6th Science Lesson 9 Questions in Tamil
9] நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்
1) நீரை வெப்பப்படுத்தி நீராவியாக மாற்றும் நிகழ்வு________எனப்படும்?
A) உருகுதல்
B) உறைதல்
C) ஆவியாதல்
D) ஆவி சுருங்குதல்
விளக்கம்: நீரை வெப்பப்படுத்தி நீராவியாக மாற்றும் நிகழ்வு ஆவியாதல் எனப்படும்.
2) கூற்றுகளை ஆராய்க.
1. பொருளின் ஆரம்ப நிலைக்கும் இறுதி நிலைக்கும் உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடு – மாற்றம் எனப்படும்
2. விதை முளைத்தல் என்பது ஒரு மெதுவான மாற்றம் ஆகும்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. பொருளின் ஆரம்ப நிலைக்கும் இறுதி நிலைக்கும் உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடு – மாற்றம் எனப்படும்.
2. விதை முளைத்தல் என்பது ஒரு மெதுவான மாற்றம் ஆகும்.
3) ஒரு திடப்பொருளை வெப்பப்படுத்தும் பொழுது திராவமாகாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாறுவது______எனப்படும்?
A) ஆவியாதல்
B) ஆவிசுருங்குதல்
C) பதங்கமாதல்
D) உறைதல்
விளக்கம்: ஒரு திடப்பொருளை வெப்பப்படுத்தும் பொழுது திராவமாகாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாறுவது பதங்கமாதல் எனப்படும். எ.கா கற்பூரம்.
4) கூற்று: நீர் ஒரு பொது கரைப்பான் ஆகும்.
காரணம்: அது பெரும்பாலான பொருட்களை கரைப்பதில்லை
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
விளக்கம்: நீர் ஒரு பொதுக் கரைப்பான் ஆகும். அது பெரும்பாலான பொருள்களை கரைக்கிறது.
5) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
A) பருவநிலை மாற்றம் – வேகமான மாற்றம்
B) பலூன் வெடித்தல் – மீள் மாற்றம்
C) பால் தயிராக மாறுதல் – மீளா மாற்றம்
D) இரும்பு துருப்பிடித்தல் – விரும்பத் தகாத மாற்றம்
விளக்கம்: பருவநிலை மாற்றம் – மெதுவான மாற்றம்
பலூன் வெடித்தல் – மீள் மாற்றம்
பால் தயிராக மாறுதல் – மீளா மாற்றம்
இரும்பு துருப்பிடித்தல் – விரும்பத் தகாத மாற்றம்.
6) பனிக்கட்டியை வெப்பப்படுத்தி நீராக மாற்றும் நிகழ்வு________என்று அழைக்கப்படுகிறது?
A) ஆவியாதல்
B) ஆவி சுருங்குதல்
C) உருகுதல்
D) உறைதல்
விளக்கம்: பனிக்கட்டியை வெப்பப்படுத்தி நீராக மாற்றுதல் என்பது உருகுதல் ஆகும். இது ஒரு மீள் மாற்றமாகும். நீரை மீண்டும் பனிக்கட்டியாக மாற்றலாம்.
7) சரியான சமன்பாட்டைத் தேர்வு செய்க.
A) கரைபொருள்+கரைசல்🡪கரைப்பான்
B) கரைபொருள்+கரைப்பான்🡪கரைசல்
C) கரைப்பான்+கரைசல்🡪கரைபொருள்
D) மேற்கண்ட எதுவுமில்லை.
விளக்கம்: திண்மத் துகள்கள் தனித்தனி மூலக்கூறுகளாகப் பிரிக்கப்பட்டு, நீர்ம மூலக்கூறுகளுக்கு இடையே விரிவுதலை நாம் கரைதல் என்கிறோம். கரைபொருள்+கரைப்பான்🡪கரைசல் என்ற சமன்பாடே சரியாகும்.
8) கூற்றுகளை ஆராய்க.
1. கரைப்பான் என்பது கரைபொருளைக் கரைக்கக் கூடியது.
2. கரைபொருள் என்பது கரைப்பானில் கரையக் கூடியது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: திண்மத் துகள்கள் தனித்தனி மூலக்கூறுகளாகப் பிரிக்கப்பட்டு, நீர்ம மூலக்கூறுகளுக்கு இடையே விரவுதலை நாம் கரைதல் என்கிறோம்.
1. கரைப்பான் என்பது கரைபொருளைக் கரைக்கக் கூடியது.
2. கரைபொருள் என்பது கரைப்பானில் கரையக் கூடியது.
கரைபொருள்+கரைப்பான்🡪கரைசல்
9) வெட்டிவைக்கப்பட்ட ஆப்பிளில் நிகழும் மாற்றம் எது?
A) இயற்பியல் மாற்றம்
B) வேதியியல் மாற்றம்
C) இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றம்
D) மேற்கண்ட எதுவுமில்லை
விளக்கம்: ஆப்பிள் வெட்டியதால் அதன் உருவளவு மாறும். இது இயற்பயில் மாற்றம் ஆகும்.
வெட்டப்பட்ட ஆப்பிளை சிறிது நேரம் வைத்திருந்தால் அதன் மேல் பழுப்பு நிறத் திட்டுகள் தோன்றும். இது ஆப்பிள் பழத்திலுள்ள சில பொருள்கள் காற்றுடன் வினைபுரிவதால் ஏற்பட்ட மாற்றமே ஆகும். இது வேதியியல் மாற்றம் ஆகும்.
10) இயற்பியல் மாற்றம் பற்றிய கூற்றுகளை ஆராய்க
1. ஒரு தற்காலிக மாற்றம்
2. புதிய பொருட்கள் எதுவும் உருவாவதில்லை
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. ஒரு தற்காலிக மாற்றம்
2. புதிய பொருட்கள் எதுவும் உருவாவதில்லை
இயற்பியல் பண்புகளில் மட்டுமே மாற்றம் ஏற்படும்.
11) இயற்பியல் மாற்றங்கள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
1. நீரை வெப்பப்படுத்தும் போது ஆற்றல் அளிக்கப்படுகிறது.
2. நீரை குளிர்விக்கும் போது ஆற்றல் வெளியேற்றப்படுகிறது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: நீரானது திட, திரவ மற்றும் வாயு நிலைகளில் உள்ளது. வெப்பப்படுத்துதல் மூலமோ அல்லது குளிவித்தல் மூலமோ இந்நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
1. நீரை வெப்பப்படுத்தும் போது ஆற்றல் அளிக்கப்படுகிறது
2. நீரை குளிர்விக்கும் போது ஆற்றல் வெளியேற்றப்படுகிறது.
12) கீழ்க்கண்டவற்றில் எது இயற்பியல் மாற்றம் அல்ல?
A) பனிக்கட்டி உருகுதல்
B) உப்பு அல்லது சர்க்கரையினை கரைசலாக்குவது
C) இரப்பர் வளையத்தினை இழுத்தல்
D) இரும்பு துருப்பிடித்தல்
விளக்கம்: இயற்பியல் மாற்றம் என்பது ஒரு தற்காலிக மாற்றம் ஆகும். ஒரு பொருளின் வேதியியல் இயைபு மாறாமல் அதன் இயற்பியல் பண்புகளில் மட்டுமே மாற்றங்கள் நிகழ்வது இயற்பியல் மாற்றங்கள் ஆகும். இங்கு புதிய பொருள் எதுவும் உருவாவது இல்லை.
மேற்கண்டவற்றுள் இரும்பு துருப்பிடித்தல் என்பது இயற்பியல் மாற்றம் அல்ல.
13) உறைதல் என்பது கீழ்க்கண்ட எதைக் குறிக்கிறது?
A) நீரை குளிர்வித்து பனிக்கட்டியாக மாற்றுதல்
B) நீராவியை குளிர்வித்து நீராக மாற்றுதல்
C) நீரை வெப்பப்படுத்தி நீராவியாக மாற்றுதல்
D) பனிக்கட்டியை வெப்பப்படுத்தி நீராக மாற்றுதல்
விளக்கம்: நீரை குளிர்வித்து பனிக்கட்டியாக மாற்றுதல் – உறைதல்
நீராவியை குளிர்வித்து நீராக மாற்றுதல் – ஆவி சுருங்குதல்
நீரை வெப்பப்படுத்தி நீராவியாக மாற்றுதல் – ஆவியாதல்
பனிக்கட்டியை வெப்பப்படுத்தி நீராக மாற்றுதல் – உருகுதல்
14) பனிக்கட்டி நீராக உருகும்போது ஏற்படும் மாற்றம்_______ஆகும்.
A) இட மாற்றம்
B) நிற மாற்றம்
C) நிலை மாற்றம்
D) இயைபு மாற்றம்
விளக்கம்: பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்வு உருகுதல் எனப்படும். பனிக்கட்டியை வெப்பப்படுத்தும் போது நீராக மாற்றலாம். இது ஒரு நிலை மாற்றம் ஆகும்.
15) பால் தயிராக மாறுவது ஒரு________ஆகும்.
A) மீள் மாற்றம்
B) வேகமான மாற்றம்
C) மீளா மாற்றம்
D) விரும்பத்தகாத மாற்றம்
விளக்கம்: சில மாற்றங்கள் நிகழும்போது, மாற்றமடைந்த பொருள்கள் மீண்டும் தங்களின் பழைய நிலைக்குத் திரும்பமுடியாது. அதாவது மீண்டும் ஆரம்பநிலைப் பொருள்களை பெற முடியாது. அவ்வகை மாற்றம் மீளா மாற்றம் என்றழைக்கப்படும்.
பால் தயிராக மாறுவது ஒரு மீளா மாற்றம் ஆகும்.
16) கீழுள்ளவற்றில் விரும்பத்தக்க மாற்றம் எது?
A) துருப்பிடித்தல்
B) பருவநிலை மாற்றம்
C) நில அதிர்வு
D) வெள்ளப்பெருக்கு
விளக்கம்: மேற்கூறியவற்றுள் பருவநிலை மாற்றம் மட்டுமே விரும்பத்தக்க மாற்றமாகும். மற்றவை விரும்பத்தகாத மாற்றம் ஆகும்.
17) காற்று மாசுபாடு, அமில மழைக்கு வழிவகுக்கும், இது ஒரு____________ஆகும்?
A) மீள் மாற்றம்
B) வேகமான மாற்றம்
C) இயற்கையான மாற்றம்
D) மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்
விளக்கம்: மனிதன் தன் விருப்பத்திற்காக ஏற்படுத்தும் மாற்றங்கள் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் அல்லது செயற்கையான மாற்றங்கள் எனப்படும். இத்தகைய மாற்றங்கள் தன்னிச்சையாக நிகழாது.
காற்று மாசுபடுதல் என்பது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் ஆகும்.
18) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
A) பால் தயிராதல் – மீளா மாற்றம்
B) ஒளிச்சேர்க்கை – விரும்பத்தகாத மாற்றம்
C) குளுக்கோஸ் கரைதல் – மீள் மாற்றம்
D) உணவு சமைத்தல் – விரும்பத்தக்க மாற்றம்
விளக்கம்: பால் தயிராதல் – மீளா மாற்றம்
ஒளிச்சேர்க்கை – விரும்பத்தக்க மாற்றம்
குளுக்கோஸ் கரைதல் – மீள் மாற்றம்
உணவு சமைத்தல் – விரும்பத்தக்க மாற்றம்.
6th Science Lesson 10 Questions in Tamil
10] காற்று
1) கூற்று: காற்றின் பரவலானது மேலே செல்லச் செல்ல அதிகமாக காணப்படும்.
காரணம்: புவியிலிருந்து மேலே செல்ல செல்ல புவியின் ஈர்ப்புவிசை அதிகமாக இருக்கும்.
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
விளக்கம்: காற்றின் பரவலானது புவிக்கு அருகில் மிக அதிகமாகவும், மேலே செல்லச்செல்லக் குறைவாகவும் காணப்படும். ஏனெனில், நாம் மேலே செல்லச்செல்ல புவியின் ஈர்ப்புவிசை குறைவதால், அதிகளவு காற்றினை புவியால் ஈர்க்க முடியாமல் போகிறது.
2) வானிலை மாற்றம் நிகழும் வளிமண்டல அடுக்கு எது?
A) இடைவளி மண்டலம்
B) அடுக்குவளி மண்டலம்
C) அடிவளி மண்டலம்
D) அயனி மண்டலம்
விளக்கம்: அடிவளி மண்டலத்தில்தான் வானிலை மாறுபாடு நடைபெறும். இது பூமியிலிருந்து முதல் அடுக்கு ஆகும்.
3) ஓசோன் படலம் இடம்பெற்றுள்ள அடுக்கு எது?
A) இடைவளி மண்டலம்
B) அடுக்குவளி மண்டலம்
C) அடிவளி மண்டலம்
D) அயனி மண்டலம்
விளக்கம்: ஒசோன் படலம், அடுக்குவளி மண்டலத்தில் இடம்பெற்றுள்ளது. இது சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்களிலிருந்து மனிதர்களை பாதுகாக்கிறது.
4) வளிமண்டலத்தில் எத்தனை சதவீதம் நைட்ரஜன் உள்ளது?
A) 21
B) 78
C) 87
D) 98
விளக்கம்: காற்றின் இயைபு:
நைட்ரஜன் – 78 சதவீதம்
ஆக்ஸிஜன் – 21 சதவீதம்
தூசு – 1 சதவீதம்.
5) புவியிலிருந்து எத்தனை கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் வளிமண்டலமானது பரந்து விரிந்துள்ளது?
A) 500
B) 800
C) 1500
D) 1200
விளக்கம்: நமது பூமியானது காற்றாலான ஒரு மிகப்பெரிய மேலுறையால் மூடப்பட்டுள்ளது. இது வளிமண்டலம் என்று அழைக்கப்படுகிறது. புவிப்பரப்பிலிருந்து 800 கி.மீ தொலைவிற்கு மேல் பரந்து விரிந்துள்ளது
6) வளிமண்டலத்தில நைட்ரஜனுக்கு அடுத்ததாக அதிகம் காணப்படும் வாயு எது?
A) ஓசோன்
B) ஆக்ஸிஜன்
C) ஹைட்ரஜன்
D) மந்த வாயுக்கள்
விளக்கம்: வளிமண்டலத்தில் நைட்ரஜனுக்கு அடுத்ததாக அதிகம் காணப்படும் வாயு ஆக்ஸிஜன் ஆகும். இது வளிமண்டலத்தில் 21 சதவீதம் காணப்படுகிறது. இது சுவாசித்தல் மற்றும் எரித்தல் செயலுடன் தொடர்புடையது.
7) கூற்று: புவிப்பரப்பிலிருந்து 900கி.மீ தொலைவிற்கு மேல் பரந்து விரிந்துள்ளது வளிமண்டலம்.
காரணம்: புவியின் ஈர்ப்புவிசையால் பூமியின் கட்டுப்பாட்டில் இம்மண்டலம் நிலை நிறுத்தப்படுகிறது
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
விளக்கம்: நமது பூமியானது காற்றாலான ஒரு மிகப்பெரிய மேலுறையால் மூடப்பட்டுள்ளது. இது வளிமண்டலம் என்று அழைக்கப்படுகிறது. புவிப்பரப்பிலிருந்து 800 கி.மீ தொலைவிற்கு மேல் பரந்து விரிந்துள்ள வளிமண்டலமானது புவியின் ஈர்ப்புவிசையால் பூமியின் கட்டுப்பாட்டில் நிலை நிறுத்தப்படுகிறது
8) ஆக்ஸிஜன் என்று பெயரிட்டவர் யார்?
A) ஜோசப் பிரிஸ்ட்லி
B) ஆண்டனி லவாய்ச்சியர்
C) ஜே.ஜே தாம்சன்
D) ஜான் இன்ஜென்ஹவுஸ்
விளக்கம்: 1774ஆம் ஆண்டு காற்று என்பது பல வாயுக்கள் கொண்ட கலவை என்று நிரூபி;க்கப்பட்டது. அச்சோதனையில் நிறமற்ற, அதிக வினைத்திறன் கொண்ட வாயு கண்டறியப்பட்டது. பின்னர் அவ்வாயு ஆண்டனி லவாய்சியர் என்ற பிரெஞ்சு வேதியியாளாரால் ஆக்சிஜன் என்று பெயரிடப்பட்டது.
9) வளிமண்டலம் எத்தனை அடுக்குகளை கொண்டது?
A) 4
B) 5
C) 3
D) 6
விளக்கம்: வளிமண்டலமானது ஐந்து வெவ்வேறு அடுக்களால் ஆனது. அவை,
1. அடிவளி மண்டலம்
2. அடுக்குவளி மண்டலம்
3. இடைவளி மண்டலம்
4. அயனி மண்டலம்
5. புறவளி மண்டலம்
10) புவிப்பரப்பிலிருந்து எத்தனை கி.மீ வரை அடிவளி மண்டலம் காணப்படுகிறது?
A) 10
B) 16
C) 25
D) 40
விளக்கம்: அடிவளி மண்டலமானது பூமிக்கு அருகிலுள்ள நாம் வாழும் அடுக்கு ஆகும். இது புவி மேற்பரப்பிலிருந்து 16 கி.மீ உயரம் வரையிலானது.
11) காற்று என்பது ஒரு அடிப்படை பொருள் அல்ல என்று தனது சோதனையின் மூலம் நிரூபித்தவர் யார்?
A) ஜோசப் பிரிஸ்ட்லி
B) ஆண்டனி லவாய்ச்சியர்
C) ஜே.ஜே தாம்சன்
D) கோல்டுஸ்டீன்
விளக்கம்: பன்னெடுங்காலமாக, அதாவது 18ஆம் நூற்றாண்டு வரையிலும், மனிதர்கள் காற்றினை பருப்பொருளில் அடங்கியுள்ள ஒரே வகையான அடிப்படைத்துகள்கள் என்றே, நினைத்தனர். எனினும் 1774ல் ஜோசப் பிரிஸ்ட்லி என்பவர் தனித்துவமான ஒரு சோதனையை மேற்கொண்டு காற்று என்பது ஒரு அடிப்படைப் பொருள் அல்ல. ஆனால் அது பல வாயுக்கள் அடங்கியுள்ள ஒரு கலவை என்று சோதனை மூலம் நிரூபித்தார்.
12) தாவரங்கள் ஒளிச்சேர்க்கையினை நிகழ்த்த சூரியஒளி தேவைப்படுகிறது என்று நிரூபித்தவர் யார்?
A) ஜோசப் பிரிஸ்ட்லி
B) ஆண்டனி லவாய்ச்சியர்
C) ஜே.ஜே தாம்சன்
D) ஜான் இன்ஜென்ஹவுஸ்
விளக்கம்: 1730 முதல் 1799 முடிய ஜான் இன்ஜென்ஹவுஸ் என்பவர் தாவரங்கள் ஒளிச்சேர்க்கையினை நிகழ்த்துவதற்கு சூரிய ஒளி தேவைப்படுகிறது என்பதனை நிரூபித்தார்.
13) கார்பன்-டை-ஆக்ஸைடை எத்தனை டிகிரிக்கு குளிர்விக்கும் பொழுது, அவை திரவ நிலையை அடையாமல், நேரடியாக திட நிலைக்கு மாறுகிறது?
A) -100
B) -57
C) -64
D) -27
விளக்கம்: கார்பன்-டை-ஆக்ஸைடை -57 டிகிரி செல்சியஸ்-க்கு குளிர்விக்கும் பொழுது, அவை திரவ நிலையை அடையாமல், நேரடியாக திட நிலைக்கு மாறுகிறது. இதனை உலர்பனிக்கட்டி என்றழைக்கின்றனர்.
14) தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் பொழுது வெளியாகும் ஆக்சிஜனை விலங்குகள் தங்கள் சுவாசத்திற்குப் பயன்படுத்திக் கொள்கின்றன என்பதை யாருடைய சோதனையின் மூலம் நாம் அறியலாம்?
A) ஜோசப் பிரிஸ்ட்லி
B) ஆண்டனி லவாய்ச்சியர்
C) டேனியல் ரூதர்ஃபோர்டு
D) ஜான் இன்ஜென்ஹவுஸ்
விளக்கம்: தாவரங்களின் வளர்ச்சிக்கு ஆற்றல் தேவைப்படுகிறது. எனவே தாவரங்களிலும் சுவாசம் நடைபெறுகிறது. சுவாசித்தலின்பொழுது, தாவரங்கள் விலஙக்குகளைப்போலவே ஆக்ஸிஜனை உள்ளிழுத்து கார்பன்-டை-ஆக்சைடை வெளிவிடுகின்றன. இதனை நாம் பிரிஸ்ட்லியின் சோதனை மூலம் அறியலாம்.
15) காற்றின் இயக்கம் நடைபெறும் அடுக்கு எது?
A) அடிவளி மண்டலம்
B) அடுக்குவளி மண்டலம்
C) இடைவளி மண்டலம்
D) புறவளி மண்டலம்
விளக்கம்: புவிப்பரப்பிலிருந்து 16கி.மீ வரை பரவியுள்ள அடிவளி மண்டலத்தில்தான் காற்றின் இயக்கம் நடைபெறும். இவ்வடுக்கில் உள்ள நீராவிதான் மேகங்கள் உருவாகக் காரணமாக இருக்கிறது.
16) ஆக்ஸிஜன் முன்னிலையில் ஒரு பொருள் ஒளியின்றி வெப்பத்தை வெளிப்படுத்தும் நிகழ்வு________எனப்படும்?
A) உள்ளெரிதல்
B) எரிதல்
C) வெளியெரிதல்
D) வெப்பயெரிதல்
விளக்கம்: ஆக்ஸிஜன் முன்னிலையில் ஒரு பொருளை வெப்பப்படுத்தும் பொழுது ஒளியையும் வெப்பத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்வு எரிதல் எனப்படும். ஒளியின்றி வெப்பத்தை வெளிப்படுத்தும் நிகழ்வு உள்ளெரிதல் எனப்படும்.
17) காற்றில் கார்பன்-டை-ஆக்ஸைடு உள்ளது என்பதை கண்டறிய உதவுவது எது?
A) பொதினா செடி
B) சுண்ணாம்பு
C) ஹைட்ரில்லா செடி
D) மேற்கண்ட எதுவுமில்லை
விளக்கம்: காற்றில், கார்பன்-டை-ஆக்ஸைடு உள்ளது என்பதை கண்டறிய பயன்படுவது சுண்ணாம்பு ஆகும். ஒரு கண்ணாடிக் குவளையில் சிறிதளவு சுண்ணாம்பு நீரை எடுத்துக் கொண்டு, அதில் காற்றினை செலுத்தும்போது, வெண்ணிற வீழ்படிவை காணலாம். நாம் வெளியிடுவது கார்பன்-டை-ஆக்ஸைடு ஆகும். இது சுண்ணாம்புடன் வினைபுரிந்து வெண்ணிற வீழ்ப்படிவை உருவாக்கும். எனவே காற்றில் கார்பன்-டை-ஆக்ஸைடு உள்ளது என்பதை அறியலாம்.
18) கூற்று: ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தும்போது எரிபொருளுடன் ஆக்சிஜனையும் சேர்த்தே செலுத்துகிறோம்.
காரணம்: வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும்.
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
விளக்கம்: வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும். இதனால், ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தும்போது எரிபொருளுடன் ஆக்சிஜனையும் சேர்த்தே செலுத்துகிறோம். எரிபொருள் எரிய ஆக்ஸிஜன் தேவைப்படும்.
19) விண்கற்கள் எரிதல் நிகழ்வு எந்த வளிமண்டல அடுக்குடன் தொடர்புடையது?
A) இடைவளி மண்டலம்
B) அடுக்குவளி மண்டலம்
C) அடிவளி மண்டலம்
D) அயனி மண்டலம்
விளக்கம்: விண்கற்கள் எரிதல் என்பது இடைவளி மண்டலத்தில் நடைபெறும். இது புவியிலிருந்து மூன்றாவது அடுக்காக அமைந்துள்ளது.
20) வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜன் கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?
A) உரங்கள்
B) புரத உற்பத்தி
C) A மற்றும் B
D) மேற்கண்ட எதுவுமில்லை
விளக்கம்: வளிமண்டலத்தில் நைட்ரஜன் 21 சதவீதம் உள்ளது. இது உரங்கள் மற்றும் புரத உற்பத்தி செய்யப்பயன்படுகிறது.
21) கீழ்க்கண்டவற்றில் நாம் வாழும் அடுக்கு எது?
A) அடிவளி மண்டலம்
B) அடுக்குவளி மண்டலம்
C) இடைவளி மண்டலம்
D) புறவளி மண்டலம்
விளக்கம்: வளிமண்டலமானது ஐந்து வெவ்வேறு அடுக்களால் ஆனது. அவை,
1. அடிவளி மண்டலம்
2. அடுக்குவளி மண்டலம்
3. இடைவளி மண்டலம்
4. அயனி மண்டலம்
5. புறவளி மண்டலம்
அடிவளி மண்டலமானது பூமிக்கு அருகிலுள்ள நாம் வாழும் அடுக்கு ஆகும். இது புவி மேற்பரப்பிலிருந்து 16கி.மீ உயரம் வரையிலானது.
22) கீழ்க்கண்டவற்றுள் யார் வளிமண்டலத்தில் அதிகம் உள்ள வாயுவினைக் கண்டறிந்தார்?
