6th Tamil Unit 6 Questions

6th Tamil Unit 6 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 6th Tamil Unit 6 Questions With Answers Uploaded Below.

1. கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி ஊராக்கி ஓங்கும் நகராக்கி நாடென்ற பேராக்கி வாழ்ந்த பெருமை அவன்பெற்றான், மாநிலத்தில் முல்லை மருதம் குறிஞ்சி நெய்தல் – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) தேன்மழை, சுரதா

B) கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள், மீ. ராசேந்திரன்

C) புதிய விடியல்கள், தாரா பாரதி

D) புதியதொரு விதி செய்வோம், முடியரசன்

2. நானிலத்தைக் கண்டபெரும் நாகரிக மாந்தன் அவன், ஆழக் கடல்கடந்தான் அஞ்சும் சமர்கடந்தான் சூழும் பனிமலையைச் சுற்றிக் கொடிபொறித்தான் முக்குளித்தான் ஆழிக்குள் முத்தெடுத்தான் தோணிக்குள் எக்களிப்பு மீதூர ஏலம் மிளகுமுதற் – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) தேன்மழை, சுரதா

B) கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள், மீ. ராசேந்திரன்

C) புதிய விடியல்கள், தாரா பாரதி

D) புதியதொரு விதி செய்வோம், முடியரசன்

3. பண்டங்கள் ஏற்றிப் பயன்நல்கும் வாணிகத்தால் கண்டங்கள் சுற்றிக் கலமேறி வந்தவன்தான், அஞ்சாமை மிக்கவன்தான் ஆனாலும் சான்றோர்கள் அஞ்சுவதை அஞ்சி அகற்றி விலக்கிடுவான் – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) தேன்மழை, சுரதா

B) கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள், மீ. ராசேந்திரன்

C) புதிய விடியல்கள், தாரா பாரதி

D) புதியதொரு விதி செய்வோம், முடியரசன்

4. சொல்லும் பொருளும் – சரியானது எது?

I. மல்லெடுத்த – வலிமை பெற்ற

II. சமர் – போர்

III. நல்கும் – தரும்

IV. கழனி – வயல்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

5. சொல்லும் பொருளும் – சரியானது எது?

I. மறம் – வீரம்

II. எக்களிப்பு – பெருமகிழ்ச்சி

III. கலம் – கப்பல்

IV. ஆழி – கடல்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

6. தமிழன் கற்களும் முட்களும் நிறைந்திருந்த பெரிய நிலப்பரப்பைத் திருத்திப் பண்படுத்தினான். தனது உடல் வலிமையால் வளத்தைப் பெருக்கினான். ஊர், நகரம், நாடு ஆகியவற்றை உருவாக்கி வாழும் பெருமையைப் பெற்றான். முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என நிலத்தை நால்வகைப்படுத்திய நாகரிக மனிதன் அவன். – என்ற கூற்று யாருடையது?

A) திரு.வி.க

B) தாராபாரதி

C) முடியரசன்

D) பாரதியார்

7. பழந்தமிழன் ஆழமான கடல்களைக் கடந்து பயணம் செய்தான். அச்சம் தரும் போர்களிலும் எளிதாக வெற்றி கண்டான். பனிசூழ்ந்த இமயமலையில் தன் வெற்றிக் கொடியை நாட்டினான். ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தான். ஏலம், மிளகு ஆகியவற்றைப் பெருமகிழ்ச்சியோடு கப்பல்களில் ஏற்றிக் கண்டங்கள் தோறும் அனுப்பி வணிகம் செய்தான். கப்பலில் உலகை வலம் வந்தான். அவன் எதற்கும் அஞ்சாதவன். ஆனால், சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சுபவன். – என்ற கூற்று யாருடையது?

A) திரு.வி.க

B) தாராபாரதி

C) முடியரசன்

D) பாரதியார்

8. முடியரசனின் இயற்பெயர் ________?

