பண்டைய இந்தியா : செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள் Notes 11th History

11th History Lesson 15 Notes in Tamil

15] பண்டைய இந்தியா : செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

அறிமுகம்

சான்றுகள்

வேதகால இலக்கியங்கள்

ஜென்ட் அவெஸ்தா:

ஜென்ட் அவெஸ்தா எனப்படும் இப்பாரசீக / ஈரானிய நூல் ஜொராஸ்டிரிய மதத்தைச் சேர்ந்த நூலாகும். இந்தோ –ஈரானிய மொழிகளைப் பேசிவந்த மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு, அவர்களின் கடவுள்கள் குறித்து இந்நூல் பல செய்திகளைக் கூறுகிறது. இந்தியாவின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளைப் பற்றிய குறிப்புகளும் இந்நூலில் உள்ளன. இந்நூலில் இடம் பெற்றுள்ள சொற்களோடு மொழி ஒப்புமை கொண்டுள்ளன. இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியே அமைந்திருந்த ஆரியர்களின் தொடக்ககால வாழிடங்கள் பற்றி அறிந்துகொள்ள ஏதுவான துணைச்சான்றுகளை இந்நூல் கொண்டுள்ளது.

இந்தியாவில் ஆரியருக்கு முந்தைய – ஹரப்பாவிற்கு பிந்தைய, செம்பு காலகட்ட பண்பாடுகள்

பழுப்பு மஞ்சள்நிற பாண்டப் பண்பாடு

பழுப்பு மஞ்சள்நிற பாண்டப் பண்பாடு

தென் இந்தியச் செம்புக்காலப் பண்பாடுகள்

வட இந்தியாவில் இரும்புக்காலம்

தமிழகத்தில் பெருங்கற்காலம் / இரும்புக்காலம்

தமிழகத்தில் பெருங்கற்கால அகழ்வாய்விடங்கள்

ஆதிச்சநல்லூர்

ஆதிச்சநல்லூர் திருநெல்வேலியிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. 1876ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த இயற்கைவியலாளரும், இன வரைவியலாளருமான ஆண்டிரு ஜாகர் ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வை மேற்கொண்டார். அங்கிருந்து சுடப்பட்ட மட்பாண்டங்கள் பல அளவுகளிலும் வடிவங்களிலுமான பாத்திரங்கள் ஆகியவற்றின் மாதிரிகளையும் கணிசமான எண்ணிக்கையில் இரும்புக் கருவிகள், ஆயுதங்கள், பெருமளவிலான எலும்புகள், மண்டையோடுகள் ஆகியவற்றையும் தன்னோடு எடுத்துச் சென்றால். தற்போது அவையனைத்தும் பெர்லின் அருங்காட்சியகத்தில் உள்ளன.

ஆதிச்சநல்லூரிலுள்ள புதைமேட்டிலிருந்து கிடைத்தவை

வெண்கலப் பொருள்களின் மீதும் அணிகலன்களின் மீதும் விலங்கு உருவங்களைப் பொறிப்பது பழங்கால கைவினைத் தொழில் நுட்பத்தைக் குறிப்பதாகும். (கால்டுவெல் இவ்விடத்திற்கு வந்திருந்தபோது செம்பிலான வளையல் ஒன்றையும் கண்டெடுத்தார்) மட்பாண்டங்கள் செய்வதிலும் பித்தளையை உருவாக்குவதிலும், நெசவு , கல், மர வேலைப்பாடுகளிலும் ஆதிச்சநல்லூர் மக்கள் சிறந்து விளங்கினர். நெல் மற்றும் பிற தானியங்களின் உமியும் கண்டெடுக்கப்பட்டது. இத்தானியங்கள் அக்காலத்தில் புழக்கத்திற்கு வந்துவிட்டதை இது குறிக்கின்றது. போர்களிலும் விலங்குகளை பலி கொடுக்கும்போதும் பயன்படுத்தப்பட்ட கருவிகளும் கண்டெடுக்கப்பட்டன. இது ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் வேத மதங்களைப் பின்பற்றியவர்கள் அல்ல என கால்டுவெல்லை எண்ண வைத்தது.

