6th Tamil Unit 3 Questions

6th Tamil Unit 3 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 6th Tamil Unit 3 Questions With Answers Uploaded Below.

1. _________________ என்பது அகர வரிசையில் அறிவுரைகளைச் சொல்லும் இலக்கியம்.

A) நளவெண்பா

B) தொல்காப்பியம்

C) ஆத்திசூடி

D) திருக்குறள்

2. ஆத்திசூடி என்ற நூலின் ஆசிரியர் யார்?

A) தொல்காப்பியர்

B) விளம்பி நாகனார்

C) சயம் கொண்டார்

D) ஒளவையார்

3. ’புதிய ஆத்திசூடி’ என்ற நூலின் ஆசிரியர் யார்?

A) வாணிதாசன்

B) சுத்தானந்த பாரதி

C) டாக்டர் ந.சஞ்சீவி

D) பாரதியார்

4. அறிவியல் சிந்தனை கொள், ஆய்வில் மூழ்கு, இயன்றவரை புரிந்து கொள், ஈடுபாட்டுடன் அணுகு, உண்மை கண்டறி, ஊக்கம் வெற்றிதரும் – என்ற ‘அறிவியல் ஆத்திசூடி’ நூலின் ஆசிரியர் யார்?

A) வாணிதாசன்

B) சுத்தானந்த பாரதி

C) டாக்டர் ந.சஞ்சீவி

D) நெல்லை சு.முத்து

5. என்றும் அறிவியலே வெல்லும், ஏன் என்று கேள், ஐயம் தெளிந்து சொல், ஒருமித்துச் செயல்படு, ஓய்வற உழை, ஔடதமாம் அனுபவம் – என்ற ‘அறிவியல் ஆத்திசூடி’ நூலின் ஆசிரியர் யார்?

A) வாணிதாசன்

B) சுத்தானந்த பாரதி

C) டாக்டர் ந.சஞ்சீவி

D) நெல்லை சு.முத்து

6. சொல்லும் பொருளும் – சரியானவற்றைத் தேர்ந்தெடு.

I. இயன்றவரை – முடிந்தவரை

II. ஒருமித்து – ஒன்றுபட்டு

III. ஔடதம் – மருந்து

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

7. “தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்” – என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் யார்?

A) வ.சுப.மாணிக்கம்

B) நெல்லை சு.முத்து

C) தமிழ்சூடி

D) டாக்டர் ந.சஞ்சீவி

8. கீழ்க்கண்டவர்களுள் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், சதீஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர் யார்?

A) நெல்லை சு.முத்து

B) வ.சுப.மாணிக்கம்

C) தமிழ்சூடி

D) டாக்டர் ந.சஞ்சீவி

9. அறிவியல் கவிதைகள், கட்டுரைகள் பலவற்றைப் படைத்துள்ளார். எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார் – இந்த கூற்றுடன் தொடர்புடையவர் யார்?

A) ஆசிரியர். அ. சீனிவாசன்

B) சச்சிதானந்தன்

C) டாக்டர் ந.சஞ்சீவி

D) நெல்லை சு.முத்து

10. உடல் நோய்க்கு _______________ தேவை.

A) ஔடதம்

B) இனிப்பு

C) உணவு

D) உடை

11. நண்பர்களுடன் ______________ விளையாடு.

A) ஒருமித்து

B) மாறுபட்டு

C) தனித்து

D) பகைத்து

12. ‘கண்டறி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________.

A) கண் + அறி

B) கண்டு + அறி

C) கண்ட + அறி

D) கண் + டற

13. ‘ஓய்வற’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________________.

A) ஓய்வு + அற

B) ஓய் + அற

C) ஓய் + வற

D) ஓய்வு + வற

14. ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________________.

A) ஏன்என்று

B) ஏனென்று

C) ஏன்னென்று

D) ஏனன்று

15. ஔடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______________.

A) ஔடதமாம்

B) ஔடதம்ஆம்

C) ஔடதாம்

D) ஔடதஆம

16. எதிர்ச்சொற்களைப் பொருத்துக – சரியானது எது?

I. அணுகு – விலகு

II. ஐயம் – தெளிவு

III. ஊக்கம் – சோர்வு

IV. உண்மை – பொய்மை

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

17. வானை அளப்போம் கடல் மீனையளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம் சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம் – என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?