A) துரைராசு

B) ராசேந்திரன்

C) சாமிக்கண்ணு

D) காமராசன்

9. பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களின் ஆசிரியர் யார்?

A) ந.காமராசன்

B) பெருஞ்சித்திரனார்

C) திரு.வி.க

D) முடியரசன்

10. ‘திராவிட நாட்டின் வானம்பாடி’ என்று பாராட்டப்பெற்றவர் யார்?

A) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

B) நாமக்கல் கவிஞர்

C) முடியரசன்

D) வாலி

11. வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம் – அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம் கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம் சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்! – என்ற பாடல் வரியின் ஆசிரியர் பெயர் என்ன?

A) பாரதியார்

B) மீ. ராசேந்திரன்

C) தாரா பாரதி

D) முடியரசன்

12. போர்க்களத்தில் வெளிப்படும் குணம் ____________?

A) மகிழ்ச்சி

B) துன்பம்

C) வீரம்

D) அழுகை

13. கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________?

A) கல் + அடுத்து

B) கல் + எடுத்து

C) கல் + லடுத்து

D) கல் + லெடுத்து

14. நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________?

A) நா + னிலம்

B) நான்கு + நிலம்

C) நா + நிலம்

D) நான் + நிலம்

15. நாடு + என்ற என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________?

A) நாடென்ற

B) நாடன்ற

C) நாடுஎன்ற

D) நாடுஅன்ற

16. கலம் + ஏறி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________?

A) கலம்ஏறி

B) கலமறி

C) கலன்ஏறி

D) கலமேறி

17. விடிவெள்ளி நம்விளக்கு – ஐலசா, விரிகடலே பள்ளிக்கூடம் – ஐலசா, அடிக்கும்அலை நம்தோழன் – ஐலசா, அருமைமேகம் நமதுகுடை – ஐலசா, வெண்மணலே பஞ்சுமெத்தை – ஐலசா, விண்ணின்இடி காணும்கூத்து – ஐலசா, பாயும்புயல் நம்ஊஞ்சல் – ஐலசா, பனிமூட்டம் உடல்போர்வை – ஐலசா – என்ற பாடல்வரி பற்றிய சரியான கூற்று எது?

A) இப்பாடல் ஜானகிராமன் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

B) இப்பாடல் க. வைகுண்டம் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

C) இப்பாடல் சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

D) இப்பாடல் சாமிநாதன் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

18. காயும்கதிர்ச் சுடர்கூரை – ஐலசா, கட்டுமரம் வாழும்வீடு – ஐலசா, மின்னல்வரி அரிச்சுவடி – ஐலசா, பிடிக்கும்மீன்கள் நம்பொருள்கள் – ஐலசா, முழுநிலவே கண்ணாடி – ஐலசா, மூச்சடக்கும்நீச்சல் யோகம் – ஐலசா, தொழும்தலைவன் பெருவானம் – ஐலசா, துணிவோடு தொழில்செய்வோம் – ஐலசா – என்ற பாடல்வரி பற்றிய சரியான கூற்று எது?

A) இப்பாடல் ஜானகிராமன் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

B) இப்பாடல் க. வைகுண்டம் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

C) இப்பாடல் சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

D) இப்பாடல் சாமிநாதன் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

19. நெய்தல் திணை – பற்றிய சரியான கூற்று எது?

I. நிலம் : கடலும் கடல் சார்ந்த இடமும்

II. மக்கள் : பரதவர், பரத்தியர்

III. தொழில் : மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்

IV. பூ : தாழம்பூ

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

20. சொல்லும் பொருளும் – சரியானது எது?

I. கதிர்ச்சுடர் – கதிரவனின் ஒளி

II. மின்னல்வரி – மின்னல் கோடு

III. அரிச்சுவடி – அகரவரிசை எழுத்துகள்

A) I, II, III அனைத்தும் சரி

B) I, II மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) III மட்டும் சரி

21. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?

I. உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடலாகும். காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை வாய்மொழி இலக்கியம் என்பர்.

II. ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலான தொழில்பாடல்களும் விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் முதலியனவும் நாட்டுப்புறப் பாடல்களுள் அடங்கும்.

A) I சரி II தவறு

B) I தவறு II சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

22. நானிலம் படைத்தவன் என்னும் பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

A) பூங்கொடி

B) புதியதொரு விதி செய்வோம்

C) புதிய விதி செய்வோம்

D) காவியப்பாவை

23. மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்பவர்கள் ___________ அவர்களுக்கு __________ விளக்குகளாகும்.

A) மீனவர்கள், நிலா ஒளியே

B) மீனவர்கள், எண்ணெய் விளக்கே

C) மீனவர்கள், விண்மீன்களே

D) மீனவர்கள், நட்சத்திரங்களே

24. மீன் பிடிக்கக் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு விரிந்த கடலே ______________கடல் அலையே ____________ வெண்மையான மணலே படுத்துறங்கும் ___________.

A) தோழன், பள்ளிக்கூடம், மெத்தை

B) பள்ளிக்கூடம், மெத்தை, தோழன்

C) பள்ளிக்கூடம், தோழன், பஞ்சு மெத்தை

D) பஞ்சு மெத்தை, தோழன், பள்ளிக்கூடம்

25. கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு விண்ணின் இடி அவர்கள் காணும் ___________ சீறிவரும் புயலே விளையாடும் _____________ பனிமூட்டம்தான் உடலை சுற்றும் _____________.

A) ஊஞ்சல், துணி, வேடிக்கை

B) வேடிக்கை, ஊஞ்சல், போர்வை

C) கூத்து, ஊஞ்சல், போர்வை

D) வேடிக்கை, போர்வை, ஊஞ்சல்

26. மீனவர்களுக்கு அனல் வீசும் கதிரவனின் ஒளிச்சுடர்தான் __________ கட்டுமரம்தான் அவர்களது ___________ மின்னல் கோடுகளே ___________.

A) வெளிச்சம், வேலை, பயம்

B) வெளிச்சம், வீடு, பயம்

C) மேற்கூரை, வாழும் வீடு, அடிப்படை பாடம்

D) மேற்கூரை, அடிப்படை பாடம், பயம்

27. மீனவர்களுக்கு வலைவீசிப் பிடிக்கும் மீன்களே _______________ அவர்களுக்கு தெரிகின்ற முழு நிலவு தான் _________________ மூச்சடக்கிச் செய்யும் நீச்சலே அவர்கள் செய்யும் ___________ ஆகும்.

A) கண்ணாடி, தவம், செல்வம்

B) தவம், செல்வம், கண்ணாடி

C) செல்வம், கண்ணாடி, தவம்

D) கண்ணாடி, செல்வம், தவம்

28. கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________.

A) கதிர்ச் + சுடர்

B) கதிரின் + சுடர்

C) கதிரவன் + சுடர்

D) கதிர் + சுடர்

29. மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________.

A) மூச்சு + அடக்கி

B) மூச் + அடக்கி

C) மூச் + சடக்கி

D) மூச்சை + அடக்கி

30. பெருமை + வானம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________.

A) பெருமைவனம்

B) பெருவானம்

C) பெருமானம்

D) பேர்வானம்

31. அடிக்கும் + அலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________.

A) அடிக்குமலை

B) அடிக்கும் அலை

C) அடிக்கிலை

D) அடியலை

32. பொருள்களை பிறரிடம் இருந்து வாங்குவதும் பிறருக்கு விற்பதும் ____________ ஆகும். பொருளை விற்பவர் _________ என்பர். பொருளை வாங்குவோர் __________ ஆவார்.

A) நுகர்வு, நுகர்வோர், வணிகர்

B) வாணிகம், நுகர்வோர், நுகர்வு

C) வணிகம், வணிகர், நுகர்வோர்

D) நுகர்வோர், நுகர்வு, வணிகர்

33. நம்மிடம் கூடுதலாக இருக்கும் பொருள்களைக் கொடுத்து நமக்குத் தேவையான பொருள்களைப் பெற்று கொள்வது __________ ஆகும்.

