பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை Notes 8th Social Science Lesson 21 Notes in Tamil

8th Social Science Lesson 21 Notes in Tamil

21. பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

I. பாதுகாப்பு

அறிமுகம்

இந்தியா அமைதியை விரும்பும் ஒரு நாடு. பொதுவாக, இந்தியா அனைத்து நாடுகளிடமும் குறிப்பாக அண்டை நாடுகளிடம் நல்லுறவைப் பேணுகிறது. அதேநேரத்தில் அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து இந்திய எல்லையை பாதுகாப்பதற்கு, இந்தியா தன் பாதுகாப்பை பலப்படுத்துகிறது. எனவே இந்திய அரசு பாதுகாப்புத் துறைக்கு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது.

பாதுகாப்பு அமைப்பின் அவசியம்

ஒவ்வொரு நாட்டின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அதன் தேசிய பாதுகாப்பு மிகவும் அவசியமானது ஆகும். இது நாட்டின் அமைதிக்கும், முன்னேற்றத்திற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

இந்திய பாதுகாப்புச் சேவைகள்

இந்தியக் குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவராகவும், நமது பாதுகாப்பு அமைப்பில் மிக உயர்ந்த பதவி நிலையையும் வகிக்கிறார். அவர் இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி ஆவார்.

இந்தியாவில் பாதுகாப்பு படைகளின் பிரிவுகள்

இந்திய ஆயுதப் படைகள் (Indian Armed Forces)- ஆயுதப் படையானது நாட்டின் இராணுவப் படை, கடற்படை, விமானப்படை மற்றும் கடலோரக் காவல்படை ஆகியவற்றை உள்ளடக்கிய முதன்மைப் படைகள் ஆகும். அவைகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றன.

துணை இராணுவப் படைகள் (Paramilitary Forces) – அசாம் ரைபில்ஸ், சிறப்பு எல்லைப்புறப் படை ஆகியன துணை இராணுவப் படைகளாகும்.

மத்திய ஆயுதக் காவல் படைகள் (Central Armed Police Forces) – BSF, CRPF, ITBP, CISF மற்றும் SSB ஆகியன மத்திய ஆயுதக் காவல் படைகளாகும். அவைகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றன. CAPF என்ற படைப்பிரிவுகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிக்கு ஏற்றவாறு இராணுவம் மற்றும் காவல் துறையுடன் இணைந்து பணியாற்றுகின்றன.

இந்திய ஆயுதப் படைகள்

இராணுவப் படை (Army)

கடற்படை (Navy)

கடற்படையின் முதன்மை நோக்கம் நாட்டின் கடல் எல்லைகளை பாதுகாப்பதாகும். மேலும் நாட்டின் பிற ஆயுதப்படைகளுடன் இணைந்து இந்திய நிலப்பகுதி , மக்கள், கடல்சார் நலன்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் (அ) ஆக்கிரமிப்புகளைத் தடுக்க அல்லது தோற்கடிக்கும் பணியில் ஈடுபடுகிறது. இது அட்மிரல் (Admiral) என்றழைக்கப்படும் நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட கடற்படைத் தளபதியால் வழிநடத்தப்படுகிறது. இது மூன்று கடற்படைப் பிரிவுகளைக் கொண்டது.

விமானப்படை (Air Force)

இந்திய விமானப்படை என்பது இந்திய ஆயுதப்படைகளின் வான்வெளி படை ஆகும். இந்திய வான்வெளியைப் பாதுகாப்பதும், ஆயுத மோதலின் போது வான்வழிப் போரை நடத்துவதும் இதன் முதன்மை நோக்கம் ஆகும். இது ஏர் சீப் மார்ஷல் (Air Chief Marshall) என்றழைக்கப்படும். நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட விமானப்படை தளபதியால் வழிநடத்தப்படுகிறது. இது ஏழு படைப்பிரிவுகளைக் கொண்டது.

