6th Tamil Unit 8 Questions

6th Tamil Unit 8 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 6th Tamil Unit 8 Questions With Answers Uploaded Below.

1. ____________ நம் முன்னோர்களின் வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கியவை. அவை வாழ்வியல் நெறிகளையும் ஒழுக்கங்களையும் விளக்குபவை.

A) காப்பியங்கள்

B) இலக்கண நூல்கள்

C) அற இலக்கியங்கள்

D) இவற்றில் ஏதுமில்லை

2. தம்உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர்; செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன் பராபரமே! அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால் – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) பாரதியார் கவிதைகள், பாரதியார்

B) நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாமக்கல் கவிஞர்

C) தாயுமானவர் பாடல்கள், தாயுமானவர்

D) எழிலோவியம், வாணிதாசன்

3. இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே! எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே! – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) பாரதியார் கவிதைகள், பாரதியார்

B) நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாமக்கல் கவிஞர்

C) தாயுமானவர் பாடல்கள், தாயுமானவர்

D) எழிலோவியம், வாணிதாசன்

4. சொல்லும் பொருளும் – சரியாகப் பொருந்தியது எது?

I. தண்டருள் – குளிர்ந்த கருணை

II. பணி – தொண்டு

III. கூர் – மிகுதி

IV. எய்தும் – கிடைக்கும்

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I, II மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) III, IV மட்டும் சரி

5. சொல்லும் பொருளும் – சரியாகப் பொருந்தியது எது?

I. செம்மையருக்கு – சான்றோருக்கு

II. எல்லாரும் – எல்லா மக்களும்

III. ஏவல் – தொண்டு

IV. அல்லாமல் – அதைத்தவிர

A) III, IV மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

6. கீழ்க்கண்டவற்றுள் “பராபரமே” என்பதன் பொருள் என்ன?

A) சான்றோர்

B) இறைவன்

C) மேலான பொருளே

D) மனிதன்

7. அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தொண்டு செய்ய வேண்டும். அன்பர்களுக்குத் தொண்டு செய்பவராக என்னை ஆக்கிவிட்டால் போதும். இன்பநிலை தானே வந்து சேரும். எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும். அதைத்தவிர, வேறு எதையும் நினைக்க மாட்டேன். – இந்த கூற்று யாருடையது?

A) வள்ளலார்

B) உ.வே.சாமிநாதர்

C) மீனட்சி சுந்தரம்

D) தாயுமானவர்

8. தாயுமானவர், திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் __________________ ஆக பணி புரிந்தார்.

A) அமைச்சர்

B) தலைமைக் கணக்கர்

C) படைத் தளபதி

D) புலவர்

9. தமிழ் மொழியின் உபநிடதம் எனப் போற்றப்படும் நூல் எது?

A) திருக்குறள்

B) நளவெண்பா

C) தாயுமானவர் பாடல்கள்

D) பாரதியார் கவிதைகள்

10. தாயுமானவர் பாடல்கள் ‘பராபரக் கண்ணி’ என்னும் தலைப்பில் உள்ளன. ‘கண்ணி’ என்பது ______________ அடிகளில் பாடப்படும் பாடல்வகை.

A) ஒன்று

B) நான்கு

C) இரண்டு

D) ஆறு

11. தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________?

A) தம்முயிர்

B) தமதுயிர்

C) தம்உயிர்

D) தம்முஉயிர்

12. இன்புற்று + இருக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________?

A) இன்புற்றிருக்க

B) இன்புறுறிருக்க

C) இன்புற்றுஇருக்க

D) இன்புறு இருக்க

13. ‘தானென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________?

A) தானெ + என்று

B) தான் + என்று

C) தா + னென்று

D) தான் + னென்று

14. ‘சோம்பல்’ என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல் ______________?

A) அழிவு

B) துன்பம்

C) சுறுசுறுப்பு

D) சோகம்

15. _______________ மக்களின் வாழ்வை நெறிப்படுத்தி அறவழியில் செலுத்துகின்றன. மனித வாழ்வைச் செம்மைப்படுத்துகின்றன.

A) இலக்கியங்கள்

B) அற நூல்கள்

C) காப்பியங்கள்

D) காவியம்

16. வாழ்க்கை பின்திரும்பிச் செல்லாது நேற்றுடன் ஒத்துப் போகாது கொடுப்பவரின் பரிசுடன் அவருக்குச் சமமாக எழுங்கள் சிறகுகளின் மீது எழுவது போல – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) தேம்பாவணி, வீரமாமுனிவர்

B) தீர்க்கதரிசி, கலீல் கிப்ரான்

C) தாமரைத் தடாகம், கால்டுவெல்

D) இவற்றில் ஏதுமில்லை

17. உழைக்கும்போது நீங்கள் புல்லாங் குழலாகி விடுகிறீர்கள் அதன் இதயம் காலத்தின் கிசுகிசுப்பை ஓர் இசையாக மாற்றி விடுகிறது உங்களுக்குள் இருக்கும் நன்மையைப் பற்றித்தான் நான் பேச முடியும் தீமையைப் பற்றியல்ல – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) தேம்பாவணி, வீரமாமுனிவர்

B) தீர்க்கதரிசி, கலீல் கிப்ரான்

C) தாமரைத் தடாகம், கால்டுவெல்

D) இவற்றில் ஏதுமில்லை

18. உங்கள்சுயத்துடன் நீங்கள் ஒருமைப்பாடு கொண்டிருக்கும்போது நீங்கள் நல்லவர் என்னைப்போல் இரு பழுத்து உன் உள்ளீடுகளை எல்லாம் முழுசாய்க்கொடு என்று பழம் வேரைப் பார்த்து நிச்சயமாகச் சொல்லாது கொடுப்பது பழத்தின் இயல்பு பெறுவது வேரின் இயல்பு – இப்பாடல் பகுதி கவிஞர் ______________ அவர்கள் மொழிபெயர்த்த தீர்க்கதரிசி என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

A) பிச்சைமூர்த்தி

B) ராஜம் கிருஷ்ணன்

C) அழ. வள்ளியப்பா

D) புவியரசு

19. உங்கள் பேச்சின் போது நீங்கள் விழிப்புணர்ச்சியுடன் இருப்பது நல்லது உறுதியாகக் கால்பதித்து உங்கள் குறிக்கோளை நோக்கி நடக்கையில் நீங்கள் நல்லவர் – இப்பாடல் பகுதி கவிஞர் ______________ அவர்கள் மொழிபெயர்த்த தீர்க்கதரிசி என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

A) பிச்சைமூர்த்தி

B) ராஜம் கிருஷ்ணன்

C) அழ. வள்ளியப்பா

D) புவியரசு

20. கலீல் கிப்ரான் _____________ நாட்டைச் சேர்ந்தவர். கவிஞர், புதின ஆசிரியர், கட்டுரையாசிரியர், ஓவியர் எனப் பன்முக ஆற்றல் பெற்றவர்.

A) ஆஸ்திரேலியா

B) லெபனான்

C) இலங்கை

D) மலேசியா

21. பரிசு பெறும்போது நம் மனநிலை ___________ஆக இருக்கும்.

A) கவலை

B) துன்பம்

C) மகிழ்ச்சி

D) சோர்வு

22. வாழ்வில் உயர கடினமாக _____________ வேண்டும்.

