்கு, மற்றும் எண்ணெய் பிசின் போன்றவற்றை சலவைத்தூள் கொண்டு கழுவுதல் நிகழ்வாகும்
D) சிக்கெடுத்தல்: காய வைத்த கம்பெளி இழைகளை பிரித்து மெல்லிய கம்பி போன்ற இழையாக மாற்றுதல்.
விளக்கம்: தரம் பிரித்தல் – ஒரே ஆட்டின் வெவ்வேறு பாகங்களிலிருந்தும் எடுக்கப்படும் உரோமங்கள் வெவ்வேறானவை. இவை பின்னர் தனித்தனியாகப் பிரித்தெடுக்கப்படும்.
16. கீழ்க்கண்டவற்றுள் கம்பளியுடன் தொடர்பில்லாதது எது?
1) வெப்பம் மற்றும் தண்ணீருக்கு எதிர்ப்புத் தன்மை உடையது மற்றும் இவை கிழிவதில்லை.
2) ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையற்றது.
3) கம்பளியானது சிறந்த வெப்பக் கடத்தியாகக் கருதப்படுகிறது.
4) இது எளிதில் சுருங்கும் தன்மையுடையது.
A) 1, 2, 3 தவறு
B) 2, 3, 4 தவறு
C) 2 மற்றும் 4 மட்டும் தவறு
D) 4 மட்டும் தவறு
விளக்கம்: வெப்பம் மற்றும் தண்ணீருக்கு எதிர்ப்புத் தன்மை உடையது மற்றும் இவை கிழிவதில்லை. ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையுடையது. கம்பளியானது சிறந்த வெப்பக் கடத்தியாகக் கருதப்படுகிறது. இது எளிதில் சுருங்காது.
17. கூற்று (A): கம்பளி என்பது, பல்வேறு வகையான பொருள்கள் செய்ய உதவும் இழையாகும். இந்த இழைகளின் விட்டம் ஆடைகள், வீட்டிற்குத் தேவையான துணிகள் மற்றும் தொழிற்சாலைக்கு தேவையான பொருள்கள் செய்ய உதவுகின்றன.
கூற்று (B): மூன்றில் ஒரு பங்கு கம்பளி இழைகள், ஸ்வெட்டர், ஆடைகள், கோட் மற்றும் விளையாட்டு வீரர்கள் அணியும் ஆடைகள் தயாரிக்க உதவுகின்றன.
A) கூற்று A தவறு B சரி
B) கூற்று A சரி B தவறு
C) கூற்று A, B இரண்டும் தவறு
D) கூற்று A, B இரண்டும் சரி
விளக்கம்: மூன்றில் இரண்டு பங்கு கம்பளி இழைகள், ஸ்வெட்டர், ஆடைகள், கோட் மற்றும் விளையாட்டு வீரர்கள் அணியும் ஆடைகள் தயாரிக்க உதவுகின்றன.
18. கீழ்க்கண்டவற்றுள் பட்டுப் பற்றிய கூற்றுகளில் தொடர்பில்லாதது எது?
1) பட்டு என்பது பட்டுப் பூச்சியின் கூடுகளில் சுரக்கும் இழையாகும்.
2) மல்பரி இலைகளை உணவாக உண்ணும் பட்டுப்புழுக்களிலிருந்து பட்டு இழைகள் பெறப்படுகின்றன.
3) பட்டுப் புழுக்கள் குறுகிய காலமே வாழும் தன்மையுடையது. அதாவது மூன்று மாதங்கள் மட்டுமே வாழும்.
4) பட்டுப் புழுக்கள் தன் வாழ்க்கைசுழற்சியில் ஐந்து வளர்ச்சி நிலைகளைக் கடக்க வேண்டும்.
A) அனைத்தும் தவறு
B) 1, 2 மட்டும் தவறு
C) 3, 4 மட்டும் தவறு
D) 1, 2, 3 தவறு
விளக்கம்: பட்டுப் புழுக்கள் குறுகிய காலமே வாழும் தன்மையுடையது. அதாவது இரண்டு மாதங்கள் மட்டுமே வாழும். பட்டுப் புழுக்கள் தன் வாழ்க்கைசுழற்சியில் நான்கு வளர்ச்சி நிலைகளைக் கடக்க வேண்டும். அவை முட்டை, லார்வா, நிலை(கம்பளிப்பூச்சி), கூட்டுப்புழு(குக்கூன்) மற்றும் பட்டுப்பூச்சியாகும்.
