12th Tamil Unit 1 Questions
Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.
6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.
First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.
Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 12th Tamil Unit 1 Questions With Answers Uploaded Below.
1) இளந்தமிழே என்ற கவிதையை எழுதியவர் யார்?
A) பாரதியார்
B) சிற்பி பாலசுப்பிரமணியம்
C) தி.சு.நடராஜன்
D) அய்யப்ப மகாதேவன்
விளக்கம்: இளந்தமிழே என்ற கவிதையை எழுதியவர் சிற்பி பாலசுப்பிரமணியம் ஆவார். இக்கவிதை நிலவுப்பூ என்னும் அவரது கவிதை நூலில் இருந்து தரப்பட்டுள்ளது.
2) சூரியோதயம் என்னும் இதழை நடத்தியவர் யார்?
A) பாரதிதாசன்
B) கண்ணதாசன்
C) பெரியார்
D) பாரதியார்
விளக்கம்: சூரியோதயம், கர்மயோகி என்ற இதழை நடத்தியவர் பாரதியார். இதில் துணையாசிரியராகப் பணியாற்றியவர் பரலி.சு.நெல்லையப்பர் ஆவார்.
3) உன்னை + அல்லால் என்னும் சொல் எந்த விதிப்படி உன்னையல்லால் என்று சேரும்?
A) இஈஐ வழி யவ்வும்
B) உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
C) உயிர் வரின் உக்குரல் மெய்விட்டோடும்
D) A மற்றும் B
விளக்கம்: உன்னையல்லால் – உன்னை + அல்லால்.
விதி: இஈஐ வழி யவ்வும் – உன்னை + ய் + அல்லால்
விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – உன்னையல்லால்.
4) கூற்றுகளை ஆராய்க (ந, ண, ன, ர, ற, ல, ள, ழ ஆகிய எழுத்துக்கள் பற்றிய கூற்றுகளில்)
1. நகரம் மட்டுமே சொல்லின் தொடக்கமாக வரும்.
2. றகர மெய் சொல்லின் இறுதியில் வராது
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: மேலுள்ள எட்டு எழுத்துக்களில் நகரம் மட்டுமே சொல்லின் தொடக்கமாக வரும். றகர மெய் சொல்லின் இறுதியில் வராது. மற்றவை சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் வரும்
5) முத்துமுத்தாய் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?
A) இரட்டைக் கிளவி
B) உவமைத்தொகை
C) உருவகம்
D) அடுக்குத்தொடர்
விளக்கம்: முத்துமுத்தாய் என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு – அடுக்குத்தொடர் ஆகும்.
அடுக்குத்தொடர்: சொற்கள் இரண்டுக்கும் மேற்பட்ட முறை வரும். பிரித்தால் பொருள் தரும்.
இரட்டைக் கிளவி: சொற்கள் இரண்டும் முறை மட்டுமே வரும். பிரித்தால் பொருள் தராது.
6) ஒளிப்பறவை என்ற கவிதை நூலை எழுதியவர் யார்?
A) பாரதியார்
B) சிற்பி பாலசுப்ரமணியம்
C) அய்யப்ப மகாதேவன்
D) பாரதிதாசன்
விளக்கம்: சிற்பி பாலசுப்ரமணியத்தின்,
கவிதை நூல்கள்:
1. ஒளிப்பறவை
2. சர்ப்பயாகம்
3. சூரிய நிழல்
4. ஒரு கிராமத்து நதி
5. பூஜ்யங்களின் சங்கிலி
உரைநடை நூல்கள்:
1. மலையாளக் கவிதை
2. அலையும் சுவடும்
7) கூற்றுகளை ஆராய்க.
1. ஞ், ந், வ் என்னும் எழுத்துகளில் முடியக்கூடிய சொற்கள் அரிதாக உள்ளன.
2. ய, ர, ழ ஒற்றுகள் மட்டுமே ஈரொற்றாய் வரும். மற்றவை அளப்பெடுத்தால் மட்டுமே வரும்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. ஞ், ந், வ் என்னும் எழுத்துகளில் முடியக்கூடிய சொற்கள் அரிதாக உள்ளன. உரிஞ், வெரிந், பொருந், தெவ்
2. ய, ர, ழ ஒற்றுகள் மட்டுமே ஈரொற்றாய் வரும். மற்றவை அளப்பெடுத்தால் மட்டுமே வரும். பாய்ச்சு, பார்க்கும், வாழ்க்கை.
8) அந்நில மருங்கின் அறமுதலாகிய
மும்முதற் பொருட்கும் உரிய என்ப – என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?
A) அகத்தியம்
B) நன்னூல்
C) தொல்காப்பியம்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: அந்நில மருங்கின் அறமுதலாகிய
மும்முதற் பொருட்கும் உரிய என்ப – தொல்காப்பியம்.
9) நெல்லைத்தென்றல் என்ற கவிதை நூலை எழுதியவர் யார்?
A) பாரதிதாசன்
B) பரலி.சு.நெல்லையப்பர்
C) வ.உ.சி
D) பாரதியார்
விளக்கம்: நெல்லைத் தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி – பரலி.சு.நெல்லையப்பர்
10) செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான்
செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம் – இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
A) நிலவுப்பூ
B) ஒரு கிராமத்து நதி
C) பூஜ்யங்களின் சங்கிலி
D) ஒளிப்பறவை
விளக்கம்: செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான்
செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம் என்ற வரிகள் இடம்பெற்ற நூல் இளந்தமிழே என்னும் கவிதை நூலாகும். இந்நூல் நிலவுப்பூ என்னும் கவிதைத் தொகுப்பிலிருந்து தரப்பட்டுள்ளது. இதனை எழுதியவர் சிற்பி பாலசுப்ரமணியம்.
11) ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ் என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்?
A) அகத்தியர்
B) பாரதியார்
C) பாரதிதாசன்
D) தண்டி
விளக்கம்: ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ் – தண்டியலங்காரம்.
இதனை இயற்றியவர் தண்டி ஆவார்
12) கூற்று: ப்ரியா, க்ரீடம் என்பது வடமொழி சொற்கள்
காரணம்: தமிழில் சொல்லின் தொடக்கமாக மெய்யெழுத்துக்கள் வருவதில்லை. அப்படி வரின் அது தமிழில்லை.
A) கூற்று தவறு, காரணம் சரி
B) கூற்று சரி, காரணம் தவறு
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
விளக்கம்: தமிழில் சொல்லின் தொடக்கமாக மெய்யெழுத்துக்கள் வருவதில்லை. வரின் தமிழில்லை.
க்ரீடம், ப்ரியா – வடமொழி
க்ளிஷே – ஆங்கிலம்
13) வம்சமணி தீபிகை என்னும் நூல் கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?
A) பாரதியார் வரலாறு
B) கவிகேசரி சாமி தீட்சிதர் வரலாறு
C) எட்டயபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு
D) இளசை மணி என்பவரின் வரலாறு
விளக்கம்: வம்சமணி தீபிகை என்பது எட்டயபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு ஆகும். இதனை கவிகேசரி சாமி தீட்சிதர் 1879ல் வெளியிட்டார். அப்பதிப்பைத் திருத்தி வெளியிட ஆசைகொண்ட பாரதி, ஆட்சி செய்த வெங்டேசுர எட்டப்பருக்கு 6.8.1919-இல் கடிதம் எழுதினார்.
14) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
A) Archive – புனைவு
B) Biography – வாழ்க்கை வரலாறு
C) Manuscript – கையெழுத்துப் பிரதி
D) Bibliography – நூல் நிரல்
விளக்கம்: Bibliography – வாழ்க்கை வரலாறு
Archive – காப்பகம்
Manuscript – கையெழுத்துப் பிரதி
Bibliography – நூல் நிரல்
15) தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப்
பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது – என்று கூறியவர் யார்?
A) காமராசர்
B) பாரதியார்
C) அண்ணா
D) பாரதிதாசன்
விளக்கம்: தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப்
பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது – பாரதியார்
16) மொழி சார்ந்த கவிதை கீழ்க்காணும் எதனோடு பிறக்கிறது?
A) இசை
B) இசைக்கருவி
C) சமிக்ஞை மற்றும் இசை
D) A மற்றும் B
விளக்கம்: எந்தத் தொன்மையான மொழியும் சமிக்ஞையிலிருந்தும் இசையிலிருந்தும்தான் தொடங்குகிறது. மொழி சார்ந்த கவிதையும் இசையோடும் இசைக்கருவியோடும்தான் பிறக்கிறது.
17) பூமி சாஸ்திரம் முதலான பாட நூல்களை ஆக்கியவர் யார்?
A) பாரதியார்
B) சிற்பி பாலசுப்பிரமணியம்
C) மாயூரம் வேதநாயகம்
D) ஆறுமுக நாவலர்
விளக்கம்: திருக்குறள் பரிமேலழகர் உரை, சூடாமணி நிகண்டு, நன்னூல் – சங்கர நமச்சிவாயர் விருத்தியுரை என்று பல நூல்களைப் பதிப்பித்தார். இலக்கண நூல்கள், பூமி சாஸ்திரம் முதலான பாடல் நூல்கள் ஆறுமுக நாவலரால் ஆக்கப்பட்டன.
18) தமிழ், தமிழ், தமிழ் – என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாக் கொள்க – என்று கூறியவர் யார்?
A) வாணிதாசன்
B) சிற்பி பாலசுப்பிரமணியம்
C) பாரதியார்
D) பாரதிதாசன்
விளக்கம்: உனக்கு ஹிந்தி, மராட்டி முதலிய வடநாட்டு பாஷைகள் தெரிந்திருந்து, அந்த பாஷைப் பத்திரிக்கைகள் என்ன அற்புதமான புதுமை பெற்றுள்ளன என்பதை நேரிடத் தெரிந்து கொள்ள முடியுமானால் – தமிழ்நாட்டிற்கு எத்தனை நன்மையுண்டாகும். தமிழ், தமிழ், தமிழ் – என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க – பாரதியார்
19) அஞ்ஞான்று எல்லி எழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம் பனைத்தே காலேற்றுக் காலேட்டப் புக்குழி – என்று கூறியவர் யார்?
A) ஆறுமுக நாவலர்
B) பரிதிமாற்கலைஞர்
C) பாரதியார்
D) மறைமலைஅடிகள்
விளக்கம்: அஞ்ஞான்று எல்லி எழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம் பனைத்தே காலேற்றுக் காலேட்டப் புக்குழி – ஆறுமுக நாவலர்.
வழக்கு ஒன்றில் சாட்சி அளிக்க நீதிமன்றத்திற்குச் சென்ற ஆறுமுக நாவலர் ஆங்கிலத்தில் சாட்சி சென்னார். ஆனால் நீதிபதி மொழிப்பெயர்ப்பாளர் தனக்கு இருப்பதால் தமிழிழேயே சாட்சி கூறுங்கள் என்று கூறியதால், செந்தமிழில் பேசினார் ஆறுமுகநாவலர். இதன் பொருள் ‘சூரியன் தோன்றுவதற்கு நான்கு நாழிகை முன்னர்க் கடற்கரை ஓரம் காற்று வாங்கச் சிறுநடைக்குப் புறப்பட்ட போது’என்பது ஆகும். இத்தகைய மொழித்திறன் கைவரப்பெற்றவர்தான் ஆறுமுக நாவலர்.
20) விம்முகின்ற என்ற சொல்லின் வேர்ச்சொல் என்ன?
A) வீ
B) விம்
C) விம்மு
D) விம்முதல்
விளக்கம்: விம்முகின்ற – விம்மு + கின்று + அ. இதில் விம்மு என்பது பகுதி ஆகும்.
21) கூற்றுகளை ஆராய்க.
1. ட, ற என்னும் எழுத்துக்கள் சொல்லின் முதலில் வராது.
2. மெல்லின எழுத்துக்கள் சொல்லின் தொடக்கமாக வராது.
3. தனிச்சொல்லின் இடையில் வல்லினத்துக்கு முன் அவ்வல்லின மெய் வரும்.
4. தனிச்சொல்லின் இடையில் வல்லினத்துக்கு முன் அவ்வல்லின இன மெய் வராது.
A) 1, 2, 4 சரி
B) 1, 2 மட்டும் சரி
C) 1, 2, 3 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. ட, ற என்னும் எழுத்துக்கள் சொல்லின் முதலில் வராது. டமாரம், றப்பர்.
2. மெல்லின எழுத்துக்கள் சொல்லின் தொடக்கமாக வராது
3. தனிச்சொல்லின் இடையில் வல்லினத்துக்கு முன் அவ்வல்லின மெய் வரும். தக்கை, பச்சை, பட்டம், பத்து, தப்பு, கற்று
4. தனிச்சொல்லின் இடையில் வல்லினத்துக்கு முன் அவ்வல்லின இன மெய் வரும். தங்கை, இஞ்சி, பண்டு, பந்து, பாம்பு, கன்று.
22) கூற்றுகளை ஆராய்க.
1. தமிழில் சொல்லின் தொடக்கமாக மெய்யெழுத்துகள் வருவதில்லை.
2. வல்லின மெய்யோடு சொல் முடியாது
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. தமிழில் சொல்லின் தொடக்கமாக மெய்யெழுத்துக்கள் வருவதில்லை. அப்படி வரின் தமிழில்லை. க்ரீடம், ப்ரியா – வடமொழி. 2. க்ளிஷே – ஆங்கிலம்
2. வல்லின மெய்யோடு சொல் முடியாது. அப்படி முடிந்தால் தமிழ்ச் சொல்லன்று. பார்க், பன்ச், பட், போத், டப் போன்றவை தமிழில்லை.
23) சர்ப்பயாகம் என்ற கவிதை நூலை எழுதியவர் யார்?
A) சிற்பி பாலசுப்ரமணியம்
B) நா.காமராசன்
C) சுரதா
D) பாரதியார்
விளக்கம்: சிற்பி பாலசுப்ரமணியத்தின்,
கவிதை நூல்கள்:
1. ஒளிப்பறவை
2. சர்ப்பயாகம்
3. சூரிய நிழல்
4. ஒரு கிராமத்து நதி
5. பூஜ்யங்களின் சங்கிலி
உரைநடை நூல்கள்:
1. மலையாளக் கவிதை
2. அலையும் சுவடும்
24) வானமெல்லாம் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
A) வான + மெல்லாம்
B) வானம் + எல்லாம்
C) வான் + எல்லாம்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: வானமெல்லாம் என்ற சொல்லை பிரித்து எழுதுக்கிடைப்பது வானம் + எல்லாம்.
