6th Tamil Unit 7 Questions

6th Tamil Unit 7 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 6th Tamil Unit 7 Questions With Answers Uploaded Below.

1. புதுமைகள் செய்த தேசமிது; பூமியின் கிழக்கு வாசலிது! தெய்வ வள்ளுவன் நெய்த குறள்தான்; தேசம் உடுத்திய நூலாடை! – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) சங்கொலி, நாமக்கல் கவிஞர்

B) தாராபாரதியின் கவிதைகள், தாராபாரதி

C) எழிலோவியம், வாணிதாசன்

D) உலகியல் நூறு, பாவலரேறு பெருஞ்சித்திரனார்

2. மெய்களைப் போற்றிய இந்தியத் தாய்க்கு; மெய்யுணர்வு என்கிற மேலாடை! (புதுமைகள்) காளி தாசனின் தேனிசைப் பாடல்கள் காவிரிக் கரையில் எதிரொலிக்க – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) சங்கொலி, நாமக்கல் கவிஞர்

B) தாராபாரதியின் கவிதைகள், தாராபாரதி

C) எழிலோவியம், வாணிதாசன்

D) உலகியல் நூறு, பாவலரேறு பெருஞ்சித்திரனார்

3. கம்பனின் அமுதக் கவிதை களுக்குக் கங்கை அலைகள் இசையமைக்க (புதுமைகள்) கன்னிக் குமரியின் கூந்த லுக்காகக் காஷ்மீர்த் தோட்டம் பூத்தொடுக்கும்! – என்ற பாடல் வரியின் ஆசிரியருடைய இயற்பெயர் என்ன?

A) மீரா (மீ. ராசேந்திரன்)

B) துரைராசு (முடியரசன்)

C) அரங்கசாமி என்ற எத்திராசலு (வாணிதாசன்)

D) இராதாகிருஷ்ணன் (தாராபாரதி)

4. மேற்கு மலைகள் நதிகளை அனுப்பிக் கிழக்குக் கரையின் நலம்கேட்கும்! (புதுமைகள்) புல்வெளி யெல்லாம் பூக்கா டாகிப் புன்னகை செய்த பொற்காலம்! – என்ற பாடல் வரியின் ஆசிரியருடைய இயற்பெயர் என்ன?

A) மீரா (மீ. ராசேந்திரன்)

B) துரைராசு (முடியரசன்)

C) அரங்கசாமி என்ற எத்திராசலு (வாணிதாசன்)

D) இராதாகிருஷ்ணன் (தாராபாரதி)

5. கல்லைக் கூட காவிய மாக்கிக் கட்டி நிறுத்திய கலைக்கூடம்! (புதுமைகள்) அன்னை நாட்டின் அமுத சுரபியில் அன்னிய நாடுகள் பசிதீர அண்ணல் காந்தியின் சின்னக் கைத்தடி அறத்தின் ஊன்று கோலாக புதுமைகள் செய்த தேசமிது பூமியின் கிழக்கு வாசலிது! – என்ற பாடல் வரியின் ஆசிரியருடைய அடைமொழிப்பெயர் என்ன?

A) நாமக்கல் கவிஞர் (வெ. இராமலிங்கம் பிள்ளை)

B) பாவலரேறு (பெருஞ்சித்திரனார்)

C) கவிஞாயிறு (தாராபாரதி)

D) இவற்றில் ஏதுமில்லை

6. புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள் முதலிய நூல்களின் ஆசிரியர் யார்?

A) வாணிதாசன்

B) தாராபாரதி

C) பாரதிதாசன்

D) மீ. ராசேந்திரன்

7. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. தாரா பாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன். கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர்.

II. புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள் முதலானவை இவர் இயற்றிய நூல்களாகும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

8. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்?

A) திருவாசகம்

B) திருக்குறள்

C) திரிகடுகம்

D) திருப்பாவை

9. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம்?

A) காவிரிக்கரை

B) வைகைக்கரை

C) கங்கைக்கரை

D) யமுனைக்கரை

10. கலைக்கூடமாகக் காட்சி தருவது?

