இந்திய நீதித்துறை Notes 12th Political Science Lesson 4 Notes in Tamil

12th Political Science Lesson 4 Notes in Tamil

இந்திய நீதித்துறை

நீதித்துறை சரியாக இயங்குகிறது என்றால் என்ன?

மக்கள், சட்டமன்றங்கள், ஆட்சித்துறையைவிட நீதித்துறையின் மீதே அதிகம் நம்பிக்கை கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். எப்பொழுதெல்லாம் அவர்களுடைய உரிமைகள் மீறப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் அவர்களுடைய உரிமைகளும், தனிச்சலுகைகளும் பாதுகாக்கப்படும் என நீதித்துறை நோக்கி வருவதால் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.

இந்திய உச்சநீதிமன்றம்

“உச்ச நீதிமன்றம், அனைத்து இந்திய நீதிமன்றமாகும், கட்சி அரசியலில் இருந்தும், அரசியல் கோட்பாடுகளில் இருந்தும் உறுதியாக தனித்து நிற்கும். அது அரசுகள் மாறுவதைக் குறித்து அக்கறை கொள்வதில்லை. நீதிமன்றமானது, நடைமுறையில் இருக்கும் சட்டத்தின்படி, நிற்கிறது. அனைவரின் மீதும் பரிவு, நன்மதிப்பு கொண்டுள்ளது. எனினும் அது யாருடனும் அணி சேர்வது இல்லை”

திருக்குறள்

  1. பிணையாக திருக்குறள் ஒப்புவித்தல்.

கைகலப்பில் ஈடுபட்ட மூன்று கல்லூரி மாணவர்களுக்கு பிணையாக 100 திருக்குறள்களை தொடர்ந்து 10 நாட்கள் அப்பகுதியிலுள்ள குறிப்பிட்ட தமிழாசிரியர் முன்பு ஒப்புவிக்க வேண்டுமென்று நிபந்தனை விதித்து தமிழ்நாடு நீதிமன்றம் பிப்ரவரி 2019 அன்று உத்தரவிட்டது.

ஒரு நபர் மீது தாக்குதல் நடத்தியதாக மூன்று கல்லூரி மாணவர்களுக்கு மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்கள் சார்பில் பிணைக் கோரப்பட்டது. பிணையின் நிபந்தனையாக அப்பகுதி அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர் முன்பு தினமும் 100 திறக்குறள்கள் ஒப்புவிக்க வேண்டுமென்று நீதிபதி கூறினார்.

இவ்வாறு தொடர்ந்து 10 நாட்கள் திருக்குறள் ஒப்புவித்தப் பின்பு இறுதி நாளில் அந்த மாணாக்கர்களுக்கு சான்றிதழ் வழங்கும்படியும் நீதிபதி அப்போது உத்தரவிட்டார்.

  1. திருக்குறளை அழமாகக் கற்பதற்கு வழிவகுத்த மதுரை உயர் நீதிமன்ற கிளை

சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரை கிளை வழங்கிய தீர்ப்புகளில் தமிழக பள்ளிகளில் திருக்குறளை ஆழமாகக் கற்க வழிவகுத்தது அளித்தத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். மதுரைகிளை கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு அளித்த உத்தரவில் பள்ளிப் பாடத்திட்டத்தில் திருக்குறளின் 133 அதிகாரங்களில் 108 அதிகாரங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன்மூலம் 2017-18 கல்வியாண்டிலிருந்து மாணவர்கள் 1050 திருக்குறள்களையும் கற்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஆணைப் பிறப்பிப்பதற்கு மதுரைக்கிளையின் உத்தரவு வழிவகுத்தது. 6 முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்கள் முன்கூறிய திருக்குறள் பாக்கள் அனைத்தையும் கற்பதுடன் அதன் பொருளினையும் தெளிவாகப் புரிந்து கொள்வதை உத்தரவாதம் செய்யும்படியும் அது கூறியது. இதன்மூலம் தற்போது பள்ளிக் கல்வி மாணவர்கள் திருக்குறள் பாக்களை கற்று ஆழமாகப் புரிந்து வருகிறார்கள்.