19. பொருத்துக:
A) பட்டுப்பூச்சி வளர்ப்பு 1. ஆறு வாரங்கள்
B) முதிர்ந்த பெண் பட்டுப்பூச்சி 2. ஐந்து நாள்
C) குளிர் வெப்பநிலை 3. செரிகல்சர்
D) பட்டு இழை உற்பத்தி 4. 500 முட்டைகள்
A) 4 3 1 2
B) 3 4 1 2
C) 4 3 2 1
D) 1 2 3 4
விளக்கம்:
A) பட்டுப்பூச்சி வளர்ப்பு – செரிகல்சர்
B) முதிர்ந்த பெண் பட்டுப்பூச்சி – 500 முட்டைகள்
C) குளிர் வெப்பநிலை – ஆறு வாரங்கள்
D) பட்டு இழை உற்பத்தி – ஐந்து நாள்
20. பட்டுப்பூச்சியின் சரியான வாழ்க்கைசுழற்சி முறையினை தேர்ந்தெடு.
A) லார்வா – முட்டை – கூட்டுப்புழு – வளர்ந்து வரும் பூச்சி – வளரச்சியடைந்த பூச்சி.
B) முட்டை – லார்வா – கூட்டுப்புழு – வளர்ந்து வரும் பூச்சி – வளரச்சியடைந்த பூச்சி.
C) முட்டை – லார்வா – கூட்டுப்புழு – வளரச்சியடைந்த பூச்சி – வளர்ந்து வரும் பூச்சி
D) முட்டை – கூட்டுப்புழு – லார்வா – வளரச்சியடைந்த பூச்சி – வளர்ந்து வரும் பூச்சி
விளக்கம்:
21. கூட்டுப்புழுக்களை எளிதில் பிரித்தெடுக்க பயன்படுத்தப்படும் நீர்_________
A) குளிர் நீர்
B) நன்னீர்
C) கொதிநீர்
D) கடின நீர்
விளக்கம்: கூட்டுப்புழுக்களைக் கொதிநீரில் இட்டால் அதிலிருந்து பட்டு இழைகளை மிக எளிதாகச் சிக்கலின்றி பிரித்துவிடலாம். ஆனால் அவை பட்டு இழைகளை உருவாக்கட்டும் என்று விட்டு விட்டால் கூட்டுப்புழு உடையும் போது நீண்ட பட்டு இழைகளும் கிழியும். இதனால் தான் கூட்டுப்புழுக்களைக் கொதி நீரில் இட்டு, மிக நீளமான பட்டு நூலை எடுத்து அதைச் சுத்தமாக்கி, சாயமேற்றி ஆடையாக நெய்கிறார்கள்.
22. கீழ்க்கண்டவற்றுள் பட்டின் சிறப்பம்சங்களுல் பொருந்தாதது எது.
1) கவரச்சியாகவும், மிகவும் மென்மையாகவும், அணிவதற்கு வசதியானதாகவும், பலதுறைகளில் பயன்படுகிறது.
2) இதை எளிதில் சாயமேற்ற இயலாது.
3) இயற்கை இழைகளிலேயே பட்டு இழைதான் வலிமை குன்றிய இழையாகும்.
4) இது சூரிய ஒளியை எளிதில் கடத்துவதில்லை.
A) 1 மட்டும்
B) 1, 2, 3 மட்டும்
C) 2, 3, 4 மட்டும்
D) 4 மட்டும்
விளக்கம்: இதை எளிதில் சாயமேற்றலாம். இயற்கை இழைகளிலேயே பட்டு இழைதான் வலிமையான இழையாகும். இது சூரிய ஒளியை எளிதில் கடத்தும்.
23. கீழ்க்கண்டவற்றுள் பட்டின் பயன்களுள் பொருந்தாதது எது.
1) பட்டு இயற்கை அழகுடையதாகும். இது கோடை காலத்தில் அதிக வெப்பத்தைத் தரக் கூடியதாக அமையும்.
2) பட்டானது குளிர்காலத்தில் உடலுக்கு மிகவும் இதமானதாக அமையும்.
3) நாகரிகமான நவீன உடைகள் தயாரிக்கவும், அழகிய பட்டாடைகள் தயாரிக்கவும், வீட்டு உபயோகப் பொருள்களான சுவர் அலங்காரப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுகின்றது.
4) பட்டு இழையானது, மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சையின் போது தையல் நூலாகப் பயன்படுத்தப்படுகிறது.