A) பேச

B) சிரிக்க

C) நடக்க

D) உழைக்க

23. சொல்லும் பொருளும் – சரியானது எது?

I. சுயம் – தனித்தன்மை

II. உள்ளீடுகள் – உள்ளே இருப்பவை

III. நவ்வி – பெண்மான்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) III மட்டும் சரி

24. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களுக்கும் இன்றியமையாதது உணவு.

II. உலக உயிர்கள் அனைத்தும் வாழ்நாள் முழுவதும் உணவு தேடியே உழைக்கின்றன.

III. உணவே உயிர்களுக்கு ஆதாரமாக விளங்குகிறது. பசித்திருக்கும் ஒருவனுக்கு உணவு அளிப்பது உயிர் கொடுப்பதற்கு இணையானது. அதுவே சிறந்த அறமாகும்.

A) I, II மட்டும் சரி

B) I, II, III அனைத்தும் சரி

C) II மட்டும் தவறு

D) III மட்டும் தவறு

25. “தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவோம்” – என்று கூறியவர் யார்?

I. பாரதியார்

II. கண்ணதாசன்

III. பாரதிதாசன்

IV. திரு.வி.க

26. கீழ்க்கண்டவர்களுள் பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் யார்?

A) கண்ணகி

B) மணிமேகலை

C) மாதவி

D) தீவதிலகை

27. மணிமேகலையை, மணிபல்லவத் தீவில் கொண்டு வந்து சேர்த்தது யார்?

A) மணிமேகலா தெய்வம்

B) தீவதிலகை

C) புத்த துறவி

D) சமணத் துறவி

28. நான் இத்தீவையும் இதிலுள்ள புத்த பீடிகையையும் காவல் செய்து வருகிறேன். பெருமை மிக்கவர்கள் மட்டுமே இத்தீவிற்கு வந்து இந்தப் புத்த பீடிகையை வணங்க முடியும் என்று மணிமேகலையிடம் கூறியது யார்?

A) அசரீரி

B) தீவதிலகை

C) புத்த துறவி

D) சமணத் துறவி

29. நம் எதிரில் பூக்கள் நிறைந்து விளங்கும் இந்தப் பொய்கையைப் பார். இதற்குக் கோமுகி என்று பெயர். கோ என்றால் பசு. முகி என்றால் முகம். பசுவின் முகம் போன்று அமைந்து இருப்பதால் இப்பொய்கை கோமுகி என்னும் பெயரைப் பெற்றது – என்று தீவதிலகை யாரிடம் கூறினார்?

A) அசரீரி

B) மணிமேகலை

C) கண்ணகி

D) புத்த துறவி

30. கோமுகி பொய்கையில் _____________ முழு நிலவு நாளில் நீரின் மேல் ஓர் அரிய பாத்திரம் தோன்றும். அஃது ஆபுத்திரன் கையிலிருந்த ‘அமுதசுரபி’ என்னும் பாத்திரம் ஆகும்.

A) சித்திரைத் திங்கள்

B) வைகாசித் திங்கள்

C) ஆனித் திங்கள்

D) ஆடித் திங்கள்

31. கீழ்க்கண்ட கூற்றுடன் தொடர்புடையது எது?

அந்தப் பாத்திரத்தில் இட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனைக் கொண்டு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் உணவு அளிக்கலாம்.

A) அட்சய பாத்திரம்

B) தங்கத்தட்டு

C) அமுதசுரபி

D) இவற்றில் ஏதுமில்லை

32. கோமுகி பொய்கையின் நீருக்குமேல் தோன்றிய ‘அமுதசுரபி’ என்னும் பாத்திரத்தை வணங்கிக் கையில் எடுத்தவர் யார்?

A) புத்த துறவி

B) மணிமேகலை

C) தீவதிலகை

D) இவர்களில் யாருமில்லை

33. மணிமேகலையே! உயிர்களின் பசிபோக்கும் அமுதசுரபியை நீ பெற்றுள்ளாய். இனி இவ்வுலக உயிர்களுக்குப் பசி இல்லாமல் போகும்படி உணவு வழங்கி உயர்வு பெறுவாயாக! – என்று மணிமேகலையிடம் கூறியது யார்?

A) அசரீரி

B) தீவதிலகை

C) புத்த துறவி

D) ஆதிரை

34. உயிர்களுக்குப் பசி இல்லாமல் போகும்படி உணவு வழங்கக் கூடிய திறன்வல்ல அமுதசுரபியை பெற்ற பிறகு, யாரிடம் உணவு பெறச் செல்கிறாள் மணிமேகலை?

A) பூம்புகார் ஊர் மக்களிடம்

B) தீவதிலகை

C) புத்த துறவி

D) ஆதிரை

35. ‘அமுதசுரபி’ முதன்முதலில் யாரிடம் இருந்தது?

A) அறவண அடிகள்

B) தீவதிலகை

C) மணிமேகலா தெய்வம்

D) ஆபுத்திரன்

36. மணிமேகலையின் பெற்றோர் யார்?

A) கோவலன் – கண்ணகி

B) கோவலன் – மாதவி

C) தெய்வக்குழந்தை

D) இவற்றில் ஏதுமில்லை

37. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு __________?

A) இலங்கைத் தீவு

B) இலட்சத் தீவு

C) மணிபல்லவத் தீவு

D) மாலத் தீவு

38. மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் ___________?

A) சித்திரை

B) ஆதிரை

C) காயசண்டிகை

D) தீவதிலகை

39. _______________ அமுதசுரபியில் உணவை இடுகிறாள். ______________ அமுதசுரபியைக் கொண்டு, உடல் குறையுற்றோர், பிணியாளர், ஆதரவு அற்றோர் ஆகியோருக்கு உணவு அளிக்கிறாள். பின்னர்ப் பூம்புகாரில் உள்ள சிறைச்சாலைக்குச் சென்று அங்கு உள்ளவர்களுக்கும் உணவிடுகிறாள்.

A) சித்திரை, மணிமேகலா தெய்வம்

B) ஆதிரை, மணிமேகலை

C) காயசண்டிகை, அறவண அடிகள்

D) தீவதிலகை, ஆபுத்திரன்

40. அன்பிற்குரிய ஆதிரையே, ஏழை மக்களின் பசியைப் போக்குவதே மேலான அறம். உணவு கொடுத்தவர்களே உயிரைக் கொடுத்தவர்கள் என்பதை உணர்ந்துள்ளேன். அதனால், இந்தப் பாத்திரத்தில் இருக்கும் உணவைப் பசியால் வாடும் மக்களுக்கு எல்லாம் வழங்கப் போகின்றேன் – என்று கூறியவர் யார்?

A) மணிமேகலை

B) பூம்புகார் மன்னன்

C) காயசண்டிகை

D) தீவதிலகை

41. உங்கள் அறம் செழிக்கட்டும். மக்களின் பசிநோய் ஒழியட்டும். இதோ! இப்போதே அமுதசுரபியில் நான் உணவை இடுகிறேன் – என்று மணிமேகலையிடம் கூறியது யார்?

A) ஆதிரை

B) அறவண அடிகள்

C) காயசண்டிகை

D) ஆபுத்திரன்

42. அன்பால் ஆட்சி செய்யும் அரசே! சிறைச்சாலையில் தண்டனை பெற்றுள்ளவர்கள் திருந்தி வாழ வழிகாண வேண்டும். சிறைக் கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும் – என்று மன்னரிடம் கூறியவர் யார்?