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி வானமெல்லாம் எனக் கிடைக்கும்
25) ஆறுமுக நாவலருக்கு பொருந்தாதது எது?
A) தமிழ்நூல் பதிப்பு
B) உரைநடை ஆக்கம்
C) பாடசாலை நிறுவுதல்
D) நூல்கள் மொழிபெயர்ப்பு
விளக்கம்: ஆறுமுக நாவலர் தமிழ்நூல் பதிப்பு, உரைநடை ஆக்கம், பாடசாலை நிறுவுதல், அச்சுக்கூடம் நிறுவுதல், கண்டன நூல்கள் படைத்தல், சைவ சமயச் சொற்பொழிவு எனப் பன்முக ஆளுமை பெற்றவர்.
26) கவிதையெனும் மொழி என்ற நூலை எழுதியவர் யார்?
A) சிற்பி பாலசுப்பிரமணியம்
B) தி.சு.நடராசன்
C) பாரதியார்
D) அய்யப்ப மகாதேவன்
விளக்கம்: தி.சு.நடராசன் எழுதிய நூல்கள்:
1. கவிதையெனும் மொழி
2. தமிழ் அழகியல்
3. தமிழின் பண்பாட்டு வெளிகள்
4. திறனாய்வுக்கலை
27) சிற்பி பாலசுப்ரமணியத்திற்கு பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.
A) கவிஞர்
B) பதிப்பாசிரியர்
C) மொழிபெயர்ப்பாளர்
D) பேராசிரியர்
விளக்கம்: இளந்தமிழே என்ற கவிதை சிற்பி பாலசுப்ரமணியத்தின் நிலவுப்பூ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இவர் கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர்.
28) கூற்றுகளை ஆராய்க
1. எந்தத் தொன்மையான மொழியும் சமிஞ்கையிலிருந்தும் இசையிலிருந்தும் தான் தொடங்குகிறது.
2. மொழி சார்ந்த கவிதையும் இசையோடும் இசைக்கருவியோடும்தான் பிறக்கிறது.
3. இதனையே அந்த பனுவலின் ஒலிப்பின்னல் என்கிறோம்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) 2, 3 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. எந்தத் தொன்மையான மொழியும் சமிஞ்கையிலிருந்தும் இசையிலிருந்தும் தான் தொடங்குகிறது.
2. மொழி சார்ந்த கவிதையும் இசையோடும் இசைக்கருவியோடும்தான் பிறக்கிறது.
3. இதனையே அந்த பனுவலின் ஒலிப்பின்னல் என்கிறோம்.
29) ஆசிரிய நடைத்தே______ ஏனை
வெண்பா நடைத்தே______ – விடுபட்ட இடத்தை பூர்த்தி செய்க.
A) காஞ்சி, கலி
B) வஞ்சி, கலி
C) ஆசிரிய, வெண்பா
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: ஆசிரிய நடைத்தே வஞ்சி ஏனை
வெண்பா நடைத்தே கலி(செய் 107) – தொல்காப்பியம்.
30) பரலி.சு.நெல்லையப்பர் கீழ்க்காணும் எந்த இதழில் முதலில் துணையாசிரியராக இருந்து பின்னர் ஆசிரியராக பணியாற்றினார்?
A) சூரியோதயம்
B) கர்மயோகி
C) குயில்
D) தேசபக்தன்
விளக்கம்: பாரதி நடத்திய சூரியோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும், லோகோபகாரி, தேசபக்தன் ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் பிறகு ஆசிரியராகவும் பணியாற்றியவர் பரலி.சு.நெல்லையப்பர் ஆவார்.
31) சிற்பி பாலசுப்ரமணியம் கீழ்க்காணும் எதற்குப் பொருத்தமானவர்?
A) சாகித்திய அகாதெமியின் தலைவர்
B) சாகித்திய அகாதெமியின் செயற்குழு உறுப்பினர்
C) உலக தமிழ்ச்சங்கத்தின் தலைவர்
D) உலக தமிழ்ச்ச்சங்த்தின் செயற்குழு உறுப்பினர்
விளக்கம்: சிற்பி பாலசுப்ரமணியம் கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர். இவர் சாகித்ய அகாதெமியின் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.
32) புதிய செய்தி, புதிய புதிய யோசனை, புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் – தமிழில் ஏறிக்கொண்டே போக வேண்டும் – என்று கூறியவர் யார்?
A) பாரதிதாசன்
B) சுப்புரத்தின தாசன்
C) வாணிதாசன்
D) பாரதியார்
விளக்கம்: தமிழ், தமிழ், தமிழ் – என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க. ஆனால் புதிய செய்தி, புதிய புதிய யோசனை, புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் – தமிழில் ஏறிக்கொண்டே போக வேண்டும் – பாரதியார்.
33) இருவேறு பொருள்களுக்கிடையே ஒற்றுமையை முதலில் கூறிப் பின் வேறுபடுத்திக் காட்டுவது________அணி?
A) வேற்றுமை
B) பொருள் வேற்றுமை
C) வேற்றுமை வைப்பணி
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: இருவேறு பொருள்களுக்கிடையே ஒற்றுமையை முதலில் கூறிப் பின் வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும்.
34) தமிழ் அழகியல் என்ற நூலை எழுதியவர் யார்?
A) சிற்பி பாலசுப்பிரமணியம்
B) பாரதியார்
C) தி.சு.நடராசன்
D) அய்யப்பமகாதேவன்
விளக்கம்: தமிழ் அழகியல் என்ற நூலை எழுதியவர் தி.சு.நடராசன் ஆவார். திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
35) தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப்
பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது
அந்தத் தமிழ்ப் பள்ளிக்கூடங்களிலே நவீன
கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது – என்று எழுதியவர் யார்?
A) கண்ணதாசன்
B) சிற்பி பாலசுப்பிரமணியம்
C) கவிமணி
D) பாரதியார்
விளக்கம்: தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப்
பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது
அந்தத் தமிழ்ப் பள்ளிக்கூடங்களிலே நவீன
கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது – பாரதியார்
36) கூற்றுகளை ஆராய்க.
1. உயிரெழுத்துகள் 12. அவை குறில், நெடில் என்று இரண்டு வகைப்படும்.
2. மெய்யெழுத்துக்கள் 18. வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்று வகைப்படும்.
3. உயிர்மெய் எழுத்துக்கள் 216 (உயிர்மெய்க் குறில் 90, உயிர்மெய் நெடில் 126).
4. ஆய்தம் 1
A) 1, 2, 4 சரி
B) 2, 4 சரி
C) 1, 3, 4 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. உயிரெழுத்துகள் 12. குறில், நெடில் என்று இரண்டு வகைப்படும்.
2. மெய்யெழுத்துக்கள் 18. வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்று வகைப்படும்.
3. உயிர்மெய் எழுத்துக்கள் 216(உயிர்மெய்க் குறில் 90, உயிர்மெய் நெடில் 126).
4. ஆய்தம் 1
37) இலாத என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?
A) பெயரெச்சம்
B) ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
C) வினையெச்சம்
D) இடைக்குறை
விளக்கம்: இலாத – இடைக்குறை. இலாத என்பது இல்லாத என்ற பொருளை தருகிறது. இங்கு ல் என்ற எழுத்து வரவில்லை. எனவே இல்லாத என்பதன் இடைக்குறை ஆகும்
38) வானம + எல்லாம் என்ற சொல் கீழ்க்காணும் எந்த விதிப்படி வானமெல்லாம் என்று கிடைக்கும்?
A) உயிர் வரின் உக்குரல் மெய்விட்டோடும்
B) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
C) மகரஈற்றுப் புணர்ச்சி
D) A மற்றும் B
விளக்கம்: வானமெல்லாம் என்ற சொல்லை பிரித்து எழுதுக்கிடைப்பது வானம் + எல்லாம்.
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி வானமெல்லாம் எனக் கிடைக்கும்.
39) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க
A) தமிழ் அழகியல் – தி.சு.நடராசன்
B) நெல்லூர் அரிசி – டாக்டர் பொற்கோ
C) சுவரொட்டிகள் – ந.முத்துசாமி
D) காட்டுவாத்து – ந.பிச்சமூர்த்தி
விளக்கம்: தமிழ் அழகியல் – தி.சு.நடராசன்
நெல்லூர் அரிசி – அகிலன்
சுவரொட்டிகள் – ந.முத்துசாமி
காட்டுவாத்து – ந.பிச்சமூர்த்தி
40) சொற்சங்க மாகச்
சுவைமிகுந்த கவிகூட்டி
அற்புதங்க ளெல்லாம்
அமைத்த பெருமாட்டி – என்ற வரிகளை எழுதியவர் யார்?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) ந.காமராசன்
D) கண்ணதாசன்
விளக்கம்: முச்சங்கங் கூட்டி
முதுபுலவர் தமைக் கூட்டி
அச்சங்கத் துள்ளே
அளப்பரிய பொருள் கூட்டி
சொற்சங்க மாகச்
சுவைமிகுந்த கவிகூட்டி
அற்புதங்க ளெல்லாம்
அமைத்த பெருமாட்டி – கண்ணதாசன்
41) ஆறுமுக நாவலர் பதிப்பித்த நூல்களில் பொருந்தாதது எது?
A) திருக்குறள் பரிமேலழகர் உரை
B) சூடமணி நிகண்டு
C) நன்னூல் – சங்கர நமச்சிவாயர் விருத்தியுரை
D) வள்ளலாரின் திருவருட்பா
விளக்கம்: ஆறுமுக நாவலர் பதிப்பித்த நூல்கள்:
1. திருக்குறள் பரிமேலழகர் உரை
2. சூடாமணி நிகண்டு
3. நன்னூல் – சங்கர நமச்சிவாயவர் விருத்தியுரை
42) நிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக்கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களைக் கண்டு குடல் குலுங்கச் சிரி – என்று கூறியவர் யார்?
A) பாரதிதாசன்
B) பாரதியார்
C) ந.காமராசன்
D) கவிமணி
விளக்கம்: நிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக்கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களைக் கண்டு குடல் குலுங்கச் சிரி – பாரதியார்.
43) ஆறுமுக நாவலர் எங்கு பிறந்தார்?
A) யாழ்ப்பாணம்
B) திருநெல்வேலி
C) கொழும்பு
D) திருச்சி
விளக்கம்: வசனநடை கைவந்த வல்லாளர் எனப் புகழப்படும் ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். தமிழ், வடமொழி, ஆங்கிலம் எனும் மும்மொழிப் புலமை பெற்றவர்
44) சிற்பி பாலசுப்ரமணியன் எந்த நூலிற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்?
A) ஒளிப்பறவை
B) நிலவுப்பூ
C) ஒரு கிராமத்து நதி
D) பூஜ்யங்களின் சங்கிலி
விளக்கம்: சிற்பி பாலசுப்ரமணியன் ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூலிற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார். இவர் மொழிபெயர்ப்புக்காகவும் சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார்.
45) ஆறுமுக நாவலர் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. இலக்கண நூல்கள், பூமி சாஸ்திரம் முதலான பாட நூல்கள் அவரால் ஆக்கப்பட்டன.
2. புராண நூல்களை வசனமாக எழுதி அதனை அனைவரும் படிக்கும் எளிய வடிவாக மாற்றினர்
3. தமது இல்லத்தில் அச்சுக்கூடம் நிறுவிப் பல நூல்களை அச்சிட்டார்.
4. திருவாவடுதுறை ஆதினத்தார் இவருக்கு நாவலர் என்ற பட்டத்தினை வழங்கினார்.
5. பெர்சிவல் பாதிரியார் விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்க்கவும் இவர் உதவினார்
A) 1, 4, 5 சரி
B) 1, 2, 3 சரி
C) 1, 2, 5 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. இலக்கண நூல்கள், பூமி சாஸ்திரம் முதலான பாட நூல்கள் அவரால் ஆக்கப்பட்டன.
2. புராண நூல்களை வசனமாக எழுதி அதனை அனைவரும் படிக்கும் எளிய வடிவாக மாற்றினர்
3. தமது இல்லத்தில் அச்சுக்கூடம் நிறுவிப் பல நூல்களை அச்சிட்டார்.
4. திருவாவடுதுறை ஆதினத்தார் இவருக்கு நாவலர் என்ற பட்டத்தினை வழங்கினார்.
5. பெர்சிவல் பாதிரியார் விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்க்கவும் இவர் உதவினார்
46) ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – இவ்வரிகளில் ஓங்கல் என்று குறிப்பிடப்படுவது எது?
A) உயர்ந்த
B) மலை
C) அலை
D) கடல்
விளக்கம்: ஓங்கல் என்றால் மலை. ஓங்கலிடை என்றால் மலைகளுக்கு இடையே தோன்றி என்று பொருள்.
47) சொல் + துணை என்ற சொல்லை சேர்த்து எழுதுக.
A) சொல்துணை
B) சொற்றுணை
C) சொற்றுனை
D) சொல்லுணை
விளக்கம்: வேற்றுமைப் புணர்ச்சியில் வருமொழி தகரமாயின் லகரம் றகரமாக மாறுவதோடு, தகரமும் றகரமாக மாறும். சொல் + துணை – சொற்றுணை
48) ஆணும் பெண்ணும் ஓருபயிரின் இரண்டு தலைகள் என்றெழுது.
அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது – என்று குறிப்பிட்டவர் யார்?
A) பாரதியார்
B) ஸ்ரீ நெல்லையப்பர்
C) பாரதிதாசன்
D) வாணிதாசன்
விளக்கம்: ஆணும் பெண்ணும் ஓருபயிரின் இரண்டு தலைகள் என்றெழுது.
அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது என்று பாரதியார் ஸ்ரீநெல்லையப்பருக்கு தமது கடிதத்தின் வாயிலாக தெரிவிக்கிறார்.
49) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க
A) உன்னையல்லால் – உன்னை + அல்லால்
B) செந்தமிழே – செம்மை + தமிழே
C) வானமெல்லாம் – வான + மெல்லாம்
D) செம்பரிதி – செம்மை + பரிதி
விளக்கம்: உன்னையல்லால் – உன்னை + அல்லால்
செந்தமிழே – செம்மை + தமிழே
வானமெல்லாம் – வானம் + எல்லாம்
செம்பரிதி – செம்மை + பரிதி
50) எம்மருமைச் செந்தமிழே உன்னை யல்லால்
ஏற்றதுணை வேறுண்டோ? இயம்பி டாயே – என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?
A) ஒரு கிராமத்து நதி
B) ஒளிப்பறவை
C) சர்ப்பயாகம்
D) நிலவுப்பூ
விளக்கம்: எம்மருமைச் செந்தமிழே உன்னை யல்லால்
ஏற்றதுணை வேறுண்டோ? இயம்பி டாயே என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் நிலவுப்பூ என்னும் கவிதைத் தொகுப்பாகும். இதனை எழுதியவர் சிற்பி பாலசுப்பிரமணியம் ஆவார்.
51) முரசுப்பாட்டு என்ற நூலை பதிப்பித்தவர் யார்?
A) பாரதியார்
B) உ.வே.சா
C) பரலி.சு.நெல்லையப்பர்
D) பாரதிதாசன்
விளக்கம்: பாரதியின் கண்ணன் பாட்டு, நாட்டுப்பாட்டு, பாப்பாப்பாட்டு, முரசுப்பாட்டு ஆகியவற்றைப் பதிப்பித்தவர் பரலி.சு.நெல்லையப்பர் ஆவார்
52) சிற்பி பாலசுப்ரமணியம் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. சாகித்திய அகாதெமியின் செயற்குழு உறுப்பினர்.
2. பாரதியார் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர்.
3. கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர்.
4. அலையும் சுவடும் என்ற நூலிற்காக சாகித்திய அகாதெமி விருது பெறவில்லை
A) 1, 4 சரி
B) 2, 3 சரி
C) 1, 2, 3 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. சாகித்திய அகாதெமியின் செயற்குழு உறுப்பினர்.
2. பாரதியார் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர்.
3. கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர்.
4. அலையும் சுவடும் என்ற நூலிற்காக சாகித்திய அகாதெமி விருது பெறவில்லை
ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூலிற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
53) ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – இவ்வரிகளில் ஏங்கொலிநீர் என்ற சொல்லின் பொருள் என்ன?
A) நிலத்தால் சூழப்பட்ட
B) மக்களால் சூழப்பட்ட
C) கடலால் சூழப்பட்ட
D) நீரால் சூழப்பட்ட
விளக்கம்: ஏங்கொலிநீர் என்றால் கடலால் சூழப்பட்ட என்று பொருள். மக்களால் போற்றப்பட்டு, உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றி, கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை அகற்றுவது ஒன்று என்பது இப்பாடலடியின் பொருள் ஆகும்.
54) ஆறுமுக நாவலருக்கு பொருந்தாதது எது?
A) அச்சுக்கூடம் நிறுவுதல்
B) கண்டன நூல்கள் படைத்தல்
C) சைவ சமயச் சொற்பொழிவு
D) ஆங்கிலநூல் தமிழாக்கம்
விளக்கம்: ஆறுமுக நாவலர் தமிழ்நூல் பதிப்பு, உரைநடை ஆக்கம், பாடசாலை நிறுவுதல், அச்சுக்கூடம் நிறுவுதல், கண்டன நூல்கள் படைத்தல், சைவ சமயச் சொற்பொழிவு எனப் பன்முக ஆளுமை பெற்றவர்.
55) ஆய்த எழுத்து பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
2. தனிச்சொல்லாயின் மூவெழுத்தாக வரும்.
3. தனிக்குறிலை அடுத்தும் வரும்
A) 1, 2 சரி
B) 1, 3 சரி
C) 2, 3 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
2. தனிச்சொல்லாயின் மூவெழுத்தாக வரும்.
3. தனிக்குறிலை அடுத்தும் வரும்
56) காமராசர் பல்லைகழகம் எங்கு உள்ளது?
A) திருநெல்வேலி
B) விருதுநகர்
C) கோயம்புத்தூர்
D) மதுரை
விளக்கம்: காமராசர் பல்கலைக்கழகம் மதுரையில் உள்ளது. இங்கு தி.சு.நடராசன் தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
57) ந, ண, ன, ர, ற, ல, ள, ழ ஆகிய எழுத்துக்களில் எது சொல்லின் தொடக்கமாக வரும்?
A) ர
B) ற
C) ந
D) ல
விளக்கம்: மேலுள்ள எட்டு எழுத்துக்களில் நகரம் மட்டுமே சொல்லின் தொடக்கமாக வரும். றகர மெய் சொல்லின் இறுதியில் வராது. மற்றவை சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் வரும்.
58) வெங்கதிர் என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு என்ன?
A) வினைத்தொகை
B) அன்மொழித்தொகை
C) பண்புத்தொகை
D) வினையெச்சம்
விளக்கம்: வெங்கதிர் என்ற சொல்லை வெம்மை + கதிர் என்று பிரிக்கலாம். வெம்மை ஆன கதிர் என்று பொருள் தருகிறது. ஒரு சொல்லை பிரிக்கும்போது மை என்னும் விகுதி வருவதும், ஆன, ஆகிய போன்ற பண்புப்பெயர் விகுதி மறைந்து வந்தால் அது பண்புத்தொகை எனப்படும்.
59) நாட்டுப்பாட்டு, முரசுப்பாட்டு ஆகியவற்றைப் பதிப்பித்தவர் யார்?
A) பாரதியார்
B) பரலி.சு.நெல்லையப்பர்
C) பாரதிதாசன்
D) கண்ணதாசன்
விளக்கம்: கண்ணன் பாட்டு, நாட்டுப்பாட்டு, பாப்பாப்பாட்டு, முரசுப்பாட்டு – பாரதியார். மேற்காணும் நூலை பதிப்பித்தவர் பரலி.சு.நெல்லையப்பர் ஆவார்.
60) கூற்றுகளை ஆராய்க.(சிற்பி பாலசுப்ரமணியம்)
1. இவர் ஒரு கிராமத்து நதி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
2. இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. இவர் ஒரு கிராமத்து நதி என்னும் கவிதைக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
2. இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர்.
61) மூண்டுவரும் கவிதைவெறிக் குணவாய் எங்கள்
முத்தமிழே நீயுள்ளாய் முன்னம் ஓர்நாள் – என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) இளந்தமிழே
B) மலையாளக் கவிதை
C) அலையும் சுவடும்
D) சூரிய நிழல்
விளக்கம்: மூண்டுவரும் கவிதைவெறிக் குணவாய் எங்கள்
முத்தமிழே நீயுள்ளாய் முன்னம் ஓர்நாள் – என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் இளந்தமிழே என்னும் கவிதை நூலாகும். இக்கவிதை நூலை இயற்றியவர் சிற்பி பாலசுப்பிரமணியம் ஆவார்
62) ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – இவ்வரிகளில் ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் என்பதற்கு பொருத்தமானது எது?
A) உலகத்தின் புற இருளை அகற்றுவது
B) மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்குவது
C) A மற்றும் B
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் தண்டியலங்காரம் ஆகும். இதில் ஏங்கொலிநீர் என்றால் இருபொருள் தருமாறு பாடல் அமைக்கப்பட்டுள்ளது.
ஏங்கொலிநீர் – கடலால் சூழப்பட்ட
ஏங்கொலிநீர் – மக்களின் அறியாமை.
63) உயர்ந்தோர் என்ற சொல்லின் வேர்ச்சொல் என்ன?
A) உயர்ந்து
B) உயர்
C) உயர்வு
D) உயர்ந்த
விளக்கம்: உயர்ந்தோர் என்ற சொல்லின் வேர்ச்சொல்(பகுதி) – உயர்.
வேர்ச்சொல் பகுதி என்றும் அழைக்கப்படும்.
வேர்ச்சொல் என்பது அந்த சொல்லின் பொருளை உணர்த்த வேண்டும்.
கட்டளைச் சொல்லாக இருக்க வேண்டும்.
இங்கு உயர் என்பது உயர்வு என்ற பொருளை குறிப்பதோடு, கட்டளைச் சொல்லாகவும் அமைகிறது.
64) கூற்றுகளை ஆராய்க.
1. க், ச், த், ப் ஆகியவற்றின்பின் அவ்வெழுத்து வரிசைகளே வரும். பிற மெய்கள் வராது.
2. ட், ற் என்னும் மெய்களுக்குப் பிறகு அவ்வெழுத்து வரிசைகளும் க, ச, ப என்னும் வரிசைகளுமே வரும்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. க், ச், த், ப் ஆகியவற்றின்பின் அவ்வெழுத்து வரிசைகளே வரும். பிற மெய்கள் வராது. காக்கை, பச்சை, உப்பு.
2. ட், ற் என்னும் மெய்களுக்குப் பிறகு அவ்வெழுத்து வரிசைகளும் க, ச, ப என்னும் வரிசைகளுமே வரும். பாட்டு, வெட்கம், காட்சி, திட்பம், காற்று, கற்க, கற்சிலை, கற்பவை.
65) பூஜ்யங்களின் சங்கிலி என்ற கவிதை நூலை எழுதியவர் யார்?
A) பாரதியார்
B) ந.காமராசன்
C) சுரதா
D) மேற்காணும் யாருமில்லை
விளக்கம்: சிற்பி பாலசுப்ரமணியத்தின்,
கவிதை நூல்கள்:
1. ஒளிப்பறவை
2. சர்ப்பயாகம்
3. சூரிய நிழல்
4. ஒரு கிராமத்து நதி
5. பூஜ்யங்களின் சங்கிலி
உரைநடை நூல்கள்:
1. மலையாளக் கவிதை
2. அலையும் சுவடும்
66) தி.சு.நடராசன் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர்
2. இவர் தமிழ் அழகியல் என்ற நூலை எழுதியுள்ளார்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர்
2. இவர் தமிழ் அழகியல் என்ற நூலை எழுதியுள்ளார்
67) தமது இல்லத்தில் அச்சுச்கூடம் நிறுவிப் பல நூல்களை அச்சிட்டவர் யார்?
A) உ.வே.சா
B) பரிதிமாற்கலைஞர்
C) ஆறுமுக நாவலர்
D) வள்ளலார்
விளக்கம்: ஆறுமுக நாவலர் தமது இல்லத்தில் அச்சுக்கூடம் நிறுவிப் பல நூல்களை அச்சிட்டார். இவர் புராண நூல்களை வசனமான எழுதி அதனை அனைவரும் படிக்கும் எளிய வடிவாக மாற்றினார்.
68) நடைபெற்றியலும் என்றும் நடைநவின்றொழுகும் என்றும் சில சொற்றொடர்களை எந்த நூல் கையாண்டிருக்கிறது?
A) அகத்தியம்
B) நன்னூல்
C) திருக்குறள்
D) தொல்காப்பியம்
விளக்கம்: ‘நடைபெற்றியலும்’(கிளவியாக்கம், 26) என்றும், ‘நடைநவின்றொழுகும்’(செய் 135) என்றும் சில சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டிருக்கிறது.
69) ஆங்கவற்றுள் என்ற சொல்லை பிரித்து எழுதுக.
A) ஆங்க + அவற்றுள்
B) ஆ + அவற்றுள்
C) ஆங்கு + அவற்றுள்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: ஆங்கவற்றுள் – ஆங்கு + அவற்றுள்.
விதி: உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் – ஆங்க் + அவற்றுள்
விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – ஆங்கவற்றுள்
70) பல் + நூல் என்ற சொல்லை சேர்த்து எழுதுக.
A) பல்நூல்
B) பலநூல்
C) பன்னூல்
D) மேற்காணும் எதுமில்லை
விளக்கம்: வேற்றுமைப் புணர்ச்சியில் வருமொழி நகரமாயின் லகரம் னகரமாக மாறுவதோடு, நகரமும் னகரமாக மாறும். பல் + நூல் – பன்னூல்.
71) சிற்பி பாலசுப்ரமணியத்தின் கவிதைகள் எந்த மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை?
A) ஆங்கிலம்
B) கன்னடம்
C) தெலுங்கு
D) மராத்தி
விளக்கம்: சிற்பி பாலசுப்ரமணியத்தின் கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், மலையாளம், மராத்தி, இந்தி ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் மொழிபெயர்ப்புக்காகவும் சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார்.
72) நாம் வலிமை பெறுவதற்கு வழி என்று பாரதியார் எதை கூறுகிறார்?
A) நம்மிலும் மெலியாருக்கு இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதல்
B) நம்மிலும் வலியாருக்கு இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதல்
C) நமக்கு சமமானவர்களோடு நாம் மோதி வெற்றி பெறுதல்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: நெஞ்சம் இளகி விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும். வேறு வழியில்லை – பாரதியார்
73) கூற்றுகளை ஆராய்க.
1. வல்லின மெய்கள் ஈரொற்றாய் வரும்.
2. ட், ற் என்னும் மெய்களை அடுத்து மெய்கள் வருவதில்லை
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. வல்லின மெய்கள் ஈரொற்றாய் வாரா.
2. ட், ற் என்னும் மெய்களை அடுத்து மெய்கள் வருவதில்லை. காட்ச்சி, முயற்ச்சி என்றெழுதுவது பிழை.
74) அணி இலக்கணத்தைக் கூறும் சிறப்பான நூல்களுள் ஒன்று எது?
A) தண்டியலங்காரம்
B) மாறனலங்காரம்
C) குவலயானந்தம்
D) தொல்காப்பியம்
விளக்கம்: தண்டியலங்காரம் என்பது அணி இலக்கணத்தைக் கூறும் சிறப்பான நூல்களுள் ஒன்று. இந்நூலை இயற்றியவர் தண்டி ஆவார்.
75) தி.சு.நடராசன் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. மதுரை காமராசர் பல்கலைக்கழகம், போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.
2. கவிதையெனும் மொழி, திறனாய்வுக்கலை, தமிழ் அழகியல், தமிழின் பண்பாட்டு வெளிகள் உள்ளிட்ட நூல்களை இயற்றியுள்ளார்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. மதுரை காமராசர் பல்கலைக்கழகம், போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.
2. கவிதையெனும் மொழி, திறனாய்வுக்கலை, தமிழ் அழகியல், தமிழின் பண்பாட்டு வெளிகள் உள்ளிட்ட நூல்களை இயற்றியுள்ளார்.
