உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து Notes 10th Social Science Lesson 17 Notes in Tamil

10th Social Science Lesson 17 Notes in Tamil

17. உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

அறிமுகம்

மக்கள், வாழ்க்கையையும் வளர்ச்சியையும் பராமரிப்பதற்காக சாப்பிடும் மற்றும் அருந்தும் எந்தவொரு பொருளாகவும் உணவு வரையறுக்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு என்பது, ஒரு நபர் போதுமான அளவு சாப்பிடுவதையும் சுறுசுறுப்பாக இருப்பதையும் ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்துவதையும் குறிக்கும்.

உணவு பாதுகாப்பு

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு உணவு பாதுகாப்பினைப் பின்வருமாறு வரையறுக்கிறது.

உணவின் அடிப்படைக் கூறுகள் மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு

  1. உணவு கிடைத்தல் என்பது விரும்பிய அளவுகளில் உணவு இருப்பு இருப்பதாகும். இது உள்நாட்டு உற்பத்தி, இருப்பு மற்றும் இறக்குமதியில் மாற்றங்கள் பற்றிய ஒரு செயல்பாடாகும்.
  2. உணவுக்கான அணுகல் என்பது முதன்மையாக வாங்கும் திறன் பற்றிய கூற்றாகும். எனவே, ஈட்டுதலுக்கான திறன்கள் மற்றும் வேலை வாய்ப்புகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. திறன்களும், வாய்ப்புகளும் ஒருவரின் சொத்துக்கள் மற்றும் கல்வியுடன் தொடர்புடையது.
  3. உணவினை உறிஞ்சுதல் என்பது உட்கொள்ளும் உணவை உயிரியல் ரீதியாகப் பயன்படுத்துவதற்கான திறன் ஆகும். ஊட்டச்சத்து, அறிவு, நடைமுறைகள் , பாதுகாப்பு மற்றும் சுகாதாரமான சுற்றுச் சூழல் நிலைகள் போன்ற பல காரணிகள் உணவு மற்றும் சுகாதார நிலையை திறம்பட உயிரியல் ரீதியாக முழுஈடுபாட்டுடன் அனுமதிக்கிறது.

உணவு தானியங்களின் கிடைத்தல் மற்றும் அணுகல்

அட்டவணை 1: 1951 – 52 முதல் 2017-18 வரை இந்தியாவில் உணவு தானியங்களின் பரப்பளவு, உற்பத்தி மற்றும் மகசூல்

மூன்று ஆண்டுகளுக்கான சராசரி மையச்சுற்று பகுதி (மில்லியன் /ஹெ) உற்பத்தி (மில்லியன் டன்) மகசூல் (கிகி/ஹெ)
1951 -52 98.79 54.00 546.65
1971 – 72 122.07 103.54 848.18
1991 – 92 121.29 174.75 1406.02
2013 – 14 122.63 258.27 2106.00
2017 – 18 126.98 279.51 2201.00

ஆதாரம்: விவசாய புள்ளி விவரங்கள் ஒரு பார்வையில் 2018; பொருளாதார ஆய்வு 2017 -18.

குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price)

குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது அந்த பயிரின் சாகுபடியில் பல்வேறு செலவுகளை கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட பயிருக்கு ஒரு விலை, நிபுணர் குழுவால் நிர்ணயிக்கப்படுகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவித்த பின்னர், இந்த பயிர்கள் பரவலாக வளர்க்கப்படும் இடங்களில் அரசு கொள்முதல் மையங்களைத் திறக்கும், எனினும், அந்த விவசாயிகள் தங்கள் பயிர், விளை பொருட்களுக்கு சிறந்த விலையைப் பெற்றால் திறந்தவெளி சந்தையில் விற்க இயலும். மறுபுறம், திறந்தவெளி சந்தையில் விலை குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைவாக இருந்தால், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு விற்பதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட விலையைப் (MSP) பெறுவார்கள். எனவே குறைந்த பட்ச ஆதரவு விலையை விவசாயிகள் செயல்படுத்துவதன் மூலம் பயிர் பருவத்தின் முடிவில் அவர்கள் பெறும் விலை குறித்து உறுதியாக உள்ளனர். மேலும் அறுவடைக் காலங்களில் எந்தவொரு விலை வீழ்ச்சிக்கும் எதிராக விவசாயிகள் பாதுகாக்கப்படுகிறார்கள்.

