மனித உரிமைகள் Notes 9th Social Science

9th Social Science Lesson 10 Notes in Tamil

10. மனித உரிமைகள்

1893ஆம் ஆண்டு ஜூன் மாதம் தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரிடோரியா என்னும் இடத்திற்கு தொடர்வண்டியில், முதல் வகுப்பில் வெள்ளையர் அல்லாத ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். வழியில் வண்டியில் ஏறிய வெள்ளை இனத்தவர் ஒருவர், வெள்ளையரல்லாதவரை முதல் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்புப் பெட்டிக்கு செல்லும்படி கட்டளையிட்டார். முதல் வகுப்பு பயணச் சீட்டை வைத்திருந்த வெள்ளையரல்லாதவர், அவ்வாறு செல்ல மறுத்தபோது, பீட்டர்மரிட்ஸ்பர்க் என்ற இடத்தில் ஓடும் வண்டியிலிருந்து தள்ளிவிடப்பட்டார்.

அவ்விரவு நேர கடுங்குளிரில் அந்நிலையத்தில் குளிர் நடுக்கத்தில் உட்கார்ந்து இருந்தபோது அவரிடம் துளிர்விட்ட சிந்தனை, அவர் வாழ்வின் திசையை மாற்றியது. அந்நொடியிலிருந்து அகிம்சை வழி நின்று இனஒதுக்கல் கொள்கைக்கு எதிராக தன் வாழ்நாள் முழுவதும் போராட அந்த நபர் உறுதி பூண்டார்.

அவர் வேறு யாருமல்ல; நமது தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகள் தான். தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் உள்ளிட்ட வெள்ளையர் அல்லாதவர்களுக்கு எதிராக நிலவிய இனஒதுக்கல் கொள்கையை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற முக்கியமான முடிவு அவரை அந்நாட்டிலேயே தங்க வைத்தது. அப்போராட்டத்தில் உருவானதுதான் காந்தியின் சத்தியாகிரகம் என்ற தனித்துவமான அமைதி வழிபோராட்டம்.

மனித உரிமைகள் என்றால் என்ன?

உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை (UDHR)

இறுதிக்கு வந்த இன ஒதுக்கல் கொள்கை

சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகள்:

குடிமை மற்றும் அரசியல் உரிமைகள்

இந்தியாவில் அடிப்படை உரிமைகள்

அடிப்படை உரிமைகள்

சமத்துவ உரிமை

சுதந்திர உரிமை

ஆறு வகையான சுதந்திரங்கள் நமது அரசமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

அவை:

சுரண்டலுக்கெதிரான உரிமை

14 வயதிற்குட்பட்ட சிறுவர்களை சுரங்கங்கள் அல்லது மற்ற அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும். எந்த ஒரு ஒப்பந்ததாரரோ, முதலாளியோ ஒரு தொழிலாளியை அவரது விருப்பத்திற்கு எதிராக ஒரு வேலையில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்த முடியாது.

சமயச் சுதந்திரம் மற்றும் பகுத்தறிவுக்கான உரிமை

குடிமக்கள் தாங்கள் விரும்பிய சமயத்தினை ஏற்கவும் பின்பற்றவும் உரிமை அளிக்கிறது. குடிமக்கள் சில சமய நம்பிக்கைகளை ஏற்று பின்பற்றுவதற்கு அல்லது சமய நம்பிக்கைகளின்றி தங்கள் மனசாட்சிபடி வாழ்வதற்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள்

நீதிப் பேராணை (writ) என்பது ஒரு செயலை செய்யவோ அல்லது அச்செயலை தடுக்கவோ, நீதிமன்றத்தால் அல்லது வேறு சட்ட அமைப்பினால் வழங்கப்படும் எழுத்துப்பூர்வமான உத்தரவு.

மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு இடையிலான வேறுபாடுகள்
மனித உரிமைகள் அடிப்படை உரிமைகள்
மனிதன் தன்மானத்தோடும், சுதந்திரத் தோடும் வாழுகின்ற உரிமைகள் இவை. அரசமைப்பில் காணப்படும் குடிமக்களிம் ஆதார உரிமைகள் அடிப்படை உரிமைகள் எனப்படும். இவை சட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படலாம்.
மனிதனின் வாழ்வில் அடிப்படைத் தேவைகளுக்கான உரிமைகள் இதில் அடங்கியுள்ளன. இவற்றைப் பறிக்க இயலாது. மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஆதாரமாக உள்ள உரிமைகளும், அடிப்படை உரிமைகளில் அடங்கும்.
மனித உரிமைகள் பன்னாடு அளவில் அங்கீகரிக்கப்பட்டவை. அடிப்படை உரிமைகள் நமது நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மூலம் உத்திரவாதம் அளிக்கப்படுகின்றன.

ஐ.நா. மனித உரிமைகள் பிரகடனத்தின்படி அரசானது குறைந்தபட்ச உரிமைகளை வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. அது மேலும் அரசு வழிகாட்டி நெறிமுறைகளைப்போல செயல்படுத்தப்பட வேண்டும்.

அரசமைப்பு தீர்வழிக்களுக்கான உரிமை

அடிப்படைக் கடமைகள்

  1. ஒவ்வொரு இந்திய குடிமகனும் இந்திய அரசமைப்புச் சட்டத்தினை மதிப்பதுடன், அரசமைப்புச் சட்ட நிறுவனங்கள், இலட்சியம், தேசியக்கொடி மற்றும் தேசியகீதம் ஆகியவற்றையும் மதிக்க வேண்டும்.
  2. விடுதலைப் போராட்டத்தின்போது புத்துணர்வளித்த உன்னதமான இலட்சியங்களை நினைவிற்கொண்டு பின்பற்ற வேண்டும்.
  3. இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பேணிப் பாதுக்காக்க வேண்டும்.
  4. தேவை ஏற்படின், நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, நாட்டுப்பணியாற்ற வேண்டும்.
  5. சமய, மொழி, மண்டல அல்லது பிரிவு வேறுபாடுகளைக் கடந்து இந்திய மக்கள் அனைவர் மனதில் சகோதரத்துவமும் இணக்கமும் ஏற்பட பாடுபடவேண்டும். பெண்களை இழிவு செய்யும் செயல்களை விட்டொழிக்க வேண்டும்.
  6. நமது கூட்டுப் பண்பாட்டு மரபினைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
  7. காடுகள், ஏரிகள், ஆறுகள், விலங்கினங்கள் ஆகியவை உள்ளிட்ட புறச்சூழலைப் பாதுகாத்து மேம்படுத்துவதுடன் உயிரினங்கள் மீதும் கருணை காட்ட வேண்டும்.
  8. அறிவியல் உனர்வு, மனிதநேயம், பகுத்தறிவு மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்க்க வேண்டும்.
  9. பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்க வன்முறையை வெறுத்து ஒதுக்க வேண்டும்.
  10. தனிப்பட்ட அளவிலும் கூட்டு செயற்பாட்டிலும் மிகச் சிறந்த நிலையை அடைய முயலுவதன் மூலமாக நாட்டின் மேம்பாட்டிற்கு முயல வேண்டும்.
  11. 14 வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோர் அல்லது காப்பாளர் குழந்தைகளின் கல்விக்கான வாய்ப்புக்கு வகை செய்திடல் வேண்டும்.

இந்திய மனித உரிமைகள் ஆணையம் (National Human Rights Commission)

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகள்:

மாநில மனித உரிமைகள் ஆணையம் (State Human Rights Commission)

மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகள்

அரசமைப்பினால் விளக்கப்பட்ட அடிப்படை உரிமைகளைக் கடந்து நாம் வேறு நில உரிமைகளையும் உறுதி செய்தல் வேண்டும்

குழந்தைகளுக்கான உரிமைகள்

ஒரு குழந்தை பிறப்பிற்கு முன்பே அது வாழத்தகுதி பெறுகின்றது. வாழ்வதற்கான உரிமை என்பது பிறப்புரிமை, அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை மற்றும் கண்ணியமான வாழ்வு வாழும் உரிமை ஆகியனவற்றை உள்ளடக்கியது.

