மத்திய அரசு Notes 10th Social Science Lesson 8 Notes in Tamil

10th Social Science Lesson 8 Notes in Tamil

8. மத்திய அரசு

அறிமுகம்

இந்திய நாட்டின் உயர்ந்த அரசாங்கம் அமைப்பு மத்திய அரசு ஆகும். இதன் தலைமையகம் புதுடெல்லியில் அமைந்துள்ளது. இந்திய அரசியலமைப்பின் பகுதி V இல் 52 முதல் 78 வரையிலான சட்டப்பிரிவுகள் மத்திய அரசின் நிர்வாகம் பற்றி குறிப்பிடுகிறது. நமது அரசியலமைப்புச் சட்டம் மக்களாட்சி அடிப்படையிலான அரசாங்கத்தை நமக்கு வழங்குகிறது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் இந்தியாவின் பரந்த மற்றும் பன்முகத் தன்மையைக் கருத்தில் கொண்டு இந்தியாவிற்கு கூட்டாட்சி முறையிலான அரசை வழங்கியுள்ளனர்.

மத்திய அரசு மூன்று அங்கங்களைக் கொண்டது. அவை நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை ஆகியனவாகும். மத்திய நிர்வாகம், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதம அமைச்சரைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவைக் குழு மற்றும் இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் ஆகியோரை உள்ளடக்கியது ஆகும். மத்திய சட்டமன்றம் நாடாளுமன்றம் என்றழைக்கப்படுகிறது. இது இரண்டு அவைகளைக் கொண்டது. அவை மாநிலங்களவை (ராஜ்ய சபா) மற்றும் மக்களவை (லோக் சபா) ஆகியனவாகும். மத்திய நீதித்துறை உச்சநீதிமன்றத்தைக் கொண்டுள்ளது.

இந்தியக் குடியரசுத் தலைவர்

நமது அரசியலமைப்புச் சட்டம் நாடாளுமன்ற முறையிலான அரசாங்கத்தை நமக்கு அளித்துள்ளது. மத்திய அரசின் நிர்வாகத் தலைவர் குடியரசுத் தலைவர் ஆவார். அவர் பெயரளவில் நிர்வாக அதிகாரம் பெற்றவர் ஆவார். அவர் இந்தியாவின் முதல் குடிமகன் ஆவார். அவர் முப்படைகளின் தலைமை தளபதியாகச் செயல்படுகிறார். நீதித்துறையை அமைக்கும் பொறுப்பு அவருக்கு உண்டு. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 53ன் படி குடியரசுத் தலைவர் நேரடியாகவோ அல்லது அவருடைய சார்நிலை அலுவர்கள் மூலமாகவோ மத்திய அரசின் நிர்வாக அதிகாரங்களை அரசியலமைப்பின்படி செயல்படுத்துகிறார்.

குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள்

குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கான தகுதிகளை அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ளது.

குடியரசுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்ட மன்ற உறுப்பினராகவோ பதவி வகிக்கக் கூடாது. ஒருவேளை பதவி வகிக்கும் பட்சத்தில் குடியரசுத் தலைவராக அவர் பதவி ஏற்கும் நாளில் அப்பதவி காலியானதாகக் கருதப்படும்.

குடியரசுத் தலைவருக்கானத் தேர்தல்

குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்

குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளைப் பின்வரும் தலைப்புகளின் கீழ் விரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நிர்வாக அதிகாரங்கள்

இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்

  1. திரு. ராஜேந்திர பிரசாத் 1950 -1962
  2. திரு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1962 – 1967
  3. திரு. ஜாகிர் உசேன் 1967 – 1969
  4. திரு. வி.வி. கிரி 1969 – 1974
  5. திரு. பக்ருதீன் அலி அஹமத் 1974 – 1977
  6. திரு. நீலம் சஞ்சீவ் ரெட்டி 1977 – 1982
  7. திரு. கியானி ஜெயில் சிங் 1982 – 1987
  8. திரு. ஆர். வெங்கடராமன் 1987 – 1992
  9. திரு. சங்கர் தயாள் சர்மா 1992 – 1997
  10. திரு. கே. ஆர். நாராயணன் 1997 – 2002
  11. திரு.ஏ.பி.ஜே. அப்துல்கலாம் 2002 – 2007
  12. திருமதி, பிரதீபா பாட்டீல் 2007 – 2012
  13. திரு. பிரனாப் முகர்ஜி 2012 – 2017
  14. திரு. ராம் நாத் கோவிந்த் 2017 முதல்