பொது வழங்கல் முறை (Public Distribution System)

தமிழ்நாட்டில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்

இந்தியாவின் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் துவங்கி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், நவம்பர் 1, 2016 அன்று இச்சட்டம் இந்தியாவிலேயே கடைசி மாநிலமாக தமிழ் நாட்டில் துவங்கப்பட்டது. அக்டோபர் 27 அன்று வெளியிடப்பட்ட அரசாங்க உத்தரவில், இச்சட்டத்தை அமல்படுத்தும்போது, அது அதன் விதிகளை மாற்றியமைக்கும் என்று அரசு குறிப்பிட்டது.

பயோ மெட்ரிக் குடும்ப அட்டை (Bio Metric Smart Family Cards)

தற்போதுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தேசிய மக்கள் தொகையின் கீழ் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளின் இயக்குநரின் தனித்துவமான அடையாள எண்ணை (UIN) வெளியிடுவதற்கு 10 விரல்கள் கைரேகை, இரண்டு கருவிழிகள் மற்றும் முகப்பதிவு செய்தல் ஆகியவற்றின் மூலம் பதிவேட்டில் பதிவிடப்படுகிறது. பயோ மெட்ரிக் ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை வழங்க முன்மொழியப்பட்டது. இதன் நன்மை என்னவென்றால், இது தனிப்பட்ட அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் , உறுப்பினர்களின் தரவு நகல் மற்றும் போலி அட்டைகளை அகற்றலாம்.

உணவு பாதுகாப்பில் நுகர்வோர் கூட்டுறவின் பங்கு

தாங்கியிருப்பு (Buffer Stock)

தாங்கியிருப்பு என்பது உணவு தானியங்களான கோதுமை மற்றும் அரிசி, இந்திய உணவுக் கழகத்தின் (Food Corporation of India) மூலம் அரசாங்கத்தால் வாங்கப்படுகிறது. உபரி உற்பத்தி இருக்கும் மாநிலங்களில் விவசாயிகளிடமிருந்து கோதுமை மற்றும் அரிசியை FCI வாங்குகிறது. விவசாயிகளுக்கு அவர்களின் பயிர்களுக்கு அறிவிக்கப்பட்ட விலை வழங்கப்படுகிறது. இந்த விலை குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price) என்று அழைக்கப்படுகிறது. இந்த பயிர்களின் உற்பத்தியை உயர்த்துவதற்காக விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக விதைப்பு பருவத்திற்கு முன்னர் ஒவ்வொரு ஆண்டும் MSP அரசாங்கத்தால் அறிவிக்கப்படுகிறது. வாங்கிய உணவு தானியங்கள் களஞ்சியங்களில் சேமிக்கப்படுகின்றன.

நியாய விலை கடைகள் (Fair Price Shops)

தற்போது 33,222 நியாய விலைக் கடைகள் 1.98 கோடி குடும்பங்களுக்கு சேவை புரிகிறது. 33,222 நியாய விலைக் கடைகளில் 31,232 கடைகள் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படுகின்றன. 1,394 கடைகள் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தால் நடத்தப்படுகின்றன. 596 கடைகள் பெண்கள் சுய உதவிக் குழுக்களால் நடத்தப்படுகின்றன. பொது வழங்கல் முறைக்கு அணுகலை மேம்படுத்த, நியாய விலைக் கடைகள் வாழ்விடங்களுக்கு அருகிலேயே அமைந்திருப்பது அவசியம். அதன்படி, எந்தவொரு அட்டைதாரரும் 1.5 கி.மீ.க்கு மேல் நடந்து செல்லாத வகையில் புதிய நியாய விலை கடைகளைத் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வாங்கும் திறன்

வாங்கும் திறனைப் பாதிக்கும் காரணிகள்

1. அதிக மக்கள் தொகை

இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1000க்கும் 1.7ஆக உள்ளது. அதிக தேவைக்கு வழி வகுக்கிறது. ஆனால் அளிப்பு தேவைக்கு சமமாக இல்லை. எனவே சாதாரண விலை நிலை, அதிகமாக இருக்கும். எனவே , இது குறிப்பாக கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை பாதிக்கிறது.

2. அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தல்

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிலையான வளர்ச்சியும், இந்தியப் பொருளாதாரத்தில் வளர்ச்சி வாய்ப்புகளும் இருந்த போதிலும், அத்தியாவசிய பொருட்களின் விலையில் நிலையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. விலைகளின் தொடர்ச்சியான உயர்வு வாங்கும் சக்தியை சுரண்டி, ஏழை மக்களை மோசமாகப் பாதிக்கிறது. 2015 -16 ஆம் ஆண்டில் சராசரியாக 2% பணவீக்கத்தினால், பருப்பு வகைகளின் விலை சுமார் 40% உயர்ந்தது.

3. பொருட்களுக்கான தேவை

பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும் போது, பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது. அதனால் வாங்கும் சக்தி பாதிக்கப்படுகிறது.

4. பொருட்களின் விலை நாணய மதிப்பை பாதிக்கிறது:

விலை அதிகரிக்கும் போது, வாங்கும் திறன் குறைந்து இறுதியாக நாணயத்தின் மதிப்பு குறைகிறது. மாறாக, இது நேர்மாறானது.

5. பொருட்களின் உற்பத்தி மற்றும் அளிப்பு

பொருட்களின் உற்பத்தி மற்றும் அளிப்பு குறையும் பொழுது, பொருட்களின் விலை அதிகரிக்கிறது ஆகையால் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

6. வறுமை மற்றும் சமத்துவமின்மை

இந்திய பொருளாதாரத்தில் ஒரு மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு உள்ளது. 10% இந்தியர்களுக்கு சொந்தமான வருமானம் மற்றும் சொத்துக்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. இது சமுதாயத்தில் வறுமை நிலையை அதிகரிக்க வழி வகுக்கிறது. பொதுவாக வறுமையாலும் மற்றும் செல்வத்தின் சமமற்ற வழங்குதலாலும் பொதுவாக வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

வாங்கும் சக்தி பொருளாதாரத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கிறது. நுகர்வோர் பொருட்கல் வாங்குவது முதல் முதலீட்டாளர்கள் வரை மற்றும் பங்கு விலைகள் ஒரு நாட்டின் பொருளாதார செழிப்பு வரை பாதிக்கிறது. எனவே, ஒரு நாட்டின் அரசாங்கம் நாணயத்தின் வாங்கும் சக்தியைப் பாதுகாக்க மற்றும் பொருளாதாரத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க கொள்கைகளையும், ஒழுங்கு முறைகளையும் ஏற்படுத்த உதவுகிறது. நுகர்வோர் விலை குறியீட்டு எண் என்பது வாங்கும் சக்தியைக் கண்காணிப்பதற்கான ஒரு முறையாகும்.

வாங்கும் சக்தி சமநிலை (Purchasing Power Parity)

வாங்கும் சக்தி சமநிலை (PPP) என்பது வாங்கும் சக்தி தொடர்பான ஒரு கருத்தாகும். வாங்கும் சக்தி சமநிலை என்பது ஒரு பொருளாதாரக் கோட்பாடாகும். இது ஒரு பொருளின் விலையுடன் சரி செய்யப்பட வேண்டிய தொகையை மதிப்பிடுகிறது. இரு நாடுகளின் மாற்று விகிதங்கள் கொடுக்கப்பட்டால், ஒவ்வொரு நாணயத்தின் வாங்கும் சக்தியுடனும் பரிமாற்றம் பொருந்த வேண்டும்.