A) ஜோசப் பிரிஸ்ட்லி
B) ஆண்டனி லவாய்ச்சியர்
C) டேனியல் ரூதர்ஃபோர்டு
D) ஜான் இன்ஜென்ஹவுஸ்
விளக்கம்: வளிமண்டலத்தில் அதிகம் உள்ள வாயு நைட்ரஜன் ஆகும். டேனியல் ரூதர்ஃபோர்டு என்ற ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் நைட்ரஜனைக் கண்டறிந்தார்.
23) தாவரங்களின் வாயுப்பரிமாற்றம் எங்கு நடைபெறுகிறது?
A) வேர்
B) தண்டு
C) இலை
D) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: விலங்குகளைப்போலவே தாவரங்களும் சுவாசிக்கின்றன. இவை ஆக்ஸிஜனை உள்ளெடுத்துக்கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன. இந்த வாயுப்பரிமாற்றம் இலைகளிலுள்ள ஸ்டொமட்டா என்ற மிகச்சிறிய இலைத்துளைகள் மூலம் நடைபெறுகிறது.
24) சரியான கூற்றை தேர்வு செய்க.
A) தாவரங்கள் சுவாசித்தலின் போது எடுத்துக்கொண்ட ஆக்ஸிஜனை விட அதிகமான ஆக்ஸிஜனை ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடுகின்றன
B) தாவரங்கள் சுவாசித்தலின் போது எடுத்துக்கொண்ட ஆக்ஸிஜனை விட குறைவான ஆக்ஸிஜனை ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடுகின்றன
C) தாவரங்கள் சுவாசித்தலின் போது எடுத்துக்கொண்ட ஆக்ஸிஜனுக்கு சமமான ஆக்ஸிஜனை ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடுகின்றன
D) தாவரங்கள் சுவாசித்தலின் போது எடுத்துக்கொண்ட ஆக்ஸிஜனுடன் ஒப்பிட்டு ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடும் ஆக்ஸிஜன் அளவை கூற இயலாது
விளக்கம்: தாவரங்கள் அவற்றிற்கான உணவினை ஒளிச்சேர்க்கையின் மூலம் உற்பத்தி செய்கின்றன. ஒளிச்சேர்க்கையின் பொழுது, காற்றிலுள்ள கார்பன்-டை-ஆக்சைடும் மண்ணிலுள்ள நீரும் சூரிய ஒளியின் துணையுடன் வினைபுரிந்து உணவை உற்பத்தி செய்கின்றன. தாவரங்கள் சுவாசித்தலின் போது எடுத்துக்கொண்ட ஆக்ஸிஜனை விட அதிகமான ஆக்ஸிஜனை ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடுகின்றன.
25) காற்று என்பது பல வாயுக்களின் கலவை என்று எந்த ஆண்டு நிரூபிக்கப்பட்டது?
A) 1772
B) 1774
C) 1784
D) 1782
விளக்கம்: 1774ல் ஜோசப் பிரிஸ்ட்லி என்பவர் தனித்துவமான ஒரு சோதனையை மேற்கொண்டு காற்று என்பது ஒரு அடிப்படைப் பொருள் அல்ல. ஆனால் அது பல வாயுக்கள் அடங்கியுள்ள ஒரு கலவை என்று சோதனை மூலம் நிரூபித்தார்.
26) மேகங்கள் உருவாகக் காரணமான அடுக்கு எது?
A) அடிவளி மண்டலம்
B) அடுக்குவளி மண்டலம்
C) இடைவளி மண்டலம்
D) புறவளி மண்டலம்
விளக்கம்: புவிப்பரப்பிலிருந்து 16கி.மீ வரை பரவியுள்ள அடிவளி மண்டலத்தில்தான் காற்றின் இயக்கம் நடைபெறும். இவ்வடுக்கில் உள்ள நீராவிதான் மேகங்கள் உருவாகக் காரணமாக இருக்கிறது.
27) ஒளிச்சேர்க்கையின் பொழுது ஆக்சிஜனை வெளியிட சூரிய ஒளி தேவைப்படுகிறது என்பதை யாருடைய சோதனையின் மூலம் அறியலாம்?
A) ஜோசப் பிரிஸ்ட்லி
B) ஆண்டனி லவாய்ச்சியர்
C) டேனியல் ரூதர்ஃபோர்டு
D) ஜான் இன்ஜென்ஹவுஸ்
விளக்கம்: தாவரங்கள் அவற்றிற்கான உணவினை ஒளிச்சேர்க்கை மூலம் உற்பத்தி செய்கின்றன. ஒளிச்சேர்க்கையின் பொழுது, காற்றிலுள்ள கார்பன்-டை-ஆக்ஸைடும் மண்ணிலுள்ள நீரும் சூரிய ஒளியின் துணையுடன் வினை புரிந்து உணவை உற்பத்தி செய்கின்றன. ஒளிச்சேர்க்கையின் பொழுது ஆக்சிஜனை வெளியிட சூரிய ஒளி தேவைப்படுகிறது என்பதை ஜான் இன்ஜென்ஹவுஸ் சோதனையின் மூலம் அறியலாம்.
28) எந்த வாயுவை நாம் உள்ளிழுத்து அப்படியே வெளியிடுகிறோம்?
A) ஆக்ஸிஜன்
B) நைட்ரஜன்
C) கார்பன்-டை-ஆக்ஸைடு
D) ஹைட்ரஜன்
விளக்கம்: நாம் உள்ளிழுக்கும் மற்றும் வெளியிடும் காற்றில் ஒரே மாதிரியான வாயுக்கள் உள்ளன. ஆனால் நைட்ரஜனைத் தவிர, மற்ற வாயுக்களின் அளவுகளில் மாற்றம் ஏற்படும்.
29) தாவரங்கள் ஒளிச்சேர்க்கை நிகழ்த்துவதற்கு சூரியஒளி தேவைப்படுகிறது என்பதனை எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை இன்ஜென்ஹவுஸ் என்பவர் நிரூபித்தார்?
A) 1729-1739
B) 1739-1769
C) 1739-1799
D) 1730-1799
விளக்கம்: 1730 முதல் 1799 ஆண்டு வரை, ஜான் இன்ஜென்ஹவுஸ் என்பவர் தாவரங்கள் ஒளிச்சேர்க்கை நிகழ்த்துவதற்கு சூரியஒளி தேவைப்படுகிறது என்பதனை நிரூபித்தார்.
30) அடிவளி மண்டலம் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. புவி மேற்பரப்பிலிருந்து 16 கி.மீ உயரம் வரை பரவி காணப்படுகிறது.
2. இந்த அடுக்கில் தான் வானூர்திகள் பறக்கின்றன.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: புவிப்பரப்பிலிருந்து 16கி.மீ வரை பரவியுள்ளது அடிவளி மண்டலம் ஆகும். காற்றின் இயக்கம் இந்த அடுக்கில்தான் நடைபெறும். வலுவான காற்று மற்றும் மாறுபாடான வானிலையைத் தவிர்ப்பதற்காக இவ்வடுக்குக்கு மேல்தான் வானூர்திகள் பறக்கின்றன.
31) காற்றில் உள்ள_______மற்றும்_______வாயுக்களின் கூடுதல் காற்றில் 99 சதவீதம் இயைபாகிறது
1. நைட்ரஜன் 2. கார்பன்-டை-ஆக்ஸைடு 3. மந்த வாயுக்கள் 4. ஆக்சிஜன்
A) 1 மற்றும் 2
B) 1 மற்றும் 3
C) 2 மற்றும் 4
D) 1 மற்றும் 4
விளக்கம்: காற்றின் இயைபு:
நைட்ரஜன் – 78 சதவீதம்
ஆக்ஸிஜன் – 21 சதவீதம்.
நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை காற்றில் உள்ள 99 சதவீத பகுதிபொருளாகும்.
32) உள்ளிழுக்கும் காற்றில்_________வாயு அதிகம். வெளியிடும் காற்றில்_______வாயு அதிகம்
A) ஆக்ஸிஜன், கார்பன்-டை-ஆக்ஸைடு
B) கார்பன்-டை-ஆக்ஸைடு, ஆக்ஸிஜன்
C) நைட்ரஜன், ஆக்ஸிஜன்
D) ஆக்ஸஜன், நைட்ரஜன்
விளக்கம்: நாம் உள்ளிழுக்கும் மற்றும் வெளியிடும் காற்றில் ஒரே மாதிரியான வாயுக்கள் உள்ளன. ஆனால் நைட்ரஜனைத் தவிர, மற்ற வாயுக்களின் அளவுகளில் மாற்றம் ஏற்படும். உள்ளிழுக்கும் காற்றில் ஆக்சிஜன் அளவு அதிகம், வெளியிடும் காற்றில் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகம்.
33) கீழ்க்கண்ட எந்த அடுக்கிற்கு மேல் வானூர்திகள் செல்கின்றன?
A) அடிவளி மண்டலம்
B) அடுக்குவளி மண்டலம்
C) இடைவளி மண்டலம்
D) புறவளி மண்டலம்
விளக்கம்: புவிப்பரப்பிலிருந்து 16கி.மீ வரை பரவியுள்ளது அடிவளி மண்டலம் ஆகும். காற்றின் இயக்கம் இந்த அடுக்கில்தான் நடைபெறும். வலுவான காற்று மற்றும் மாறுபாடான வானிலையைத் தவிர்ப்பதற்காக இவ்வடுக்குக்கு மேல்தான் வானூர்திகள் பறக்கின்றன.
34) தாவரங்கள் சுவாசித்தலின் போது வெளியிடும் வாயு எது?
A) ஆக்ஸிஜன்
B) கார்பன்-டை-ஆக்ஸைடு
C) நைட்ரஜன்
D) எந்த வாயுவும் வெளியிடாது.
விளக்கம்: விலங்குகளைப்போலவே தாவரங்களும் சுவாசிக்கின்றன. இவை ஆக்ஸிஜனை உள்ளெடுத்துக்கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன. இந்த வாயுப்பரிமாற்றம் இலைகளிலுள்ள ஸ்டொமட்டா என்ற மிகச்சிறிய இலைத்துளைகள் மூலம் நடைபெறுகிறது.
35) வளிமண்டலத்தில் அதிகமாக உள்ள வாயுவினை கண்டறிந்து பெயரிட்டவர் யார்?
A) ஜோசப் பிரிஸ்ட்லி
B) ஆண்டனி லவாய்ச்சியர்
C) டேனியல் ரூதர்ஃபோர்டு
D) ஜான் இன்ஜென்ஹவுஸ்
விளக்கம்: வளிமண்டலத்தில் அதிகம் உள்ள வாயு நைட்ரஜன் ஆகும். டேனியல் ரூதர்ஃபோர்டு என்ற ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் நைட்ரஜனைக் கண்டறிந்தார். இவரே இவ்வாயுவிற்கு நைட்ரஜன் என்று பெயரிட்டார்.
36) அடிவளி மண்டலம் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. பூமிக்கு அருகில் உள்ள நாம் வாழும் அடுக்கு இது.
2. காற்றின் இயக்கம் நடைபெறும் அடுக்கு
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: அடிவளி மண்டலமானது பூமிக்கு அருகிலுள்ள நாம் வாழும் அடுக்கு ஆகும். இது புவி மேற்பரப்பிலிருந்து 16 கி.மீ உயரம் வரையிலானது. காற்றின் இயக்கம் இந்த அடுக்கில் தான் நடைபெறும்.
37) தாவரங்களின் உணவு தயாரிப்பு எந்த பாகத்தில் நடைபெறுகிறது?
A) தண்டு
B) இலை
C) வேர்
D) காய்
விளக்கம்: நீர், கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் சூரிய ஒளி இணைந்து இலைகளில் உணவு தயாரிக்கப்படுகிறது. இது ஒளிச்சேர்க்கை நிகழ்வு எனப்படுகிறது.
38) சூரியஒளியை பெறும் வகையில் தாவரத்தில் உள்ளது எது?
A) ஸ்டொமட்டா
B) குளோரோபில்
C) பாரன்கைமா
D) குளோரன் கைமா
விளக்கம்: தாவரங்கள் அவற்றிற்கான உணவினை ஒளிச்சேர்க்கை மூலம் உற்பத்தி செய்கின்றன. இதற்கு சூரிய ஒளி தேவைப்படுகிறது. குளோரோபில் சூரியனிடமிருந்து வெளிச்சத்தை பெறுகிறது.
39) தாவரங்கள் காற்றினை தூய்மைப்படுத்துகிறது என்று நிரூபித்தவர் யார்?
A) ஜோசப் பிரிஸ்ட்லி
B) ஆண்டனி லவாய்ச்சியர்
C) ஜே.ஜே தாம்சன்
D) ஜான் இன்ஜென்ஹவுஸ்
விளக்கம்: உயிரினங்களாலும், எரியும் பொருளாலும் வெளியிடப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடு, காற்றை மாசடையச் செய்கின்றன. இதனை தாவரங்கள், ஒளிச்சேர்க்கை புரிந்து ஆக்ஸிஜனை வெளியிட்டு காற்றை தூய்மைப்படுத்துகிறது என்று நிரூபித்தவர் ஜான் இன்ஜென்ஹவுஸ் ஆவார்.
40) கூற்று: அடிவளி மண்டலத்திற்கு மேல் தான் வானூர்திகள் பறக்கின்றன.
காரணம்;: வலுவான காற்று மற்றும் மாறுபாடான வானிலையைத் தவிர்ப்பதற்காக.
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
விளக்கம்: அடிவளி மண்டலமானது பூமிக்கு அருகிலுள்ள நாம் வாழும் அடுக்கு ஆகும். காற்றின் இயக்கம் இந்த அடுக்கில்தான் நடைபெறும். வலுவான காற்று மற்றும் மாறுபாடான வானிலையைத் தவிர்ப்பதற்காக இவ்வடுக்குக்கு மேல்தான் வானூர்திகள் பறக்கின்றன.
41) தாவரங்களில் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் இடம்_______ஆகும்.
A) இலைத்துளை
B) பச்சையம்
C) இலைகள்
D) மலர்கள்
விளக்கம்: தாவரங்கள் வளிமண்டலக் காற்றுடன் நிகழ்த்தும் வாயுப்பரிமாற்றம் அவற்றின் இலைகளிலுள்ள ஸ்டொமட்டா என்ற மிகச்சிறிய இலைத்துளைகள் மூலம் நடைபெறுகிறது.
42) காற்று கலவையில் எரிதலுக்கு துணைபுரியும் பகுதி________ஆகும்
A) நைட்ரஜன்
B) கார்பன்-டை-ஆக்ஸைடு
C) ஆக்சிஜன்
D) நீராவி
விளக்கம்: காற்று கலவையில் எரிதலுக்கு துணைபுரியும் பகுதி ஆக்சிஜன் ஆகும்.
6th Science Lesson 11 Questions in Tamil
11] செல்
1) கீழ்க்கண்டவற்றில் எது யூகேரியோட்டிக் செல் ஆகும்?
A) தாவர செல்
B) விலங்கு செல்
C) A மற்றும் B
D) மேற்கண்ட எதுவுமில்லை
விளக்கம்: யூகேரியோட்டிக் செல் என்பது உட்கரு உடைய செல் ஆகும். தாவர செல் மற்றும் விலங்கு செல் இரண்டிலும் உட்கரு உள்ளது.
2) கூற்றுகளை ஆராய்க.
1. தாவர செல்கள் விலங்கு செல்களை விட கடினத்தன்மை மிக்கதாக உள்ளன.
2. விலங்குசெல்களில் பசுங்கணிகங்கள் காணப்படுவதில்லை
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. தாவர செல்கள் விலங்கு செல்களை விட கடினத்தன்மை மிக்கதாக உள்ளன.
2. விலங்குசெல்களில் பசுங்கணிகங்கள் காணப்படுவதில்லை.
3) செல்லை தாங்குபவர் மற்றும் பாதுகாப்பவர் யார்?
A) செல் சவ்வு
B) உட்கரு
C) செல்சுவர்
D) நியூக்ளியஸ் உறை
விளக்கம்: செல்சுவர்:
1. செல்லைப் பாதுகாக்கிறது
2. செல்லிற்கு உறுதியை தருகிறது
3. வலிமையைத் தருகிறது.
எனவே செல்லை தாங்குபவர் அல்லது பாதுகாப்பவர் என்று அழைக்கப்படுகிறது.
4) மைக்ரோகிராபியா என்ற நூலினை எழுதியவர் யார்?
A) இராபர்ட் ஹக்
B) இராபர்ட் பர்கின்ஜி
C) இராபர்ட் பாயில்
D) வில்லியம் ஹார்வி
விளக்கம்: இராபர்ட் ஹக் என்பது 1665ஆம் ஆண்டு மைக்ரோகிராபியா என்ற தனது நூலினை வெளியிட்டார். அதில் முதன்முதலில் செல் என்ற சொல்லினைப் பயன்படுத்தி திசுக்களின் அமைப்பினை விளக்கினார்.
5) கூற்றுகளை ஆராய்க.
1. தாவரசெல்கள் விலங்கு செல்களை விட அளவில் சிறியது.
2. விலங்கு செல்களில் சென்ட்ரியோல்கள் உண்டு
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. தாவரசெல்கள் விலங்கு செல்களை விட அளவில் பெரியது.
2. விலங்கு செல்களில் சென்ட்ரியோல்கள் உண்டு
6) செல்லின் நகரும் பகுதி என்று அழைக்கப்படுவது எது?
A) பசுங்கணிகம்
B) மைட்டோகாண்ட்ரியா
C) சைட்டோபிளாசம்
D) எண்டோபிளாச வலைப்பின்னல்
விளக்கம்: நீர் அல்லது ஜெல்லி போன்ற, செல்லின் உள்ள நகரும் பொருள் சைட்டோபிளாசம் ஆகும்.
7) கூற்றுகளை ஆராய்க.
1. செல்களை முப்பரிமாண அமைப்புடையவை.
2. செல்லின் கட்டுப்பாட்டு மையம் என்று அழைக்கப்படுவது – மைட்டோகாண்ரியா
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. செல்களை முப்பரிமாண அமைப்புடையவை.
2. செல்லின் கட்டுப்பாட்டு மையம் என்று அழைக்கப்படுவது – உட்கரு.
8) செல்லின் கதவு என்று அiழைக்கப்படுவது எது?
A) செல்சுவர்
B) செல்சவ்வு
C) நியூக்ளியஸ் உறை
D) சைட்டோபிளாசம்
விளக்கம்: 1. செல்லிற்குப் பாதுகாப்புத் தருகிறது
2. செல்லின் போக்குவரத்திற்க்கு உதவுகிறது.
எனவே செல்லின் கதவு என்று அழைக்கப்படுவது செல் சவ்வு ஆகும்.
9) விலங்கு செல் பற்றிய கூற்றுகளில் சரியானது எது?
A) இவை பெரிய நுண்குமிழ்களை கொண்டுள்ளன.
B) சென்ட்ரியோல்கள் காணப்படுவதில்லை
C) பசுங்கணிகங்கள் காணப்படுவதில்லை
D) செல்சுவர் காணப்படுவதில்லை
விளக்கம்: விலங்கு செல்லைச் சுற்றி செல்சவ்வு காணப்படுகிறது. ஆனால் செல்சுவர் காணப்படுவதில்லை. விலங்கு செல்லில் பசுங்கணிகங்கள் காணப்படுவதில்லை. இவை சிறிய நுண்குமிழ்களை கொண்டுள்ளன. விலங்கு செல்லில் சென்ட்ரியோல்கள் உண்டு
10) கூற்று: செல்லின் உணவுத் தொழிற்சாலை – பசுங்கணிகம்
காரணம்: பச்சையம் என்ற நிறமி பெற்று, ஒளிச்சேர்க்கைக்கு உதவிபுரிகிறது
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
விளக்கம்: பசுங்கணிகம்:
1. இதில் பச்சையம் என்ற நிறமி உள்ளது.
2. இது சூரிய ஒளியை ஈர்த்து ஒளிச் சேர்க்கையின் மூலம் உணவு தயாரிக்க உதவுகிறது.
உணவு தயாரிப்பதால் இதனை நாம் செல்லின் உணவுத் தொழிற்சாலை என்கிறோம்.
11) செல்லின் சேமிப்புக் கிடங்கு என்று அழைக்கப்படுவது எது?
A) மைட்டோ காண்ட்ரியா
B) ரைபோசோம்
C) உட்கரு
D) நுண்குமிழ்கள்
விளக்கம்: செல்லின் சேமிப்புக் கிடங்கு என்று அழைக்கப்படுவது நுண்குமிழ்கள். இதன் பணிகள்:
1. உணவு, நீர் மற்றும் வேதிப் பொருள்களைச் சேமிக்கிறது.
12) செல்லின் கட்டுப்பாட்டு மையம் என்று அழைக்கப்படுவது எது?
A) மைட்டோகாண்ட்ரியா
B) உட்கரு
C) சைட்டோபிளாசம்
D) ரைபோசோம்
விளக்கம்: உட்கரு:
1. செல்லின் மூளையாகச் செயல்படுகிறது.
2. செல்லின் அனைத்துச் செயல்களையும் ஒருங்கிணைத்துக் கட்டுப்படுத்துகிறது.
எனவே, செல்லின் கட்டுப்பாட்டு மையம் – உட்கரு.
13) சாதாரண நுண்ணோக்கியை மேம்படுத்தி கூட்டு நுண்ணோக்கியை உருவாக்கியர் யார்?
A) இராபர்ட் ஹக்
B) இராபர்ட் பர்கின்ஜி
C) இராபர்ட் பாயில்
D) வில்லியம் ஹார்வி
விளக்கம்: இராபர்ட் ஹக் என்பவர், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர், கணித அறிஞர் மற்றும் கண்டுபிடிப்பாளர். இவர் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட நுண்ணோக்கியை மேம்படுத்தி ஒரு கூட்டு நுண்ணோக்கியை உருவாக்கினார்.
14) கீழ்க்கண்டவற்றில் எது புரோகேரியோட்டிக் செல் ஆகும்?
A) பாக்டீரியா
B) சயனோ பாக்டீரியா
C) A மற்றும் B
D) மேற்கண்ட எதுவுமில்லை
விளக்கம்: தெளிவான உட்கரு அற்ற செல் புரோகேரியோட்டிக் செல் ஆகும். எ.கா. பாக்டீரியா மற்றும் சயனோ பாக்டீரியா.
15) பாக்டீரிய செல்லின் அளவு_________முதல்_________ மைக்ரோமீட்டர் வரை மாறுபடுகின்றன.
A) 0.1-0.5
B) 0.5-1.0
C) 0.2-0.7
D) 0.4-1.0
விளக்கம்: பாக்டீரியாக்கள் மிகச்சிறியவை. ஒரே செல்லால் ஆனவை. இவை 0.1 முதல் 0.5 மைக்ரோமீட்டர் வரையிலான அளவில் காணப்படுகின்றன.
16) மனித உடலின் மிக நீளமான செல்?
A) நரம்பு செல்
B) மூளை செல்
C) இதய செல்
D) நுரையீரல் செல்
விளக்கம்: மனித உடலின் நரம்பு செல்லானது மிக நீளமான செல்லாகக் கருதப்படுகிறது.
17) நெருப்புக் கோழியின் முட்டையானது எத்தனை மி.மீ விட்டம் கொண்டது?
A) 120
B) 150
C) 170
D) 240
விளக்கம்: ஒரே செல்லால் ஆன நெருப்புக்கோழியின் முட்டையானது 170 மி.மீ விட்டம் கொண்டதாக உள்ளது. இதனை வெறும் கண்களால் பார்க்க இயலும்.
18) தாவர செல்லில் கீழ்க்கண்ட எது காணப்படவில்லை?
A) செல்சவ்வு
B) நுண்குமிழ்கள்
C) சென்டிரியோல்கள்
D) செல்சுவர்
விளக்கம்: தாவர செல்கள் அதனைச் சுற்றி வெளிப்புறத்தில் செல்சுவரையும் அதனையடுத்து செல்சவ்வினையும் கொண்டுள்ளன. தாவர செல்களில் நுண்குமிழ்கள் உள்ளன. ஆனால் சென்டிரியோல்கள் காணப்படுவதில்லை.
19) உட்கரு வாயில் அல்லது உட்கரு கதவு என்று அழைக்கப்படுவது எது?
A) செல்சவ்வு
B) செல்சுவர்
C) நியூக்ளியஸ் உறை
D) உட்கரு சாறு
விளக்கம்: உட்கரு உறை அல்லது நியூக்ளியஸ் உறை:
1. நியூக்ளியஸைச் சுற்றிப் பாதுகாக்கிறது.
2. நியூக்ளியஸின் உள்ளேயும் வெளியேயும் பொருள்களை அனுப்புகிறது.
எனவே, நியூக்ளியஸ் உறை அல்லது உட்கரு உறை, உட்கரு வாயில் அல்லது உட்கரு கதவு என்று அழைக்கப்படுகிறது.
20) ஓர் உயிரியின் அனைத்து அடிப்படைப் பண்புகளையும் செயல்பாடுகளையும் கட்டமைப்பது எது?
A) திசு
B) செல்
C) மூளை
D) நரம்பு
விளக்கம்: உயிரினங்களின் அடிப்படை அமைப்பு மற்றும் செயல் அலகு செல் ஆகும். செல்கள் ஓர் உயிரியின் அனைத்து அடிப்படைப் பண்புகளையும் செயல்பாடுகளையும் கட்டமைக்கின்றன.