பையம்பள்ளி

பையம்பள்ளி, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவைச் சேர்ந்த கிராமமாகும். 1960களில் இந்தியத் தொல்லியல் துறை பெருங்கற்காலத்தோடு தொடர்புடைய இவ்விடத்தில் அகழ்வாய்வை நடத்தி கருப்பு மற்றும் சிகப்பு நிற மட்பாண்டங்களை வெளிக் கொணர்ந்தது. மேலும் இப்பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான ஈமத் தாழிகளும் கண்டறியப்பட்டன. இப்பண்பாட்டின் காலம் ரேடியோ கார்பன் பரிசோதனை மூலம் பொ.ஆ.மு 1000 என்று கணிக்கப்பட்டுள்ளது.

கொடுமணல்

ஆரியர்களும் ரிக் வேதகால சமூகமும்

இதுவரை நாம் பிற்கால ஹரப்பா பண்பாடு, செம்புக்காலப் பண்பாடு, ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல்நிற மட்பாண்டப் பண்பாடு ஆகியன குறித்து பார்த்தோம், இனி வேதநூல்களிலிருந்து பெறப்பட்ட சான்றுகள் குறித்து நோக்குவோம். பொருட் பண்பாடுகளைப் பற்றி மட்டுமே தெரியப்படுத்தும் தொல்லியல் இடங்களைப் போலல்லாமல், வேதங்கள், மக்களின் இனக்குழு மற்றும் பண்பாட்டு அடையாளங்களைப் பற்றி பேசுகின்றன. வேதங்களில் காணப்படும் குறிப்புகளின் காரணமாக, தொடக்ககால இந்திய வரலாற்றில், ஆரியர்கள் குறித்து எழும் விவாதங்கள் முக்கியத்துவம் கொண்டவையாக ஆகியுள்ளன.

ஆரியர்கள்

ரிக் வேதகாலப் பண்பாடு

ரிக்வேத சம்ஹிதையே பழமையான நூலாகும். அது தொடக்க வேத காலத்தோடு தொடர்புடையதாகும். பல அறிஞர்கள் தொடக்க வேதகாலப் பண்பாடு பொ.ஆ.மு. 1500க்கும் பொ.ஆ.மு. 1000 க்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்ததெனக் கணக்கிடுகின்றனர். இக்காலகட்ட அரசியல், சமூக, பொருளாதார வாழ்க்கைக் கூறுகள் ரிக் வேதப் பாடல்களில் எதிரொலிக்கின்றன.

புவியியல்

இந்தியத் துணைக் கண்டத்தில், தொடக்க வேதகால ஆரியர்கள் கிழக்கு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பஞ்சாப், மேற்கு உத்திர பிரதேசத்தின் சில பகுதிகளில் வாழ்ந்தனர்.

தாசர்களும் தசயுக்களும்

அரசு முறையும் அரசியல் மோதல்களும்

சமூகப் பிரிவுகள்

இனக்குழுக்களும் குடும்பங்களும்

இரத்த உறவின் அடிப்படையிலேயே ரிக்வேத சமூகம் கட்டமைக்கப்பட்டிருந்தது. மக்கள் குறிப்பிட்ட குலங்களோடு இனங்காணப்பட்டனர். குலங்கள் ஒன்றிணைந்து ‘ஜனா’ எனும் சமூகம் ஆனது. ஜனா என்ற சொல்லுக்கு பழங்குடி , சமூகம் எனப் பொருள். ரிக் வேதத்தில் ‘ஜனா’ என்னும் சொல் 21 முறை இடம் பெற்றுள்ளது. ஆனால் ஜனபதா என்னும் சொல் ஒருமுறைகூட இடம்பெறவில்லை. சாதாரண மக்களைக் குறிப்பிடக் கூடிய ‘விஷ்’ என்னும் சொல் 170 முறை இடம் பெற்றுள்ளது. இவர்கள் கிராமங்களில் வாழ்ந்தனர். ‘கிருஷா’ எனும் சொல்லுக்கு குடும்பம் என்று பொருள். ஒரு இனக்குழுவினுள் குடும்பமே முக்கியமான சமூக அலகாகும். குடும்பத்திற்குத் தலைமையேற்றவன் ‘கிருகபதி’ ஆவான். அவன் மனைவி ‘ஸபத்தினி’ ஆவாள். இக்காலத்தில் குடும்பம் என்பது ஒருவேளை கூட்டுக்குடும்பமாக இருந்திருக்கலாம்.