A) சிற்பக்கூடம்

B) ஓவியக்கூடம்

C) பள்ளிக்கூடம்

D) சிறைக்கூடம்

11. நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

A) நூல் + ஆடை

B) நூலா + டை

C) நூல் + லாடை

D) நூலா + ஆடை

12. எதிர் + ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?

A) எதிரலிக்க

B) எதிர்ஒலிக்க

C) எதிரொலிக்க

D) எதிர்ரொலிக்க

13. பூமியின் கிழக்கு வாசலாகத் திகழும் நமது இந்தியநாடு பல புதுமைகளைச் செய்த நாடு. திருக்குறள் நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்குகின்றது. உண்மைகளைப் போற்றும் இந்தியத் தாய்க்கு மெய்யுணர்வே மேலாடையாக விளங்குகின்றது. காளிதாசர் இயற்றிய இனிமையான பாடல்கள் காவிரிக்கரை வரை எதிரொலிக்கின்றன – என்ற கூற்று யாருடையது?

A) வாணிதாசன்

B) தாராபாரதி

C) பாரதிதாசன்

D) மீ. ராசேந்திரன்

14. கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்குக் கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன. குமரிமுனை ஆகிய கன்னியின் கூந்தலுக்காகக் காஷ்மீரத்து மலர்கள் மாலையாகத் தொடுக்கப்படுகின்றன. மேற்கே தோன்றும் நதிகள் கிழக்கு எல்லை வரை பாய்ந்து நன்மைகளை விளைவிக்கின்றன. புல்வெளிகள் எல்லாம் பூக்கள் மலர்ந்து பொற்காலமாகப் புன்னகை புரிகின்றன – என்ற கூற்று யாருடையது?

A) தாராபாரதி

B) பாரதியார்

C) பாரதிதாசன்

D) மீ. ராசேந்திரன்

15. கல்லில் செதுக்கிய சிற்பங்கள் யாவும் காவியக் கலைக்கூடமாகக் காட்சி தருகின்றன. அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக அன்னை பாரத நாடு திகழ்கின்றது. நம் நாடு பிறநாட்டு மக்களின் பசியையும் போக்கி வருகின்றது. அறத்தின் ஊன்றுகோலாக காந்தியடிகளின் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி விளங்குகின்றது – என்ற கூற்று யாருடையது?

A) உ.வே.சா

B) திரு.வி.க

C) பாரதிதாசன்

D) தாராபாரதி

16. கீழ்க்கண்ட கூற்று யாரைப்பற்றியது?

பெண்கள் முன்னேற்றம், சமுதாய மறுமலர்ச்சி, தீண்டாமை ஒழிப்பு முதலியவற்றுக்காகவும் அவர் பாடுபட்டார். எளிமையை ஓர் அறமாகப் போற்றினார். இந்தியாவில் அவர் காலடிபடாத இடமே இல்லை. தமிழ்நாட்டின் மீதும் தமிழ் மொழியின் மீதும் இவர் பற்று வைத்திருந்தார்.

A) அண்ணல் அம்பேத்கர்

B) காந்தியடிகள்

C) நேரு

D) சுபாஷ் சந்திர போஸ்

17. ______________ ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காந்தியடிகள் சென்னைக்கு வந்தார்.

A) 1913

B) 1923

C) 1929

D) 1919

18. காந்தியடிகள் சென்னைக்கு வந்திருந்த போது ஆங்கில அரசு ரௌலட் சட்டம் என்னும் கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருந்தது. அதனை எதிர்த்துப் பெரிய போராட்டத்தை நடத்தக் காந்தியடிகள் திட்டமிட்டார். அதைப் பற்றிய கருத்தாய்வுக் கூட்டம் ____________ அவர்களின் வீட்டில் நடைபெற்றது.

A) பாரதியார்

B) இராஜாஜி

C) சத்யமூர்த்தி

D) இவற்றில் ஏதுமில்லை

19. “திரு. காந்தி அவர்களே! நான் இன்று மாலை ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளேன். அதற்குத் தாங்கள் தலைமை தாங்க முடியுமா?” – என்று கேட்டவர் யார்?

