6th Tamil Unit 2 Questions

6th Tamil Unit 2 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 6th Tamil Unit 2 Questions With Answers Uploaded Below.

1. நிலவின் குளிர்ச்சியையும் கதிரவனின் வெம்மையையும், மழையின் பயனையும் __________________ நூல் போற்றுகிறது.

A) ஐங்குறுநூறு

B) கலிங்கத்துப்பரணி

C) நான்மணிக்கடிகை

D) சிலப்பதிகாரம்

2. திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று இவ் அங்கண் உலகு அளித்தலான் – இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?

A) மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்

B) குண்டலகேசி, நாதகுத்தனார்

C) சீவக சிந்தாமணி, திருத்தக்க தேவர்

D) சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்

3. ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரி போல் பொற்கோட்டு மேரு வலம் திரிதலான் – இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?

A) மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்

B) குண்டலகேசி, நாதகுத்தனார்

C) சீவக சிந்தாமணி, திருத்தக்க தேவர்

D) சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்

4. மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல் மேல்நின்று தான் சுரத்தலான் – இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?

A) மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்

B) குண்டலகேசி, நாதகுத்தனார்

C) சீவக சிந்தாமணி, திருத்தக்க தேவர்

D) சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்

5. வான் நிலா போற்றுவோம்! வான்நிலா போற்றுவோம்! மாலை அணிந்த சோழனின் குளிர்ந்த வெண்குடை போல அருளை வழங்கும் வான்நிலா போற்றுவோம்! வான்நிலா போற்றுவோம்! – இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?

A) மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்

B) குண்டலகேசி, நாதகுத்தனார்

C) சீவக சிந்தாமணி, திருத்தக்க தேவர்

D) சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்

6. கதிரவன் போற்றுவோம்! கதிரவன் போற்றுவோம்! காவிரி நாடன் சோழனின் ஆணைச் சக்கரம் போலவே இமயத்தை வலம்வரும் கதிரவன் போற்றுவோம்! கதிரவன் போற்றுவோம்! – இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?

A) மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்

B) குண்டலகேசி, நாதகுத்தனார்

C) சீவக சிந்தாமணி, திருத்தக்க தேவர்

D) சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்

7. வான்மழை போற்றுவோம்! வான்மழை போற்றுவோம்! கடல்சூழ் உலகுக்கு அருளைப் பொழியும் மன்னனைப் போல முகில்வழி சுரக்கும் வான்மழை போற்றுவோம்! வான்மழை போற்றுவோம்! – இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?

A) மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்

B) குண்டலகேசி, நாதகுத்தனார்

C) சீவக சிந்தாமணி, திருத்தக்க தேவர்

D) சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்

8. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. திங்கள் – நிலவு

II. கொங்கு – மகரந்தம்

III. அலர் – மலர்தல்

IV. திகிரி – ஆணைச்சக்கரம்

A) I, II, III மட்டும் சரி

B) I, II, III, IV அனைத்தும் சரி

C) III, IV மட்டும் சரி

D) II, III, IV மட்டும் சரி

9. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. பொற்கோட்டு – பொன்மயமான சிகரத்தில்

II. மேரு – இமயமலை

III. நாமநீர் – அச்சம் தரும் கடல்

IV. அளி – கருணை

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I, II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) II, III, IV மட்டும் சரி

10. தேன் நிறைந்த ஆத்திமலர் மாலையை அணிந்தவன் ___________ மன்னன்.

A) சேர

B) சோழ

C) பாண்டியன்

D) பல்லவன்

11. ______________ மன்னனுடைய வெண்கொற்றக் குடை குளிர்ச்சி பொருந்தியது. அதைப் போலவே வெண்ணிலவும் தன் ஒளியால் உலகுக்கு இன்பம் அளிக்கிறது. அதனால் வெண்ணிலவைப் போற்றுவோம் என்று இளங்கோவடிகள் கூறுகிறார்.

A) பல்லவ

B) பாண்டிய

C) சேர

D) சோழ

12. காவிரி ஆறு பாய்ந்து வளம் செய்யும் நாட்டை ஆட்சி செய்பவன் __________ மன்னன். அவனது ஆணைச் சக்கரம் போல, கதிரவனும் பொன்போன்ற சிகரங்களையுடைய இமயமலையை வலப்புறமாகச் சுற்றிவருகிறது. அதனால் கதிரவனைப் போற்றுவோம்.