A) மணிமேகலை

B) அறவண அடிகள்

C) ஆதிரை

D) ஆபுத்திரன்

43. மாதவம் செய்தவளே! இந்த உலக மக்களின் பசிப்பிணி தீர்க்கும் பாங்குடைய அறத்தைச் செய்கிறாய். நான் உனக்குச் செய்ய வேண்டிய உதவி ஏதேனும் இருக்கிறதா? – என்று மன்னர் யாரிடம் வினவினார்?

A) ஆதிரை

B) அறவண அடிகள்

C) மணிமேகலை

D) ஆபுத்திரன்

44. வாழ்க்கைக்கு அறம் சொன்ன வள்ளுவர் வாழ்ந்த நாடு இது. புத்தர் பிறந்து அறம் போதித்த பூமி இது. எவை நன்மைகள் எவை தீமைகள் என்பவற்றை எல்லாம் தக்க அறிஞர்களைக் கொண்டு சிறையில் உள்ளவர்களுக்கு எடுத்துக் கூறவேண்டும். மேலும் அவர்களுக்குப் பெற்றோரை மதித்தல், முதியோரைப் பேணல், உறவினர்களை அரவணைத்தல் போன்றவற்றை வலியுறுத்தும் அறநெறிக் கல்வியை அளிக்க வேண்டும். இதுவே என் வேண்டுகோள் மன்னா! – என்று மன்னரிடம் கூறியவர் யார்?

A) ஆதிரை

B) அறவண அடிகள்

C) மணிமேகலை

D) ஆபுத்திரன்

45. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. கதை என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். கதையை

விரும்பாதவர் யாரும் இருக்க மாட்டார்கள்.

II. அதிலும் நம்ப

முடியாத கற்பனைகளைக் கொண்ட விந்தைக் கதைகள்

அனைவரையும் கவரும்.

III. கதையில் சிறந்த கருத்தும்

கூறப்படுமானால் அது சர்க்கரைப் பந்தலில் தேன்மழை

பொழிந்தது போல மேலும் சுவையாக இருக்கும்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி.

46. “பாதம்” – என்னும் சிறுகதை இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) மணல் வீடு, சி.சு.செல்லப்பா

B) தாவரங்களின் உரையாடல், எஸ்.ராமகிருஷ்ணன்

C) கனவு, ராஜம் கிருஷ்ணன்

D) இவர்களில் யாருமில்லை

47. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. எஸ்.ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்.

II. நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகள், சிறுவர் இலக்கியங்கள் என இவருடைய படைப்புகள் நீள்கின்றன.

III. உபபாண்டவம், கதாவிலாசம், தேசாந்திரி, கால் முளைத்த கதைகள் முதலிய ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) III மட்டும் சரி

48. ‘பாதம்’ என்னும் சிறுகதையில் மாரியிடம், விசித்திரமான காலணியை கொடுத்தது யார்?

A) சினிமா தியேட்டர் உரிமையாளர்

B) சிறுமி

C) தேநீர் கடைக்காரர்

D) வழிப்போக்கன்

49. ‘பாதம்’ என்னும் சிறுகதையில் மாரி செய்த தொழில் என்ன?

A) தேநீர் வியாபாரம்

B) கூலித்தொழில்

C) காலணி தைக்கும் தொழில்

D) இவற்றில் ஏதுமில்லை

50. மரம், பள்ளிக்கூடம், சித்திரை, கிளை, இனிப்பு, பாடுதல் ஆகிய சொற்களைக் கவனியுங்கள். இவை அனைத்தும் பெயரைக் குறிக்கின்றன. இவ்வாறு ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். பெயர்ச்சொல் ____________ வகைப்படும்.

A) 4

B) 5

C) 6

D) 7

51. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.

II. பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவையாவன: பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II அனைத்தும் தவறு

D) I, II அனைத்தும் சரி

52. பொருளைக் குறிக்கும் பெயர் _______________ எனப்படும். இஃது உயிருள்ள பொருள்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிக்கும். (எ.கா.) மரம், செடி, மயில், பறவை, புத்தகம், நாற்காலி.

A) இடப்பெயர்

B) சினைப்பெயர்

C) பண்புப்பெயர்

D) பொருட்பெயர்

53. ஓர் இடத்தின் பெயரைக் குறிக்கும் பெயர் _____________ எனப்படும். (எ.கா.) சென்னை, பள்ளி, பூங்கா, தெரு.

A) இடப்பெயர்

B) சினைப்பெயர்

C) பண்புப்பெயர்

D) பொருட்பெயர்

54. காலத்தைக் குறிக்கும் பெயர் ___________ எனப்படும். (எ.கா.) நிமிடம், நாள், வாரம், சித்திரை, ஆண்டு.

A) இடப்பெயர்

B) சினைப்பெயர்

C) பண்புப்பெயர்

D) காலப்பெயர்

55. பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர் ____________ எனப்படும். (எ.கா.) கண், கை, இலை, கிளை.

A) இடப்பெயர்

B) சினைப்பெயர்

C) பண்புப்பெயர்

D) காலப்பெயர்

56. பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர் ____________ எனப்படும். (எ.கா.) வட்டம், சதுரம், செம்மை, நன்மை.

A) இடப்பெயர்

B) சினைப்பெயர்

C) பண்புப்பெயர்

D) காலப்பெயர்

57. தொழிலைக் குறிக்கும் பெயர் ____________ எனப்படும். (எ.கா.) படித்தல், ஆடுதல், நடித்தல்.

A) தொழிற்பெயர்

B) சினைப்பெயர்

C) பண்புப்பெயர்

D) காலப்பெயர்

58. அறுவகைப் பெயர்ச்சொற்களுக்கான சான்றுகளை தொடரில் அமைத்து எழுதுவோம் – சரியானது எது?

I. காவியா புத்தகம் படித்தாள் – பொருட்பெயர்; காவியா பள்ளிக்குச் சென்றாள் – இடப்பெயர்

II. காவியா மாலையில் விளையாடினாள் – காலப்பெயர்; காவியா தலை அசைத்தாள் – சினைப்பெயர்.

III. காவியா இனிமையாகப் பேசுவாள் – பண்புப்பெயர்; காவியாவுக்கு நடனம் ஆடுதல் பிடிக்கும் – தொழிற்பெயர்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) III மட்டும் சரி

59. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?

I. நம் முன்னோர் பெயர்ச்சொற்களை அவை வழங்கும் அடிப்படையில் இடுகுறிப்பெயர், காரணப்பெயர் என இருவகைப்படுத்தினர்.

II. இடுகுறிப்பெயர்: நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் பெயரிட்டு வழங்கினர். அவ்வாறு இட்டு வழங்கிய பெயர்கள் இடுகுறிப்பெயர்கள் ஆகும். (எ.கா.) மண், மரம், காற்று

III. இடுகுறிப் பொதுப்பெயர், இடுகுறிச் சிறப்புப்பெயர் என இடுகுறிப்பெயர் இரண்டு வகைப்படும்.

A) I, II மட்டும் சரி

B) I, II, III அனைத்தும் சரி

C) II மட்டும் சரி

D) III மட்டும் சரி

60. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?

I. இடுகுறிப் பொதுப்பெயர்: ஓர் இடுகுறிப்பெயர் அத்தன்மை உடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறிப்பது இடுகுறிப் பொதுப்பெயர் எனப்படும். (எ.கா.) மரம், காடு.