பெண்கள்

பெண்கள் சமூகத்தில் மரியாதைக்குரிய இடத்தை வகித்தனர் என்ற போதிலும், அதைப் பொதுமைப்படுத்த முடியாது. சமூகம் தந்தைவழிச் சமூகமாக இருந்ததால் ஆண் குழந்தைகளுக்குச் சமூகத்தில் முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

ஆண் குழந்தையின் பிறப்பும், கால்நடைகளின் பிறப்பும் பெரிதும் விரும்பப்பட்டது. அக்காலச் சமூக அமைப்பு இராணுவத்தன்மை கொண்டதாக இருந்ததால் போர்புரிவதற்கும் நிலங்களின் மேல் ஆதிக்கம் செலுத்துவதற்கும் ஆண் மக்கல் தேவைப்பட்டிருக்கலாம். பெண்கள் கிராமக் கூட்டங்களில் கலந்துகொண்டனர். வேள்விகளில் பங்கெடுத்தனர். திருமணம் செய்துகொள்வது நடைமுறையில் இருந்தாலும் புராதன மணமுறைகலும் பின்பற்றப்பட்டன. பலரைக் கணவராய் கொள்வது நடைமுறையில் இருந்ததாகத் தெரிகிறது. மறு மணமும் பழக்கத்தில் இருந்துள்ளது. பதினாறு – பதினேழு வயதில் திருமணம் நடைபெற்றதாக அறிஞர்கள் கருதுகின்றனர். வரலாற்று அறிஞர்கள் கருத்துப்படி அப்போது குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றதாகத் தெரியவில்லை.

பொருளாதாரம்

வேளாண்மை

ரிக்வேத மக்களிடையே வேளாண்மை வளர்ந்திருந்ததைத் தொல்லியல் சான்றுகள் சுட்டுகின்றன. கலப்பையின் கொழுமுனை ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேளாண் நிலம் க்ஷேத்ரா என்று அறியப்பட்டிருந்தது. கிரிஷி என்ற சொல் உழவைக் குறிப்பதாகும். லங்லாம் சுரா ஆகிய சொற்கள் கலப்பையைக் குறிப்பனவாகும். சீத்தா என்ற சொல் கலப்பையின் கொழுமுனையைக் குறிப்பதாகும். எருதுகளைக் கொண்டும் சக்கரங்களின் துணையோடும் கிணறுகளிலிருந்து நீர் இறைத்து வேளாண்மை செய்யப்பட்டிருக்கலாம். பல்வேறு பருவ காலங்களையும் விதைத்தல், அறுவடை செய்தல், பதர் நீக்குதல் ஆகியன குறித்தும் அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் பார்லியையும் (யவம்) கோதுமையையும் (கோதுமா) பயிரிட்டார்கள்.

கால்நடை வளர்ப்பு

ஆரியர்கள் வேளாண்மை செய்தபோதிலும் கால்நடை வளர்ப்பையும் பொருளாதாரத்திற்காய் மேற்கொண்டனர். கால்நடைகள் சொத்தாகக் கருதப்பட்டன. ரிக் வேதத்தில் போர்களைக் குறிக்கப் பயன்பட்ட சொல்லான காவிஸ்தி என்னும் சொல்லின் பொருள் பசுக்களைத் தேடுவதாகும். தற்காலத்தில் மருவி பகைக்குழு என பொருள்படும் சொல் ‘கோஷ்டி’ ஆகும். மதகுருமார்களுக்குப் பெரும்பாலும் பசுக்களையும் பெண் அடிமைகளையுமே நன்கொடையாக வழங்கினார்கள். நிலக்கள் கொடையாக வழங்கப்படாதது மேய்ச்சல் பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. நிலத்தைப் பொருத்தமட்டிலும் தனியுடைமை என்பது இருக்கவில்லை.