A) பாரதியார்

B) இராஜாஜி

C) சத்யமூர்த்தி

D) வ. உ. சிதம்பரம்பிள்ளை

20. “இன்று எனக்கு வேறு பணி இருக்கிறது. உங்கள் பொதுக்கூட்டத்தை நாளை நடத்த முடியுமா?” என்று கேட்டார் காந்தியடிகள். “அது முடியாது. திட்டமிட்டபடி கூட்டம் நடக்கும். தாங்கள் தொடங்கப்போகும் இயக்கத்துக்கு என் வாழ்த்துகள்” என்று கூறியவர் யார்?

A) வ. உ. சிதம்பரம்பிள்ளை

B) இராஜாஜி

C) சத்யமூர்த்தி

D) பாரதியார்

21. காந்தியடிகளிடம் “இவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஞர்” என்று பாரதியாரை கூறியவர் யார்?

A) வ. உ. சிதம்பரம்பிள்ளை

B) இராஜாஜி

C) சத்யமூர்த்தி

D) திரு.வி.க

22. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்தார். அப்போது புகைவண்டியில் மதுரைக்குச் சென்றார்.

II. செல்லும் வழியில் பெரும்பாலான மக்கள் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்து இருப்பதைக் கண்டார். அப்போது காந்தியடிகள் நீளமான வேட்டி, மேல்சட்டை, பெரிய தலைப்பாகை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

III. பெரும்பாலான இந்தியர்கள் போதிய உடைகள் இல்லாமல் இருக்கிறார்கள். தான் மட்டும் இவ்வளவு துணிகளை அணிவதா? என்று சிந்தித்தார். அன்றுமுதல் வேட்டியும் துண்டும் மட்டுமே அணியத் தொடங்கினார்.

IV. அவரது தோற்றத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு. அந்தக் கோலத்திலேயே தம் வாழ்நாள் முழுவதும் இருந்தார். உலகம் போற்றிய எளிமைத் திருக்கோலம் இதுவாகும்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்துமே சரி

23. காந்தியடிகள் ஒருமுறை _____________ ஊரைச் சுற்றியுள்ள ஊர்களில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது கானாடுகாத்தான் என்னும் ஊரில் அன்பர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்தார்.

A) காரைக்குடி

B) மானாமதுரை

C) தேவகோட்டை

D) இளையான்குடி

24. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. காந்தியடிகள் ஒருமுறை மதுரையில் தங்கி இருந்தார். மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று வரலாம் என்று தலைவர்கள் அவரை அழைத்தனர். “அந்தக் கோவிலுக்குள் செல்ல எல்லா மக்களுக்கும் அனுமதி உண்டா?” என்று காந்தியடிகள் கேட்டார். அங்கு இருந்தவர்கள் “இல்லை” என்றனர். “அப்படியானால் அங்கே வரமாட்டேன்” என்று கூறிவிட்டார்.

II. பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கோவிலுக்குள் செல்ல அனைவருக்கும் உரிமை உண்டு என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு மதுரைக்கு வந்த போதுதான் காந்தியடிகள் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்றார்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

25. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. குற்றால அருவியில் நீராட அனைவருக்கும் உரிமை அளிக்கப்பட்டு இருந்தது.

II. ஆனால், அருவிக்குச் செல்லும் வழியில் ஒரு கோவில் இருந்தது. அதன் வழியாகச் செல்ல ஒரு சாராருக்குத் தடை இருந்தது.

III. எனவே அனைவரும் அருவியில் நீராட முடியாத நிலை இருந்தது. அதனை அறிந்த காந்தியடிகள் குற்றால அருவியில் நீராட மறுத்துவிட்டார்.

IV. மனிதர்களிடம் உயர்வு தாழ்வு பாராட்டக் கூடாது என்பதில் காந்தியடிகள் உறுதியாக இருந்ததை இதன்மூலம் அறிய முடிகிறது.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்துமே சரி

26. காந்தியடிகள் தமக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் பலமுறை கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கியதாகக் கூறியுள்ளார். ___________ எழுதிய தமிழ்க் கையேடு தம்மைக் கவர்ந்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார். ____________ அவரைப் பெரிதும் கவர்ந்த நூலாகும்.