A ) 3 மற்றும் 4 தவறு
B) 1 மற்றும் 2 தவறு
C) 1 மட்டும் தவறு
D) அனைத்தும் தவறு
விளக்கம்: பட்டு இயற்கை அழகுடையதாகும். இது கோடை காலத்தில் இதமானதாகவும், குளிர் காலத்தில் வெப்பத்தைத் தரக் கூடியதாகவும் உள்ளது.
24. கூற்று (A): பட்டு உற்பத்தியில் உலகிலேயே மூன்றாவது இடத்தைப் பெறுவது நம் இந்திய நாடு.
கூற்று (B): தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம், திருபுவனம், மற்றும் ஆரணி போன்ற இடங்கள் பட்டு உற்பத்திக்குப் புகழ் பெற்றவை ஆகும்.
A) கூற்று A தவறு B சரி
B) கூற்று A சரி B தவறு
C) கூற்று A, B இரண்டும் தவறு
D) கூற்று A, B இரண்டும் சரி
விளக்கம்: பட்டு உற்பத்தியில் உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பெறுவது நம் இந்திய நாடு.
25. கூற்று (A): பட்டுப்பூச்சிகள், அவற்றின் ஆரம்ப எடையை விட 60,000 மடங்கு எடையுள்ள மல்பரி இலைகளை உண்டு வளர்கின்றன.
கூற்று (B): குக்கூன்களை கொதிநீரில் விட்டால் கூட்டுப்புழுக்கள் இறந்து விடுவதால், சிட்ரசின் இலைகள் தளர்ந்து விடுகின்றன.
A) கூற்று A தவறு B சரி
B) கூற்று A சரி B தவறு
C) கூற்று A, B இரண்டும் தவறு
D) கூற்று A, B இரண்டும் சரி
விளக்கம்: பட்டுப்பூச்சிகள், அவற்றின் ஆரம்ப எடையை விட 50,000 மடங்கு எடையுள்ள மல்பரி இலைகளை உண்டு வளர்கின்றன. குக்கூன்களை கொதிநீரில் விட்டால் கூட்டுப்புழுக்கள் இறந்து விடுவதால், செரசின் இலைகள் தளர்ந்து விடுகின்றன.
26. பட்டாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் பொருந்தாததை கண்டுபிடி.
A) மூட்டு மற்றும் முதுகு வலி
B) பார்வைக் கோளாறு மற்றும் சுவாச நோய்கள்
C) ஆஸ்துமா மற்றும் மார்புச்சளி
D) புற்றுநோய்
விளக்கம்: பட்டாலைகளில் பணிபுரிபவர்கள் நின்றுகொண்டே பட்டுநூலை நூற்பதால் அவர்கள் மூட்டு வலியால் அவதிப்படுகிறார்கள். மேலும் இவர்கள் முதுகு வலியினாலும், பார்வைக் கோளாறுகள் மற்றும் தோல் காயங்களாலும் துன்புறுகிறார்கள். குறைந்த காற்றோட்டமுள்ள பகுதிகளில் அவர்கள் பணிபுரிவதால் சில சமயம், சுவாச சம்பந்தமான நோய்களான ஆஸ்துமா மற்றும் மார்புச் சளியாலும் அவதிப்படுகிறார்கள்.
27. கம்பளி ஆலைப் பணியாளர்கள் இறந்த விலங்குகளைக் கையாள்வதால் கீழ்க்கண்ட எந்த தொற்றால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
A) ஆந்தராக்ஸ்
B) ஆந்தோசெரசிஸ்
C) ஆந்தராக்ஸ் பாக்டீரியா
D) ஆந்தராக்ஸ் பூஞ்சை
விளக்கம்: இறந்த விலங்குகளைக் கையாள்வதால் கம்பளி ஆலைப் பணியாளர்கள் ஆந்தராக்ஸ் பாக்டீரியா தொற்றால் அவதிப்படுகிறார்கள். இது பிரித்தெடுப்போர் நோய் என்றும் அழைக்கப்படுகிறது.
28. கூற்று (A): பேசில்லஸ் ஆந்த்ராசிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் நோய் ஆந்தோசெரசிஸ்.
கூற்று (B): இந்நோயின் அறிகுறிகள் காய்ச்சல், இருமல், மூச்சுவிடுதலில் சிரமம் போன்ற நிமோனியாவை ஒத்த அறிகுறிகள் தோன்றும்.