கைவினைத்தொழில்

மரவேலை செய்வோர், தேர்களைச் செய்வோர், துணி நெய்வோர், தோல் வேலை செய்வோர் ஆகியோரை ரிக்வேதம் குறிப்பிடுகின்றது. இக்காலத்தில் ஏற்பட்ட முக்கியமான வளர்ச்சிகளில் ஒன்று செம்பு உலோகவியலாகும். ரிக் வேதத்தில் இடம்பெறும் அயஸ் என்னும் சொல் செம்பையும் வெண்கலத்தையும் குறிக்கும். இரும்பைப் பற்றிய குறிப்புகள் ஏதும் ரிக் வேதத்தில் காணப்படவில்லை. உலோக வேலை செய்வோரைக் குறிக்கும் கர்மரா என்னும் சொல் ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைப்போலவே நூலைக் குறிக்கும் ஸ்ரி என்னும் சொல்லும், மரவேலை செய்வோரைக் குறிக்கும் தச்சன் என்ற சொல்லும் இடம் பெற்றுள்ளன. கம்பளி ஆடைகள் நெய்யப்பட்டத்ற்கான குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. குளிர் காலத்திற்கு அவை நிச்சயம் தேவைப்பட்டிருக்கும். சில தொழில்கள் சிறப்பு நிபுணத்துவம் கொண்டவர்களைக் கொண்டு முழுநேரப் பணியாக செய்யப்பட்டது.

வணிகம், பரிமாற்றம் , மறு விநியோகம்

தொடக்க வேதகாலத்தில் வணிகர்கள் இருந்தபோதிலும் வணிக நடவடிக்கைகள் அதிகமாக இல்லை. பானி என்போர் வணிகர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றனர். பான் என்ற சொல்லுக்கு பண்டமாற்று என்று பொருளாகும். அவர்கள் ஒருவேளை வணிகர்களாக இருந்திருக்கலாம். நிஷ்கா என்பது தங்க அல்லது வெள்ளி அணிகலனாகும். இது பண்டமாற்றுப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டது. பண்டமாற்றே பரிவர்த்தனைக்கான வழியாகும். ஒரு மதகுரு தான் நடத்திக் கொடுத்த வேள்விக்காக 100 குதிரைகளையும் 100 நிஷ்காக்களையும் பெற்றுள்ளார். மற்றவர்களுக்கு வழங்கப்பட்ட தானங்களும் தட்சிணைகளும் செல்வத்தை மறுவிநியோகம் செய்வதற்கான வழிகளாகும். தக்சிணா என்பது குறிப்பிட்ட சேவைக்காக வழங்கப்பட்ட கட்டணமாகும். அதுவே செல்வ விநியோகத்திற்கான வழியுமாகும். பசுக்களை விநியோகம் செய்தது மேய்ச்சல் தொழில் பரவுவதற்கும் பொருளாதார உற்பத்தி பெருகுவதற்கும் உதவியது.

போக்குவரத்து

போக்குவரத்திற்குக் குதிரைகளே பெரிதும் பயன்படுத்தப்பட்டன. மாட்டு வண்டிகளும் குதிரை பூட்டிய தேர்களும் பயன்படுத்தப்பட்டன. கடல் (சமுத்ரா), படகுகள் (நாவ்) குறித்த குறிப்புகள் உள்ளன. 100 துடுப்புகளால் ஓட்டப்பட்ட படகுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

அரசுமுறையும் நிர்வாகமும்

வேதகால மதமும் சடங்குகளும்

சமூகத்தின் சிறப்பியல்புகள்

பிற்கால வேதப் பண்பாடு

பிற்கால வேதப்பண்பாட்டின் காலம் பொ.ஆ.மு, 1000 முதல் பொ.ஆ.மு. 700 – 600 வரை ஆகும். இரும்புக் காலத்தைச் சேர்ந்த வண்ணம் தீட்டிய சாம்பல்நிற மட்பாண்டப் பண்பாடு பிற்கால வேதப் பண்பாட்டோடு தொடர்புடையதாகும். இதனை அகழ்வாய்வு நடைபெற்ற இடங்களில் கிடைத்த சான்றுகளைக் கொண்டு தொல்லியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இக்காலம் அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகிய துறைகளின் கலப்பினையும் வளர்ச்சியினையும் எதிர் கொண்டது.