76) அலையும் சுவடும் என்ற உரைநடை நூலை எழுதியவர் யார்?
A) பாரதியார்
B) வாணிதாசன்
C) ந.காமராசன்
D) சிற்பி பாலசுப்ரமணியம்
விளக்கம்: சிற்பி பாலசுப்ரமணியத்தின்,
கவிதை நூல்கள்:
1. ஒளிப்பறவை
2. சர்ப்பயாகம்
3. சூரிய நிழல்
4. ஒரு கிராமத்து நதி
5. பூஜ்யங்களின் சங்கிலி
உரைநடை நூல்கள்:
1. மலையாளக் கவிதை
2. அலையும் சுவடும்
77) தனி + ஆழி என்னும் சொல்லை கீழக்காணும் எந்த விதியைப் பயன்படுத்தி சேர்த்து எழுதலாம்?
A) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
B) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
C) தனிகுறில் முன் ஒற்றுவரின் இரட்டும்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: தனியாழி – தனி + ஆழி.
விதி: இ ஈ ஐ வழி யவ்வும் – தனி + ய் + ஆழி
விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – தனியாழி.
78) மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது?
A) திருநெல்வேலி
B) திருச்சி
C) கன்னியாகுமரி
D) சென்னை
விளக்கம்: மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திருநெல்வேலியில் உள்ளது. இங்கு தி.சு.நடராசன் தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
79) தனிச்சொல்லில் ஆய்த எழுத்து வரும்போது அது எத்தனை எழுத்து கொண்டதாக அமையும்?
A) 2
B) 4
C) 3
D) 5
விளக்கம்: ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும். தனிச்சொல்லாயின் மூவெழுத்தாகவும், தனிக்குறிலை அடுத்தும் வரும். அஃது, எஃகு, கஃசு.
80) ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ் என்ற வரிகளில் தமிழ் கீழ்க்காணும் எதனோடு ஒப்பிடப்பட்டுள்ளது?
A) சந்திரன்
B) பெண்
C) சூரியன்
D) மலை
விளக்கம்: இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் தண்டியலங்காரம் ஆகும். இவ்வரிகளில் சூரியன் மலைகளுக்கு இடையில் தோன்றி உலகத்தின் புற இருளை அகற்றுகிறது என்றும், தமிழ் பொதிகை மலையில் தோன்றி மக்களின் அக இருளை அகற்றுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வரிகளில் தமிழ் சூரியனோடு ஒப்பிடப்பட்டுள்ளது.
81) பாரதியின் கடிதங்கள் என்ற நூலை எழுதியவர் யார்?
A) டாக்டர் பொற்கோ
B) பாரதிதாசன்
C) ந.பிச்சமூர்த்தி
D) ரா.அ.பத்மநாபன்
விளக்கம்: பாரதியின் கடிதங்கள் என்ற நூலை எழுதியவர் ரா.அ.பத்மநாபன் ஆவார்.
82) Subscripition என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?
A) புதிப்பித்தல்
B) அங்கீகரித்தல்
C) உறுப்பினராதல்
D) உறுப்பினர் கட்டணம்
விளக்கம்: Subscripition என்பதன் தமிழாக்கம் உறுப்பினர் கட்டணம் என்பதாகும்.
83) வேற்றுமைப்புணர்ச்சியில் வருமொழி தகரமாயின் லகரம்_________________ஆக மாறும்?
A) ளகரமாக
B) றகரமாக
C) ணகரமாக
D) டகரமாக
விளக்கம்: வேற்றுமைப் புணர்ச்சியில் வருமொழி தகரமாயின் லகரம் றகரமாக மாறுவதோடு, தகரமும் றகரமாக மாறும். சொல் + துணை – சொற்றுணை.
84) சிற்பி பாலசுப்பிரமணியம் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. இவர் கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர்.
2. இவர் இயற்றிய இளந்தமிழே என்னும் கவிதை இவரின் ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூலிலிருந்து தரப்பட்டுள்ளது.
3. இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்துறைத் தலைவராகப் பணியாற்றியவர்.
4. மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்
A) 1, 3 சரி
B) 1, 3, 4 சரி
C) 3, 4 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. இவர் கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர்.
2. இவர் இயற்றிய இளந்தமிழே என்னும் கவிதை இவரின் நிலவுப்பூ என்னும் கவிதை நூலிலிருந்து தரப்பட்டுள்ளது.
3. இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்துறைத் தலைவராகப் பணியாற்றியவர்.
4. மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்
85) பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது – என்று பெண்ணியம் போற்றியவர் யார்?
A) பெரியார்
B) அண்ணா
C) பாரதியார்
D) மருதகாசி
விளக்கம்: பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது – பாரதியார்.
86) சூரிய நிழல் என்ற கவிதை நூலை எழுதியவர் யார்?
A) வாணிதாசன்
B) பாரதியார்
C) நடராஜன்
D) சிற்பி பாலசுப்ரமணியம்
விளக்கம்: சிற்பி பாலசுப்ரமணியத்தின்,
கவிதை நூல்கள்:
1. ஒளிப்பறவை
2. சர்ப்பயாகம்
3. சூரிய நிழல்
4. ஒரு கிராமத்து நதி
5. பூஜ்யங்களின் சங்கிலி
உரைநடை நூல்கள்:
1. மலையாளக் கவிதை
2. அலையும் சுவடும்
87) கூற்றுகளை ஆராய்க.
1. ய், ர், ல், ழ், ள் என்னும் எழுத்துக்களுக்குப் பின் வியங்கோள் வினைமுற்று அல்லது கள் விகுதி அல்லது வல்லினத்தில் தொடங்கும் சொற்கள் வரும்போது இயல்பாய் நிற்பதில்லை.
2. ணகர ஒற்றினை அடுத்து றகரமும் னகர ஒற்றினை அடுத்து டகரமும் வரும்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. ய், ர், ல், ழ், ள் என்னும் எழுத்துக்களுக்குப் பின் வியங்கோள் வினைமுற்று அல்லது கள் விகுதி அல்லது வல்லினத்தில் தொடங்கும் சொற்கள் வரும்போது இயல்பாய் நிற்கும். நாய்கள், தேய்க, தாய்சேய், ஊர்க, ஊர்கள், ஊர்சூழல், செல்க, கால்கள், செல்கணம், வாழ்க, வாழ்தல், தோள்கள்.
2. ணகர ஒற்றினை அடுத்து றகரமும் னகர ஒற்றினை அடுத்து டகரமும் வருவதில்லை. கண்டு என்று வரும். கன்டு என்று வருவதில்லை. மன்றம் என்று வரும் மண்றம் என்று வருவதில்லை.
88) உய்யும் வழி என்ற நூலை எழுதியவர் யார்?
A) வள்ளலார்
B) விவேகானந்தர்
C) இராமகிருஷ்ணர்
D) பரலி.சு.நெல்லையப்பர்
விளக்கம்: நெல்லைத் தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி – பரலி.சு.நெல்லையப்பர்
89) பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே – என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) தொல்காப்பியம்
B) திருக்குறள்
C) நன்னூல்
D) அகத்தியம்
விளக்கம்: பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே – நன்னூல்(பவணந்தி அடிகள்).
90) Fiction என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?
A) புனைவு
B) காப்பகம்
C) இணைத்தல்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: Fiction என்ற சொல்லின் தமிழாக்கம் புனைவு என்பதாகும்.
காப்பகம் – Archive
91) பா வகை ஆசிரியம் முதற்கொண்டு நான்கு என்று கூறும் நூல் எது?
A) தொல்காப்பியம்
B) அகத்தியம்
C) நன்னூல்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: பாவகைகளோடு அறவியல் கருத்துகளையும் இணைத்துச் சொல்லிவிடுகிறது தொல்காப்பியம்
பா வகைகள் ஆசிரியம் முதற்கொண்டு நான்கு என கூறும் நூல் தொல்காப்பியம் ஆகும். அவை, ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகும்.
92) கீழ்க்காண்பனவற்றுள் எந்த ஒற்றுகள் ஈரொற்றாய் வருவதில்லை?
A) ய
B) ர
C) ழ
D) க
விளக்கம்: ய, ர, ழ ஒற்றுகள் மட்டுமே ஈரொற்றாய் வரும். மற்றவை அளப்பெடுத்தால் மட்டுமே வரும். பாய்ச்சு, பார்க்கும், வாழ்க்கை.
93) காட்டுவாத்து என்று நூலை எழுதியவர் யார்?
A) டாக்டர் பொற்கோ
B) அகிலன்
C) ந.பிச்சமூர்த்தி
D) ரா.அ.பத்மநாபன்
விளக்கம்: காட்டுவாத்து என்ற நூலை எழுதியவர் ந.பிச்சமூர்த்தி ஆவார்
94) இருந்தாய் என்ற சொல்லின் வேர்ச்சொல் என்ன?
A) இருந்து
B) இரு
C) இருந்த
D) இருந்தாய்
விளக்கம்: இருந்தாய் – இரு + த்(ந்) + த் + ஆய். இதில் இரு என்பது பகுதியாகும்;. வேர்ச்சொல்லை பகுதி என்றும் கூறலாம்.
95) பல் + முகம் என்ற சொல்லை சேர்த்து எழுதுக.
A) பலமுகம்
B) பல்முகம்
C) பன்முகம்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: வேற்றுமைப்புணர்ச்சியில் ளகரத்தைத் தொடர்ந்து வல்லினம் வரின் ளகரம் டகரமாய்த் திரிவதுண்டு. பல் + முகம் – பன்முகம்.
96) விளங்கிய என்ற சொல்லின் விகுதி என்ன?
A) கி
B) இ
C) உ
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: விளங்கி – விளங்கு + இ
விளங்கு – பகுதி. இ – வினையெச்ச விகுதி
97) விம்மு கின்ற தோள்மீதில் முத்துமுத்தாய்
வீற்றிருக்கும், அவையெல்லாம் வியந்து பாட – என்ற வரிகளை எழுதியவர் யார்?
A) பாரதியார்
B) அய்யப்ப மாதவன்
C) நடராஜன்
D) சிற்பி பாலசுப்பிரமணியம்
விளக்கம்: விம்மு கின்ற தோள்மீதில் முத்துமுத்தாய்
வீற்றிருக்கும், அவையெல்லாம் வியந்து பாட என்ற பாடல் வரிகளை எழுதியவர் சிற்பி பாலசுப்பிரமணியம் ஆவார். இவ்வரிகள் இடம்பெற்ற நூல் இளந்தமிழே என்னும் கவிதை நூல்.
98) புராண நூல்களை வசனமாக எழுதி அதனை அனைவரும் படிக்கும் எளிய வடிவமாக மாற்றியவர் யார்?
A) குணங்குடி மஸ்தான் சாகிபு
B) மீனாட்சி சுந்தரனார்
C) மறைமலை அடிகள்
D) ஆறுமுக நாவலர்
விளக்கம்: புராண நூல்களை வசனமாக எழுத அதனை அனைவரும் படிக்கும் எளிய வடிமாக மாற்றியவர் ஆறுமுக நாவலர் ஆவார்.
99) கூற்றுகளை ஆராய்க.
1. பரலி.சு.நெல்லையப்பர் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்.
2. இவர் விடுதலைப்போராட்ட வீரர், கவிஞர், எழுத்தாளர், மொழிப்பெயர்ப்பாளர், இதழாளர், பதிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. பரலி.சு.நெல்லையப்பர் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்.
2. இவர் விடுதலைப்போராட்ட வீரர், கவிஞர், எழுத்தாளர், மொழிப்பெயர்ப்பாளர், இதழாளர், பதிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர்.
100) யார் ஆறுமுகனாருக்கு நாவலர் என்னும் பட்டத்தை வழங்கினார்?
A) மதுரை ஆதினத்தார்
B) யாழ்ப்பாணம் ஆதினத்தார்
C) கடலூர் ஆதினத்தார்
D) திருவாவடுதுறை ஆதினத்தார்
விளக்கம்: திருவாவடுதுறை ஆதினத்தார் ஆறுமுகனாருக்கு நாவலர் என்னும் பட்டத்தை வழங்கினார்.
101) வேற்றுமைப்புணர்ச்சியில் ளகரத்தைத் தொடர்ந்து வல்லினம் வரின் ளகரம் ____________ திரியும்.
A) ளகரமாக
B) றகரமாக
C) டகரமாக
D) னகரமாக
விளக்கம்: வேற்றுமைப்புணர்ச்சியில் ளகரத்தைத் தொடர்ந்து வல்லினம் வரின் ளகரம் டகரமாய்த் திரிவதுண்டு. பல் + முகம் – பன்முகம்.
102) பின்வருவனவற்றில் எது அகிலன் எழுதிய நூல் ஆகும்?
A) பாரதியின் கடிதங்கள்
B) இலக்கண உலகில் புதிய பார்வை
C) காட்டுவாத்து
D) நெல்லூர் அரிசி
விளக்கம்: பாரதியின் கடிதங்கள் – ரா.அ.பத்மநாபன்
இலக்கண உலகில் புதிய பார்வை – டாக்டர் பொற்கோ
காட்டுவாத்து – நா.பிச்சமூர்த்தி
நெல்லூர் அரிசி – அகிலன்
103) பாரதி வாழ்த்து என்ற கவிதை நூலை எழுதியவர் யார்?
A) பாரதிதாசன்
B) கண்ணதாசன்
C) சுப்புரத்தினதாசன்
D) பரலி.சு.நெல்லையப்பர்
விளக்கம்: நெல்லைத் தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி – பரலி.சு.நெல்லையப்பர்
104) மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு
மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே கூவி வா, வா – என்ற வரிகளை எழுதியவர் யார்?
A) சிற்பி பாலசுப்பிரமணியம்
B) பவணந்தி முனிவர்
C) ந.பிச்சமூர்த்தி
D) பாரதியார்
விளக்கம்: மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு
மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே கூவி வா, வா – சிற்பி பாலசுப்பிரமணியம்
105) ஆழி என்ற சொல்லின் பொருள் என்ன?
A) உலகம்
B) பெரிய
C) கடல்
D) சூரியன்
விளக்கம்: ஆழி என்றால் கடலைக் குறிக்கும். ஆழி என்றால் மோதிரம் என்ற பொருளும் உண்டு.