A) நாமக்கல் கவிஞர்

B) பாரதியார்

C) பாரதிதாசன்

D) திரு.வி.க

18. மனிதன் எப்போதும் உண்மையையே ____________.

A) உரைக்கின்றான்

B) உழைக்கின்றான்

C) உறைகின்றான்

D) உரைகின்றான்

19. ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________.

A) ஆழமான + கடல்

B) ஆழ் + கடல்

C) ஆழ + கடல்

D) ஆழம் + கடல்

20. விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________.

A) விண் + வளி

B) விண் + வெளி

C) விண் + ஒளி

D) விண் + வொளி

21. நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________.

A) நீலம்வான்

B) நீளம்வான்

C) நீலவான்

D) நீலவ்வான்

22. இல்லாது + இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________.

A) இல்லாதுஇயங்கும்

B) இல்லாஇயங்கும்

C) இல்லாதியங்கும்

D) இல்லதியங்கும்

23. எந்திரமனிதன் ’ரோபோ’ பற்றிய சரியான கூற்று எது?

I. காரல் கபெக் (Karel capek) என்பவர் ‘செக்’ நாட்டைச் சேர்ந்த நாடக ஆசிரியர். இவர் 1920ஆம் ஆண்டு நாடகம் ஒன்றை எழுதினார்.

II. அதில் “ரோபோ” (Robot) என்னும் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தினார். ரோபோ என்ற சொல்லுக்கு ’அடிமை’ என்பது பொருள்.

III. ஒரு தொழிற்சாலையில் ரோபோக்கள் வேலை செய்வதாக அந்த நாடகத்தில் காட்சிகளை அமைத்திருந்தார். இவ்வாறு ரோபோ என்னும் சொல் வழக்கத்திற்கு வந்தது.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) I, II, III அனைத்தும் தவறு

24. தானியங்கிகள் பற்றிய சரியான கூற்று எது?

I. மனிதர்கள் தம் வேலைகளை எளிதாகச் செய்ய முதலில் எந்திரங்களைக் கண்டுபிடித்தனர். அவற்றை இயக்குவதற்கு மனித ஆற்றல் தேவைப்பட்டது. இக்குறையைப் போக்க மனிதன் கண்டுபிடித்தவையே தானியங்கிகள்.

II. நுட்பமான, கடினமான, ஒரே மாதிரியான வேலைகளை மனிதரைவிட விரைவாகத் தானே செய்துமுடிக்கும் எந்திரமே தானியங்கி ஆகும். ஒவ்வொரு தானியங்கியிலும் ஒரு கணினி இணைந்து இருக்கும். தானியங்கியின் செயல்களை அந்தக் கணினி கட்டுப்படுத்தும்.

III. இவ்வகைத் தானியங்கிகள் இன்று பல தொழில் நிறுவனங்களில் பயன்பட்டு வருகின்றன. இவை பயன்படும் இடத்திற்கு ஏற்ற வகையில் எந்திரக் கைகள், நகரும் கால்கள், சூழ்நிலைகளை உணர்வதற்கான நுண்ணுணர்வுக் கருவிகள் (Sensors) ஆகியவற்றுடன் உருவாக்கப்படுகின்றன.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் தவறு

D) I, II, III அனைத்தும் சரி

25. மனித முயற்சிகளுக்கு மாற்றாகத் தானே இயங்கும் எந்திரம் தானியங்கி ஆகும்.“இவை தோற்றத்தில் மனிதர் போல இல்லாமலும் இருக்கலாம். ஆனால் மனிதர்களைப் போலச் செயல்களை நிறைவேற்றும்” என்று _________________ கலைக்களஞ்சியம் தானியங்கிகளுக்கு விளக்கம் தருகிறது.

A) மால்வேசி

B) சுகாவே

C) பிரிட்டானிக்கா

D) இவற்றில் ஏதுமில்லை

26. _____________ -ஆம் ஆண்டு மே மாதம் சதுரங்கப் போட்டி ஒன்று நடைபெற்றது. அதில் உலகச் சதுரங்க வெற்றியாளர் கேரி கேஸ்புரோவ் என்பவர் கலந்து கொண்டார். ஐ.பி.எம். என்னும் நிறுவனம் உருவாக்கிய டீப் புளூ (Deep blue) என்னும் மீத்திறன் கணினி (Super Computer) அவருடன் போட்டியிட்டு, வெற்றி பெற்றது.