A) ஜி.யு.போப், திருக்குறள்

B) கால்டுவெல், கலிங்கத்துப்பரணி

C) வீரமாமுனிவர், புறநானூறு

D) இவற்றில் ஏதுமில்லை

27. ______________ ஆம் ஆண்டு சென்னையில் இலக்கிய மாநாடு ஒன்று நடைபெற்றது. அம்மாநாட்டுக்குக் காந்தியடிகள் தலைமை வகித்தார். ______________ என்பவர் வரவேற்புக்குழுத் தலைவராக இருந்தார்.

A) 1923, திரு.வி.க

B) 1937, உ.வே.சாமிநாதர்

C) 1940, பாரதியார்

D) 1943, நாமக்கல் கவிஞர்

28. “இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று காந்தியடிகள் யாரைப் பற்றிக் கூறுகிறார்?

A) நாமக்கல் கவிஞர்

B) திரு.வி.க

C) உ.வே.சாமிநாதர்

D) பாரதியார்

29. காந்தியடிகளிடம் உடைஅணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் _____________?

A) கோவை

B) மதுரை

C) தஞ்சாவூர்

D) சிதம்பரம்

30. காந்தியடிகள் ___________ அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்.

A) நாமக்கல் கவிஞர்

B) பாரதிதாசன்

C) உ.வே.சாமிநாதர்

D) பாரதியார்

31. கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தியவை எவை?

I. இலக்கிய மாநாடு – சென்னை

II. தமிழ்நாட்டுக் கவிஞர் – பாரதியார்

III. குற்றாலம் – அருவி

IV. தமிழ்க் கையேடு – ஜி.யு.போப்

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I, II, III, IV அனைத்தும் தவறு

C) I, II, III மட்டும் சரி

D) III, IV மட்டும் சரி

32. இராமநாதபுரத்தை ஆட்சி செய்த _______________ என்ற மன்னரின் ஒரே மகள் வேலுநாச்சியார்.

A) செல்லமுத்து

B) வாஞ்சிநாதன்

C) ஞானதுரை

D) பாரி வேலன்

33. கீழ்க்கண்ட கூற்று யாரைப்பற்றியது?

I. தாய்மொழியாகிய தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கிலம், பிரெஞ்சு, உருது ஆகிய மொழிகளையும் சிறப்பாகக் கற்றார்.

II. சிலம்பம், குதிரையேற்றம், வாட்போர், விற்பயிற்சி ஆகியவற்றையும் முறையாகக் கற்றுக் கொண்டார்.

III. சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதரை மணந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார்.

A) அம்புஜத்தம்மாள்

B) இராணி இலட்சுமிபாய்

C) வேலுநாச்சியார்

D) இராணி மங்கம்மாள்

34. ________________ என்ற இடத்தில் நடைபெற்ற போரில் வேலுநாச்சியார் அவர்களின் கணவர் முத்துவடுகநாதர் ஆங்கிலேயரால் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டார்.

A) பாஞ்சாலங்குறிச்சி

B) மன்னார்குடி

C) ஆவுடையார்கோவில்

D) காளையார்கோவில்

35. வேலுநாச்சியார் ஆங்கிலேயரை வென்று சிவகங்கையை மீட்க உறுதி பூண்டார். _______________ என்ற இடத்தில் கோட்டையில் தங்கி ஒரு படையைத் திரட்டிப் பயிற்சி அளித்தார்.

A) திருச்சி

B) திண்டுக்கல்

C) மதுரை

D) சிவகங்கை

36. எட்டு ஆண்டுகளுக்குப் பின், திண்டுக்கல் கோட்டையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. கூட்டத்தின் நடுவே வீரமங்கை வேலுநாச்சியார் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி அமைச்சர் _______________ தளபதிகளாகிய ________________ மற்றும் குறுநில மன்னர்கள் சிலர் இருந்தனர்.

A) நரசப்பையன், வீரபாண்டியன்

B) தாண்டவராயர், பெரிய மருது, சின்ன மருது

C) வேள்பாரி, பூலித்தேவன்

D) இவர்களில் யாருமில்லை

37. வேலுநாச்சியார் அவர்களுக்கு மைசூரில் இருந்து ஐயாயிரம் குதிரைப் படை வீரர்கள் அனுப்பி உதவி செய்த மன்னனின் பெயர்?