106) உனக்குள் சிறகுகள் தோன்றுக. பறந்து போ
பற பற – மேலே மேலே மேலே – என்று கூறியவர் யார்?
A) கவிமணி
B) மனோண்மனியம்
C) விவேகானந்தர்
D) பாரதியார்
விளக்கம்: உனக்குள் சிறகுகள் தோன்றுக. பறந்து போ
பற பற – மேலே மேலே மேலே – பாரதியார்.
107) வேற்றுமைப்புணர்ச்சியில் லகரத்தைத் தொடர்ந்து வல்லினம் வரின் லகரம் __________ திரியும்.
A) ளகரமாக
B) றகரமாக
C) ழகரமாக
D) டகரமாக
விளக்கம்: வேற்றுமைப்புணர்ச்சியில் லகரத்தைத் தொடர்ந்து வல்லினம் வரின் லகரம் றகரமாய்த் திரிவதுண்டு. கல் + சிலை – கற்சிலை. கடல் + கரை – கடற்கரை
108) ந, ண, ன, ர, ற, ல, ள, ழ ஆகிய எழுத்துக்களில் எது சொல்லின் இறுதியில் வராது?
A) ர
B) ற
C) ந
D) ல
விளக்கம்: மேலுள்ள எட்டு எழுத்துக்களில் நகரம் மட்டுமே சொல்லின் தொடக்கமாக வரும். றகர மெய் சொல்லின் இறுதியில் வராது. மற்றவை சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் வரும்
109) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.
A) செந்தமிழ்
B) செந்நிறம்
C) சிவந்து
D) செம்பரிதி
விளக்கம்: செந்தமிழ், செந்நிறம், செம்பரிதி – பண்புத்தொகைகள்.
சிவந்து – வினையெச்சம்
110) இலக்கண நூலார், உரையாசிரியர் பலரால் எடுத்தாளப்பட்ட பெருமை பெற்ற இலக்கண நூல் எது?
A) முத்துவீரியம்
B) இலக்கண விளக்கம்
C) தண்டியலங்காரம்
D) மாறனலங்காரம்
விளக்கம்: தண்டியலங்காரம், அணி இலக்கணத்தைக் கூறும் சிறப்பான நூல்களுள் ஒன்று. இதன் ஆசிரியர் தண்டி ஆவார். இந்நூல் காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல் ஆகும். இலக்கண நூலார், உரையாசிரியர்கள் பலரால் எடுத்தாளப்பட்ட பெருமை பெற்றது.
111) உன்னையல்லால் என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது?
A) உன்னை + அல்லால்
B) உன் + ஐ + அல்லால்
C) உன்னை + ய் + அல்லால்
D) உன்னை + யல்லால்
விளக்கம்: உன்னையல்லால் என்னும் சொல்லை பிரித்து எழுதக்கிடைப்பது உன்னை + அல்லால்.
112) தம்கைகள் அதனைப்போல் சிவந்து நோகத்
தாமுழைக்கும் தொழிலாளர் வியர்வை வெள்ளம்…….என்ற வரிகளை எழுதியவர் யார்?
A) பாரதியார்
B) சிற்பி பாலசுப்ரமணியம்
C) நா.காமராசன்
D) அய்யப்ப மாதவன்
விளக்கம்: தம்கைகள் அதனைப்போல் சிவந்து நோகத்
தாமுழைக்கும் தொழிலாளர் வியர்வை வெள்ளம் – சிற்பி பாலசுப்ரமணியம்.
113) உயர்ந்தோர் என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு என்ன?
A) வினைமுற்று
B) உருவகம்
C) விணையாலணையும் பெயர்
D) குறிப்பு வினைமுற்று
விளக்கம்: உயர்ந்தோர் – விணையாலணையும் பெயர். இங்கு உயர்வு என்ற பொருளை குறிக்காமல் அது சாந்தோரைக் குறிக்கிறது. இவ்வாறு ஒரு பொருள் தன்னை குறிக்காமல் அது சார்ந்துள்ளோரைக் குறிப்பது விணையாலணையும் பெயர் எனப்படும்.
114 திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?
A) சிற்பி பாலசுப்பிரமணியம்
B) வாணிதாசன்
C) தி.சு.நடராசன்
D) அய்யப்ப மகாதேவன்
விளக்கம்: தமிழ் அழகியல் என்ற நூலை எழுதியவர் தி.சு.நடராசன் ஆவார். திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
115) ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – இவ்வரிகளில் ஓங்கல் என்ற சொல் பின்வரும் எதற்குப் பொருத்தமானது?
A) மேருமலை
B) விந்தியமலை
C) பொதிகை மலை
D) இமயமலை
விளக்கம்: ஓங்கல் என்றால் மலை என்று பொருள். இவ்வரிகளில் ஓங்கல் என்றால் பொதிகை மலையைக் குறிக்கிறது. இவ்வரிகள் இடம்பெற்ற நூல் தண்டியலங்காரம் ஆகும். இதன் ஆசிரியர் தண்டி ஆவார்.
116) தவறான ஒன்றை தெரிவு செய்க.
A) பாரதியின் கடிதங்கள் – ரா.அ.பத்மநாபன்
B) இலக்கண உலகில் புதிய பார்வை – டாக்டர் பொற்கோ
C) காட்டுவாத்து – ந.முத்துசாமி
D) நெல்லூர் அரிசி – அகிலன்
விளக்கம்: பாரதியின் கடிதங்கள் – ரா.அ.பத்மநாபன்
இலக்கண உலகில் புதிய பார்வை – டாக்டர் பொற்கோ
காட்டுவாத்து – ந.பிச்சமூர்த்தி
நெல்லூர் அரிசி – அகிலன்
117) Archive என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?
A) புனைவு
B) காப்பகம்
C) படிவம்
D) நூல் நிரல்
விளக்கம்: Archive – காப்பகம்
Fiction – புனைவு
Bibliography – நூல் நிரல்.
118) சிற்பி பாலசுப்பிரமணியம் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. இவர் சூரிய நிழல், சர்ப்பயாகம், ஒளிப்பறவை, ஒரு கிராமத்து நதி, பூஜ்யங்களின் சங்கிலி முதலிய உரைநடை நூல்களை எழுதியுள்ளார்.
2. மலையாளக் கவிதை, அலையும் சுவடும் உள்ளிட்ட கவிதை நூல்களை எழுதியுள்ளார்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. இவர் சூரிய நிழல், சர்ப்பயாகம், ஒளிப்பறவை, ஒரு கிராமத்து நதி, பூஜ்யங்களின் சங்கிலி முதலிய கவிதை நூல்களை எழுதியுள்ளார்.
2. மலையாளக் கவிதை, அலையும் சுவடும் உள்ளிட்ட உரைநடை நூல்களை எழுதியுள்ளார்.
119) தமிழின் பண்பாட்டு வெளிகள் என்ற நூலை எழுதியவர் யார்?
A) அய்யப்ப மகாதேவன்
B) சிற்பி பாலசுப்பிரமணியம்
C) பாரதியார்
D) தி.சு.நடராசன்
விளக்கம்: தி.சு.நடராசன் எழுதிய நூல்கள்:
1. கவிதையெனும் மொழி
2. தமிழ் அழகியல்
3. தமிழின் பண்பாட்டு வெளிகள்
4. திறனாய்வுக்கலை
120) கூற்றுகளை ஆராய்க.
1. தமிழில் சொல்லின் தொடக்கமாக மெய்யெழுத்துகள் வருவதில்லை.
2. வல்லின மெய்யோடு சொல் முடியாது
3. வல்லின மெய்கள் ஈரொற்றாய் வராது
4. ட், ற் என்னும் மெய்களை அடுத்து மெய்கள் வருவதில்லை
A) 4 மட்டும் தவறு
B) 1, 2 சரி
C) 1, 2, 4 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. தமிழில் சொல்லின் தொடக்கமாக மெய்யெழுத்துகள் வருவதில்லை. வரின் தமிழில்லை. க்ரீடம், ப்ரியா – வடமொழி. க்ளிஷே – ஆங்கிலம்
2. வல்லின மெய்யோடு சொல் முடியாது. அப்படி முடிந்தால் தமிழ்ச் சொல்லன்று. பார்க், பன்ச், பட், போத், டப் போன்றவை தமிழில்லை
3. வல்லின மெய்கள் ஈரொற்றாய் வராது.
4. ட், ற் என்னும் மெய்களை அடுத்து மெய்கள் வருவதில்லை. காட்ச்சி, முயற்ச்சி.
121) கூற்று: இயக்கு, ஓட்டு, அனுப்பு, பெறு முதலாவை ந் என்பதைப் பெற்று வரும்.
காரணம்: இச்சொற்கள் வினைச்சொற்கள்
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
விளக்கம்: இயக்குநர் என்பதே சரி. இயக்குனர் என்று எழுதுவது தவறு. இயக்கு, ஓட்டு, அனுப்பு, பெறு (இச்சொற்கள் வினைச்சொற்கள்) பெயரிடை நிலையான ந் என்பதைப் பெற்று(ந் + அர் – நர்), ஓட்டுநர், அனுப்புநர், பெறுநர் என்று பெயர்ச்சொற்களாகின்றன.
122) இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்-பிராம்மி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பாறை மாங்குளம் என்ற இடத்தில் உள்ளது. இவ்விடம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
A) மதுரை
B) திருநெல்வேலி
C) சிவகங்கை
D) இராமநாதபுரம்
விளக்கம்: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்-பிராம்மி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பாறை மாங்குளம் என்ற இடத்தில் உள்ளது. இவ்விடம் மதுரை மாவட்ட்தில் உள்ளது
123) ஆறுமுக நாவலர் பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க
A) வசனநடை கைவந்த வல்லாளர் என்று அழைக்கப்படுகிறார்.
B) தமிழ், வடமொழி, கன்னடம் ஆகிய மொழிகளை கற்றவர்
C) தமிழ்நூல் பதிப்பு, உரைநடை ஆக்கம், பாடசாலை நிறுவுதல், அச்சுக்கூடம் நிறுவுதல், கண்டன நூல்கள் படைத்தல், சைவ சமயச் சொற்பொழிவு எனப் பன்முக ஆளுமை பெற்றவர்.
D) திருக்குறளின் பரிமேலழகர் உரை, சூடாமணி நிகண்டு, நன்னூல் – சங்கர நமச்சிவாயர் விருத்தியுரை என்று பல நூல்களை பதிப்பித்தார்.
விளக்கம்: தமிழ், வடமொழி, ஆங்கிலம் என மும்மொழிப் புலமை பெற்றவர்.
124) Manuscript என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?
A) நூல் நிரல்
B) கையெழுத்துப் பிரதி
C) வாழ்க்கை வரலாறு
D) காப்பகம்
விளக்கம்: Biography – வாழ்க்கை வரலாறு
Archive – காப்பகம்
Manuscript – கையெழுத்துப் பிரதி
Biobliography – நூல் நிரல்
125) கிடை என்னும் குறுநாவலை எழுதியவர் யார்?
A) நா.காமராசன்
B) கி.ராஜநாராயணன்
C) ப.பரந்தாமன்
D) ராஜம் கிருஷ்ணன்
விளக்கம்: இன்றைய இலக்கியத்தில், கி.ராஜநாராயணன், ‘கிடை’ எனும் குறுநாவலில் ஆடுகளின் அடையாளங்களைப் பல பெயர்கள் சொல்லி அழைக்கிறார். சொல்வளம், ஒரு பண்பாட்டின் அடையாளமாகவும் திகழ்கிறது.
126) ஆங்கு + அவற்றுள் என்னும் சொல்லை கீழ்க்காணும் எந்த விதியைப் பயன்படுத்தி சேர்த்து எழுதலாம்?
A) உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்
B) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
C) முன்னின்ற மெய்திரிதல்
D) A மற்றும் B
விளக்கம்: ஆங்கவற்றுள் – ஆங்கு + அவற்றுள்.
விதி: உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் – ஆங்க் + அவற்றுள்
விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – ஆங்கவற்றுள்
127) பாரதியார் யாரை தம் தம்பி என்று அன்புடன் அழைத்தார்?
A) பாரதிதாசன்
B) வாணிதாசன்
C) சுப்புரத்தினதாசன்
D) பரலி.சு.நெல்லையப்பர்
விளக்கம்: பாரதியாரைவிட 7 ஆண்டுகள் இளையவரான பரலி.சு.நெல்லையப்பரைப் பாரதி தன்னுடைய அருமைத் தம்பியாகவே கருதி அன்புகாட்டி வந்தார். பாரதியின் கடிதங்கள் மேலும் அவரை நன்றாகப் புரிந்துகொள்ளத் துணைபுரிகின்றன.
128) வெம்மை + கதிர் என்ற சொல்லை எந்த பண்புப்பெயர் விதியை பயன்படுத்தி சேர்த்து எழுதலாம்?
A) அடியகரம் ஐ ஆதல்
B) முன்னின்ற மெய் திரிதல்
C) தன்னொற்றிரட்டல்
D) இனமிகல்
விளக்கம்: வெங்கதிர் – வெம்மை + கதிர்
விதி: ஈறு போதல் – வெம் + கதிர்.
விதி: முன்னின்ற மெய் திரிதல் – வெங்கதிர்.
129) தண்டியலங்காரம் எத்தனை பிரிவுகளை உடையது?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: தண்டியலங்காரம் மூன்று பிரிவுகளை உடையது. அவை,
1. பொதுவியல்
2. பொருளணியியல்
3. சொல்லணியியல்
130) பொருத்தாத ஒன்றை தெரிவு செய்க.
A) பூஜ்யங்களின் சங்கிலி
B) ஒளிப்பறவை
C) சர்ப்பயாகம்
D) அலையும் சுவடும்
விளக்கம்: மேற்காணும் அனைத்தும் சிற்பி பாலசுப்ரமணியம் எழுதியவை.
கவிதை நூல்கள்:
1. ஒளிப்பறவை
2. சர்ப்பயாகம்
3. சூரிய நிழல்
4. ஒரு கிராமத்து நதி
5. பூஜ்யங்களின் சங்கிலி
உரைநடை நூல்கள்:
1. மலையாளக் கவிதை
2. அலையும் சுவடும்
131) கூற்றுகளை ஆராய்க.