A) 1994

B) 1965

C) 1967

D) 1997

27. “உலகிலேயே முதன்முதலாக _________ நாடு ஒரு ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கியுள்ளது. அந்த ரோபோவின் பெயர் ‘சோபியா’. மேலும் ஐக்கிய நாடுகள் சபை ‘புதுமைகளின் வெற்றியாளர்’ என்னும் பட்டத்தைச் சோபியாவுக்கு வழங்கியுள்ளது. உயிரில்லாத ஒரு பொருளுக்கு ஐ.நா.சபை பட்டம் வழங்குவதும் இதுதான் முதல் முறை.

A) மலேசியா

B) அமெரிக்கா

C) ரஷ்யா

D) சவுதி அரேபியா

28. நுட்பமாகச் சிந்தித்து அறிவது ____________.

A) நூலறிவு

B) நுண்ணறிவு

C) சிற்றறிவு

D) பட்டறிவு

29. தானே இயங்கும் எந்திரம் ___________.

A) கணினி

B) தானியங்கி

C) அலைபேசி

D) தொலைக்காட்சி

30. ‘நின்றிருந்த’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________.

A) நின் + றிருந்த

B) நின்று + இருந்த 

C) நின்றி + இருந்த

D) நின்றி + ருந்த

31. ’அவ்வுருவம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.

A) அவ்வு + ருவம்

B) அ + உருவம்

C) அவ் + வுருவம்

D) அ + வுருவம்

32. மருத்துவம் + துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________.

A) மருத்துவம்துறை

B) மருத்துவதுறை

C) மருந்துதுறை

D) மருத்துவத்துறை

33. செயல் + இழக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________.

A) செயலிழக்க 

B) செயல்இழக்க

C) செயஇழக்க

D) செயலிலக்க

34. நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ______________.

A) போக்குதல்

B) தள்ளுதல்

C) அழித்தல்

D) சேர்த்தல்

35. எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல் _______________.

A) அரிது

B) சிறிது

C) பெரிது

D) வறிது

36. அப்துல் கலாம் அவர்களுக்கு தமிழில் மிகவும் பிடித்த புத்தகம் எது?

A) சிந்து சமவெளி நாகரீகம்

B) திருக்குறள்

C) கலிங்கத்துப்பரணி

D) இவற்றில் ஏதுமில்லை

37. கீழ்க்கண்டவற்றுள் எந்த குறள் அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கைக்கு வலுசேர்த்தது?

A) அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண்

B) அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

C) பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற

D) இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

38. ‘லிலியன் வாட்சன்’ எழுதிய, விளக்குகள் பல தந்த ஒளி (Lights from many lamps) என்னும் நூலையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதைப் படித்தபோது அறிவு, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி ஆகிய மூன்றையும் பெற்றேன் – என்று கூறியவர் யார்?

A) பெரியார்

B) அண்ணா

C) காந்தி

D) அப்துல் கலாம்

39. போலியோவினால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று கிலோ எடையுள்ள செயற்கைக் கால்களைப் பொருத்திக் கொண்டு சிரமப்பட்டு நடப்பதைக் கண்டேன். பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுத்தப்படும் கார்பன் இழையைக் கொண்டு முந்நூறு கிராம் எடையில் செயற்கைக் கால்கள் உருவாக்கப்பட்டன. அதனை அவர்கள் அணிந்து மகிழ்ந்த நிகழ்ச்சி தான் எனக்குப் பெருமகிழ்வை அளித்தது – என்று கூறியவர் யார்?

A) பெரியார்

B) நேரு

C) காந்தி

D) அப்துல் கலாம்

40. சுதந்திர இந்தியாவின் வெற்றிகளாக – கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளோம். தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகுதியான வளர்ச்சி பெற்றுள்ளோம். எவ்வகையான செயற்கைக் கோளையும் ஏவும் திறன் நம்மிடம் உள்ளது.

II. அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் முன்னணியில் உள்ளோம். நவீன மருந்துகளும் பாரம்பரிய மருத்துவ முறைகளும் வளர்ச்சி பெற்றுள்ளன.

III. பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை அக்னி மற்றும் பிரித்வி ஏவுகணைகளைச் செலுத்துவதில் வெற்றி பெற்றுள்ளோம்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) I, III மட்டும் சரி

41. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நமது இந்தியா மூன்று சிறப்புகளைப் பெற்றிருக்கும் என்று அப்துல் கலாம் அவர்கள் கூறியனவற்றுள் சரியானது எது?

I. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நாளந்தா பல்கலைக்கழகத்தில் இருந்ததைப் போல வலுவான கல்வி முறை இருக்கும்.

II. அனைத்து இயற்கை வளங்களும் தீர்ந்து போயிருக்கும். ஆயினும், நாம் தயாரித்து அனுப்பிய செயற்கைக்கோள்கள் சூரிய சக்தியைப் பெற்று நமக்கு அளிக்கும்.

III. செவ்வாய்க்கோளில் மனித இனம் குடியேறி இருக்கும்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) I, III மட்டும் சரி

41. அறிவியலின் அடிப்படை, கேள்வி கேட்கின்ற மனப்பான்மைதான். அறிவியல் பிறந்தது, வளர்ந்தது, வாழ்வது எல்லாம் இந்தக் கேள்வி கேட்கும் திறனால்தான். குழந்தைகளின் கேள்விகளுக்குத்தான் முடிவே இல்லை. கேள்வி கேட்கும் ஒவ்வொரு குழந்தையும் விஞ்ஞானிதான். எனவே குழந்தைகள் தான் இவ்வுலகின் முதல் விஞ்ஞானிகள் – என்று கூறியவர் யார்?

A) சர்.சி.வி.ராமன்

B) விவேகானந்தர்

C) திரு.வி.க

D) அப்துல் கலாம்

42. வெற்றியை அடைய இரண்டு வழிகள் உள்ளன. அவை, அறிவை வளர்க்கும் அனைவரின் பேச்சையும் கவனியுங்கள், வியர்வை! வியர்வை! வியர்வை! – என்று கூறியவர் யார்?

A) சர்.சி.வி.ராமன்

B) விவேகானந்தர்

C) திரு.வி.க

D) அப்துல் கலாம்

43. மொழி முதல் எழுத்துகள் – சரியான கூற்று எது?

I. மொழி என்பதற்குச் சொல் என்னும் பொருளும் உண்டு. சொல்லின் முதலில் வரும் எழுத்துகளை மொழிமுதல் எழுத்துகள் என்பர்.

II. உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும்.

III. க, ச, த, ந, ப, ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.

IV. ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதலில் வரும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

44. மொழி முதல் எழுத்துகள் – சரியான கூற்று எது?

I. ங – வரிசையில் ‘ங’ என்னும் ஓர் எழுத்து மட்டுமே சொல்லில் முதல் எழுத்தாக வருகிறது. எ.கா- ஙனம். (இக்காலத்தில் ஙனம் என்னும் சொல் தனித்து இயங்காமல் அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம் என்னும் சொற்களில் மட்டுமே வழங்கி வருகிறது.)

II. ஞ – வரிசையில் ஞ, ஞா, ஞெ, ஞொ ஆகிய நான்கு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.

III. ய – வரிசையில் ய, யா, யு, யூ, யோ, யௌ ஆகிய ஆறு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.

IV. வ – வரிசையில் வ, வா, வி, வீ, வெ, வே, வை, வெள ஆகிய எட்டு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

45. மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் – சரியான கூற்று எது?

I. மெய்யெழுத்துகள் பதினெட்டும் சொல்லின் முதலில் வாரா.

II. ட, ண, ர, ல, ழ, ள, ற, ன ஆகிய எட்டு உயிர்மெய் எழுத்துகளின் வரிசையில் ஓர் எழுத்து கூடச் சொல்லின் முதலில் வராது.

III. ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது.

IV. ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் மொழி முதலில் வருவதாகக் குறிப்பிடப்பட்ட எழுத்துகள் தவிர பிற எழுத்துகள் சொல்லின் முதலில் வாரா.

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I மட்டும் சரி

C) II மட்டும் சரி

D) III மட்டும் சரி

46. மொழி இறுதி எழுத்துகள் – சரியான கூற்று எது?

I. சொல்லின் இறுதியில் வரும் எழுத்துகளை மொழி இறுதி எழுத்துகள் என்பர்.

II. உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மெய்யுடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே மொழி இறுதியில் வரும்.

III. ஞ், ண், ந், ம், ய் ,ர், ல், வ், ழ், ள், ன் ஆகிய மெய்யெழுத்துகள் பதினொன்றும் மொழியின் இறுதியில் வரும். (உரிஞ், வெரிந், அவ்)

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) III மட்டும் சரி

47. மொழி இறுதியாகா எழுத்துகள் – சரியான கூற்று எது?