21) கீழ்கண்டவற்றில் எது ஒரு செல் உயிரி அல்ல?
A) பாக்டீரியா
B) அமீபா
C) கிளாமிடோமோனஸ்
D) ஸ்பைரோகைரா
விளக்கம்: உயிரினங்கள் ஒரு செல் உயிரினமாகவோ அல்லது பல செல் உயிரினமாகவோ இருக்கலாம்.
ஒரு செல் உயிரினங்கள் – பாக்டீரியா, அமீபா, கிளாமிடோமோனஸ், ஈஸ்ட்
பல செல் உயிரனங்கள் – ஸ்பைரோகைரா, மாமரம், மனிதன்.
22) புரோகேரியாடிக் செல்லின் உட்கரு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A) நியூக்ளியஸ்
B) நியூக்ளியாய்டு
C) நியூக்ளிக்
D) நியூக்ளி
விளக்கம்: பாக்டீரியா போன்ற ஒரு செல் நுண்ணுயிரிகளில் புரோகேரியாட்டிக் செல்கள் காணப்படுகின்றன. இவை தெளிவான உட்கருவினை கொண்டிருக்காது. இவற்றின் உட்கரு நியூக்ளியாய்டு என்று அழைக்கப்படுகிறது.
23) யூகேரியாட்டிக் செல்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
A) பத்து முதல் நூறு மைக்ரான் விட்டம் கொண்டவை.
B) செல் நுண் உறுப்புகளைச் சுற்றி சவ்வு காணப்படுவதில்லை
C) தெளிவான உட்கரு கொண்டவை
D) நியூக்ளியோலஸ் காணப்படும்
விளக்கம்: பத்து முதல் நூறு மைக்ரான் விட்டம் கொண்டவை.
செல் நுண் உறுப்புகளைச் சுற்றி சவ்வு காணப்படுகின்றது.
தெளிவான உட்கரு கொண்டவை
நியூக்ளியோலஸ் காணப்படும்.
24) உயிரினங்களின் அடிப்பபடை அமைப்பு மற்றும் செயல் அலகு என்று குறிப்பிடப்படுவது எது?
A) செல்
B) நுண்ணுறுப்புகள்
C) உட்கரு
D) திசு
விளக்கம்: உயிரினங்களின் அடிப்படை அமைப்பு மற்றும் செயல் அலகு செல் ஆகும்.
தெளிவான உட்கரு உடையது – யூகேரியோட்டிக் செல்.
தெளிவற்ற உட்கரு உடையது – புரொகேரியோடிக் செல்.
25) சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்.
1. செல்லின் பாதுகாவலர் – நியூக்ளியஸ்
2. செல்லின் கதவு – செல்சவ்வு
3. செல்லின் நகரும் பகுதி – சைட்டோபிளாசம்
4. செல்லின் ஆற்றல் மையம் – மைட்டோகாண்டிரியா
A) 1
B) 2, 3
C) 1, 2, 3
D) அனைத்தும்
விளக்கம்: 1. செல்லின் பாதுகாவலர் – செல்சுவர்
2. செல்லின் கதவு – செல்சவ்வு
3. செல்லின் நகரும் பகுதி – சைட்டோபிளாசம்
4. செல்லின் ஆற்றல் மையம் – மைட்டோகாண்டிரியா
26) கூற்று: உட்கரு கதவு என்று அழைக்கப்படுவது – நியூக்ளியஸ் உறை.
காரணம்: நியூக்ளியஸ் உறை, உட்கருவினுள் உள்ளேயும் வெளியேயும் பொருள்களை அனுப்புகிறது.
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
விளக்கம்: உட்கரு நியூக்ளியஸ் என்று அழைக்கப்படுகிறது. நியூக்ளியஸ் உறை உட்கரு கதவு என்று அழைக்கப்படுகிறது. இது நியூக்ளியஸின் உள்ளேயும் வெளியேயும் பொருள்களை அனுப்புவதால் உட்கரு கதவு என்று அழைக்கப்படுகிறது.
27) செல்லின் அளவைக் குறிக்கும் குறியீடு?
A) சென்டி மீட்டர்
B) மில்லி மீட்டர்
C) மைக்ரோ மீட்டர்
D) மீட்டர்
விளக்கம்: செல் மிகவும் சிறியது. இதனை மைக்ரோ மீட்டர் என்ற அலகால் குறிக்கலாம்.
28) புரேகேரியோட்டிக் செல் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
A) ஒன்று முதல் இரண்டு மைக்ரான் விட்டம் கொண்டவை
B) செல் நுண் உறுப்புகளைச் சுற்றி சவ்வு காணப்படுவதில்லை
C) தெளிவற்ற உட்கரு கொண்டதல்ல
D) நியூக்ளியோலஸ் காணப்படுவதில்லை
விளக்கம்: ஒன்று முதல் இரண்டு மைக்ரான் விட்டம் கொண்டவை
செல் நுண் உறுப்புகளைச் சுற்றி சவ்வு காணப்படுவதில்லை
தெளிவற்ற உட்கரு கொண்டவை.
நியூக்ளியோலஸ் காணப்படுவதில்லை.
29) கூற்றுகளை ஆராய்க.
1. செல் இரண்டு வகைப்படும் – 1. தாவர செல் 2. விலங்கு செல்
2. ராபர்ட் ஹக் என்பவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. செல் இரண்டு வகைப்படும் – 1. யூகேரியோட்டிக் செல் 2. புரோகேரியோட்டிக் செல்
2. ராபர்ட் ஹக் என்பவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
30) செல்லின் ஆற்றல் மையம் என்று அழைக்கப்படுவது எது?
A) உட்கரு
B) ரைபோசோம்
C) மைட்டோகாண்ட்ரியா
D) லைபோசோம்
விளக்கம்: செல்லிற்குத் தேவையான அதிக சக்தியை உருவாக்கித் தருவது மைட்டோகாண்ட்ரியா ஆகும். எனவே இதனை செல்லின் ஆற்றல் மையம் என்று அழைக்கிறோம்.
31) கூற்று: உட்கரு வாயில் என்று அழைக்கப்படுவது – உட்கரு உறை
காரணம்: இது நியூக்ளியஸை நன்கு பாதுகாக்கிறது
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
விளக்கம்: உட்கரு உறை (நியூக்ளியஸ் உறை) உட்கரு வாயில் என்று அழைக்கபடுகிறது. இது நியூக்ளியஸின் உள்ளேயும் வெளியேயும் பொருள்களை அனுப்புகிறது.
32) யூகேரியோட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது எது?
A) செல்சுவர்
B) நியூக்ளியஸ்
C) நுண்குமிழ்கள்
D) பசுங்கணிகம்
விளக்கம்: யூகேரியேட்டின் கட்டுப்பாட்டு மையம் என்று அழைக்கப்படுவது நியூக்ளியஸ் ஆகும். இது செல்லின் மூளையாகச் செயல்படுகிறது. செல்லின் அனைத்துச் செயல்களையும் ஒருங்கிணைத்துக் கட்டுப்படுத்துகிறது.
33) கூற்றுகளை ஆராய்க.
1. தெளிவான உட்கரு அற்ற செல் – சயனோ பாக்டீரியா
2. தெளிவான உட்கரு உடைய செல் – தாவர செல்
3. ஓர் உயிரினத்தில் அனைத்து அடிப்படைப் பண்புகளையும், செயல்பாடுகளையும் கட்டமைப்பது – செல்
4. செல்லை 1664 இராபர்ட் ஹக் என்பவர் கண்டறிந்தார்.
A) 1, 2 சரி
B) 1, 2, 3 சரி
C) 3, 4 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. தெளிவான உட்கரு அற்ற செல் – சயனோ பாக்டீரியா
2. தெளிவான உட்கரு உடைய செல் – தாவர செல்
3. ஓர் உயிரினத்தில் அனைத்து அடிப்படைப் பண்புகளையும், செயல்பாடுகளையும் கட்டமைப்பது – செல்
4. செல்லை 1665 இராபர்ட் ஹக் என்பவர் கண்டறிந்தார்.
34) கூற்றுகளை ஆராய்க.
1. செல்களின் எண்ணிக்கை உயிரினத்திற்கு உயிரினம் மாறுபடுவதில்லை.
2. புவியில் முதலில் உருவான உயிரினமான புரோகேரியேட்டுகளின் விட்டம் 0.03 மைக்ரோமீட்டர் முதல் 2.0 மைக்ரோமீட்டர் ஆகும்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. செல்களின் எண்ணிக்கை உயிரினத்திற்கு உயிரினம் மாறுபடும். உயிரினங்கள் ஒரு செல் கொண்டு ஒரு செல் உயிரினமாக இருக்கலாம் அல்லது பல செல் உயிரினமாக இருக்கலாம்.
2. புவியில் முதலில் உருவான உயிரனமான புரோகேரியேட்டுகளின் விட்டம் 0.003 மைக்ரோமீட்டர் முதல் 2.0 மைக்ரோமீட்டர் ஆகும்.
35) தாவர செல் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
A) வெளிப்புறத்தில் செல்சவ்வும் அதனைச் சுற்றி செல்சுவரும் காணப்படும்
B) விலங்கு செல்லை விட அளவில் பெரியது
C) பசுங்கணிகங்களை கொண்டுள்ளன.
D) விலங்கு செல்லை விட கடினத்தன்மை மிக்கது.
விளக்கம்: தாவரசெல்கள் விலங்கு செல்களை விட அளவில் பெரியனவையாகவும், கடினத்தன்மை மிக்கதாகவும் உள்ளன. தாவர செல்கள் அதனைச் சுற்றி வெளிப்புறத்தில் செல்சுவரையும் அதனையடுத்து செல்சவ்வினையும் கொண்டுள்ளன. தாவரசெல்கள் பசுங்கணிகங்களை கொண்டுள்ளன. அவற்றில் காணப்படும் பச்சையம் என்னும் நிறமி தாவரத்திற்கு அதன் உணவினை தயாரித்துக்கொள்ள உதவுகின்றது.
36) மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை?
A) 3.7×1010
B) 3.7×1012
C) 3.7×1013
D) 3.7×1013
விளக்கம்: தோராயமாக, மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை 3.7×1013அல்லது 37, 000, 000, 000, 000 ஆகும்.
37) விலங்கு செல்லில் கீழ்க்கண்ட எது காணப்படுவதில்லை?
A) நுண்குமிழ்கள்
B) சென்ட்ரியோல்கள்
C) பசுங்கணிகங்கள்
D) செல்சவ்வு
விளக்கம்: விலங்கு செல்;லைச் சுற்றி செல்சவ்வு காணப்படுகிறது. ஆனால் செல்சுவர் காணப்படுவதில்லை. விலங்கு செல்லில் பசுங்கணிகங்கள் காணப்படுவதில்லை. இவை சிறிய நுண்குமிழ்களை கொண்டுள்ளன. விலங்கு செல்லில் சென்ட்ரியோல்கள் உண்டு.
38) செல் என்ற சொல் எந்த மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது?
A) கிரேக்கம்
B) பிரெஞ்சு
C) அரபு
D) இலத்தீன்
விளக்கம்: இலத்தீன் மொழியில் செல்லுலா என்பதற்கு சிறிய அறை என்று பொருள் ஆகும். 1665ஆம் ஆண்டு மைக்ரோகிராபியா என்ற தனது நூலினை வெளியிட்ட இராபர்ட் ஹக் செல் என்ற சொல்லினைப் பயன்படுத்தி திசுக்களின் அமைப்பினை விளக்கினார்.
39) கூற்று: மனிதனின் செல்களில் நிறத்தை வழங்கும் பசுங்கணிகங்கள் காணப்படுகின்றன.
காரணம்: இதுவே மனித தோலுக்கு நிறத்தை வழங்குகிறது
A) கூற்று, காரணம் இரண்டும் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை விளக்கம்: விலங்கு செல்லில் பசுங்கணிகங்கள் காணப்படுவதில்லை. பசுங்கணிகங்கள் என்பது தாவர செல்களில் மட்டுமே காணப்படும்.
40) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
A) செல்லை பாதுகாப்பது – செல்சுவர்
B) செல்லுக்கு சக்தி அளிப்பது – மைட்டோகாண்டிரியா
C) செல்லின் மூளை – உட்கரு
D) செல்லின் நகரும் பெர்ருள் – புரோட்டோபிளாசம்
விளக்கம்: செல்லை பாதுகாப்பது – செல்சுவர்
செல்லுக்கு சக்தி அளிப்பது – மைட்டோகாண்டிரியா
செல்லின் மூளை – உட்கரு
செல்லின் நகரும் பொருள் – சைட்டோபிளாசம்.
6th Science Lesson 12 Questions in Tamil
12] மனித உறுப்பு மண்டலங்கள்
1) கூற்றுகளை ஆராய்க.
1. நமது உடலில் ஹைட்ரஜன் கலந்த கழிவுகள், கழிவுநீக்க மண்டலம் மூலம் வெளியேற்றப்படுகின்றன.
2. நாளமில்லா சுரப்பிகள் ஹார்மோன்கள் என்னும் வேதிப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. நமது உடலில் நைட்ரஜன் கலந்த கழிவுகள், கழிவுநீக்க மண்டலம் மூலம் வெளியேற்றப்படுகின்றன.
2. நாளமில்லா சுரப்பிகள் ஹார்மோன்கள் என்னும் வேதிப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
2) மனிதனின் எலும்பு மண்டலம் எத்தனை எலும்புகளை உடையது?
A) 206
B) 216
C) 218
D) 220
விளக்கம்: மனிதனின் எலும்பு மண்டலம் 206 எலும்புகளை உடையது. சில குருத்தெலும்புகள், இணைப்பு இழைகள், தசை நார்கள் ஆகியவற்றையும் எலும்பு மண்டலம் உள்ளடக்கியுள்ளது.
3) எலும்புகளை எலும்புகளுடன் இணைப்பது எது?
A) இணைப்பு இழைகள்
B) தசைநார்கள்
C) இணைப்பு இழைக்ள் மற்றும் தசைநார்கள்
D) மூட்டுகள்
விளக்கம்: இணைப்பு இழைகள் என்பது எலும்புகளை எலும்புகளுடன் இணைக்கின்றன.
தசைநார்கள் என்பது எலும்புகளை தசைகளுடன் இணைக்கின்றன.
4) எலும்பு மண்டலம் எத்தனை பிரிவுகளைக் கொண்டுள்ளது?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: எலும்பு மண்டலம் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவை,
1. அச்சுச் சட்டகம்
2. இணையுறுப்புச் சட்டகம்
அச்சுச் சட்டகமானது மனித உடலின் செங்குத்தான அச்சை உருவாக்குகிறது.
இணைறுப்பு சட்டகமானது மார்பு வளையங்கள், இடுப்பு வளையங்கள், கை கால் எலும்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
5) கீழே உள்ளவற்றில் பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.
A) ஹயாய்டு எலும்பு
B) சுத்தி எலும்பு
C) பட்டடை எலும்பு
D) அங்கவடி எலும்பு
விளக்கம்: மேலே சொன்னவற்றில் பொருந்தாதது – ஹயாய்டு எலும்பு.
சுத்தி எலும்பு, பட்டடை எலும்பு, அங்கவடி எலும்பு – செவிச் சிற்றெழும்பு.
ஹயாய்டு எலும்பு – வாய்க்குழியின் அடித்தளத்தில் காணப்படும்.
6) முத்திலேயே மிகப்பெரிய மற்றும் உறுதியான எலும்பு எது?
A) மேல்தாடை எலும்பு
B) கீழ்த்தாடை எலும்பு
C) ஹயாய்டு எலும்பு
D) மூக்கெலும்பு
விளக்கம்: முகத்திலேயே கீழ்த்தாடை எலும்பு தான் மிகப்பெரியது மற்றும் உறுதியானது ஆகும்.
7) கூற்றுகளை ஆராய்க.
1. முதுகெலும்புத் தொடர் மண்டையோட்டின் அடிப்புறத்திலிருந்து தொடங்குகிறது.
2. இது தண்டுவடத்தைப் பாதுகாக்கிறது.
3. இது பெரிய முள்ளெலும்புத் தொடர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
4. மனித உறுப்பு மண்டலம் 4 வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
A) 1, 2 சரி
B) 2, 3 சரி
C) 3, 4 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. முதுகெலும்புத் தொடர் மண்டையோட்டின் அடிப்புறத்திலிருந்து தொடங்குகிறது.
2. இது தண்டுவடத்தைப் பாதுகாக்கிறது.
3. இது சிறிய முள்ளெலும்புத் தொடர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
4. மனித உறுப்பு மண்டலம் 8 வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
8) கூற்றுகளை ஆராய்க.
1. விலா எலும்புக் கூடு 12 இணைகள் கொண்ட வளைந்த, தட்டையான விலா எலும்புகளைக் கொண்டுள்ளது.
2. மனிதனின் கை-கால் எலும்புகள் இரண்டு இணைகளைக் கொண்டவை. அவை முன்னங்கை, பின்னங்கை மற்றும் முன்னங்கால், பின்னங்கால்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. விலா எலும்புக் கூடு 12 இணைகள் கொண்ட வளைந்த, தட்டையான விலா எலும்புகளைக் கொண்டுள்ளது.
2. மனிதனின் கை-கால் எலும்புகள் இரண்டு இணைகளைக் கொண்டவை. அவை முன்னங்கை மற்றும் பின்னங்கால்
9) மனித உடலின் மிகச்சிறிய எலும்பு எது?
A) ஹயாய்டு எலும்பு
B) அங்கவடி எலும்பு
C) சுத்தி எலும்பு
D) பட்டடை எலும்பு
விளக்கம்: நமது உடலில் காணப்படும் எலும்புகளில் மிகச்சிறியது நமது உள்காதில் உள்ள அங்கவடி எலும்பு ஆகும். இது 2.8 மில்லி மீட்டர் மட்டுமே நீளம் உடையது (சராசரி நீளம்).
10) குழந்தை பிறக்கும் போது எத்தனைக்கும் மேற்பட்ட எலும்புகளுடன் பிறக்கின்றன?
A) 250
B) 300
C) 350
D) 200
விளக்கம்: குழந்தைகள் பிறக்கும் பொழுது 300க்கும் அதிகமான எலும்புகளுடன் பிறக்கின்றன. அவர்கள் வளரும் பொழுது சில எலும்புகள் இணைந்து ஒன்றாக மாறிவிடுகின்றன. ஆகையால் முதிர்ச்சியடைந்த மனிதனின் எலும்புக் கூட்டில் 206 எலும்புகள் உள்ளன.
11) உடலில் எத்தனை வகை தசைகள் உள்ளன?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: உடலில் மூன்று வகை தசைகள் உள்ளன. அவை,
1. எலும்புத் தசைகள்
2. மென் தசைகள்
3. இதயத் தசைகள்
12) கூற்றுகளை ஆராய்க.
1. கையை நீட்டும் போது – இருதலை தசை தளர்வடையும், முத்தலை தசைகள் சுருங்கும்.
2. கையை மடக்கும் போது – இருதலை தசை சுருங்கும், முத்தலை தசைகள் தளர்வடையும்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: கையை மடக்கும்போது இருதலைத் தசைகள் சுருங்கி தடினமாகிறது. முத்தலைத் தசைகள் தளர்வு கொண்டு நீண்டு மெல்லியதாகிறது.
கையினை நீட்டும் போது மேல்புறம் உள்ள இருதலைத் தசைகள் தளவர்வடைவதையும் பின்புறம் உள்ள முத்தலைத் தசைகள் சுருங்குவதையும் உணரலாம்.
13) கூற்று: எலும்பு தசைகள் இயக்கு தசைகள் என்று அழைக்கப்படுகிறது.
காரணம்: எலும்புத் தசைகள் நமது விருப்பத்திற்கேற்ப செயல்படுகிறது.
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
விளக்கம்: எலும்புத் தசைகள் நமது உடலில் உள்ள எலும்புகளுடன் இணைந்து செயல்படக் கூடியவை. நமது விருப்பத்திற்கேற்ப செயல்படுவதால், இவற்றை இயக்கு தசைகள் என்கிறோம். எ.கா. கைகளில் உள்ள தசைகள்.
14) கூற்றுகளை ஆராய்க.
1. அச்சுச் சட்டகத்துடன் முன்னங்கையை இணைப்பது – இடுப்பு வளையம்
2. அச்சுச் சட்டகத்துடன் பின்னங்கால்களை இணைப்பது – மார்பு வளையம்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. அச்சுச் சட்டகத்துடன் முன்னங்கையை இணைப்பது – மார்பு வளையம்
2. அச்சுச் சட்டகத்துடன் பின்னங்கால்களை இணைப்பது – இடுப்பு வளையம்.
15) கீழ்க்கண்டவற்றில் இணையுறுப்புச் சட்டகத்திற்கு பொருந்தாதது எது?
A) முதுகெலும்புத் தொடர்
B) மார்பு வளையங்கள்
C) இடுப்பு வளையங்கள்
D) கை கால் எலும்புகள்
விளக்கம்: எலும்பு மண்டலம் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவை,
- அச்சுச் சட்டகம்
- இணையுறுப்புச் சட்டகம்
அச்சுச் சட்டகமானது மனித உடலின் செங்குத்தான அச்சை உருவாக்குகிறது. இணைறுப்பு சட்டகமானது மார்பு வளையங்கள், இடுப்பு வளையங்கள், கை கால் எலும்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
16) கீழ்க்கண்டவற்றில் எந்த சுரப்பி செரிமான மண்டலத்துடன் தொடர்புடையது அல்ல?
A) உமிழ் நீர் சுரப்பிகள்
B) இரைப்பை சுரப்பிகள்
C) கல்லீரல்
D) தைராய்டு சுரப்பிகள்
விளக்கம்: செரிமான சுரப்பிகள்:
1. உமிழ்நீர் சுரப்பிகள், 2. இரைப்பை சுரப்பிகள், 3. கல்லீரல், 4. கணையம், 5. குடல் சுரப்பிகள்
17) உணவுக்குழாய் சுமார் எத்தனை மீட்டர் நீளமுடைய தசையாலான நீண்ட குழல் ஆகும்.
A) 7மீ
B) 9மீ
C) 8மீ
D) 6மீ
விளக்கம்: செரிமான மண்டலத்தில் உணவுக்குழாய் மற்றும் அதனுடன் இணைந்த செரிமானச் சுரப்பிகளும் உள்ளன. உணவுக்குழாய் சுமார் 9மீ நீளமுடைய தசையாலான நீண்ட குழல் ஆகும்.
18) கூற்று: மென்தசைகள், கட்டுப்படாத இயங்கு தசைகள் எனப்படுகின்றன.
காரணம்: நம் விருப்பதிற்கேற்பச் செயல்பாடாதவை மென் தசைகள் ஆகும்.
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று, தவறு காரணம் சரி.
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
விளக்கம்: மென்தசைகள் உணவுக்குழல், சிறுநீர்ப்பை, தமனிகள் மற்றும் பிற உள்ளுறுப்புகளின் சுவர்களில் காணப்படும். இவை நம் விருப்பத்திற்கேற்பச் செயல்படாதவை. எனவே, இவை கட்டுப்படாத இயங்கு தசைகள் எனப்படுகின்றன.
19) உமிழ்நீரில் கீழ்க்கண்ட எது காணப்படுகிறது?
A) அமைலேஸ்
B) பாக்டீரியாவை கொல்லும் காரணி
C) லைப்பேஸ்
D) A மற்றும் B
விளக்கம்: உமிழ்நீரானது உலர்ந்த உணவை ஈரப்பதமுடையதாக மாற்றி விழுங்க ஏதுவானதாக மாற்றுகின்றது. மேலும், உமிழ்நீரில், ஸ்டார்ச்சினை சிதைக்கககூடிய அமைலேஸ் நொதியும், பாக்டீரியாக்களைக் கொன்று கரைக்கக்கூடிய காரணிகளும் உள்ளன.
20) மாவு பொருள்களானது குளுகோஸ் மற்றும் கிளைகோஜென் ஆக மாற்றப்பட்டு, பித்தநீர் உற்பத்தியாகும் மனித உறுப்பு எது?
A) கல்லீரல்
B) இரைப்பை
C) கணையம்
D) சிறுநீரகம்
விளக்கம்: கல்லீரல்: இரத்தத்தில் உள்ள உணவுச் சத்துப் பொருள்கள், சிறுகுடலிலிருந்து கல்லீரல் வழியாகச் செல்கின்றன. இங்கு வடிகட்டப்பட்டு மற்றும் உடைக்கப்பட்டு புரதங்களாக உற்பத்தியாகின்றன. மாவு பொருள்களானது குளுகோஸ் மற்றும் கிளைகோஜென் ஆக மாற்றப்பட்டு, பித்தநீர் உற்பத்தியாகிறது.
21) செரித்த பொருள்கள் உறிஞ்சப்பெற்று இரத்த ஓட்டத்தில் கலக்கும் உறுப்பு எது?
A) பெருங்குடல்
B) கல்லீரல்
C) இரைப்பை
D) சிறுகுடல்
விளக்கம்: சிறுகுடல்: சுமார் 6 மீட்டர் நீளமுள்ள குழல் ஆகும். பெரும்பகுதி வேதிய செரிமானம் இதில் நடைபெற்று, செரித்த பொருள்கள் உறிஞ்சப்பெற்று, இரத்த ஓட்டத்தில் கலக்கப்படுகிறது.