தமிழில் பண்டைய இலக்கியங்களில் உலகின் 60-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட இலக்கியம் திருக்குறள் ஒன்றேயாகும்.

இந்திய நீதித்துறையின் பரிணாம வளர்ச்சி

பண்டைய இந்தியாவில் நீதிமுறையமைப்பு

கடும் சோதனைகள்

தராசு முறை: ஒரு தராசில் ஒரு பக்கம் ஒரு பனை ஓலை கட்டு வைத்துவிட்டு இன்னொரு பக்கம் குற்றம் சாட்டப்பட்டவர் அமரும்படியாக செய்யப்பட்டு தராசு சமமாக இருக்கும்படி வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள். வேண்டுதலுக்கு பிறகும் அவர் இருக்கும் தராசின் பகுதி கீழே வந்து வுட்டால் அவர் குற்றம் செய்தவர் என்று அறிவிப்பார்கள்.

நெருப்பு சோதனை

குற்றம் சாட்டப்பட்டவர் தீயின் நடுவே நடந்து வர செய்யப்படுவார். அந்த நபர் எந்த தீ காயமும் அடையவில்லை என்றால் மட்டுமே அவர் குற்றமற்றவராக கருதப்படுவார்.

தண்ணீர்முறை:

தெய்வ சிலையை சுத்தப்படுத்துவதற்கு உள்ள நீரை, குற்றம் கூறினால் குற்றம் சாட்டப்பட்டவர் அதை குடிக்கும்படி செய்யப்படுவார், அதனை தொடர்ந்து வரும் 14 நாட்களுக்குள் குடிக்கும்வரை அவருக்கு எந்த கேடான பாதிப்பும் ஏற்படவில்லை என்றால் அவர் குற்றமற்றவர் என கருதப்படுவார்.

நஞ்சு அருந்தும் சோதனை:

இம்முறையில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு நஞ்சு அருந்தும்படியாக செய்யப்படுவார், அந்த நபருக்கு எந்த தீய விளைவும் ஏற்படவில்லை என்றால் அவர் குற்றமற்றவர் என கருதப்படுவார்.

குலுக்கல் சோதனை:

குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு தொகுப்பில் இருந்து ஒண்றை எடுத்து தரும்படி கேட்டுக் கொள்ளப்படுவார். அதில் அவருக்கு “தர்ம கட்டு” வந்திருந்தால் அவர் குற்றமற்றவராக கருதப்படுவார்.

அரிசி தானிய சோதனை:

இம்முறையில் குற்றம் சாட்டப்பட்டவர் உமி நீக்கப்படாத நெல் தானியத்தை மென்று சாப்பிடும் படியாக செய்யப்படுவார், அவருடைய வாயில் இரத்தக்கறௌ காணப்பட்டால் அவர் குற்றம் செய்தவர் என்று அறிவிக்கப்படுவார்.

ஊற்றுநீர் சோதனை முறை: இங்கு குற்றம் சாட்டப்பட்டவர் நஞ்சு போன்ற நீரை குடிக்கும்படியாக செய்யப்படுவார், அவர் உளறினால் அவர் குற்றம் செய்தவராவார் அல்லது குற்றத்தை அந்த நபர் ஒத்துக் கொண்டவராவார்.

இடைக்காலத்தில் இந்தியாவில் நீதித்துறை அமைப்பு

இடைக்கால இந்தியாவில் பேரரசை நிர்வகிக்கும் சுல்தான்/சுல்தானா ஆகியோரே நீதி நிர்வாகத்தை நிர்வகிக்கும் உச்சபட்ச அதிகாரம் கொண்டவர்கள் ஆவர். அவர்கள் கீழ்க்கண்ட தகுதி நிலைகளில் இருந்து நீதி நிர்வாகத்தை நடத்தினர். அவற்றின் பெயர்கள் பின்வருமாறு;