A) உள்நாட்டு வணிகம்

B) வெளிநாட்டு வணிகம்

C) மொத்த வணிகம்

D) பண்டமாற்று வணிகம்

34. நெல்லைக் கொடுத்து அதற்குப் பதிலாக __________ பெற்றனர். ஆட்டின் பாலைக் கொடுத்துத் __________ பெற்றனர். இந்தச் செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

A) காய்கறிகள், பழங்கள்

B) பொன், சர்க்கரை

C) உப்பு, தானியம்

D) இவற்றில் ஏதுமில்லை

35. வணிகத்தின் வகைகள் – சரியான கூற்று எது?

I. வணிகத்தைத் தரைவழி வணிகம், நீர்வழி வணிகம் எனப் பிரிக்கலாம். தரைவழியாகப் பொருள்களைக் கொண்டு செல்ல எருது, கழுதை, குதிரை போன்ற விலங்குகளும் வண்டிகளும் பயன்படுத்தப்ட்டன.

II. வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றி வெளியூருக்குச் செல்லும் போது குழுவாகவே செல்வார்கள். இக்குழுவை வணிகச்சாத்து என்பர்.

III. கடல்வழியாகக் கப்பல்கள் மூலம் பொருள்களை அனுப்புவதும் வரவழைப்பதும் நீர்வழி வணிகம் ஆகும்.

IV. கப்பல்கள் வந்து நின்று போகும் இடங்கள் துறைமுகங்கள் ஆகும். துறைமுக நகரங்கள் பட்டினம் என்றும் பாக்கம் என்றும் குறிக்கப்பட்டன.

A) I மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

36. தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகமாகப் ____________ விளங்கியது. அவ்வூர்த் துறைமுகத்தில் பல்வேறு நாட்டுக் கப்பல்கள் தத்தம் நாட்டுக் கொடிகளோடு வந்து நின்றன. அவற்றின் மூலம் வெளிநாட்டுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. தமிழ்நாட்டுப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

A) பூம்புகார்

B) கொற்கை

C) மலபார்

D) இவற்றில் ஏதுமில்லை

37. தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து; பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சாற்றி; ……….; உமணர் போகலும் – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) கலித்தொகை

B) நற்றிணை (183)

C) குறுந்தொகை (23)

D) அகநானூறு (149)

38. பாலொடு வந்து கூழொடு பெயரும் – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) கலித்தொகை

B) நற்றிணை (183)

C) குறுந்தொகை (23)

D) அகநானூறு (149)

39. பொன்னொடு வந்து கறியொடு பெயரும் – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) கலித்தொகை

B) நற்றிணை (183)

C) குறுந்தொகை (23)

D) அகநானூறு (149)

40. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

I. பழங்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து தேக்கு, மயில் தோகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு போன்றவை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

II. சீனத்திலிருந்து கண்ணாடி, கற்பூரம், பட்டு போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

41. _________ இல் இருந்து குதிரைகள் வாங்கப்பட்டன.

A) அரேபியா

B) ஆபிரிக்கா

C) ஐரோப்பா

D) ஆஸ்திரேலியா

42. அக்கால வணிகர்கள் நேர்மையாகத் தொழில் செய்தனர் என்பதைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. “வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்” – என்று ________ நூல் வணிகரின் நேர்மையைப் பற்றிக் கூறுகிறது.

A) புறநானூறு – 32

B) திருக்குறள் – 120

C) நற்றிணை – 76

D) பட்டினப்பாலை – 65

43. வணிகர்கள் பொருளை வாங்கும்பொழுது உரிய அளவைவிட அதிகமாக வாங்க மாட்டார்கள். பிறருக்குக் கொடுக்கும் பொழுது அளவைக் குறைத்துக் கொடுக்கமாட்டார்கள். எனவே வணிகரை “நடுவு நின்ற நன்னெஞ்சினோர்” என்று ________________ நூல் பாராட்டுகிறது.