1. க், ச், த், ப் ஆகியவற்றின்பின் அவற்றின் அவ்வெழுத்து வரிசைகளே வரும். பிற மெய்கள் வராது.
2. ட், ற் என்னும் மெய்களுக்குப் பிறகு அவ்வெழுத்து வரிசைகளும், க, ச, ப என்னும் வரிசைகளுமே வரும்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. க், ச், த், ப் ஆகியவற்றின்பின் அவற்றின் அவ்வெழுத்து வரிசைகளே வரும். பிற மெய்கள் வராது. காக்கை, பச்சை, பத்து, உப்பு.
2. ட், ற் என்னும் மெய்களுக்குப் பிறகு அவ்வெழுத்து வரிசைகளும், க, ச, ப என்னும் வரிசைகளுமே வரும். பாட்டு, வெட்கம், காட்சி, திட்பம், காற்று, கற்க, கற்சிலை, கற்பவை.
132) அகன் ஐந்து எனப் பேசும் நூல் எது?
A) நன்னூல்
B) தொல்காப்பியம்
C) அகத்தியம்
D) மேற்காணும் எதுமில்லை
விளக்கம்: சங்க இலக்கியம் அகத்திணை சார்ந்த செய்திகளையும் புறத்திணை சார்ந்த செய்திகளையும் பாடற்பொருள்களாக வடிவமைத்துள்ளது. அகன் ஐந்திணைகளைப் பேசுகிற தொல்காப்பியம் புணர்தல், பிரிதல் முதலான அகன் ஐந்திணைகளை இன்பம், பொருள், அறம் ஆகிய அறவியல் ‘லட்சியப்’ பொருள்களோடு இரண்டற இணைத்து விடுகின்றது.
133) எழுத்துப்பிழைக்கு முதன்மையான காரணம் எது?
A) எழுதுவது போலவே பேசுவது
B) பேசுவது போலவே எழுதுவது
C) சொற்களின் இடமாற்றம்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: எல்லா இடங்களிலும் பேச்சுத் தமிழை எழுத முடியாது. பேசுவதைப் போலவே எழுத எண்ணுவதே எழுத்துப் பிழைக்கு முதன்மையான காரணம் எனலாம். குறில், நெடில் வேறுபாடு அறியாதிருப்பதும் எழுத்துக்கள் வரும்முறையில் தெளிவற்றிருப்பதும் பிழைகள் மலியக் காரணமாய் அமைகின்றன.
134) ___________________வளம் ஒரு பண்பாட்டின் அடையாளமாகவும் திகழ்கிறது?
A) இலக்கிய வளம்
B) பண்பாட்டு வளம்
C) இலக்கண வளம்
D) சொல்வளம்
விளக்கம்: இன்றைய இலக்கியத்தில், கி.ராஜநாராயணன், ‘கிடை’ எனும் குறுநாவலில் ஆடுகளின் அடையாளங்களைப் பல பெயர்கள் சொல்லி அழைக்கிறார். சொல்வளம், ஒரு பண்பாட்டின் அடையாளமாகவும் திகழ்கிறது.
135) நீர்படு பசுங்காலம் – இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
A) குறுந்தொகை
B) புறநானூறு
C) அகநானூறு
D) நற்றிணை
விளக்கம்: ‘நீர்படுகின்ற – அல்லது நீர்பட்ட – பசுமையான கலம்’ என்பது, எதுவும் தொகாமல் வருகிற தொடர் மொழி. அதுவே, ‘நீர்படு பசுங்கலம்’ – நற்றிணை(308) என்று ஆகும் போது, தொகைமொழி.
136) யார் விவிலியத்தை தமிழில் மொழிபெயர்க்க ஆறுமுக நாவலர் உதவினார்?
A) ஜி.யூ.போப்
B) வீரமாமுனிவர்
C) கால்டுவெல்
D) பெர்சிவல் பாதிரியார்
விளக்கம்: பெர்சிவல் பாதிரியார் விவிலியத்தை தமிழில் மொழிபெயர்க்க ஆறுமுக நாவலர் உதவினார்.
137) தம்பி – மாதத்துக்கு மாதம், நாளுக்கு நாள், நினதறிவு மலர்ச்சி பெற்று வருவதைக் காண்கிறேன் – இதில் தம்பி என்று குறிப்பிடப்படுவர் யார்?
A) பாரதியார்
B) கலைஞர்
C) பாரதிதாசன்
D) ஸ்ரீநெல்லையப்பர்
விளக்கம்: தம்பி – மாதத்துக்கு மாதம், நாளுக்கு நாள், நினதறிவு மலர்;ச்சி பெற்று வருவதைக் காண்கிறேன். நினது உள்ளக்கமலத்திலே பேரறிவாகிய உள் – ஞாயிற்றின் கதிர்கள் விரைவிலே தாக்கி நினக்கு நல்லின்பம் உண்டாகுமென்றே கருதுகிறேன். இதில் தம்பி என்று குறிப்பிடப்படுபவர் ஸ்ரீநெல்லையப்பர் ஆவார்.
138) செம்மை + பரிதி என்னும் சொல் எந்த பண்புப்பெயர் புணர்ச்சி விதிப்படி செம்பரிதி என்று கிடைக்கும்?
A) ஈறுபோதல்
B) முன்னின்ற மெய் திரிதல்
C) தன்னொற்றிட்டல்
D) இனமிகல்
விளக்கம்: செம்பரிதி என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது செம்மை + பரிதி என்பதாகும். இதில் ஈறு போதல் என்னும் விதிப்படி மை விகுதி கெட்டு செம் + பரிதி என வரும். இவை இணைந்து செம்பரிதி என்ற சொல் கிடைக்கும்.
139) காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட இலக்கண நூல் எது?
A) மாறனலங்காரம்
B) தண்டியலங்காரம்
C) குவலயானந்தம்
D) வீரசோழியம்
விளக்கம்: தண்டியலங்காரம், அணி இலக்கணத்தைக் கூறும் சிறப்பான நூல்களுள் ஒன்று. காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட தண்டியலங்காரத்தின ஆசிரியர் தண்டி ஆவார்.
140) உரைநடை வழக்கு, பேச்சுவழக்கு உள்ளிட்ட இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது கீழ்க்காணும் எம்முறையில் அமையும்?
A) எழுவாய் + செய்ப்படுபொருள்
B) எழுவாய் + பயனிலை
C) செய்படுப்பொருள் + பயனிலை
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: உரைநடை வழக்கு, பேச்சுவழக்கு உள்ளிட்ட இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது, எழுவாய் + செயப்படுபொருள் அல்லது பிறவற்றுடன் கூடிய அமைப்பு + பயனிலை என்று வருவதே மரபு. ஆனால் சங்கப்பாடல்கள் பலவற்றில் இது பிறழ்ந்து வருகிறது. கவிதை மறுதலைத் தொடர் இது.
141) பரலி.சு.நெல்லையப்பர் யாருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்?
A) பாரதி
B) வ.உ.சி
C) பாரதிதாசன்
D) மேற்காணும் யாருமில்லை
விளக்கம்: பரலி.சு.நெல்லையப்பர் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்.
142) கூற்றுகளை ஆராய்க.
1. மகாகவி பாரதி நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் ரா.அ.பத்மநாபன் பதிப்பித்த ‘பாரதி கடிதங்கள்’ என்னும் நூலில் இடம்பெற்றிருக்கிறது.
2. பாரதி, தம் 18 வயதில் கல்விகற்க உதவிவேண்டி எட்டயபுரம் அரசருக்கு எழுதிய கவிதைக் கடிதம் முதல் அவர்தம் மறைவிற்கு முன்னர் குத்திகேசவருக்கு எழுதிய கடிதம் வரை அனைத்தும் நம்மிடம் பேசுவபோல இருப்பதே அவருடைய நடையழகின் சிறப்பு ஆகும்.
3. பாரதியாரைவிட 10 ஆண்டுகள் இளையவரான பரலி.சு.நெல்லையப்பரைப் பாரதி தன்னுடைய அருமைத் தம்பியாகவே கருதி அன்புகாட்டி வந்தார்.
4. பாரதியின் கடிதங்கள் மேலும் அவரை நன்றாகப் புரிந்துகொள்ளத் துணைபுரிகின்றன.
A) 1, 4 சரி
B) 2, 3 சரி
C) அனைத்தும் சரி
D) அனைத்தும் தவறு
விளக்கம்: 1. மகாகவி பாரதி நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் ரா.அ.பத்மநாபன் பதிப்பித்த ‘பாரதி கடிதங்கள்’ என்னும் நூலில் இடம்பெற்றிருக்கிறது.
2. பாரதி, தம் 15 வயதில் கல்விகற்க உதவிவேண்டி எட்டயபுரம் அரசருக்கு எழுதிய கவிதைக் கடிதம் முதல் அவர்தம் மறைவிற்கு முன்னர் குத்திகேசவருக்கு எழுதிய கடிதம் வரை அனைத்தும் நம்மிடம் பேசுவபோல இருப்பதே அவருடைய நடையழகின் சிறப்பு ஆகும்.
3. பாரதியாரைவிட 7 ஆண்டுகள் இளையவரான பரலி.சு.நெல்லையப்பரைப் பாரதி தன்னுடைய அருமைத் தம்பியாகவே கருதி அன்புகாட்டி வந்தார்.
4. பாரதியின் கடிதங்கள் மேலும் அவரை நன்றாகப் புரிந்துகொள்ளத் துணைபுரிகின்றன.
143) தண்டியலங்காரத்தின் ஆசிரியரான தண்டி எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர் ஆவார்?
A) 11
B) 12
C) 13
D) 17
விளக்கம்: தண்டியலங்காரத்தின் ஆசிரியர் தண்டி ஆவார். இவர் கி.பி(பொ.ஆ) 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர் ஆவார்.
144) நெஞ்சம் இளவி விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது என்று கூறியவர் யார்?
A) பாரதியார்
B) சிற்பி பாலசுப்பிரமணியம்
C) தி.சு.நடராசன்
D) அய்யப்ப மகாதேவன்
விளக்கம்: நெஞ்சம் இளகி விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும். வேறு வழியில்லை – பாரதியார்.
145) மலையாளக் கவிதை என்பது ஒரு?
A) கவிதை நூல்
B) உரைநடை நூல்
C) புதினம்
D) கதை
விளக்கம்: சிற்பி பாலசுப்ரமணியத்தின்,
கவிதை நூல்கள்:
1. ஒளிப்பறவை
2. சர்ப்பயாகம்
3. சூரிய நிழல்
4. ஒரு கிராமத்து நதி
5. பூஜ்யங்களின் சங்கிலி
உரைநடை நூல்கள்:
1. மலையாளக் கவிதை
2. அலையும் சுவடும்
146) பல் + துளி என்ற சொல்லை சேர்த்து எழுதுக.
A) பலதுளி
B) பல்துளி
C) பஃறுளி
D) பல்லதுளி
விளக்கம்: வேற்றுமைப் புணர்ச்சியில் தனிக்குறிலை அடுத்து லகரம் தகரம் வரும்போது ஆய்தமாக மாறும். தகரமும் றகரமாகும். அல் + திணை – அஃறிணை. பல் + துளி – பஃறுளி
147) பரலி.சு.நெல்லையப்பர் கீழ்க்காணும் எந்த இதழில் முதலில் துணையாசிரியராக இருந்து பின்னர் ஆசிரியராக பணியாற்றினார்?
A) சூரியோதயம்
B) கர்மயோகி
C) குயில்
D) லோகோபகாரி
விளக்கம்: பாரதி நடத்திய சூரியோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும், லோகோபகாரி, தேசபக்தன் ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் பிறகு ஆசிரியராகவும் பணியாற்றியவர் பரலி.சு.நெல்லையப்பர் ஆவார்.
148) வசனநடை கைவந்த வல்லாளர் என்று புகழப்படுபவர் யார்?
A) பரிதிமாற்கலைஞர்
B) ஆறுமுக நாவலர்
C) குணங்குடி மஸ்தான் சாகிபு
D) மறைமலை அடிகள்
விளக்கம்: வசனநடை கைவந்த வல்லாளர் எனப் புகழப்படும் ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். தமிழ், வடமொழி, ஆங்கிலம் எனும் மும்மொழிப் புலமை பெற்றவர்.
149) தம்பி – தமிழ்நாடு வாழ்க என்றெழுது
தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க என்றெழுது – என்று பாடியவர் யார்?
A) அறிஞர் அண்ணா
B) கலைஞர்
C) பாரதியார்
D) கவிமணி
விளக்கம்: தம்பி – தமிழ்நாடு வாழ்க என்றெழுது
தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க என்றெழுது – பாரதியார்.
150) ட, ற என்னும் எழுத்துக்கள் சொல்லின் எந்த இடத்தில் வராது?
A) முதல்
B) இடை
C) கடை
D) இடை, கடை
விளக்கம்: ட, ற என்னும் எழுத்துகள் சொல்லின் முதலில் வாரா. டமாரம், றப்பர் இச்சொற்கள் தமிழ் சொற்கள் இல்லை.
151) பின்வருவனவற்றில் ந.முத்துசாமி எழுதிய நூல் எது?
A) தமிழ் அழகியல்
B) நெல்லூர் அரிசி
C) சுவரொட்டிகள்
D) காட்டுவாத்து
விளக்கம்: தமிழ் அழகியல் – தி.சு.நடராசன்
நெல்லூர் அரிசி – அகிலன்
சுவரொட்டிகள் – ந.முத்துசாமி
காட்டுவாத்து – ந.பிச்சமூர்த்தி
152) ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – இதில் ஞாலம் என்ற சொல்லின் பொருள் என்ன?
A) அறிவு
B) உலகம்
C) கடல்
D) பெரிய
விளக்கம்: ஞாலம் என்றால் உலகம் என்று பொருள். மக்களால் போற்றப்பட்டு, உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றி, கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை அகற்றுவது ஒன்று என்பது இப்பாடலடியின் விளக்கம் ஆகும்.
153) எந்த மொழியிலிருந்து கவிதைகளையும் புதினங்களையும சிற்பி பாலசுப்பிரமணியம் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்?