A) பல்லவ

B) பாண்டிய

C) சேர

D) சோழ

13. சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் _______________.

A) இளங்கோவடிகள்

B) சீத்தலைச் சாத்தனார்

C) செயங்கொண்டார்

D) கம்பர்

14. இளங்கோவடிகள் ___________ மன்னர் மரபைச் சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது.

A) பல்லவ

B) பாண்டிய

C) சேர

D) சோழ

15. இளங்கோவடிகள் அவர்களின் காலம்?

A) கி.பி. இரண்டாம் நூற்றாண்டு

B) கி.பி. மூன்றாம் நூற்றாண்டு

C) கி.பி. நான்காம் நூற்றாண்டு

D) கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு

16. கீழ்க்கண்டவற்றுள் ஐம்பெருங்காப்பியங்கள் ஒன்று உள்ளது. அது எது?

A) குறுந்தொகை

B) நற்றிணை

C) சிலப்பதிகாரம்

D) கலிங்கத்துப்பரணி

17. தமிழின் முதல் காப்பியம் எது?

A) குறுந்தொகை

B) நற்றிணை

C) சிலப்பதிகாரம்

D) கலிங்கத்துப்பரணி

18. முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றெல்லாம் போற்றப்படுகிற நூல் எது?

A) சிலப்பதிகாரம்

B) கம்பராமாயணம்

C) வளையாபதி

D) குண்டலகேசி

19. இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுபவை எவை?

A) வளையாபதி மற்றும் குண்டலகேசி

B) கம்பராமாயணம் மற்றும் பாஞ்சாலி சபதம்

C) சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை

D) இவற்றில் ஏதுமில்லை

20. திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக ____________ நூல் தொடங்குகிறது.

A) சிலப்பதிகாரம்

B) கம்பராமாயணம்

C) வளையாபதி

D) குண்டலகேசி

21. கழுத்தில் சூடுவது _______________.

A) தார்

B) கணையாழி

C) தண்டை

D) மேகலை

22. கதிரவனின் மற்றொரு பெயர் __________________.

A) புதன்

B) ஞாயிறு

C) சந்திரன்

D) செவ்வாய்

23. ‘வெண்குடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______

A) வெண் + குடை

B) வெண்மை + குடை

C) வெம் + குடை

D) வெம்மை + குடை

24. ’பொற்கோட்டு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________.

A) பொன் + கோட்டு

B) பொற் + கோட்டு

C) பொண் + கோட்டு

D) பொற்கோ + இட்டு

25. கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______________.

A) கொங்குஅலர்

B) கொங்அலர்

C) கொங்கலர்

D) கொங்குலர்

26. அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____________.

A) அவன்அளிபோல்

B) அவனளிபோல்

C) அவன்வளிபோல்

D) அவனாளிபோல்

27. காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் – அங்குத் தூணில் அழகியதாய் – நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய் – இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?

A) பாரதிதாசன்

B) அழ. வள்ளியப்பா

C) வாணிதாசன்

D) பாரதியார்

28. அந்தக் காணி நிலத்திடையே – ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும் – அங்குக் கேணி அருகினிலே – தென்னைமரம் கீற்றும் இளநீரும் – இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் (தொகுப்பு) எது?

A) பாரதிதாசன் கவிதைகள்

B) அழ. வள்ளியப்பா கவிதைகள்

C) வாணிதாசன் கவிதைகள்

D) பாரதியார் கவிதைகள்

29. பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம் பக்கத்திலே வேணும் * – நல்ல முத்துச் சுடர் போலே – நிலாவொளி முன்பு வரவேணும் – இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?

A) பாரதிதாசன்

B) அழ. வள்ளியப்பா

C) வாணிதாசன்

D) பாரதியார்

30. அங்குக் கத்துங் குயிலோசை – சற்றே வந்து காதில் படவேணும் – என்றன் சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாய் இளம் தென்றல் வரவேணும் – இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் (தொகுப்பு) எது?

A) பாரதிதாசன் கவிதைகள்

B) அழ. வள்ளியப்பா கவிதைகள்

C) வாணிதாசன் கவிதைகள்

D) பாரதியார் கவிதைகள்

31. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர், அவரது இயற்பெயர் சுப்பிரமணியன். இளமையிலேயே சிறப்பாகக் கவிபாடும் திறன் பெற்றவர் – இந்த கூற்றோடு தொடர்புடையவர் யார்?