பிற்கால வேத நூல்கள்

பிற்கால வேத நூல்கள் ரிக்வேத சம்ஹிதைகளுக்குப் பின்னர் இயற்றப்பட்டனவாகும். ரிக் வேதத்திற்குப் பின்னரே யஜூர், சாம, அதர்வ வேதங்கள் இயற்றப்பட்டன.

ஆரியர்களின் கிழக்கு நோக்கிய பரவல்

பிற்கால வேதப்பண்பாடும் இரும்பும்

இக்காலத்தில் கருவிகள் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட மற்றொரு முக்கிய உலோகம் இரும்பாகும், இது ‘சியாமா – அயஸ்’ அல்லது ‘கிருஷ் அயஸ்’ என்றழைக்கப்பட்டது. கருப்பு உலோகம் என்பது இதன் பொருள். கங்கைச் சமவெளிப் பகுதிகளிலிருந்த காடுகள் அழிக்கப்பட்டு வேளாண் நிலங்களாக மாற்றப்பட்டதில் இரும்பு முக்கியப் பங்கு வகித்தது. வேதகாலத்தின் இறுதியில் இரும்பைப் பற்றிய அறிவு கிழக்கு உத்திரபிரதேசத்திலும் விதேகத்திலும் பரவியது. இரும்பானது பொ.ஆ.மு. 700 வாக்கில் அறிமுகமானதாகக் கருதப்படுகிறது. ஆனால், அண்மைக்கால ஆய்வுகள் பொ.ஆ.மு. 1200 வாக்கிலேயே இரும்பு அறிமுகமாயிற்று என்று கூறுகின்றன. தொடக்ககால ஆய்வுகள் கங்கைப் பகுதியின் காடுகள் திருத்தப்பட்டதில் இரும்பின் பங்கிற்கு அதிக அழுத்தம் கொடுத்தன. ஆனால் தற்போதைய ஆய்வுகள் அது மட்டுமே காரணமாக இருக்க முடியாது; வேறு காரணங்களும் உண்டென வாதிடுகின்றன.

குடியேற்றங்களும் நிலப்பகுதிகளும்

அரசியல் நிறுவனங்கள்

சமூக அமைப்பு

குடும்பம்

பெண்கள்

சமூகம் பல்வேறு பிரிவுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் கொண்டதாக மாறியதாலும், தந்தை வழிக் குடும்ப அமைப்புகள் முக்கியம் பெற்றதாலும் சமூகத்தில் பெண்களின் நிலை கீழிறக்கப்பட்டது. தந்தை குடும்பத்தின் தலைவனாக இருந்தார். அடுத்த நிலையில் மூத்தமகன் முக்கியத்துவம் பெற்றிருந்தான். ரிக் வேத காலத்தில் பெண்கள் யாகங்களிலும் சடங்குகளிலும் கலந்து கொண்டனர். பின் வேதகாலத்தில் அவ்வுரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டது. பெண் குழந்தைகள் பிரச்சனைகளின் தோற்றுவாயாகக் கருதப்பட்டனர். பெண்கள் கால்நடைகள் வளர்ப்பது, பால்கறப்பது, தண்ணீர் இறைப்பது போன்ற பணிகளைச் செய்தனர்.

பொருளாதாரம்

இக்காலத்தில் பொருளாதார நடவடிக்கைகள் பெருமளவில் பன்முகத் தன்மை கொண்டதாக மாறின. வேளாண்மை, கால்நடை மேய்ச்சல், பொருள் உற்பத்தி, வணிகம் ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச் சென்றன.