A) புறநானூறு

B) திருக்குறள்

C) நற்றிணை

D) பட்டினப்பாலை

44. “கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது” – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) புறநானூறு

B) திருக்குறள்

C) நற்றிணை

D) பட்டினப்பாலை

45. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணி – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) புறநானூறு

B) திருக்குறள்

C) நற்றிணை

D) பட்டினப்பாலை

46. வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர் ______________?

A) நுகர்வோர்

B) தொழிலாளி

C) முதலீட்டாளர்

D) நெசவாளி

47. வணிகம் + சாத்து என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________?

A) வணிகசாத்து

B) வணிகம்சாத்து

C) வணிகச்சாத்து

D) வணிகத்துசாத்து

48. பண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ____________?

A) பண்டமாற்று

B) பண்டம்மாற்று

C) பண்மாற்று

D) பண்டுமாற்று

49. மின்னணு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________?

A) மின் + னணு

B) மின்ன + அணு

C) மின்னல் + அணு

D) மின் + அணு

50. விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________?

A) விரி + வடைந்த

B) விரி + அடைந்த

C) விரிவு + அடைந்த

D) விரிவ் + அடைந்த

51. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எடுத்து எழுதுக.

I. கரன்சி நோட் – பணத்தாள்

II. செக் – காசோலை

III. டிமாண்ட் டிராஃப்ட் – வரவோலை

IV. டிஜிட்டல் – மின்னணு மயம்

A) I, II, III மட்டும் சரி

B) I, II, III, IV அனைத்தும் சரி

C) II, III மட்டும் சரி

D) III, IV மட்டும் சரி

52. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எடுத்து எழுதுக.

I. டெபிட் கார்டு – பற்று அட்டை

II. கிரெடிட் கார்டு – கடன் அட்டை

III. ஆன்லைன் ஷாப்பிங் – இணையத்தள வணிகம்

IV. ஈ-காமர்ஸ் – மின்னணு வணிகம்

A) I, II, III மட்டும் சரி

B) III, IV மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

53. “பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்” என்பது ____________ என்பவரின் அறிவுரை.

A) பாரதியார்

B) ஒளவையார்

C) உ.வே.சா

D) நாமக்கல் கவிஞர்

54. கீழ்க்கண்ட கூற்றை ஆராய்க.

I. ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர்.

II. அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு எழுத்துகள் ஆகும். ஆனால், இன்று ‘உ’ என்னும் எழுத்தைச் சுட்டாகப் பயன்படுத்துவது இல்லை.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

55. இவன், அவன், இது, அது – இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகள் பொருள் தருவதில்லை. இவ்வாறு, சுட்டு எழுத்துகள் சொல்லின் உள்ளேயே (அகத்தே) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது ___________ எனப்படும்.

A) அகச்சுட்டு

B) புறச்சுட்டு

C) அண்மைச்சுட்டு

D) சேய்மைச்சுட்டு

56. அவ்வானம்-இம்மலை-இந்நூல்-இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும். இவ்வாறு சுட்டு எழுத்துகள் சொல்லின் வெளியே (புறத்தே) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது _____________ எனப்படும்.

A) அகச்சுட்டு

B) புறச்சுட்டு

C) அண்மைச்சுட்டு

D) சேய்மைச்சுட்டு

57. இவன், இவர், இது, இவை, இம்மரம், இவ்வீடு – இச்சொற்கள் நம் அருகில் (அண்மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன. எனவே, இஃது __________ எனப்படும். இச்சுட்டுக்குரிய எழுத்து ‘இ’ ஆகும்.

A) அகச்சுட்டு

B) புறச்சுட்டு

C) அண்மைச்சுட்டு

D) சேய்மைச்சுட்டு

58. அவள், அவர், அது, அவை, அவ்வீடு, அம்மரம் – இச்சொற்கள் தொலைவில் (சேய்மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன. எனவே, இது ____________ எனப்படும். இச்சுட்டுக்குரிய எழுத்து ’அ’ ஆகும்.