A) இரண்டாம் பாஜிராவ்

B) ஒளரங்கசீப்

C) திப்பு சுல்தான்

D) ஐதர்அலி

38. வேலுநாச்சியார் அவர்கள் ஐதர்அலியைச் சந்திக்க மைசூர் சென்ற போது ___________ மொழியில் ஐதர் அலியுடன் உரையாடினார்.

A) இந்தி

B) பாரசீகம்

C) உருது

D) கன்னடம்

39. காளையார்கோவில் நோக்கி வேலுநாச்சியார் படை புறப்பட்டது. ஆண்கள் படைப்பிரிவுக்கு _______________ பெண்கள் படைப்பிரிவுக்குக் ____________ தலைமை ஏற்றனர்.

A) மருது சகோதரர்கள், குயிலி

B) வீரபாண்டிய கட்டபொம்மன், மாதவி

C) வெள்ளையத்தேவன், காந்திமதி

D) இவர்களில் யாருமில்லை

40. “நாம் சிவகங்கையை இழந்து ______________ ஆண்டுகள் ஆகிவிட்டன” என்று வேலுநாச்சியார் கவலை நிறைந்த குரலில் கூறினார்.

A) ஆறு

B) பத்து

C) எட்டு

D) ஒன்பது

41. வேலுநாச்சியார் அவர்களின் கணவர் முத்துவடுகநாதர் கொல்லப்பட்ட ஊர்?

A) காளையார்கோவில்

B) புதுக்கோட்டை

C) காரைக்குடி

D) பாஞ்சாலங்குறிச்சி

42. _______________ என்ற இடத்தில் வேலுநாச்சியாரின் படைக்கும் ஆங்கிலேயரின் படைக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்றது. இறுதியில் ஆங்கிலேயரின் படை தோற்று ஓடியது.

A) காளையார்கோவில்

B) புதுக்கோட்டை

C) காரைக்குடி

D) பாஞ்சாலங்குறிச்சி

43. ______________ திருநாள் அன்று சிவகங்கைக் கோட்டைக் கதவுகள் திறக்கப்படும். அப்போது நமது படைகள் உள்ளே நுழையலாம், என்றார் வேலுநாச்சியார்.

A) பொங்கல்

B) தீபாவளி

C) உழைப்பாளர் தினம்

D) விசயதசமி

44. ______________ திருநாள் அன்று சிவகங்கைக் கோட்டைக்குள் செல்வதற்குப் பெண்களுக்கு மட்டும் அனுமதி உண்டு.

A) பொங்கல்

B) தீபாவளி

C) உழைப்பாளர் தினம்

D) விசயதசமி

45. வேலுநாச்சியார் அவர்களை காட்டிக் கொடுக்குமாறு ____________ என்னும் பெண்ணை ஆங்கிலேயர்கள் வற்புறுத்தினார்கள்.

A) கோப்பெருந்தேவி

B) உடையாள்

C) கயல்விழி

D) இவர்களில் யாருமில்லை

46. தம் உடலில் தீ வைத்துக் கொண்டு சிவகங்கைக் கோட்டையில் உள்ள ஆங்கிலேயர் ஆயுதக் கிடங்கில் குதித்து உயிர் நீத்தவர் யார்?

A) கோப்பெருந்தேவி

B) உடையாள்

C) கயல்விழி

D) குயிலி

47. வேலுநாச்சியாரின் காலம்?

A) 1730 – 1796

B) 1740 – 1816

C) 1750 – 1826

D) 1760 – 1836

48. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு ?

A) 1770

B) 1780

C) 1790

D) 1795

49. ஜான்சி ராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர் யார்?

A) குயிலி

B) அம்புஜத்தம்மாள்

C) ராணி மங்கம்மாள்

D) வேலு நாச்சியார்

50. தமிழில் சில எழுத்துகள் தனித்து நின்று பொருள் தரும். ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும். இவ்வாறு பொருள் தருபவை ___________ எனப்படும். (எ.கா.) ஈ, பூ, மை, கல், கடல், தங்கம்.