நவீன இந்தியாவில் நீதித்துறை அமைப்பு

இந்திய உச்ச நீதிமன்றத்தை பொருத்தவரை, இந்திய அரசாங்கச் சட்டம் 1935ல்ஒர் மைல்கல் சட்டமாகும். இந்திய அரசாங்கத்தின் அமைப்பை மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி இச்சட்டம், ஒற்றையாட்சி முறையில் இருந்து கூட்டாட்சி முறைக்கு மாறிக் கொண்டிருந்த அத்தருணத்தில் ஒரு கூட்டாட்சிமுறை சார்ந்த நீதிமன்றம் தேவை அதிகரித்தது. எனவே இது தொடர்பாக, அச்சட்டத்தில் ஒரு விதி சேர்க்கப்பட்டது. அதன்படி , 1937-அம் ஆண்டு கூட்டாட்சி முறை சார்ந்த நீதிமன்றம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதியையும் மற்றும் ஆறு நீதிபதிகளையும் கொண்டிருந்தது. 1950-ஆம் ஆண்டு இந்நீதிமன்ரம் இந்தியாவின் உச்ச நீதிமன்றாக ஆனது.

இடைப்பட்ட 12 ஆண்டுகள் எனும் குறுகிய காலத்தில் கூட்டாட்சிமுறை சார்ந்த நீதிமன்றம் இந்திய சட்ட வரலாற்றில் அழியாத விளைவுகளை விட்டுச் சென்றது. தேசிய அதிகார வரம்பு கொண்ட முதல் நீதிமன்றமும் இதுவே ஆகும்.

இந்த கூட்டாட்சி முறை சார்ந்த நீதிமன்றத்தில் இருந்துதான் அதன் நீதிபதிகள் சுதந்திரம், நேர்மை, பாகுபாடற்ற விசாரணை என்ற மரபைப் பெற்றெடுத்தனர்.

மேலும் 1726 மற்றும் 1883-ஆம் ஆண்டுகளுக்கிடையே பிரபுக்களின் நீதிமன்ற மேலவை (Privy Council) ஆற்றிய பங்கு குறித்தும் இங்கு சிறப்பாக குறிப்பிட வேண்டியது தேவையாகிறது. இது இந்திய நீதித்துறை முறைக்கு இன்றியமையாத அளவிற்கு பங்களித்தது, இன்றளவும் நீதிமன்றங்களில் ஒளிவிளக்காக உள்ள அடிப்படையான இந்திய சட்டக் கோட்பாடுகளை வகுத்துக் கொடுத்தது இதுவே ஆகும்.

இந்திய சுதந்திரச் சட்டம் , 1947-ஆம் ஆண்டு மூலம் அரசியல் அதிகாரம் மாற்றப்பட்டது. இந்தியாவில் தனித்த, சுதந்திரமான நீதித்துறை அமைப்பு நிறுவுவதன் தேவையை ஏற்படுத்தியது. இந்த நோக்கத்துடன் கூட்டாட்சிமுறை சார்ந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்பு இது விரிவாக்கப்பட்டது.

இதையொட்டி, பிரபுக்கள் நீதிமன்ற மேலவை ஒழிப்பு, கூட்டாட்சிமுறை சார்ந்த நீதிமன்ற அதிகார விரிவாக்கம் சட்டம் 1949 இயற்றப்பட்டது.

இதன்படி, இந்தியக் கூட்டாட்சிமுறை சார்ந்த நீதிமன்றம் நாட்டின் உயர்ந்தபட்ச நீதி அதிகார வரம்பு கொண்டதாக வலுவடைந்தது. 4

ஜனவரி 26, 1950-ஆம் ஆண்டு அரசமைப்பு அமலாக்கத்துடன், அரசமைப்பு உறுப்பு 124 இந்திய உச்ச நீதிமன்றத்தை நிறுவ வழி செய்தது.

இவ்வாறு, மெதுவாகவும், சீராகவும் படிப்படியாகவும் இந்திய நீதி அமைப்பு பரிணாமம் அடைந்தது. இது காலத்தோடு பொருந்தி சிறப்பாக வளர்ந்து தன்னை நிரூபித்துக் கொண்டுள்ளது.