சட்டமன்ற அதிகாரங்கள்

நிதி அதிகாரங்கள்

நீதி அதிகாரங்கள்

இராணுவ அதிகாரங்கள்

இராஜதந்திர அதிகாரங்கள்

வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்களைக் குடியரசுத் தலைவர் நியமிப்பதோடு மட்டுமல்லாமல் அவர் இந்தியாவுக்கான வெளிநாட்டுத் தூதர்களையும் வரவேற்கிறார். வெளிநாடுகளுக்கான அனைத்து உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும் குடியரசுத் தலைவரின் பெயராலேயே நடைபெறுகின்றன.

நெருக்கடி நிலை அதிகாரங்கள்

குடியரசுத் தலைவர் நீக்கம்

குடியரசுத் தலைவரின் தனிச்சலுகைகள்

சட்டப்பிரிவு 36(1) ன் படி குடியரசுத் தலைவர் தன்னுடைய பணி மற்றும் அதிகாரத்தைச் செய்ய வேண்டும் என எண்ணுவதிலும் செயல்படுத்துவதிலும் எந்த நீதிமன்றத்திற்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை.

துணைக் குடியரசுத் தலைவர்

63வது பிரிவின் படி நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவியைத் துணைக் குடியரசுத் தலைவர் வகிக்கிறார். அலுவலக முன்னுரிமையின் படி குடியரசுத் தலைவருக்கு அடுத்த தர நிலையில் இவர் உள்ளார். இப்பதவி அமெரிக்க துணைக் குடியரசுத் தலைவரின் பதவியைப் போன்றது. நாட்டின் அரசாங்க நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற இப்பதவி உருவாக்கப்பட்டுள்ளது.

துணைக்குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் துணைக்குடியரசுத் தலைவருக்கான தகுதிகளை வகுத்துள்ளது.

துணைக் குடியரசுத் தலைவர் – தேர்தல் மற்றும் பதவிக்காலம்

துணைக் குடியரசுத் தலைவர் பதவி நீக்கம்

மக்களவையின் ஒப்புதலுடன், மாநிலங்களைவையில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் துணைக் குடியரசுத் தலைவரைப் பதவியிலிருந்து நீக்கலாம். இத்தகைய தீர்மானம் கொண்டு வர குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன்னரே துணைக் குடியரசுத் தலைவருக்கு ஒரு அறிவிப்பை வழங்க வேண்டும்.

துணைக் குடியரசுத் தலைவரின் செயல்பாடுகள்

துணைக் குடியரசுத் தலைவர் அவர் வகிக்கும் பதவியின் நிமித்தமாக மாநிலங்களவையின் தலைவராகச் செயல்படுகிறார். மாநிலங்களவையின் தலைவர் என்கிற முறையில் அவர் பல்வேறு பணிகளை மேற்கொள்கிறார்.

முடிவு வாக்கு (Casting Vote)

மாநிலங்களவையில் சட்ட மசோதாவின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பு சமநிலையில் இருக்கும்பட்சத்தில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 100ன் படி துணைக் குடியரசுத் தலைவர் வாக்கு அளிக்கலாம். இது சட்ட மசோதாவின் ஒப்புதலுக்கு ஒரு வாக்கு மட்டுமே தேவை என்ற நிலையைக் குறிக்கிறது. ஆகையால் அவர் இந்த விருப்புரிமை அதிகாரத்தைச் சட்ட மசோதாவுக்கு ஆதரவாகவோ எதிராகவோ வாக்களிக்கும் அதிகாரம் பெற்றவர் ஆவார். அவருடைய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எவருக்கும் உரிமை இல்லை.

