சர்வதேச அமைப்புகள் Notes 12th Political Science Lesson 11 Notes in Tamil

12th Political Science Lesson 11 Notes in Tamil

11. சர்வதேச அமைப்புகள்

அறிமுகம்

சர்வதேச சங்கம்

உட்ரோவில்சனின் பதினான்கு கருத்துகள் (1918)

  1. வெளிப்படையான தூதாண்மை
  2. கடல்கள் மீதான சுதந்திரம்
  3. பொருளாதாரத் தடைகளை நீக்குதல்
  4. ஆயுதமயமாதலை குறைத்தல்
  5. காலனிய உரிமைகள் மீதான நெகிழ்வு
  6. ரஷ்ய கட்டுப்பாடு பகுதிகளை விடுவிப்பது
  7. பெல்ஜிய இறையாண்மையை பாதுகாப்பது
  8. பிரெஞ்சு பிரதேசங்களை விடுவிப்பது
  9. இத்தாலியின் எல்லைகளை மறுசீரமைத்தல்
  10. ஆஸ்திரியா-ஹங்கேரியினை பிரிப்பது
  11. பால்கன் எல்லைகளை மறுசீரமைத்தல்
  12. துருக்கியின் அதிகாரத்தை குறைப்பது
  13. போலந்தை சுதந்திர நாடாக்குவது.
  14. நாடுகளின் கூட்டமைப்பான சர்வதேச சங்கத்தை ஏற்படுத்துதல்.

சர்வதேச சங்கத்தின் தோல்விக்கு காரணங்கள்:

  1. அமெரிக்கா இதில் பங்கேற்காதது சங்கம் வலிமை பெறாமல் போனதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
  2. மேலும் இதன் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் ஜெர்மனி மற்றும் சோவியத் யூனியன் எந்த முக்கிய பொறுப்பையும் ஏற்காமல் வெறுமனே உறுப்பினராக மட்டுமே இருந்தன. 1926இல் ஜெர்மனியானது சங்கத்தில் இணைந்தது பின்பு நாஜிக்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை அடுத்து 1933இல் அமைப்பில் இருந்து வெளியேறியது.
  3. 1933ஆம் ஆண்டு சோவியத் யூனியனானது சங்கத்தில் இணைந்தது; இருந்தபோதும் 1939இல் பின்லாந்து மீது தாக்குதல் தொடுத்ததை அடுத்து சோவியத் யூனியன் சங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. சங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரே நாடு சோவியத் யூனியன் ஆகும்.
  4. ஜப்பான் 1933இல் மஞ்சூரியாவை ஆக்கிரமித்ததை சங்கம் விமர்சித்ததை அடுத்து ஜப்பானும் அமைப்பில் இருந்து வெளியேறியது. மேலும் இதே காரணத்திற்காக எத்தியோப்பியாவின் மீது தாக்குதல் நடத்தி அதனை ஆக்கிரமித்துக் கொண்ட இத்தாலியின் உறுப்பினர் ஆவதற்கான விருப்பமானது சங்கத்தால் நிராகரிக்கப்பட்டது. இத்தகைய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை சங்கத்தினால் கட்டுப்படுத்த முடியவில்லை.
  5. மேலும் 1930இல் ஏற்பட்ட உலக பொருளாதார மந்தநிலை இப்பிரச்சனைகளை மேலும் தீவிரமாக்கியது. குறிப்பாக, பிரான்சு மற்றும் பிரிட்டன் இந்த ஆக்கிரமிப்புப் போர்களைக் கண்டிக்கவில்லை, ஏனெனில் இவை அந்நாடுகளின் தேசிய பாதுகாப்பினை உடனடியாக பாதிக்கவில்லை. மேலும் சங்கம் திருப்திபடுத்தும் கொள்கையை கையிலெடுக்க, அதுவும் தோல்வியை தழுவியது.

ஐக்கிய நாடுகள் சபை

  1. பொதுச்சபை
  2. பாதுகாப்புக் குழு
  3. பொருளாதார மற்றும் சமூக குழு
  4. அறங்காவலர் குழு
  5. சர்வதேச நீதிமன்றம் மற்றும்
  6. செயலகம் ஆகும்.