நாடுகளின் வருமான நிலைகள் மற்றும் வாழ்க்கைச் செலவு தொடர்பான பிற தொடர்புடைய பொருளாதாரத் தரவு அல்லது பணவீக்கம் மற்றும் பணவாட்டத்தின் சாத்தியமான விகிதங்களை ஒப்பிடுவதற்கு வாங்கும் சக்தி சமநிலையை பயன்படுத்தப்படலாம். சமீபத்தில் வாங்கும் சக்தி சமநிலையின் அடிப்படையில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. சீனா மிகப்பெரிய பொருளாதாரமாக மாறி, அமெரிக்காவை இரண்டாவது இடத்திற்கு தள்ளியுள்ளது.

இந்தியாவின் விவசாயக்கொள்கை

இந்தியாவின் விவசாயக் கொள்கையின் முக்கியமான குறிக்கோள்கள் பின்வருமாறு.

1. உள்ளீடுகளின் உற்பத்தித்திறனை உயர்த்துதல்

இந்தியாவின் விவசாயக் கொள்கையின் முக்கியமான நோக்கங்களில் ஒன்று வீரியவித்து விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் , நீர்ப்பாசன திட்டங்கள் போன்ற வாங்கிய உள்ளீடுகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதாகும்.

2. ஒரு ஹெக்டேருக்கு மதிப்பு கூட்டப்பட்டவை

வேளாண் கொள்கையானது பொதுவாக வேளாண்மையின் உற்பத்தித்திறனை உயர்த்துவதன் மூலமும், குறிப்பாக சிறிய மற்றும் ஓரளவு வைத்திருக்கும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலமும் உடல் ரீதியிலான உற்பத்தியை உயர்த்துவதை விட ஒரு ஹெக்டேருக்கு மதிப்பு கூட்டப்பட்டதை அதிகரிப்பதாகும்.

3. ஏழை விவசாயிகளின் நலன்களைப் பாதுகாத்தல்

ஏழை விவசாயிகளுக்கு நிறுவன கடன் ஆதரவை விரிவுபடுத்துதல், நில சீர்திருத்தங்கள் செய்தல், இடைத்தரகர்களை ஒழித்தல் போன்றவற்றின் மூலம் ஏழை மற்றும் குறு விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதே விவசாயக் கொள்கையாகும்.

4. விவசாயத் தூறையை நவீன மயமாக்குதல்

விவசாயக்கொள்கை ஆதரவில் விவசாய நடவடிக்கைகளில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் HYV விதைகள், உரங்கள் போன்ற மேம்பட்ட விவசாய உள்ளீடுகளைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

5. சுற்றுச்சூழல் சீரழிவு

இந்திய விவசாயத்தின் இயற்கை அடித்தளத்தின் சுற்றுச்சூழல் சீரழிவை சரிபார்க்க இந்தியாவின் விவசாயக் கொள்கை மற்றொரு நோக்கத்தை அமைத்துள்ளது.

6. அதிகாரத்துவ தடைகளை நீக்குதல்

விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சுய உதவி நிறுவனங்கள் மீதான அதிகாரத்துவ தடைகளை நீக்குவதற்கு இந்த கொள்கை மற்றொரு குறிக்கோளை அமைத்துள்ளது, இதனால் அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியும்.

வறுமையின் பல பரிமாணத்தின் இயல்பு (Multi-dimensional Nature of Poverty)