22) தசை பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. எலும்பு மண்டலம் மற்றும் நரம்பு மண்டலத்துடன் சேர்ந்து தசை மண்டலமும் உடலசைவிற்கு உதவுகிறது.
2. தசைகள் சுருங்கி விரியும் தன்மை கொண்டவை.
3. தசைகளால் தள்ள இயலாது. இழுத்துக் கொள்ள மட்டுமே முடியும்.
4. மூட்டுகளின் அசைவிற்கு மூன்று தசைகள் தேவைப்படுகிறது
A) 1 மட்டும் தவறு
B) 2 மட்டும் தவறு
C) 3 மட்டும் தவறு
D) 4 மட்டும் தவறு
விளக்கம்: நமது உடலில் எலும்பு மண்டலம் மற்றும் நரம்பு மண்டலத்துடன் சேர்ந்து தசை மண்டலமும் உடலசைவிற்கு உதவுகிறது. தசைகள் சுருங்கி விரியும் தன்மை கொண்டவை. ஆகையால் அவை உடல் அசைவிற்கு உதவுகின்றன. தசைகளால் தள்ள இயலாது. இழுத்துக்கொள்ள மட்டுமே இயலும். மூட்டுகளில் எலும்புளை அசைவிக்க இரு தசைகள் தேவைப்படுகிறது. ஒரு தசை சுருங்கும் போது மற்றொன்று விரிவடைகிறது.
23) நமது உடலின் மிக நீளமான எலும்பு எது?
A) முதுகெலும்பு
B) விலா எலும்பு
C) தொடை எலும்பு
D) கையெழும்பு
விளக்கம்: மனித உடலின் நீளமான எலும்பு தொடை எலும்பு ஆகும்.
நமது உடலில் காணப்படும் எலும்புகளில் மிகச்சிறியது நமது உள்காதில் உள்ள அங்கவடி எலும்பு ஆகும். இது 2.8 மில்லி மீட்டர் மட்டுமே நீளம் உடையது (சராசரி நீளம்).
24) நமது உடலில் எத்தனை பிரதான உறுப்பு மண்டலங்கள் உள்ளன?
A) 4
B) 6
C) 7
D) 8
விளக்கம்: உறுப்புகள் ஒருங்கிணைந்து ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்தலே உறுப்பு மண்டலம் எனப்படும். நமது உடலில் எட்டு பிரதான உறுப்பு மண்டலங்கள் உள்ளன. அவை,
1. எலும்பு மண்டலம்
2. தசை மண்டலம்
3. செரிமான மண்டலம்
4. சுவாச மண்டலம்
5. இரத்த ஓட்ட மண்டலம்
6. நரம்பு மண்டலம்
7. நாளமில்லாச் சுரப்பி மண்டலம்
8. கழிவு நீக்க மண்டலம்
25) தைராய்டு சுரப்பி நமது உடலில் எங்கு அமைந்துள்ளது?
A) கழுத்து
B) மார்புக்கூடு
C) வயிற்றின் அடிப்பகுதி
D) சிறுநீரகத்தின் மேல்
விளக்கம்: கழுத்து – தைராய்டு சுரப்பி
வயிற்றின் அடிப்பகுதி – கணையம்
மார்புக்கூடு – தைமஸ் சுரப்பி
சிறுநீரகத்தின் மேல் – அட்ரினல் சுரப்பி
26) மனிதனின் ஒவ்வொரு நுரையீரலும் ஏறக்குறைய———————நுண் காற்றுப்பைகள் உள்ளன.
A) 200 மில்லியன்
B) 300 மில்லியன்
C) 200 பில்லியன்
D) 300 பில்லியன்
விளக்கம்: சுவாச உறுப்புகளில் நுரையீரல்கள் முக்கியமானவையாகும். இவை மார்பறையினுள் அமைந்துள்ளன. மனிதனின் ஒவ்வொரு நுரையீரலும் ஏறக்குறைய 300 மில்லியன் நுண் காற்றுப்பைகள் உள்ளன.
27) வெளிச்சுவாசத்துடன் தொடர்புடைய உடல் உறுப்பு எது?
A) கல்லீரல்
B) இரைப்பை
C) நுரையீரல்
D) இதயம்
விளக்கம்: நாசித் துவாரங்களின் வழியாக காற்றிலுள்ள ஆக்ஸிஜன் உள்ளிழுக்கப்பட்டு, நுரையீரல்களில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு வெளிவிடப்படுகிறது. இதுவே வெளிச்சுவாசம் என்று அழைக்கப்படுகிறது. இது நுரையீரலில் நடைபெறுகிறது.
28) நுரையீரல் கீழ்க்ண்ட எந்த உறையினால் பாதுகாக்கப்படுகிறது?
A) பெரிகார்டியம்
B) ப்ளுரா
C) எப்பிகிளாட்டிஸ்
D) மேற்கண்ட எதுவுமில்லை
விளக்கம்: நுரையீரல்களைச் சுற்றி இரு அடுக்குகளைக் கொண்ட ஒரு பாதுகாப்புப் படலம் காணப்படுகிறது. இதற்கு ப்ளுரா என்று பெயர்.
29) கூற்றுகளை ஆராய்க.
1. உமிழ்நீரில் ஸ்டார்ச்சினை சிதைக்ககூடிய அமைலேஸ் நொதி உள்ளது.
2. நீர் உறிஞ்சும் நிகழ்வு சிறுகுடல் பகுதியில் நடைபெறுகிறது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: உமிழ்நீரானது உலர்ந்த உணவை ஈதரப்பதமுடையதாக மாற்றி விழுங்க ஏதுவானதாக மாற்றுகின்றது. மேலும் உமிழ்நீரில், ஸ்டார்ச்சினை சிதைக்கக்கூடிய அமைலேஸ் நொதியும், பாக்டீரியாக்களை கரைக்கக்கூடிய காரணிகளும் உள்ளன. பெருங்குடலில், சிறுகுடலினால் சீரணிக்கப்படாத உணவு கழிவுகளிலிருந்து நீர் உறிஞ்சப்படுகிறது.
30) இரத்த ஓட்ட மண்டலத்திற்கு பொருந்தாதது எது?
A) சுவாச வாயுக்களை கடத்துகின்றன.
B) உணவுச் சத்துப்பொருள்களை கடத்துகின்றன.
C) ஹார்மோன்களை கடத்துகின்றன
D) கழிவுப் பொருள்களை கடத்துவதில்லை
விளக்கம்: நமது இரத்த ஓட்ட மண்டலம் இதயம், இரத்தக் குழாய்கள் இரத்த ஆகியவற்றை உள்ளடக்கியது. இது நமது உடலில் உள்ள சுவாச வாயுக்கள், உணவுச்சத்துப்பொருள்கள், ஹார்மோன்கள், கழிவுப்பொருள்கள் போன்றவற்றை இரத்த ஓட்ட மண்டலம் கடத்துகிறது.
31) கல்லீரல் பற்றிய கூற்றுகளில் தவறானதைத் தேர்வு செய்க
A) இரத்தத்தில் உள்ள உணவுச் சத்துப்பொருள்கள், சிறுகுடலிலிருந்து கல்லீரல் வழியாகச் செல்கின்றன.
B) கல்லீரலில் உணவுச் சத்துப்பொருள்கள் வடிகட்டப்பட்டு மற்றும் உடைக்கப்பட்டு வைட்டமின்களாக உற்பத்தியாகின்றன.
C) மாவு பொருள்களானது குளுகோஸ் மற்றும் கிளைகோஜென் ஆக மாற்றப்படுகிறது.
D) கல்லீரலில் பித்தநீர் உற்பத்தியாகிறது
விளக்கம்: கல்லீரல்: இரத்தத்தில் உள்ள உணவுச் சத்துப்பொருள்கள், சிறுகுடலிலிருந்து கல்லீரல் வழியாகச் செல்கின்றன.கல்லீரலில் உணவுச் சத்துப்பொருள்கள் வடிகட்டப்பட்டு மற்றும் உடைக்கப்பட்டு புரதங்களாக உற்பத்தியாகின்றன. மாவு பொருள்களானது குளுகோஸ் மற்றும் கிளைகோஜென் ஆக மாற்றப்படுகிறது. கல்லீரலில் பித்தநீர் உற்பத்தியாகிறது.
32) பெரும்பாலான வேதிய செரிமான கீழக்காணும் எந்த மனித உறுப்பில் நடைபெறுகிறது,
A) பெருங்குடல்
B) சிறுகுடல்
C) கணையம்
D) கல்லீரல்
விளக்கம்: சிறுகுடல்: சுமார் 6 மீட்டர் நீளமுள்ள குழல் ஆகும். பெரும்பகுதி வேதிய செரிமானம் இதில் நடைபெற்று, செரித்த பொருள்கள் உறிஞ்சப்பெற்று, இரத்த ஓட்டத்தில் கலக்கப்படுகிறது.
33) கூற்று: இதயத் தசைகள், கட்டுப்படாத இயங்கு தசைகள் எனப்படுகின்றன.
காரணம்: நம் விருப்பதிற்கேற்பச் செயல்பாடாதவை இதயத் தசைகள் ஆகும்.
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
விளக்கம்: இதயத்தின் சுவர் இதயத் தசைகளால் ஆனது. இவை சீராகவும், தொடர்ச்சியாகவும் இதயத்தைத் துடிக்க வைக்கின்றன. இவை நமது விருப்பத்திற்கேற்ப செயல்பாடாதவை. எனவே இவை, கட்டுப்படாத இயங்கு தசைகளே ஆகும்.
34) கீழ்க்கண்டவற்றில் அச்சுச் சட்டகத்திற்குப் பொருந்தாதது எது?
A) மண்டையோடு
B) முதுகெலும்புத் தொடர் (முதுகெலும்பு)
C) விலா எலும்புக் கூடு
D) மார்பு வளையங்கள்
விளக்கம்: எலும்பு மண்டலம் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவை,
- அச்சுச் சட்டகம்
- இணையுறுப்புச் சட்டகம்
அச்சுச் சட்டகமானது மனித உடலின் செங்குத்தான அச்சை உருவாக்குகிறது. அவை,
1. மண்டையோடு
2. முதுகெலும்புத் தொடர் (முதுகெலும்பு)
3. விலா எலும்புக் கூடு.
இணைறுப்பு சட்டகமானது மார்பு வளையங்கள், இடுப்பு வளையங்கள், கை கால் எலும்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது
35) நமது உடலில் மிகச்சிறிய எலும்பு உள்காதில் உள்ள அங்கவடி எலும்பு ஆகும். இதன் சராசரி நீளம் எவ்வளவு?
A) 2.5 மில்லி மீட்டர்
B) 2.7 மில்லி மீட்டர்
C) 2.8 மிலலி மீட்டர்
D) 2.9 மில்லி மீட்டர்
விளக்கம்: நமது உடலில் காணப்படும் எலும்புகளில் மிகச்சிறியது நமது உள்காதில் உள்ள அங்கவடி எலும்பு ஆகும். இது 2.8 மில்லி மீட்டர் மட்டுமே நீளம் உடையது (சராசரி நீளம்).
36) மனித உடலில் மூன்று வகை தசைகள் உள்ளன. இவற்றில் பொருந்தாதது எது?
A) மென் தசைகள்
B) எலும்புத் தசைகள்
C) கடினத் தசைகள்
D) இதயத் தசைகள்
விளக்கம்: மனித உடலில் மூன்று வகையான தசைகள் உள்ளன. அவை,
1. எலும்புத் தசைகள்
2. மென் தசைகள்
3. இதயத் தசைகள்.
37) ஸ்டார்ச்சினை சிதைக்கக்கூடிய எந்த நொதி உமிழ்நீரில் காணப்படுகிறது?
A) லைப்பேஸ்
B) அமைலேஸ்
C) லிம்பேஸ்
D) மோனேஸ்
விளக்கம்: உமிழ்நீரானது உலர்ந்த உணவை ஈரப்பதமுடையதாக மாற்றி விழுங்க ஏதுவானதாக மாற்றுகின்றது. மேலும், உமிழ்நீரில், ஸ்டார்ச்சினை சிதைக்ககூடிய அமைலேஸ் நொதியும், பாக்டீரியாக்களைக் கொன்று கரைக்கக்கூடிய காரணிகளும் உள்ளன.
38) இரைப்பையில் உள்ள அமிலம் எது?
A) சல்பியூரிக் அமிலம்
B) கந்தக அமிலம்
C) ஹைட்ரோகுளோரிக் அமிலம்
D) மாலிக் அமிலம்
விளக்கம்: இரைப்பை: உணவை சேமித்து வைக்கும் மற்றும் செரிக்கும் இடமாகவும், இரைப்பை நீரானது கோழை, நொதிகள் மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஆகியவற்றை கொண்டுள்ளது.
39) உணவுச் சத்துப் பொருள்கள் உடைக்கப்பட்டு மற்றும் வடிகட்டப்பட்டு புரதங்களாக உற்பத்தி செய்யும் உறுப்பு எது?
A) கல்லீரல்
B) இரைப்பை
C) கணையம்
D) சிறுநீரகம்
விளக்கம்: கல்லீரல்: இரத்தத்தில் உள்ள உணவுச் சத்துப் பொருள்கள், சிறுகுடலிலிருந்து கல்லீரல் வழியாகச் செல்கின்றன. இங்கு வடிகட்டப்பட்டு மற்றும் உடைக்கப்பட்டு புரதங்களாக உற்பத்தியாகின்றன.
40) உணவுக்குழாயின் மொத்த நீளம் 9மீட்டர். இதில் சிறுகுடலின் நீளம் எவ்வளவு?
A) 5மீட்டர்
B) 6மீட்டர்
C) 7மீட்டர்
D) 4மீட்டர்
விளக்கம்: சுமார் 6 மீட்டர் நீளமுள்ள குழல் ஆகும். பெரும்பகுதி வேதிய செரிமானம் இதில் நடைபெற்று, செரித்த பொருள்கள் உறிஞ்சப்பெற்று, இரத்த ஓட்டத்தில் கலக்கப்படுகிறது.
41) சீரணிக்கப்படாத உணவு கழிவுகளிலிருந்து நீர் உறிஞ்சும் நிகழ்வு கீழ்க்காணும் எந்த உறுப்பில் நடைபெறுகிறது?
A) பெருங்குடல்
B) கல்லீரல்
C) இரைப்பை
D) சிறுகுடல்
விளக்கம்: பெருங்குடல்: இங்கு சிறுகுடலினால் சீரணிக்கப்படாத உணவு கழிவுகளிலிருந்து நீர் உறிஞ்சப்படுகிறது. மேலும் பெருங்குடலில் அதிகளவில் வாழும் பாக்டீரியாக்களினால் உருவாக்கப்படும் சில முக்கிய விட்டமின்களும் இங்கு உறிஞ்சப்படுகின்றது.
42) எங்கு காற்றுக்கும், இரத்தத்திற்கும் இடையே ஆக்ஸிஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுப் பரிமாற்றம் நடைபெறுகிறது?
A) மூச்சுக்குழல்
B) நுரையீரல்
C) இதயம்
D) இரைப்பை
விளக்கம்: நுரையீரலில் காற்றுக்கும், இரத்தத்திற்கும் இடையே ஆக்ஸிஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுப் பரிமாற்றம் நடைபெறுகிறது.
43) சிறுகுடலுக்கு பொருந்தாத கூற்றை தேர்வு செய்க.
A) சுமார் 6 மீட்டர் நீளமுள்ளது.
B) பெரும்பகுதி வேதிய செரிமானம் இதில் நடைபெறுகிறது.
C) செரித்த பொருள்கள் உறிஞ்சப்பெற்று, இரத்த ஓட்டத்தில் கலக்கப்படுகிறது.
D) மேற்கண்ட எதுவுமில்லை.
விளக்கம்: சிறுகுடல்: சுமார் 6 மீட்டர் நீளமுள்ள குழல் ஆகும். பெரும்பகுதி வேதிய செரிமானம் இதில் நடைபெற்று, செரித்த பொருள்கள் உறிஞ்சப்பெற்று, இரத்த ஓட்டத்தில் கலக்கப்படுகிறது.
44) தைமஸ் சுரப்பி நமது உடலில் எங்கு அமைந்துள்ளது?
A) கழுத்து
B) மார்புக்கூடு
C) வயிற்றின் அடிப்பகுதி
D) சிறுநீரகத்தின் மேல்
விளக்கம்: கழுத்து – தைராய்டு சுரப்பி
வயிற்றின் அடிப்பகுதி – கணையம்
மார்புக்கூடு – தைமஸ் சுரப்பி
சிறுநீரகத்தின் மேல் – அட்ரினல் சுரப்பி.
45) நமது உடலில் அதிகளவு நீர் உள்ள பகுதி (செல்) எது?
A) இதய செல்
B) கொழுப்பு செல்
C) மூளையின் சாம்பல் நிற செல்
D) சிறுநீரக செல்
விளக்கம்: நமது உடலில் 70 சதவீதம் நீர் உள்ளது. நமது மூளையில் சாம்பல் நிறப் பகுதியில் அதிகளவு (81 சதவீதம்) நீர் உள்ளது. கொழுப்பு செல்களில் குறைந்தளவு (15 சதவீதம்) மட்டுமே உள்ளது.
46) கீழ்க்காணும் எந்த உறுப்பில் பித்தநீர் உற்பத்தியாகிறது?
A) கல்லீரல்
B) மண்ணீரல்
C) கணையம்
D) இரைப்பை
விளக்கம்: இரத்தத்தில் உள்ள உணவுச் சத்துப்பொருள்கள், சிறுகுடலிலிருந்து கல்லீரல் வழியாகச் செல்கின்றன. பித்தநீர் கல்லீரலில் உற்பத்தியாகிறது.
47) இரத்தத்தின் பணிகள் பற்றியக் கூற்றுகளை ஆராய்க.
1. தீங்கு விளைவிக்கக் கூடிய நோய்க் கிருமிகளிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கின்றது.
2. உடல் வெப்ப நிலையை ஒரே சீராக வைக்க உதவி செய்கின்றது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: நமது இரத்த ஓட்ட மண்டலம் இதயம், இரத்தக் குழாய்கள், இரத்தம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது நமது உடலில் உள்ள சுவாச வாயுக்கள், உணவுச்சத்துப்பொருள்கள், ஹார்மோன்கள், கழிவுப்பொருள்கள் போன்றவற்றைக் கடத்துகிறது. இது தீங்கு விளைவிக்கக் கூடிய நோய்க் கிருமிகளிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கின்றது. மேலும் உடல் வெப்பநிலையை ஒரே சீராக வைக்கவும் உதவி செய்கின்றது.
48) இரத்த சிவப்பணுக்கள் எங்கு உருவாக்கப்படுகின்றன?
A) கல்லீரல்
B) மண்ணீரல்
C) எலும்பு மஜ்ஜை
D) இதயம்
விளக்கம்: இரத்தம் ஒரு திரவ இணைப்புத் திசுவாகும். இரத்தம் பிளாஸ்மா மற்றும் இரத்த அணுக்களைக் கொண்டுள்ளது. இரத்த சிவப்பணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாக்கப்படுகின்றன.
49) கீழ்க்காணும் எந்த நிகழ்வின் மூலம் அதிகளவு ஆக்ஸிஜனை உள்வாங்கி அதிகளவு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகிறோம்.
A) இருமல்
B) தும்மல்
C) விக்கல்
D) கொட்டாவி விடுதல்
விளக்கம்: சுவாச உறுப்புகளில் நுரையீரல்கள் முக்கியமானவையாகும். இவை மார்பறையினுள் அமைந்துள்ளன. மனிதனின் ஒவ்வொரு நுரையீரலும் ஏறக்குறைய 300 மில்லியன் நுண் காற்றுப்பைகள் உள்ன. கொட்டாவி விடுதல் மூலம் நாம் அதிக அளவு ஆக்ஸிஜனை உள்வாங்கி அதிகளவு கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியிடுகிறோம்.
50) சாதாரணமாக ஓய்வு நிலையில் உள்ள ஒரு மனிதனின் சராசரி நாடித்துடிப்பு ஒரு நிமிடத்தில்————-இல் இருந்து———–வரை இருக்கும்?
A) 72-75
B) 72-78
C) 72-80
D) 72-76
விளக்கம்: ஒரு நிமிடத்தில் ஏற்படும் நாடித்துடிப்புகளின் எண்ணிக்கையே நாடித் துடிப்பு விகிதம் எனப்படும். சாதாரணமாக ஓய்வு நிலையில் உள்ள ஒரு மனிதனின் சராசரி நாடித்துடிப்பு ஒரு நிமிடத்தில் 72 -இல் இருந்து 80 வரை இருக்கும்.
51) வலது வென்டிரிக்கிளிலிருந்து நுரையீரலுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்வது எது?
A) மேற்பெருஞ்சிரை
B) பெருந்தமனி
C) நுரையீரல் தமனி
D) நுரையீரல் சிரை
விளக்கம்: மனித இதயம் நான்கு அறைகளைக் கொண்டதாகும். வலது வென்டிரிக்கிளிலிருந்து நுரையீரலுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்வது நுரையீரல் தமனி ஆகும்.
52) சிரைகள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன.
2. இவை உடலின் பிற பகுதிகளிலிருந்து இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு வருகின்றன.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: சிரைகள்: கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன. இவை உடலின் பிற பகுதிகளிலிருந்து இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு வருகின்றன. நுரையீரல் சிரைகளைத் தவிர மற்ற அனைத்து சிரைகளும் அசுத்த இரத்தத்தினைக் கடத்துகின்றன.
53) நமது உடலில் குறைவான நீர் கொண்ட செல்கள் எது?
A) இதய செல்
B) கொழுப்பு செல்
C) மூளையின் சாம்பல் நிற செல்
D) சிறுநீரக செல்
விளக்கம்: நமது உடலில் 70 சதவீதம் நீர் உள்ளது. நமது மூளையில் சாம்பல் நிறப் பகுதியில் அதிகளவு (81 சதவீதம்) நீர் உள்ளது. கொழுப்பு செல்களில் குறைந்தளவு (15 சதவீதம்) மட்டுமே உள்ளது.
54) ஆல்வியோலைகள் என்பது கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?
A) சுவாசக் குழல்கள்
B) நுண்காற்றுப்பைகள்
C) குரல்வளைமூடி
D) மேற்கண்ட எதுவுமில்லை
விளக்கம்: ஆல்வியோலைகள் என்பது காற்று நுண்பைகளைக் குறிக்கும். மூச்சுக்குழல் மார்பு அறையினுள் நுழைந்தவுடன் இரு மூச்சுக்கிளைக் குழல்களாகப் பிரிந்து வலது, இடது நுரையீரல்களுக்குள் நுழைந்து பல நுண்குழல்களாகப் பிரிந்து, முடிவில் நுண் காற்றுப்பைகளில் (ஆல்வியோலைகளில்) திறக்கின்றன.
55) இரத்த ஓட்ட மண்டலம் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
A) இதயம் மார்பறையில் இரண்டு நுரையீரல்களுக்கும் இடையே அமைந்துள்ளது.
B) நமது இதயம் இரண்டு ஜோடி அறைகளைக் கொண்டது
C) இது இரண்டு சுவர்களைக் கொண்ட ப்ளுரா என்ற உறையினால் சூழப்பட்டுள்ளது.
D) நம்முடைய வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து இரத்தத்தை உந்தி அனுப்புகிறது
விளக்கம்: இதயம் மார்பறையில், இரண்டு நுரையீரல்களுக்கும் இடையே அமைந்துள்ளது. நமது இதயம் நான்கு அறைகளைக் கொண்டது. இதயம் இரு சுவர்களைக் கொண்ட பெரிகார்டியம் உறையினால் சூழப்பட்டுள்ளது. நமது இதயம் நம்முடைய வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து இரத்தத்தை உந்தி அனுப்புகிறது.
56) நரம்பு மண்டலத்துடன் இணைந்து கடத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பு பணியைச் செய்வது எது?
A) இரத்த ஓட்ட மண்டலம்
B) நாளமில்ல சுரப்பி மண்டலம்
C) கழிவு நீக்க மண்டலம்
D) சுவாச மண்டலம்
விளக்கம்: நரம்பு மண்டலம் நியூரான்கள் அல்லது நரம்பு செல்களால் ஆனது. இம்மண்டலத்தில் மூளை, தண்டுவடம், உணர்ச்சி உறுப்புகள் மற்றும் நரம்புகள் உள்ளன. நரம்பு மண்டலமும், நாளமில்லாச் சுரப்பி மண்டலமும் இணைந்து கடத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகிய இரு முக்கியப் பணிகளை மேற்கொள்கின்றன.
57) கூற்றுகளை ஆராய்க.
1. நுரையீரல் தமனி சுத்த இரத்தத்தினைக் கடத்துகின்றன.
2. நுரையீரல் சிரை அசுத்த இரத்தத்தினைக் கடத்துகின்றன
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: நுரையீரல் தமனிகளைத் தவிர மற்ற அனைத்துத் தமனிகளும் சுத்த இரத்தத்தினைக் கடத்துகின்றன. நுரையீரல் சிரைகளைத் தவிர மற்ற அனைத்து சிரைகளும் அசுத்த இரத்தத்தினைக் கடத்துகின்றன.