ஐ.நா-வின் நான்கு முக்கிய நோக்கங்கள்

  1. இராணுவ பாதுகாப்பு
  2. பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு
  3. மனித உரிமைகளை பாதுகாப்பது
  4. சர்வதேச நீதி

பொதுச்சபை

பொதுச்சபையின் ஆறு முக்கிய குழுக்கள்

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கையின் பட்டியல்

  1. கண்டங்கள் : ஆப்பிரிக்கா

பணியின் பெயர் : காங்கோவில் ஐக்கிய நாடுகளின் செயல்பாடு (ONUC)

இடம் : காங்கோ ஜனநாயக குடியரசு

பிரச்சனை : காங்கோ நெருக்கடி

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு : 1960 – 1964

  1. கண்டங்கள் : ஆசியா

பணியின் பெயர் : ஐக்கிய நாடுகள் சபை இந்தியா – பாகிஸ்தான் கண்காணிப்பு பணி (UNIPOM)

இடம் : இந்தியா, பாகிஸ்தான்

பிரச்சனை : 1965 இந்தியா – பாகிஸ்தான் போர்

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு : 1965 – 1966

  1. கண்டங்கள் : ஆசியா

பணியின் பெயர் : ஐ.நா-வின் திரும்ப பெறுவதற்கான கண்காணிப்பு படை (UNDOF)

இடம் : இஸ்ரேல், சிரியா, லெபனான்

பிரச்சனை : யோம் கீப்பூர் போரில் இருந்து இஸ்ரேல் மற்றும் சிரியா படைகளை திரும்ப பெறுவது.

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு : 1974

  1. கண்டங்கள் : ஆப்பிரிக்கா

பணியின் பெயர் : சோமாலியாவில் ஐக்கிய நாடுகளின் செயல்பாடு –ஒன்று (UNOSOM -1)

இடம் : சோமாலியா

பிரச்சனை : சோமாலியா உள்நாட்டு போர்

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு : 1992 – 1993

  1. கண்டங்கள் : ஆப்பிரிக்கா

பணியின் பெயர் : ருவாண்டாவிற்கான ஐ.நா-வின் உதவித் திட்டம் (UNAMIR)

இடம் : ருவாண்டா

பிரச்சனை : ருவாண்டா உள்நாட்டு போர்

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு: 1993 – 1996

  1. கண்டங்கள் : வட அமெரிக்கா

பணியின் பெயர் : ஐ.நா-வின் தூதுக்குழு ஹைட்டி (UNMIH)

இடம் : ஹைட்டி

பிரச்சனை : 1991இல் ஹைட்டியில் ஆட்சி கவிழ்ப்பு மற்றும் இராணுவ ஆட்சி

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு: 1993 -1996

  1. கண்டங்கள் : ஐரோப்பா

பணியின் பெயர் : ஐ.நா-வின் தூதுக்குழு போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா (UNMIBH)

இடம் : போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா

பிரச்சனை : போஸ்னியா போர்

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு: 1995 – 2002

  1. கண்டங்கள் : ஐரோப்பா

பணியின் பெயர் : ஐ.நா-வின் இடைகால நிர்வாக தூதுக்குழு கோசாவா (UNMIK)

இடம் : கோசாவா

பிரச்சனை : கோசாவா போர்

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு: 1999

  1. கண்டங்கள் : ஆப்பிரிக்கா

பணியின் பெயர் : ஐ.நா-வின் தூதுக்குழு சீயரா லியோன் (UUNAMSIL)

இடம் : சியரா லியோன்

பிரச்சனை : சியரா லியோன் உள்நாட்டு போர்

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு: 1996 – 2006

  1. கண்டங்கள் : ஆப்பிரிக்கா

பணியின் பெயர் : ஐ.நா. வின் தூதுக்குழு எரித்திரியா மற்றும் எத்தியோப்பியா (UNMEF)

இடம் : எரித்திரீயா -எத்தியோப்பியா

பிரச்சனை : எரித்திரீயா – எத்தியோப்பியா போர்

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு: 2000 – 2008

  1. கண்டங்கள் : ஆப்பிரிக்கா

பணியின் பெயர் : ஐ.நா-வின் தூதுக்குழு சூடான் (UNMIS)

இடம் : சூடான்

பிரச்சனை : இரண்டாவது சூடான் உள்நாடுப் போர்

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு: 2005 – 2011

  1. கண்டங்கள் : ஆசியா

பணியின் பெயர் : ஐ.நா-வின் ஒருங்கிணைந்த தூதுக்குழு தைமூர் – லிஸ்டி (UNMIT)