இந்தியாவின் பல பரிமாண வறுமை குறியீடு 2018

  1. இந்தியா தனது வறுமை விகிதத்தை 10 ஆண்டுகளில் 55% லிருந்து 28% ஆக வெகுவாக குறைந்துள்ளது. 2005 – 2006 மற்றும் 2015 – 2016 ஆம் ஆண்டிற்கு இடையில் 271 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து விடுவித்தனர்.
  2. இந்தியாவில் 2015 – 2016 ஆம் ஆண்டில் 364 மில்லியன் ஏழை மக்கள் இருந்தனர். இது எந்த ஒரு நாட்டிற்கும் மிகப்பெரியதாகும். இருப்பினும் 2005 – 2006 ஆம் ஆண்டில் 635 மில்லியனாக இருந்ததை குறைத்துள்ளது.
  3. 2015-16 ஆம் ஆண்டில் பல பரிமான வறுமை குறியீடு ஏழைகளாக இருந்த 364 மில்லியன் மக்களில், 156 மில்லியன் குழந்தைகளாகும். 2005 – 2006 ஆம் ஆண்டில் இந்தியாவில் 292 மில்லியன் ஏழைக் குழந்தைகள் இருந்தனர். இது 47% குறைவு அல்லது பல பரிமாண வறுமையில் வளர்ந்து வரும் 136 மில்லியன் குறைவான குழந்தைகலை குறிக்கிறது.
  4. பழங்குடியினரைச் சேர்ந்த 80% மக்கள் 2005 -2006 ஆம் ஆண்டில் ஏழைகளாக இருந்தனர். அவர்களில் 2015-2016 ஆம் ஆண்டில் 50% பேர் இன்னும் ஏழைகளாகவே உள்ளனர்.
  5. 2015 – 2016 ஆம் ஆண்டில் வறுமையால் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட மிக ஏழ்மையான மாநிலமாக பீகார் இருந்தது.
  6. பீகார், ஜார்கண்ட், உத்திரபிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய நான்கு ஏழ்மையான மாநிலங்கள் இன்னும் 196 மில்லியன் பல பரிணாம வறுமை குறியீடுள்ள ஏழை மக்களைக் கொண்டுள்ளன. இது இந்தியாவில் உள்ள அனைத்து பல பரிமாண வறுமை குறியீடுள்ள ஏழை மக்களில் பாதிக்கும் மேலானதாகும்.
  7. 2006 ஆம் ஆண்டில் கேரளா மிகக் குறைந்த ஏழ்மை வட்டாரங்களில் ஒன்றாக இருந்தது. அது, பல பரிமாண வறுமை குறியீட்டை சுமார் 92% குறைத்துள்ளது.

தமிழ்நாட்டின் பல பரிமாண வறுமை குறியீடு அறிக்கை – 2018

தமிழ்நாட்டின் அதிக மற்றும் குறைவான MPI மாவட்டங்கள்

வ.எண் அதிக மாவட்டங்கள் தரம் குறைவான மாவட்டங்கள் தரம்
1 காஞ்சிபுரம் 1 தர்மபுரி 32
2 சென்னை 2 பெரம்பலூர் 31
3 கடலூர் 3 இராமநாதபுரம் 30
4 கோயம்புத்தூர் 4 விருதுநகர் 29
5 நாகப்பட்டினம் 5 அரியலூர் 28

ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலை

ஊட்டச்சத்தின் நிலை

ஊட்டச்சத்து மீதான தமிழ்நாடு அர்ப்பணிப்பு

இந்தியாவில் பசி என்ற ஒன்று மட்டுமே அரசியல் முன்னுரிமைக்கு போதுமானதாக இல்லை என்பதனை நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் உற்றுநோக்கியுள்ளார். சுகாதாரத்திற்கான பொதுச்செலவு முகவும் குறைவு, குழந்தை ஊட்டச்சத்து போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்படாமல் உள்ளது . “ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாநிலம்” என்ற நிலையை அடைவது போன்ற குறிக்கோள்களை அமைப்பதன் மூலம் இந்த பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கான அரசியல் விருப்பத்தையும், அர்ப்பணிப்பையும் அவர் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மட்டுமே காண்கிறார்.