58) நமது மூளையை எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கலாம்?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: நமது மூளை ஒரு சிக்கலான உறுப்பு ஆகும். இது மண்டையோட்டின் கபாலக் குழியினுள் உள்ளது. இது திசுக்களாலான மூன்று உறைகளால் சூழப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த சவ்வுகளுக்கு மூளை உள்ளறைகள் என்று பெயர். மூளையை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை,
1. முன் மூளை
2. பின் மூளை
3. நடு மூளை.
59) ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எத்தனை தகவல்களை மூளையில் சேமித்து வைக்க முடியும் என்று கூறப்படுகிறது?
A) 100 மில்லியன்
B) 200 மில்லியன்
C) 250 மில்லியன்
D) 50 மில்லியன்
விளக்கம்: மூளையில் நூறு மில்லியனுக்கும் அதிகமான தகவல்களை ஒருவர் வாழ்நாளில் சேமித்து வைக்க முடியும் என்று கூறப்படுகிறது.
60) தண்டுவடம் என்பது கீழ்க்கண்ட எதன் தொடர்ச்சி ஆகும்?
A) முகுளம்
B) முன் மூளை
C) பின் மூளை
D) நடு மூளை
விளக்கம்: தண்டுவடம் பின்மூளையில் உள்ள முகுளத்தின் தொடர்ச்சி ஆகும். இது முதுகெலும்புத் தொடரினால் மூடப்பட்டிருக்கின்றது. தண்டுவடமானது, மூளையை உடலில் உள்ள பல்வேறு பாகங்களோடு நரம்புகளினால் இணைக்கக்கூடிய அமைப்பாக உள்ளது.
61) நமது செவி எத்தனை பகுதிகளைக் கொண்டது?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: செவிகள் நம்மைச் சுற்றியுள்ள பல்வேறு ஒலிகளைக் கேட்பதற்கு உதவுகின்றன. செவியானது புறச்செவி, நடுச்செவி மற்றும் உட்செவி போன்ற மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.
62) நாம் உணவின் மூலமாகவும், பருகும் நீர் மூலமாகவும் ஒரு நாளைக்கு எத்தனை__________முதல்________லிட்டர் வரை நீர் அருந்துகிறோம்?
A) 1.5-3.5
B) 1.5-3
C) 1.5-4.0
D) 1.5-4.5
விளக்கம்: நாம் உணவின் மூலமாகவும், பருகும் நீர் மூலமாகவும் ஒரு நாளைக்கு 1.5 லிட்டர் முதல் 3.5 லிட்டர் வரை நீர் அருந்துகிறோம்.
63) உடல்முழுவதற்கும் ஆக்ஸிஜனை அளித்து, கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துச்செல்வது எது?
A) லிம்போசைட்
B) த்ரம்போசைட்
C) ஹீமோகுளோபின்
D) மோனோசைட்
விளக்கம்: இரத்த ஓட்ட மண்டலம் வழியாக ஆக்ஸிஜன் உடல் முழுவதும் அளிக்கப்பட்டு, கார்பன்-டை-ஆக்ஸைடு எடுத்துச் செல்லப்படுகிறது. இரத்தச் சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபினால் ஆக்ஸிஜன் மற்றும் கார்பன்டை ஆக்ஸைடு கடத்தப்படுகிறது.
64) கூற்றுகளை ஆராய்க.
1. சிறுநீரகத்தமனி ஆக்ஸிஜன் மற்றும் யூரியா உள்ள இரத்தத்தினை சிறுநீரகங்களுக்கு கொண்டு செல்கிறது.
2. சிறுநீரகச் சிரை வடிகட்டப்பட்ட இரத்தத்தினை சிறுநீரகத்திலிரு;து மேல்பெருஞ்சிரைக்கு கொண்டு செல்கிறது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. சிறுநீரகத்தமனி ஆக்ஸிஜன் மற்றும் யூரியா உள்ள இரத்தத்தினை சிறுநீரகங்களுக்கு கொண்டு செல்கிறது.
2. சிறுநீரகச் சிரை வடிகட்டப்பட்ட இரத்தத்தினை சிறுநீரகத்திலிரு;து கீழ்பெருஞ்சிரைக்கு கொண்டு செல்கிறது.
65) நமது உடலின் மத்திய கட்டுப்பாட்டு மையம் என்று அழைக்கப்படுவது எது?
A) சிறுநீரகம்
B) இதயம்
C) நுரையீரல்
D) மூளை
விளக்கம்: நமது மூளை ஒரு சிக்கலான உறுப்பு ஆகும். இது மண்டையோட்டின் கபாலக் குழியினுள் உள்ளது. இது திசுக்களாலான மூன்று உறைகளால் சூழப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த சவ்வுகளுக்கு மூளை உறைகள் என்று பெயர். மூளையை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை,
1. முன் மூளை
2. பின் மூளை
3. நடு மூளை
மூளையானது உடலின் மத்தியக் கட்டுப்பாட்டு மையம் ஆகும்.
66) சிரைகள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன.
2. உடலின் பிற பகுதிகளிலிருந்து இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு வருகின்றன.
3. நுரையீரல் சிரைகள் சுத்த இரத்தத்தை கடத்துகின்றன
4. மற்ற சிரைகள் அசுத்த இரத்தத்தினைக் கடத்துகின்றன
A) 1, 2 மட்டும் சரி
B) 3, 4 மட்டும் சரி
C) 1, 3, 4 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: சிரைகள்: கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன. இவை உடலின் பிற பகுதிகளிலிருந்து இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு வருகின்றன. நுரையீரல் சிரைகளைத் தவிர மற்ற அனைத்து சிரைகளும் அசுத்த இரத்தத்தினைக் கடத்துகின்றன.
67) நுரையீரலிருந்து (இரத்தத்தினை) இடது ஏட்ரியத்திற்கு எடுத்துச் செல்வது எது?
A) மேற்பெருஞ்சிரை
B) பெருந்தமனி
C) நுரையீரல் தமனி
D) நுரையீரல் சிரை
விளக்கம்: மனித இதயம் நான்கு அறைகளைக் கொண்டதாகும். இது வாழ்நாள் முழுவதும் இரத்தத்தினை உந்தி தள்ளுகிறது. நுரையீரல் சிரை நுரையீரலிலிருந்து (இரத்தத்தினை) இடது ஏட்ரியத்திற்கு எடுத்துச் செல்கிறது.
68) சுவாச மண்டலத்தின் மூலம் நடைபெறும் வாயுக்களின் பரிமாற்றம் எத்தனை வேறுபட்ட செயல் நிலைகளைக் கொண்டது?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: சுவாச மண்டலத்தின் மூலம் நடைபெறும் வாயுக்களின் பரிமாற்றம் 3 வேறுபட்ட செயல் நிலைகளைக் கொண்டது. அவை,
1. வெளிசுவாசம்: நுரையீரல்களில் நடைபெறும்.
2. உட்சுவாசம்: இரத்த ஓட்ட மண்டலத்துடன் தொடர்புடையது.
3. செல்சுவாசம்: செல்களில் நடைபெறும்.
69) இதயம் கீழ்க்காணும் எந்த உறையினால் சூழப்பட்டுள்ளது?
A) பெரிகார்டியம்
B) ப்ளுரா
C) எப்பிகிளாட்டிஸ்
D) மேற்கண்ட எதுவுமில்லை
விளக்கம்: இதயம் மார்பறையில், இரண்டு நுரையீரல்களுக்கும் இடையே அமைந்துள்ளது. நமது இதயம் நான்கு அறைகளைக் கொண்டது. இதயம் இரு சுவர்களைக் கொண்ட பெரிகார்டியம் உறையினால் சூழப்பட்டுள்ளது. நமது இதயம் நம்முடைய வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து இரத்தத்தை உந்தி அனுப்புகிறது.
70) எப்பிகிளாட்டிஸ் என்பது கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?
A) சுவாச வாயுபரிமாற்றம் நடைபெறுதலை குறிக்கிறது.
B) உடலின் ஈரப்பதத்தை நிலைநிறுத்துகிறது.
C) உணவுப்பாதைக்குள் சுவாச வாயு செல்வதை தடுக்கின்றது.
D) சுவாசப்பாதைக்குள் உணவு செல்வதை தடுக்கின்றது.
விளக்கம்: நுரையீரலில் காற்றுக்கும், இரத்தத்திற்கும் இடையே ஆக்ஸிஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு பரிமாற்றம் நடைபெறுகிறது. குரல் வளைமூடி (எப்பிகிளாட்டிஸ்) என்ற அமைப்பு சுவாசப்பாதைக்குள் உணவு செல்வதை தடுக்கின்றது.
71) பெருங்குடல் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
1. இங்கு சிறுகுடலினால் சீரணிக்கப்படாத உணவு கழிவுகளிலிருந்து நீர் உறிஞ்சப்படுகிறது.
2. பெருங்குடலில் அதிகஅளவில் வாழும் பாக்டீரியாக்களினால் உருவாக்கப்படும் சில முக்கிய விட்டமின்களும் இங்கு உறிஞ்சப்படுகின்றது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: பெருங்குடல்: இங்கு சிறுகுடலினால் சீரணிக்கப்படாத உணவு கழிவுகளிலிருந்து நீர் உறிஞ்சப்படுகிறது. பெருங்குடலில் அதிகஅளவில் வாழும் பாக்டீரியாக்களினால் உருவாக்கப்படும் சில முக்கிய விட்டமின்களும் இங்கு உறிஞ்சப்படுகின்றது.
72) நமது உடலில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது?
A) 80
B) 70
C) 55
D) 40
விளக்கம்: நமது உடலில் 70 சதவீதம் நீர் உள்ளது. நமது மூளையின் சாம்பல் நிறப் பகுதியில் அதிகளவு (81 சதவீதம்) நீர் உள்ளது. கொழுப்பு செல்களில் குறைந்தளவு (15 சதவீதம்) மட்டுமே உள்ளது.
73) உடல் திரவத்தின் வேதிய கூட்டமைவினை ஒழுங்குபடுத்துவது எது?
A) இதயம்
B) கல்லீரல்
C) சிறுநீரகம்
D) இரைப்பை
விளக்கம்: சிறுநீரகங்கள் பின்பக்க விலா எலும்புகளினுள் அமையப்பெற்றுள்ளன. இவை உடல் திரவத்தின் வேதிய கூட்டமைவினை ஒழுங்குப்படுத்துகிறது.
74) மனித பெருங்குடலில் வாழும் நுண்ணுயிரி எது?
A) வைரஸ்
B) புரோட்டோசோவா
C) பாக்டீரியா
D) பூஞ்சை
விளக்கம்: பெருங்குடலில் அதிகஅளவில் பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. இதனால் உருவாக்கப்படும் சில முக்கிய விட்டமீன்கள் மனித உடலுக்கு தேவைப்படுகின்றன.
75) மனித உடலில் எட்டு பிரதான உறுப்பு மண்டலங்கள் உள்ளன. அவற்றில் பொருந்தாதது எது?
A) நரம்பு மண்டலம்
B) நாளமுள்ளச் சுரப்பு மண்டலம்
C) கழிவு நீக்க மண்டலம்
D) தசை மண்டலம்
விளக்கம்: உறுப்புகள் ஒருங்கிணைந்து ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்தலே உறுப்பு மண்டலம் எனப்படும். நமது உடலில் எட்டு பிரதான உறுப்பு மண்டலங்கள் உள்ளன. அவை,
1. எலும்பு மண்டலம், 2. தசை மண்டலம், 3. செரிமான மண்டலம், 4. சுவாச மண்டலம், 5. இரத்த ஓட்ட மண்டலம்
6. நரம்பு மண்டலம், 7. நாளமில்லாச் சுரப்பி மண்டலம், 8. கழிவு நீக்க மண்டலம்.
76) அட்ரினல் சுரப்பி நமது உடலில் எங்கு அமைந்துள்ளது?
A) கழுத்து
B) மார்புக்கூடு
C) வயிற்றின் அடிப்பகுதி
D) சிறுநீரகத்தின் மேல்
விளக்கம்: கழுத்து – தைராய்டு சுரப்பி
வயிற்றின் அடிப்பகுதி – கணையம்
மார்புக்கூடு – தைமஸ் சுரப்பி
சிறுநீரகத்தின் மேல் – அட்ரினல் சுரப்பி
77) சிறுநீரகத்தின் செயல் மற்றும் அடிப்படை அலகு எது?
A) மெடுல்லா
B) நியூரான்
C) நெஃப்ரான்
D) மேற்கண்ட எதுவுமில்லை
விளக்கம்: சிறுநீரகங்கள் அவரை விதை வடிவத்தில் அடிவயிற்றுக் குழியில் அமைந்துள்ளன. நெஃப்ரான்கள் சிறுநீரகத்தின் செயல் அடிப்படை அலகாகும். இவை இரத்தத்தினை வடிகட்டி சிறுநீரை உருவாக்குகின்றன.
78) தேல் சூரியஒளியைப் பயன்படுத்தி உடலுக்குத் தேவையான எந்த வைட்டமினை உற்பத்தி செய்கிறது?
A) வைட்டமின் A
B) வைட்டமின் B
C) வைட்டமின் C
D) வைட்டமின் D
விளக்கம்: நுண்ணுயிரிகளிடமிருந்து உடலைப் பாதுகாக்கும் அரணாகத் தோல் உள்ளது. இது சூரியஒளியைப் பயன்படுத்தி உடலுக்குத் தேவையான வைட்டமின் D-ஐ உற்பத்தி செய்கிறது.
79) தோல் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. நமது உடலை ஈரப்பசையோடு வைத்திருக்கின்றது.
2. சரியான உடல் வெப்பநிலையை ஒழுங்குப்படுத்தி வைக்கிறது.
3. பொருளின் தன்மையை அறிய உதவுகிறது.
4. நோய்க் கிருமிகளிடமிருந்து நமது உடலைப் பாதுகாக்கின்றது.
A) 1, 3 சரி
B) 1, 2, 4 சரி
C) 3, 4 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: உடல் முழுவதும் மூடியுள்ள, மிகப் பெரிய உணர் உறுப்பு தோல் ஆகும். நம்மைச் சுற்றியுள்ள பொருள்களை நமது தோல் தொடும்போது அப்பொருள் வெப்பமாக உள்ளதா அல்லது குளிர்ச்சியாக உள்ளதா, வழவழப்பாக உள்ளதா அல்லது சொரசொரப்பாக உள்ளதா, அப்பொருள் காய்ந்துள்ளதா அல்லது ஈரமாக உள்ளதா, கடினமாக உள்ளதா அல்லது மிருதுவாக உள்ளதா என்பதைக் கண்டறிய உதவுகிறது. தோல் உடலை மூடி இருப்பதால், நோய்க் கிருமிகளிடமிருந்து நமது உடலைப் பாதுகாக்கின்றது. இது நமது உடலை ஈரப்பசையோடு வைத்திருக்கின்றது. சரியான உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தி வைக்கிறது.
6th Science Lesson 13 Questions in Tamil
13] காந்தவியல்
1) காந்த தன்மையுடைய தாது பொருள்களை நாம் எவ்வாறு அழைக்கிறோம்?
A) மேக்னடைட்
B) பெரோசைட்
C) புளுரசைட்
D) இயற்கை காந்தம்
விளக்கம்: காந்தத்தன்மையுடைய தாதுப்பொருட்களை நாம் மேக்னடைட் என அழைக்கிறோம், இது இயற்கையான பாறை என்பதால் இதற்கு குறிப்பிட்ட வடிவம் கிடையாது, இதனை இயற்கை காந்தம் எனவும் அழைக்கலாம்.
2) கீழ்க்கண்டவற்றில் காந்த தன்மையற்ற பொருள்கள் எவை?
A) இரும்பு
B) கோபால்ட்
C) நிக்கல்
D) எதுவுமில்லை
விளக்கம்: மேற்கண்ட அனைத்து பொருட்களும் காந்தத் தன்மையை கொண்டுள்ளது, காகிதம் மற்றும் நெகிழி போன்ற பொருட்கள் காந்தத்தால் கவரப்படுவதில்லை எனவே இவற்றை காந்த தன்மையற்ற பொருட்கள் என அழைக்கலாம்.
3) தடையின்றி தொங்கவிடப்பட்டுள்ள காந்தத்தின் திசையானது எத்திசையை நோக்கி நிற்கிறது?
A) வடக்கு – தெற்காக
B) வடக்கு – மேற்காக
C) கிழக்கு – மேற்காக
D) தெற்கு – கிழக்காக
விளக்கம்: தடையின்றி தொங்கவிடப்பட்டுள்ள காந்தமானது எப்பொழுதும் வடக்கு – தெற்கு திசையை நோக்கியே காணப்படும், எனவே தான் காந்ததை நாம் திசைகாட்டியாக பயன்படுத்துகிறோம்.
4) 1. காந்தங்கள் இயற்கையாக பூமியில் காணப்படுகிறது.
2. காந்தங்கள் பெரும்பாலும் கிழக்கு மேற்கு திசையில் நிற்கிறது,
3. திசையை அறியும் காந்த ஊசி தயாரிப்பில் பயன்படுகிறது,
4. காந்தத்தில் ஒத்த துருவங்கள் ஒன்றை ஒன்று விலக்கும் எதிரெதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று கவரும்.
A) 1 2 4 சரி
B) 1 3 சரி
C) 1 3 4 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: காந்தங்கள் இயற்கையாக பூமியில் காணப்படுகிறது. காந்தங்கள் பெரும்பாலும் வடக்கு தெற்கு திசையில் நிற்கிறது, திசையை அறியும் காந்த ஊசி தயாரிப்பில் பயன்படுகிறது, காந்தத்தில் ஒத்த துருவங்கள் ஒன்றை ஒன்று விலக்கும் எதிரெதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று கவரும்.
5) காந்தங்கள் எப்பொழுது அதன் காந்த தன்மையை இழக்க நேரிடும்?
A) சுத்தியால் அடித்தல்
B) வெப்பபடுத்துதல்
C) உரத்திலிருந்து தூக்கி போடுதல்
D) மேற்கண்ட அனைத்து செயல்களிலும்
விளக்கம்: காந்தமானது அதன் காந்த தன்மையை சில நேரங்களில் இழக்க நேரிடும் இவை மேற்கண்ட அனைத்து செயல்களும் சிறந்த உதாரணமாகும், சுத்தியால் அடிக்கும் போதும் காந்ததை வெப்பபடுத்தும் போதும் மற்றும் உயரத்திலிருந்து கீழே தூக்கி போடும் போதும் காந்தம் அதன் காந்த தன்மையை இழக்கிறது.
6) பொதுவாக மனிதன் பயன்படுத்தும் காந்தத்தின் வகைகள் எத்தனை?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: பொதுவாக மனிதன் பயன்படுத்தும் காந்தங்கள் 4 வகைப்படும் அவையாவன சட்ட காந்தம், லாட காந்தம், வளைய காந்தம் மற்றும் காந்த ஊசி. மேலும் நீள்கோள வடிவம், வட்ட வடிவம் மற்றும் உருi வடிவ காந்தங்களும் கிடைக்கின்றன.
7) காந்தத்தின் ஈர்ப்பு விசை எந்த பகுதியில் அதிகமாக காணப்படுகிறது?
A) காந்தத்தின் கிடக்கையாக
B) சட்ட காந்தத்தின் வலப்புறம்
C) சட்ட காந்தத்தின் இடப்புறமாக
D) சட்ட காந்தத்தின் துருவங்கள்
விளக்கம்: காந்தத்தின் ஈர்ப்பு விசையானது அதன் இருமுனைகளிலும் அதிகமாக காணப்படுகிறது, இந்த இரு முனைகளும் காந்தத்தின் துருவங்கள் ஆகும். எனவே காந்தத்தின் ஈர்ப்பு விசையானது காந்தத்தின் துருவத்தில் அதிகமாக காணப்படுகிறது.
8) காந்தத்தின் திசை காட்டும் பண்பை முதன் முதலில் யார் கண்டறிந்தனர்?
A) கிரேக்கர்கள்
B) தமிழர்கள்
C) சீனர்கள்
D) எகிப்தியர்கள்
விளக்கம்: காந்தத்தின் திசை காட்டும் பண்பை முதல் முதலில் சீனர்களே 800 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டறிந்தனர், இதனை கொண்டே சீனர்கள் புயல் மற்றும் மூடுபனியிலும் திசை மாறாமல் பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டனர்.
9) காந்தத்திற்கு அருகில் எந்த பொருள்களை வைத்தால் காந்தத் தன்மையும் இழந்து மேலும் அந்த பொருள்களும் பாதிக்கப்படும்?
A) கைபேசி
B) குறுந்தகடு
C) கணிணி
D) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: காந்தத்திற்கு அருகில் மேற்கண்ட கைபேசி. குறுந்தகடு மற்றும் கணிணி போன்ற பொருட்களை கொண்டு வந்தால் அந்த பொருள் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் காந்தத்தன்மையும் பாதிப்படைகிறது.
10) மின்காந்த தொடர்வண்டி கீழ்கண்ட எந்தெந்த நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது?
A) சீனா
B) ஜப்பான்
C) தென் கொரியா
D) மேற்கண்ட அனைத்து நாடுகளிலும்
விளக்கம்: மின்காந்த தொடர்வண்டியானது சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளில் பயணிகளின் பயணத்திற்கு விடப்பட்டு அவை சிறப்பாக செயல்பட்டும் வருகின்றன.
11) கீழ்கண்டவற்றுள் காந்ததால் ஈர்க்கப்படும் பொருள் எது?
A) மரக்கட்டை
B) ஊசி
C) அழிப்பான்
D) காகித துண்டு
விளக்கம்: ஊசி மட்டும் காந்ததால் கவரப்படும் பொருள் ஆகும், மேற்குறிப்பிட்ட பொருட்கள் காந்தால் ஈர்க்கப்படாது ஊசியை தவிர, இரும்பு, கோபால்ட் மற்றும் நிக்கல் போன்றவையே காந்ததால் ஈர்க்கப்படும் பொருட்கள் ஆகும்.
12) காந்த ஊசிப்பெட்டியை வைத்து ________ அறிய முடியும்?
A) வேகம்
B) பொருள் கடந்த தொலைவு
C) திசையை
D) இயக்கத்தை
விளக்கம்: காந்த ஊசிப்பெட்டியானது திசையை அறிய பயன்படுகிறது, காந்தமானது எப்பொழுதும் வடக்கு மற்றும் தெற்காக நிற்கிறது எனவே காந்த ஊசிப்பெட்டியை வைத்து அதன் திசையை அறியலாம்.
13) காந்தவியல் பற்றிய கோட்பாடுகளில் கீழ்கண்டவற்றில் எவை தவறாக பொருந்தியுள்ளது?
A) இரும்பு ஆணி
B) குண்டூசி
C) இரப்பர் குழாய்
D) ஊசி
விளக்கம்: மேற்குறிப்பிட்ட பொருட்களில் இரப்பர் குழாய் மட்டும் காந்ததால் கவரப்படுவது இல்லை, மற்ற அனைத்து பொருட்களும் காந்ததால் கவரப்படும் பொருட்களாகும்.
14) 1. காந்த திசைகாட்டி – அதிக காந்த வலிமை
2. ஈர்ப்பு – ஒத்த துருவங்கள்
3. விலக்குதல் – எதிரெதிர் துருவங்கள்
4. காந்த துருவங்கள் – காந்த ஊசி
A) 4 3 2 1
B) 3 2 1 4
C) 4 2 1 3
D) 1 3 2 4
விளக்கம்: காந்த திசைகாட்டி – காந்த ஊசி
ஈர்ப்பு – எதிரெதிர் துருவங்கள்
விலக்குதல் – ஒத்த துருவங்கள்
காந்த துருவங்கள் – அதிக காந்த வலிமை
15) செயற்கையாக பயன்படுத்தப்படும் காந்தங்களில் இவை காந்ததன்மையற்ற செயல் ஆகும்?
A) கவர்தல்
B) விலகுதல்
C) திசைகாட்டுதல்
D) மின்னொலியூட்டுதல்
விளக்கம்: செயற்கையாக உருவாக்கப்படும் காந்தங்களில் காந்ததன்மையானது இயற்கை காந்தங்களில் காணப்படுவது போல அனைத்து பண்புகளும் காணப்படுகிறது ஆனால் காந்தப்பண்புகளில் மின்னொலியூட்டுதல் என்ற பண்பு காணப்படுவதில்லை எனவே மின்னொலியூட்டுதல் என்பது தவறான ஒன்றாகும்.
16) மின்காந்த தொடர்வண்டியில் எவை எவை முழுவதும் குறைக்கப்படுகிறது?
A) உராய்வு
B) உயர் வேகம்
C) அதிக இரைச்சல்
D) A & C
விளக்கம்: மின்காந்த தொடர்வண்டியில் மேற்கண்ட உராய்வு மற்றும் அதிக இரைச்சல் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டு உயர் வேகத்திற்கும் பாதுகாப்பான பயணத்திற்கும் வழி வகுக்கிறது.
17) மின்காந்த தொடர்வண்டியானது இந்தியாவில் எந்தெந்த பகுதிகளுக்கு இடையே அமைக்கப்படுவதாக பரிசீலிக்கப்படுகிறது?
A) மும்பை – டெல்லி
B) மும்பை – நாக்பூர்
C) சென்னை – பெங்களுர் – மைசூர்
D) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: இந்தியாவில் மின்காந்த தொடர்வண்டியானது மேற்கண்ட அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்படுவதற்கான சாத்தியகூறுகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெறிகிறது.