II. இடுகுறிச் சிறப்புப்பெயர்: ஓர் இடுகுறிப்பெயர் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் குறிப்பது இடுகுறிச் சிறப்புப்பெயர் எனப்படும். (எ.கா.) மா, கருவேலங்காடு.

A) I, II அனைத்தும் சரி

B) I மட்டும் சரி

C) II மட்டும் சரி

D) I, II இரண்டும் தவறு

61. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?

I. காரணப்பெயர்: நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதிப் பெயரிட்டனர். இவ்வாறு காரணத்தோடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் காரணப்பெயர் எனப்படும். (எ.கா.) நாற்காலி, கரும்பலகை

II. காரணப் பொதுப்பெயர், காரணச் சிறப்புப்பெயர் எனக் காரணப் பெயர் இரு வகைப்படும்.

III. காரணப் பொதுப்பெயர்: காரணப்பெயர் குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறித்தால் அது, காரணப்பொதுப்பெயர் எனப்படும். (எ.கா.) பறவை, அணி

IV. காரணச் சிறப்புப்பெயர்: குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களுள் ஒன்றை மட்டும் சிறப்பாகக் குறிப்பது காரணச்சிறப்புப்பெயர் ஆகும். (எ.கா.) வளையல், மரங்கொத்தி

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

62. இடுகுறிப்பெயரை குறிப்பிடுக.

A) பறவை

B) மண்

C) முக்காலி

D) மரங்கொத்தி

63. காரணப்பெயரை குறிப்பிடுக.

A) மரம்

B) வளையல்

C) சுவர்

D) யானை

64. இடுகுறிச்சிறப்புப் பெயரை குறிப்பிடுக.

A) வயல்

B) வாழை

C) மீன்கொத்தி

D) பறவை

65. பறவை, அணி – கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?

A) இடுகுறிச் சிறப்புப்பெயர்

B) காரணச் சிறப்புப்பெயர்

C) காரணப்பெயர்

D) காரணப் பொதுப்பெயர்

66. நாற்காலி, கரும்பலகை – கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?

A) இடுகுறிச் சிறப்புப்பெயர்

B) காரணச் சிறப்புப்பெயர்

C) காரணப்பெயர்

D) காரணப் பொதுப்பெயர்

67. வளையல், மரங்கொத்தி – கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?

A) இடுகுறிச் சிறப்புப்பெயர்

B) காரணச் சிறப்புப்பெயர்

C) காரணப்பெயர்

D) காரணப் பொதுப்பெயர்

68. மா, கருவேலங்காடு – கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?

A) இடுகுறிச் சிறப்புப்பெயர்

B) காரணச் சிறப்புப்பெயர்

C) காரணப்பெயர்

D) காரணப் பொதுப்பெயர்

69. மரம், காடு – கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?

A) இடுகுறிச் சிறப்புப்பெயர்

B) காரணச் சிறப்புப்பெயர்

C) இடுகுறிப் பொதுப்பெயர்

D) காரணப் பொதுப்பெயர்

70. அன்பினில் இன்பம் காண்போம்; அறத்தினில் நேர்மை காண்போம்; துன்புறும் உயிர்கள் கண்டால்; துரிசறு கனிவு காண்போம்; வன்புகழ் கொடையிற் காண்போம்; வலிமையைப் போரில் காண்போம்; தன்பிறப் புரிமை யாகத் தமிழ்மொழி போற்றக் காண்போம் – என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?

A) அ.முத்தரையனார், மலேசியக் கவிஞர்

B) பாவலரேறு பெருஞ்சித்திரனார்

C) நாமக்கல் கவிஞர்

D) கண்ணதாசன்

71. நீதிநூல் பயில் என்கிறார் ________?

A) பாரதியார்

B) திருவள்ளுவர்

C) நாமக்கல் கவிஞர்

D) வாணிதாசன்

72. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. பொருட்பெயர்: பாரதியார், நீதிநூல், புத்தகம்

II. இடப்பெயர்: தெருவில், மதுரை

III. காலப்பெயர்: மாலை, துயில்

IV. சினைப்பெயர்: கைகள்

V. பண்புப்பெயர்: அன்பு, நன்மை

VI. தொழிற்பெயர்: அடைதல், கற்றல்

A) I, II, III மட்டும் சரி

B) III, IV மட்டும் சரி

C) V, VI மட்டும் சரி

D) I, II, III, IV, V, VI அனைத்தும் சரி

73. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?

I. அறக்கட்டளை – Trust

II. தன்னார்வலர் – Volunteer

III. இளம் செஞ்சிலுவைச் சங்கம் – Junior Red Cross

IV. சாரண சாரணியர் – Scouts & Guides

V. சமூகப் பணியாளர் – Social Worker

A) I, II, III மட்டும் சரி

B) III, IV மட்டும் சரி

C) V மட்டும் சரி

D) I, II, III, IV, V அனைத்தும் சரி

74. விடுபட்டதை நிரப்புக.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் _________ __________ _________?

A) ஆகுல நீர பிற

B) இழுக்கா இயன்றது அறம்

C) குறியெதிர்ப்பை நீரது உடைத்து

D) வைத்திழக்கும் வன்க ணவர்

75. விடுபட்டதை நிரப்புக.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் _________ ________ _________?

A) ஆகுல நீர பிற

B) இழுக்கா இயன்றது அறம்

C) குறியெதிர்ப்பை நீரது உடைத்து

D) வைத்திழக்கும் வன்க ணவர்

76. விடுபட்டதை நிரப்புக.

வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம் _______ ________ ________?

A) ஆகுல நீர பிற

B) இழுக்கா இயன்றது அறம்

C) குறியெதிர்ப்பை நீரது உடைத்து

D) வைத்திழக்கும் வன்க ணவர்

77. விடுபட்டதை நிரப்புக.

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை ________ _______ ________?

A) ஆகுல நீர பிற

B) இழுக்கா இயன்றது அறம்

C) குறியெதிர்ப்பை நீரது உடைத்து

D) வைத்திழக்கும் வன்க ணவர்

78. விடுபட்டதை நிரப்புக.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண _________ __________ _________?

A) நன்னயம் செய்து விடல்

B) தந்நோய்போல் போற்றாக் கடை

C) மாணாசெய் யாமை தலை

D) தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

79. விடுபட்டதை நிரப்புக.

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய் _________ __________ _________?

A) நன்னயம் செய்து விடல்

B) தந்நோய்போல் போற்றாக் கடை

C) மாணாசெய் யாமை தலை

D) தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

80. விடுபட்டதை நிரப்புக.

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் _________ __________ _________?

A) நன்னயம் செய்து விடல்

B) தந்நோய்போல் போற்றாக் கடை

C) மாணாசெய் யாமை தலை

D) தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

81. விடுபட்டதை நிரப்புக.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் _________ __________ _________?

A) நன்னயம் செய்து விடல்

B) தந்நோய்போல் போற்றாக் கடை

C) மாணாசெய் யாமை தலை

D) தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

82. விடுபட்டதை நிரப்புக.

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் ________ _________ _________?

A) போற்றலுள் எல்லாம் தலை

B) தந்நோய்போல் போற்றாக் கடை

C) மாணாசெய் யாமை தலை

D) தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

83. விடுபட்டதை நிரப்புக.

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் _________ _________ _________?