A) மீ.ராசேந்திரன்

B) பாரதியார்

C) மனோன்மணியம்

D) நாமக்கல் கவிஞர்

32. எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர். தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர். மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர். நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர் – இந்த கூற்றோடு தொடர்புடையவர் யார்?

A) சுத்தானந்த பாரதியார்

B) பாரதிதாசன்

C) பாரதியார்

D) நாமக்கல் கவிஞர்

33. பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு போன்ற நூல்களின் ஆசிரியர் யார்?

A) மீ.ராசேந்திரன்

B) பாரதியார்

C) மனோன்மணியம்

D) நாமக்கல் கவிஞர்

34. ’கிணறு’ என்பதைக் குறிக்கும் சொல் __________.

A) ஏரி

B) கேணி

C) குளம்

D) ஆறு

35. ’சித்தம்’ என்பதன் பொருள் ___________.

A) உள்ளம்

B) மணம்

C) குணம்

D) வனம்

36. மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் __________.

A) அடுக்குகள்

B) கூரை

C) சாளரம்

D) வாயில்

37. நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.

A) நன் + மாடங்கள்

B) நற் + மாடங்கள்

C) நன்மை + மாடங்கள்

D) நல் + மாடங்கள்

38. நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________________.

A) நிலம் + இடையே

B) நிலத்தின் + இடையே

C) நிலத்து + இடையே

D) நிலத் + திடையே

39. முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________________.

A) முத்துசுடர்

B) முச்சுடர்

C) முத்துடர்

D) முத்துச்சுடர்

40. நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________________.

A) நிலாஒளி

B) நிலஒளி

C) நிலவொளி

D) நிலவுஒளி

41. சரியாக பொருந்தியவை எவை?

I. முத்துச்சுடர்போல – நிலாஒளி

II. தூய நிறத்தில் – மாடங்கள்

III. சித்தம் மகிழ்ந்திட – தென்றல்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III, அனைத்தும் சரி

42. ‘வலசை போதல்’ – உடன் தொடர்புடைய சரியான வாக்கியங்களை தேர்ந்தெடுக்கவும்.

I. பறவைகள் கண்டம்விட்டுக் கண்டம் பறக்கின்றன. அவை பெருங்கடல்களையும் மலை களையும் கடந்து போகின்றன; குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்கின்றன.

II. இவ்வாறு பறவைகள் இடம் பெயர்தலை வலசை போதல் என்பர்.

III. நீர்வாழ் பறவைகளே பெரும்பாலும் வலசை போகின்றன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) I, II மட்டும் சரி

43. பறவைகள் பற்றி சரியான கூற்று எது?

I. உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம் இவற்றிற்காகவே பறவைகள் இடம் பெயர்கின்றன.

II. நிலவு, விண்மீன், புவிஈர்ப்புப் புலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பறவைகள் இடம் பெயர்கின்றன.

III. பொதுவாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் பறவைகள் வலசை போகின்றன. பறவைகள் தங்களுக்கென ஒரு வழித்தடத்தைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாதையிலேயே பறக்கின்றன.

IV. சில பறவை இனங்கள் அதே பாதையில் தாய்நிலங்களுக்குத் திரும்புகின்றன. சில பறவை இனங்கள் போவதற்கும் வருவதற்கும் இருவேறு பாதைகளைப் பயன்படுத்துகின்றன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) I, II, III மட்டும் சரி

44. வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தவறானவை எவை?

I. தலையில் சிறகு வளர்தல், ஒரு வகைப் பறவை வேறு வகைப் பறவையாக உருமாறத் தோன்றும் அளவிற்குக் கூடச்சில நேரங்களில் மாற்றங்கள் ஏற்படும்.

II. குரல் மாறுதல்

III. உடலில் கற்றையாக முடி வளர்

IV. இறகுகளின் நிறம் மாறுதல்

A) I மட்டும் தவறு

B) II மட்டும் தவறு

C) III மட்டும் தவறு

D) IV மட்டும் தவறு

45. கப்பல் பறவை – பற்றிய சரியான கூற்று எது?

I. சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை கப்பல் பறவை (Frigate bird).

II. இது தரையிறங்காமல் 400 கிலோ மீட்டர் வரை பறக்கும்.

III. இது கப்பல் கூழைக்கடா, கடற்கொள்ளைப் பறவை என்றும் அழைக்கப்படுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) I, II மட்டும் சரி

46. கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது?

I. தமிழகத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் வலசை வருவது பற்றி இலக்கியங்களிலும் செய்திகள் உள்ளன. ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சத்திமுத்தப்புலவர் “நாராய், நாராய், செங்கால் நாராய்” என்னும் பாடலை எழுதியுள்ளார்.

II. அப்பாடலில் உள்ள “தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்” என்னும் அடிகள் பறவைகள் வலசை வந்த செய்தியைக் குறிப்பிடுகின்றன.

III. ஐரோப்பாவில் இருந்து தமிழகத்திற்குச் செங்கால் நாரைகள் வருவது தற்போதைய ஆய்விலும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

IV. வெளிநாட்டுப் பறவைகளுக்கும் புகலிடமாகத் திகழ்கிறது ஒடிசா.

A) I மட்டும் தவறு

B) II மட்டும் தவறு

C) III மட்டும் தவறு

D) IV மட்டும் தவறு

47. தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவையினம் எது?

A) தூக்கணாங்குருவி

B) புறா

C) சிட்டுக் குருவி

D) கிளி

48. சிட்டுக் குருவி – பற்றிய சரியான கூற்று எது?

I. உருவத்தில் சிறிய இந்தப் பழுப்புநிறப் பறவையைப் பார்த்தவுடனே ஆண், பெண் வேறுபாட்டை உணர முடியும்.

II. ஆண்குருவியின் தொண்டைப்பகுதி கறுப்பு நிறத்தில் இருக்கும். உடல்பகுதி அடர்பழுப்பாக இருக்கும். பெண் குருவியின் உடல் முழுவதும் மங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும்.

III. சிட்டுக்குருவி கூடுகட்டி வாழும் பறவையினத்தைச் சார்ந்தது. கூடுகட்டும் காலங்களில் சத்தமிட்டுக் கொண்டே இருக்கும். கூடுகட்டிய பின் மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். பதினான்கு நாள்கள் அடைகாக்கும். பதினைந்தாம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்.

IV. துருவப் பகுதிகள் தவிர மனிதன் வாழும் இடங்களில் எல்லாம் சிட்டுக்குருவிகளும் வாழ்கின்றன. இந்தியா முழுவதும் சிட்டுக்குருவிகளைக் காணலாம். இமயமலைத் தொடரில் 4000 மீட்டர் உயரத்தில் கூட இவை வாழ்கின்றன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) I, II, III மட்டும் சரி

49. சிட்டுக் குருவி – பற்றிய சரியான கூற்று எது?

I. தானியங்கள், புழுபூச்சிகள், மலர் அரும்புகள், இளந்தளிர்கள், தேன் போன்றவை சிட்டுக் குருவிகளின் உணவாகும்.

II. சிட்டுக்குருவியின் குஞ்சுகள் பெரும்பாலும் புழு, பூச்சிகளையே உட்கொள்ளும். அதனால், தாய்க்குருவி புழு பூச்சிகளைப் பிடித்துத் தம் குஞ்சுகளுக்கு ஊட்டிவிடும்.

III. சிட்டுக்குருவியின் வாழ்நாள் பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள் ஆகும்.

IV. சிட்டுக்குருவி உருவத்தில் சிறியது. ஆனாலும் வேகமாகப் பறக்கும். அதனால் தான் விரைவாகச் செல்பவனைச் சிட்டாய்ப் பறந்து விட்டான் என்று கூறுகிறோம்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

50. சிட்டுக்குருவிகளின் அழிவுக்குக் காரணங்கள் – பற்றிய சரியான கூற்று எது?

I. மனிதர்கள் விவசாயத்திற்குப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் குருவிக் குஞ்சுகளுக்கு உணவான புழுபூச்சிகள் கிடைப்பதில்லை.

II. நவீன கட்டடங்கள் குருவிகள் கூடு கட்ட ஏற்றவையாக இல்லை. தற்காலத்தில் தாவர வேலிகளுக்கு மாற்றாகச் செயற்கை வேலிகள் அமைக்கப்படுகின்றன. எனவே சிட்டுக்குருவிகள் வாழ உகந்த வேலித் தாவரங்கள் குறைந்துவிட்டன.