சர் ஹரி சிங் கோர்

இறுதிக்கட்ட மேல்முறையீட்டுக்காக பிரிந்து செல்லாமல் இந்தியாவிலேயே மேல்முறையீடு செய்யும் ஒரு அனைத்திந்திய தலைமை நீதிமன்றத்தின் தேவையை இல் உணர்ந்தவர்.

இந்திய உச்சநீதி மன்றம்

இந்திய அரசமைப்பு மூன்று அடுக்கு நீதித்துறை அமைப்பினை வழங்குகிறது. அவை வருமாறு;

  1. இந்திய உச்ச நீதிமன்றம்
  2. அரசமைப்புப்படி உருவாக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்கள்.
  3. ஒவ்வொரு மாநிலத்திலும் நீதி மாவட்டங்களில் வாரியாக மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்கள்.

சட்ட மூலவளங்கள்:

இந்தியாவில் சட்ட ஆட்சியின் மூல ஊற்றாக அரசமைப்பு அமைந்திருக்கிறது. அரசமைப்பின் அடிப்படைகளுக்கு ஏற்ப நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்கள், ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளின் சட்டமன்றங்கள் சட்டங்கள் இயற்றிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. தவிர, உறுப்புகள், ஒழுங்குமுறைகள், நிர்வாக அமைப்புச் சட்டங்கள் என துணைச் சட்டங்கள் இயற்றவும் அனுமதிக்கப்படுகிறது. அதே சமயம், இவை மூன்றாவது சட்ட மூலங்கள் எனக் கருதப்படும்.

ஒருங்கிணைந்த நீதித்துறை

இந்தியக் கூட்டாட்சி, இரட்டை ஆட்சி அமைப்புமுறை கொண்டிருந்தாலும் இரட்டை நீதித்துறை அமைப்பைக் கொண்டிருக்கவில்லை.

உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும், அரசமைப்பின் கீழ் ஒரு ஒருங்கிணைந்த நீதித்துறையாகச் செயல்பட்டு அனைத்து குடிமையியல் அல்லது குற்றவியல் வழக்குகளுக்கு தீர்வு காண்கிறது. தீர்வு வழங்கும் முறையில் வேறுபாடுகளைக் களைவதற்காக இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பும் அதிகாரங்களும்:

தாமதமாகும் நீதி , மறுக்கப்படும் நீதியே

தாமதமாகும் நீதி மறுக்கப்படும் நீதி என்ற தலைப்பில் மாணவர்களை இருப்பிரிவுகளாகப் பிரித்து உரையாடுவதற்கு ஏற்பாடு செய்யலாம். ஒருக்குழுவினர் தலைப்பிற்கு ஆதரவாகவும் மற்றக் குழுவினர் தலைப்பிற்கு எதிராகவும் வாதிடும்படி கூறலாம்.

உச்சநீதிமன்றம் அமைப்பு

நியமனங்கள் அனைத்தும் பொதுவாக பணிமூப்பு அடிப்படையில் செய்யப்படுகிறது.

பட்டியலினத்தவர் சமுதாயத்தில் இருந்து ஒருவர் முதல் முறையாக 2000-இல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். அவர் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் ஆவார். இவர் 2007-இல் பட்டியலினத்தைச் சார்ந்த முதல் தலைமை நீதிபதியாக உயர்ந்தார்.

தற்போதுள்ள அரசமைப்பின் கீழ் இந்திய உச்ச நீதிமன்றம் ஜனவரி 28,1950-ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது. தொடக்கத்தில் நாடாளுமன்றத்தின் இளவரசர்கள் மாடத்தில் செயல்பட்டது. 1958-ஆம் ஆண்டு தற்போது உள்ள வளாகத்துக்கு மாற்றப்பட்டது.