பிரதம அமைச்சர்

இந்திய பிரதமர்கள் பட்டியல்

  1. திரு. ஜவகர்லால் நேரு 1947 – 64
  2. திரு. லால் பகதூர் சாஸ்திரி 1964 – 66
  3. திருமதி. இந்திரா காந்தி 1966 – 77
  4. திரு. மொரார்ஜி தேசாய் 1977 – 79
  5. திரு. சரண் சிங் 1979 – 80
  6. திருமதி. இந்திரா காந்தி 1980 – 84
  7. திரு. ராஜீவ் காந்தி 1980 – 89
  8. திரு. வி.பி. சிங் 1989 – 1990
  9. திரு. சந்திரசேகர் 1990 – 91
  10. திரு. பி. வி.நரசிவ்வ ராவ் 1991 – 96
  11. திரு. அசல் பிகாரி வாஜ்பாய் மே 1996
  12. திரு. டி.தேவகவுடா 1996 -97
  13. திரு. ஐ.கே. குஜ்ரால் 1997 – 98
  14. திரு. அடல் பிகாரி வாஜ்பாய் 1998 – 2004
  15. திரு. மன்மோகன் சிங் 2004 – 14
  16. திரு. நரேந்திர மோடி 2014 முதல்

பிரதம அமைச்சரின் செயல்பாடுகளும் , கடமைகளும்

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 78 பிரதம அமைச்சரின் கடமைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

அமைச்சரவைக் குழு

தேர்தலுக்குப் பின்னர் பிரதம அமைச்சரின் ஆலோசனையின்படி குடியரசுத் தலைவர் அமைச்சரவையை நியமிக்கிறார். சில சமயங்களில் நாடாளுமண்ற உறுப்பினராய் இல்லாதவர்கூட அமைச்சராக நியமிக்கப்படலாம். ஆனால் அவர் ஆறு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தின் ஏதேனும் ஓர் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒட்டு மொத்த மக்களவை உறுப்பினர்களில் 15% மட்டுமே அமைச்சரவை உறுப்பினர்களாக (பிரதம அமைச்சர் உட்பட) இருத்தல் வேண்டும் என இந்திய அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது.

மத்திய அமைச்சர்களின் வகைகள்

மத்திய அமைச்சர்கள் மூன்று தரநிலைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

  1. கேபினெட் (அ) ஆட்சிக்குழு அமைச்சர்கள்
  2. இராசாங்க அமைச்சர்கள்
  3. இணை அமைச்சர்கள்

கேபினெட் அமைச்சர்கள்

இராசாங்க அமைச்சர்கள்

அமைச்சரவை குழுவின் இரண்டாவது வகையினரே இராசாங்க அமைச்சர்கள் ஆவர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் பொறுப்பு அமைச்சராக செயல்படுகின்றனர். ஆனால் அழைப்பு விடுத்தால் மட்டுமே இவர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வர்.

இணை அமைச்சர்கள்

அமைச்சரவையில் மூன்றாவதாக, இணை அமைச்சர்கள் உள்ளனர். காபினெட் அமைச்சர்கள் (அ) இராசாங்க அமைச்சர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட கடமைகளைச் செயலாற்றுவதில் இவர்கள் உதவி புரிகின்றனர்.

இந்திய நாடாளுமன்றம்

இந்திய நாடாளுமன்றம் மூன்று பகுதிகளைக் கொண்டது. அவைகள்

1. குடியரசுத் தலைவர்

2. ராஜ்ய சபா (மாநிலங்களவை)

3. லோக்சபா (மக்களவை).

மாநிலங்களவை

மாநிலங்களவை உறுப்பினராவதற்கானத் தகுதிகள்

மாநிலங்களவை உறுப்பினராக ஒருவர் கீழ்க்காணும் தகுதிகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.

மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக் காலம்

மாநிலங்களவை ஒரு நிரந்தர அவை ஆகும். அதனைக் கலைக்க முடியாது. மாநிலக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறுகின்றனர். அதனால் ஏற்படும் காலியிடங்கள் புதிய உறுப்பினர்களால் நிரப்பப்படுகின்றன.

துணைக் குடியரசுத் தலைவர் பதவி வழி மாநிலங்களவையின் தலைவராகச் செயல்படுகிறார். மாநிலங்களவையின் துணைத் தலைவர் அதன் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

தேர்தல்

தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் (MLA’s) ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த தேர்தல் முறை மறைமுக தேர்தல் எனப்படும். இவர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.

மாநிலங்களவையின் செயல்பாடுகள்

நிதி மசோதா

நிதி மசோதாவினை திருத்தம் செய்யவோ அல்லது நிராகரிக்கவோ மாநிலங்களவைக்கு அதிகாரம் இல்லை. மக்களவையில் மட்டுமே நிதி மசோதாவினை அறிமுகப்படுத்த முடியும். இம்மசோதா மாநிலங்களவையின் ஒப்புதலுடன் சட்டமாக மாறும். மாநிலங்களவை 14 நாட்களுக்குள் ஒப்புதல் அளிக்கவில்லையெனில், ஒப்புதல் பெறாமலேயே சட்டமாகிவிடும். மாநிலங்களவையின் சட்டத் திருத்தத்திற்கான முன்மொழிவுகளை மக்களவை கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. எந்த முன்மொழிவுகளையும் மக்களவை நிராகரிக்கலாம்.

மக்களவை

மக்களவையானது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட இந்திய நாடாளுமன்றத்தின் புகழ்மிக்க அவை ஆகும். மக்களவைக்கு அதிகபட்சமாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் 552 அவற்றில் 530 உறுப்பினர்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், 13 உறுப்பினர்கள் யூனியம் பிரதேசகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆங்கிலோ –இந்தியன் சமூகத்திலிருந்து 2 உறுப்பினர்களைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். தற்சமயம் மக்களவை 545 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

மக்களவை உறுப்பினராவதற்கான தகுதிகள்

மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம்

பொதுவாக, மக்களவை தன்னுடைய முதல் கூட்டத்திலிருந்து ஐந்து ஆண்டுகள் செயல்படும். அதன் காலம் முடிவதற்கு முன் பிரதம அமைச்சரின் ஆலோசனையின்பேரில் குடியரசுத்தலைவர் மக்களவையைக் கலைக்கலாம். இந்திய அரசியலமைப்பின் நெருக்கடிநிலை சட்டத்தின்படி மக்களவையின் நம்பிக்கை வாக்கெடுப்பில் எந்தவொரு கட்சிக்கோ (அ) கூட்டணிக்கோ பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் குடியரசுத் தலைவர் மக்களவையைக் கலைக்கலாம்.

தேர்தல்

மக்களவையின் செயல்பாடுகள்

சபாநாயகர்

நாடாளுமன்றக் கூட்டத்தொடர்

பட்ஜெட் கூட்டத் தொடர்: பிப்ரவரி முதல் மே வரை

மழைக் (பருவ) காலக் கூட்டத் தொடர்: ஜூலை முதல் செப்டம்பர் வரை

குளிர் காலக் கூட்டத் தொடர்: நவம்பர் மற்றும் டிசம்பர்

நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்

இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்

இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்

நீதித்துறை

மத்திய அரசாங்கத்தின் மூன்றாவது அங்கம் நீதித்துறை ஆகும். குடிமக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதில் நீதித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் விதிகள் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்வதிலும் , விளக்கமளிப்பதிலும் இது முக்கிய பங்கை வகிக்கிறது.

உச்சநீதிமன்றம்

உச்ச நீதிமன்றத்தின் அமைப்பு

1950ஆம் ஆண்டு அரசியலமைப்பின் தொடக்கத்தில் ஒரு தலைமை நீதிபது உட்பட 8 நீதிபதிகளை உச்ச நீதிமன்றம் கொண்டிருந்தது. தற்சமயம் உச்ச நீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதி உட்பட 28 நீதிபதிகளைக் கொண்டுள்ளது.