III. சிட்டுக்குருவிகள் ஓய்வெடுக்கும் புதர்ச்செடிகளும் இல்லை. உணவுக்கும், இருப்பிடத்திற்கும் சிட்டுக்குருவிகளுடன் மற்ற பறவைகள் போட்டியிடுகின்றன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) I, II மட்டும் சரி

51. பறவையினங்களைக் காப்பாற்ற நாம் செய்ய வேண்டியவை – தவறான கூற்று எது?

I. ஆல், அரசு போன்ற மரங்களையும் அவரை, புடலை போன்ற கொடிகளையும் வளர்க்க வேண்டும்.

II. நமது மண்ணுக்கேற்ற பிறவகை உள்ளூர்த் தாவரங்களையும் வளர்க்க வேண்டும்.

III. தோட்டங்களிலும் வயல்வெளிகளிலும் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

IV. தாவர வேலிகளுக்கு மாற்றாகச் செயற்கை வேலிகள் அமைக்கப்பட வேண்டும்.

A) I மட்டும் தவறு

B) II மட்டும் தவறு

C) III மட்டும் தவறு

D) IV மட்டும் தவறு

52. காக்கைகுருவி எங்கள் சாதி – என்று ___________________ பாடினார். சமைப்பதற்குத் தன் மனைவி வைத்திருந்த சிறிதளவு அரிசியையும் முற்றத்தில் இருந்த சிட்டுக் குருவிகளுக்கு மகிழ்வுடன் போட்டுவிட்டுப் பட்டினியாக இருந்தாராம் இவர்.

A) பாரதிதாசன்

B) பாரதியார்

C) திரு.வி.க

D) திருவள்ளுவர்

53. இந்தியாவின் பறவை மனிதர் – பற்றிய சரியான கூற்று எது?

I. இன்றைய பறவையியல் ஆய்வாளர்களுக்கு முன்னோடி டாக்டர் சலீம் அலி. தம் வாழ்நாள் முழுவதும் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் அவற்றைப் படம் பிடிப்பதிலும் ஈடுபட்டார்.

II. அதனால், அவர் ‘இந்தியாவின் பறவை மனிதர்’ என்று அழைக்கப்படுகிறார்.

III. பறவைகள் குறித்துப் பல நூல்களை எழுதியுள்ளார்.

IV. தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்குச் ‘சிட்டுக் குருவியின் வீழ்ச்சி’ ( The fall of sparrow ) என்று பெயரிட்டுள்ளார்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

54. மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழமுடியும்!, பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழமுடியாது! – என்று கூறியவர் யார்?

A) முகமது ஜாபர்

B) மீ.ராசேந்திரன்

C) சலீம் அலி

D) கோமல் சுவாமிநாதன்

55. உலகிலேயே நெடுந்தொலைவு 22,000 கி.மீ. பயணம் செய்யும் பறவையினம் – பெயர் என்ன?

A) ஆர்டிக் ஆலா

B) கசுவாரீபார்மஸ்

C) அசிபித்ரிபார்மசு

D) இவற்றில் ஏதுமில்லை

56. பறவை பற்றிய படிப்பு _______________ எனப்படும்.

A) ஜெரன்டாலஜி

B) ஆர்க்கியாலஜி

C) ஆர்னித்தாலஜி

D) ஆந்த்ரோபாலஜி

57. உலகச் சிட்டுக்குருவிகள் நாள் எப்போது?

A) ஜனவரி – 20

B) மே – 20

C) ஜூன் – 20

D) மார்ச் – 20

58. ’தட்பவெப்பம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________.

A) தட்பம் + வெப்பம்

B) தட்ப + வெப்பம்

C) தட் + வெப்பம்

D) தட்பு + வெப்பம்

59. ’வேதியுரங்கள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________________.

A) வேதி + யுரங்கள்

B) வேதி + உரங்கள்

C) வேத் + உரங்கள்

D) வேதியு + ரங்கள்

60. தரை + இறங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________________.

A) தரையிறங்கும்

B) தரைஇறங்கும்

C) தரையுறங்கும்

D) தரைய்றங்கும்

61. வழி + தடம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________.

A) வழிதடம்

B) வழித்தடம்

C) வழிதிடம்

D) வழித்திடம்

62. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி __________________.