18) மின்காந்த தொடர்வண்டிகளை எவ்வளவு வேகத்தில் செலுத்தலாம்?
A) 300 – 600 கிமீ
B) 400 – 800 கிமீ
C) 200 – 600 கிமீ
D) 100 – 150 கிமீ
விளக்கம்: மின்காந்த தொடர்வண்டியானது தண்டவாளத்தில் மோதுவது கிடையாது என்பதால் அவை குறைந்த உராய்வு விசையோடு குறைந்தபட்சம் 300 – 600 கிமீ வேகத்தில் இயக்கலாம்
19) காந்தங்கள் தன் காந்த தன்மையை இழக்க காரணம் எது?
A) சுத்தப்படுத்துதல்
B) பயன்படுத்துவதால்
C) பாதுகாப்பாக வைத்திருத்தல்
D) சுத்தியால் தட்டுவதால்
விளக்கம்: காந்தமானது வெப்பபடுத்துதல், உயரத்திலிருந்த கீழே போடுதல் மற்றும் சுத்தியால் தட்டுதல் போன்ற காரணங்களால் காந்தமானது காந்தத் தன்மையை இழக்கிறது.
20) ஒரு காந்தத்திற்கு எப்பொழுதும் எத்தனை திசை காணப்படுகிறது?
A) 1
B) 2
C) 3
D) 4
விளக்கம்: காந்தமானது எப்பொழுதும் அவற்றிற்கு இரு திசைகளே பொருந்துகிறது, அவை வடக்கு தெற்காக மட்டுமே நிற்கிறது.
21) பொருந்தாதது எது?
A) மின்தூக்கி
B) தானியங்கி படிகட்டு
C) மின்காந்த இரயில்
D) மின் பல்பு
விளக்கம்: மின்தூக்கி, தானியங்கி படிகட்டு மற்றும் மின்காந்த இரயில் போன்றவை அதிக செறிவு கொண்ட செயற்கை மின்காந்தங்கள் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் மின்பல்பு மட்டும் காந்தத்தன்மை பெறாது இவை மின்னோட்டத்தினால் வெளிச்சத்தை அளிக்கிறது.
22) 1. உருளை வடிவ காந்தத்திற்கு ஒரே ஒரு துருவம் மட்டுமே காணப்படுகிறது.
2. காந்தத்தின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்கும்.
3. காந்தத்தினை இரும்பு தூள்களுக்கு அருகே கொண்டுசெல்லும் போது அதிக அளவிளான துகள்கள் காந்தத்தின் மையத்தில் ஒட்டிக்கொள்கிறது.
4. காந்த ஊசியினை பயன்படுத்தி கிழக்கு மேற்கு திசைகளை கண்டறிய முடியும்.
5. இரப்பர் ஒரு காந்த பொருள்.
A) 1 2 4 சரி
B) 1 3 சரி
C) 1 3 4 சரி
D) 2 மட்டும் சரி
விளக்கம்: உருளை வடிவ காந்தத்திற்கு இரு துருவம் மட்டுமே காணப்படுகிறது. காந்தத்தின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்கும். காந்தத்தினை இரும்பு தூள்களுக்கு அருகே கொண்டுசெல்லும் போது அதிக அளவிளான துகள்கள் காந்தத்தின் துருவத்தில் ஒட்டிக்கொள்கிறது. காந்தஊசியினை பயன்படுத்தி வடக்கு தெற்கு திசைகளை கண்டறிய முடியும். இரப்பர் ஒரு காந்த பொருள் அல்ல.
6th Science Lesson 14 Questions in Tamil
14] நீர்
1. பின்வரும் முறைகளுள் நீராவியினை வளிமண்டலத்தினுள் சேர்ப்பது எது?
1. நீராவிப்போக்கு
2. மழைபொழிதல்
3. ஆவி சுருங்குதல்
4. ஆவியாதல்
A) 2 மற்றும் 3
B) 2 மற்றும் 4
C) 1 மற்றும் 4
D) 1 மற்றும் 2
விளக்கம்: ஆவியாதல், ஆவி சுருங்குதல் மற்றும் மழை பொழிதல் ஆகிய மூன்றும் நீர் சுழற்சியுடன் தொடர்புடையது ஆகும். இதில் நீராவியினை வளிமண்டலத்தினுள் சேர்ப்பது, நீராவிப்போக்கு மற்றும் ஆவியாதல் ஆகும்.
2) காற்றில் ஆக்ஸிஜனின் அளவு 20 சதவீதமாக இருக்க வேண்டும் என கூறியவர் யார்?
A) பாய்லே
B) லவாய்சியர்
C) மேரி அன்னே
D) மேற்காணும் யாருமில்லை
விளக்கம்: ஒரு குடுவையில் சிறிய தகடோ அல்லது பெரிய தகடோ எதைச் சூடாக்கினாலும், நிறை இரண்டு கிராம் வரை மட்டுமே அதிகரிக்கிறது. இதன் மூலம் காற்றில் ஆக்ஸிஜனின் அளவு 20 சதவீதமாக இருக்க வேண்டும் என முடிவு செய்தார் லவாய்சியர்.
3) கீழ்க்காணும் கூற்றுகளில் நீரின் பண்புகளில் பொருந்தாதது எது?
A) ஒளிபுகும் தன்மை கொண்டது
B) சுவையுடையது
C) மணமற்றது
D) நிறமற்றது
விளக்கம்: நீர் என்பது ஒளிபுகும் தன்மை கொண்ட சுவையற்ற, மணமற்ற மற்றும் நிறமற்ற ஒரு வேதிப்பொருளாகும்.
4) Elements of Chemistry எனும் புத்தகம் கீழ்க்காணும் யாருடன் தொடர்புடையது?
A) பாய்லே
B) லவாய்சியர்
C) நியூட்டன்
D) மேரி அன்னே
விளக்கம்: 1789ஆம் ஆண்டு லாவாய்சியர் வெளியிட்ட Elements of Chemistry எனும் புத்தகம் தற்கால வேதியியலுக்கு அடிப்படையாக அமைந்தது. இவர் நவீன வேதியியல் புரட்சியை ஏற்படுத்தியவர் என போற்றப்படுகிறார்.
5) கூற்றுகளை ஆராய்க.
1. புவியில் காணப்படும் நீரில் 95 சதவீத நீரானது உப்புநீராகும்.
2. நன்னீரின் அளவு வெறும் 5 சதவீதம் ஆகும்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: புவியில் காணப்படும் நீரில் 97 சதவீத நீரானது உப்புநீராகும். நன்னீரின் அளவு வெறும் 3 சதவீதம் ஆகும். அவற்றிலும் ஒரு பகுதி துருவங்களில் பனிப்படிவுகள் மற்றும் பனியாறுகளாக உள்ளதனால் அந்நீரினை நம்மால் பயன்படுத்த இயலாது.
6) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க (நன்னீரின் பரவல் பற்றி).
A) துருவ பனிப்படிவுகள், பனியாறுகள் – 68.7 சதவீதம்
B) நிலத்தடி நீர் – 20.1 சதவீதம்
C) மற்ற நீர் ஆதாரங்கள் – 0.9 சதவீதம்
D) மேற்பரப்பு நீர் – 0.3 சதவீதம்
விளக்கம்: மொத்தம் 3 சதவீதம் உள்ள நன்னீரானது பின்வருமாறு பரவி உள்ளது.
துருவ பனிப்படிவுகள், பனியாறுகள் – 68.7 சதவீதம்
நிலத்தடி நீர் – 30.1 சதவீதம்
மற்ற நீர் ஆதாரங்கள் – 0.9 சதவீதம்
மேற்பரப்பு நீர் – 0.3 சதவீதம்
7) நீரானது ஹைட்ரஜனும், ஆக்ஸிஜனும் இணைந்து உருவானது என்று நிரூபித்தவர் யார்?
A) லவாய்சியர்
B) இராபர்ட் பாயில்
C) ஜே.ஜே. தாம்சன்
D) மேற்கண்ட யாருமில்லை
விளக்கம்: லவாய்சியர் நீரானது ஹைட்ரஜனும், ஆக்ஸிஜனும் இணைந்து உருவானது என நிரூபித்தார். இவர் காற்று ஓர் அடிப்படை பொருள் இல்லை. அது ஒரு கலவை என்று நிரூபித்தார்.
8) உலக நீர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
A) மார்ச் 22
B) மார்ச் 21
C) மார்ச் 23
D) மார்ச் 24
விளக்கம்: பொதுவாக வளிமண்டல அழுத்தத்தில் நீரானது 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பனிக்ட்டியாக உறைகிறது. ஒவ்வொரு வருடமும் மார்ச் 22ஆம் தேதி உலக நீர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
9) நன்னீரில் குறைந்தபட்சம்_______தொடங்கி அதிகபட்சமாக_______அளவுள்ள உப்புகள் கரைந்திருக்கும்.
A) 0.05-1
B) 0.5-1
C) 0.03-1
D) 0.5-1.5
விளக்கம்: நன்னீரில் குறைந்தபட்சம் 0.05 சதவீதம் தொடங்கி அதிகபட்சம் 1 அளவுள்ள உப்புகள் கரைந்திருக்கும்.
10) மனிதனின் மூளை எத்தனை சதவீதம் நீரினைக் கொண்டுள்ளது?
A) 75
B) 79
C) 94
D) 22
விளக்கம்: மனிதனின் மூளை 75 சதவீதம் நீரினைக் கொண்டுள்ளது. மூளையின் செல்கள் தான் உடலில் அதிக நீரினைக் கொண்ட பகுதியாகும்.
11) உவர்ப்பு நீரில் அதிகபட்சமாக________சதவீதம் வரையில் உப்புகள் கரைந்த நிலையில் இருக்கும்.
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: நன்னீரில் குறைந்தபட்சம் 0.05 சதவீதம் தொடங்கி அதிகபட்சமாக 1 சதவீத அளவுள்ள உப்புகள் கரைந்திருக்கும். உவர்ப்பு நீரில் அதிகபட்சமாக 3 சதவீதம் வரையில் உப்புகள் கரைந்த நிலையில் இருக்கும்.
12) காற்று ஒரு கலவை என்று நிரூபித்தவர் யார்?
A) இராபர்ட் பாயில்
B) சர் ஐசக் நியூட்டன்
C) நியூலாண்ட்
D) லவாய்சியர்
விளக்கம்: காற்று என்பது ஓர் அடிப்படை பொருள் அல்ல. அது நைட்ரஜன், ஆக்ஸிஜன், மந்த வாயுக்கள் உள்ளிட்ட வாயுக்களின் கலவை என்று நிரூபித்தவர் லவாய்சியர் ஆவார்.
13) நவீன வேதியியலில் புரட்சியை ஏற்படுத்தியவர் யார்?
A) இராபர்ட் பாயில்
B) சர் ஐசக் நியூட்டன்
C) நியூலாண்ட்
D) லவாய்சியர்
விளக்கம்: நவீன வேதியியல் புரட்சியை ஏற்படுத்தியவர் என்று அறியப்படுபவர் லவாய்சியர் ஆவார். இவர் காற்று ஒரு கலவை என்று நிரூபித்தார்.
14) கூற்றுகளை ஆராய்க.
1. பெரும்பாலான நீரானது, அதாவது 97 சதவீத நீரானது பெருங்கடல்களிலும், கடல்களிலும் காணப்படுகிறது.
2. புவியின் மொத்த பரப்பளவில் நான்கில் மூன்று பங்கு நீர் சூழ்ந்துள்ளது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: புவியின் மொத்த பரப்பளவில் நான்கில் மூன்று பங்கு நீர் சூழ்ந்துள்ளது. பெரும்பாலான நீரானது, அதாவது 97 சதவீத நீரானது பெருங்கடல்களிலும், கடல்களிலும் காணப்படுகிறது.
15) நீரின் கனஅளவை காலன் என்னும் அலகிலும் அளக்கலாம். ஒரு காலன் என்பது_________?
A) 3.795 லிட்டர்
B) 3.785 லிட்டர்
C) 4.785 லிட்டர்
D) 4.795 லிட்டர்
விளக்கம்: நீரின் கனஅளவை லிட்டர் மற்றும் மில்லி லிட்டர் போன்ற அலகுகளால் அளக்கலாம். காலன் என்பதும் நீரின் கன அளவினை அளக்கக் கூடிய அலகாகும். ஒரு காலன் என்பது 3.785 லிட்டர் ஆகும்.
16) நமது இதயம் எத்தனை சதவீதம் நீரினைக் கொண்டுள்ளது?
A) 79
B) 75
C) 68
D) 64
விளக்கம்: மனித இதயம் நான்கு அறைகளைக் கொண்டுள்ளது. இது 79 சதவீதம் நீரினைக் கொண்டுள்ளது.
17) அணைக்கட்டுகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு_______என்ற அலகால் அளக்கப்படுகிறது?
A) லிட்டர்
B) மில்லி லிட்டர்
C) டி.எம்.சி
D) கியூசக்
விளக்கம்: நீரின் கனஅளவை லிட்டர் மற்றும் மில்லி லிட்டர் போன்ற அலகுகளால் அளக்கலாம். காலன் என்பதும் நீரின் கன அளவினை அளக்கக் கூடிய அலகாகும். ஒரு காலன் என்பது 3.785 லிட்டர் ஆகும். நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அளவினை TMC/Foot என்ற அலகால் அளக்கப்படுகின்றது.
18) கல்லீரல் எத்தனை சதவீதம் நீரினைக் கொண்டுள்ளது?
A) 75
B) 79
C) 68
D) 64
விளக்கம்: மனிதனின் கல்லீரல் 68 சதவீதம் நீரினைக் கொண்டுள்ளது.
இதயம் – 79 சதவீதம் நீரினைக் கொண்டுள்ளது.
மூளை – 75 சதவீதம் நீரினைக் கொண்டுள்ளது.
மனித தோல் – 64 சதவீதம் நீரினைக் கொண்டுள்ளது.
19) ஹைட்ராலாஜிக்கல் சுழற்சியில் மூன்று நிலைகள் உள்ளன. இதில் பொருந்தாதது எது?
A) பனிபொழிதல்
B) மழைபொழிதல்
C) ஆவியாதல்
D) ஆவி சுருங்குதல்
விளக்கம்: நீரானது தூய்மைப்படுத்தப்படும் நிகழ்வு நீர் சுழற்சி என்கிறோம். இது ஒரு தொடர் நிகழ்வாகும். நீர் சுழற்சியானது மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது அவை ஆவியாதல், ஆவி சுருங்குதல் மற்றும் மழை பொழிதல் ஆகும். இந்த நீர் சுழற்சியினை நாம் ஹைட்ராலாஜிக்கல் சுழற்சி என்றும் அழைக்கிறோம்.
20) நீரிலுள்ள தொற்றுகளை நீக்கப் பயன்படுவது எது?
A) குளோரின்
B) அம்மோனியா
C) A மற்றும் B
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: குளோரின் மற்றும் அம்மோனியாவைப் பயன்படுத்தி நீரிலுள்ள தொற்றுகளை நீக்கலாம். நிலக்கரி, மணல், சரளை ஆகியவற்றைப் பயன்படுத்தி நீரினை வடிகட்டலாம்.
21) நீர் நிலைகள், கடலைச் சந்திக்கும் ஈர நிலங்களுக்கு_________என்று பெயர்
A) டெல்டா
B) ஈரநிலம்
C) கடற்கரை
D) சதுப்பு நிலம்
விளக்கம்: நீர் நிலைகள், கடலைச் சந்திக்கும் ஈர நிலங்களுக்கு முகத்துவாரம் என்று பெயர். இது நிலத்திலிருந்து நன்னீரும் கடலிலிருந்து உப்பு நீரும் சந்திக்கும் இடமாகும். சில தனித்தன்மையான தாவர மற்றும் விலங்கு வகைகளுக்கு உறைவிடமாக முகத்துவாரம் அமைகிறது.
22) தமிழ்நாட்டிலுள்ள சதுப்பு நிலங்கள் பற்றிய கீழ்க்காண்பவனவற்றில் தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
A) சிதம்பரம் – பிச்சாவரம்
B) பள்ளிக்கரணை – சென்னை
C) செம்பரபாக்கம் – காஞ்சிபுரம்
D) முத்துப்பேட்டை – விருதுநகர்
விளக்கம்: சதுப்பு நிலங்கள் என்பவை ஈரப்பதம் நிறைந்த காடுகள் ஆகும். தமிழ்நாட்டிலுள்ள சில சதுப்பு நிலக் காடுகள்:
சிதம்பரம் – பிச்சாவரம்
பள்ளிக்கரணை – சென்னை
செம்பரபாக்கம் – காஞ்சிபுரம்
முத்துப்பேட்டை – திருவாரூர்
23) சதுப்பு நிலங்கள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க.
1. சதுப்பு நில நீர் நன்னீராகவோ, உவர்ப்பு நீராகவோ அல்லது கடல் நீராகவோ இருக்கலாம்
2. உயிரினங்களுக்கு நன்னீரையும், ஆக்ஸிஜனையும் அளிப்பதில் சதுப்பு நிலங்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: ஈரப்பதம் நிறைந்த காடுகள் சதுப்பு நிலக் காடுகள் எனப்படும். அவை பெரிய ஆறுகளைச் சார்ந்தோ அல்லது பெரிய ஏரிகளின் கரைகளிலோ காணப்படும். சதுப்பு நில நீர் நன்னீராகவோ, உவர்ப்பு நீராகவோ அல்லது கடல் நீராகவோ இருக்கலாம். உயிரினங்களுக்கு நன்னீரையும், ஆக்ஸிஜனையும் அளிப்பதில் சதுப்பு நிலங்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன.
24) கூற்றுகளை ஆராய்க.
1. பொதுவான வளிமண்டல அழுத்தத்தில் நீரானது 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பனிக்கட்டியாக உறைகிறது.
2. ஒவ்வொரு வருடமும் மார்ச் 21-ம் தேதி உலக நீர் தினமாகக் கொண்டாடப்படுகிறது
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: பொதுவான வளிமண்டல அழுத்தத்தில நீரானது 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பனிக்கட்டியாக உறைகிறது. ஒவ்வொரு வருடமும் மார்ச் 22ஆம் தேதி உலக நீர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
25) இரும்புத்தகடை எரித்தபின் அதன் எடை முந்தைய எடையை விட அதிகமாக இருக்கிறது என்று கூறியவர் யார்?
A) பாய்லே
B) லவாய்சியர்
C) நியூட்டன்
D) மேரி அன்னே
விளக்கம்: இரும்புத்தகடை எரித்தபின் அதன் எடை முந்தைய எடையை விட அதிகமாக இருக்கிறது என்று முதலில் கண்டறிந்தவர் பாய்லே ஆவார். லவாய்சியர் பாய்லேவின் ஆய்வைத் துல்லியமாகச் செய்ய விரும்பினார்.
26) யார் வடிவமைத்த துல்லியமான அளவீட்டுக் கருவிகள் இல்லாமல் லவாய்சியர் ஆய்வுகளை மேற்கொண்ட இருக்க முடியாது?
A) பாய்லே
B) கோல்ஸ்டீன்
C) நியூட்டன்
D) மேரி அன்னே
விளக்கம்: லவாய்சியர் என்பது 1771ல் மேரி அன்னே என்பவரை மணந்து கொண்டார். மேரி அன்னே வடிவமைத்த துல்லியமான அளவீட்டுக் கருவிகள் இல்லாமல் லவாய்சியர் ஆய்வுகளை மேற்கொண்ட இருக்க முடியாது.
27) பாய்லேவின் ஆய்வைத் துல்லியமாக செய்து பொருளை ஆக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது என நிரூபித்தவர் யார்?
A) மேனி அன்னே
B) நியூட்டன்
C) பாஸ்டியர்
D) லவாய்சியர்
விளக்கம்: இரும்புத் தகடை எரித்தபின் அதன் எடை அதிகமாக இருக்கிறது என்று பாய்லே கூறினார். ஆனால், அதனைத் துல்லியமாக ஆராய்ந்த லவாய்சியர், ஒரு வேதிவினையில் ஆரம்பத்தில் பொருள்களின் நிறையும், இறுதியில் பொருள்களின் நிறையும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறினார்.. எனவே பொருள்களை ஆக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது. வேதிவினை கொண்டு பொருள்களின் வேதியமைப்பை நாம் மாற்றலாம்.
28) நீரின் கனஅளவை கீழ்க்காணும் எந்த அலகால் அளக்க முடியாது?
A) லிட்டர்
B) மில்லி லிட்டர்
C) காலன்
D) டி.எப்.சி
விளக்கம்: நீரின் கனஅளவை லிட்டர் மற்றும் மில்லி லிட்டர் போன்ற அலகுகளால் அளக்கலாம். காலன் என்பதும் நீரின் கன அளவினை அளக்கக் கூடிய அலகாகும். ஒரு காலன் என்பது 3.785 லிட்டர் ஆகும். நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அளவினை TMC/Feet என்ற அலகால் அளக்கப்படுகின்றது. அணைக்கட்டுகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு கியூசக் (கன அடி/விநாடி) என்ற அலகால் அளக்கப்படுகிறது
29) நாம் சுவாசித்தலானது மெதுவாக எரியும் நிகழ்விற்குச் சமமானது என்று கூறியவர் யார்?
A) பாய்லே
B) லவாய்சியர்
C) வில்லியம் ஹார்வி
D) மேரி அன்னே
விளக்கம்: சுவாசிக்கும் போது ஆக்ஸிஜனை உள்ளிழுத்து கார்பன்டை ஆக்சைடை வெளிவிடுகிறோம். துருப்பிடிக்கும்போதும், பொருள்கள் எரியும்போதும் இதேபோன்ற ஆக்சிஜனேற்றம்தான் நிகழ்கிறது எனவே நமது சுவாசித்தலானது மெதுவாக எரியும் நிகழ்விற்குச் சமமானது என லவாய்சியர் கூறினார்.
30) பூமியில் உள்ள மொத்த நன்னீரில் பெருமளவு நீர் கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?
A) உறைந்த நீர்
B) மேற்பரப்பு நீர்
C) கடல் நீர்
D) நிலத்தடி நீர்
விளக்கம்: துருவங்களில் உள்ள பனிப்படிவுகள் மற்றும் பனியாறுகளில் நீர் உறைந்த நிலையில் காணப்படும். பூமியில் உள்ள மொத்த நன்னீரில் பெருமளவு, அதாவது 68.7 சதவீதம் உறைந்த நிலையில் காணப்படுகிறது
31) கடல் நீரில் கீழ்க்காணும் எந்த உப்புகள் கரைந்திருக்கவில்லை?
A) சோடியம் குளோரைடு
B) மெக்னீசியம் குளோரைடு
C) கால்சியம் குளோரைடு
D) பொட்டாசியம் குளோரைடு
விளக்கம்: கடல் நீரில் 3 சதவீதத்திற்கு மேற்பட்ட அளவில் உப்புகள் கரைந்துள்ளன. கடல்நீரானது அதிகளவு கரைபொருள்களைக் கொண்டுள்ளது. சோடியம் குளோரைடு, மெக்னீசியம் குளோரைடு மற்றும் கால்சியம் குளோரைடு போன்ற உப்புகள் கடல்நீரில் கரைந்துள்ளன.
32) நீரில் கலந்துள்ள உப்பின் அளவினைப் பொறுத்து, நீரானது எத்தனை வகையாகப் பிரிக்கப்படுகிறது?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: நீரில் கரைந்துள்ள உப்பின் அளவினைப் பொறுத்து, நீரானது மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை, 1. நன்னீர், 2. உவர்ப்பு நீர், 3. கடல் நீர்.
6th Science Lesson 15 Questions in Tamil
15] அன்றாட வாழ்வில் வேதியியல்
1) மனிதத் தசை மற்றும் நரம்பு மண்டலத்தை சீராக்குவது எது?
A) ஜிப்சம்
B) எப்சம்
C) பாரிஸ்சாந்து
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: எப்சம் என்பது மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட் எனும் உப்பாகும். மனிதத் தசை மற்றும் நரம்பு மண்டலத்தை சீராக்குவது எப்சம் ஆகும்.
2) கூற்று: மஞ்சள் தூளை வேதியாளர்கள் இயற்கை நிறங்காட்டி என்று அழைக்கின்றனர்.
காரணம்: ஒரு கரைசல் அமிலத்தன்மை வாய்ந்ததா, காரத்தன்மை வாய்ந்ததா என நம்மால் அடையாளம் காண மஞ்சள் உதவுகிறது.
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று, காரணம் இரண்டும் தவறு, காரணம் கூற்றை விளக்கவில்லை
விளக்கம்: வேதியியலாளர்கள் மஞ்சளை இயற்கை நிறங்காட்டி என்று அழைக்கின்றனர். இதன் மூலம் ஒரு கரைசல் அமிலத்தன்மை வாய்ந்ததா, காரத்தன்மை வாய்ந்ததா என நம்மால் அடையாளம் காண முடியும்.
3) கீழ்க்கண்டவற்றில் பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.
A) சூப்பர் பாஸ்பேட்
B) அம்மோனியம் சல்பேட்
C) பொட்டாசியம் நைட்ரேட்
D) தொழு உரம்
விளக்கம்: மேற்கண்டவற்றில் பொருந்தாதது தொழு உரம். இது இயற்கை உரம். மற்றவை செயற்கை உரங்கள்.