A) பெரியார்ப் பிழைத்தொழுகு வார்

B) தந்நோய்போல் போற்றாக் கடை

C) மாணாசெய் யாமை தலை

D) தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

84. ஏழைகளுக்கு உதவி செய்வதே ___________ ஆகும்.

A) பகை

B) ஈகை

C) வறுமை

D) கொடுமை

85. பிற உயிர்களின் ____________ கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும்.

A) மகிழ்வை

B) செல்வத்தை

C) துன்பத்தைக்

D) பகையை

86. உள்ளத்தில் _____________ இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.

A) மகிழ்ச்சி

B) மன்னிப்பு

C) துணிவு

D) குற்றம்

87. பின்வரும் நிகழ்வைப் படித்து அதற்குப் பொருத்தமான திருக்குறள் எதுவெனக் காண்க.

நிறைமதி அவளுடைய தோழிகளுடன் பூங்காவிற்குச் சென்றாள். அங்குள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தாள். நண்பகல் நேரத்தில் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து தான் கொண்டு வந்திருந்த உணவைத் தோழிகளுடன் பகிர்ந்து உண்டாள். அவர்களின் அருகே பறவைகள் பறந்து வந்தன. தன்னிடம் இருந்த உணவைப் பறவைகளுக்கும் அளித்தாள்.

A) மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற

B) எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை

C) பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

D) ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை

88. உள்ளத்தில் __________ இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும். மற்றவை எல்லாம் வெறும் ஆரவாரமே.

A) வீரம்

B) குற்றம்

C) அன்பு

D) இவற்றில் ஏதுமில்லை

89. பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் பேசுதல் ஆகிய நான்கும் இல்லாமல் வாழ்வதே __________ ஆகும்.

A) தன்மானம்

B) வீரம்

C) அறம்

D) இவற்றில் ஏதுமில்லை

90. அறநூல்களில் கூறப்படும் அறங்களுள் சிறந்தது எது?

A) நமக்குத் துன்பம் செய்தவர் நாணும்படி அவருக்கு நன்மை செய்வது

B) பிற உயிரின் துன்பத்தைத் தமது துன்பம் போல் கருதுவது

C) நம் உள்ளம் ஏற்றுக் கொள்ளாத எச்செயலையும் எக்காலத்திலும் யார்க்கும் சிறிதளவு கூடச் செய்யாதிருத்தல்

D) தம்மிடம் இருப்பவற்றைப் பிற உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக் காப்பாற்ற வேண்டும்.

91. தம்மைத் தீங்கிலிருந்து காத்துக்கொள்ளும் வழிகளுள் சிறந்த வழி எது?

A) ஆற்றல் உடையவர்களை இகழாமல் இருப்பது

B) நம் உள்ளம் ஏற்றுக் கொள்ளாத எச்செயலையும் எக்காலத்திலும் யார்க்கும் சிறிதளவுகூடச் செய்யாதிருப்பது

C) தம்மிடம் இருப்பவற்றைப் பிற உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக் காப்பாற்றுவது

D) பிறருக்கு தீங்கு செய்யாமல் இருப்பது

92. எச்செயலை எக்காலத்திலும் யார்க்கும் சிறிதளவு கூடச் செய்யக் கூடாது?

A) ஆற்றல் உடையவர்களை இகழாமல் இருப்பது

B) நம் உள்ளம் ஏற்றுக் கொள்ளாத செயல்

C) தம்மிடம் இருப்பவற்றைப் பிற உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக் காப்பாற்றுவது

D) பிறருக்கு தீங்கு செய்யாமல் இருப்பது

93. எப்போது, தாம் பெற்றுள்ள அறிவால் எந்தப் பயனும் இல்லை?

A) பிற உயிரின் துன்பத்தைத் தமது துன்பம் போல கருதாத போது

B) நம் உள்ளம் ஏற்றுக் கொள்ளாத செயல்

C) தம்மிடம் இருப்பவற்றைப் பிற உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக் காப்பாற்றுவது

D) பிறருக்கு தீங்கு செய்யாமல் இருப்பது

94. யார், பொருளைச் சேர்த்து வைத்துப் பின் அதனை இழந்து விடுவார்கள்?

A) பிற உயிரின் துன்பத்தைத் தமது துன்பம் போல கருதாத போது

B) நம் உள்ளம் ஏற்றுக் கொள்ளாத செயல்

C) இல்லாதவர்க்குத் தருவதால் உண்டாகும் இன்பத்தை அறியாதவர்கள்

D) பிறருக்கு தீங்கு செய்யாமல் இருப்பது

95. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. உள்ளத்தில் குற்றம் இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும். மற்றவை எல்லாம் வெறும் ஆரவாரமே

II. பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் பேசுதல் ஆகிய நான்கும் இல்லாமல் வாழ்வதே அறம் ஆகும்

III. இல்லாதவர்க்கு தருவதே ஈகை ஆகும். மற்றவை எல்லாம் பயனை எதிர்பார்த்துச் செய்பவை ஆகும்

IV. நமக்குத் துன்பம் செய்தவர் நாணும்படி அவருக்கு நன்மை செய்வதுதான் அவரைத் தண்டிக்கும் வழியாகும்

A) I, II மட்டும் சரி

B) I, II, III, IV அனைத்தும் சரி

C) III மட்டும் சரி

D) IV மட்டும் சரி

6th Tamil Unit 8 Questions

1. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. இரக்கம் என்பது தலைசிறந்த பண்பு. மனிதரிடம் மட்டுமன்று, மற்ற எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொள்ள வேண்டும்.

II. பிற உயிர்களைத் தம்முயிர் போல் எண்ணிக் காக்க வேண்டும். அதுவே சான்றோர் போற்றும் உயிர் இரக்கம் ஆகும்.

III. அவ்விரக்கமே மனித குலத்தை வாழ வைக்கிறது. உலக உயிர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர் புத்தர்.

A) I, II, III அனைத்தும் சரி

B) I மட்டும் சரி

C) II மட்டும் சரி

D) III மட்டும் சரி

2. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. அரச வாழ்வைத் துறந்து நள்ளிரவில் அரண்மனையை விட்டு வந்தவர் புத்தர்பிரான்.

II. பிம்பிசார மன்னனின் யாகத்துக்காக ஆடுகள் கொண்டு செல்லப்பட்டன.

III. அவற்றின் நடுவில் அடிபட்டு வலியால் துடித்துக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியைப் புத்தர் தம் தோளில் சுமந்து சென்றார். யாகசாலையை அடைந்தார்.