A) துருவப்பகுதி

B) இமயமலை

C) இந்தியா

D) தமிழ்நாடு

63. கிழவனும் கடலும் ( The Oldman and the Sea ) என்னும் ஆங்கிலப் புதினம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு படக்கதையாக இங்குச் சுருக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நூல் ___________ ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றது. இந்நூலின் ஆசிரியர் ______________________ ஆவார்.

A) 1934, ஜான் வெல்

B) 1944, மிட்செல்

C) 1954, எர்னெஸ்ட் ஹெமிங்வே

D) 1964, டார்வின்

63. கிழவனும் கடலும் ( The Oldman and the Sea ) என்னும் புதினம் பற்றிய சரியான கூற்று எது?

I. இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் போராட்டமே இந்தக் கதை. இக்கதையின் நாயகன் சாண்டியாகோ. வயது முதிர்ந்த மீனவர் அவர். முன்பெல்லாம் கடலுக்குச் சென்றால் மீன் இல்லாமல் திரும்பமாட்டார்.

II. ஆனால், கடந்த எண்பத்து நான்கு நாள்களாக ஏனோ அவருக்கு ஒரு மீனும் கிடைக்கவில்லை.

III. மனோலின் என்னும் சிறுவன் மீன்பிடிக்கக் கற்றுக்கொள்வதற்காக முதல் நாற்பது நாள்களும் அவருடன் கடலுக்கு வந்தான். அவன், அவருக்கு வேண்டிய உதவிகள் செய்ததோடு பேச்சுத்துணையாகவும் இருந்தான்.

IV. அவரோடு கடலுக்குப் போனால் ஒரு மீனும் கிடைப்பதில்லை என்று அவனை வேறு படகிற்கு அனுப்பிவிட்டனர் அவனது பெற்றோர்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

64. கிழவனும் கடலும் ( The Oldman and the Sea ) என்னும் புதினத்தில், சாண்டியாகோ – விற்கு எப்போது மீன் கிடைத்தது?

A) அறுபத்து ஐந்தாவது நாள்

B) எழுபத்து ஐந்தாவது நாள்

C) எண்பத்து ஐந்தாவது நாள்

D) தொண்ணூற்றி ஐந்தாவது நாள்

65. எழுத்துகள் ______________ வகைப்படும்.

A) ஐந்து

B) நான்கு

C) இரண்டு

D) மூன்று

(குறிப்பு – எழுத்துகள் இரண்டு வகைப்படும். 1. முதல் எழுத்துகள் 2. சார்பு எழுத்துகள்)

66. முதல் எழுத்துகள் எத்தனை வகைப்படும்?

A) 10

B) 12

C) 18

D) 30

(குறிப்பு – முதல் எழுத்துகள் : உயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும். பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவற்றை முதல் எழுத்துகள் என்பர்.)

67. சார்பு எழுத்துகள் _____________ வகைப்படும்.

A) 2

B) 5

C) 8

D) 10

(குறிப்பு – சார்பு எழுத்துகள் : முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் சார்பெழுத்துகள். இவை பத்து வகைப்படும். 1. உயிர்மெய்; 2. ஆய்தம்; 3. உயிரளபெடை; 4. ஒற்றளபெடை; 5. குற்றியலிகரம்; 6. குற்றியலுகரம்; 7. ஐகாரக்குறுக்கம்; 8. ஒளகாரக்குறுக்கம்; 9. மகரக்குறுக்கம்; 10. ஆய்தக்குறுக்கம்)

68. உயிர்மெய் – பற்றிய சரியான கூற்று எது?

I. மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன.

II. உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும்.

III. வரிவடிவம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும். ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும்.

IV. முதல் எழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையுள் அடங்கும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

69. ஆய்தம் எழுத்து பற்றிய சரியான கூற்று எது?

I. மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்றது. முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை, அஃகேனம் என்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு.

II. நுட்பமான ஒலிப்புமுறையை உடையது.

III. தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும்.

IV. தனித்து இயங்காது. முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

70. கீழ்க்கண்ட கூற்றில் சரியானது எது?

I. முதல் எழுத்துகள் மட்டும் இடம்பெறும் சொல் – ஆம்.

II. முதல் எழுத்துகள் இடம்பெறாத சொல் – குருவி.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

71. இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே ______________ என்கிறோம்.