இடம் : கிழக்கு தைமூர்

பிரச்சனை : 2006 கிழக்கு தைமூர் நெருக்கடி

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு: 2006 – 2012

  1. கண்டங்கள் : ஆசியா

பணியின் பெயர் : ஐ.நா-வின் கண்காணிப்பு தூதுக்குழு சிரியா (UNSMIS)

இடம் : சிரியா

பிரச்சனை : சிரியா உள்நாட்டு போர்

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு: 2012

  1. கண்டங்கள் : வட அமெரிக்கா

பணியின் பெயர் : ஐ.நா-வின் நீதிக்கு ஆதரவான தூதுக்குழு ஹைட்டி (MINUJUSTH)

இடம் : கிளர்ச்சி

பிரச்சனை : 2004 ஹைட்டி கிளர்ச்சி

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு: 2017

பாதுகாப்புச் சபை

ஐ.நா-வின் பாதுகாப்புச் சபையில் நிரந்திர உறுப்பினராகும் இந்தியாவின் விருப்பம்

பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினராக இடம் பெறும் இந்தியாவின் விருப்பமானது அது பாதுகப்புச் சபையுடன் வரலாற்று பூர்வமாக கொண்டிருக்கும் உறவை வெளிப்படுத்துவதாக உள்ளது. விடுதலை அடைந்த ஆரம்ப ஆண்டுகளில் காஷ்மீர் தொடர்பான பாகிஸ்தானின் ஆயுத மோதல்களை இந்தியா தனது கருத்தியல் கொள்கையின் அடிப்படையில் , ஐ.நா-வின் பார்வைக்கு எடுத்துச்சென்றது. பனிப்போர் உச்சத்தில் இருந்த அதிகார சமநிலையில்லாத அந்த காலகட்டத்தில் இந்தியா தனது கருத்தியல் கொள்கையின் அடிப்படையிலான நடவடிக்கைகளுக்கு பெரும் விலை கொடுக்க வேண்டியிருந்தது. காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா தலையிட அதுவே வழி வகுத்தது. இது மீண்டும் வெளிவர முடியாத எதிர் விளைவையே ஏற்படுத்தியது. இந்தியா பாதுகாப்புச் சபையில் கலந்து கொண்டு தனது விருப்பத்தை நிறைவேற்ற விடாமல் பெரும் அதிகார அரசியலாக மாற்றியது. மிகவும் குறிப்பாக நிரந்தர உறுப்பினராக சீனா, பாகிஸ்தான் பக்கம் நிறு கொண்டு எந்தவித சாத்தியமான விளைவுகளும் இந்தியாவிற்கு ஏற்படாத வண்ணம் குறுக்கீடு செய்தது.

இந்தியாவின் விருப்பமானது பாதுகாப்புச் சபையில் நீண்ட பல இந்திய வெளியுறவுக் கொள்கை குறித்த விவாதங்களை ஏற்படுத்தியது. தாராளவாத தன்மையுடன் சர்வதேச அமைப்பிற்கான பொறுப்புமிக்க ஒரு நாடாக இருக்குமா அல்லது சர்வதேச நிகழ்வுகளின் மரபுகளை மாற்றியமைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் அரசாக இருக்குமா என்ற விவாதங்கள் நடைபெற்றன. தற்பொழுது நடைமூறையில் இருக்கும் சர்வதேச முறையினை தூக்கி எறியாமல் இந்தியா ஒரு மிதமான சீர்திருத்தவாதியாக உலகளாவிய பார்வையுடன் சர்வதேச மரபுகளில் நெகிழ்வையும் மற்றும் வடிவமைப்பையும் ஏற்படுத்துவதாக பல அரசியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்தியா எப்போதுமே மூன்றாம் உலக நாடுகளை வழிநடத்தும் ஒரு அரசாக இருந்து வருகிறது. ஐ.நா.-வின் பொதுச்செயலராக இருந்த கோபி அன்னான் புதுதில்லியில் ஒரு கூட்டத்தில் உரையாற்றும்போது மற்ற எந்நாட்டினரைக் காட்டிலும் இந்தியர்களின் சுதந்திரம் பற்றிய புரிதல் அதிகம் எனவும், வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் யாவும் சுதந்திரத்தினால் விளைந்தவை எனவும் அவை ஒன்றுக்கொன்று மாற்று அல்ல என்பதையும் இந்தியர்கள் அறிந்துள்ளனர் என்று குறிப்பிடுகிறார். இந்தியர்கள் தங்களது பன்மைத்துவ மக்களாட்சி மூலம் பரந்த சுதந்திரம் நோக்கி செல்வதாக மேலும் குறிப்பிடுகிறார்.