ஒரு குழந்தைக்கு ஒரு நல்ல குடும்பச் சூழலில், இயல்பான குழந்தைப் பருவத்தினைக் கழிக்க உரிமையுண்டு. ஆதரவற்ற, கைவிடப்பட்ட அல்லது அனாதைக் குழந்தைகளும் வாழ தகுதியுடையவர்கள். இது போன்ற குழந்தைகள், அக்கறையுள்ள குடும்பங்களுக்குத் தத்துக் கொடுக்கப்படலாம்.

உடல் நலமின்மை, இயலாமை அல்லது வயது முதிர்வு காரணமாகப் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களால், குழந்தைகளுக்குத் தரமான வாழ்வைத் தர இயலாது சூழ்நிலையில் அக்குழந்தைகளுக்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும்.

அரசமைப்பின் பிரிவு 21A ல் உள்ளபடி 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்க 2009ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றம் கல்வி உரிமைச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தியது.

குழந்தை விற்பனை அல்லது கடத்தலுக்கெதிரான உரிமை

குழந்தைகள் அனைவரும் அடிப்படை மனித உரிமைகள் கோண்ட தனிநபர்கள் எனக் கருதுதல் வேண்டும் அவர்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள். குழந்தைகள் விற்பனை மற்றும் கடத்தல் நடைபெற ஏழ்மை, பாலினப்பாகுபாடு, சிதறிய குடும்பங்கள் ஆகியன முக்கிய காரணங்களாகும்.

குழந்தைகள் பொருளாதாரச் சுரண்டல், பாலியல் சுரண்டல், பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் குழந்தைத் தொழில் ஆகிய காரணங்களுக்காக விற்பனை அல்லது கடத்தல் செய்யப்படுகின்றனர்.

மலாலா – நோபல் பரிசு வென்றவர் கூறுகிறார்.

“நான் பள்ளியை நேசித்தேன். ஆனால் அடிப்படைவாதிகள் என் வசிப்பிடமாகிய ஸ்வாட் பள்ளத்தாக்கினை ஆக்கிரமித்தபொழுது அனைத்தும் மாறியது.

பெண்கள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை, மற்ற பெண்களுக்காகவும், எங்களது கல்வி கற்கும் உரிமைக்காவும் 2012 அக்டோபரில், பள்ளியிலிருந்து வீடு திரும்பும்பொழுது, துப்பாக்கி ஏந்திய ஒருவர் எங்கள் பேருந்தில் ஏறி இதில் மலாலா யார்? என்று கேட்டு, என் தலையின் இடது பக்கத்தில் சுட்டான். பத்து நாட்கள் கழிந்து இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் என்னுமிடத்தில் உள்ள மருத்துவமையில் கண்விழித்தேன். பல மாதங்கள் அறுவை சிகிச்சைகளிலும், மறுவாழ்வு சிகிச்சையிலும் கழிந்தது. இங்கிலாந்திலுள்ள எனது புது வீட்டில் என் குடும்பத்தினரோடு மீண்டும் சேர்ந்த நான், ஒவ்வொரு பெண் குழந்தையும் பள்ளி செல்லும்வரை என் போராட்டத்தைத் தொடர்வேன் என உறுதி பூண்டேன்.