A) செயற்கை

B) அழகு

C) இயற்கை

D) இவற்றில் ஏதுமில்லை

72. தொடர்களைப் பிரித்து இரண்டு தொடர்களாக உள்ளது, சரியானவற்றைத் தேர்ந்தெடு.

I. பல நாள்களாக மழை பெய்யாததால் பயிர்கள் வாடின.

விடை: பல நாள்களாக மழை பெய்யவில்லை. பயிர்கள் வாடின.

II. கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கிறான்.

விடை: கபிலன் வேலை செய்தான். களைப்பாக இருக்கிறான்.

III. இலக்கியா இனிமையாகப் பாடியதால் பரிசு பெற்றாள்.

விடை: இலக்கியா இனிமையாகப் பாடினாள். பரிசு பெற்றாள்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி

73. கலைச் சொல் அறிவோம் – சரியானவற்றைத் தேர்ந்தெடு.

I. கண்டம் - Continent

II. தட்பவெப்பநிலை – Climate

III. வானிலை - Weather

IV. வலசை - Migration

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

74. கலைச் சொல் அறிவோம் – சரியானவற்றைத் தேர்ந்தெடு.

I. கண்டம் - Continent

II. புகலிடம் – Sanctuary

III. புவிஈர்ப்புப்புலம் - Gravitational Field

IV. வலசை - Migration

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

75. அறநூல்களில் ‘உலகப் பொது மறை’ என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற நூல் எது?

A) திருக்குறள்

B) நான்மணிக்கடிகை

C) இன்னா நாற்பது

D) திரிகடுகம்

76. ஏழு சொற்களில் மனிதர்களுக்கு அறத்தைக் கற்றுத்தரும் நூல் எது?

A) திருக்குறள்

B) நான்மணிக்கடிகை

C) இன்னா நாற்பது

D) திரிகடுகம்

77. ______________ எழுத்துகளுக்குத் தொடக்கம்.

A) அந்தாதியே

B) அந்தமே

C) ஆதியே

D) அகரமே

78. கீழ்க்கண்டவற்றுள் திருக்குறள் உடன் பொருந்தியது எது?

I. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு – கடவுள் வாழ்த்து

II. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி – வான் சிறப்பு

III. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் – நீத்தார் பெருமை

IV. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கு எல்லாம் இனிது – மக்கட்பேறு

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

79. கீழ்க்கண்டவற்றுள் திருக்குறள் உடன் பொருந்தியது எது?

I. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் – மக்கட்பேறு

II. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை – வான் சிறப்பு

III. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு – அன்புடைமை

IV. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற – இனியவை கூறல்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

80. கீழ்க்கண்டவற்றுள் திருக்குறள் உடன் பொருந்தியது எது?

I. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் – மக்கட்பேறு

II. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை – வான் சிறப்பு

III. இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று – இனியவை கூறல்

IV. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு – அன்புடைமை

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

81. திருவள்ளுவர் பற்றிய சரியான கூற்று எது?

I. திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.

II. எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியுள்ளார்.

III. வான்புகழ் வள்ளுவர், தெய்வப்புலவர், பொய்யில் புலவர் முதலிய பல சிறப்புப் பெயர்கள் இவருக்கு உண்டு.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) I, II, III அனைத்தும் தவறு

82. திருக்குறள் பற்றிய சரியான கூற்று எது?

I. திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

II. திருக்குறள் 133 அதிகாரங்களில் 1330 குறள்பாக்களைக் கொண்டுள்ளது.

III. “திருக்குறளில் இல்லாததும் இல்லை, சொல்லாததும் இல்லை” என்னும் வகையில் சிறந்து விளங்குகிறது.

IV. திருக்குறளுக்கு உலகப் பொதுமறை, வாயுறை வாழ்த்து முதலிய பல சிறப்புப் பெயர்கள் வழங்குகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

83. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது _____________________.

A) ஊக்கமின்மை

B) அறிவுடைய மக்கள்

C) வன்சொல்

D) சிறிய செயல்

84. ஒருவர்க்குச் சிறந்த அணி __________________.

A) மாலை

B) காதணி

C) இன்சொல்

D) வன்சொல்

85. ____________ ஆம் ஆண்டு ரியோ நகரில் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் கலந்துகொண்டார். உயரம் தாண்டுதல் போட்டியில் அவர் தங்கப் பதக்கம் பெற்றார்.