A) கூற்று A தவறு B சரி
B) கூற்று A சரி B தவறு
C) கூற்று A, B இரண்டும் தவறு
D) கூற்று A, B இரண்டும் சரி
விளக்கம்: பேசில்லஸ் ஆந்த்ராசிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் நோய் ஆந்தராக்ஸ். இந்நோயின் அறிகுறிகள் காய்ச்சல், இருமல், மூச்சுவிடுதலில் சிரமம் போன்ற நிமோனியாவை ஒத்த அறிகுறிகள் தோன்றும். சில சமயம் இவர்களுக்கு வாந்தி எடுக்கும் சூழ்நிலையும் மற்றும் வயிற்றுப்போக்கும் ஏற்படுகின்றன.
29. ஆந்த்ராக்ஸ் நோயைக் குணப்படுத்தும் மருந்துப்பொருள்_________
A) பெனிசிலின்
B) பைரிடாக்ஸின்
C) சிப்ரோஃப்ளோக்சாசின்
D) A மற்றும் C இரண்டும்
விளக்கம்: பெனிசிலின் மற்றும் சிப்ரோஃப்ளோக்சாசின் போன்ற சிறந்த மருந்துகள் ஆந்த்ராக்ஸ் நோயைக் குணமாக்க உதவுகின்றன. ஆகையால் விலங்குகளுக்கு ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி போட வேண்டும்.
30. 1992-ஆம் ஆண்டு கூட்டுப்புழுக்களை அழிக்காமல், அவற்றிலிருந்து பட்டு நூலை எடுக்கலாம் எனக் கண்டறிந்த குசுமா ராஜய்யா கீழ்க்கண்ட எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்.
A) தமிழ்நாடு
B) கர்நாடகா
C) தெலுங்கானா
D) ஆந்திரப் பிரதேசம்
விளக்கம்: இந்தியாவில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரியாகப் பணியாற்றிய குசுமா ராஜய்யா என்பவர் 1992-ஆம் ஆண்டு கூட்டுப்புழுக்களை அழிக்காமல், அவற்றிலிருந்து பட்டு நூலை எடுக்கலாம் என்பதைக் கண்டறிந்தார். ஆனால், மென்மையான முறை ஒன்றை உருவாக்கினார். இந்தப் பட்டு, மனித நேயத்தின் அடிப்படையில் பாரம்பரிய முறைகளைத் தாண்டி உருவாக்கப்பட்டதாகும். எனவே இது அகிம்சைப்பட்டு அல்லது அமைதிப்பட்டு என்று அழைக்கப்படுகிறது.
31. கீழ்க்கண்டவற்றுள் கம்பளியின் வகைகளுல் பொருந்தாதது எது?
A) ஆல்பக்கா
B) பைபர்
C) மோகிர்
D) டசார்
விளக்கம்: ஆல்பக்கா, பைபர், மோகிர், கேஸ்மீரே, மற்றும் ஆட்டுக்குட்டிக் கம்பளி போன்றவை கம்பளியின் வகைகளாகும்.
32. கீழ்க்கண்டவற்றுள் பட்டின் வகைகளுல் பொருந்தாதது எது.
A) எரிப்பட்டு
B) முகா பட்டு
C) பைபர் பட்டு
D) சிலந்திப்பட்டு
விளக்கம்: எரிப்பட்டு, முகா பட்டு, சிலந்திப்பட்டு போன்றவை பட்டின் வகைகளாகும். பட்டுப் பூச்சிகளை வளர்த்து பட்டு நூலை உருவாக்கும் முறை பட்டுப்புழு வளர்ப்பு எனப்படும். இது அதிகப் பட்டு இழைகளைப் பெறுவதற்காக ஏராளமான பட்டுப்பூச்சிகளை வளர்க்கும் முறை ஆகும்.
33. விலங்குகளின் இனப்பெருக்கத்தை ஆய்வு செய்தல் மற்றும் அவற்றின் பராமரிப்பு பற்றிப் படிக்கும் பிரிவு_________
A) அனிமல் ஹஸ்பன்ட்ரி
B) அனிமாலஜி
C) விலங்கு வளர்ப்பு
D) A மற்றும் C
34. விலங்குகளைத் துன்புறுத்துதலில் இருந்து பாதுகாக்க 1960-ஆம் ஆண்டு நான்கு புதிய சட்டங்களை கொண்டுவந்த அமைச்சகம்.
A) உலக சுகாதார நிறுவனம்
B) இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம்
C) உலக வேளாண் ஆராய்ச்சி கழகம்
D) காடு மற்றும் தட்ப வெப்பநிலை மாற்றம் சார்ந்த அமைச்சகம்