அனைத்து பெண்களும் 12 வருட இலவச, பாதுகாப்பான மற்றும் தரமான கல்வி பயில வேண்டும் என்பதை உறுதி செய்ய நான் ஒவ்வொரு நாளும் போராடுகிறேன். 130 மில்லியன் பெண்கள் பள்ளியில் பயிலாத இன்றைய சூழலில், நான் செய்ய வேண்டிய வேலைகள் அதிகம் உள்ளன. கல்வி மற்றும் சமத்துவத்திற்காக என்னோடு சேர்ந்து போராடுவீர்கள் என நம்புகிறேன். நாம் இணைந்து, பெண்கள் கல்வி பயின்று, வழிநடத்தும் ஓர் உலகை உருவாக்குவோம்.

ஆபத்து காலத்தில் உதவிட காவலன் SOS செயலி தமிழ்நாடு அரசினால் பொது மக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மட்டுமின்றி, சிக்கலான அல்லது நெருக்கடியான சூழலில் இருக்கும் அனைவரும் மாநில காவல் கட்டுப்பாட்டு அறையினை இச்செயலியின் உதவியோடு எளிதாகவும், நேரடியாகவும், தொடர்பு கொள்ல இயலும்.

பாலியல் தொந்தரவுக்கெதிரான உரிமை

குழந்தைகள் உடலளவிலோ, மனதளவிலோ பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படும்போது, மாநில அரசு அக்குழந்தைகளைப் பாலியல் சுரண்டலிலிருந்தும் தொல்லைகளிலிருந்தும் பாதுகாக்க வேண்டும்.

POSCO சட்டம் – பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (The Protection of children from sexual offence Act, 2012) ஒவ்வொரு நிலையிலும் குழந்தைகளின் நலனை மையமாகக் கொண்டு செயல்படுகின்றது.

பாஸ்கோ சட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

1098

இந்திய அரசமைப்பில் குழந்தைகள் உரிமை

குழந்தைகள் தேசத்தின் அடித்தளமாக விளங்குகின்றனர். சிறுவயதிலேயே பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்படும்போது குழந்தைப் பருவத்தின் மகிழ்ச்சிகள், கல்வியறிவு, ஆரோக்கியமான வாழ்வு போன்ற பல சலுகைகளை அவர்கள் இழந்து விடுகின்றனர். இதனால் குழந்தைத் திருமணங்கள் சமூகத்தைப் பெருமளவில் பாதிக்கின்றன. எனவே குழந்தைத் திருமணங்கள் அனைத்து விதத்திலும் தடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

பெண்களுக்கான உரிமைகள்

பெண்களுக்கு மூதாதையர் சொத்துரிமை

பெண் தொழிலாளர் நலனும் – டாக்டர் பி.ஆர். அம்பேத்கரும்

ரோசா – பார்க்ஸ் – சுய மரியாதையின் குறியீடு

இடஒதுக்கீடு

கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு வகுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டினைப் பற்றி தெளிவாக புரிந்துகொள்ள இயலும்.

பிரிவுகள் இட ஒதுக்கீடு (சதவீதத்தில்)
பிற்படுத்தப்பட்டோர் 26.5
பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள் 3.5
மிகப் பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினர் 20
ஆதிதிராவிடர் 18
பழங்குடியினர் 3
மொத்தம் 69

தமிழ்நாட்டில் திருநங்கையர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உரிமைகள்

தகவல் அறியும் உரிமைச்சட்டம்

தகவல் அறியும் உரிமைச்சட்ட செயலாப்பாட்டாளர்கள்

தொழிலாளர் உரிமைகள்

சமத்துவத்திற்கான உரிமை, பொது வேலைவாய்ப்பில் சமத்துவம், அமைப்புகள் மற்றும் சங்கள் தொடங்குவதற்கான உரிமை, வாழ்வாதார உரிமை, கடத்தலைத் தடுத்தல் மற்றும் கட்டாயத் தொழிலாளர் மற்றும் குழந்தைகள் உரிமைகளை, இந்திய அரசியலமைப்பு உறுதி செய்கிறது. பிரிவு 39பி, இருப்பாலினருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை உறுதி செய்கிறது.

தொழிலாளர் நலனில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பங்களிப்புகள்

Exit mobile version