நுண்ணுயிரிகளால் தொகுக்கப்பட்ட தாவர மற்றும் விலங்கு கழிவுகள் அனைத்தும் இயற்கை அல்லது கரிம உரங்கள் எனப்படும். இந்த வகை உரங்கள் சிக்கனமானவை. எ.கா. மண்புழு உரம், தொழு உரம்.
மண்ணில் இயற்கையாகக் கிடைக்கும் கனிமப் பொருள்களைக் கொண்டு, தொழிற்சாலைகளில் வேதிமாற்றத்திற்குட்படுத்தி தயாரிக்கப்படும் உரங்கள் கனிம உரங்கள் எனப்படும். எ.கா. யூரியா, சூப்பர் பாஸ்பேட், அம்மோனியம் சல்பேட், பொட்டாசியம் நைட்ரேட்.
4) விவசாயிகளின் நண்பன் என்று அழைக்கப்படுவது எது?
A) எலி
B) வெட்டுக்கிளி
C) உரங்கள்
D) மண்புழு
விளக்கம்: மண்புழுக்கள் உயிரி கழிவுகள் அனைத்தையும் உணவாக உண்டு செரித்து வெளியேற்றுகின்றன. இத்தகைய மண், செழிப்பான தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது. இவ்வாறு மண்புழு விவசாயத்திற்கு பல்வேறு வகைகளில் உதவுவதால் இது உழவனின் நண்பன் எனவும் அழைக்கப்படுகிறது.
5) சிமெண்ட் தயாரிக்க கீழ்க்கண்ட எதைப் பயன்படுத்துவதில்லை?
A) சுண்ணாம்புக்கல்
B) களிமண்
C) ஜிப்சம்
D) எப்சம்
விளக்கம்: இயற்கையில் கிடைக்கக்கூடிய சுண்ணாம்புக்கல், களிமண் மற்றும் ஜிப்சம் ஆகிய தாது உப்புக்களைக் கலந்து அரைப்பதன் மூலம் சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது.
6) நாம் 50 கிலோகிராம் யூரியாவினைப் பயன்படுத்தும் போது, எத்தனை கிலோகிராம் நைட்ரஜன் மண்ணில் சேர்க்கப்படுகிறது?
A) 23
B) 27
C) 25
D) 20
விளக்கம்: நாம் 50 கிலோகிராம் யூரியாவினைப் பயன்படுத்தும் போது, 23 கிலோகிராம் (46 சதவீதம்) நைட்ரஜன் மண்ணில் சேர்க்கப்படுகிறது.
7) தாவரங்களின் முதன்மை ஊட்டச்சத்துகளில் பொருந்தாது எது?
A) நைட்ரஜன்
B) பாஸ்பரஸ்
C) பொட்டாசியம்
D) அம்மோனியா
விளக்கம்: தாவரங்களின் வளர்ச்சிக்கு பலவகையான ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன. அவற்றுள் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவை தாவரங்களுக்குத் தேவையான மூன்று முக்கிய ஊட்டச்சத்துக்கள் ஆகும். இவை முதன்மை ஊட்டசத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றன.
8) இயற்கை ஒட்டும்பொருள்——————இருந்து தயாரிக்கப்படுகின்றது?
A) புரதங்களில்
B) கொழுப்புகளில்
C) ஸ்டார்ச்சில்
D) வைட்டமின்களில்
விளக்கம்: ஒட்டும் பொருள்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவை இயற்கை மற்றும் செயற்கை ஒட்டும் பொருள்களாகும். நீரில் கரைக்கப்பட்ட ஸ்டார்ச் இயற்கை ஒட்டுப்பொருளுக்கு எடுத்துக்கட்டாகும்.
9) மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட் என்னும் உப்பு கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?
A) பாரிஸ்சாந்து
B) எப்சம்
C) ஜிப்சம்
D) சிமெண்ட்
விளக்கம்: எப்சம் என்பது மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட் எனும் உப்பாகும். இதன் மூலக்கூறு வாய்ப்பாடு MgSO4 7H2O.
10) வெங்காயம் நறுக்கும் போது நம்மில் பலருக்கும் கண்ளில் எரிச்சலுடன் கண்ணீர் வருவதற்கான காரணம், அதன் செல்களில் பொதிந்துள்ள—————–என்னும் வேதிப்பொருள் ஆகும்?
A) புரோப்பேன் தயால் S-ஆக்ஸைடு
B) பியூட்டேன் தயால் S-ஆக்ஸைடு
C) புரேப்பேன் தயால் P-ஆக்ஸைடு
D) பியூட்டேன் தயால் P-ஆக்ஸைடு
விளக்கம்: வெங்காயம் நறுக்கும் போது நம்மில் பலருக்கும் கண்களில் எரிச்சலுடன் கண்ணீர் வருவதற்கான காரணம், அதன் செல்களில் பொதிந்துள்ள புரோப்பேன் தயால் ளு-ஆக்ஸைடு என்னும் வேதிப்பொருள் ஆகும். இது எளிதில் ஆவியாகக் கூடியது. வெங்காயத்தை வெட்டும்போது, சில செல்கள் சிதைந்து இந்த வேதிப்பெர்ருள் வெளிப்படும். எளிதில் ஆவியாகி உடனே கண்களைச் சென்றடைந்து, எரிச்சலை ஏற்படுத்தி கண்ணீரைத் தூண்டும்.
11) சோப்பு மூலக்கூறுகளுக்கு எத்தனை முனைகள் உண்டு?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: சோப்பு மூலக்கூறுகளுக்கு இரண்டு மூலக்கூறுகள் உண்டு. அவை,
1. நீரை விரும்பும் பகுதி
2. நீரை வெறுக்கும் பகுதி
நீரை விரும்பும் பகுதி: நீர் மூலக்கூறுகளை நோக்கி செல்கிறது.
நீரை வெறுக்கும் பகுதி: அழுக்கு மற்றும் எண்ணெய்ப் பொருளை நோக்கிச் செல்கிறது.
12) தோல் நோய்களைத் தீர்க்கும் களிம்புகளில் பயன்படுவது எது?
A) ஜிப்சம்
B) எப்சம்
C) பாரிஸ்சாந்து
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: எப்சம் என்பது மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட் எனும் உப்பாகும். இது மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது தோல் நோய்களைத் தீர்க்கும் களிம்புகளில் பயன்படுகின்றது.
13) ஜிப்சத்தின் பயன்களில் பொருந்தாதது எது?
A) உரமாகப் பயன்படுகிறது
B) சிமெண்ட் தயாரிக்கப் பயன்படுகிறது
C) பாரீஸ் சாந்து தயாரிப்பில் பயன்படுகிறது
D) விவசாயத்தில் தாவரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கப் பயன்படுகிறது.
விளக்கம்: ஜிப்சத்தின் பயன்கள்:
1. உரமாகப் பயன்படுகிறது
2. சிமெண்ட் தயாரிக்கப் பயன்படுகிறது
3. பாரீஸ் சாந்து தயாரிப்பில் பயன்படுகிறது
விவசாயத்தில் தாவரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கப் பயன்படுவது – எப்சம்.
14) கூற்று: சிமெண்ட் பொதுவாக போர்ட்லேண்ட் என்று அழைக்கப்படுகிறது.
காரணம்: இதனைக் கண்டுபிடித்தவர் போர்ட்லேண்ட் ஆவார்
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று, காரணம் இரண்டும் தவறு, காரணம் கூற்றை விளக்கவில்லை
விளக்கம்: சிமெண்ட் பொதுவாக போர்ட்லேண்ட் சிமெண்ட் என்று அழைக்கப்படுகிறது. இது இங்கிலாந்து நாட்டிலுள்ள போர்ட்லேண்ட் என்னும் இடத்தில் கிடைக்கும் சுண்ணாம்புக் கல்லின் தன்மையை ஒத்திருந்ததால போர்ட்லேண்ட் சிமெண்ட் என்று அழைக்கப்படுகிறது.
15) சிமெண்டைக் கண்டுபிடித்தவர் யார்?
A) வில்லியம் போர்ட்லேண்ட்
B) வில்லியம் ஆஸ்பிடின்
C) வில்லியம் ஹார்வி
D) மேற்காணும் யாருமில்லை
விளக்கம்: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வில்லியம் ஆஸ்பிடின் என்பவர் 1824ஆம் ஆண்டு முதன்முதலில் சிமெண்டைக் கண்டுபிடித்தார்.
16) கீழ்க்கண்டவற்றில் எது ஜிப்சத்துடன் தொடர்புடையது?
A) கால்சியம் சல்பேட் ஹைட்ரேட்
B) மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட்
C) பொட்டாசியம் சல்பேட் ஹைட்ரேட்
D) அம்மோனியம் சல்பேட் ஹைட்ரேட்
விளக்கம்: கால்சியம் சல்பேட் ஹைட்ரேட் என்பது ஜிப்சத்துடன் தொடர்புடையது. ஜிப்சம் என்பது இயற்கையில் கிடைக்கக்கூடிய ஒரு மிருதுவான, நிறமற்ற கனிமப்பொருளாகும்.
17) பீனால் என்பது கீழக்காணும் எதனுடன் தொடர்புடையது?
A) கார்பாலிக் அமிலம்
B) ஆக்ஸாலிக் அமிலம்
C) போனிக் அமிலம்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: பீனால் என்பது கார்பாலிக் அமிலம் எனப்படும் கரிம அமிலமாகும். பீனாலின் மூலக்கூறு வாய்ப்பாடு, இது வீரியம் குறைந்த அமிலமாகும். இது ஆவியாகும் தன்மையுள்ள, வெண்மை நிறப் படிக திண்மமாகும்.
18) இயற்கை நிறங்காட்டி என்று அழைக்கப்படுவது எது?
A) லிட்மஸ் தாள்
B) மஞ்சள்
C) சோப்புத்தூள்
D) மேற்கண்ட எதுவுமில்லை
விளக்கம்: வேதியியலாளர்கள் மஞ்சளை இயற்கை நிறங்காட்டி என்று அழைக்கின்றனர். இதன் மூலம் ஒரு கரைசல் அமிலத்தன்மை வாய்ந்ததா, காரத்தன்மை வாய்ந்ததா என நம்மால் அடையாளம் காண முடியும்.
19) கூற்றுகளை ஆராய்க.
1. ஒரு புதிய பொருளை உருவாக்கும் நிகழ்வு – வேதியியல் மாற்றம்
2. பொருளின் வடிவம் மாறாமல் இருக்கும் நிகழ்வு – இயற்பியல் மாற்றம்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: வேதியியல் மாற்றம் என்பது ஒரு பொருள் புதிய பொருளை உருவாக்கும் நிகழ்வு ஆகும். இயற்பியல் மாற்றம் என்பது பொருள்களின் வடிவம், அளவு மற்றும் பருமனில் மட்டும் ஏற்படும் மாற்றமாகும்.
20) மருத்துவத் துறையில் மனிதனின் மன அழுத்தத்தைக் குறைக்கும் அமைதிப்படுத்திகளாக பயன்படுவது எது?
A) ஜிப்சம்
B) எப்சம்
C) பாரிஸ்சாந்து
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: எப்சம் என்பது மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட் எனும் உப்பாகும். இது மருத்துவத் துறையில் மனிதனில் மன அழுத்தத்தைக் குறைக்கும் அமைதிப்படுத்திகளாக பயன்படுகிறது.
21) எலும்பு முறிவுச் சிகிச்சையில் பயன்படுவது எது?
A) ஜிப்சம்
B) எப்சம்
C) பாரிஸ் சாந்து
D) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: பாரிஸ் சாந்து: எலும்பு முறிவுச் சிகிச்கையிலும், சிலைகள் மற்றும் பொம்மைகள் தயாரிப்பிலும் பயன்படுகின்றன.
ஜிப்சம் மற்றும் எப்சம்: மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
22) எப்சத்தின் பயன்களில் பொருந்தாதது எது?
A) மருத்துவத்துறையில், மனிதனின் மன அழுத்தத்தைக் குறைக்கும் அமைதிப்படுத்திகளாக பயன்படுகிறது.
B) மனிதத் தசை மற்றும் நரம்பு மண்டலத்தை சீராக்குகின்றது.
C) தோல் நோய்களைத் தீர்க்கும் களிம்புகளில் பயன்படுகின்றது.
D) சிமெண்ட் தயாரிக்கப் பயன்படுகிறது
விளக்கம்: எப்சத்தின் பயன்கள்:
மருத்துவத்துறையில், மனிதனின் மன அழுத்தத்தைக் குறைக்கும் அமைதிப்படுத்திகளாக பயன்படுகிறது.
மனிதத் தசை மற்றும் நரம்பு மண்டலத்தை சீராக்குகின்றது.
தோல் நோய்களைத் தீர்க்கும் களிம்புகளில் பயன்படுகின்றது.
விவசாயத்தில் தாவரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கப் பயன்படுகிறது.
ஜிப்சம்:
1. உரமாகப் பயன்படுகிறது.
2. சிமெண்ட் தயாரிக்கப் பயன்படுகிறது.
3. பாரீஸ் சாந்து தயாரிப்பில் பயன்படுகிறது.
23) பாரிஸ் சாந்துவின் வேதியில் பெயர் என்ன?
A) கால்சியம் சல்பேட் ஹைட்ரேட்
B) கால்சியம் சல்பேட் ஹெமி ஹைட்ரேட்
C) மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட்
D) பாஸ்பரஸ் சல்பேட் ஹைட்ரேட்
விளக்கம்: பாரிஸ் சாந்து ஒரு மிக நுண்ணிய வெள்ளைப் பொடியாகும். இதன் வேதியியல் பெயர் கால்சியம் சல்பேட் ஹெமி ஹைட்ரேட் ஆகும்.
24) பாரிஸ் சாந்து தயாரிக்கப் பயன்படும் ஜிப்சம் எந்த நாட்டின் தலைநகரான பாரிஸில் அதிகம் கிடைப்பதால் அப்பெயர் பெற்றது?
A) பிரிட்டன்
B) பிரான்ஸ்
C) நெதர்லாந்து
D) அமெரிக்கா
விளக்கம்: பாரிஸ் சாந்து தயாரிக்கப் பயன்படும் ஜிப்சம், பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் அதிகம் கிடைப்பதால், இது பாரிஸ் சாந்து என அழைக்கப்படுகிறது. ஜிப்சத்தினை வெப்பப்படுத்தும் பொழுது, பகுதியளவு நீர்ச்சத்து வெளியேறி பாரிஸ் சாந்து தயாரிக்கப்படுகிறது.
25) பீனால் கரைசலின் நிறம் என்ன?
A) சிவப்பு
B) இளஞ்சிவப்பு
C) வெள்ளை
D) நிறமற்றது
விளக்கம்: பீனால் என்பது கார்பாலிக் அமிலம் எனப்படும் கரிம அமிலமாகும். பீனாலின் கரைசல் நிறமற்றதாக இருப்பினும், மாசு காரணமாக இளம் சிவப்பு நிறக் கரைசலாக மாற்றமடைகிறது.
26) சோப்புகளின் முதன்மை மூலம்________ஆகும்?
A) புரதங்கள்
B) விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்
C) மண்
D) நுரை உருவாக்கி
விளக்கம்: தாவர எண்ணெய் அல்லது விலங்குக் கொழுப்பினை அடர் சோடியம் ஹைடிராக்சைடு கரைசலுடன் சேர்த்து குளிர வைக்கும்போது சோப்பு கிடைக்கிறது.
27) சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம்________ஆகும்.
A) விரைவாக கெட்டித்தன்மையடைய
B) கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த
C) கடினமாக்க
D) கலவையை உருவாக்க
விளக்கம்: சிமெண்டுடன் நீர் சேர்க்கும்பொழுது சில நிமிடங்களில் அது கெட்டியாகிறது. சிமெண்ட் தயாரிக்கும்போது இறுதியாக அத்துடன் சிறிதளவு ஜிப்சம் சேர்க்கப்படுகின்றது. ஜிப்சமானது சிமெண்டின் கெட்டிப்படும் நேரத்தை தாமதமாக்குகின்றது.
6th Science Lesson 16 Questions in Tamil
16] நமது சுற்றுச்சூழல்
1) மனிதர்கள், விலங்குகள் அல்லது தாவரங்கள் வாழக்கூடிய பகுதி மற்றும் அவற்றை சுற்றியுள்ள சூழலை நாம் எவ்வாறு குறிப்பிடலாம்?
A) சுற்றுச்சூழல்
B) உயிருள்ள காரணிகள்
C) உயிரற்ற காரணிகள்
D) செயற்கை காரணிகள்
விளக்கம்: மனிதர்கள் விலங்குகள் அல்லது தாவரங்கள் வாழக்கூடிய பகுதியையும் அவற்றை சுற்றியுள்ள சூழலையும் நாம் சுற்றுச்சூழல் என குறிப்பிடலாம், சுற்றுச்சூழலில் உயிருள்ள காரணியும் உயிரற்ற காரணியும் அடங்கும்.
2) மனிதர்களின் தலையீடுகளின்றி இயற்கையாக உருவான சூழ்நிலை மண்டலம் எவ்வாறு அழைக்கிறோம்?
A) இயற்கை சூழ்நிலை மண்டலம்
B) செயற்கை சூழ்நிலை மண்டலம்
C) உயிரற்ற காரணிகள்
D) செயற்கை காரணிகள்
விளக்கம்: மனிதனின் எவ்வித தலையீடுகளும் இன்றி இயற்கையாக உருவான சூழ்நிலை மண்டலம் இயற்கை சூழ்நிலை மண்டலம் என அழைக்கிறோம், இயற்கை சூழ்நிலை மண்டலத்திற்கு உதாரணமாக கடல், பாலைவனம் போன்றவற்றை குறிப்பிடலாம்.
3) சூழ்நிலை மண்டலங்கள் எத்தனை வகைப்படும்?
A) 2
B) 3
C) 4
D) 6
விளக்கம்: சூழ்நிலை மண்டலம் 2 வகைப்படும் அவையான இயற்கை சூழ்நிலை மண்டலம் மற்றும் செயற்கை சூழ்நிலை மண்டலம்
4) ஒரு சூழ்நிலை மண்டலத்தில் உண்ணுதல் மற்றும் உண்ணுதலுக்கான வரிசைமுறைகளை நாம் எவ்வாறு அழைக்கிறோம்?
A) உணவுசங்கிலி
B) உணவுவலை
C) சூழ்நிலை உயிரிகள்
D) சிதைப்பவைகள்
விளக்கம்: சூழ்நிலை மண்டலத்தில் உண்ணுதல் மற்றும் உண்ணுதலுக்கான வரிசை முறைகளின் அடிப்படையில் அவற்றை நாம் உணவுச்சங்கிலி என அழைக்கலாம். ஓர் உயிரினம் எவ்வாறு பிற உயிரினங்களை உண்பதன் மூலம் உணவையும், சத்துக்களையும் பெறுகிறது என்பதனை உணவுச்சங்கிலி விளக்குகிறது.
5) 1. தாவரங்கள் – சிங்கம்
2. தாவர உண்ணிகள் – பாக்டீரியா
3. ஊன் உண்ணிகள் – நெல்
4. அனைத்துண்ணிகள் – தவளை
5. சிதைப்பவைகள் – மனிதன்
A) 5 2 3 1 4
B) 2 1 4 3 5
C) 4 5 2 1 3
D) 3 4 1 5 2
விளக்கம்: தாவரங்கள் – நெல்
தாவர உண்ணிகள் – தவளை
ஊன் உண்ணிகள் – சிங்கம்
அனைத்துண்ணிகள் – மனிதன்
சிதைப்பவைகள் – பாக்டீரியா
6) சூழ்நிலை மண்டலத்தில் உயிரற்ற காரணியாக விளங்குவது எது?
A) பாக்டீரியா
B) தாவரங்கள்
C) விலங்குகள்
D) நீர்
விளக்கம்: சூழ்நிலை மண்டலத்தில் உயிரற்றகாரணியாக விளங்குவது நீர் ஆகும், மேலும் சூரியன், நீர், மண், தாதுப்பொருட்கள் மற்றும் காற்று போன்றவை உயிரற்ற காரணியாக செயல்படுகிறது.
7) 1. மனிதனின் தலையீடு இன்றி உருவாக்கப்படும் சூழ்நிலை மண்டலம் செயற்கை சூழ்நிலை மண்டலம் ஆகும்.
2. மிகச்சிறிய பரப்பில் மனிதனால் கட்டமைக்கப்படும் சூழ்நிலை மண்டலம் செயற்கையாக உருவாக்கப்பட்ட சூழ்நிலை மண்டலமாகும்.
3. பாலைவனம் ஒரு இயற்கை சூழ்நிலை மண்டலமாகும்.
4. செயற்கை சூழ்நிலை மண்டலங்கள் இயற்கையாக சூழ்நிலை மண்டலத்தை காட்டிலும் மிக எளிமையானவையாகும்.
A) 1 4 சரி
B) 2 3 4 சரி
C) 1 3 4 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: மனிதனின் தலையீடு இன்றி உருவாக்கப்படும் சூழ்நிலை மண்டலம் இயற்கை சூழ்நிலை மண்டலம் ஆகும்.
மிகச்சிறிய பரப்பில் மனிதனால் கட்டமைக்கப்படும் சூழ்நிலை மண்டலம் செயற்கையாக உருவாக்கப்பட்ட சூழ்நிலை மண்டலமாகும்.
பாலைவனம் ஒரு இயற்கை சூழ்நிலை மண்டலமாகும்.
செயற்கை சூழ்நிலை மண்டலங்கள் இயற்கையாக சூழ்நிலை மண்டலத்தை காட்டிலும் மிக எளிமையானவையாகும்.
8) தனக்கான உணவினை தானே உற்பத்தி செய்யும் உயிரினங்களை எவ்வாறு குறிப்பிடுகிறோம்?
A) உற்பத்தியாளர்கள்
B) நுகர்வோர்கள்
C) ஊன் உண்ணிகள்
D) சிதைப்பவைகள்
விளக்கம்: தனக்கான உணவினை தானே தயாரித்துக்கொள்ளும் உயிரினங்களை உற்பத்தியாளர்கள் என அழைக்கிறோம், உற்பத்தியாளர்களை நாம் தற்சார்பு ஊட்ட உயிரிகள் எனவும் அழைக்கலாம்.
9) உயிரினங்கள் தனக்கான உணவினை எவ்வாறு பெற்றுக்கொள்கின்றன என்பதன் அடிப்படையில் நாம் அவற்றை எத்தனையாக பிரிக்கலாம்?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: உயிரினங்கள் தனக்கான உணவினை எவ்வாறு பெற்றுக்கொள்கின்றன என்பதன் அடிப்படையில் அவற்றை நாம் 2 வகையாக பிரிக்கலாம், அவையாவன உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்கள்
10) தனக்கான உணவை தானே தயாரிக்க முடியாத உயிரினங்கள் பிற உயிரினங்களினை உணவாக உட்கொள்ளும் உயிரினங்களை எவ்வாறு அழைக்கலாம்?
A) உற்பத்தியாளர்கள்
B) ஊண் உண்ணிகள்
C) நுகர்வோர்கள்
D) சிதைப்பவைகள்
விளக்கம்: தனக்கான உணவினை தானே தயாரிக்க முடியாத உயிரினங்கள் பிற உயிரினங்களினை உணவாக உட்கொண்டு வாழும் உயிரினங்களை நுகர்வோர்கள் என அழைக்கலாம், நுகர்வோர்களின் பிரிவே தாவர உண்ணிகள், ஊண் உண்ணிகள் மற்றும் சிதைப்பவைகள்
11) கீழ்க்கண்டவற்றுள் எதன் தொடர்பினை உணவுச்சங்கலி விளக்குகிறது?
A) உற்பத்தியாளர்கள்
B) நுகர்வோர்கள்
C) சிதைப்பவைகள்
D) அனைத்தும்
விளக்கம்: உணவுச்சங்கிலியானது மேற்க்கண்ட அனைத்துமான உற்பத்தியாளர்கள், நுகர்வோர்கள் மற்றும் சிதைப்பவைகள் என அனைத்திற்கும் இடையேயான தொடர்பினை விளக்குகிறது.
12) 1. முதல் நிலை நுகர்வோர் – வெட்டுக்கிளி
2. இரண்டாம் நிலை நுகர்வோர் – குருவி
3. மூன்றாம் நிலை நுகர்வோர் – பருந்து
4. நான்காம் நிலை நுகர்வோர் – பாம்பு
A) 2 1 2 4
B) 1 2 4 3
C) 2 4 3 1
D) 4 2 3 1
விளக்கம்: முதல் நிலை நுகர்வோர் – வெட்டுக்கிளி
இரண்டாம் நிலை நுகர்வோர் – குருவி
மூன்றாம் நிலை நுகர்வோர் – பாம்பு
நான்காம் நிலை நுகர்வோர் – பருந்து
13) கழிவுகளை அதிகம் உருவாக்கும் சமுதாயத்திலிருந்து மீண்டெல உருவாக்கப்பட்ட கோட்பாடு?
A) குறைத்தல்
B) மறுசுழற்ச்சி செய்தல்
C) மீண்டும் பயன்படுத்துதல்
D) மேற்க்கண்ட அனைத்தும்
விளக்கம்: கழிவுகளை அதிகம் உருவாக்கும் சமுதாயத்திலிருந்து கழிவுகளை குறைக்க பயன்படுத்தப்படும் முக்கிய கோட்பாடாக இவை பின்பற்றப்படுகின்றன, இதனை நாம் 3R கோட்பாடு என குறிப்பிடலாம்.