A) அகச்சுட்டு

B) புறச்சுட்டு

C) அண்மைச்சுட்டு

D) சேய்மைச்சுட்டு

59. அம்மரம், இவ்வீடு ஆகியவை புறச்சுட்டுகள் என்பதை அறிவோம். இச்சொற்களை அந்த மரம், இந்த வீடு என்றும் வழங்குகிறோம். அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் மாற்றம் பெற்று (திரிந்து) அந்த, இந்த என வழங்குகின்றன. இவ்வாறு, அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் அந்த, இந்த எனத் திரிந்து சுட்டுப் பொருளைத் தருவது ____________ எனப்படும்.

A) அகச்சுட்டு

B) புறச்சுட்டு

C) அண்மைச்சுட்டு

D) சுட்டுத்திரிபு

60. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உ ள்ள வற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட ‘உ’ என்ற சுட்டெழுத்து அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. (எ.கா.) உது, உவன்

II. வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர். சில வினா எழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெறும். சில வினா எழுத்துகள் சொல்லின்

இறுதியில் இடம்பெறும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

61. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர். சில வினா எழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெறும். சில வினா எழுத்துகள் சொல்லின் இறுதியில் இடம்பெறும். எ, யா, ஆ, ஓ, ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும்.

II. மொழியின் முதலில் வருபவை – எ, யா (எங்கு, யாருக்கு)

III. மொழியின் இறுதியில் வருபவை – ஆ, ஓ (பேசலாமா, தெரியுமோ)

IV. மொழி முதலிலும் இறுதியிலும் வருபவை – ஏ (ஏன், நீதானே)

A) I, II, III மட்டும் சரி

B) I, II, III, IV அனைத்தும் சரி

C) II, III மட்டும் சரி

D) III, IV மட்டும் சரி

62. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. எது, யார், ஏன் இச்சொற்களில் உள்ள வினா எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகளுக்குப் பொருள் இல்லை.

II. இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருவது அகவினா எனப்படும்.

III. அவனா? வருவானோ? இச்சொற்களில் உள்ள ஆ, ஓ ஆகிய வினா எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும்.

IV. இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருவது புறவினா எனப்படும்.

A) I, II, III மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) III, IV மட்டும் சரி

63. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. மனிதர்களுக்குத் தேவையான பொருள்களைக் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் நோக்கங்களுள் ஒன்று. ஓர் இடத்தில் உற்பத்தியாகும் பொருள்களைப் பல இடங்களுக்கு அனுப்புவதும் பல இடங்களில் கிடைக்கும் பொருள்களை ஓர் இடத்தில் கிடைக்கச் செய்வதும் வணிகம் ஆகும்.

II. கிடைக்கும் பொருள்களின் மதிப்பைக் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகமாகும். சான்றாகக் கல் என்பது விற்பனைப் பொருளன்று. ஆனால் அதனைச் செதுக்கிச் சிலையாக மாற்றலாம். உதிரும் கல்தூளைக் கோலமாவாக மாற்றலாம். இதனை மதிப்புக் கூட்டுதல் என்பர்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

64. கிடைக்கும் பொருள்களின் _______________ கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகம்.

A) அளவை

B) மதிப்பை

C) எண்ணிக்கையை

D) எடையை

65. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?

I. பண்டம் – Commodity

II. கடற்பயணம் – Voyage

III. பயணப்படகுகள் – Ferries

IV. தொழில் முனைவோர் – Entrepreneur

A) I, II மட்டும் சரி

B) II, III, IV மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) III, IV மட்டும் சரி

66. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?

I. பாரம்பரியம் – Heritage

II. கலப்படம் – Adulteration

III. நுகர்வோர் – Consumer

IV. வணிகர் – Merchant

A) I, II மட்டும் சரி

B) II, III, IV மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

 

Exit mobile version