வேளாண்மை

பின் வேதகாலத்தில் வேளாண்மைச் செயல்பாடுகள் அதிகரித்தன. ‘சதபத பிராமணம்’ அரசர்கள் மேற்கொண்ட கலப்பையோடுச் தொடர்புடைய சடங்குகளைப் பற்றி கூறுகிறது. இக்குறிப்பானது அரசர்கள் வேளாண்மைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தையும், பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய காரணத்தினால் மேய்ச்சல் பொருளாதாரத்திலிருந்து வேளாண்மைக்கு மாறியதையும் கோடிட்டுக் காட்டுகின்றன. பலராமன் கலப்பையோடு காட்சிப்படுத்தப்படுவது வேளாண்மைக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. வேதகால மக்கள் பார்லி, அரிசி, கோதுமை ஆகியவற்றைப் பயிரிட்டனர். பஞ்சாப் பகுதியின் பிரதான உணவுதானியம் கோதுமையாகும். கங்கை – யமுனை நதிக்கரைப் பகுதிகளில் வாழ்ந்த வேதகால மக்கள் அரிசியைப் பயன்படுத்தினர். வேதச் சடங்குகளில் கோதுமையைக் கட்டிலும் அரிசி அதிகம் பயன்படுத்தப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

கால்நடை வளர்ப்பு

கால்நடை வளர்ப்பு முக்கியத் தொழிலாகத் தொடர்ந்தது. கால்நடை புனிதமானதாகக் கருதப்பட்டது. பண்ட பரிமாற்றத்திலும் மறு விநியோகத்திலும் ஒரு பகுதியாக அது விளங்கியது. கால்நடைகளை ‘தட்சிணை’யாக வழங்கும் பழக்கம் தொடர்ந்தது. கால்நடை மேய்ச்சல் வேளாண்மையின் துணைத் தொழிலானது.

கைவினைப்பொருட்கள் உற்பத்தி

வணிகமும் பரிவர்த்தனையும்

வணிகமும் பண்டப் பரிவர்த்தனையும் பின் வேத காலத்தில் வளர்ச்சி பெற்றது. தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்பட்ட இடங்களில் கிடைத்த பொரூள்கள் சரக்குகள் ஓரிடம் விட்டு வேறிடம் கொண்டு செல்லப்பட்டதைக் காட்டுகின்றன. குறிப்பிட்ட பொருள்களில் வணிகம் செய்த கவிகைவண்டி வணிகக் குழுக்கள் இருந்துள்ளன. நாணயங்கள் புழக்கத்தில் இருந்ததற்கான சான்றுகள் இல்லை என்பதால் பண்டமாற்று முறையே நடைமுறையில் இருந்திருக்க வேண்டும் எனலாம். பொ.ஆ.மு. 600 வாக்கில்தான் நாணயங்கள் அறிமுகமாயின.

மதப் பற்றும் நம்பிக்கையும்

பின் வேதகாலத்தின்போது மேல் கங்கைப் பகுதியானது ஆரியப் பண்பாட்டின் மையமாக விளங்கியது. இப்பகுதியே குரு பாஞ்சாலர்களின் பகுதியாக விவரிக்கப்பட்டுள்ளது. வேதக் கடவுள்களான அக்னி, இந்திரன் ஆகியோர் தங்கள் செல்வாக்கை இழந்தனர். பிரஜாபதி முக்கியக் கடவுளானார். சிவனின் மற்றொரு வடிவமாகக் கருதப்படும் சடங்குகளின் கடவுளான ருத்ரன் முக்கியக் கடவுளானார். சதபதபிராமணம் ருத்ரனுடைய வேறு பெயர்களை பசுனம்பதி, சர்வா, பவா, பகிகா என பட்டியலிடுகிறது. மக்களைக் காக்கும் கடவுளாக விஷ்ணு குறிப்பிடப்படுகிறார். விஷ்ணுவின் அவதாரங்கள் குறித்த குறிப்புகள் ஏதுமில்லை. ஒவ்வொரு வர்ணத்தாரும் தங்களுக்கான கடவுளர்களைப் பெற்றிருந்தனர்.