இந்தியக் கடலோரக் காவல்படை (Indian Coast Guard)

இந்தியப் பாராளுமன்றத்தின் 1978ஆம் ஆண்டு கடலோரக் காவல் படைச் சட்டத்தின்படி, இந்தியாவின் சுதந்திர ஆயுதப் படையாக இந்தியக் கடலோரக் காவல்படை 1978இல் நிறுவப்பட்டது. இது பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த கடலோரக் காவல் படையானது கடற்படை, மீன்வளத் துறை, சுங்கத்துறை, மத்திய-மாநில காவல்படை ஆகியவற்றுடன் ஒத்துழைத்து செயல்படுகிறது.

துணை இராணுவ பாதுகாப்புப் படைகள்

1. அஸ்ஸாம் ரைபிள்ஸ் (AR)

2. சிறப்பு எல்லைப்புறப் படை (SFF)

அஸ்ஸாம் ரைபிள்ஸ் (Assam Rifles – AR)

இது அஸ்ஸாம் பகுதியில் 1835ஆம் ஆண்டு பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டது. இது கச்சார் லெவி எனப்பட்ட குடிப்படை (இராணுவ பயிற்சி பெற்ற மக்கள் குழு) ஆகும். தற்போது இதில் 46 படைப்பிரிவுகள் உள்ளன. இது உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

சிறப்பு எல்லைப்புற படை (Special Frontier Force – SFF)

சிறப்பு எல்லைப்புற படை என்பது ஒரு துணை இராணுவ சிறப்புப்படை ஆகும். இது 1962இல் உருவாக்கப்பட்டது. இப்படை புலனாய்வு பணியகத்தின் (IB) நேரடி மேற்பார்வையில் இருந்தது. பின்னர் இது இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் கீழ் செயல்பட்டு வருகிறது.

மத்திய ஆயுதக் காவல் படைகள் (Central Armed Police Forces – CAPF)

துணை இராணுவப் படையில் இருந்த பின்வரும் ஐந்து படைப்பிரிவுகள் மத்திய ஆயுதக் காவல் படையாக மறுவரையறை செய்யப்பட்டு மார்ச், 2011 முதல் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

  1. மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF)
  2. இந்தோ –திபெத்திய எல்லைக் காவல் (ITBP)
  3. எல்லை பாதுகாப்புப் படை (BSF)
  4. மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (CISF)
  5. சிறப்பு சேவை பணியகம் (SSB)

மத்திய ரிசர்வ் காவல் படை (Central Reserve Police Force – CRPF)

இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் (Indo-Tibetan Border Police –ITBP)

தேசிய மாணவர் படை (National Cadet Corps – NCC)

தேசிய மாணவர் படை என்பது இராணுவப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முத்தரப்பு சேவை அமைப்பாகும். இந்த அமைப்பு நாட்டின் இளைஞர்களை ஒழுக்கமான மற்றும் தேசபக்தி மிக்க குடிமக்களாக உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது. தேசிய மாணவர் படை என்பது ஒரு தன்னார்வ அமைப்பாகும். இது இந்தியா முழுவதும் உள்ள உயர் நிலைப்பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்து மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறது. மேலும் மாணவர்களுக்கு சிறிய ஆயுதங்கள் மற்றும் அணிவகுப்புகளில் அடிப்படை இராணுவப் பயிற்சியும் அளிக்கிறது.

எல்லை பாதுகாப்புப்படை (Border Security Force – BSF)

இது இந்தியாவின் எல்லைக்காவல் படை என அழைக்கப்படுகிறது. அமைதி காலங்களில் இந்திய நில எல்லைப்பகுதிகளைக் காப்பது மற்றும் நாடு கடந்த குற்றங்களை தடுப்பது ஆகிய பணிகளைச் செய்கிறது.

மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (Central Industrial Security Force – CISF)

மத்திய தொழிலக பாதுகாப்புப் படை 1969 மார்ச் 10ஆம் நாள் இந்திய நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது. முக்கிய அரசாங்க கட்டடங்களை பாதுகாப்பது, டெல்லி மெட்ரோ பாதுகாப்பு மற்றும் விமான நிலைய பாதுகாப்பு ஆகியன இதன் முக்கிய பணிகள் ஆகும்.