A) 2014

B) 2015

C) 2016

D) 2017

86. விடுபட்டதை நிரப்புக.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி _______________ _______________ _______________?

A) பகவன் முதற்றே உலகு

B) உள்நின்று உடற்றும் பசி

C) எடுப்பதூஉம் எல்லாம் மழை

D) செயற்கரிய செய்கலா தார்

87. விடுபட்டதை நிரப்புக.

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து _______________ _______________ _______________?

A) பகவன் முதற்றே உலகு

B) உள்நின்று உடற்றும் பசி

C) எடுப்பதூஉம் எல்லாம் மழை

D) செயற்கரிய செய்கலா தார்

88. விடுபட்டதை நிரப்புக.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே _______________ _______________ _______________?

A) பகவன் முதற்றே உலகு

B) உள்நின்று உடற்றும் பசி

C) எடுப்பதூஉம் எல்லாம் மழை

D) செயற்கரிய செய்கலா தார்

89. விடுபட்டதை நிரப்புக.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் _______________ _______________ _______________?

A) பகவன் முதற்றே உலகு

B) உள்நின்று உடற்றும் பசி

C) எடுப்பதூஉம் எல்லாம் மழை

D) செயற்கரிய செய்கலா தார்

90. விடுபட்டதை நிரப்புக.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து _______________ _______________ _______________?

A) மன்னுயிர்க்கு எல்லாம் இனிது

B) உள்நின்று உடற்றும் பசி

C) எடுப்பதூஉம் எல்லாம் மழை

D) செயற்கரிய செய்கலா தார்

87. விடுபட்டதை நிரப்புக.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் _______________ _______________ _______________?

A) பகவன் முதற்றே உலகு

B) சான்றோன் எனக்கேட்ட தாய்

C) எடுப்பதூஉம் எல்லாம் மழை

D) செயற்கரிய செய்கலா தார்

88. விடுபட்டதை நிரப்புக.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் _______________ _______________ _______________?

A) பகவன் முதற்றே உலகு

B) உள்நின்று உடற்றும் பசி

C) என்பும் உரியர் பிறர்க்கு

D) செயற்கரிய செய்கலா தார்

89. விடுபட்டதை நிரப்புக.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு _______________ _______________ _______________?

A) பகவன் முதற்றே உலகு

B) உள்நின்று உடற்றும் பசி

C) எடுப்பதூஉம் எல்லாம் மழை

D) என்புதோல் போர்த்த உடம்பு

90. விடுபட்டதை நிரப்புக.

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு _______________ _______________ _______________?

A) அணியல்ல மற்றுப் பிற

B) உள்நின்று உடற்றும் பசி

C) எடுப்பதூஉம் எல்லாம் மழை

D) செயற்கரிய செய்கலா தார்

91. விடுபட்டதை நிரப்புக.

இனிய உளவாக இன்னாத கூறல் _______________ _______________ _______________?

A) பகவன் முதற்றே உலகு

B) கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

C) எடுப்பதூஉம் எல்லாம் மழை

D) செயற்கரிய செய்கலா தார்

92. _______________, _______________ ஒருவருக்கு மிகச்சிறந்த அணிகலன்கள் ஆகும். மற்றவை அணிகலன்கள் ஆகா.

A) அழகு, செல்வம்

B) அறிவு, அன்பு

C) செல்வம், அன்பு

D) பணிவும், இன்சொல்லும்

93. _______________ இருப்பதுதான் உயிருள்ள உடல். அது இல்லாதது வெறும் எலும்பும் தோலும் தான், என்று வள்ளுவர் கூறுகிறார்.

A) செல்வம்

B) கல்வி

C) அன்பு

D) அறிவு

94. _______________ இல்லாதவர் எல்லாப் பொருளும் தமக்கே என்பார்கள். அது உடையவர்கள் தம் உடம்பும் பிறர்க்கே என்பார்கள், என்று வள்ளுவர் கூறுகிறார்.

A) செல்வம்

B) அன்பு

C) கல்வி

D) அறிவு

95. முடியாத செயலையும் முடித்துக் காட்டுபவர் _______________; முடியாது என்பவர் _______________.

A) பெரியோர், சிறியோர்

B) அறிவுடையவர், அறிவில்லாதவர்

C) செல்வமுடையவர், செல்வமில்லாதவர்

D) வீரமுடையோர், வீரமில்லாதவர்

 

Exit mobile version