பாதுகாப்புச் சபையில் ரத்து அதிகாரம் குறித்த விமர்சனங்கள்

ரத்து அதிகாரமானது அதன் மக்களாட்சி பண்புகளற்ற தன்மைக்காக விமர்சிக்கப்படுகிறது. இது பாதுகாப்புச் சபையின் பெரும்பான்மையினரின் முடிவை ஒரு தனிப்பட்ட நாடு தடுப்பதாகும். உதாரணமாக அமெரிக்காவானது தொடர்ச்சியாக இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்கள் மீது தனது ரத்து அதிகாரத்தை பயன்படுத்தி வருகிறது. மேலும் நிரந்தர உறுப்பினர்கள் தங்களுக்கு எதிரான விமர்சன தீர்மானங்களின் மீது ரத்து அதிகாரத்தை பயன்படுத்துவதும் வழக்கமானது ஆகும். 2014ஆம் ஆண்டு ரஷ்யாவானது, கிரிமியாவை இணைத்துக் கொண்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தனது ரத்து அதிகாரத்தை மக்களின் விருப்பங்களை பாதுகாப்பதற்கு மாறாக தங்களின் சுய அரசியல் விருப்பங்களுக்கும் அல்லது புவிசார் அரசியல் விருப்பங்களுக்கும் பயன்படுத்துவதாக சர்வதேச பொது மன்னிப்புச் சபை குற்றம் சாட்டுகிறது.

சில விமர்சகர்கள் பாதுகாப்புச் சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களுகே உரித்தான ரத்து அதிகாரமானது நியாயமற்றது என்று விமர்ச்சிக்கின்றனர். 21ஆம் நூற்றாண்டில் ரத்து அதிகாரமானது சர்வதேச அளவில் பார்க்கப்படும் பொழுது சமச்சீரற்ற அதிகாரமாக மேலும் சர்வதேச பிரச்சினைகள் மீதான நடவடிக்கைகளுக்கு தடையாக அமைந்துள்ளது. ரத்து அதிகாரத்தின் அளவற்ற ஆற்றலானது ஐ.நா-வை இன அழிப்பு, கலவரங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களின்போது அதைத் தடுப்பது மற்றும் பொறுப்பேற்பதில் ஆற்றலற்றதாக ஆக்குகிறது. இந்த ஐந்து நிரந்தர உறுப்பினர் தவிர மற்ற பல நாடுகள் குறிப்பாக அணிசேரா இயக்கத்தினர் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் ரத்து அதிகாரத்தை குறைக்க கோருகின்றன.

“அமைதிக்கான ஒற்றுமை” என்ற தீர்மானத்தை நிறைவேற்றும்போதும் நடைபெற்ற விவாதத்தில் வழக்கமான ஐ.நா.சட்டங்களின்படி பொதுச்சபையின் அதிகாரமானது பாதுகாப்புச் சபையின் “ரத்து அதிகார” பிரச்சனையுடன் தொடர்புடையதாகும். 1950ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி ஐ.நா-வின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட A/RES/377 தீர்மானமானது குறிப்பிடுவது யாதெனில் ஐ.நா-வின் சாசனப்படி ஒருவேளை பாதுகாப்புச் சபையானது தனது முதன்மை நோக்கமான அமைதியை பாதுகாப்பதில் இருந்து தவறினால் அப்போது சர்வதேச அமைதிக்காக பொதுச்சபை எடுக்கும் மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்தும் நடவடிக்கைகளை பாதுகாப்புச் சபை தடுக்கமுடியாது தடுக்கக் கூடாது. இந்த விளக்கமானது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகளில் பொதுச்சபையானது இரண்டாவதாக பொறுப்புடையது என்பதை விட இறுதி பொறுப்புடையதாக அங்கீகரிக்கப்படுகிறது. ஐ.நா-வின் பல்வேறு அதிகாரப்பூர்வ மற்றும் அதிகாரப்பூர்வமற்ற அறிக்கைகளில் குறிப்பிடுவது “அமைதிக்கான ஒற்றுமை” தீர்மானமானது ஐ.நா-வின் பொதுச்சபையின் நடவடிக்கைகளை மீறி பாதுகாப்புச் சபையின் ரத்து அதிகாரமானது செயல்பட முடியாது என்பதாகும்.