A) ஆங்கிலம்
B) பிரெஞ்சு
C) தெலுங்கு
D) மலையாளம்
விளக்கம்: மலையாளத்திலிருந்து கவிதைகளையும், புதினங்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் சிற்பி பாலசுப்ரமணியம். இவர் மொழிபெயர்ப்புக்காகவும் சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார்.
154) பாண்டியரின் சங்கத்தில் கொலுவி ருந்தாய்
பாரிமுதல் வள்ளல்களை ஈன்று தந்தாய் – என்று பாடியவர் யார்?
A) பாரதியார்
B) சிற்பி பாலசுப்பிரமணியம்
C) பாரதிதாசன்
D) வாணிதாசன்
விளக்கம்: பாண்டியரின் சங்கத்தில் கொலுவி ருந்தாய்
பாரிமுதல் வள்ளல்களை ஈன்று தந்தாய் என்று பாடியவர் சிற்பி பாலசுப்பிரமணியம் ஆவார். இவர் ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூலுக்காகவும், மொழிபெயர்ப்புக்காகவும் இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் ஆவார்.
155) இலக்கண உலகில் புதிய பார்வை என்ற நூலை எழுதியவர் யார்?
A) டாக்டர் பொற்கோ
B) தி.சு.நடராசன்
C) ந.பிச்சமூர்த்தி
D) ரா.அ.பத்மநாபன்
விளக்கம்: இலக்கண உலகில் புதிய பார்வை என்ற நூலை எழுதியவர் டாக்டர் பொற்கோ ஆவார்.
156) வேற்றுமை புணர்ச்சியில் தனிக்குறிலை அடுத்து லகரம் தகரம் வரும்போது________________ஆக மாறும்?
A) நகரமாக
B) றகரமாக
C) ணகரமாக
D) ஆய்தமாக
விளக்கம்: வேற்றுமைப் புணர்ச்சியில் தனிக்குறிலை அடுத்து லகரம் தகரம் வரும்போது ஆய்தமாக மாறும். தகரமும் றகரமாகும். அல் + திணை – அஃறிணை. பல் + துளி – பஃறுளி
157) பாரதியார் கீழக்காண்பனவற்றில் எதை ஓங்குக என்று கூறுகிறார்?
A) முயற்சிகள்
B) சிற்பம்
C) வானநூல்
D) இயற்கை நூலின் ஆயிரம் கிளைகள்
விளக்கம்: முயற்சி ஓங்குக. ஸங்கீதம், சிற்பம், யந்திர நூல், பூமி நூல், வான நூல், இயற்கை நூலின் ஆயிரம் கிளைகள் இவை தமிழ்நாட்டில் மலிந்திடுக என்று முழங்கு – பாரதியார்.
158) எட்டயபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு பற்றிக் கவிகேசரி சாமி தீட்சிதர் என்பவர் வம்சமணி தீபிகை என்னும் நூலை எந்த ஆண்டு வெளியிட்டார்?
A) 1889
B) 1879
C) 1894
D) 1900
விளக்கம்: எட்டயபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு பற்றிக் கவிகேசரி சாமி தீட்சிதர் என்பவர் வம்சமணி தீபிகை என்னும் நூலை 1879ஆம் ஆண்டு வெளியிட்டார்.
159) வம்சமணிதீபிகை என்ற நூலின் மூல வடிவம் எப்போது இளசை மணி என்பவரால் வெளியிடப்பட்டது?
A) 2007
B) 2010
C) 2008
D) 2005
விளக்கம்: வம்சமணிதீபிகை என்ற நூலின் மூல வடிவம் 2008-இல் அப்படியே இளசை மணி என்பவரால் வெளியிடப்பட்டது
160) வம்சமணி தீபிகை என்னும் நூலை திருத்தி வெளியிட ஆசைகொண்ட பாரதி எப்போது வெங்கடேசுர எட்டப்பருக்கு கடிதம் எழுதினார்?
A) 6.8.1909
B) 6.8.1919
C) 8.6.1909
D) 8.6.1919
விளக்கம்: வம்சமணி தீபிகை என்பது எட்டயபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு ஆகும். இதனை கவிகேசரி சாமிதீட்சிதர் 1879-இல் வெளியிட்டார். அப்பதிப்பைத் திருத்தி வெளியிட ஆசைகொண்ட பாரதி, ஆட்சி செய்த வெங்டேசுர எட்டப்பருக்கு 6.8.1919-இல் கடிதம் எழுதினார்.
161) இளந்தமிழே என்ற கவிதை சிற்பி பாலசுப்ரமணியத்தின் எந்த நூலில் இருந்து தரப்பட்டுள்ளது?
A) மலையாளக் கவிதை
B) அலையும் சுவடும்
C) நிலவுப்பூ
D) ஒரு கிராமத்து நதி
விளக்கம்: இளந்தமிழே என்ற கவிதை சிற்பி பாலசுப்ரமணியத்தின் நிலவுப்பூ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இவர் கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர்.
162) திறனாய்வுக்கலை என்னும் நூலை எழுதியவர் யார்?
A) தி.சு.நடராசன்
B) சிற்பி பாலசுப்பிரமணியம்
C) பாரதியார்
D) அய்யப்ப மகாதேவன்
விளக்கம்: திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் தி.சு.நடராசன் குறிப்பிடத்தக்கவர் ஆவார். தி.சு.நடராசன் எழுதிய நூல்கள்:
1. கவிதையெனும் மொழி
2. தமிழ் அழகியல்
3. தமிழின் பண்பாட்டு வெளிகள்
4. திறனாய்வுக்கலை
163) வந்து என்ற சொல்லின் வேர்ச்சொல் என்ன?
A) வந்த
B) வா
C) வந்த்
D) வந்து
விளக்கம்: வந்து என்ற சொல்லின் வேர்ச்சொல்(பகுதி) – வா என்பது ஆகும்.
164) செம்பரிதி என்ற சொல்லைப் பிரித்து எழுதுக?
A) செம் + பரிதி
B) செ + பரிதி
C) செம்மை + பரிதி
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்:செம்பரிதி என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது செம்மை + பரிதி என்பதாகும். இதில் ஈறு போதல் என்னும் விதிப்படி மை விகுதி கெட்டு செம் + பரிதி என வரும். இவை இணைந்து செம்பரிதி என்ற சொல் கிடைக்கும்.
165) பரலி.சு.நெல்லையப்பர் கீழ்க்காணும் எந்த இதழில் துணையாசிரியராகப் பணியாற்றவில்லை?
A) சூரியோதயம்
B) கர்மயோகி
C) லோகோபகாரி
D) குயில்
விளக்கம்: பாரதி நடத்திய சூரியோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும், லோகோபகாரி, தேசபக்தன் ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் பிறகு ஆசிரியராகவும் பணியாற்றியவர் பரலி.சு.நெல்லையப்பர் ஆவார்.
166) எந்த தொன்மையான மொழியும் எதிலிருந்து தோன்றுகின்றன?
A) ஒலி
B) சமிக்கை
C) படம்
D) A மற்றும் B
விளக்கம்: எந்தத் தொன்மையான மொழியும் சமிக்ஞையிலிருந்தும் இசையிலிருந்தும்தான் தொடங்குகிறது. மொழி சார்ந்த கவிதையும், இசையோடும் இசைக்கருவியோடும்தான் பிறக்கிறது.
167) தி.சு.நடராசன் எழுதாத நூல் எது?
A) கவிதையெனும் மொழி
B) திறானய்வுக்கலை
C) மொழி அழகியல்
D) தமிழின் பண்பாட்டு வெளிகள்
விளக்கம்: தி.சு.நடராசன் எழுதிய நூல்கள்:
1. கவிதையெனும் மொழி
2. தமிழ் அழகியல்
3. தமிழின் பண்பாட்டு வெளிகள்
4. திறனாய்வுக்கலை
168) சிற்பி பாலசுப்ரமணியம் எந்த பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர்?
A) பாரதிதாசன்
B) அண்ணாமலை
C) அண்ணா
D) பாரதியார்
விளக்கம்: சிற்பி பாலசுப்ரமணியம் பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். இவர் மொழிபெயர்ப்புக்காகவும், ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூலிற்காகவும் இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
169) அஃறிணை என்ற சொல்லை பிரித்து எழுதுக.
A) அள் + திணை
B) அல் + திணை
C) அ + திணை
D) அஃ + திணை
விளக்கம்: வேற்றுமைப் புணர்ச்சியில் தனிக்குறிலை அடுத்து லகரம் தகரம் வரும்போது ஆய்தமாக மாறும். தகரமும் றகரமாகும். அல் + திணை – அஃறிணை. பல் + துளி – பஃறுளி
170) Biography என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?
A) உயிரியியல் வரலாறு
B) அறிவியல் வரலாறு
C) தாவரவியல் வரலாறு
D) வாழ்க்கை வரலாறு
விளக்கம்: Biography என்ற சொல்லின் தமிழாக்கம் வாழ்க்கை வரலாறு என்பதாகும்.
171) செந்தமிழே என்ற சொல்லுடன் தொடர்புடைய பண்புப் பெயர் புணர்ச்சி விதி எது?
A) முன்னின்ற மெய் திரிதல்
B) தன்னொற்றிரட்டல்
C) இனமிகல்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: செந்தமிழே – செம்மை + தமிழே.
விதி: ஈறு போதல் – செம் + தமிழே
விதி: முன்னின்ற மெய் திரிதல் – செந்தமிழே.
172) பரலி.சு.நெல்லையப்பர் பற்றிய கூற்றுகளை ஆராய்க
1. இவர் பாரதியின் கண்ணன் பாட்டு, நாட்டுப்பாட்டு, பாப்பாப்பாட்டு, முரசுப்பாட்டு ஆகியவற்றைப் பதிப்பித்தவர்.
2. பாரதி நடத்திய சூரியோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களில் துணையாசிரியராக பணியாற்றியவர்.
3. லோகோபகாரி, தேசபக்தன் ஆகிய இதழ்களில் ஆசிரியராக பணியாற்றியவர்
4. நெல்லைத் தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார்.
A) 1, 2 சரி
B) 2, 3 சரி
C) 1, 2, 3 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. இவர் பாரதியின் கண்ணன் பாட்டு, நாட்டுப்பாட்டு, பாப்பாப்பாட்டு, முரசுப்பாட்டு ஆகியவற்றைப் பதிப்பித்தவர்.
2. பாரதி நடத்திய சூரியோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களில் துணையாசிரியராக பணியாற்றியவர்.
3. லோகோபகாரி, தேசபக்தன் ஆகிய இதழ்களில் ஆசிரியராக பணியாற்றியவர்
4. நெல்லைத் தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார்.
173) ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ் – என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?
A) நன்னூல்
B) தண்டியலங்காரம்
C) சிலப்பதிகாரம்
D) தொல்காப்பியம்
விளக்கம்: ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ் – தண்டியலங்காரம். இதன் ஆசிரியர் தண்டி ஆவார்.
174) பரலி.சு.நெல்லையப்பருக்கு பொருத்தமற்றதை தேர்வு செய்க.
A) விடுதலைப்போராட்ட வீரர்
B) உரையாசிரியர்
C) பதிப்பாளர்
D) மொழிபெயர்ப்பாளர்
விளக்கம்: விடுதலைப்போராட்ட வீரர், கவிஞர், எழுத்தாளர், மொழிப்பெயர்ப்பாளர், இதழாளர், பதிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர்.
175) பாரதியார் எத்தனை வயதில் எட்டயபுரம் அரசருக்கு கல்விகற்க உதவி வேண்டி கடிதம் எழுதினார்?
A) 14
B) 17
C) 15
D) 18
விளக்கம்: பாரதியார், 15 வயதில் கல்விகற்க உதவிவேண்டி எட்டயபுரம் அரசருக்கு கடிதம் எழுதினார்
176) பாரதியார் மறைவிற்கு முன்னர் யாருக்கு கடிதம் எழுதினார்?
A) எட்டயபுர மன்னர்
B) குத்திகேசவர்
C) பாரதிதாசன்
D) தமிழக மக்கள்
விளக்கம்: பாரதியார் மறைவிற்கு முன்னர் குத்திகேசவருக்கு கடிதம் எழுதினார்.
177) கீழ்க்காண்பனவற்றுள் எது அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல் அல்ல?
A) தண்டியலங்காரம்
B) மாறனலங்காரம்
C) குவலயானந்தம்
D) முத்துவீரியம்
விளக்கம்: அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்கள்:
1. தண்டியலங்காரம்
2. மாறனலங்காரம்
3. குவலயானந்தம்
178) தனியாழி என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
A) தனி + யாழி
B) தனி + ஆழி
C) தனியாள் + ழி
D) தனி + ஆழி
விளக்கம்: தனியாழி – தனி + ஆழி.
விதி: இ ஈ ஐ வழி யவ்வும் – தனி + ய் + ஆழி
விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – தனியாழி
179) பொருத்தாத ஒன்றை தெரிவு செய்க.
A) ஒளிப்பறவை
B) சர்ப்பயாகம்
C) சூரிய நிழல்
D) ஒரு கிராமத்து நதி
விளக்கம்: மேற்காணும் அனைத்தும் நூல்களும் சிற்பி பாலசுப்ரமணியம் எழுதிய நூல்கள் ஆகும். இதில் பொருந்தாதது ஒரு கிராமத்து நதி ஆகும். ஒரு கிராமத்து நதி சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளது.
180) கூற்றுகளை ஆராய்க.
1. தண்டியலங்காரம், அணி இலக்கணத்தைக் கூறும் சிறப்பான நூல்களுள் ஒன்று.
2. காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட இந்நூலின் ஆசிரியர் தண்டி ஆவார்.
3. தண்டி கி.பி (பொ.ஆ) 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர் ஆவார்.
4. இந்நூல் அறம், பொருள், இன்பம் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது
A) 1, 2 சரி
B) 1, 3 சரி
C) 4 மட்டும் தவறு
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. தண்டியலங்காரம், அணி இலக்கணத்தைக் கூறும் சிறப்பான நூல்களுள் ஒன்று.
2. காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட இந்நூலின் ஆசிரியர் தண்டி ஆவார்.
3. தண்டி கி.பி (பொ.ஆ) 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர் ஆவார்.
4. இந்நூல் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது.
181) கீழ்க்காண்பனவற்றுள் எது அணியிலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல் அல்ல?