நீதிபதிகள் நியமனம்

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். மற்ற நீதிபதிகளைத் தலைமை நீதிபதியைத் தலைவராகக் கொண்ட மூத்த நீதிபதிகள் குழுவின் (Collegiums) ஆலோசனையுடன் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

உச்சநீதிமன்ர நீதிபதிக்கான தகுதிகள்

உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களும், பணிகளும்

நீதித்துறை செயல்பாடுகள்

உச்சநீதிமன்றம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் ஆகும். கீழ்க்கண்டவைகள் உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகளாகும்.

அ) தனக்கேயுரிய நீதி வரையறை

உச்ச நீதிமன்றத்திற்கு நேரடியாக வரும் வழக்குகள் தனக்கேயுரிய நீதிவரையறைக்குட்பட்டவையாகும். அவைகள்

  1. இந்திய அரசிற்கும் ஒரு மாநிலம் அல்லது அதற்கு மேற்பட்டப் மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்கள்
  2. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கிடையிலான சிக்கல்கள்
  3. அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக எழும் சிக்கல்கள் ஆகியன உச்ச நீதிமன்றத்தின் தனக்கேயுரிய நீதி வரையறைக்குட்பட்டதாகும்.
  1. ஆட்கொணர் நீதிப்பேராணை
  2. கீழ் நீதிமன்றங்களுக்கு விடுக்கும் கட்டளை நீதிப்பேராணை
  3. வழக்கு விசாரணைத் தடை நீதிப்பேராணை
  4. தசைமாற்று நீதிப்பேராணை
  5. உரிமை வினவு நீதிப்பேராணை

ஆ) மேல்முறையீட்டு நீதிவரையறை

உச்சநீதிமன்றமே நாட்டின் இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமாகும். மாநில உயர் நீதிமன்றங்கள் உரிமையியல், குற்றவியல் (Civil and Criminal) அரசியலமைப்பு வழக்குகள் மீதான தீர்ப்புகளுக்கு எதிரான மேல்முறையீய்யு வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரிக்கின்றது. அப்படிப்பட்ட வழக்குகளைத் தீர்க்க அரசியலமைப்புச் சட்டப்படி மேலும் சட்டவிளக்கம் தேவையென உயர் நீதிமன்றம் சான்றிதழ் அளித்தால் மட்டுமே அவ்வழக்குகளை உச்ச நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்ல முடியும்.

இ) ஆலோசனை நீதிவரையறை

பொது முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு சட்டம் அல்லது உண்மை மீதான உச்ச நீதிமன்றத்தின் கருத்தினைப் பெற அரசியலமைப்புச் சட்டம் குடியரசுத் தலைவருக்கு அதிகாரத்தினை வழங்குகிறது.

ஈ) இதர நீதிவரையறை

உச்ச நீதிமன்றம் கீழ்க்காணும் இதர அதிகாரங்களைப் பெற்றுள்ளது.

உ) நீதிப்புனராய்வு

ஒரு சட்டத்தினை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திடம் உள்ளது இது நீதிப்புனராய்வு (நீதிமன்ற மறுஆய்வு அதிகாரம்) எனப்படும்.

பின்வரும் தனிப்பட்ட நீதிமன்ற மறுஆய்வு அதிகாரங்களை உச்சநீதிமன்றம் பெற்றுள்ளது. அவை

  1. மத்திய, மாநிலங்களுக்கிடையிலான பிரச்சனைகள்
  2. அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்படும் சந்தேகங்கள், கருத்து வேற்றுமைகளை விளக்கி தெளிவுபடுத்துதல்.
  3. அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல்
  4. மாநில சட்டமன்றங்கள் இயற்றும் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கும் அதிகாரம் போன்றவைகளை உச்ச நீதிமன்றம் பெற்றுள்ளது.

Exit mobile version