ஜனவரி 15 – இராணுவ தினம்

பிப்ரவரி 1 – கடலோரக் காவல்படை தினம்

மார்ச் 10 – மத்திய தொழிலக பாதுகாப்புப் படை தினம்

அக்டோபர் 7 – விரைவு அதிரடிப் படை தினம்

அக்டோபர் 8 – விமானப்படை தினம்

டிசம்பர் 4 – கடற்படை தினம்

டிசம்பர் 7 – ஆயுதப்படைகள் கொடி தினம்

சிறப்பு சேவை பணியகம் / சாஷாஸ்திர சீமா பால் (Special Service Bureau / Sashastra Seema Bal – SSB)

இது இந்தியா-நேபாளம் மற்றும் இந்தியா-பூடான் எல்லைப் பகுதிகளை பாதுகாக்கும் எல்லை ஆயுதப் படைகள் ஆகும்.

ஊர்க்காவல் படை (Home Guard)

II. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

வெளியுறவுக் கொள்கை என்பது இறையாண்மை கொண்ட ஒரு நாடு உலகின் மற்ற நாடுகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்ளும் என்பதை வரையறுக்கும் அரசியல் இலக்குகளின் தொகுப்பாகும்.

இது நாட்டு மக்களின் நலன்களையும் நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாக்க முயல்கிறது. நமது நாட்டின் வெளியுறவு என்பது சில கொள்கைகளையும், செயல்திட்டங்களையும் அடிப்படையாக கொண்டது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது அதன் காலனித்துவ பாதிப்புகளின் பின்னணியிலிருந்து உருவானது ஆகும்.

இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கொள்கைகள்

பஞ்சசீலம்

  1. ஒவ்வொரு நாட்டின் எல்லையையும், இறையாண்மையையும் பரஸ்பரம் மதித்தல்
  2. பரஸ்பர ஆக்கிரமிப்பின்மை
  3. பரஸ்பர உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல்
  4. பரஸ்பர நலனுக்காக சமத்துவம் மற்றும் ஒத்துழைத்தல்
  5. அமைதியாக இணைந்திருத்தல்

அணிசேராமை

அணிசேரா இயக்கத்தின் தலைவர்கள்: இந்தியாவின் ஜவஹர்லால் நேரு, யுகோஸ்லாவியாவின் டிட்டோ, எகிப்தின் நாசர், இந்தொனேசியாவின் சுகர்னோ மற்றும் கானாவின் குவாமே நிக்ரூமா ஆகியோராவர்.

நெல்சன் மண்டேலா: இவர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் (தென் ஆப்பிரிக்கா) தலைவராக செயல்பட்டார். இவர் இனவெறிக்கு எதிரான ஓர் உறுதியான போராளி ஆவார். நிறவெறிக் கொள்கை என்பது இனப்பாகுபாட்டின் ஒரு மோசமான வடிவம் ஆகும். இது மனிதாபிமானத்திற்கும், மக்களாட்சிக்கும் எதிரானது. இனவெறிக் கொள்கை மற்றும் அனைத்து வகையான இனப்பாகுபாட்டிற்கும் எதிராக இந்தியா போராடியது. 1990 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் இனவெறிக் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வந்தது இந்திய வெளியுறவுக் கொள்கையின் மிகச்சிறந்த வெற்றியாகும்.

அண்டை நாடுகளுடனான இந்தியாவின் நட்புறவு

இந்தியா பின்வரும் நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொண்டு பரந்த நாடாக விளங்குகிறது.

அண்டை நாடுகளுக்கான முன்னுரிமைக் கொள்கை

கிழக்குச் செயல்பாடு என்ற கொள்கை

சார்க் (SAARC)

பி.சி.ஐ.எம் (BCIM)

இது வங்காளதேசம், சீனா, இந்தியா, மியான்மர் பொருளதார போக்குவரத்து, எரிசக்தி மற்றும் தொலை தொடர்பு ஆகியவற்றில் எல்லை கடந்து ஒரு செழிப்பான பொருளாதார மண்டலத்தை உருவாக்க இக்கூட்டமைப்பு உதவுகிறது.

பிம்ஸ்டெக் (BIMSTEC)

பி.பி.ஐ.என் (BBIN)

Exit mobile version