நீதிபதி ஹரிலால் ஜெ.கனியா உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி ஆவார். அவருடன் நீதிபதிகளாக பதவியேற்றவர்கள் முறையே, நீதிபதி சையத் பாசல் அலி, பதஞ்சலி சாஸ்திரி, நீதிபதி மெகர்சந் மகாஜன், நீதிபதி பிஜன் குமார், நீதிபதி முகர்ஜி மற்றும் நீதிபதி எஸ்.ஆர். தாஸ் ஆகியோர்கள் ஆவர்.

உயர் நீதிமன்றங்கள்

அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்ட வழித்தீர்வுகள்

  1. ஆட்கொணர்வு நீதிப்பேராணை

இதன் பொருள் ஒரு நபரை உயிருடன் கொண்டு வந்து நிறுத்தும்படி கூறுவதாகும். இந்த நீதிப்பேராணை ஒரு நபர் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு வழக்கிற்கு பொருந்தக் கூடியதாகும். இந்த நீதிப்பேராணையானது ஒவ்வொரு தனிநபரின் , தனிநபர் சுதந்திரத்தைப் பெறுகிறது.

2. நெறியுறுத்தும் நீதிப்பேராணை

இந்த பேராணையானது, சட்டப்படி இயங்கும் படியும், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் இடப்படும் ஆணையாகும். இதன் பொருள் எந்த ஒரு அதிகாரம் கொண்டோரையும் அவரின் சட்டபூர்வமான கடமையை செய்ய உத்தரவிடுவதை குறிக்கும். இந்த நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணையானது சட்டபூர்வ கடமையை வலியுறுத்துவதுடன், பொது மக்கள் நலன்காக்கும் கடமையை செய்ய மறுக்கும் அதிகாரி, அலுவலர்கள், அரசு என நீதிமன்ற அமைப்புகளுக்கு எதிராகக் கூட ஆணையிடக் கூடியதாகும்.

3. தடை நீதிப்பேராணை

இந்த நீதிப் பேராணையானது உயர்மட்ட நீதிமன்றம், கீழ்நிலை நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயங்கள் தங்களின் அதிகார வரம்பை மீறி நடப்பதைத் தடுக்கும் விதமாக வழங்கப்படுவதாகும். இந்த தடை ஆணை நிதித்துறை சார்ந்த அமைப்புகள் அல்லது பகுதி அளவு மட்டுமே நீதித்துறை அமைப்புகளுக்கு எதிராக மட்டும் வழங்கப்படும் தடை ஆணைகள் ஆகும்.

4. தகுதி முறை வினவும் நீதிப் பேராணை

இதன் பொருள் , எந்த அதிகாரத்தின் அடிப்படையில் அல்லது பணி சான்றிதழ் ஆணை அடிப்படையில் என வினா எழுப்புவதை குறிப்பிடுவதாகும். இதன் பொருள் ஒரு நபர், ஒரு அரசு அலுவலக பதவியில், எந்தத் தகுதியின் அடிப்படையில் அமர்ந்திருக்கிறார் என வினா எழுப்பும் படியான விவகாரத்தில் வழங்கப்படும் நீதிப்பேராணையாகும்.

5. விளக்கம் கோரும் ஆணை

ஒரு பொது அலுவலில் சட்டபூர்வ நிலையை ஒருவர் எதன் அடிப்படையில் அல்லது எந்த அதிகார அமைப்பின் அடிப்படையில் அதில் அமர்த்தப்பட்டார் என்று கேள்விக்கேட்பது ஆகும்.

மேற்கண்ட நீதிப் பேராணைகளோடு, உயர் நீதிமன்றமானது சட்ட உறுப்பு 266-ன் கீழ் பொது மக்கள் நலன்கருதி வழிகாட்டுதல்கள், உத்தரவுகள் பிறப்பதாகும்.

