இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை Notes 10th Social Science Lesson 20 Notes in Tamil

10th Social Science Lesson 20 Notes in Tamil

20. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

அறிமுகம்

வெளியுறவுக் கொள்கை என்பது ஒரு நாடு வெளியுறவு விவகாரங்களின் மூலம் தேசிய நலனைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகளைப் பேணவும் வடிவமைக்கப்பட்ட கொள்கை ஆகும். இது நாட்டு மக்களின் சிறந்த நலன்கள், நாட்டின் பரப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றைப் பாதுகாக்க முயல்கிறது. வெளியுறவுக் கொள்கை என்பது நாட்டின் பாரம்பரிய மதிப்புகள், ஒட்டுமொத்த தேசியக் கொள்கை, எதிர்பார்ப்பு மற்றும் சுய கருத்து ஆகியவற்றின் நேரடி பிரதிபலிப்பாகும். நாடுகள் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. சர்வதேச உறவுகளில் ஒன்றையொன்று சார்ந்திருப்பது தவிர்க்க இயலாததாகும். ஒரு குறிக்கோள் மற்றும் இலக்கு சார்ந்த வெளியுறவுக் கொள்கையானது நாடுகளிடையே மேம்பட்ட உறவுகளை அடையும் திறனையும் விரைவான வளர்ச்சிக்கான பலத்தையும் கொண்டிருக்கும். வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்: உடன்படிக்கைகள், நிர்வாக ஒப்பந்தங்கள், தூதுவர்களை நியமித்தல், வெளிநாட்டு உதவி, சர்வதேச வணிகம் மற்றும் ஆயுதப் படைகள் ஆகியவைகள் ஆகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950

சட்டப்பிரிவு 51

அரசு நெறிமுறையுறுத்தும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள்

அரசு முயற்சி செய்ய வேண்டியவைகள்:

நமது வெளியுறவுக் கொள்கையின் முக்கிய நோக்கங்கள்

நாடுகளுக்கிடையேயான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு வலிமையைப் பயன்படுத்தாமல் அமைதி வழிமுறைகளைப் பின்பற்றுவதைப் புத்தர் ஆதரித்தார்.

பஞ்சசீலம்

வெளியுறவுக் கொள்கையினை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகள்

1950 மற்றும் 1960களில் வெளியுறவுக் கொள்கைகள்

“பரந்த அளவில் அணிசேராமை என்பது இராணுவக் கூட்டணியில் இணைத்துக் கொள்ளாதது அல்ல. அதாவது பிரச்சனைகளை முடிந்தவரை இராணுவக் கண்ணோட்டத்தில் பார்க்காமல், அது சில நேரங்களில் மட்டும் ஏற்பட்டாலும் சுதந்திரமாக மற்றும் அனைத்து நாடுகளுடனும் நட்பு ரீதியிலான உறவைப் பராமரித்தல்” – ஜவகர்லால் நேரு

அணிசேரா இயக்கம் (The Non Aligned Movement) 1961

அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள்: இந்தியாவின் ஜவகர்லால் நேரு, யுகோஸ்லாவியாவின் டிட்டோ, எகிப்தின் நாசர், இந்தோனேசியாவின் சுகர்னோ மற்றும் கானாவின் குவாமே நிக்ரூமா ஆகியோராவர்.

புதிய சவால்கள் மற்றும் கொள்கை மாற்றங்கள்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் நிலைப்பாடுகள்

புதிய மாற்றங்கள் – 1990 மற்றும் இருபதாம் நூற்றாண்டு

இந்திய வெளியுறவுக் கொள்கை பின்வரும் பல்வேறு வகைகளில் மாற்றம் கொண்டது.

21ஆம் நூற்றாண்டில் மீண்டெழும் இந்தியா

இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கருத்துக்கள்

படை வலிமை குறைப்புக் கொள்கை

இந்தியாவின் அணுக்கொள்கையின் இரண்டு மையக் கருத்துகள்:

அணு ஆயுதத்தைப் போர்த்தாக்குதலுக்குப் பயன்படுத்துவது இல்லை என்பதோடு அணு ஆயுதமற்ற எந்த ஒரு நாட்டிற்கு எதிராகவும் பயன்படுத்துவதுமில்லை என இந்தியா தீர்மானித்துள்ளது.

இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

சார்க் – தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (SAARC – South Asian Association for Regional Cooperation)

வெளியுறவுக் கொள்கை என்பது மற்ற நாடுகளுடன் உறவைப் பேணுவதற்காக ஒரு நாட்டால் கவனமாக வடிவமைக்கப்பட்ட உத்திகளின் கலவையாகும்.

இராஜதந்திரம் என்பது ஓர் அரசின் வெளியுறவுக் கொள்கையைச் சூழலுக்குத் தகுந்தாற்போல் செயல்படுத்துவதற்கான கருவி ஆகும்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் தற்காலச் சூழல் மாற்றம் மற்றும் தொடர்ச்சி

அ. ஒருங்கிணைந்த அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை: முதலில் அண்டை நாடுகள் கொள்கை

ஆ. அரசதந்திரம் மற்றும் வளர்ச்சியை இணைத்தல்

இ. “கிழக்கே நோக்கு” என்பதிலிருந்து “கிழக்குச் செயல்பாடு” என்ற கொள்கைக்குப் படிப்படியான மாற்றம்

ஈ. பொருளாதார வளர்ச்சி

உ. வழிகாட்டும் சக்தியாக இந்தியா

உள்நாட்டுக் கொள்கை வெளியுறவுக் கொள்கை
  • உள்நாட்டுக் கொள்கை என்பது ஒரு நாடு தனது நாட்டிற்குள்ளான விவகாரங்கள் தொடர்பாகக் கொண்டுள்ள கொள்கையாகும்.
  • இது உள்விவகாரங்கள், சமூக நலம், சுகாதாரம், கல்வி, குடியியல் உரிமைகள், பொருளாதார விவகாரங்கள் மற்றும் சமூகப் பிரச்சனைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு சட்டங்களை உள்ளடக்கியது.
  • வெளியுறவுக் கொள்கை என்பது ஒரு நாடு பிற நாடுகளுடன் கொண்டுள்ள விவகாரங்கள் தொடர்பானதாகும்.
  • வணிகம், அரச தந்திரம், தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு, உளவுத் துறை மற்றும் உலகளாவிய சூழல் ஆகிய வகைகளைக் கொண்டது வெளியுறவுக் கொள்கை

முடிவுரை

தற்போது இந்தியா உலகின் பெரும்பான்மையான நாடுகளுடன் தூதரக உறவுகளைக் கொண்டுள்ளது. மேலும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடு, மிகப்பெரிய மக்களாட்சி நாடு மற்றும் வேகமாக வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது. இந்தியா எந்தவொரு மிகப்பெரிய ராணுவக் கூட்டணியில் இல்லை என்றாலும் பெரிய நாடுகளுடன் போர்த்திறன் சார்ந்த ஒரு ஆழமான உறவைக் கொண்டுள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான நமது பொதுவான போராட்டம் என்பது குறிப்பிடத்தக்க பலமாகும். இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் சமூகப் பொருளாதார முன்னேற்றங்களை அடைய எதிர்பார்க்கும் அதேவேளையில் அனைத்து நாட்டு மக்களுக்கும் அமைதி, சுதந்திரம், முன்னேற்றம் மற்றும் நீதி ஆகியவற்றையும் வேண்டுகிறது. இவ்வாறு சர்வதேச விவகாரங்களில் நிரந்தர நண்பனும் இல்லை: நிரந்தர பகைவனும் இல்லை; நலன்கள் மட்டுமே நிரந்தரமானவை என்ற வெளியுறவுக் கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது. புதிய வகை சவால்கள் புதிய உண்மைகளுக்கே அமைத்துக்கொள்ள வலியுறுத்துகிறது. அப்போதுகூட அதன் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கட்டமைப்பு மாறாமல் உள்ளது.

Exit mobile version