14) இந்தியாவில் ஒவ்வொருவரும் உருவாக்கும் சராசரி கழிவுகள் நாளொன்றுக்கு எவ்வளவு?
A) 1 கிகி
B) 0.75 கிகி
C) 0.45 கிகி
D) 0.5 கிகி
விளக்கம்: இந்தியாவில் உருவாகும் கழிவுகள் சராசரியாக நாள் ஒன்றுக்கு 0.45 கிகி ஆகும். இது தனி நபர்க்கு குறைவான மதிப்பாகும் ஆனால் மக்கள் தொகை அதிகம் கொண்ட நமது நாட்டிற்கு இது மிகவும் ஆபத்தாகும்.
15) மாசுபாட்டின் வகைகள் யாவை?
A) 3
B) 4
C) 5
D) 6
விளக்கம்: மாசுபாடானது 4 வகைப்படும் அவையாவன நில மாசுபாடு, நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு மற்றும் ஒலி மாசுபாடு
16) உணவுச்சங்கிலியானது எதன் ஆற்றலிலிருந்து தொடங்குகிறது?
A) சூரிய ஒளி
B) தாவரங்கள்
C) விலங்குகள்
D) சிதைப்பவைகள்
விளக்கம்: உணவுச்சங்கிலியின் தொடக்க மூலம் சூரிய ஒளியாகும், சூரியஒளியிலிருந்து கிடைக்கும் ஆற்றலை தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் மூலம் உணவாக மாற்றுகிறது தாவரங்கள், எனவே சூரிய ஒளியிலிருந்து ஆற்றல் மட்டம் கடத்தப்படுகிறது.
17) உணவுச்சங்கிலியின் எந்த உணவூட்டத்தின் மட்டத்தினை நீர் சூழ்நிலை மண்டலத்திலும் காடுகளிலும் காணப்படும் உச்சபட்ச விலங்காகும்?
A) முதலை, நரி
B) திமிங்கலம், மான்
C) முதலை, புலி
D) ஆக்டோபஸ், கழுகு
விளக்கம்: உணவுச்சங்கிலியின் கடைசி நிலையான மட்டத்தில் நீர் சூழ்நிலையில் முதலையும், காடுகளில் புலிகளையும் உண்பவையாக எந்த ஒரு விலங்கும் காணப்படுவதில்லை.
18) நுண்ணுயிரிகள் மற்றும் இயற்கைக் காரணிகளால் எளிய முறையில் சிதைக்கமுடியாதவை நாம் எவ்வாறு அழைக்கிறோம்?
A) உயிரி கழிவுகள்
B) மட்கும் குப்பைகள்
C) மக்காத குப்பைகள்
D) சிதைப்பவைகள்
விளக்கம்: நுண்ணுயிரிகள் மற்றும் இயற்கை காரணிகளால் எளிய முறையில் சிதைக்க முடியாத கழிவுகளை நாம் மக்காத குப்பை என அழைக்கிறோம், மக்காத குப்பைக்கு உதாரணம் தொழிற்சாலை கழிவுகள்.
19) இந்தியா ஒவ்வொரு நாளும் எவ்வளவு கழிவுகளை உருவாக்குகிறது?
A) 450 மில்லியன் கிலோ
B) 500 மில்லியன் கிலோ
C) 532 மில்லியன் கிலோ
D) 537 மில்லியன் கிலோ
விளக்கம்: இந்தியாவானது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும், எனவே இதில் நாளொன்றுக்கு 532 மில்லியன் கிலோ கழிவுகள் உற்பத்தி செய்கிறது அதிகம் கழிவுகளை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்றாகும்.
20) தொழிற்சாலையில் உருவாகும் சில நச்சு வாயுக்கள் காற்றில் உள்ள மேகங்களுடன் கலந்து — மழையை தருகின்றது?
A) தூய மழை
B) அமில மழை
C) கார மழை
D) நச்சு மழை
விளக்கம்: தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் சில நச்சு வாயுக்களால் காற்றில் உள்ள மேகங்களில் கலந்து அமில மழையை தருகிறது, இந்த அமில மழையால் தாவரங்கள் விலங்குகள் மற்றும் சுற்றுப்புறத்திற்கும் தீங்கு விளைவிக்கிறது.
21) நன்னீர் சூழ்நிலை மண்டலம் எது என கண்டுபிடித்து எழுதுக?
A) குளம்
B) ஏரி
C) நதி
D) இவை அனைத்தும்
விளக்கம்: மேற்க்கண்ட அனைத்தும் நன்னீர் சூழ்நிலை மண்டலங்கள் ஆகும், இவை இயற்கையாகவும் செயற்கையாகவும் உருவாக்கக்கூடிய சூழ்நிலை மண்டலங்களாகவும் உள்ளது.
22) உயிரின சிதைவிற்கு உள்ளாகும் கழிவு எது?
A) கண்ணாடி
B) நெகிழி
C) சமையலறை கழிவுகள்
D) அலுமினியம்
விளக்கம்: மேற்க்கண்டவற்றில் சமையலறை கழிவுகள் மட்டுமே உயிரின சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகளாகும் மற்றவை உயிறின சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகளாகும்.
23) கலைக்கொல்லிகளின் பயன்பாடு _________ மாசுபாட்டை ஏற்படுத்தும்?
A) நில மாசுபாடு
B) காற்று மாசுபாடு
C) நீர் மாசுபாடு
D) A&C
விளக்கம்: கலைக்கொல்லிகள் பயன்படுத்துவதால் நிலம் மற்றும் நீர் மாசுபடுகின்றன, இவற்றின் பயன்பாடுகனை தேவைக்கேற்ப்ப குறைப்பதால் அதிக விளைச்சலும் குறைந்த மாசுபாடும் ஏற்படுகிறது.
24) சூழ்நிலை மண்டலத்தில் வெப்பநிலை, காற்று மற்றும் ஒளி போன்றவை _________ காரணிகளாக காணப்படுகிறது?
A) இயற்கை காரணிகள்
B) செயற்கை காரணிகள்
C) உற்பத்தி காரணிகள்
D) ஆற்றல் மாற்ற காரணிகள்
விளக்கம்: சூழ்நிலை மண்டலத்தில் வெப்பநிலை, காற்று மற்றும் ஒளி போன்றவை இயற்கை காரணிகளாக காணப்படுகிறது, இயற்கை காரணிகளில் கடல், மலை போன்றவையும் அடங்கும்.
25) 1. கடல் சூழ்நிலை மண்டலத்திற்கு பசுபிக் பெருங்கடல் ஒரு எடுத்துக்காட்டாகும்.
2. பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் சிதைப்பவைகள் என அழைக்கப்படுகின்றன.
3. மனித கழிவுகளும் விலங்கு கழிவுகளும் உயிரின சிதைவிற்கு உள்ளாகாத கழிவிற்கு எடுத்துக்காட்டாகும்.
4. அளவுக்கு அதிகமான களைக் கொல்லிகளை பயன்படுத்துவதால் ஒலி மாசு ஏற்படுகிறது.
5. திடக்கழிவு மேலாண்மையின் படி கழிவுகளை இரண்டு வகை பிரிவாக பிரிக்க வேண்டும்.
A) 1 2 5 சரி
B) 2 3 4 சரி
C) 1 3 4 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: கடல் சூழ்நிலை மண்டலத்திற்கு பசுபிக் பெருங்கடல் ஒரு எடுத்துக்காட்டாகும்.
பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் சிதைப்பவைகள் என அழைக்கப்படுகின்றன.
மனித கழிவுகளும் விலங்கு கழிவுகளும் உயிரின சிதைவிற்கு உள்ளாகும் கழிவிற்கு எடுத்துக்காட்டாகும்.
அளவுக்கு அதிகமான களைக் கொல்லிகளை பயன்படுத்துவதால் நில மாசு ஏற்படுகிறது.
திடக்கழிவு மேலாண்மையின் படி கழிவுகளை இரண்டு வகை பிரிவாக பிரிக்க வேண்டும்.
26) காற்று மாசுபாட்டிற்கான காரணங்கள் கீழ்க்கண்டவற்றில் எவை சரியானவை?
A) தொல்லுயிர் படிம எரிபொருள்களை எரிப்பதால்
B) நெகிழி பொருள்களை எரிப்பதால்
C) பெயின்ட் தொழிற்சாலையில் இருந்து வரும் நீராவி
D) மேற்க்கண்ட அனைத்தும்
விளக்கம்: காற்று மாசுபாட்டிற்கு மேற்கண்ட அனைத்து விதமாக கழிவுகளும் அடங்கும், இவை காற்றின் தரத்தினை குறைத்து காற்றின் தூய்மையை கெடுக்கிறது.
27) இரைச்சலினால் ஏற்படும் பாதிப்புகளில் எவை எவை?
A) இரத்த அழுத்தம்
B) மன அழுத்தம்
C) கேட்கும் திறன் பாதிப்பு
D) அனைத்தும்
விளக்கம்: இரைச்சலால் மனிதனில் இரத்த அழுத்தம், மன அழுத்தம் மற்றும் கேட்கும் திறன் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது, மேலும் பறவைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது, கடலுக்கடியில் உள்ள திமிங்கலமானது கப்பலின் இரைச்சல் காரணமாக தங்கள் பாதையில் திசை மாற்றம் அடைகிறது.
28) உற்பத்தியாளர்கள் எனப்படுபவை எவை?
A) தாவரங்கள்
B) விலங்குகள்
C) பறவைகள்
D) பாம்புகள்
விளக்கம்: தாவரங்களே உற்பத்தியாளர்கள் என அழைக்கப்படுகிறது, இவை ஆற்றலை சேமித்து வைத்து மற்ற உயிர்களுக்கு ஆற்றல் மாற்றத்தை கடத்துகிறது.
29) காற்றிலும், நீரிலும் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றங்களை நாம் இப்படியும் அழைக்கலாம்?
A) மறுசுழற்சி
B) மீண்டும் பயன்படுத்துதல்
C) மாசுபாடு
D) மாசுபாட்டை குறைத்தல்
விளக்கம்: காற்றிலும் நீரிலும் ஏற்படும் விரும்பத்தகாத நிகழ்வுகள் மாசுபாடு என அழைக்கிறோம். மாசுபாடு ஆனது 4 வகைப்படும் அவையான நில மாசுபாடு, காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு மற்றும் ஒலி மாசுபாடு.
30) தாவரங்களை உண்பவை ________ நிலை நுகர்வோர்கள் ஆகும்?
A) உற்பத்தியாளர்
B) முதல் நிலை நுகர்வோர்
C) இரண்டாம் நிலை நுகர்வோர்
D) சிதைப்பவை
விளக்கம்: தாவரங்களை உண்பவை முதல் நிலை நுகர்வோர்கள் ஆகும், இதில் தாவரங்களை உண்ணும் பூச்சிகள் இந்த நிலையில் அடங்கும்.
31) _________ என்ற நிகழ்வின் போது கழிவிலிருந்து புதிய பொருட்களை உருவாக்கலாம்?
A) பயன்பாட்டை குறைத்தல்
B) மறுசுழற்சி செய்தல்
C) மீண்டும் பயன்படுத்துதல்
D) உற்பத்தி செய்தல்
விளக்கம்: மறுசுழற்சி செய்தல் என்ற நிகழ்வின் போது கழிவிலிருந்து புதிய பொருட்களை உருவாக்கலாம், பயன்பாட்டை குறைத்தல், மீண்டும் பயன்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல் போன்றவை மாசுபாட்டை குறைக்கும் முக்கியமான கோட்பாடுகளாக கருதப்படுகிறது.
32) 1. உயிரின கூறுகள் – நில வாழ் சூழ்நிலை மண்டலம்
2. சாக்கடை கழிவுகள் – நில மாசுபாடு
3. செயற்கை உரங்கள் – காற்று மாசுபாடு
4. பாலைவனம் – நீர் மாசுபாடு
5. புகை – விலங்குகள்
A) 4 3 2 5 1
B) 5 4 2 1 3
C) 3 5 2 1 4
D) 1 5 2 3 4
விளக்கம்: உயிரின கூறுகள் – விலங்குகள்
சாக்கடை கழிவுகள் – நீர் மாசுபாடு
செயற்கை உரங்கள் – நில மாசுபாடு
பாலைவனம் – நில வாழ் சூழ்நிலை மண்டலம்
புகை – காற்று மாசுபாடு
6th Science Lesson 17 Questions in Tamil
17] அன்றாட வாழ்வில் தாவரங்கள்
1) மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் இடையேயான தொடர்பு மற்றும் தாவரங்களின் பொருளாதார பயன்பாடு ஆகியவற்றை படிக்கும் அறிவியல் பிரிவு ________ எனப்படும்?
A) பொருளாதார தாவரவியல்
B) தாவரவியல்
C) பூஞ்சையியல்
D) செயற்கை உரங்கள்
விளக்கம்: மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் இடையேயான தொடர்பு மற்றும் தாவரங்களின் பொருளாதார பயன்பாடு ஆகியவற்றை படிக்கும் அறிவியலின் ஒரு பிரிவு பொருளாதார தாவரவியல் என அழைக்கப்படுகிறது, இது அறிவியலின் தாவரங்களை பற்றிய படிப்பின் ஒரு பிரிவு ஆகும்.
2) உணவுத் தாவரங்களை நாம் எத்தனை பிரிவாக பிரிக்கலாம்?
A) 2
B) 3
C) 4
D) 6
விளக்கம்: உணவுத்தாவரங்களை நாம் 3 வகையாக பிரிக்கலாம் அவையானவ காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் போன்றன ஆகும், மேலும் காபி, தேனீர், சர்க்கரை மற்றும் எண்ணைய் வகைகள் போன்றவற்றிற்காகவும் தாவரங்கலிலிருந்து பெறுகிறோம்.
3) புல் வகை தாவரத்திலிருந்து விளைவிக்கப்படும் உணவுப்பொருள்கள் எது?
A) கரும்பு
B) பருப்பு
C) நெல்
D) உருளைக்கிழங்கு
விளக்கம்: புல் வகை தாவரத்திலிருந்து நாம் நெல், கோதுமை, கம்பு மற்றும் கேழ்வரகு போன்ற தானிய வகை பயிர்களை நாம் உற்பத்தி செய்கிறோம்.
4) உலக உணவு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
A) அக்டோபர் 16
B) நவம்பர் 16
C) செப்டம்பர் 15
D) ஆகஸ்ட் 15
விளக்கம்: உலக உணவு தினமாக நாம் அக்டோபர் 16 ம் நாளை கடைபிடிக்கிறோம், இது அனைவருக்கும் உணவுத்தேவையையும் மற்றும் சத்துணவு தேவையையும் வலியுறுத்தி இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.
5) இந்திய நறுமணப்பொருள் அல்லாதது எது?
A) ஜாதிக்காய்
B) ஏலக்காய்
C) மிளகு
D) சின்கோனா
விளக்கம்: மேற்க்கண்டவற்றில் சின்கோனா மட்டும் நறுமண பொருளாக பயன்படுத்துவது இல்லை இது மருத்துவ பொருளாக பயன்படுத்தப்படுகிறது, இந்திய நறுமணப்பொருளாக பயன்படுத்துவதாவது ஏலக்காய், மிளகு, கறிவேப்பிலை, வெந்தயம், பெருஞ்சீரகம், ஓமம், பிரியாணி இலை, சீரகம், கொத்தமல்லி விதைகள், மஞ்சள், கிராம்பு, இஞ்சி, ஜாதிக்காய் மற்றும் இலவங்கப்பட்டை.
6) தாவரங்களின் பொருளாதார மதிப்பு மற்றும் பயன்பாடு அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்?
A) 4
B) 5
C) 6
D) 7
விளக்கம்: தாவரங்கள் பொருளாதாரம் மிகவும் அடிப்படையான இன்றியமையாத ஒன்றாகும் இதனை நாம் 6 வகையாக பிரிக்கலாம், அவையாவன
- உணவுத்தாவரங்கள்,
- நருமண பொருள் தரும் தாவரங்கள்,
- மருத்துவ தாவரங்கள்,
- நார் தரும் தாவரங்கள்,
- மரக்கட்டை தரும் தாவரங்கள்,
- அலங்கார தாவரங்கள்.
7) 1. வேர் – நெல்லி
2. இலை – கருணைக்கிழங்கு
3. தண்டு – கேரட்
4. கனி – கருவேப்பிலை
A) 3 4 2 1
B) 3 4 1 2
C) 4 3 2 1
D) 1 4 2 3
விளக்கம்: வேர் – கேரட்
இலை – கருவேப்பிலை
தண்டு – கருணைக்கிழங்கு
கனி – நெல்லி
8) பருப்பு வகைகள் எக்குடும்பத்தை சார்ந்த தாவரங்களில் இருந்து பெறப்படுகிறது?
A) மா குடும்பம்
B) அவரை குடும்பம்
C) புல் வகை தாவர குடும்பம்
D) தண்டு வகை தாவர குடும்பம்
விளக்கம்: பருப்பு வகைகள் அவரை குடும்ப தாவரங்களில் இருந்து பெறப்படுகிறது, இதில் தாவரங்களின் உண்ணக்கூடிய விதைகளே பருப்பாக பயன்படுத்துகிறோம், பருப்புகள் கனி உறையினுள் வளர்கிறது. உதாரணம்: கொண்டைகடலை
9) 1. நெல்லி – மார்பு சளி
2. துளசி – குடல் புண்ணை சரிபடுத்த
3. சோற்றுக்கற்றாலை – நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த
4. வேம்பு – காயம் ஏற்பட்ட இடத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்க
5. மஞ்சள் – கிருமிநாசினியாக
A) 3 1 2 5 4
B) 2 5 4 1 3
C) 1 5 3 2 4
D) 3 4 2 5 1
விளக்கம்: நெல்லி – நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த
துளசி – மார்பு சளி
சோற்றுக்கற்றாலை – குடல் புண்ணை சரிபடுத்த
வேம்பு – கிருமிநாசினியாக
மஞ்சள் – காயம் ஏற்பட்ட இடத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்க
10) நார் தரும் தாவரங்களில் பயன்பாட்டின் அடிப்படையில் எத்தனை வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?
A) 2
B) 3
C) 4
D) 6
விளக்கம்: நார் தரும் தாவரங்களில் பயன்பாட்டின் அடிப்படையில் 3 வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது அவையாவன நெசவு நார்கள், கயிறு நார்கள் மற்றும் நிரப்பும் நார்கள்
11) தாவரங்களின் மகரந்த சேர்க்கைக்கு உதவும் பறவை எது?
A) வாத்து
B) கிளி
C) ஓசனிச்சிட்டு
D) புறா
விளக்கம்: தாவரங்களின் மகரந்த சேர்க்கைக்கு பறவைகள் பெறிதும் உதவுகின்றன அதில் குறிப்பாக ஓசனிச்சிட்டுக்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன.
12) _______ இலையின் சாறு இருமலையும் மார்பு சளியையும் குறைத்து குணமாக்குகிறது?
A) கற்றாழை
B) துளசி
C) வேம்பு
D) நெல்லி
விளக்கம்: துளசி இலையின் சாறானது இருமலையும் மார்பு சளியையும் குணமாக்கப்பயன்படுகிறது, இது சித்த மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
13) உலகளவில் கனிகள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A) 1
B) 2
C) 3
D) 4
விளக்கம்: உலகளவில் கனிகள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா 2 வது இடத்தை வகிக்கிறது.
14) நைட்ரஜனை நிலைநிறுத்தும் நுண்ணுயிரிகள் எவை?
A) நீலப்பசும் பாசி
B) சூடோமோனஸ் பாக்டீரியா
C) சால்மோனெல்லா
D) A&B
விளக்கம்: மண்ணில் நைட்ரஜன் சத்தை நிலை நிறுத்தி மண்ணின் தரத்தை உயர்த்தி விவசாயத்தில் பெறும் பங்கு வகிக்கின்றன.
15) இயற்கையான கொசு விரட்டியாக பயன்படுவது எது?
A) ஜாதிக்காய்
B) வேம்பு
C) இஞ்சி
D) மூங்கில்
விளக்கம்: தாவரங்களில் இயற்கையான கொசு விரட்டியாக பயன்படுவது வேம்பு ஆகும்.
16) இந்தியாவின் தேசிய மரம் எது?
A) வேம்பு
B) பலா மரம்
C) ஆலமரம்
D) மாமரம்
விளக்கம்: இந்தியாவின் தேசிய மரமாக ஆலமரத்தினை இந்திய அரசியலமைப்பு அங்கீகரித்துள்ளது, இது ஒற்றுமையை குறிக்கிறது.
17) நார் தரும் தாவரங்களில் கிடைக்கப்பெறும் தாவரங்களின் பாகங்களின் அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: நார் தரும் தாவரங்களில் கிடைக்கபெறும் தாவரங்களில் பாகங்களின் அடிப்படையில் 4 வகையாக பிரிக்கலாம், அவையாவன விதைகளின் மேற்ப்புறத் தூவி நார்கள், தண்டு அல்லது தண்டிலை நார்கள், இலை நார்கள் மற்றும் உரிமட்டை நார்கள்
18) முடக்குவாத நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படும் தாவரம்?
A) சிறுகீரை
B) பசலை கீரை
C) பாலக்கீரை
D) கொத்தமல்லி
விளக்கம்: முடக்குவாதம் என்பது அனைத்து வயதினருக்கும் வரக்கூடிய ஒரு வித நோயாகும் இதற்கு பாலக்கீரையிலிருந்து நானோ பார்மேசன் முறையின் மூலம் உருவாக்கியுள்ளனர்.
19) தாவரங்களின் பிற பயன்பாடுகளாக எத்தனை வகைபாடுகளை வகைப்படுத்தப்பட்டுள்ளன?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: தாவரங்களின் பிற பயன்பாடுகளாக 5 வகைபாடுகளை வகைப்படுத்தியுள்ளனர், அவையானவ மண் வளத்தை பாதுகாத்தல், மண் அரிப்பை தடுத்தல், உயிரி-எரிபொருள், ரப்பர் மற்றும் இயற்கை நெகிழிகள் மற்றும் வேப்பஎண்ணை பூசப்பட்ட யூரியா.
20) பின்வருவனவற்றில் எது வேர் அல்ல?
A) உருளைக்கிழங்கு
B) கேரட்
C) ஃடர்னிப்
D) முள்ளங்கி
விளக்கம்: மேலே குறிப்பிட்ட அனைத்து பொருள்களும் உணவினை வேரில் தயாரிக்கின்றன, ஆனால் உருளைக்கிழங்கு மட்டும் தண்டில் உணவினை சேமிக்கிறது எனவே உருளைக்கிழங்கு வேர் அல்ல.
21) பின்வருவனவற்றுள் எது வைட்டமின் சி குறைபாட்டை போக்குகிறது?
A) நெல்லி
B) துளசி
C) மஞ்சள்
D) சோற்றுக்கற்றாழை
விளக்கம்: நெல்லிக்கனியில் வைட்டமின் சி சத்து அதிகமாக காணப்படுகிறது மேலும் இது நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது.
22) 1. அழகிற்காக வளர்க்கப்படும் தாவரங்கள் மென் கட்டை என அழைக்கப்படுகிறது.
2. பட்டுப்புழுக்கள் மல்பெரி இலையை உணவாக உட்கொள்கிறது.
3. அலங்கார தாவரமாக காலிபிளவர் பயன்படுகிறது.
4. கோடைகாலத்திற்கு பருத்தி உடைகள் ஏற்றதன்று.
5. கரும்பு தாவரம் உயிரி எரிபொருளாக பயன்படுகிறது.
A) 1 4 5 சரி
B) 2 5 சரி
C) 1 3 5 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: அழகிற்காக வளர்க்கப்படும் தாவரங்கள் அலங்கார தாவரம் என அழைக்கப்படுகிறது.
பட்டுப்புழுக்கள் மல்பெரி இலையை உணவாக உட்கொள்கிறது.
அலங்கார தாவரமாக காலிபிளவர் பயன்படுத்தப்படுவதில்லை.
கோடைகாலத்திற்கு பருத்தி உடைகள் ஏற்றத்தக்கது.
கரும்பு தாவரம் உயிரி எரிபொருளாக பயன்படுகிறது.
23) 1. நார் தரும் தாவரங்கள் – கிருமி நாசினி
2. வன் கட்டை – நறுமணப்பொருள்
3. வேம்பு – சணல்
4. ஏலக்காய் – தானியம்
5. கம்பு – தேக்கு
A) 1 3 4 2 5
B) 2 5 4 1 3
C) 3 5 1 2 4
D) 4 2 5 1 3
விளக்கம்: நார் தரும் தாவரங்கள் – சணல்
வன் கட்டை – தேக்கு
வேம்பு – கிருமி நாசினி
ஏலக்காய் – நறுமணப்பொருள்
கம்பு – தானியம்
24) இந்தியாவில் சணல் உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் மாநிலம் எது?
A) அசாம்
B) மேற்குவங்கம்
C) ஆந்திரா
D) மும்பை
விளக்கம்: இந்தியாவில் சணல் உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் மாநிலமாக மேற்கு வங்கம் திகழ்கிறது, இது இந்தியாவின் சணல் உற்பத்தியில் 50 விழுக்காடு உற்பத்தி செய்கிறது.