I. சொல்லின் இறுதியில் உயிரெழுத்துகள் தனித்து வருவதில்லை.

II. உயிர் எழுத்துகள் மெய்யெழுத்துடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே சொல்லின் இறுதியில் வரும்.

III. அளபெடை எழுத்துகளில் இடம் பெறும் போது உயிர் எழுத்துகள் சொல்லின் இறுதியில் வரும்.

IV. ஆய்த எழுத்து சொல்லின் இறுதியில் வராது. க், ங், ச், ட், த், ப், ற் ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வருவதில்லை.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) III, IV மட்டும் சரி

48. மொழி இறுதியாகா எழுத்துகள் – சரியான கூற்று எது?

I. உயிர்மெய் எழுத்துகளுள் ‘ங’ எழுத்து வரிசை சொல்லின் இறுதியில் வராது. கார்த்திக், ஹாங்காங், சுஜித், ஜாங்கிரி, திலீப், மியூனிச் போன்ற பிறமொழிப் பெயர்ச்சொற்களில் இவ்வெழுத்துகள் இறுதி எழுத்துகளாக இடம்பெறுவதுண்டு.

II. எகர வரிசையில் ‘கெ’ முதல் ‘னெ’ முடிய எந்த உயிர்மெய் எழுத்தும் மொழி இறுதியில் வருவதில்லை.

III. ஒகர வரிசையில் ‘நொ’ தவிர பிற உயிர்மெய் எழுத்துகள் மொழி இறுதியில் வருவதில்லை. ‘நொ’ என்னும் எழுத்து ஓரெழுத்து ஒரு மொழியாகத் துன்பம் என்னும் பொருளில் வரும்.

A) I, II, III அனைத்தும் சரி

B) I மட்டும் சரி

C) II மட்டும் சரி

D) III மட்டும் சரி

49. சொல்லின் இடையில் வரும் எழுத்துகள் – சரியான கூற்று எது?

I. மெய் எழுத்துகள் பதினெட்டும் சொல்லின் இடையில் வரும்.

II. உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.

III. ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.

IV. அளபெடையில் மட்டுமே உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

50. சர். சி. வி. இராமன் – பற்றிய சரியான கூற்று எது?

I. 1921 ஆம் ஆண்டு மத்திய தரைக் கடலில், ஒரு கப்பல் இங்கிலாந்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

II. தமிழர் ஒருவர் கப்பலின் மேல்தளத்தில் நின்று கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென அவரது உள்ளத்தில் கடல்நீர் ஏன் நீலநிறமாகக் காட்சியளிக்கிறது என்ற வினா எழுந்தது.

III. அவ்வினா அவரை உறங்க விடவில்லை. இங்கிலாந்து பயணம் முடிந்து இந்தியா திரும்பினார்.

IV. பிறகு பாதரச ஆவி விளக்கு, பென்சீன் மற்றும் நிறமாலைக் காட்டி ஆகியவற்றின் உதவியுடன் தமது ஆய்வைத் தொடங்கினார்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

51. சர். சி. வி. இராமன் – பற்றிய சரியான கூற்று எது?

I. 1928 பிப்ரவரி 28 ஆம் நாள் “இராமன் விளைவு” என்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்டார்.

II. இக்கண்டுபிடிப்பு இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது.

III. அவர் தமது கண்டுபிடிப்பை வெளியிட்ட பிப்ரவரி 28 ஆம் நாளை நாம் ஆண்டு தோறும் “ தேசிய அறிவியல் நாள்” எனக் கொண்டாடி மகிழ்கிறோம்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி

52. இராமன் அவர்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்த கேள்வி எது?

A) கடல் நீர் ஏன் கறுப்பாகக் காட்சியளிக்கிறது?

B) கடல் நீர் ஏன் நீல நிறமாக இல்லை?

C) கடல் நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது?

D) கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது?

53. தேசிய அறிவியல் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது ?

A) பிப்ரவரி 28 ஆம் நாள்

B) மார்ச்சு 28 ஆம் நாள்

C) மே 28 ஆம் நாள்

D) ஜூன் 28 ஆம் நாள்

54. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?

I. செயற்கை நுண்ணறிவு – Artificial Intelligence

II. மீத்திறன் கணினி – Super Computer

III. செயற்கைக் கோள் – Satellite

IV. நுண்ணறிவு – Intelligence

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

 

Exit mobile version