பொருளாதார மற்றும் சமூக குழு

அறங்காவலர் குழு

சர்வதேச நீதிமன்றம்

செயலகம்

அ) உலக வங்கி

ஆ) சர்வதேச நிதி நிறுவனம்

இ) உலக வர்த்தக கழகம்

பொது செயலாளர்கள் வரிசை

  1. டிரைகிவு லீ (நார்வே) 1946 – 1952
  2. டேக் ஹமர்ஸ்கீஜிஓல்டு (சுவிடன்) 1953 – 1961
  3. யூ தாண்ட் (பர்மா தற்பொழுது மியான்மர்) 1961 – 1971
  4. குர்ட் வல்தீம் (ஆஸ்திரியா) 1972 – 1981
  5. சேவியர் பெரஸ் டி குல்லர் (பெரு) 1982 – 1991
  6. பூட்ரோஸ் பூட்ரோஸ் காலி (எகிப்து) 1992 – 1996
  7. கோபி அன்னான் (கானா) 1997 – 2006
  8. பான் –கீ-முன் (கொரிய குடியரசு) 2007 – 2016
  9. ஆண்டனியோ குட்ரஸ் (போர்சுகல்) 2017 முதல்

உலக வங்கி

கடன் முறைகளில் சீர்திருத்தம் :

மிகவும் நவீனப்படுத்தப்பட்ட நிதி சேவை மற்றும் கடன் முறைகளைக் கொண்டு, வங்கியானது கடன் பெறுபவரின் தேவையை அறிந்து மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்கிறது. நெருங்கிய கண்காணிப்பு நடவடிக்கையின் மூலம் நிலையான பயனை அடைவதற்கான அழைப்பை விடுக்கிறது. மேலும் அதிக பாதுகாப்பற்ற முதலீடுகளின் மீது நேரடியான நடவடிக்கையை வலுப்படுத்துவது மற்றும் கண்காணிப்பை மேம்படுத்துவது போன்றவற்றை மேற்கொள்கிறது.

பங்கேற்பை அதிகப்படுத்தி குரல்களை ஒலிக்க செய்கிறது:

இயக்குநர்கள் குழுவில் கூடுதல் இடங்களை பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு அளிப்பதன்மூலம் வளர்ந்து வரும் நாடுகளின் ஓட்டு அதிகாரத்தை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் வங்கியானது, வளர்ச்சி மற்றும் மாற்றம் அடைந்து வரும் நாடுகளின் பிரதிநிதித்துவம் மற்றும் அதன் தாக்கத்தை ஆராய்ந்து அந்நாடுகளுக்கு வங்கி குழுமங்களில் இடம் அளிக்கிறது.

பொறுப்பு மிக்க நல்ல அரசை ஏற்படுத்துவது:

இதன் முக்கிய பகுதியாக, வங்கியானது அனைத்து துறைகள் மற்றும் நாடுகளிலும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இதன் முக்கிய அடிப்படையாக வறுமை ஒழிப்பிற்கான திறமை மிக்க மற்றும் பொறுப்புமிக்க அரசாக வளர்ச்சிக்கான அனைத்து வாய்ப்புகளையும் உருவாக்க செய்கிறது.

உலக வங்கியின் ஐந்து நிறுவனங்கள்

மிகவும் வெளிப்படையான, பொறுப்பு மிக்க தகவல்களை அளித்தல்:

வங்கியின் தகவல் கொள்கையானது இதற்கான வாய்ப்பை வழங்குகிறது. வங்கியானது தனது அறிவாற்றல் மற்றும் அனுபவங்களை மிக பரந்த அளவில் அனைவரும் அறியும் வண்ணம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதன் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல்கள் பற்றிய தகவல்களை அளிக்கிறது.