A) தொல்காப்பியம்
B) வீரசோழியம்
C) இலக்கண விளக்கம்
D) தண்டியலங்காரம்
விளக்கம்: அணியிலக்கணத்தை மட்மே கூறும் இலக்கண நூல்கள்:
1. தண்டியலங்காரம்
2. மாறனலங்காரம்
3. குவலயானந்தம்
அணியிலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்கள்:
1. தொல்காப்பியம்
2. வீரசோழியம்
3. இலக்கண விளக்கம்
4. தொன்னூல் விளக்கம்
5. முத்துவீரியம்
182) ஆய்த எழுத்து சொல்லின் எவ்விடத்தில் வரும்?
A) முதல்
B) இடை
C) கடை
D) முதல் மற்றும் கடை
விளக்கம்: ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும். தனிச்சொல்லாயின் மூவெழுத்தாகவும், தனிக்குறிலை அடுத்தும் வரும். அஃது, எஃகு, கஃசு.
183) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
A) செம்பரிதி – ஈறுபோதல்
B) வானமெல்லாம் – உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
C) உன்னையல்லால் – உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
D) செந்தமிழே – இனமிகல்
விளக்கம்: 1. செம்பரிதி என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது செம்மை + பரிதி என்பதாகும். இதில் ஈறு போதல் என்னும் விதிப்படி மை விகுதி கெட்டு செம் + பரிதி என வரும். இவை இணைந்து செம்பரிதி என்ற சொல் கிடைக்கும்.
2. வானமெல்லாம் – வானம் + எல்லாம்
விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – வானமெல்லாம்.
3. உன்னையல்லால் – உன்னை-அல்லால்.
விதி: இஈஐ வழி யவ்வும் – உன்னை + ய் + அல்லால்
விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – உன்னையல்லால்.
4. செந்தமிழே – செம்மை + தமிழே.
விதி: ஈறு போதல் – செம் + தமிழே
விதி: முன்னின்ற மெய் திரிதல் – செந்தமிழே.
184) மெல்லின எழுத்துகளில் எது சொல்லின் தொடக்கமாக வராது?
A) ஞ, ண
B) ந, ம
C) ண, ன
D) ஞ, ந
விளக்கம்: மெல்லின எழுத்துகளில் ண, ன சொல்லின் தொடக்கமாக வராது.
185) முச்சங்கங் கூட்டி
முதுபுலவர் தமைக் கூட்டி
அச்சங்கத் துள்ளே
அளப்பரிய பொருள் கூட்டி என்ற வரிகளை எழுதியவர் யார்?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) ந.காமராசன்
D) கண்ணதாசன்
விளக்கம்: முச்சங்கங் கூட்டி
முதுபுலவர் தமைக் கூட்டி
அச்சங்கத் துள்ளே
அளப்பரிய பொருள் கூட்டி
சொற்சங்க மாகச்
சுவைமிகுந்த கவிகூட்டி
அற்புதங்க ளெல்லாம்
அமைத்த பெருமாட்டி – கண்ணதாசன்
186) கூற்று: உறுப்பு, குழு, ஊர் என்பவை இன் என்னும் சாரியை பெறும்.
காரணம்: இவை பெயர்ச்சொற்கள்
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
விளக்கம்: உறுப்பினர், குழுவினர், ஊரினர் முதலானவை (உறுப்பு, குழு, ஊர்) பெயர்ச்சொற்கள். அதனால், அவை இன் என்னும் சாரியைப் பெற்று முடிந்துள்ளன.
187) கலித்தொகையின் எந்த பகுதியில் காளைகளில் பல இனங்களைக் காட்டுகிற சொற்கள் நிரம்பிக் கிடக்கின்றன?
A) நெய்தல் கலி
B) முல்லைக் கலி
C) குறிஞ்சிக்கலி
D) மருதக்கலி
விளக்கம்: முல்லைக்கலியில், காளைகளில பல இனங்களைக் காட்டுகிற சொற்கள் நிரம்பிக் கிடக்கின்றன.
188) கூற்றுகளை ஆராய்க.
1. தனிக்குறிலை அடுத்து ரகர, ழகர ஒற்றுகள் வராது.
2. ரகரத்தை அடுத்து ரகர வரிசை எழுத்துகளும், ழகரத்தை அடுத்து ழகர வரிசை எழுத்துகளும் வரும்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. தனிக்குறிலை அடுத்து ரகர, ழகர ஒற்றுகள் வராது.
2. ரகரத்தை அடுத்து ரகர வரிசை எழுத்துகளும், ழகரத்தை அடுத்து ழகர வரிசை எழுத்துகளும் வராது.
189) தி.சு.நடராசன் பணிபுரியாத பல்கலைக்கழகம் எது?
A) திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்லைக்கழகம்
B) மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
C) வார்சா பல்கலைக்கழகம்
D) பாரதியார் பல்கலைக்கழகம்
விளக்கம்: திறனாய்வாளராகப் பரவலாக அறியப்படும் தி.சு.நடராசனன், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், போலாந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.
190) கூற்றுகளை ஆராய்க.
1. ணகர ஒற்றை அடுத்து டகரம் வரும்.
2. னகர ஒற்றை அடுத்து றகரம் வரும்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. ணகர ஒற்றை அடுத்து டகரம் வரும். கண்டு என்று வரும் கன்டு என்று வருவதில்லை.
2. னகர ஒற்றை அடுத்து றகரம் வரும். மன்றம் என்று வரும் மண்றம் என்று வருவதில்லை.
191) வியர்வைவெள்ளம் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?
A) உவமைத்தொகை
B) உருவகம்
C) வினைமுற்று
D) பெயரெச்சம்
விளக்கம்: வியர்வைவெள்ளம் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு – உருவகம் ஆகும். இங்கு வியர்வை என்ற சொல் வெள்ளம் என்ற சொல்லுடன் ஒப்புமைப்படுத்தப்பட்டுள்ளது. வியர்வை வெள்ளம் போல வந்தது என்பது பொருள். உவமை பின்னும் உவமிக்கப்படும் பொருள் முன்னும் வந்தால் அது உருவகம் எனப்படும்.
192) சிற்பி பாலசுப்பிரமணியம் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. ஒரு கிராமத்து நதி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
2. இவருடைய கவிதைகள் இந்தியில் மொழிபெயர்க்கப்படவில்லை
3. இவர் இயற்றிய ஒளிப்பறவை, சர்ப்பயாகம் போன்றவை கவிதை நூல்களாகும்.
4. இலக்கியச் சிந்தனை என்பது உரைநடை நூலாகும்
A) 1, 2 தவறு
B) 1, 3 தவறு
C) 2, 4 தவறு
D) அனைத்தும் தவறு
விளக்கம்: 1. ஒரு கிராமத்து நதி என்னும் கவிதைக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
2. இவருடைய கவிதைகள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது.
3. இவர் இயற்றிய ஒளிப்பறவை, சர்ப்பயாகம் போன்றவை கவிதை நூல்களாகும்.
4. இலக்கியச் சிந்தனை என்பது உரைநடை நூலாகும்
193) கூற்றுகளை ஆராய்க.
1. உயிர் வரின் ஒரு, இரு முறையே ஓர், ஈர் என்று மாறும்.
2. உயிர் வரின் அது, இது, எது முறையே அஃது, இஃது, எஃது என்பதாக மாறும்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. உயிர் வரின் ஒரு, இரு முறையே ஓர், ஈர் என்று மாறும்.
2. உயிர் வரின் அது, இது, எது முறையே அஃது, இஃது, எஃது என்பதாக மாறும்
194) தொழில்கள், தொழில்கள், தொழில்கள் என்று கூவு.
வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக – என்று எழுதியவர் யார்?
A) கண்ணதாசன்
B) அண்ணா
C) பாரதியார்
D) திரு.வி.க
விளக்கம்: தொழில்கள், தொழில்கள், தொழில்கள் என்று கூவு.
வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக – பாரதியார்
195) வேற்றுமைப்புணர்ச்சியில் லகரத்தைத் தொடர்ந்து மெல்லினம் வரின் லகரம் ____________திரியும்.
A) ளகரமாக
B) றகரமாக
C) ழகரமாக
D) னகரமாக
விளக்கம்: வேற்றுமைப்புணர்ச்சியில் லகரத்தைத் தொடர்ந்து மெல்லினம் வரின் லகரம் னகரமாய்த் திரிவதுண்டு. பல் + முகம் – பன்முகம்.
196) இலக்கியச் சிந்தனை என்னும் உரைநடை நூலை எழுதியவர் யார்?
A) சிற்பி பாலசுப்பிரமணியம்
B) நா.காமராசன்
C) பாரதியார்
D) பாரதிதாசன்
விளக்கம்: இலக்கியச் சிந்தனைகள், மலையாளக் கவிதைகள், அலையும் சுவடும் உள்ளிட்ட உரைநடை நூல்களை எழுதியவர் சிற்பி பாலசுப்பிரமணியம் ஆவார்.
197) வேற்றுமைப்புணர்ச்சியில் ளகரத்தைத் தொடர்ந்து மெல்லினம் வரின் ளகரம் ____________திரியும்.
A) ளகரமாக
B) றகரமாக
C) ணகரமாக
D) டகரமாக
விளக்கம்: வேற்றுமைப்புணர்ச்சியில் ளகரத்தைத் தொடர்ந்து மெல்லினம் வரின் ளகரம் ணகரமாய்த் திரிவதுண்டு. நாள் + மீன் – நாண்மீன்.
198) முச்சங்கங் கூட்டி
முதுபுலவர் தமைக் கூட்டி என்ற வரிகளை எழுதியவர் யார்?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) ந.காமராசன்
D) கண்ணதாசன்
விளக்கம்: முச்சங்கங் கூட்டி
முதுபுலவர் தமைக் கூட்டி
அச்சங்கத் துள்ளே
அளப்பரிய பொருள் கூட்டி
சொற்சங்க மாகச்
சுவைமிகுந்த கவிகூட்டி
அற்புதங்க ளெல்லாம்
அமைத்த பெருமாட்டி – கண்ணதாசன்
199) வேற்றுமைப்புணர்ச்சியில் வருமொழி நகரமாயின் லகரம்_________________ஆக மாறும்?
A) ளகரமாக
B) றகரமாக
C) ணகரமாக
D) னகரமாக
விளக்கம்: வேற்றுமைப் புணர்ச்சியில் வருமொழி நகரமாயின் லகரம் னகரமாக மாறுவதோடு, நகரமும் னகரமாக மாறும். பல் + நூல் – பன்னூல்.
200) பேச்சுத்தமிழில் அமைந்த தொடரைத் தேர்வு செய்க.
A) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்
B) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
C) வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.
D) மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன
விளக்கம்: அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.
201) தவறான ஒன்றை தெரிவு செய்க.
A) செம்பரிதி – பண்புத்தொகை
B) சிவந்து – வினையெச்சம்
C) வியர்வைவெள்ளம் – உவமை
D) முத்துமுத்தாய் – அடுக்குத்தொடர்
விளக்கம்: செந்தமிழ், செந்நிறம், செம்பரிதி – பண்புத்தொகைகள்
சிவந்து – வினையெச்சம்
வியர்வைவெள்ளம் – உருவகம்
முத்துமுத்தாய் – அடுக்குத்தொடர்
202) இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்த ஆறுமுக நாவலர் கீழ்க்காணும் எம்மொழியில் புலமை பெறவில்லை?
A) தமிழ்
B) வடமொழி
C) ஆங்கிலம்
D) சிங்களம்
விளக்கம்: வசனநடை கைவந்த வல்லாளர் எனப் புகழப்படும் ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். தமிழ், வடமொழி, ஆங்கிலம் எனும் மும்மொழிப் புலமை பெற்றவர்.
203) தம்பி – நான் ஏது செய்வேனடா
தம்பி – உள்ளமே உலகம்
ஏறு ஏறு ஏறு மேலே மேலே மேலே – என்று கூறியவர் யார்?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) கவிமணி
D) சிற்பி பாலசுப்பிரமணியம்
விளக்கம்: தம்பி – நான் ஏது செய்வேனடா
தம்பி – உள்ளமே உலகம்
ஏறு ஏறு ஏறு மேலே மேலே மேலே – பாரதியார்
204) பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது – என்று பெண்ணியம் பற்றி எழுதியவர் யார்?
A) பெரியார்
B) அண்ணா
C) பாரதியார்
D) மருதகாசி
விளக்கம்: பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது – பாரதியார்.
205) கூற்றுகளை ஆராய்க.
1. உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் – 70
2. உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் – 146
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் – 90
2. உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் – 126
206) அழகின் சிரிப்பு என்ற நூலை எழுதியவர் யார்?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) சிற்பி பாலசுப்பிரமணியம்
D) வாணிதாசன்
விளக்கம்: அழகின் சிரிப்பு என்ற நூலை எழுதியவர் பாரதிதாசன் ஆவார். இவரின் இயற்பெயர் சுப்புரத்தினம் ஆகும். பாரதியார் மீது கொண்ட பற்றின் காரணமாக தம் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார்
207) தவறான ஒன்றை தெரிவு செய்க
A) கல் + சிலை – கற்சிலை
B) கடல் + கரை – கடற்கரை
C) பல் + முகம் – பன்முகம்
D) மக்கள் + பேறு – மக்கள்பேறு
விளக்கம்: மக்கள் + பேறு – மக்கட்பேறு
208) பின்வருவனவற்றில் எது தமிழ்ச் சொல்?
A) க்ரீடம்
B) ப்ரியா
C) க்ளீஷே
D) காட்சி
விளக்கம்: மேற்காண்பனவற்றில் காட்சி என்பதே தமிழ்ச் சொல் ஆகும். க்ரீடம், ப்ரியா – வடமொழிச் சொல். க்ளீஷே – ஆங்கிலம்.
தமிழில் சொல்லின் தொடக்கமாக மெய்யெழுத்துக்கள் வருவதில்லை.
209) சரியான ஒன்றை தெரிவு செய்க.
A) கன்டு
B) மண்றம்
C) கர்மம்
D) நிருவாகம்
விளக்கம்: மேற்காண்பனவற்றில் நிருவாகம் என்பதே சரியான தமிழ்ச் சொல் ஆகும்.
210) பிழையான தொடரைக் கண்டுபிடி.
A) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
B) மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
C) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.
D) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
விளக்கம்: காலையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.