A) இலக்கணம்

B) யாப்பு

C) சொல்

D) இவற்றில் ஏதுமில்லை

51. இலக்கண அடிப்படையில் சொற்கள் பெயர்ச்சொல், வினைச்சொல், _____________, உரிச்சொல் என நான்கு வகைப்படும்.

A) காலச்சொல்

B) இடைச்சொல்

C) இலக்கண சொல்

D) இவற்றில் ஏதுமில்லை

52. ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் ___________ எனப்படும். (எ.கா.) பாரதி, பள்ளி, காலை, கண், நன்மை, ஓடுதல்.

A) பெயர்ச்சொல்

B) வினைச்சொல்

C) இடைச்சொல்

D) உரிச்சொல்

53. வினை என்னும் சொல்லுக்குச் செயல் என்பது பொருள். செயலைக் குறிக்கும் சொல் ______________ எனப்படும். (எ.கா.) வா, போ, எழுது, விளையாடு.

A) பெயர்ச்சொல்

B) வினைச்சொல்

C) இடைச்சொல்

D) உரிச்சொல்

54. பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் ____________ ஆகும். இது தனித்து இயங்காது. (எ.கா.) உம் – தந்தையும் தாயும், மற்று – மற்றொருவர், ஐ – திருக்குறளை

A) பெயர்ச்சொல்

B) வினைச்சொல்

C) இடைச்சொல்

D) உரிச்சொல்

55. பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது _______________ ஆகும். (எ.கா.) மா – மாநகரம், சால – சாலச்சிறந்தது

A) பெயர்ச்சொல்

B) வினைச்சொல்

C) இடைச்சொல்

D) உரிச்சொல்

56. கீழ்க்காணும் குறளில் உள்ள இடைச்சொல்லை எழுதுக. “மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு”?

A) கேட்டல்

B) செவிக்கு

C) அவர்

D) மற்று

57. இடைச்சொல் – பொருந்தாதது எது?

A) மா

B) ஐ

C) உம்

D) மற்ற

58. கீழ்க்கண்ட கூற்று யாருடையது?

I. தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். அவர், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என்னும் பன்முகத்தன்மை பெற்றிருந்தார்.

II. ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர்.

A) திருப்பூர் குமரன்

B) பாரதியார்

C) ம.பொ.சிவஞானம்

D) வ.உ.சிதம்பரனார்

59. _______________ ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள் “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

A) 1897

B) 1906

C) 1910

D) 1913

60. கீழ்க்கண்டவற்றில் சரியானது எது?

I. ஒன்று என்பதைக் குறிக்க ஓர், ஒரு ஆகிய இரண்டு சொற்களும் பயன்படுகின்றன. உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஓர் என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஒரு என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

II. (எ.கா.) ஓர் ஊர்; ஓர் ஏரி; ஒரு நகரம்; ஒரு கடல்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

61. கீழ்க்கண்டவற்றில் சரியானது எது?

I. உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அஃது என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அது என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

II. (எ.கா.) அஃது இங்கே உள்ளது; அது நன்றாக உள்ளது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே தவறு

D) I, II இரண்டுமே சரி

62. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?

I) நாட்டுப்பற்று – Patriotism

II) இலக்கியம் – Literature

III) கலைக்கூடம் – Art Gallery

IV) மெய்யுணர்வு – Knowledge of Reality

A) I மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

63. கீழ்க்காணும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.

I. ஓரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.

விடை: ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.

II. ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒரு நாள்.

விடை: ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்.

III. அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.

விடை: அஃது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.

IV. அஃது நகரத்திற்குச் செல்லும் சாலை.

விடை: அது நகரத்திற்குச் செல்லும் சாலை.

V. அது ஒரு இனிய பாடல்.

விடை: அஃது ஒர் இனிய பாடல்.

A) I, II, III மட்டும் சரி

B) III, IV, V மட்டும் சரி

C) I, II, III, IV, V அனைத்துமே சரி

D) I, II, III, IV, V அனைத்துமே தவறு

Exit mobile version