புதுப்பிக்கப்பட்ட அமைப்பு:

வளர்ச்சிக்கான மிகச் சிறந்த பங்காளராக வங்கியானது பல சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இச்சீர்திருத்தங்கள் மூன்று முக்கிய பகுதிகளை கொண்டது. அவை;

மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச வங்கி (IBRD)

இதன் முக்கிய நோக்கமானது நடுத்தர வருவாய் நாடுகள் மற்றும் குறைவான வருவாய்க்கான கடன்களை பெறும் நாடுகளில் வறுமை ஒழிப்பு மற்று சுயசார்பான வளர்ச்சியை ஏற்படுத்துவது, உத்திரவாதம் அளிப்பது, பகுப்பாய்வு மற்றும் ஆலோசனைகளை வழங்குவதாகும். 1945இல் ஏற்படுத்தப்பட்ட இவ்வங்கியில் 184 உறுப்பு நாடுகள் உள்ளன. இதன் மொத்த வருவாய் மற்றும் நிதியாண்டுகளில் கிடைக்கும் வருவாய் என 2018ஆம் ஆண்டு ஜூனில் 698 பில்லியன் அமெரிக்க டாலரை கொண்டு இருந்தது.

சர்வதேச வளர்ச்சி கூட்டமைப்பு (IDA)

உறுப்பு நாடுகளின் துணையுடன் ஏழை நாடுகளில் வறுமை ஒழிப்பிற்கான வட்டியில்லா கடன்கள், மானியங்களை உறுப்பினர்களிடமிருந்து நிதி உதவியாகப் பெற்று வழங்குகிறது. 1960இல் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு தனது பொறுப்பில் 24 பில்லியன் அமெரிக்க டாலரை ஜூன் 2018ஆம் நிதியாண்டில் மேலாண்மை செய்தது.

சர்வதேச நிதி கழகம் (IFC)

வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான கடன்களை தனியார் துறையினருக்கு வழங்கிறது. 1956இல் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பில் 176 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. 2018ஆம் நிதியாண்டில் 23.3 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடாக செய்துள்ளது.

பல்தேசிய முதலீட்டு உத்தரவாதத்திற்கான பாதுகாப்புக் குழுமம் (MIGA)

இக்குழுமமானது வளரும் நாடுகளில் தனியார் துறையினரின் முதலீட்டினை அதிகரிக்க செய்கிறது. மேலும் ஒப்பந்தங்கள், பிரச்சனைகள், போர் மற்றும் பணப்பரிமாற்று விகிதங்களினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து முதலீட்டிற்கான பாதுகாப்பை வழங்குகிறது. 1988இல் உருவாக்கப்பட்ட இவ்வகைப்பில் 164 உறுப்பினர்களைக் கொண்டு அதிகபட்சமாக 5.3 பில்லியன் தொகையை வர்த்தகம் செய்துள்ளது.

முதலீடு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான சர்வதேச மையம் (ICSID)

வளரும் நாடுகளில் வெளிநாட்டு முதலீட்டை ஆதரிக்கிறது. மேலும் முதலீடு தொடர்பான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கிறது. 1966இல் ஏற்படுத்தப்பட்ட இவ்வமைப்பில் 140 உறுப்பினர்கள் உள்ளனர்.

சர்வதேச நிதி நிறுவனம்

சர்வதேச நிதி நிறுவனத்தின் தேவை

சர்வதேச நிதி நிறுவனத்தின் செயல்பாடுகள்

நிதியமானது மிக பரந்த அளவிலான பணிகளை அதன் முக்கியத்துவம் கருதி மேற்கொள்கிறது.

உறுப்பினர்களின் பொருளாதார கொள்கையினைக் கண்காணிப்பது

எந்த நாடு நிதியத்தில் உறுப்பினராக இணைந்து அதன் கொள்கையினை ஏற்று கொண்டதோ அது தனது பொருளாதார கொள்கையினை நிதியத்தின் நோக்கத்திற்கு இணையானதாகக் கொண்டு செயல்படவேண்டும். மேலும் உலகின் எல்லா நாடுகளின் பொருளாதார நிலையினை தொடர்ந்து கண்காணிப்பதற்கான முக்கிய ஒரே அமைப்பாக செயல்படுகிறது.

செலுத்துநிலை தேவைக்கான தற்காலிக நிதிவழங்கல்

செலுத்துநிலைத் தேவைக்கான கடன்களை நிதியமானது உறுப்பு நாடுகளுக்கு தற்காலிகமாக வழங்குகிறது. மேலும் நாடுகளின் செலுத்து நிலை தேவைக்கான நிதியினை வெளியிலிருந்து திரட்டும் பணியையும் மேற்கொள்கிறது.

குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் வறுமை தடுப்பு

நிதியமானது வருவாய் குறைந்த நாடுகளுக்கு நிபந்தனையற்ற கடன்களை அளித்து அந்நாடுகளில் வறுமை ஒழிப்பிற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது. இந்த முயற்சியில் நிதியமானது உலக வங்கி மற்றும் பிற வளர்ச்சிக்கான பங்குதாரர்களையும் கொண்டு பணியாற்றுகிறது. கூடுதலாக நிதியமானது கடன்களில் இருந்து மீள்வதற்கான இரண்டு சர்வதேச பணிகளையும் மேற்கொள்கிறது. அவை:

  1. மிக அதிக கடனில் உள்ள ஏழை நாடுகள் (HIPC)
  2. பல்தேசிய கடனில் இருந்து மீள்வதற்கான முன்னெடுப்பு (MDRI)

வெளியிலிருந்து நிதியினை திரட்டுவது

நிதியமானது நாடுகளின் கொள்கை நடைமுறைக்கான நிதியினை பல்தேசிய கடன் அளிப்போர் மற்றும் நன்கொடையாளர்களிடம் இருந்து திரட்டுவதை முக்கிய பணியாக கொண்டிருக்கிறது. நாடுகளின் பொருளாதார எதிர்காலத்தை அறிந்து கொள்வதற்கான முக்கிய தகவல்களை நிதியத்தின் கொள்கை ஆய்வுகள் மற்றும் பரிந்துரைகள் மூலம் முதலீட்டாளர்கள் மற்றும் நிதிச் சந்தைகளுக்கு அளிக்கின்றது. இதன்மூலம் பொருளாதாரத்தின் மீதான முதலீட்டாளர்கள் மற்றும் சந்தையாளர்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்க செய்கிறது.

சர்வதேச பணவியல் முறையை பலப்படுத்துவது

நிதியமானது சர்வதேச பணவியல் முறைக்கான மைய அமைப்பாக செயல்படுகிறது. தனது உறுப்பினர்களுக்கு சர்வதேச பணவியல் தொடர்பான ஆலோசனைகளையும் மற்றும் உதவிகளையும் வழங்குகிறது. இது தனது பணியாக பிற பல்தேசிய நிறுவனங்களுடன் இணைந்து சர்வதேச பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் சர்வதேச விதிகளின் துணையுடன் அவற்றை கட்டுப்படுத்துவது மற்றும் மேம்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்கிறது.

சர்வதேச இருப்பை உலகளவில் வழங்குதலை அதிகரித்தல்

உலக தேவைகளுக்காக நிதியமானது அதிகாரபூர்வ அமைப்பாக தனது சர்வதேச கையிருப்பை வழங்குகிறது. இது சிறப்பு எடுப்பு உரிமை (SDR) என கூறப்படுகின்றது. இந்த சிறப்பு எடுப்பு உரிமையானது சர்வதேச கையிருப்பை உறுப்பினர்களின் எந்த மாற்றத்தக்க பணங்களுடனும் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சியின் மூலம் ஆற்றலை வளர்த்தல்

நிதியமானது சிறந்த பயிற்சி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை உறுப்பு நாடுகளுக்கு தங்கள் பொருளாதார கொள்கைக்கான வடிவங்களையும் மற்றும் பொருளாதார மேலாண்மைக்கான தீரமையினை மேம்படுத்தும் வகையில் வழங்குகிறது. இந்த உதவியானது கொள்கைகள் தோல்வியடைவதை மற்றும் அதிர்வுகளை ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில் திட்டங்களுக்கான வடிவங்கள் மற்றும் நடைமுறைகளை வழங்குகிறது. இந்த நடவடிக்கைகள் குறிப்பாக வளரும் நாடுகளுக்கு தங்கள் வளங்களை பாதுகாக்கவும் மற்றும் நிறுவனங்கள் வீழ்ச்சியடையாமல் தடுப்பதற்கும் பயன்படுகிறது.

தகவல் பரிமாற்றம் மற்றும் ஆராய்ச்சிகள்

ஆசிய வளர்ச்சி வங்கி

  1. உலக அளவில்
  2. மண்டல அளவில் மற்றும்
  3. துணை-மண்டலங்கள் என மூன்றாகப் பிரிக்கலாம்.

இதன் மூலம் அவற்றின் ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை எளிதில் கண்டறியலாம்.