நீதித்துறைச் சீராய்வு பொது நல வழக்கு மற்றும் நீதித்துறை செயல்பாட்டு முறை

நீதித்துறைச் சீராய்வு

பொது நல வழக்கு

பொது மக்கள் நலன் கருதி எந்த ஒரு தனிநபரும் நீதிமன்றத்தை நாடி மனு அளிக்க முடியும். இது பொது நல மனு எனப்படுகிறது. இதன்படி, அரசமைப்பு உறுப்பு 32-ன் கீழ் உச்ச நீதிமன்றத்திலும், அரசமைப்பு உறுப்பு 226-இன் கீழ் உயர் நீதிமன்றங்களிலும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 133-ன்படி நடுவர் நீதிமன்றங்களிலும் பொது நல வழக்கிற்கான மனுவைத் தாக்கல் செய்ய முடியும். மேலும், இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி கீழ்க்கண்ட வகைகளில் பொது நல வழக்குகள் தொடர முடியும்.;

  1. கொத்தடிமை தொழிலாளர்கள் முறை தொடர்பான விவகாரங்கள்.
  2. கைவிடப்பட்ட (ஆதரவற்ற) குழந்தைகள்
  3. குறைந்தபட்ச கூலி வழங்காமை
  4. சிறைச்சாலையில் நிகழ்வும் மரணம், வன்கொடுமைகள் தொடர்பான புகார்கள்; விரைவான நீதி அடிப்படை உரிமை என்பதால் துரித விசாரணை கோருதல்
  5. வழக்குப் பதிவு செய்ய மறுக்கும் காவல்துறை அதிகாரிக்கு எதிராக வழக்கு மனுதாக்கல் செய்தல், வரதட்சனை கோரி பெண் வன்கொடுமை. மணப்பெண் தீவைப்பு, பாலியல் வன்கொடுமை, கடத்தல், கொலை, வதை போன்ற குற்றங்களுக்கு எதிரான புகார்கள்.
  6. பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை புகார்.
  7. சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்புடைய புகார்கள் என வகைப்படுத்துகின்றன.

நீதித்துறை செயல்பாட்டு முறை

மாறிக்கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் நீதித்துறை மேற்கொள்ளும் வீரியமிக்க செயற்பாடுகள் நீதித்துறை செயல்பாட்டு முறை எனப்படுகிறது. அமெரிக்காவில் 1947 ஆம் ஆண்டு ஆர்தர் சன் சிங்கர் ஜூனியர் என்பவர் “உச்ச நீதிமன்றம்” 1947 என்ற தலைப்பிட்ட கட்டுரை ஒன்றில் “Judicial Activism” (நீதித்துறை செயல்பாட்டு முறை) என்ற சொல்லினை அறிமுகப்படுத்தினார். பிளாக்ஸின் சட்ட அகராதி (Black’s Law Dictionary), “Judicial Acrivism” – என்பது ஒரு “நீதித்துறை தத்துவம்” என்று கூறுகிறது. அது நீதிபதிகளை பழமைவாதத்திலிருந்து பிரித்து புதிய முற்போக்கான சமூக கொள்கைகளுக்கு ஆதரவாக ஊக்கப்படுத்துவதாகும்.

ஆஸ்திரேலியா நீதிமன்றம்

ஆஸ்திரேலியா நாட்டின் உயர்நிலை நீதியமைப்பு உயர் நீதிமன்றம் என்றே அழைக்கப்படுகிறது. அங்கு மாநிலத் தலைமை நீதிமன்றங்களே உச்ச நீதிமன்றம் என்றே அழைக்கப்படுகிறது.

அரசமைப்பு, நிர்வாகச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம்

அரசமைப்புச் சட்டம்:

சட்டத்தின் ஆட்சி

இந்தியாவில் “சட்டத்தின் ஆட்சி” என்ற ஆங்கிலக் கருத்தை காலனி ஆட்சி அறிமுகப்படுத்தியது. சட்டத்தின் ஆட்சியில் மூன்று முதன்மையான சிறப்புகள் உள்ளன.

அவைகள்,

நிர்வாகச் சட்டம்

நிர்வாகச் சட்டத்திற்கும், அரசமைப்பிற்கும் இடையே வேறுபாடு

இந்திய தண்டனைச் சட்டம்

Exit mobile version