IV. மன்னனுக்கு அறவுரை கூறினார். நாடெங்கும் உயிர்க்கொலையைத் தடுத்து நிறுத்தினார்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

3. நின்றவர் கண்டு நடுங்கினாரே – ஐயன் நேரிலே நிற்கவும் அஞ்சினாரே; துன்று கருணை நிறைந்த வள்ளல் – அங்கு சொன்ன மொழிகளைக் கேளும் ஐயா! வாழும் உயிரை வாங்கிவிடல் – இந்த மண்ணில் எவர்க்கும் எளிதாகும்; வீழும் உடலை எழுப்புதலோ – ஒரு வேந்தன் நினைக்கிலும் ஆகாதையா! – இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) தொடுவானம், வாணிதாசன்

B) ஆசிய ஜோதி, கவிமணி தேசிக விநாயகனார்

C) மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை

D) பாரதி அறுபத்தாறு, பாரதியார்

4. யாரும் விரும்புவது இன்னுயிராம்; – அவர் என்றுமே காப்பதும் அன்னதேயாம்; பாரில் எறும்பும் உயிர்பிழைக்கப் – படும் பாடு முழுதும் அறிந்திலீரோ? நேரிய உள்ளம் இரங்கிடுமேல் – இந்த நீள்நிலம் முற்றுமே ஆண்டிடலாம்; பாரினில் மாரி பொழிந்திடவே – வயல் பக்குவ மாவது அறிந்திலீரோ? – இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) தொடுவானம், வாணிதாசன்

B) ஆசிய ஜோதி, கவிமணி தேசிக விநாயகனார்

C) மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை

D) பாரதி அறுபத்தாறு, பாரதியார்

5. காட்டும் கருணை உடையவரே – என்றும் கண்ணிய வாழ்வை உடையவராம்; வாட்டும் உலகில் வருந்திடுவார்- இந்த மர்மம் அறியாத மூடரையா! காடு மலையெலாம் மேய்ந்துவந்து – ஆடுதன் கன்று வருந்திடப் பாலையெல்லாம் தேடிஉம் மக்களை ஊட்டுவதும் – ஒரு தீய செயலென எண்ணினீரோ? – என்ற பாடலை கவிமணி தேசிக விநாயகனார் எந்த நூலைத் தழுவி எழுதினார்?

A) லீவ்ஸ் ஆஃப் கிராஸ், வால்ட் விட்மன்

B) த ட்ரேஜடி ஆஃப் மக்பெத், வில்லியம் சேக்சுபியர்

C) லைட் ஆஃப் ஆசியா, எட்வின் அர்னால்டு

D) இவற்றில் ஏதுமில்லை

6. அம்புவி மீதில்இவ் ஆடுகளும் – உம்மை அண்டிப் பிழைக்கும் உயிரலவோ? நம்பி இருப்பவர் கும்பி எரிந்திடில் நன்மை உமக்கு வருமோ ஐயா? ஆயிரம் பாவங்கள் செய்தவெல்லாம் – ஏழை ஆட்டின் தலையோடு அகன்றிடுமோ? தீயவும் நல்லவும் செய்தவரை – விட்டுச் செல்வது ஒருநாளும் இல்லைஐயா! – என்ற பாடலை கவிமணி தேசிக விநாயகனார் எந்த நூலைத் தழுவி எழுதினார்?

A) லீவ்ஸ் ஆஃப் கிராஸ், வால்ட் விட்மன்

B) த ட்ரேஜடி ஆஃப் மக்பெத், வில்லியம் சேக்சுபியர்

C) லைட் ஆஃப் ஆசியா, எட்வின் அர்னால்டு

D) இவற்றில் ஏதுமில்லை

7. ஆதலால் தீவினை செய்யவேண்டா – ஏழை ஆட்டின் உயிரையும் வாங்கவேண்டா; பூதலந் தன்னை நரகம்அது ஆக்கிடும் புத்தியை விட்டுப் பிழையும்ஐயா! – ஆசிய ஜோதி என்னும் இந்நூலின் ஆசிரியர் கவிமணி தேசிக விநாயகனார். ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி இந்நூல் எழுதப்பட்டது. இந்நூல் _____________ அவர்களின் வரலாற்றைக் கூறுகிறது.

A) சமண முனிவர்

B) புத்தர்

C) சிவன்

D) இயேசு கிறிஸ்து

8. சொல்லும் பொருளும் – சரியாகப் பொருந்தியது எது?

I. அஞ்சினர் – பயந்தனர்

II. வீழும் – விழும்

III. நீள்நிலம் – பரந்த உலகம்

IV. முற்றும் – முழுவதும்

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I மட்டும் சரி

C) II மட்டும் சரி

D) III மட்டும் சரி

9. சொல்லும் பொருளும் – சரியாகப் பொருந்தியது எது?

I. மாரி – மழை

II. கும்பி – வயிறு

III. பூதலம் – பூமி

IV. பார் – உலகம்

A) I மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

10. வாழ்கின்ற உயிர்களை அழிப்பது இந்த உலகத்தில் எல்லார்க்கும் எளிய செயல். ஆனால், இறந்த உடலுக்கு உயிர் கொடுத்து எழுப்புவது மன்னனாலும் முடியாத செயல். எல்லாரும் தம் உயிரைப் பெரிதாக மதித்துப் பாதுகாக்கின்றனர். எறும்பு கூடத் தன் உயிரைக் காத்துக் கொள்ளப் பாடுபடுவதை அறியாதவர் உண்டோ? – என்று கூறியவர் யார்?

A) சமணத் துறவி

B) புத்தர்

C) பாண்டிய மன்னன்

D) அசோகர்

11. நேர்மையான இரக்க மனம் கொண்டிருப்பவரால் மட்டுமே பரந்த இவ்வுலகம் முழுமையையும் ஆட்சி செய்ய முடியும். உலகில் மழை பெய்வதால் வயல் பக்குவம் அடைவதை அறியாதவர் உண்டோ? எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொள்பவரே நேர்மையான வாழ்வு வாழ்பவர். இந்த மறைபொருளை அறியாதவர் பிற உயிர்களை வருத்தித் தாமும் துன்புறுவர். – என்று கூறியவர் யார்?

A) சமணத் துறவி

B) புத்தர்

C) பாண்டிய மன்னன்

D) அசோகர்

12. காடுமலை எல்லாம் மேய்ந்து வருகிறது ஆடு. அது தன் குட்டி வருந்திடும் வகையில் பாலை எல்லாம் மக்களுக்குத் தருகிறது. இதனைத் தீயசெயல் என்று நீங்கள் கருதுகிறீர்களா? இந்த உலகில் ஆடுகளும் உங்களை நம்பி இருக்கும் உயிர்கள் அன்றோ? நம்மை நம்பி இருப்பவரின் வயிறு எரியும்வகையில் நடந்து கொள்வதால் உங்களுக்கு நன்மை கிடைக்குமா? – என்று கூறியவர் யார்?

A) இளங்கோவடிகள்

B) வள்ளலார்

C) பாரதியார்

D) புத்தர்

13. ஆயிரம் பாவங்கள் செய்துவிட்டு, ஆட்டின் உயிரை எடுப்பதால் பாவங்கள் நீங்கி விடுமா? ஒருவர் செய்த நன்மையும் தீமையும் ஒருநாளும் அவரை விட்டுச் செல்லாது. ஆகையால், தீய செயல்களைச் செய்யாதீர்கள். பிற உயிர்களைக் கொல்லும் செயலைச் செய்யாதீர்கள். இந்தப் பூமியை மகிழ்ச்சியற்றதாக மாற்றிடும் எண்ணத்தை உங்களைவிட்டு நீக்குங்கள். இங்கு மக்களோடு சேர்ந்து மற்ற உயிர்களும் மகிழ்வோடு வாழ வழி செய்யுங்கள். – என்று கூறியவர் யார்?

A) இளங்கோவடிகள்

B) வள்ளலார்

C) பாரதியார்

D) புத்தர்

14. தேசிக விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர். ___________ ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

A) 15

B) 28

C) 33

D) 40

15. கீழ்க்கண்டவர்களுள் கவிமணி என்னும் பட்டம் பெற்றவர் யார்?