சடங்குகள்

சமுதாயத்தில் சடங்குகள் முக்கியமாயின. சடங்குகளும் வேள்விகளும் பலியிடுதலும் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் என மக்கள் நம்பினர். காலப்போக்கில் இச்சடங்குகள் அதிக செல்வத்தையும் நேரத்தையும் எடுத்துக்கொள்வதாக மாறின. இம்மாற்றம் சடங்குகளுக்கான தேவை அதிகமானதையும் அதிகம் செலவழிக்கத் தயாராக இருந்த செல்வம் படைந்த பிரிவு சமூகத்தில் உருவானதையும் சுட்டிக்காட்டுகிறது. சடங்குகள் மிகச் சரியாக நடத்தப்பட வேண்டுமென வற்புறுத்தப்பட்டது. காணிக்கைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் வற்புறுத்தப்பட்டது. சடங்குகளை நடத்துவதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற மனப்போக்கு, செல்வமிருந்தால் எதையும் சாதிக்கலாம் எனும் எண்ணத்தை உருவாக்கியது. இப்படிப்பட்ட பார்வையை உபநிடதங்கள் மறுக்கின்றன. மாறாக ஆன்மாவை உணர வேண்டுமென அழுத்தம் கொடுக்கின்றன. சடங்குகளின் இப்படிப்பட்ட சீர்கேடும் செல்வத்தின் மீதான மத குருமார்களின் ஆசையும் எதிர்ப்புகளை ஏற்படுத்தின. அதன் விளைவாக பௌத்த சமண ஆசீவக மதங்கள் தோன்றின. அவை ஒழுக்கத்தையும் சரியான மனித நடவடிக்கைகளையும் முன்னிறுத்தின.

தத்துவமும் கல்வியும்

வாழ்க்கையின் ஏனைய கூறுகள்

பின் வேதகாலத்தில் இசையும் கவின்கலைகளும் செழித்ததற்கான சான்றுகள் உள்ளன. இசைக்கருவிகளான புல்லாங்குழல், மேளம், வீணை ஆகியவை பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. வேளாண்மை, கால்நடை மேய்ச்சல் ஆகியவற்றின் விரிவாக்கம், வளர்ச்சி போன்றவற்றின் காரணமாக மக்கள் தானியம், மரக்கறி, வெண்ணெய், நெய் ஆகியவை கொண்டு செய்யப்பட்ட வகைவகையான உணவுகளையும் பானங்களையும் உண்டனர். பட்டு பயன்பாட்டில் இருந்தமைக்கும் தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்ட அணிகலன்கள் பயன்படுத்தப்பட்டமைக்கும் சான்றுகள் உள்ளன. உலோகத்தினாலான கண்ணாடிகள் பயன்படுத்தப்பட்டன. தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட இடங்களில் (கல் மணிகளும்) கண்ணாடி மணிகளும் கிடைத்துள்ளன. வேதகாலத்தின் பிற்பகுதியில் இத்தொழில்கள் மேலும் வளர்ந்தன.

பின்வேதகாலத்தின் தனிச்சிறப்பியல்கள்

இனக்குழுக்களின் வம்சாவளித் தோன்றல்கள், கங்கைச் சமவெளியில் பல குறுஅரசுகளின் ஆட்சி உருவாகியது. வளர்ச்சிப் போக்கில் பொ.ஆ.மு. 600 க்குப் பின்னர் அவை அரசுகளாக வளர்ந்தது என்பதே பின் வேதகாலத்தின் சிறப்பியல்புகளாகும். ஜனபதங்கள், ராஷ்டிரங்கள் எனும் பெயர்களில் நிலப்பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டன. அரசர் அதிக அதிகாரங்களைப் பெற்றார். சமூகப் பாகுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் ஆழமாக வேர்கொண்டன. வர்ணமுறை வளர்ச்சியடைந்தது.

Exit mobile version