  1. கிழக்கு மற்றும் மத்திய ஆசியா
  2. தி கெக்காங்
  3. பசிபிக்
  4. தெற்கு ஆசியா
  5. தென்கிழக்கு ஆசியா

ஷாங்காய் கூட்டமைப்பு (SCO)

குயிண்டாஓ தீர்மானம்

ஷாங்காய் கூட்டமைப்பு

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (OPEC)

ஆசிய பிரிமீயம்

ஒபெக் (OPEC) கூட்டமைப்பு

சர்வதேச அணுசக்தி கழகம் (IAEA)

வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டமைப்பு (BIMSTEC)

தெற்கு – தெற்கு ஒத்துழைப்பு (SSC)

இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா கூட்டமைப்பு (IBSA)

வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகளின் கூட்டமைப்பு (NATO – 1949)

ஐ.நா-வின் உலக தீவிரவாத தடுப்பு ஒருங்கிணைப்பு நடவடிக்கை

நோக்கம்

சர்வதேச ஒப்பந்தங்கள்

முழுமையான அணு சோதனை தடை உடன்படிக்கை (CTBT)

அணு சோதனை தடைஉடன்படிக்கை என்றால் என்ன?

CTBT இல் இந்தியாவின் நிலை

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் (NPT) 1968

சர்வதேச அரசு-சாரா நிறுவனங்கள்

71-வது உறுப்பு

பொருளாதாரம் மற்றும் சமூக குழுவானது அரசு-சாரா நிறுவனங்கள் தாங்கள் தொடர்புடைய பணிகளில் ஆற்றல்களை வளர்த்து கொள்வதற்கான தகுந்த ஏற்பாடுகளை உருவாக்கி தருகிறது. இந்த ஏற்பாடுகள் சர்வதேச அமைப்புகள் மற்றும் அதன் தேவைக்கானவை, தேசிய அமைப்புகளுடன் கலந்தாலோசித்த பிறகே இவற்றை ஐ.நா. உறுப்பினராக்குகிறது.

சர்வதேச பொது மன்னிப்புச் சபை

சர்வதேச பொது மன்னிப்புச் சபையின் முக்கிய குறிக்கோள்கள் சிலவற்றை கீழே காண்போம்.

மனித உரிமை கண்காணிப்பகம்

கிரீன்பீஸ் அமைப்பு

மனித உரிமை கண்காணிப்பகத்தின் சாதனைகள்

மனித உரிமை இயக்கங்களுக்கு பங்களித்தல் மற்றும் கொடுமைகளை முடிவுக்கு கொண்டு வருதல் போன்றவற்றில் சிறப்பான செயல்பாட்டிற்காக மனித உரிமை கண்காணிப்பகத்திற்கு ஐ.நா விருது வழங்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் இந்த விருது, சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் 60ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின்போது 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் மனித உரிமை கண்காணிப்பகத்திற்கு வழங்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அவை (UNHRC)

முடிவுரை

சர்வதேச அமைப்புகள் சர்வதேச வாழ்க்கைக்கான பொது கருத்தியலாக வளர்ச்சியடைந்துள்ளன. சர்வதேச அமைப்புகளின் பெருக்கம் மற்றும் நாடுகளின் பிரதிநிதிகளிடையே ஒப்பந்தங்கள் ஏற்படுவது என்பது வழக்கமான ஒன்றாக சர்வதேச அரசியலில் காணப்படுகிறது. இது மேலும் மேலும் அமைப்பியல் ஆக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக சர்வதேச அமைப்புகளின் கொடையாக கடந்த பத்தாண்டுகளாக கோட்பாட்டு ரீதியாக ஏன் சர்வதேச அமைப்புகள் நீடிக்கின்றன என்ற புரிதலையும், அதன் செயல்பாடுகளையும் , உலக அரசியலைத் தொடர்ந்து சுத்திகரித்த வண்ணம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன என்பதை அனுபவமுறையினை கொண்டு மேலும் வசதியாக பகுத்தாய்வு செய்கிறது. இதுமட்டுமின்றி பிற புதிய வடிவிலான பகுத்தாய்வின் துணைக் கொண்டு சர்வதேச அமைப்புகள் குறித்து படிப்பதற்கான புதிய ஆராய்ச்சிக்கான வடிவங்களை உருவாக்குகின்றது. வரக்கூடிய ஆண்டுகளில் மாணக்கர்களுக்கு மாறிவரும் சர்வதேச அமைப்புகளின் மரபுகள் மற்றும் நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு தேவைப்படுகிறது. மேலும் சர்வதேச அமைப்புகளின் நடைமுறைகள் மற்றும் அதன் ஆற்றல்கள் மிகவும் பரந்த அளவில் மாறிவரும் உலகின் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.

Exit mobile version