A) பாரதியார்

B) தேசிக விநாயகனார்

C) இராமலிங்கனார்

D) வாணிதாசன்

16. ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் __________ என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. இந்நூல் புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது.

A) வில்லியம் சேக்சுபியர்

B) வால்ட் விட்மன்

C) எட்வின் அர்னால்டு

D) இவர்களில் யாருமில்லை

17. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் _____________?

A) ஜீவ ஜோதி

B) ஆசிய ஜோதி

C) நவ ஜோதி

D) ஜீவன் ஜோதி

18. நேர்மையான வாழ்வை வாழ்பவர் _____________?

A) எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்

B) உயிர்களைத் துன்புறுத்துபவர்

C) தம்மை மட்டும் காத்துக்கொள்பவர்

D) தம் குடும்பத்தையே எண்ணிவாழ்பவர்

19. ஒருவர் செய்யக் கூடாதது ______________?

A) நல்வினை

B) தீவினை

C) பிறவினை

D) தன்வினை

20. ‘எளிதாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________?

A) எளிது + தாகும்

B) எளி + தாகும்

C) எளிது + ஆகும்

D) எளிதா + ஆகும்

21. ‘பாலையெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________?

A) பாலை + யெல்லாம்

B) பாலை + எல்லாம்

C) பாலை + எலாம்

D) பா + எல்லாம்

22. இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________?

A) இன்உயிர்

B) இனியஉயிர்

C) இன்னுயிர்

D) இனிமைஉயிர்

23. மலை + எலாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________?

A) மலைஎலாம்

B) மலையெலாம்

C) மலையெல்லாம்

D) மலைஎல்லாம்

24. எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துதல் வேண்டும். அதுவே மனிதநேயம் ஆகும். மனிதநேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த உண்மையை, “தமக்கென முயலா நோன்றாள் – பிறர்க்கென முயலுநர் உண்மையானே” என்று கூறும் பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) அகநானூறு

B) கலித்தொகை

C) புறநானூறு

D) நளவெண்பா

25. “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” – என்று கூறியவர் யார்?

A) திரு.வி.க

B) இளங்கோவடிகள்

C) சயம்கொண்டார்

D) வள்ளலார்

26. வள்ளலார் வாழ்வில் நடந்ததாக கூறப்படும் நிகழ்வில் சரியானது எது?

I. வள்ளலார் தம் இளம் வயதில் ஒருநாள் நடந்து வந்து கொண்டிருந்தார். நீண்ட தூரம் நடந்ததால் களைப்பு ஏற்பட்டது. எனவே ஓய்வெடுக்க விரும்பினார். வழியில் சத்திரம் ஒன்று இருந்தது. அதன் திண்ணையில் படுத்து உறங்கினார்.

II. அப்போது ஒருவன் அங்கு வந்தான். படுத்திருந்த வள்ளலாரின் காதில் கடுக்கன் இருப்பதைக் கண்டான். அதனைத் தனதாக்கிக் கொள்ள முடிவெடுத்தான். தங்கக்கடுக்கனை மெதுவாகக் கழற்றினான். அவனது செயலை அறிந்தும் வள்ளலார் கண் மூடியபடியே படுத்திருந்தார்.

III. ஒரு கடுக்கனைக் கழற்றியவுடன், மறுகாதில் உள்ள கடுக்கனை அவன் கழற்றுவதற்கு ஏதுவாகத் திரும்பிப் படுத்தார். அவன் அதையும் கழற்றிக் கொண்டு, அந்த இடத்தைவிட்டு அகன்று செல்ல முற்பட்டான்.

IV. அப்போது வள்ளலார் மென்மையான குரலில், “அப்பா, இவை இரண்டும் தங்கக்கடுக்கன்கள். குறைந்த விலைக்கு விற்றுவிடாதே! மேலும், ஒரு கடுக்கனுடன் சென்றால் உன்னைத் திருடன் என எளிதாகக் கண்டுபிடித்து விடுவார்கள். எனவேதான் இரண்டு கடுக்கன்களையும் நீ எடுத்துக் கொள்வதற்கு வாய்ப்பாகத் திரும்பிப் படுத்தேன்” என்றார். வள்ளலார் கூறியதைக் கேட்ட அவன் வெட்கித் தலைகுனிந்தான். இவ்வாறு தம்பொருளைக் கவர்ந்தவரிடம் கூட அன்பு காட்டியவர் வள்ளலார்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) I, II, III, IV அனைத்தும் தவறு

27. வள்ளலார் மக்களின் பசிப்பிணியைக் கண்டு உள்ளம் வாடினார். அதனை நீக்க விரும்பினார். தம் பெருமுயற்சியால் _____________ என்ற இடத்தில் சத்திய தருமச்சாலையைத் தொடங்கி எல்லாருக்கும் உணவளித்தார்.

A) அரியலூர்

B) பெரம்பலூர்

C) வடலூர்

D) வண்டலூர்

28. பசித்தோருக்கு உணவு வழங்கும் வள்ளலாரின் மனிதநேயச் செயல் இன்றும் _____________ என்ற இடத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

A) அரியலூர்

B) பெரம்பலூர்

C) வடலூர்

D) வண்டலூர்

29. கீழ்க்கண்ட கூற்று யாருடன் தொடர்புடையது?

மக்களுக்குச் செய்யும் பணியே இறைவனுக்குச் செய்யும் பணி என்று வாழ்ந்தார். அதனால் அமைதிக்கான நோபல் பரிசு அவரைத் தேடி வந்தது. இவர் தொழுநோய் பாதித்தவர்களுடன் இருந்து அவர்களுக்கு உதவிகள் பல செய்துள்ளார்.

A) மலாலா யூசப்சையி

B) கைலாஷ் சத்யார்த்தி

C) அன்னை தெரசா

D) இவர்களில் யாருமில்லை

30. வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை – என்று கூறியவர் யார்?

A) அன்னை தெரசா

B) கைலாஷ் சத்யார்த்தி

C) பாரதியார்

D) காந்தியடிகள்

31. குழந்தைகளைத் தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம். உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது – என்று கூறியவர் யார்?

A) கைலாஷ் சத்யார்த்தி

B) விவேகானந்தர்

C) ஜவஹர்லால் நேரு

D) இவர்களில் யாருமில்லை

32. கைலாஷ் சத்யார்த்தி அவர்களைப்பற்றிய சரியான கூற்று எது?

I. அன்னை தெரசாவிற்கு அடுத்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி.

II. குழந்தைகளைப் பாதுகாப்போம் என்னும் இயக்கத்தைத் தொடங்கினார். அந்த இயக்கத்தின் மூலம் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கப் பாடுபட்டு வருகிறார். கடந்த முப்பது ஆண்டுகளில் எண்பத்து ஆறாயிரம் குழந்தைத் தொழிலாளர்களை மீட்டுள்ளார்.

III. உலகக் குழந்தைகள் கல்வி உரிமைக்காக 103 நாடுகளில் 80,000 கி.மீ தூரம் நடைப்பயணம் சென்றுள்ளார். குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமைக்காக நாடு கடந்து பரப்புரை ஆற்றி வருகிறார்.

A) I மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) I, II, III அனைத்தும் தவறு

33. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் ____________?

A) மனித வாழ்க்கை

B) மனித உரிமை

C) மனித நேயம்

D) மனித உடைமை

34. தம் பொருளைக் கவர்ந்தவரிடமும் ____________ காட்டியவர் வள்ளலார்.