தமிழ்நாட்டில் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தின் நிலை

சக குழு ஈடுபாடு அதிகரித்தல்

தமிழ்நாட்டில் முக்கியமான திட்டங்கள்

  1. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நலத் திட்டத்தின் (Dr. Muthulakshmi Reddy Maternity Benefit Scheme) கீழ், ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு ₹12,000/_ நிதியுதவி வழங்கப்படுகிறது. சக்திமிக்க உணவிற்கான செலவுகளை மேற்கொள்ளுதல் பிரசவக் காலத்தில் வருமான இழப்பினை ஈடுசெய்வது, மற்றும் புதியதாக பிறக்கும் குழந்தைகலின் குறைந்த எடை பிறப்பினை தவிர்க்க மூன்று தவணைகளில் பிறப்பிற்கு முந்தைய கவனிப்பைப் பெறுதல், அரசு நிறுவனங்களின் குழந்தைகளை பிரசவித்தல் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்குதல் போன்றவை இதன் குறிக்கோளாகும்.
  2. முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீடு திட்டத்தின் (Chief Minister’s Comprehensive Health Insurance Scheme) மூலம் அரசாங்கத்தால் இலவச மருத்துவ மற்றும் அறுமை சிகிச்சை வழங்கி அனைவருக்கும் உலகளாவிய உடல் நலம் வழங்கும் நோக்கில் 2011-12ஆம் ஆண்டில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பயனாளிகளின் ஆண்டு வருமானம் 72,000க்கு குறைவாக இருந்தால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அனைத்து செலவுகளைடும் அரசே ஏற்றுக்கொள்கிறது.
  3. தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டங்கள் (Tamil Nadu Health Systems Projects) இலவசமாக ஆம்புலன்ஸ் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. (108 அவசர ஆம்புலன்ஸ் சேவை).
  4. ‘பள்ளி சுகாதார திட்டம்’ (School Health Programme) முக்கியமாக விரிவான சுகாதார சேவையை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழக்குவதை வலியுறுத்துகிறது.
  5. தேசிய தொழுநோய் ஒழிப்புத்திட்டத்தின் (National Leprosy Eradication Programme) மூலம் அனைத்து தொழுநோயாளிகளையும் கண்டறிந்து தொடர்ச்சியான சிகிச்சையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு மாநிலத்தில் செயல்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் சில ஊட்டச்சத்து திட்டங்கள்

  1. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஊட்டச்சத்து உணவுத்திட்டம் (Purachi Thalaivar M.G.R. Nutrition Mela Programme):

கிராமப்புறங்களில் ஜூலை 1, 1982 முதலும், நகர்ப்புற பள்ளி மாணவர்களுக்கு 1984 முதலும், ஓய்வூதியர்களுக்கு 1983 முதலும், கர்ப்பிணிப் பெண்களுக்கு 1995 முதலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

  1. ஆரம்பக் கல்விக்கு தேசிய ஊட்டச்சத்து ஆதரவுத் திட்டம் (National Programme of Nutritional Support to Primary Education)
  2. பொது ICDS திட்டங்கள் மற்றும் உலக வங்கி உதவியுடம் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (General ICDS Projects and World Bank Assisted Integrated Child Development Services) 24 மாவட்டங்களை உள்ளடக்கிய 318 வட்டாரங்களில் 1991ல் இச்சேவை ஆரம்பிக்கப்பட்டது. 318 கிராமப்புற வட்டாரங்கள் மற்றும் 19500 மையங்களுக்கும் 1991 இது விரிவாக்கப்பட்டது.
  3. பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா திட்டம் (Pradhan Manthri Gramodaya Yojana Scheme):

6 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கு உணவில் ஊட்டச்சத்து வழங்கப்படாத குக்கிராமங்களில் வழங்கப்படுகிறது.

  1. தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் (TamilNadu Integrated Nutrition Programme): இத்திட்டம் 1980இல் ஆரம்பிக்கப்பட்டு 6-36 மாத வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் ஆகியோரை இலக்காக வைப்பட்டது.
  2. மதிய உணவுத் திட்டம் (Mid-Day Meal Programme): இந்த திட்டம் 2-14 வயதுக்குட்பட்ட அங்கன்வாடி அல்லது பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு பயனாளிக்கு தலா ₹0.90 வீதம் செலவழிக்கப்படுகிறது. இந்த திட்டம் 4426 வட்டாரங்களில் 5.57 கோடி குழந்தைகளை உள்ளடக்கியது.

Exit mobile version