A) கோபம்

B) வெறுப்பு

C) கவலை

D) அன்பு

35. அன்னை தெரசாவிற்கு ____________ க்கான ‘நோபல் பரிசு’ கிடைத்தது.

A) பொருளாதாரம்

B) இயற்பியல்

C) மருத்துவம்

D) அமைதி

36. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் ___________?

A) குழந்தைகளைப் பாதுகாப்போம்

B) குழந்தைகளை நேசிப்போம்

C) குழந்தைகளை வளர்ப்போம்

D) குழந்தைகள் உதவி மையம்

37. சரியாகப் பொருந்தியது எது?

I. வள்ளலார் – பசிப்பிணி போக்கியவர்

II. கைலாஷ் சத்யார்த்தி – குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்

III. அன்னை தெரசா – நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்

A) I, II, III அனைத்தும் சரி

B) I மட்டும் சரி

C) II மட்டும் சரி

D) III மட்டும் சரி

38. முடிவில் ஒரு தொடக்கம் என்ற கதை தொடர்பான சரியான கூற்று எது?

I. மனித நேயத்தின் மகத்தான சாதனையாகத் தம் மகனின் துடிக்கும் இதயத்தையே கொடையாகத் தந்த இக்கால வள்ளல்கள் தாம் அசோகன் – புஷ்பாஞ்சலி என்ற மருத்துவத் தம்பதியினர். சிறுமிக்குப் பொருத்தப்பட்ட இதயத்திற்குரிய அந்த இளைஞனின் பெயர் ஹிதேந்திரன்.

II. பிறந்த போது பெற்றோரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதால் ஹிதேந்திரன் என்று பெயரிடப்பட்டான்.

III. அவன் இறந்த போது உலகத்தார் இதயங்களை எல்லாம் கொள்ளை கொண்டான். இதயம் கொடுத்து இதயங்களை வென்ற ஹிதேந்திரனை இவ்வுலகம் என்றென்றும் நினைவில் கொள்ளும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி

39. கவிஞர்கள் தங்கள் கற்பனைத் திறத்தாலும் புலமையாலும் தாங்கள் இயற்றும் பாடல்களில் அழகைச் சேர்க்கின்றனர். இதனை விளக்குவது அணி இலக்கணம் ஆகும். அணி என்பதற்கு _____________ என்பது பொருள்.

A) அழகு

B) அன்பு

C) வரிசை

D) இவற்றில் ஏதுமில்லை

40. கவிஞர் தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது அணி. மருந்தைத் தேனில் கலந்து கொடுப்பது போல் கருத்துகளைச் சுவைபடக் கூறுவது ____________ ஆகும்.

A) அழகு

B) அன்பு

C) வரிசை

D) அணி

41. ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது இயல்பு நவிற்சி அணி ஆகும். இதனைத் ____________ என்றும் கூறுவர்.

A) குணம் நவிற்சி அணி

B) தன்மை நவிற்சி அணி

C) இலக்கண நவிற்சி அணி

D) இவற்றில் ஏதுமில்லை

42. தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி அம்மா என்குது வெள்ளைப்பசு – உடன் அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி நாவால் நக்குது வெள்ளைப்பசு – பாலை நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி – என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்? மற்றும் பாடலில் பயின்று வரும் அணி எது?

A) கவிமணி தேசிக விநாயகனார், இயல்பு நவிற்சி அணி

B) பாரதியார், ஏகதேச உருவாக அணி

C) பாரதிதாசன், உவமை அணி

D) வாணிதாசன், வஞ்சப் புகழ்ச்சி அணி

43. ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது _________ ஆகும்.

A) வஞ்சப் புகழ்ச்சி அணி

B) உவமை அணி

C) உயர்வு நவிற்சி அணி

D) ஏகதேச உருவாக அணி

44. குளிர்நீரில் குளித்தால் கூதல் அடிக்குமென்று வெந்நீரில் குளித்தால் மேல கருக்குமென்று ஆகாச கங்கை அனல் உறைக்குமென்று பாதாள கங்கையைப் பாடி அழைத்தார் உன் தாத்தா – இந்த பாடலில் பயின்று வரும் அணி எது?

A) இயல்பு நவிற்சி அணி

B) ஏகதேச உருவாக அணி

C) உவமை அணி

D) உயர்வு நவிற்சி அணி

45. ஆறு சக்கரம் நூறு வண்டி, அழகான ரயிலு வண்டி, மாடு கன்னு இல்லாமத்தான் மாயமாத்தான் ஓடுது உப்புப் பாரம் ஏத்தும் வண்டி உப்பிலிப் பாளையம் போகும் வண்டி – இந்த பாடலில் பயின்று வரும் அணி எது?

A) இயல்பு நவிற்சி அணி

B) ஏகதேச உருவாக அணி

C) உவமை அணி

D) உயர்வு நவிற்சி அணி

46. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?

I. மனிதநேயம் – Humanity

II. கருணை – Mercy

III. உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை – Transplantation

IV. சரக்குந்து – Lorry

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) IV மட்டும் சரி

47. முடிவில் ஒரு தொடக்கம் என்னும் கதையானது எதனைப் பற்றி விவரிக்கிறது?

A) வாழ்க்கையின் துன்பம்

B) இரத்ததானம்

C) உடல் உறுப்புதானம்

D) கண் தானம்

48. மனித நேயத்தின் மகத்தான சாதனையாக கருதுவது எதனை?

A) இரத்த தானம்

B) நன்கொடை

C) கண் தானம்

D) உடல் உறுப்புதானம்

49. மனித நேயத்தின் மகத்தான சாதனையாக கருதப்படும் உடல் உறுப்பு தானத்துக்கு தம் மகனின் துடிக்கும் இதயத்தையே கொடையாகத் கொடுத்த தம்பதியினரின் பெயர் என்ன?

A) அசோகன் – புஷ்பாஞ்சலி

B) கணேசன் – ராதா

C) ராம்கி – கல்யாணி

D) சுரேந்தர் – நித்யா

50. முடிவில் தொடக்கம் கதையில் யாருக்கு இதயம் தேவைப்பட்டது?

A) இளைஞனுக்கு

B) பெண்ணுக்கு

C) சிறுமிக்கு

D) பெரியவருக்கு

51. முடிவில் தொடக்கம் என்ற கதையில் யாருடைய இதயம் சிறுமிக்கு பொருத்தப்பட்டது?

A) சிறுமியின்

B) பெரியவரின்

C) இளைஞனின்

D) சகோதரனின்

52. சிறுமிக்கு பொறுத்தப்பட்ட இதயத்தை வழங்கிய இளைஞனின் பெயர் என்ன?

A) அசோகன்

B) ஹிதேந்திரன்

C) விஜயேந்திரன்

D) சுரேந்திரன்

53. முடிவில் ஒரு தொடக்கம் கதையில் பாதிக்கப்பட்ட சிறுமி எந்த ஊரை சேர்ந்தவள்?

A) சென்னை

B) திருக்கழுக்குன்றம்

C) பெங்களூரு

D) மும்பை

54. உலகத்தாரின் இதயங்களை கொள்ளை கொண்ட ஹிதேந்திரன் எந்த ஊரினை சார்ந்தவர்?

A) மும்பை

B) திருக்கழுக்குன்றம்

C) மதுரை

D) திருநெல்வேலி

Exit mobile version